புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.
தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..
எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.
நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.
இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.
தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.
அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.
ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.
ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.
ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.
உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..
அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.
ஆனால்.. ஆனால்..
ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.
இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.
போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.
நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.
அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!
ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.
ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.
ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..
எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.
ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.
முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.
எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.
முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..
ம்! சொல்..
நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..
.........
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.
தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..
எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.
நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.
இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.
தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.
அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.
ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.
ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.
ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.
உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..
அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.
ஆனால்.. ஆனால்..
ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.
இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.
போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.
நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.
அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!
ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.
ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.
ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..
எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.
ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.
முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.
எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.
முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..
ம்! சொல்..
நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..
.........
இரட்டை சகோதரிகள் இருவருக்கும் தந்தை எதிர் பார்த்தபடி மாப்பிள்ளைகள் வாய்த்தனர். மருமகன்கள் இருவருமே வியாபாரத்தில் குறியாகவும், கணக்கில் திறமையாகவும் நடந்து கொண்டனர்.
அதுசமயம் நந்திரா பதினாறு வயதுப் பெண்ணாக, மிக உயர்ந்த அதிக செலவுள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் படிப்பில் சிறந்து விளங்கினாள். பள்ளியிலிருந்து வந்த சான்றிதழ்களும் அவள் திறமைக்குச் சான்றாக இருந்தன. அவளது இருபதாவது வயதில் நல்லடியாகத் திருமணம் நடக்க வேண்டும் என்று பட்டேல் எதிர்பார்த்தார். அதுதான் சரியான வயது என்பது அவர் கருத்து.
அவர்கள் குடும்பம் முழுவதும், மாப்பிள்ளைகள், தாத்தா, பாட்டி, வெகுதூர சகோதரர்கள் எல்லோரும் பழைய போட்ஸ்வானா டிஃபென்ஸ் கிளப் அருகிலுள்ள அந்தப் பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வந்தனர். முதலில் அவர்களின் வீடுகள், நிறைய தனித்தனி வீடுகளாக பழைய ஆங்கிலேயர் பாணி வீடுகள்போல பெரிய வெராந்தாக் களுடன்தான் இருந்தன. ஆனால், பட்டேல் அவற்றை முற்றிலும் இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டினார்.
அது பல குடும்பங்கள் சேர்ந்து - அதே சமயம் தங்களுக்கென்று தனித்தனி வீடுகளாக வசிப்பதற்கு ஏற்ற மாதிரி ஒரே காம்பவுண்ட்டுக்குள் இருந்தது.
எங்கள் இந்தியர்கள் ஒரே காம்பவுண்ட்டுக்குள் வசிப்பதையே விரும்புகிறார்கள் - இப்படி வீடு கட்டும் என்ஜினீயரிடம் விளக்கிய பட்டேல், அப்போதுதான் எங்கள் குடும்பத்தில் என்னென்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.
கட்டடக் கலைஞரும், தனக்குக் கிடைத்த சுதந்திரத் தைப் பயன்படுத்தி, பண வசதியில்லாத மற்ற வாடிக்கை யாளர்களின் கனவுகளை எல்லாம் திரட்டி, என்ன வெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையையும் புகுந்து விளையாடினார். பட்டேல் எந்த ஆட்சேபணையும் சொல்லாது, அப்படியே ஏற்றுக் கொண்டது அவருக்கு மிகுந்த வியப்பை அளித்தது. அது, பட்டேலின் ரசனைக்கேற்ப அமைந்து விட்டிருந்தது.
ஆடம்பரமாக டர்பனில் நடந்த இரட்டைப் பெண் களின் திருமணத்துக்குப் பிறகு அவர்களுக்குத் தனித் தனி வீடுகள், இந்த மாளிகையிலேயே கொடுக்கப் பட்டன. அந்தத் திருமணத் துக்கு 1500 விருந்தினர்கள் வந்திருந்தனர். மாப்பிள்ளைகள் இருவருக்கும் அவர்களின் பெயருடைய முதல் எழுத்து எழுதப்பட்ட சிவப்பு நிற மெர்ஸிடிஸ் பென்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. இப்போது பட்டேல் வீட்டில் நான்கு கார்கள். ஒன்று அவருடையது. இன்னொன்று டிரைவர் ஓட்டும் கார்.. அது அவருடைய மனைவியுடையது. மற்ற இரண்டும் மாப்பிள்ளைகளுடையது.
டர்பனில் திருமணத்தின்போது, வயதான உறவினர் ஒருவர் கூறினார்..
இதோ பார்.. நம்மைப் போன்ற இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன்னுடைய பணத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. ஆப்பிரிக்கர்களுக்கு அது பிடிக்காது. ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். உகாண்டாவில் என்ன நடந்தது பார். ஜிம்பாப்வேயில் கண்மூடித்தனமாகச் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறாயா? கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். இந்த ஜூலூக்கள் நம்மை என்ன வேண்டு மானாலும் செய்வார்கள். நாம் ரொம்ப கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பட்டேல் அதை மறுத்தார்.
