புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 4%
prajai
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 4%
prajai
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_m10வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 3:01 am

வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Vip1_2012402g

கிடைத்த வேலையைச் செய்யாமல் படித்த வேலைக்காகக் காத்திருந்து வெற்றி காணும் ஒரு இளம் பொறியாளனின் கதைதான் வேலையில்லா பட்டதாரி.

‘என் பெயர் ரகுவரன்’ என்று தனுஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. ரகுவரனை சதா சர்வ காலமும் திட்டித்தீர்க்கும் அப்பாவாக சமுத்திரக்கனி. செல்ல அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். வழிய வழியக் காதல் செய்யும் ஷாலினியாக அமலா பால். இவர்களைச் சுற்றித்தான் முதல் பாதி நகர்கிறது.

கட்டிடத் துறையில் பொறியியல் படிப்பை முடித்த ரகுவரனின் ஒரே விருப்பம், படித்த அதே துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான். இதைப் புரிந்துகொள்ளாத சமுத்திரக்கனி பார்க்கும் போதெல் லாம் உதவாக்கரை என்று மகனைத் திட்டுவதைப் பழக்கமாக வைத்திருக் கிறார். இந்தச் சூழலில் ஷாலினி பக்கத்து வீட்டிற்குக் குடி வருகிறாள். ரகுவரனின் வெகுளித்தனத்தை ரசிக்கும் ஷாலினி, ஒரு கட்டத்தில் அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள்.

எதிர்பாராத விதமாக வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடக்க, பழி ரகுவரன் மீது விழுகிறது. அவனும் குற்ற உணர்ச்சியில் குமைகிறான். ஆனால் அதன் பிறகு வரும் திருப்பம் அவனுக்குப் புதிய பாதையைக் காட்ட, தான் விரும்பும் வேலையைப் பெறுகிறான். சிறப்பாகப் பணியாற்றியதால் பெரிய புராஜக்ட் ஒன்றின் பொறுப்பும் கிடைக்கிறது. ஆனால் அதே புராஜக்டை எடுக்க முயன்று தோற்றவர்கள் அதைச் சீர்குலைக்க முயல்கிறார்கள். பணபலமும் அதிகார பலமும் கொண்ட அவர்களது சவாலை ரகுவரன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே மீதிக் கதை.

படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் தனுஷின் பல படங்களில் பார்த்த காட்சிகள் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு ஏற்படத்தான் செய்கிறது. படித்த துறையில்தான் வேலைக்குப் போவேன் என்னும் பிடிவாதத்தை இயக்குநர் மேலும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். நாயகனின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கே நாயகி குடிவருவதும், அவளைப் பார்ப்பதற்காகப் பந்தை உள்ளே போட்டுவிட்டு எடுக்கப் போவதும் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. நாயகிக்கு மெல்ல மெல்லக் காதல் வரும் விதம் இயல்பாக உள்ளது.

இரண்டாம் பாதியில் கதை தடம் மாறுகிறது. சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் போன்ற பெரிய பட்ஜெட் இயக்குநர்கள் கையாள வாய்ப்புள்ள சமூக ஃபேண்டசி வகை திரைக்கதையை தனுஷ் என்ற நடிகனை மட்டும் நம்பி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் படைத்திருக்கிறார் இயக்குநர் வேல்ராஜ்.

பொறியியல் படித்து வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கேள்விக்குரிய எதிர்காலம், எளிய மனிதர்களின் வீட்டுக் கனவைப் பயன்படுத்தி கார்ப்பரேட்கள் அடிக்கும் கொட்டம் போன்ற சமகால யதார்த்தத்தைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. படத்தில் பேசப்படும் பிரச்சினைகளும், பின்னணியும் நிஜம். ஆனால் தனுஷ் கண்டுபிடிக்கும் சாகசத் தீர்வுகள் ஃபேண்டசி. சமீபத்தில் சென்னையில் நடந்த கட்டிட விபத்து இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் ஞாபகத்துக்கு வரும்.