அதெல்லாம் இங்கே ஒன்று நடக்காது. போட்ஸ்வானாவில் ஒரு ஆபத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். நான் சொல்கிறேன்.. கேட்டுக்கொள். அவர்கள் எல்லோரும் நிலையானவர்கள். நீ அவர் களுடைய வைரங்களைப் பார்த்திருக்க வேண்டும். வைரங்கள், ஒரு தேசத்துக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கின்றன..
அவருடைய உறவினர் அதைக் கண்டு கொள்ள வில்லை.
ஆப்பிரிக்கா அது மாதிரிதான் உள்ளது. எல்லாம் சௌக்கியமாக, சுகமாக நடந்து கொண்டிருப்பதுபோல் தோன்றும். திடீரென்று உன் கழுத்து வெட்டப்படும். நீ வேண்டுமானால் பார்!
இருந்தாலும் பட்டேல் அவரது அறிவுரையை சிறிதளவு ஏற்றுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள சுவர்களை மிக உயரமாக்கினார்.. மக்கள் அவர் வீட்டுச் செல்வச் செழிப்பைப் பார்க்க முடியாதபடி. சொகுசு கார்களில் வெளியே சென்றால் என்ன? அதுமாதிரி எத்தனையோ கார்கள் அவ்வூரில் இருந்தன. தனிப்பட்ட முறையில் யாரும் கவனிக்க மாட்டார்கள்.
பட்டேலிடமிருந்து ரமோட்ஸ் வேக்கு ஒரு நாள் போன் வந்தது.
என் வீட்டுக்கு வர முடியுமா..?
ரமோட்ஸ்வே மகிழ்ச்சியில் திகைத்தாள். அன்றே வருவதாகச் சொல்லி விட்டு, நல்ல உடையில் அவரது மாளிகைக்குக் கிளம்பி னாள்.
போவதற்கு முன் தன் நண்பர் மட்கோனிக்கு போன் செய்தாள்.
பணக்கார வாடிக்கையாளர்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா.. இப்போது பட்டேல் என்னை அழைத்திருக்கிறார்..
மட்கோனி மூச்சை நன்றாக வாங்கி விட்டார்.
அவர் மிகப் பெரிய பணக்காரர். நான்கு மெர்ஸிடிஸ் பென்ஸ் வைத்திருக்கிறார். அதில் மூன்று நல்ல கண்டிஷனில் உள்ளது. ஒன்றுதான் தொந்தரவு கொடுத்து விட்டது. அதற்கு புதிய பாகங்கள் வாங்கவே பல நாட்கள் ஆகி விட்டது..
பட்டேல் வீட்டு வெளி வாயில் கதவுகளைச் சாதாரணமாக திறக்க முடியாது. மற்ற வீடுகளில் செய்வது போல காரை கேட் அருகில் நிறுத்தி ஹார்ன் அடிக்கவும் முடியாது. அந்த வீட்டின் முகப்பிலுள்ள ஒரு மணியை அழுத்தினால் சின்ன ஒலிபெருக்கி மூலம் குரல் வரும்..
ஆம்.. இது பட்டேல் வீடு. உங்களுக்கு என்ன வேண்டும்?
ரமோட்ஸ்வே - சொந்த விஷயம்..
கரகரவென ஒலிபெருக்கியில் ஓசை..
சொந்த விஷயம்..? எது பற்றி? இதற்கு, இவள் பதில் சொல்வதற்குமுன், மறுபடியும் கரகர சத்தம் வர, கதவு மெல்லத் திறந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 9
----------------------------------------------------------------
ர மோட்ஸ்வே, தன்னுடைய காரை சற்று தள்ளியே நிறுத்தியிருந்தாள். அதனால் உள்ளே நடந்து சென்றாள். அங்கு ஒரு விசாலமான முற்றம் செடிகளால் மூடப்பட்டு நிழலாக இருந்தது. அந்த முற்றத்தின் முடிவில் சற்று தூரத்தில் வீட்டின் வாயிற்கதவு - இருபக்கமும் உயர்ந்த தூண்களும், நிறைய செடிகளும் கொண்டதாக இருந்தது. பட்டேல், வாசலில் தோன்றி, உள்ளே வரும்படி தன் கைத்தடியினால் சைகை செய்தார்.
பட்டேலை அவள் ஏற்கெனவே பார்த்திருக்கிறாள். அவருடைய ஒரு கால், செயற்கைக் கால் என்பதும் அவளுக்குத் தெரியும். இத்தனை அருகில் பார்க்கும்போது ரொம்ப சிறிய உருவமாகத் தோன்றினார். ரமோட்ஸ்வே ஒன்றும் அதிக உயரமில்லாவிட்டாலும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட உயரமும், அதற்கேற்ப நல்ல தாராளமாகவுமே இருந்தாள். பட்டேல் அவளை அண்ணாந்து பார்த்தபடி கை கொடுத்து, உள்ளே வரும்படி அழைத்தார்.
ரமோட்ஸ்வேயை சோபாவில் அமரும்படிச் சொன்னார்.
நான் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்கிறேன். சும்மா அங்குமிங்கும் சுற்றி வளைப்பதில் பயனில்லை; இல்லையா..?
ரமோட்ஸ்வேயின் அனுமதிக்காக அவர், அவளை நோக்க.. அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.
நான் ஒரு குடும்பஸ்தன். என் குடும்பத்தினர் எல்லோரும் இங்கேயே, என்னுடனேயே வசிக்கிறார்கள்.. என் மகனைத் தவிர. அவன் டர்பனில் பல் மருத்துவராக இருக்கிறான். என்னுடைய பெரிய பெண்கள் இருவரும் மணமாகி, அவர்கள் கணவர்களுடன் இங்கேயே வசிக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். என்னுடைய பதினாறே வயதான மகள் நந்திரா, மாரு-அ-புலாவில் படிக்கிறாள். மிக நன்றாகவே படிக்கிறாள். ஆனால்.. - பேச்சை நிறுத்திவிட்டு, ரமோட்ஸ்வேயை ஊடுருவிப் பார்த்தவர், பிறகு சொன்னார்..
உங்களுக்குச் சிறு பெண்களைப் பற்றி நன்றாகத் தெரியும் இல்லையா? இந்த நாகரிகமான உலகில், அவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்குமென நினைக்கிறேன்..
ரமோட்ஸ்வே தோளைக் குலுக்கியபடி, அவர்கள் எப்போதுமே பெற்றவர்களுக்குப் பிரச்னையாகவே இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்காகக் கண்ணீர் விட்டு, வேதனைப்படும் பல பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன்.. என்றாள்.
பட்டேல், தனது கைத்தடியை உயர்த்தி, செயற்கைக் கால் மீது வேகமாக அடித்தார். அந்த சத்தம் காலியான தகரத்தின் சத்தம்போல ஒலித்தது.
ரமோட்ஸ்வே அவரை வெறித்துப் பார்த்தாள். எனக்கும் அந்தக் கவலைதான். அதுதான் இங்கேயும் நடக்கிறது. ஆனால், என் குடும்பத்தில் அது மாதிரி நடக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்..
என்ன..?
யாரோ ஒரு பையன்..
பட்டேல் கசப்புடன் வார்த்தையைக் கடித்துத் துப்பினார்.
அவளுடன் நேரில் பேசி, அந்த இளைஞன் யார் என்று கேட்டால் சொல்ல மாட்டாளா..?
- மெதுவாகக் கேட்டாள் ரமோட்ஸ்வே.
பட்டேல் கைத்தடியை எடுத்து, தன்னுடைய செயற்கைக் காலை தட்டிக் காண்பித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அது ஒருபோதும் முடியாது.. என்று குரலை உயர்த்தினார். நானும் மூன்று, நான்கு வாரமாக அவளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. திமிராக, பதில் சொல்லாமல் இருக்கிறாள்..
ரமோட்ஸ்வே தலை குனிந்து, பட்டேலின் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்தவாறு, தன் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பள்ளி செல்லும் இளைஞர்கள் பற்றி, குறிப்பாக மாரு-அ-புலா போன்ற பள்ளியில், வெளிநாட்டு இளைஞர்களும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவருக்குத் தெரியுமா? இந்தியாவைச் சேர்ந்த தந்தைமார்கள், தங்கள் குழந்தைகளைக் கலந்து யோசிக்காமலேயே அவர்களின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு பட்டேலும் அப்படியேதான் எண்ணுவது மட்டுமின்றி, ரமோட்ஸ்வேயும் தன் எண்ணத்துக்கு அனுசரித்துப் போவாள் என்று நினைத்தார் போல..
ஏதாவது சட்ட விரோதமான செயல் செய்யச் சொன்னால் அல்லாது வாடிக்கையாளரை மறுத்துப் பேசக் கூடாது என்று அவள் தனது தொழில் நியாயத்தைக் கடைப்பிடித்தாள். இந்த ஃபார்முலா ஒழுங்காக வேலை செய்தது. ஆனால், பிறர் உதவியை நாடும்போது சில சமயங்களில் எது சரி, எது தவறு என்ற அவளுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளும்படி நேர்ந்திருக்கிறது.
பட்டேல் வழக்கும் அப்படித்தான் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அப்படி இல்லை என்றாலும் அவரது வழக்கை அவசரப்பட்டு ஒதுக்குவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. இந்தியர்களின் வாழ்க்கை, கலாசாரம் இது பற்றி ஒன்றுமே அறியாத அவள், கவலைப்படும் ஒரு இந்தியத் தந்தையை எப்படிக் குறை கூற முடியும்? அவளுக்கு, தங்கக் கூண்டில் அடைத்து வைக்க நினைக்கும் தந்தையை உடைய அந்தப் பெண்ணின் மீது இரக்கமும் வந்தது. ரமோட்ஸ்வேயின் தந்தை, அவள் செய்யும் எதையுமே தடை செய்ததில்லை. அவர், அவளை முழுக்கவும் நம்பினார்.
பட்டேலை நிமிர்ந்து பார்த்தாள். அவர், அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு, தனது கைத்தடியினால் தரையை லேசாகத் தட்டிக் கொண்டிருந் தார்.
நான், உங்களுக்காக அதைக் கண்டுபிடிக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு குழந்தையைக் கண்காணிப்பது என்பது பிடிக்காத விஷயம்..
ஆனால், குழந்தைகளைக் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன நேரிடும்? தெரியும் இல்லையா?
அவர்கள் வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுக்கும் காலம் வரும்போது, அவர்களை விட்டு விட வேண்டியதுதான்..
அது அபத்தமானது!
- பட்டேல் சீறினார்.
அது நாகரிக வளர்ச்சியின் முட்டாள்தனம். நான் என் தந்தையின் கடையில் வேலை செய்தபோது நான் செய்த தவறுக்காக அவர் என்னை அடித்தார். அப்போது எனக்கு வயது 22. அது எனக்குத் தகுந்த தண்டனைதான் என்று நான் நினைத்தேன்.. இப்போதுள்ள நாகரிகம் மாதிரி இல்லை அப்போது..
ரமோட்ஸ்வே எழுந்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நான் இந்தக் காலத்திய பெண். அதனால் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் சொல்வதைச் செய்ய நான் சம்மதிக்கிறேன். அந்தப் பெண்ணுடைய போட்டோ இருந்தால் காட்டுங்கள். நானேதான் அவளைக் கண்காணிக்கப் போகிறேன். அதற்கு போட்டோ இருந்தால் உபயோகமாக இருக்கும்.
பட்டேல் எழுந்து, தனது காலை சரிசெய்து கொண்டார். புகைப்படத்துக்கே அவசியமில்லை. நானே அவளை உங்கள் முன் நிறுத்துகிறேன். நீங்களே பார்க்கலாம்..
ரமோட்ஸ்வே கைகளைத் தூக்கி, ஆட்சேபித்தாள்.
அப்போது அவளுக்கு நான் யாரென்று தெரிந்துவிடும். அவளுக்குத் தெரியாமல்தான் கண்காணிக்க வேண்டும்..
ஆ.. நல்ல யோசனைதான். உங்களைப் போன்ற துப்பறிபவர்கள் கூர்மையான புத்தியுள்ளவர்கள்..
ரமோட்ஸ்வே, வீட்டை விட்டு வெளியேறும்போது நினைத்தாள்..
அவருக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன. எனக்கு ஒன்றுகூட இல்லை. அவர் நல்ல தந்தை இல்லை. ஏனெனில், குழந்தைகளை முரட்டுத்தனமாக நேசிக்கிறார். அவர்கள் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். அப்படி இருக்க முடியாது. அவர்களை, அவர்கள் வழியில் விடுவதுதான் சரி.
அப்போது அவளது சிந்தனை பின்னோக்கிச் சென்றது. ஏதோ சாக்கு சொல்லிவிட்டு தன்னிடமிருந்து பிரிந்து போன நோட் இல்லாமலேயே, குறைப் பிரசவமான மெல்லிய மிருதுவான தேகத்தையுடைய குழந்தை.. தொட்டாலே உடைந்து விடுவதைப் போன்ற அந்த சிறிய பொம்மையை மண்ணில் வைத்து, வானத்தையும் கடவுளையும் நோக்கி ஏதோ சொல்ல நினைத்து, சொல்ல முடியாமல் உதடு துடித்து, விம்மலில் தொண்டை அடைக்க நின்றதை ஒரு கணம் நினைத்தாள்.
ஒருவரைக் கண்காணிப்பது, பின்தொடர்வது என்பதெல்லாம் சுலபமான விஷயமில்லை. அவர்கள் எப்போது என்னென்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக வீட்டு வாசல்களிலும், ஆபீஸ் வாசல்களிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். நந்திரா மாலை வரையில் பள்ளியில்தான் இருப்பாள் என்பதால் அதுவரை ரமோட்ஸ்வே, தனது ஆபீஸ் வேலைகளைச் சுதந்திரமாகப் பார்க்கலாம்.. பள்ளி மூன்று மணிக்கு முடியும் வரையில். அதற்குப் பிறகுதான் அவளைத் தொடர்ந்து எங்கு செல்கிறாள் என்பதைப் பார்க்கவேண்டும்.
பட்டேலை பார்த்த மறுநாளே, ரமோட்ஸ்வே தன்னுடைய வெள்ளை காரை, பள்ளியில் கார் நிறுத்தும் இடத்தில், கடைசி மணி அடிக்கும் முன்பே கொண்டு நிறுத்தி விட்டாள். குழந்தைகள் புற்றீசல் போல வெளிவரத் துவங்கினார்கள். மூன்று மணி இருபது நிமிடங்கள் கழித்து, நந்திரா ஒரு கையில் புத்தகப் பையும், இன்னொரு கையில் புத்தகமுமாக தனியாக வெளியே வந்தாள். காரில் இருந்தபடியே ரமோட்ஸ்வேயினால் நந்திராவை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் மிக அழகாக - கவர்ச்சியாக இருந்தாள். சிறுமியாக இல்லாமல் ஒரு இளம் யுவதியாக பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்கவளாக இருந்தாள்.
நடைபாதையில் நடந்து சென்று, பெற்றோர் வந்து அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்த ஒரு பெண்ணுடன் மரத்தடியில் நின்று பேசினாள். சில நிமிடங்கள் பேசி விட்டு, பள்ளி கேட்டை நோக்கி நடந்தாள்.
ரமோட்ஸ்வே காரிலிருந்து இறங்கி, நந்திரா சாலைக்குச் சென்ற பிறகு மெதுவாக அவளைப் பின்தொடர்ந்தாள். நிறைய மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆதலால் ரமோட்ஸ்வே தனியாகத் தென்படவில்லை. குளிர் கால மாலை வேளையில் நடப்பது மிக இன்பமாக இருந்தது. இன்னொரு மாதம் போனால், வெயில் கடுமையாக இருக்கும். அப்போது அவள் இப்படி தயங்கித் தயங்கி நடந்து செல்வது எல்லோருக்கும் விநோதமாகத் தோன்றும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அந்தப் பெண்ணைத் தொடர்ந்து தெரு முனை வரையில் சென்றாள். அவள், தன்னுடைய வீட்டுக்கு நேராகச் செல்லவில்லை. அதற்கு எதிர் திசையில்தான் நடந்து சென்றாள். அவள் ஊருக்குள்ளும் போகவில்லை. யாரையோ பார்ப்பதற்காக, அந்த நபரைத் தேடித்தான் சென்று கொண்டிருந்தாள். ரமோட்ஸ்வேக்கு மனது நிறைவாக இருந்தது. அவள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த நபரின் வீட்டைக் கண்டுபிடிப்பது மட்டும்தான். அது தெரிந்து விட்டால், அந்த வீட்டின் சொந்தக்காரன், அவர் பையன் எல்லோரும் தெரிந்து விடுவார்கள். இன்றே கூட, பட்டேல் வீட்டுக்குச் சென்று, அந்தப் பையன் யார் என்பதைக் கூறிவிட முடியும் என்று தோன்றியது.
நந்திரா இன்னொரு இடத்தில் திரும்பினாள். ரமோட்ஸ்வே, அவளைத் தொடர்வதைச் சற்று நிறுத்தினாள்.
க்ளோவிஸ் ஆண்டர்ஸன் எழுதிய, தனியாகத் துப்பறிவதில் உள்ள விதிமுறைகள் என்ற புத்தகத்தைப் பின்பற்றுபவள் ரமோட்ஸ்வே. அதில் எழுதப்பட்டிருந்த உன்னுடைய ஆளுக்கு நீண்ட இடைவெளி கொடு. அதனால், அவ்வப்போது தவற விட்டாலும் பரவாயில்லை. திரும்பவும் கண்டுபிடித்துக் கொள்ளலாம். சில சமயம் கண்ணில் படாமல் இருப்பதே, நேருக்கு நேர் எரிச்சலுடன் பார்ப்பதைக் காட்டிலும் சிறந்தது - இந்த வரிகளை அவள் மறக்கவில்லை.
சற்று நேரம் கழித்து, ரமோட்ஸ்வே அந்தத் திருப்பத்தில் திரும்பினாள். சற்று தொலைவில் நந்திரா போய்க் கொண்டிருப்பாள் என்று எண்ணியவளுக்கு, தெரு காலியாக இருந்தது அதிசயமாக இருந்தது..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 10
----------------------------------------------------------------
அ து மிகவும் அமைதியான தெரு. சாலையின் இரு பக்கங்களிலும் வீடுகள்தான் இருந்தன. எல்லா வீடுகளிலும் வீட்டின் முன் பக்கக் கதவுக்குப் போகும் நடைபாதை இருந்தது. நந்திரா, அவள் கண்ணிலிருந்து மறைந்து ஓரிரு நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். ஏதேனும் வீட்டுக்குள் சென்று மறையக்கூட அவகாசம் இல்லை. அவள் இன்னும் தள்ளிப் போயிருக்க வாய்ப்பே இல்லை. வலது பக்கமும் இடது பக்கமும் உள்ள முதல் வீடுகளில் விசாரித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.
சில விநாடிகள் யோசித்தபடி நின்றாள் ரமோட்ஸ்வே. மீண்டும் வந்த வழியே திரும்பி வேகமாக நடந்து, தனது சிறிய வெள்ளை கார் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்து, காரில் ஏறி, மறுபடியும் நந்திராவைத் தொலைத்த வீதிக்கே வந்தாள். வலது பக்க ஓரமாக காரை நிறுத்திவிட்டு முதல் வீட்டு நடைபாதையில் நடந்து, கதவுகளைத் தட்டினாள். வீட்டின் உள்ளிருந்து நாய் ஒன்று பெரிதாகக் குரைத்தது. திரும்பவும் தட்டினாள்.
பேசாமல் இரு பைஸன்.. எனக்குத் தெரியும் - யாரோ ஒரு பெண்மணி, நாயை அடக்கியபடியே கதவைத் திறந்தாள். அவள் போட்ஸ்வானாவைச் சேர்ந்தவள் இல்லை என்று ரமோட்ஸ்வேக்குத் தெரிந்தது. அவளது நிறத்தையும் உடையையும் பார்த்தால் அநேகமாக கானாவைச் சேர்ந்தவளாக இருக்கக்கூடும் என்று நினைத்தாள். கானாவைச் சேர்ந்தவர்களை ரமோட்ஸ்வேக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள். எப்போதுமே நல்ல மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பவர்கள்.
ஹலோ மேடம்.. உங்களுக்குத் தொந்தரவு கொடுப்ப தற்கு மன்னியுங்கள். நான் ஸைபோ என்கிற பையனைத் தேடி வந்தேன்...
அந்தப் பெண்மணி தீவிரமாக யோசித்தபடி கூறினாள்.. அப்படி யாரும் இங்கு இல்லையே..
ரமோட்ஸ்வே தலையசைத்தாள்.
இந்த வீடு என்று நிச்சயமாக நான் நினைத்தேன். நான் செகண்டரி ஸ்கூல் டீச்சர். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பையன்களுக்கு ஒரு செய்தி தர வேண்டும். இதுதான் அவன் வீடு என்று..
அந்தப் பெண்மணி புன்னகைத்தாள்.. எனக்கு இரண்டு பெண்கள் மட்டும்தான். ஒரு பையனைக் கண்டு பிடித்துத் தருகிறீர்களா?
ஓ.. என்ன செய்வது..
ரமோட்ஸ்வே அலுப்புடன் கூறினாள்.. ஒருவேளை எதிர்வீடாக இருக்குமோ?
அந்தப் பெண்மணி இல்லையெனத் தலையசைத்தாள்.
அவர்கள் உகாண்டாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரு பையன் இருக்கிறான்; ஆனால், நாலு அல்லது ஐந்து வயதில்..
ரமோட்ஸ்வே அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுத் திரும்பினாள்.
முதல் நாளன்றே நந்திராவைத் தவற விட்டுவிட்டோம்.. இல்லை, வேண்டுமென்றே அந்தப் பெண்மணி நம்மிடம் பாய்ச்சுக் காட்டுகிறாளோ? ஒருவேளை அவளைப் பின்தொடர்வது, அவளுக்குத் தெரிந்திருக்குமோ..
நிச்சயமாகத் தெரிந்திருக்க முடியாது. தனது துரதிருஷ்டம்தான் அவள் போனது. நாளைக்கு சற்று கவனமாக இருக்க வேண்டும். க்ளோவிஸ் ஆண்டர்ஸன் அறிவுரை உதவாது.. அவளை நெருங்கித் தொடர வேண்டும் என்று தீர்மானித்தாள்.
இரவு எட்டு மணிக்கு பட்டேல் போன் செய்தார்.
எனக்கு சொல்ல ஏதாவது தகவல் கிடைத்ததா?
துரதிருஷ்டவசமாக நந்திரா எங்கே போனாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. மறுநாள் கண்டுபிடிக்க முடியும் என்று ரமோட்ஸ்வே கூறினாள்.
ஒன்றும் பிரயோஜனமில்லை. நிலைமை நன்றாக இல்லை. உனக்குச் சொல்ல, என்னிடம் சமாசாரம் இருக் கிறது. பள்ளிவிட்டு மூன்று மணி நேரம் கழித்து அவள் சிநேகிதியின் வீட்டில் இருந்ததாகச் சொல்லிக் கொண்டு வந்தாள். எந்த சிநேகிதி? என்று கேட்டதற்கு, உனக்கு அவளைத் தெரியாது என்று கூறினாள். அப்போது என் மனைவி, அவளுடைய மேஜையிலிருந்து, துண்டுக் காகிதத் தைக் காட்டினாள். நாளை சந்திப்போம் - ஜாக் என்று எழுதியிருந்தது. யார் அந்த ஜாக்? எவன் அவன்? அது ஒரு பெண்ணின் பெயரா... நான் உன்னைக் கேட்கிறேன்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இல்லை.. பையனுடைய பெயர் மாதிரிதான் தோன்றுகிறது.
பார்த்தாயா..?
அவரது குரலில், அவருடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்ட தொனி தெரிந்தது.
யார் அந்த ஜாக் என்பதை, நாம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் எங்கு வசிக்கிறான்.. எப்பேர்ப்பட்டவன் என்பதை எல்லாம் நீ எனக்கு சொல்ல வேண்டும்.
ரமோட்ஸ்வே ஒரு கோப்பை தேநீரை அருந்திவிட்டு வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் படுக்கச் சென்றாள். பலவிதத்திலும் அன்றைய நாள் அவளுக்கு அதிருப்தி அளிப்பதாகவே இருந்தது. அதற்குச் சிகரம் வைத்தாற் போல பட்டேலின் எரிச்சலான போன் கால் வேறு.
மறுநாள் மாலை பள்ளி கார் நிறுத்துமிடத்துக்கு செல்லும்போது சற்று தாமதமாகிவிட்டது. ஒருவேளை நந்திரா சென்றிருப்பாளோ என்று கூட ரமோட்ஸ்வே நினைத்தபோது, அவள் ஒரு பெண்ணுடன் பேசியபடியே வெளியே வந்தாள். இருவரும் நடந்து, பள்ளி கேட் அருகே செல்வதை ரமோட்ஸ்வே பார்த்தாள். சிறு பெண்கள் தங்கள் சிநேகிதிகளுடன் தீவிரமாகப் பேசுவது ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அவர்களது பேச்சைக் கேட்க முடிந்தால், எவ்வளவோ சிக்கல்கள் நீங்கிவிடும் என்று ரமோட்ஸ்வே நினைத்தாள். பல புதிர்கள் விடுபட வாய்ப்பு உண்டு. பெண்கள் தங்கள் சிநேகிதன் களைப் பற்றி ரகசியமாக ஆனால், நிறையவே பேசுவார்கள். அந்த இரு பெண்களும் அப்படித்தான் பேசுவதுபோல அவளுக்குத் தோன்றியது.
உடனே ஒரு நீல நிற கார், அவர்கள் முன் வந்து நின்றது. கார் டிரைவர் குனிந்து முன் கதவைத் திறந்து விடுவதை ரமோட்ஸ்வே பார்த்தாள். நந்திரா ஏற, அந்த இன்னொரு பெண், பின் ஸீட்டில் ஏறிக் கொண்டாள். நீல நிற கார் கிளம்பியவுடன், ரமோட்ஸ்வே தன் வெள்ளை காரை, கார் நிறுத்துமிடத்திலிருந்து எடுத்தாள். நீல நிற காரின் பின்னால் சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந் தாள். ஆனால், அவர்கள் கண் பார்வையிலிருந்து மறைவது போலத் தோன்றினால், நெருங்கிப் போய் பிடிக்கலாம் என்றும் எண்ணினாள். நேற்று மாதிரி ஏமாந்து, பட்சியைத் தப்பவிட்டு விடக்கூடாது என்று தீர்மானித்தாள்.
நீல நிற கார் நிதானமாகவே சென்றது. அதைத் தொடர்வது ஒன்றும் ரமோட்ஸ்வேக்கு சிரமமாகவே இல்லை. முதலில் சன் ஹோட்டலைத் தாண்டி, ஸ்டேடியத்தைச் சுற்றி சென்றது. அதன் பின் டவுன் பக்கம் திரும்பி ஹாஸ்பிடல், ஆங்கிலிகன் சர்ச் இவற்றைத் தாண்டி, சூப்பர் மார்க்கெட் பக்கம் சென்றது.
இதுமாதிரி சிறு பெண்களும், ஆண்களும் பள்ளி முடிந்தவுடன் போட்ஸ்வானா புத்தகக் கடைகள் போல எங்கேயாவது கூடி கலாய்ப்பது வழக்கம்தான். அவர்கள் அங்கே அரட்டை அடிப்பது, ஜோக்ஸ் பரிமாறிக் கொள்வது.. இப்படி பொருட்கள் வாங்குவதைத் தவிர, மற்ற எல்லா வற்றையும் செய்வார்கள். ஒருவேளை நந்திரா, அந்த ஜாக் பையனை இங்கே சந்திப்பதாக இருக்கிறாளோ என்னவோ..
நீல நிற கார், பிரசிடென்ட் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் நிற்க, பெண்கள் இருவரும் இறங்கினார்கள். ரமோட்ஸ்வே நிறைய கார்களைக் கடந்து, தன் காரை நிறுத்தினாள். இந்த இரு பெண் களுடன் கூட ஒரு பெண்மணியும் காரிலிருந்து இறங்கினாள். ஒருவேளை, நந்திராவின் சிநேகிதியின் அம்மாவாக இருக்கக்கூடும். அந்தப் பெண்மணி, இவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு, இரும்பு சாமான்கள் கடையை நோக்கி நடந்தாள்.
நந்திராவும் அவள் சிநேகிதியும் பிரசிடென்ட் ஹோட்டல் வாயிலைத் தாண்டி, போஸ்ட் ஆபீஸ் பக்கம் சென்றனர். ரமோட்ஸ்வே தற்செயலாகச் செல்வதுபோல அவர்களைத் தொடர்ந்தாள். வழியில் டி-ஷர்ட்களை ஒரு பெண் விற்றுக் கொண்டிருந்தாள்.
இதில் ஒன்று வாங்கிப் பாருங்கள். ரொம்ப நல்ல சட்டைகள். துளிக்கூட சாயம் போகாது. இதோ பாருங்கள். நான் போட்டிருக்கும் இந்த சட்டை பத்து இருபது முறை சலவை செய்யப்பட்டது. சாயம் போனதுபோல இருக்கிறதா.. பாருங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமோட்ஸ்வே அந்த சட்டைகளைப் பார்த்தாள். ஓரக் கண்ணால் அந்தப் பெண்களைப் பார்த்தாள். ஒரு செருப்புக் கடையின் முன்னே, நிதானமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்னுடைய அளவுக்கு உன்னிடம் சட்டை இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், எனக்கு மிகப் பெரிய சட்டை தேவை..
அங்கு தொங்க விடப்பட்டிருந்த சட்டைகளைத் தேடிவிட்டு, அந்தப் பெண் கூறினாள்:
ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்கு மிகப் பெரிய சட்டைதான் தேவை..
ரமோட்ஸ்வே புன்னகைத்து விட்டு, நடையைத் தொடர்ந் தாள். செருப்புக் கடையிலிருந்து அந்தப் பெண்கள் விலகி, புத்தகக் கடையின் முன் சென்றனர்.
ரமோட்ஸ்வே நினைத்தது சரிதான். சும்மாவாவது சுற்றத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
போட்ஸ்வானா புத்தகக் கடையில் கூட்டமே இல்லை. வார இதழ் பகுதியில் நான்கு பேர் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தனர். அங்கு வேலை செய்யும் ஆட்கள் மேஜை மீது சாய்ந்தபடி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருந்தனர். ஒன்றிரண்டு பேர் புத்தக அலமாரியை ஆராய்ந்து கொண்டிருந்தனர். ஈக்கள் கூட மந்தமாகப் பறந்தன.
அந்த இரு பெண்களும் புத்தகக் கடையின் கோடியில், ஸெட்ஸ்வானா புத்தகங்கள் உள்ள அலமாரியை நோட்டம் விட்டபடி இருந்ததை ரமோட்ஸ்வே பார்த்தாள். பள்ளி புத்தகங்கள், பைபிள் புத்தகங்கள் உள்ள அந்த பகுதியிலிருந்து அவர்கள் புத்தகம் வாங்குவது சாத்தியமே இல்லை. நிச்சயம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரமோட்ஸ்வே தீர்மானத்துடன் ஆப்பிரிக்க புத்தகங்கள் நிறைந்த ஒரு பகுதிக்குச் சென்று, புத்தகம் ஒன்றை உருவினாள். தென் ஆப்பிரிக்காவின் பாம்பு இனம் என்ற புத்தகம் அது. நிறைய படங் களுடன் இருந்தது. புத்தகம் கொஞ்சம் சுவாரஸ்ய மாக இருந்ததனால், மேலோட்டமாக அதைப் படித்தபடி, அந்த பெண்களையும் அவ்வப்போது அவள் பார்த்தாள். இருவரும் தங்களை மறந்த லயிப்பில் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஏதாவது பையனைப் பற்றிய ஜோக்காக இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள். இப்போது நன்றாகச் சிரித்துக் கொள்ளட்டும்.. சீக்கிரத்திலேயே, ஆண்களைப் பற்றிய எதுவுமே மகிழ்ச்சி தராது என்பதைப் புரிந்து கொள்வார்கள். சில ஆண்டு களுக்குப் பிறகு கண்ணீர்தான் மிஞ்சும்.. சந்தோஷம் இருக்கப் போவதில்லை என்று எண்ணினாள்.
திரும்பவும் ஆப்பிரிக்க பாம்புகள் பற்றிய புத்தகத்தைப் புரட்டத் தொடங்கினாள். விதவிதமான பாம்புகள்.. அவற்றின் தன்மைகள்.. பாம்புகள் பற்றி வழங்கப்படும் கட்டுக்கதைகள் மிகவும் சுவையாக இருந்ததனால், அவள் அந்தப் பெண்களை கவனிக்கத் தவறிவிட்டாள்.
அய்யய்யோ.. எங்கே போய் விட்டார்கள்.. எங்கே?
ரமோட்ஸ்வே ஒருவிதப் பதற்றத்துடன் பிரசிடென்ட் ஹோட்டல் பக்கம் நடந்து சென்றாள். ஒருவேளை அந்தப் பெண்கள், காரில் அம்மாவுடன் சென்றிருந்தால் பிரச்னை இல்லை. கார் நிறுத்தும் இடத்தை அடைந்தபோது, அந்த நீல நிற கார், இன்னொரு பாதை வழியாக அந்த அம்மாவை மட்டும் ஏற்றிச் சென்றதைப் பார்த்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படியானால், அந்தப் பெண்கள் அங்கேயே தான் இருக்க வேண்டும். திரும்பவும் பிரசிடென்ட் ஹோட்டல் பக்கம் வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். க்ளோவிஸ் ஆண்டர்ஸன் அவரது புத்தகத்தில் கூறியபடி ஒவ்வொரு கூட்டத்தில் உள்ளவர்களையும், ஒவ்வொரு கடையிலிருந்து வருபவர்களையும் உன்னிப்பாகப் பார்த்தாள். அந்தப் பெண்களைக் காணவே இல்லை!
டி-ஷர்ட்டுகளை விற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவள், அவளை நெருங்கினாள்.
இந்த மாதிரி இடத்தில் இருப்பதனால் இங்கு நடப்பது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தானே இருப்பாய்..
அந்தப் பெண் சிரித்தாள்.
நான் எல்லாவற்றையும் எல்லாரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
புத்தகக் கடையிலிருந்து இரண்டு பெண்கள் வெளியேறுவதைப் பார்த்தாயா?
ரமோட்ஸ்வே அந்தப் பெண்மணியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னாள்: அதில் ஒருத்தி இந்தியப் பெண். இன்னொருத்தி ஆப்பிரிக்கப் பெண்.
பார்த்தேன். அவர்கள் தியேட்டர் பக்கம் சென்றார்கள். அப்புறம் எங்கேயோ போய்விட்டார்கள். எங்கே போனார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை.
அவளது பதிலைக் கேட்டு, ரமோட்ஸ்வே சிரித்தாள்.
நீ ஒரு துப்பறிபவளாக இருந்திருக்க வேண்டும்..
உன்னைப் போல..
அந்தப் பெண்மணி சட்டெனக் கூறிய பதில், ரமோட்ஸ்வேயை வியப்பில் ஆழ்த்தியது.
அவள் பிரபலமானவள்தான். ஆனால், தெருவோரம் வியாபாரம் செய்பவளுக்குக் கூட, தன்னைத் தெரிந்து இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன் சட்டைப் பையில் இருந்து ஒரு பத்து புலா நோட்டை உருவி அந்தப் பெண்ணின் கையில் அழுத்தினாள்.
தாங்க்ஸ். இது உனக்கு நான் தரும் சம்பளம். திரும்பவும் நீ உதவி செய்வாய் என்று எதிர்பார்க்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - மொழிபெயர்ப்பு மின்னூல்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|