மகனைப் பார்க்கும் போதெல்லாம் திட்டுவதையே வேலையாக வைத்திருக்கும் அப்பாவுக்கு மகன் கொடுக்கும் மரியாதை ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு வரும் மகனை அப்பாவிடம் அடி வாங்காமல் காப்பாற்றி அவர் வெளியே போனதும், ‘என்னடா இது பழக்கம்’ என்று பின்னி எடுக்கும் இடத்தில் ஆகட்டும், முதன்முதலாக வேலைக்கு போய் வாங்கிய சம்பளத்தில் 40 ஆயிரம் ரூபாயை செலவழித்ததற்காக அப்பா திட்டும்போது எதிர்த்துப் பேசும் மகனை அடிக்கும் அம்மாவாக நடித்திருக்கும் இடத்திலும் வாழ்ந்திருக்கிறார் சரண்யா. அமலா பாலுக்கும், தனுஷுக்குமான காதல் காட்சிகளில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

பாசம், காதல், கோபம், மகிழ்ச்சி, நடனம் என எல்லா இடங்களிலும் தனுஷின் நடிப்பை வஞ்சகம் இல்லாமல் பாராட்டலாம்.

அமலா பால் திருமணத்திற்குப் பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது. அழகான அடுத்த வீட்டுப் பெண்ணாக கண்ணால் பேசி, சகஜமாக நடிக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் சுரபி, வில்லன் அமிதேஷ், விவேக் ஆகியோர் படத்துக்கு வண்ணம் சேர்க்கிறார்கள். அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு சுருதியைக் கூட்டுகிறது. ‘வாட் எ கருவாடு’, ‘வேலையில்லா பட்டதாரி’ பாடல்கள் இளவட்டங்களை ஆட்டம் போட வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், முதன் முறையாக ஒரு இயக்குநராக நின்று விளையாடியிருக்கிறார். ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டு வேலைகளின் பொறுப்பும் சேர்ந்ததின் அழுத்தத்தைப் படத்தின் சில காட்சிகள் பிரதிபலிக்கின்றன.

தனுஷின் 25-வது படம் இது. ‘காதல் கொண்டேன்’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘புதுப்பேட்டை’ என்று அவர் நடித்த பல படங்களை ‘வேலையில்லா பட்டதாரி’ ஞாபகப்படுத்துகிறது. அது பலமா, பலவீனமா என்பது தெரியவில்லை.

இந்து டாக்கீஸ் குழு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 3:02 am


தினமலர் விமர்சனம்

நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு 'லட்டு' மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.

அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.

தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.

அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.

தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.

வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.





வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 3:04 am

மாலைமலர் விமர்சனம்

தனுஷ் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார். படிப்புக்கேற்ற வேலையில் சேரும் விருப்பத்துடன் இருக்கும் அவர், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத பல வேலைவாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார். தனுஷ் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதால் அவரது தந்தை சமுத்திரகனி இவரை அடிக்கடி திட்டித்தீர்க்கிறார். தாய் சரண்யாவோ, தனுஷ் மீது பாசம் காட்டி வருகிறார். தனுஷின் தம்பி அதிக சம்பளத்துக்கு வேலை செய்து வருகிறார். அதையும் காரணம் காட்டி தனுஷை மேலும் திட்டித் தீர்க்கிறார் சமுத்திரகனி.

இந்நிலையில் தனுஷ் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் நாயகி அமலாபால் குடியேறுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருநாள் சரண்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. சமுத்திரகனியும், தனுஷின் தம்பியும் ஊருக்கு செல்ல நேரிடுகிறது. ஆதலால் அம்மாவை பார்த்துக்கொள்ளும்படி தனுஷிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் தனுஷ், அமலாபாலுடன் வெளியில் சென்றுவிடுகிறார். சரண்யாவின் உடல்நிலை மோசமடைந்து இறந்து விடுகிறார்.

இறந்த சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. ஒரு செல்வந்தரின் பெண் சுரபிக்கு சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. இதற்கு நன்றிக்கடன் செலுத்திய அந்த பெண், தனுஷிற்கு இன்ஜினியரிங் வேலை வாங்கி கொடுக்கிறார். முதலில் மறுக்கும் அவர், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்ததால் ஏற்றுக்கொள்கிறார். சுரபியின் மூலம் தன் அம்மாவை பார்க்கும் தனுஷ், தனக்கு கிடைத்த வேலையையும் மனப்பூர்வமாக செய்ய புறப்படுகிறார். அந்த வேலையில்தான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.

தனுஷ் தனக்கு கொடுத்த அரசு ஒப்பந்தப்பணியை செய்வதற்காக ஒரு பகுதிக்கு செல்லும் போது மற்றொரு ஒப்பந்ததாரரான வில்லன் அமிதேஷ் பிரச்சினை செய்கிறார். இதனால் இருவருக்கும் பகை ஏற்படுகிறது. தனுசை அந்த இடத்தில் வீடு கட்டவிடாமல் தடுக்கிறார் அமிதேஷ்.

இறுதியில் தனுஷ் வில்லனின் எதிர்ப்பை மீறி பில்டிங் கட்டினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சமீபகாலமாக வெளிவந்த தனுஷின் படங்களில் அதிகமான சீரியஸ் காட்சிகளை பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்கு ஜாலியான தனுசை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வேலை வெட்டி இல்லாத ஜாலியான இளைஞன் கேரக்டரில் நடிக்க தனுஷுக்கு சொல்லித்தர தேவையே இல்லை. மிகவும் இயல்பான நடிப்பு. அசால்ட்டான டயலாக் டெலிவரி, அதிரடி பஞ்ச் வசனம், அப்பா திட்டும்போது காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கும் காட்சிகள் என தனுஷ் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். தனுஷ் வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது. அதற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக இருக்கிறது.

கதாநாயகி அமலா பாலுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. பாடல், காதல், என்று வந்து போனாலும் நினைவில் நிற்கிறார். தனுஷ் மீது காதலாக மாறும் உணர்வை முகத்தில் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனுஷை கண்டிக்கும் காட்சிகளிலும், அறிவுரை கூறும் காட்சிகளிலும் தனது அனுபவத்தை கொட்டியுள்ளார். சரண்யா வழக்கம்போல் பாசமிகு அம்மாவாக வந்து, ஒருசில இடங்களில் தனுஷை கண்டிக்கிறார். விவேக் காமெடியில் ரசிகர்களை சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்கிறார்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்மா பாடல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தை இயக்கியிருப்பதால் மிகவும் ரசித்து செய்திருக்கிறார். தனுஷை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜாலியாக காண்பித்த வேல்ராஜை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ ஜாலியான பட்டதாரி.



வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jul 22, 2014 10:26 am

நானும் வேலை இல்லாத பட்டை தாரி தான், ஏதாவது வேல இருந்தா பாத்து கொடுங்க.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 22, 2014 2:31 pm

தனுஷ்ன் சமுத்ரகனி சரண்யா ,மூன்று பேரின் நடிப்பும் எக்ஸ்பிரஷன் படத்தின் டாப் ஹை லைட்.
முதல் பகுதி ஜாலியாக செல்கிறது இரண்டாம் பகுதி சற்று தடுமாறுகிறார்கள்.

தனுஷின் தோல்வி படங்களுக்கு பின் இப்படம் வெற்றியை கொடுத்து இருக்கிறது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 22, 2014 3:05 pm

வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம் 1571444738 அண்ணா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 22, 2014 3:12 pm

வேலையில் இருந்து (அடி) பட்ட தாரிகள் வேலை இல்லா பட்டதாரிகளை விட மட்டமோ? (நாங்களும் அடிப்படையில் அடி பட்ட தாரிகள் தான்) புன்னகை




செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Tue Jul 22, 2014 5:28 pm

படித்த படிபுக்கே வேலை செய்ய வேண்டுமென்றால் யாவரும் இங்கு வேலை இல்லாமல் தான் இருக்க வேண்டும் ....கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு படித்த படிப்புக்கு வேலை தேடுவது தான் அறிவாளி தனம்.........சினிமாவுக்கு எதுவும் பொருந்தும் ஆனால் உண்மையோடு ஈடாகாது..... ((((((((((((((சினிமா என்றாலே மெய் பாதி பொய் பாதி தானே..............))))))))))))))))))



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக