புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
32 Posts - 82%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
5 Posts - 13%
viyasan
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
209 Posts - 41%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:42

First topic message reminder :

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 QzKZDftkRMOnYnAhqgg5+p19
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001

மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.

எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.

நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.

துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!

ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.

தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..

எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.

நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.

இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.

தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.

அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.

ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.

ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.

ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.

உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..

அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.

அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.

ஆனால்.. ஆனால்..

ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.

இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.

போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.

நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.

அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!

ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.

ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..

எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.

ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.

முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.

ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.

எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.

முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..

ம்! சொல்..

நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..

.........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:47



ஆடு மாடுகளும் அப்படித்தான். அவற்றுக்கும் குடும்பம் உண்டு. இவள் பேசி முடித்ததும், அவர் ஆடு மாடுகளைப் பற்றிய சமாசாரங்களைச் சொல்லுவார். அவர், எப்பொழுதாவதுதான் அவைகளைப் பார்க்கப் போவார். இருந்தாலும், அதை மேய்க்கும் பையன்கள் மூலம் வாரா வாரம் தகவல்களை அறிந்து கொள்வார். ஓபட் மிருகங்கள் பற்றி மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். கன்றுகள் பெரிதானவுடன் எவ்வகையாக இருக்கும் என்று அவருக்குத் துல்லியமாகத் தெரியும். மிகவும் ஒல்லியாக, சோனியாக உள்ள கன்றை வாங்கி, நன்றாக வளர்க்க முடியுமா என்பதைப் பார்த்தவுடன் சொல்லி விடுவார். சோனிக் கன்றுகள் விலை குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட கன்றுகளை வாங்கி, நன்றாகத் தீனி போட்டுக் கொழுக்க வைப்பார்.

மனிதர்களும் ஆடு மாடுகளை போலத்தான் என்பார் ஓபட். அங்குமிங்கும் இலக்கில்லாமல் திரியும் ஆடுகளின் உரிமையாளர்களும், அதே மாதிரி வாழ்வில் குறிக்கோள் இல்லாமல் இருப்பார்கள். நேர்மையில்லாதவர்களின் மந்தைகளில் உள்ள ஆடு மாடுகளும் பிற ஆடு மாடு களின் உணவைத் திருடும். வேறு மந்தையுடன் சேர்ந்து கொள்ளும்.

ஓபட், மனிதர்கள், ஆடு மாடுகளைப் பற்றி ஒப்பிட்டுக் கூறும்போதெல்லாம் ரமோட்ஸ்வேயின் மனதுக்குள் ஒரு கேள்வி குதித்தெழும்.

அது சரி. அப்பா இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாரே! நோட் மொகோட்டி'யைப் பார்த்தால் இவர் என்ன சொல்லுவார்?

சமீபத்தில்தான் ரமோட்ஸ்வே, மொச்சுடியிலிருந்து திரும்பி வரும் பஸ்ஸில் மொகோட்டியைச் சந்தித்தாள். அவன் ஃபிரான்ஸிஸ் டவுனிலிருந்து வந்து கொண்டிருந் தான். அவன் தன் பக்கத்து இருக்கையில் ஒரு ட்ரம் பெட்டை உறை போட்டு வைத்திருந்தான். அவன் அணிந் திருந்த சிவப்புச் சட்டையும், பான்ட்டும், சற்றே உயர்ந்திருந்த தாடையும், வளைந்த புருவமும், பார்க்கத் தூண்டுவதாக..

மற்றவர்கள் தன்னைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்பது தெரிந்திருந்ததால், கர்வம் நிறைந்த முகம். ரமோட்ஸ் வேயின் கண்கள் ஒரு கணம் அவனிடம் நிலைத்து, பின் தாழ்ந்தன. தன் இருக்கையிலிருந்து அவனை தான் பார்ப்பது, அவனுக்குத் தெரிந்து விடக் கூடாது என்று அவள் நினைத்தாள்.

இவன் யார்?

யாரோ பாடகன் மாதிரி இருக்கிறான். ஏதோ பல்கலைக் கழக புத்திசாலி மாணவன் போலவும் இருக்கிறான்.

பஸ் காபரோன் நிறுத்தத்தில் நின்றது. தன் இருக்கையில் இருந்தபடியே, அவன் எழுந்து நிற்பதைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. அவன் தன் உடையைச் சரி செய்து கொண்டே, பஸ்ஸினுள் பார்வையைத் திருப்பினான். என்ன காரணத் தினாலோ, அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. தன்னைத்தான் பார்த்தானோ! என்கிற சந்தேகம்..

இல்லையில்லை.. அவன், ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள், உடனே சிறிதும் யோசிக்காமல், தலைக்கு மேலிருந்த தன் பையை எட்டி எடுத்தாள். அங்கு இறங்கி, அவன் என்ன செய்கிறான், எங்கு போகிறான் என்று அறியும் ஆவல் பிடரியைப் பிடித்து உந்தியது.

அவனும் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டான். அத்தையின் கணவரிடம் வேலை செய்யும் டிரைவரிடம் ரமோட்ஸ்வே அவசர மாக சொல்லிக் கொண்டு, அந்த இளைஞனை வேகமாகப் பின்தொடர்ந்தாள்.

பகல் நேர வெயில் வெளிச்சத்தில், புழுதியும், வெப்பமான பயணிகளும் நிறைந்த கூட்டத்தின் நடுவே அவனை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. அவனும் வெகுதூரத்தில் இல்லை. நடைபாதைக் கடையிலிருந்து ஒரு சோளத்தை வாங்கித் தின்று கொண்டிருந்தான். அவள் சொல்லத் தெரியாத உணர்வுகளில் மூச்சு முட்ட நின்றாள். வழி தெரியாத பெண் போல திகைத்து நின்று விட்டாள்.

அவன், அவளைப் பார்த்து விட்டான். அவளது மனதுக் குள் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறப்பது போலிருந்தது. ஒருவேளை, நான் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்து விட்டதோ!



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:47



சின்னதாக ஒரு தவிப்பு. மறுபடியும் அவனைப் பார்த்தாள். இப்பொழுது அவன், புருவத்தை உயர்த்தியவாறு அவளை நோக்கிச் சிரித்தான். கையிலிருந்த சோளத்தை வீசி எறிந்து விட்டு, பையைத் தூக்கிக் கொண்டு, அவளை நோக்கி நடந்து வந்தான். பாம்பின் முன்னால் மயங்கி நிற்கும் இரையைப் போல நின்றாள் அவள்.

நான் உன்னை அந்த பஸ்ஸில் பார்த்தேன். ஒருவேளை, இதற்கு முன், உன்னை எங்கேயாவது சந்தித்திருக்கிறேனோ என்று நினைத்தேன். ஆனால், சந்தித்ததில்லை.

ரமோட்ஸ்வே தரையை நோக்கினாள்.

நான், உன்னை இங்கு பார்த்ததேயில்லை.'' அவளது குரல், அவள் காதுக்கே கேட்கவில்லை. அவன் புன்னகைத் தான். இப்போது, அவளுக்கு பயமும் தயக்கமும் தோன்ற வில்லை.

இங்குள்ள எல்லோரையும் ஒருமுறையாவது பார்த்திருப்போம். ஆதலால் புதியவர்கள் என்று யாரையும் கூற முடியாது.

அதுவும் சரிதான்.. அவன் சொன்னதை, ரமோட்ஸ் வேயும் ஆமோதித்தாள்.

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, அவன் தன் காலடியில் உள்ள ட்ரம்பெட்'டைச் சுட்டிக் காட்டி, 'நான் ஓர் இசைக் கலைஞன்'' என்றான்.

'இதுதான் நான் வாசிக்கும் கருவி..

அந்தப் பெட்டியின் மீது, கிடார் வாசிக்கும் இளைஞன் படம் ஒட்டப்பட்டிருந்தது.

உனக்கு இசை பிடிக்குமா.. ஜாஸ்.. பாப்..?

அவள் நிமிர்ந்து பார்த்தபோது, அவன் சிரித்தபடியே நின்றிருந்தான்.

எனக்கு இசை பிடிக்கும்..

பிரசிடென்ட் ஹோட்டலில் வாசிக்கும் இசைக் குழுவில் நான் வாசிக்கிறேன்.. நீ வந்து கேட்கலாம். நான் இப்போது அங்குதான் போய்க் கொண்டிருக் கிறேன்..

பஸ் நிறுத்தத்திலிருந்து, பத்து நிமிட நடை தூரத்தில் தான் அந்த ஹோட்டல் இருந்தது. அவன், அவளுக்கு ஒரு மதுபானம் வாங்கிக் கொடுத்து, பின் வரிசையில் காலியாக இருந்த ஒரேயரு இருக்கையில் அவளை அமர்த்தினான்.

அவன் வாசிக்க ஆரம்பித்தான். பட்டுத் துணி போல, வழுவழுப்பாக நழுவிச் செல்லும் அந்த இசையில் ரமோட்ஸ்வே மனதைப் பறிகொடுத்தாள். தான், அவனுடைய விருந்தாளி என்கிற நினைப்பே பெருமையாக இருந்தது.

அந்த பானம், புது விதமாகவும் கசப்பாகவும் இருந்தது. அவளுக்கு மது அருந்தவே பிடிக்காது. ஆனால், பார் களில் எல்லோரும் அருந்தினார்கள். இவள் இதை அருந்தவில்லை என்றால், அந்த இடத்துக்கு முற்றிலும் பொருத்தமில்லாதவளாக நினைப்பார்கள் என்கிற தயக்கத்தினால் அருந்தினாள். இசைக்குழுவின் இடை வேளையின்போது, அவள் அவனிடம் வந்தாள். நெற்றியில் வியர்வைத் துளிகள் பளபளத்தன.

நான் இன்றைக்குச் சரியாக வாசிக்கவில்லை. சில நாட் களுக்கு நன்றாக வரும். சில நாட்களுக்கு வராது - அவன் சொல்ல ரமோட்ஸ்வே புன்னகைத்தாள்.

எனக்கென்னவோ, நீ நன்றாக வாசிப்பது போலத்தான் தோன்றியது.

நான் அப்படி நினைக்கவில்லை. இதை விடவும் என்னால் நன்றாக வாசிக்க முடியும். சில நாள், என் வாத்தியம் என்னுடன் பேசுவது போலத் தோன்றும். அப்பொழுது, நான் ஒன்றுமே செய்ய வேண்டாம்..

பலர், அவர்களை திரும்பிப் பார்ப்பது போலத் தோன்றியது ரமோட்ஸ்வேக்கு.. முக்கியமாக இரு பெண்கள் அவளை கூர்ந்து கவனித்த மாதிரி இருந்தது.. அவள் இருக்குமிடத்தில், அவர்கள் இருக்க விரும்பியது, அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது.

அவனுடன் இருக்க இப்பெண்கள் ஆசைப் படுகிறார்கள்..

ரமோட்ஸ்வேயை அவன் கடைசி பஸ்ஸில் ஏற்றிவிட்டு, பஸ் நகரும் வரையில் கையசைத்தான். அவளும் கைசையத்து, கண்களை மூடிக் கொண்டாள்.

அவளுக்கும் இப்போது ஓர் ஆண் நண்பன் இருக்கிறான். இசைக்கலைஞன்.. அடுத்த வெள்ளியன்று காபரோன் கிளப்பில் அவர்கள் சந்திப்பதாக இருந்தது.

அந்த நாளுக்காக இப்போதிருந்தே காத்திருக்கத் தொடங்கினாள் ரமோட்ஸ்வே..



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:47



----------------------------------------------------------------
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 4
----------------------------------------------------------------


அடுத்த வெள்ளி இரவுக்காக ரமோட்ஸ்வே காத்திருந்தாள். ஏற்கெனவே நோட் மொகோட்டி சொன்னது திரும்பத் திரும்ப அவளுள் அலைகளை எழுப்பியது.

காபரோன் கிளப்புக்கு வருகிற உறுப்பினர்கள் எப் போதும் தங்கள் பெண் நண்பர்களுடன்தான் வருவார்கள். அதுமட்டுமில்லை.. அதில் சில சுவாரஸ்யஸ்மான மனிதர்களையும் நல்லவர்களையும் சந்திக்கலாம்.

அன்றுதான் மொகோட்டி, ரமோட்ஸ்வேயிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டான். ரமோட்ஸ்வேயினால் தன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாதபோதும், எதுவும் பேசாமல் இருந்தாள். இசை நிகழ்ச்சி முடிந்தும் அவர்கள், இருட்டிலேயே தனியாக இருந்தனர்.

நான் உன்னை சீக்கிரம் மணம் முடிக்கத் துடிக்கிறேன். நீ மிகவும் நல்ல பெண். நல்ல மனைவியாகவும் இருப்பாய் என்றே நம்புகிறேன்.

அவன் சொல்ல, ரமோட்ஸ்வே பதில் பேசவேயில்லை. அவளால் அவனைப்போலத் துரிதமாக எதையும் தீர்மானிக்க முடியவில்லை. அவளது மௌனத்தையே அவன் சம்மதமாக எடுத்துக் கொண்டான்.

ரமோட்ஸ்வே.. நான் உன் அப்பாவிடம் பேசுகிறேன். உனக்கு ஏராளமான ஆடு, மாடுகளைச் சீதனமாகக் கேட்கும் பத்தாம்பசலியாக, உன் அப்பா இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

'ஆமாம்..' இதையும் ரமோட்ஸ்வே நினைத்தாளே தவிர, வாய் திறந்து பேசவில்லை.

அவள் இன்னும் தீர்மானமாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. ஒருவேளை, காலம் கடந்து விட்டதோ என்றுகூடத் தோன்றியது.

அப்போது அவன் திடீரென்று கூறினான்.. நீ என் மனைவியாகப் போகிறாய். எனவே, நல்ல மனைவியாவது எப்படி என்று நான் உனக்கு சொல்லித் தரப் போகிறேன்..

இதற்கும் அவள் மௌனம் சாதித்தாள். ஆண்கள் இப்படித்தான், தங்களுக்குச் சாதகமாக எதையும் செய்வார்கள் என்று பள்ளிக்கூடத்தில் சிநேகிதிகள் பேசியது எல்லாம் ஏனோ ஞாபகத்துக்கு வந்தது. பக்கத்தில் யாருமே இல்லை. தொலைவில் மதுக் கடைகளிலிருந்து சிரிப்பும் பேச்சும் காற்றிலே மிதந்து வந்தது.

மொகோட்டி அவளது கரத்தை எடுத்து தன் கன்னத்தின் மீது வைத்துக் கொண்டான். அவளோ, அவன் மீதிருந்த கையை மேற்கொண்டு எந்தப் பக்கமும் நகர்த்தத் தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். அவன், அவள் எதிர்பாராத விதமாக அவளது கழுத்து, முகவாய், உதடு.. இப்படி சரமாரியாக முத்தங்களைப் பொழிந்தான். அவனது இதயத் துடிப்பும் வேகமான மூச்சும் ரமோட்ஸ்வேக்குத் தெளிவாகக் கேட்டது.

பெண்கள் இது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உனக்கு யாராவது இது பற்றிச் சொல்லித் தந்திருக்கிறார்களா?

அவள், 'இல்லை' எனத் தலையசைத்தாள். அவளுக்கு இப்போது நடப்பது ஒன்றுமே புரியவில்லை. புரிந்திருந் தால், இப்படியரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முன்ஜாக்கிரதையோடு இருந்திருப்பாள்.

நீ, ஆண்களின் கைப்படாத கன்னிப் பெண் என்பதில் ரொம்பவும் சந்தோஷம் தெரியுமா! அதுதான் ஒரு ஆணுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால், அதெல்லாம் இனி மாறப் போகிறது. இதோ இப்போதே.. இந்த இரவு முடிவதற்குள்ளேயே..

அவன் அவளை மூர்க்கமாகக் கையாண்டான். ரமோட்ஸ்வே மிகவும் துடித்தாள். அவனை நிறுத்தச் சொன்னாள். ஆனால் அவனோ, அவள் தலையை அப்படியே பின்னால் மோதி, கன்னத்தில் பளார்' என்று அறைந்தான். உடனேயே, அடித்த இடத்தில் முத்தமிட்டு மன்னிப்பும் கேட்டான். அவள் சமாளித்து எழுந்திருப்பதற்குள் அவளை மறுபடி கீழே தள்ளினான். முதுகில் நகத்தினால் பிறாண்டினான். தன் இடுப்பிலிருந்த பெல்ட்டைக் கழற்றி அவளை அடித்தான்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:48



மறுபடியும் அவளுடன்..

இப்படித்தான் அவளை அவன், முழுமையாக அடைந்தான்.

அவன் மெதுவாக எழுந்து, கசங்கிய தன் உடைகளைச் சரிசெய்து கொண்டான். யாராவது பார்த்து விடுவார்களோ என்கிற கவலை அவனுக்குக் கொஞ்சமும் இல்லை.

ஆனால், ரமோட்ஸ்வே பயந்து போனாள். தன் உடைகளை ஒவ்வொன்றாக அணிந்து கொள்ளும்போது தந்தையை நினைத்தாள்.. இங்கே நடந்தது எதுவும் தெரியாதவராக, ஆடு, மாடுகளைப் பற்றியும், அவற்றின் இயல்புகளைப் பற்றியும் அப்பாவித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பார்.. என நினைக்கும்போதே கண்ணீர் பெருகியது. சத்தமில்லாமல் அழுதாள்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு, மொகோட்டி, ரமோட்ஸ்வேயின் தந்தை ஓபட்டைச் சென்று பார்த்தான். தான், ரமோட்ஸ்வேயை மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அவர், தன் மகள் அடுத்த முறை தன்னைப் பார்க்க வரும்போது அவள் சம்மதத்தைக் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.

அதுபோல, ரமோட்ஸ்வேயிடமும் கேட்டார்.

இதோ பார்.. நீ விருப்பமில்லாமல் எவனையும் மணக்க வேண்டியதில்லை. உன் விருப்பம்தான் என் விருப்பமும். ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுதான் வாழ வேண்டும் என்கிற அவசியமெல்லாம் கிடையாது. அந்தக் காலங்கள் எல்லாம் போய்விட்டது. பெண்கள் நினைத்தால், தனியாகவே வாழ்ந்துகாட்ட முடியும்..

தன் அப்பா சொன்னபோதுகூட, அவள் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். அவள் தந்தையும் அதைத்தான் விரும்பியிருப் பாராயிருக்கும். ஆனால், அவளால் அப்படிக் கூற முடியவில்லை. மொகோட்டியை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கே அவள் வாழ்ந்து வந்தாள். அப்படித்தான் கூற வேண்டும். அவனைத் திருமணம் செய்துகொள்ள அவள் விரும்பினாள். அவன் நல்லவன் இல்லை என்பதை அவள், நன்கு உணர்ந்திருந்த போதிலும், திருமணத்துக்குப் பின், அவனை எப்படியாவது திருத்திவிட முடியும் என்று அவள் நம்பினாள். அவனுடன் ஏற்பட்ட அந்தத் தொடர்பு, கசப்பான, குமட்டலான மதுபானம்போலத் திரும்பத் திரும்ப அவளை இழுத்தது.

அவள், தான் கருவுற்றிருப்பதை உணர்ந்தாள். அவளது குழந்தை, சின்னப் பறவை போல அவளுள் சிறகடித்தது.

ஒரு சனிக்கிழமை மதியம் சுமார் மூன்று மணிக்கு மொச்சுடி தேவாலயத்தில் அவர்களது திருமணம் நடந்தேறியது. தேவாலயத்துக்கு வெளியே மர நிழலில் ஆட்டு மந்தைகள் அக்டோபர் மாத வெயிலின் தகிப்பைத் தாங்கமாட்டாமல் தவித்தபடி நின்றிருந்தன. சரியான மழை இல்லாததால் அந்தக் கிராமமே வறண்டு கிடந்தது. புல், பூண்டுகள் எதுமின்றி ஆடு, மாடுகள் இளைத்து, எலும்பு தெரிய வத்தலும் தொத்தலுமாக அலைந்து கொண்டிருந்தன.

அது ஒரு மோசமான கோடைக்காலம்.பாதிரியார், தனது அங்கியும், வெயிலின் புழுக்கமும் தாளாமல் பெருகிய வியர்வையை, தனது சிவப்புக் கைக்குட்டையால் துடைத்தபடி, 'புஸ்..புஸ்..' எனப் பெருமூச்சு விட்டவண்ணம் இருந்தார்.

நீங்கள் இருவரும் கடவுளின் கண்காணிப்பில் மணந்து கொள்கிறீர்கள். கடவுள், துன்பம் நிறைந்த உலகில், நம்மைக் காப்பாற்றி வருகிறார். இறைவன் தனது எல்லாக் குழந்தைகளையும் நேசிக்கிறார். நாமும் இறைவனின் கட்டளைப்படி நம் கடமையைச் செய்ய வேண்டும். உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா?

'புரிகிறது.. என புன்னகைத்தான் மொகோட்டி.

உனக்கு? பாதிரியார், ரமோட்ஸ்வேயைக் கேட்டார்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:48



அவள், அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தந்தை, தன் சிநேகிதரான இந்தப் பாதிரியாரிடம் இக்கல்யாணத்தில் தனக்குள்ள மன வருத்தத்தைச் சொல்லியிருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இது விஷயத்தில் தான் தலையிட முடியாது என்று பாதிரியார் கூறியதும் தெரியும்.

இப்பொழுது அவரது குரல் மிகவும் பரிவுடன் ஒலித்தது. அவர், அன்புடன் ரமோட்ஸ்வேயின் கரத்தை அமுக்கினார். அவளது கையைப் பிடித்து நோட் மொகோட்டியின் கைகளில் ஒப்படைத்தார். அவர், அப்படிச் செய்தபோது, ரமோட்ஸ்வேயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை திடீரெனப் பலமாக அசைந்தது.

இரண்டு நாட்கள், மொச்சுடியில் உள்ள மொகோட்டி யின் உறவினர் வீட்டில் தங்கி விட்டு, தங்கள் பொருட் களை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு தம்பதியர் இருவரும் கோபோரோன்னுக்குச் சென்றார்கள். இரண்டு அறைகளும், ஒரு சமையலறையும் கொண்ட வீட்டை மொகோட்டி ஏற்பாடு செய்திருந்தான்.

இரண்டு அறைகள் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் அதிகம்தான். ஒன்று, அவர்களுடைய படுக்கையறை. இரட்டைக் கட்டிலும் ஒரு பழைய மர அலமாரியும் அந்த அறையை அலங்கரித்தன.

இன்னொன்று வரவேற்பறையாகவும், சாப்பிடும் அறையாகவும் உபயோகப்பட்டது. அதில் ஒரு மேஜை, இரண்டு நாற்காலி, தவிர ஒரு பக்கவாட்டு மேஜை இருந்தது. ரமோட்ஸ்வே, தன் அத்தையின் வீட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் நிற திரைச்சீலையை வரவேற்பில் மாட்டியவுடன், அந்த வீடே பளிச்சென்று புதுக்களை கட்டியது.

நோட் மொகோட்டி தன்னுடைய ட்ரம்பெட்டையும் இசை நாடாக்களையும் அங்குதான் வைத்திருந்தான். சேர்ந்தாற்போல இருபது நிமிடங்கள் பயிற்சி செய்வான். பிறகு தன் உதடுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, ஒலிநாடாவைச் சுழல விடுவான். அந்த இசையை மிக உன்னிப்பாகக் கவனித்து, கிடாரில் அதே இசையைக் கொண்டுவருவான். நகரத்தின் எல்லா இசை பற்றிய தகவல்களும் அவனுக்கு அத்துப்படி. எங்கிருந்து வந்த இசை, யார் எப்போது அதைப் பாடினார்கள், யாருடன் பாடினார்கள் என்ற எல்லா விஷயங்களும் அவனுக்குத் தெரிந்திருந்தன. பெரிய கலைஞர்களின் இசையையும் அவன் கேட்டிருக்கிறான். அவர்கள் பதிவு செய்த ஒவ்வொரு பாட்டும் அவனுக்கு மனப்பாடமாகியிருந்தது.

ரமோட்ஸ்வே, அவன் இசைக் கருவியை எடுத்து வாயில் வைத்து மெதுவாக இசைப்பதை சற்றுத் தள்ளி நின்று கேட்பாள். அவன், சிறு குப்பி போன்ற பகுதியை ஊதி, இசையை கொஞ்சம் கொஞ்சமாக சுழன்று வரும் காற்று போலப் பெருகச் செய்வான். அந்தச் சிறிய அறை முழுக்க மெட்டுக்கள் எதிரொலிக்கும்.

அவனுடன் அவள் பல சமயங்களில் பாருக்குச் சென்றிருக்கிறாள். அங்கே, அவன் தன் சகாக்களுடன் அப்படியே ஒன்றிவிடும்போது, இவள் தேவையற்றவளாகி விடுவாள். முடிவின்றி அவர்கள் இசையைப் பற்றியே பேசினார்கள். பாட்டு, பாட்டு என்று எவ்வளவு நேரம் தான் பேச முடியுமோ? அவள் அங்கு இருப்பதையே அவர்கள் யாரும் மதிக்கவில்லை. அதனால், அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் கிளப்புக்குப் போவதை நிறுத்தினாள்.

அவன் குடித்துவிட்டு, புளித்த வாடையுடன் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன், அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான். அவளை அப்படியே படுக்கையில் தள்ளி, அவளது உடைகளைப் பற்றி இழுத்தான்.

நீ நிறைய குடித்திருக்கிறாய். உனக்கு மட்டும் ரொம்ப வும் மகிழ்ச்சியான மாலை நேரமாக இருந்திருக்கும்.. என்றாள் ரமோட்ஸ்வே.

அவன், அவளை வெறித்துப் பார்த்தான்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:48



'நான் நினைத்தால் குடிப்பேன். நீ வீட்டில் உட்கார்ந்து எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறவள்தானே?

இல்லை. மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவழித் திருக்கிறாய் என்றுதான் சொன்னேன். வேறொன்றும் தப்பாகச் சொல்லவில்லையே.

இருந்தாலும் அவன் கோபம் தணியவில்லை.

உன்னைக் கொடுமைப்படுத்தும்படி நீதான் என்னைத் தூண்டுகிறாய். நான் முரட்டுத்தனம் காட்ட நீதான் காரணம்.. என்றவாறே அவன், தன் பலம் அத்தனையையும் அவள் மீது செலுத்த, அவள் வலி தாங்காமல், கதறிக்கொண்டே திமிறினாள். அவனைப் பிடித்துத் தள்ள, அவள் எடுத்த முயற்சி எல்லாமே வீண். அத்தனை சுலபத்தில் அவனைத் தள்ளிவிட அவளால் முடியவில்லை.

ஐயோ.. வயிற்றில் உன் குழந்தை. அதை ஒன்றும் செய்து விடாதே!

குழந்தையா? எதற்காக அதைப் பற்றிப் பேசுகிறாய்? அது என்னுடையது இல்லை! நான் எந்தக் குழந்தைக்கும் தகப்பன் இல்லை!

ஆணின் கரங்கள்.. ஆனால், இந்த முறை மெல்லிய ரப்பர் கையுறை அணிந்து! ஒரு வெள்ளைக்காரரின் கை போல..

இங்கே வலிக்கிறதா? இல்லையா.. இங்கே.. இங்கே..?

அவள் தலையசைத்தாள்.

குழந்தை நல்லபடியாகத்தான் இருக்கிறது.. இந்தக் காயங்கள் எப்படி.. வலி வெளியே மட்டுமா? உள்ளேயுமா?

வெளியேதான்..

அப்படியா.. நான் இங்கே உனக்குத் தையல் போடப் போகிறேன். வலி தெரியாமல் இருக்க ஒரு மருந்தை ஸ்பிரே செய்கிறேன். வலி தெரியாமல் இருக்கத்தான் மருந்தைப் போடுகிறேன்.. விழிப்பு இருக்கும். ஆனால், நான் தையல் போடுவதை நீ பார்க்கக் கூடாது

அவள், கண்களை மூடிக் கொண்டாள். ஸ்ஸ்ஸ்' என்னும் சத்தம் கேட்டது. அவ ளுடைய தோலின் மேற்பகுதி மரத்துப் போனது. டாக்டர் தன் வேலையை ஆரம்பித் தார்.

இது உன் கணவன் செய்த காரியம்தானே? - டாக்டர் கேட்டார். அமைதியாக இருந்தாள். அவர் நர்ஸின் கையில் சில உபகரணங்களைக் கொடுத்து, கையுறைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டுக் கேட்டார்.

இதுமாதிரி ஏற்கெனவே நடந்திருக்கிறதா?

எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது..

நீ மறுபடியும் அவனிடம்தான் போவாய் என்று எனக்குத் தெரியும்..

அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால், அவர் இடைமறித்துக் கூறினார்...

ஆமாம். பெண்கள் அப்படித்தான் செய்வீர்கள். திரும்பத் திரும்ப இதைத்தான்..

அவர் பெருமூச்சுடன் நிறுத்தினார். பின் நான், மறுபடியும் உன்னை இங்கே பார்ப்பேன் என்று நினைக்கிறேன்.. ஆனால், அது கூடாது என்றும் ஆசைப்படுகிறேன். எதற்கும் ஜாக்கிரதையாக இரு.. என்றார்.

அவள் மறுநாள் வீடு திரும்பினாள். முகத்தின் காயங்கள், கீறல்களை மறைக்க ஒரு பெரிய கைக்குட்டையினால் முகத்தை மறைத்திருந்தாள். வயிற்றில் போட்டிருந்த தையல் சுரீரென வலித்தது, கைகளும் கூட.. வலி குறைய, ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் கொடுத்திருந்தார்கள். பஸ்ஸில் ஏறும் முன் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டாள். வலி சற்று குறைந்த மாதிரி இருந்தது. இன்னொரு மாத்திரையையும் விழுங்கினாள்.

வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. அவள் படபடக்கும் தன் இதயம், நெஞ்சைவிட்டுக் குதித்து விடாதபடி மிரட்சியுடன் அந்தக் காட்சியைப் பார்த்தாள். அறை காலியாக இருந்தது. சில மரச் சாமான்கள் மட்டுமே அங்கிருந்தன. அவனுடைய டேப் ரிக்கார்டர், ஒலிநாடாக்கள், அவர்களது புதிய பெட்டி, மஞ்சள் நிறத் திரைச் சீலைகள் எதுவுமே இல்லை. அவர்களது படுக்கை முழுவதும் கத்தியினால் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு, அறை முழுவதும் பஞ்சு பறந்து கொண்டிருந்தது.

படுக்கையில் எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ.. தெரியாது. பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்து, அவளை யார் துணையுடனாவது மொச்சுடிக்கு அவளது தந்தை ஓபட் இருக்கும் இடத்துக்கு டிரக் மூலமாகக் கொண்டுபோய் விட்டு வருவதாகச் சொன்னாள்.

அடுத்த பதினான்கு வருடங்கள், தன் தந்தையை கவனித்துக் கொண்டு இருந்தாள் ரமோட்ஸ்வே. அவளுக்கு முப்பத்து நான்கு வயதாகும்போது, அவர் இறந்து விட்டார்.

எம்மா ரமோட்ஸ்வே தாய் தந்தையற்று, கொடுமையான கனவாக திருமண வாழ்வை முடித்துக் கொண்டு, ஐந்து நாட்களுக்கு மட்டுமே ஒரு தாயாக இருந்த நினைவுடன், தனிமரமான பின்.. ஒரு சிறந்த துப்பறியும் பெண்மணியாகும் லட்சியத்தோடு இதோ.. நம் முன்னே நிற்கிறாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:49

----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 5
----------------------------------------------------------------


எ ம்மா ரமோட்ஸ்வே, ஒரு துப்பறியும் நிறுவனம் தொடங்குவது என்பது, மிகவும் சுலபமான வேலை என்று தான் நினைத்தாள். புதுசாகத் தொழில் தொடங்குபவர்கள் பலரும் முதலில் அது எளிதானது என்று நினைத்து ஆரம்பித்து விட்டு, பிறகுதான் அந்தத் தொழிலில் ஒளிந்திருக்கும் பிரச்னைகளையும், திருப்பங்களையும், எதிர்பாராத அவதிகளையும் எதிர்கொள்வார்கள். பணப் பற்றாக்குறையினாலோ, தேவையான அளவுக்குப் பொருள் கையிருப்பு இல்லாததனாலோ நான்கு, அல்லது ஐந்து வாரங்களில் படுத்துப் போன வியாபாரங்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். இது மற்றதைக் காட்டிலும் கடினமான வேலை.

முதலில் ரமோட்ஸ்வே, ஜோப்ரா டிரைவ் எனும் இடத்தில், மூலையில் ஒரு வீட்டைப் பார்த்தாள். ஆனால், அது விலை அதிகமாக இருந்தது.. கடைசியில் ஊர்க் கோடியில், கலே மலைக்கு அருகில் ஒரு சிறிய இடம் கிடைத்தது. அது நல்ல இடமாகத் தோன்றியது. ஏனெனில், எப்போதும் ஜனநடமாட்டம் நிறைந்த இடமாக இருந்தது.. ஏராளமானோர் பரபரப்பாகப் போவதும் வருவதுமாக இருந்தனர்.

அப்படி நடக்கிறவர்களின் பார்வையில் நிச்சயம் இவள் மாட்டும் போர்டு தென்படும். போட்ஸ்வானா செய்தித்தாள்களில் விளம்பரம் வருவதைக் காட்டிலும் இது நிச்சயம் அதிகம் பலன் தரும். கூடிய விரைவில் அவளைப் பற்றி போட்ஸ்வானா மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

அவள் வாங்கிய இடம் ஒன்றும் உடனே குடி வரக் கூடியதாக இல்லை. ஏராளமான ரிப்பேர் வேலைகள் இருந்தன. ஒரு மேஸ்திரியை அழைத்து வந்து, சுவரின் பூச்சு வேலை களைச் சரிபார்த்தாள். அப்படியே மேல் தளத்துப் பூச்சு வேலையையும் முடித் தாள். கட்டடத்தின் வெளியே இள மஞ்சள் நிறமும், உள் சுவர்களில் வெள்ளை நிறமும் பூசப்பட்டது. மஞ்சள் நிறத் திரைச் சீலைகளைக் கொண்டு வாசலையும், ஜன்னல் களையும் அலங்கரித்தாள். இப்போது இன்னும் குஷி பிறந்து, இரண்டு மேஜை களையும் நாற்காலிகளையும் வாங்கிப் போட்டாள். இவளு டைய நண்பர் ஒருவர் தன்னிடம் உபரியாக இருந்த பழைய டைப்ரைட்டரைக் கொடுத்து உதவினார். ஆபீஸுக்குத் தேவை யான எல்லாம் தயார். காரியதரிசிதான் பாக்கி.

அதுவும் மிகவும் சுலபமாகக் கிடைத்தது. காரியதரிசிகளுக்கான பயிற்சி தரும் கல்லூரிக்கு போன் செய்தவுடனேயே, இவளுக்கு ஒரு பெண்மணி கிடைத்தாள். ஒரு பள்ளி ஆசிரியரின் விதவை. காரியதரிசிக்கான பரீட்சையில் முதன்மையாகத் தேறியிருந்தாள். ரமோட்ஸ்வேக்கு மிகவும் பொருத்தமானவள் என்று கல்லூரி நிர்வாகி கூறினார்.

ரமோட்ஸ்வேக்கு மகுட்சியைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போய்விட்டது. ஒல்லியான தேகமும், கொஞ்சம் வித்தியாசமான நீள் சதுர முகமுமாக.. தலைமுடியை நிறைய, மருதோன்றி இலைச் சாறைத் தடவி, செஞ்சிவப்பாக்கியிருந்தாள். முட்டை வடிவ மூக்குக் கண்ணாடிக்கு பிளாஸ்டிக் பிரேம் போட்டு, சிரித்த முகமாக, மனதில் எதையும் மறைத்து வைக்க மாட்டாள் என்பதை வெளிப்படையாகக் காட்டும் விதமாக இருந்தாள். அநாவசிய பந்தா இல்லாமலும், மனிதர்களிடம் ஒட்டி உறவாடி, அதே சமயம் எதிராளியை மதிப்பிடக் கூடிய வளாகவும் இருந்தாள்.

ஒரு திங்கட்கிழமையன்று, அலுவலகத்தைத் திறந்தார்கள். மகுட்சி, டைப்ரைட்டரின் முன் அமர்ந்து, நான் வேலை செய்யத் தயார் என்று சிரித்தாள்.

ஆமாம். நாம் புதிதாக ஆரம்பித்திருப்பதால் சூடு பிடிக்க நாளாகும். வாடிக்கையாளருக்காக காத்திருக்க வேண்டியது தான்! - ரமோட்ஸ்வே இப்படிச் சொன்னாலும், உள்மனதில் வாடிக்கையாளர்கள் வருவார்களா என்கிற சந்தேகமே இருந்தது. இந்தத் தொழிலே தவறோ என்றுகூட அவளுக்குத் தோன்றியது. யாருக்கும் துப்பறிபவர் தேவையில்லை. அதுவும் ரமோட்ஸ்வே யார்? அவளுக்கு மட்டும் தலையில் கொம்பா முளைத்திருக்கிறது? அவளும் மொச்சுடியில் உள்ள ஒரு சாதாரணப் பெண்தானே? துப்பறிபவர்களைப் பற்றி, அவள் லண்டனுக்குச் சென்று தெரிந்து கொண்டதில்லை. ஜோஹனஸ்பர்க் கூடப் போன தில்லை.

யாராவது, உங்களுக்கு ஜோஹனஸ்பர்க் தெரியுமில்லையா? என்று கேட்டால், ஒன்று வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொய் சொல்ல வேண்டும்..

மகுட்சி, டைப்ரைட்டர் அச்சுகளைப் பார்ப்பதும், மேஜை இழுப்பறையை இழுத்துப் பார்ப்பதும், வீட்டுக்குள் வரும் கோழியை விரட்டுவதுமாக இருந் தாள்.

பதினோரு மணி சுமாருக்கு, ஒரு கோப்பை தேநீரை அருந்திய ரமோட்ஸ்வே எழுந்து, பக்கத்துக் கடைகளில் நல்ல பெர்ஃப்யூம் கிடைத்தால் வாங்கி வருவதாகச் சொல்லிக் கிளம்பினாள். மகுட்சியிடம், ஏதாவது போன் வந்தால் பேசவும், யாராவது வாடிக்கையாளர் வந்தால் பார்த்துக் கொள்ளவும் சொல்லி விட்டுச் சென்றாள்.

ரமோட்ஸ்வேக்கு, உள்ளூரச் சிரிப்பு வந்தது..

யார் வந்துவிடப் போகிறார்கள்?

- அவள், இப்படித்தான் நினைத்தாள்.

அநேகமாக இன்னும் ஒரு மாதத்திலேயே இந்த பிஸினஸை மூடி விட வேண்டியதுதான் என்றுகூடத் தோன்றியது. மகுட்சி எவ்வளவு நிலையில்லாத வேலை யைத் தேடிக் கொண்டிருக்கிறாள்.. பாவம் என்றே தோன்றியது. மிக அதிக மதிப்பெண்களுடன் பாஸ் செய்த பெண்ணுக்கு இது துரதிருஷ்டமான வாய்ப்பு தான்..

கடையில், பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது மகுட்சி பறந்தோடி வந்தாள்.

எம்மா ரமோட்ஸ்வே.. ஒரு வாடிக்கையாளர்.. ஒரு வாடிக்கையாளர்..

- மூச்சு வாங்கியது மகுட்சிக்கு.

நான், அவளை ஆபீஸில் உட்கார வைத்திருக்கிறேன். இது பெரிய விவகாரமாக இருக்கும்போல் இருக்கிறது.. காணாமல் போன மனிதன் பற்றியது. சீக்கிரம் வாருங்கள்..

காணாமல் அல்லது தொலைந்து போகும் புருஷர்களின் மனைவிகள் எல்லோருமே ஒரே ரகம்தான் என ரமோட்ஸ்வே நினைத்தாள். முதலில் புருஷனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ என்று பயப்படுவார்கள். ஒருவேளை வேறு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடியிருப்பானோ என்று அப்புறம் நினைப்பார்கள் - அநேகமாக அப்படித்தான் இருக்கும் என்கிற இந்த சந்தேகம் மெள்ள மெள்ள பெண்களை ஆக்கிரமித்து, அது அப்படியே கோபமாக மாறும்.. பிறகு, அவன் திரும்பி வந்தாலும் அவனைப் போட்டு உலுக்கி, பெரிய சண்டை போட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

மாளாட்ஸி என்கிற அந்தப் பெண், இரண்டாவது நிலையில் இருப்பதாகவே ரமோட்ஸ்வேக்குத் தோன்றியது. அவள் கணவன், வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என நினைத்த ரமோட்ஸ்வே யின் சந்தேகம் வேறு விதமாகவும் திசை மாறியது..



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:49



ஒருவேளை நிறைய கடன் தொல்லை இருக்குமோ?

நீ உன் கணவரைப் பற்றிய விவரங்களைக் கொஞ்சம் கூறு..

இதற்குள் மகுட்சி, மூன்று கோப்பை தேநீருடன் வந்தாள்.

என் கணவர் பெயர் பீட்டர் மாளாட்ஸி.. அவருக்கு நாற்பது வயதாகிறது. மரச் சாமான்களைத் தயாரித்து விற்பனை செய்வது அவர் வேலை. வியாபாரம் நல்லபடியாகவே நடந்தது. அதனால், கடன் தொல்லையினால் அவர் ஓடிப் போக சாத்தியக்கூறுகள் இல்லை..

ரமோட்ஸ்வே தலையை ஆட்டினாள்.

வேறு விதமாகவும் இருக்கலாம் இல்லையா.. ஒருவேளை இன்னொரு பெண்ணின் தொடர்பு..?

மாளாட்ஸி, வேகமாகத் தலையை ஆட்டி மறுத்தாள்.

இல்லை. நான் அப்படியும் நினைக்கவில்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு என்றால் அப்படி இருந் திருக்கலாம். ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டார்.. அவர் ஒருமுறை என்னை, தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் மறுத்து விட்டேன். அதனால் ஞாயிறு அன்று, தானே சென்று வந்தார். அவர் காணாமல் போனது கூட ஒரு ஞாயிற்றுக் கிழமைதான். நான், வழக்கம்போல சர்ச்சுக்குப் போயிருக்கிறார் என்றே நினைத்தேன்..

ரமோட்ஸ்வே மோட்டுவளையை வெறித்தாள். இது ஒன்றும் கஷ்டமான வழக்காகத் தோன்றவில்லை. பீட்டர் யாரோ ஒரு கிறிஸ்தவருடன்தான் சென்றிருக்க வேண்டும். அது பற்றி ஏதும் சந்தேகமேயில்லை. அவர் எந்தக் குழுவுடன் சென்றார் என்று கண்டுபிடித்தால், அவரைப் பற்றிய முழு விவரமும் கிடைக்கும். இது எதிர்பார்க்கும் முடிவுதான். பீட்டரை விடவும் வயதில் குறைந்தவனாகத்தான் இருக்க முடியும்.

மறுநாள் மாலைக்குள், தனக்குக் கிடைத்த விவரங்களின்படி ஐந்து குழுக்களைத் தேர்ந்தெடுத்தாள். அடுத்த இரண்டு நாட்களுக்குள் மூன்று குழுக்களின் தலைமை போதகர்களைச் சந்தித்தாள். அவர்கள் யாருக்குமே பீட்டரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.. போதாக்குறைக்கு அதில் இருவர், இவளை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தினர். மூன்றாவது நபர், நாசூக்காக இவளிடம் பணம் கேட்டார்.

ரமோட்ஸ்வே அவரிடம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பணத்தைக் கொடுத்து விட்டு நகர்ந்தாள். நாலாவது குழுவின் தலைவரான ரெவரெண்ட் ஷாட்ரெக் மெபாலி யைச் சந்தித்தபோது தனது தேடல், முடிவுக்கு வந்து விட்டதாகவே எண்ணினாள் ரமோட்ஸ்வே.

மாளாட்ஸி பெயரைக் கேட்ட துமே அவரது முகம் வெளிறியது. பயத்துடன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்.

ஆகா.. இந்த மனிதரிடம் பீட்டரைப் பற்றிய விஷயம் இருக்கிறது..

ரமோட்ஸ்வே அவரையே உற்று நோக்கினாள்.

நீங்கள் போலீஸைச் சேர்ந்தவரா..?''

- ரெவரெண்ட் மிரட்சியுடன் கேட்டார்.

நான்.. பெண் போலீஸ்..

அவர் பீதியுடன் வாயைத் திறந்து மூடினார்.

சரியாகச் சொல்லப் போனால் நான் போலீஸ்காரி இல்லை. ஒரு துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்தவள்..



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:50



இதற்குள் ரெவரெண்ட் சுதாரித்துக் கொண்டார்.

உங்களை யார் அனுப்பினார்கள்? - ரமோட்ஸ்வேயைப் பார்த்து, இப்போது சற்றே துணிச்சலாகக் கேட்டார்.

பீட்டர் மாளாட்ஸியின் மனைவி.

ஓ.. அவன், தனக்கு பெண்டாட்டியே இல்லை என்று கூறினானே..

இருக்கலாம். ஆனால், அவன் மனைவி. தன் கணவனைத் தேடித் தரச் சொல்லி, என் உதவியை நாடி வந்திருக்கிறாள்.

அவன் இறந்து விட்டான். கடவுளின் பாதத்தை அடைந்து விட்டான்.

ரமோட்ஸ்வே, ரெவரெண்ட்டைப் பார்த்தாள்.

அவர் சொல்வது உண்மையாக இருக்கும் என்றே அவளுக்குத் தோன்றியது. அவளுடைய தேடல் முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது.

இனி அவன் எப்படி இறந்தான் என்பதைக் கண்டுபிடித்தால் போதும். ரமோட்ஸ்வே, ரெவரெண்ட்டை நட்புடன் பார்த்துப் புன்னகைத்தாள்.

நீங்கள் அது பற்றி என்னிடம் நடந்ததை மறைக்காமல் கூறலாம். உங்கள் அனுமதியின்றி, உங்கள் பெயரை, நான் யாரிடமும் வெளியிடமாட்டேன். அவர் எப்படி இறந்தார்?

ரமோட்ஸ்வேயின் வெள்ளை நிற காரில், ரெவரெண்ட்டும் ஏற, அங்கிருந்த நதிக்கரை ஓரமாக இருவரும் பயணம் செய்தனர். கன மழை காரணமாகவும், புயலின் சீற்றத்தாலும் பாதை மேடும் பள்ளமுமாக இருந்தது.. கார் போகவே முடியாமல் திணறியது. ஒரு மரத்தடியில் காரை நிறுத்தினார்கள்.

ரெவரெண்ட் கண்களில் பீதியுடன் ஆற்றைப் பார்த்தார்.

இதுதான் நாங்கள் ஞானஸ்நானம் செய்து வைக்கும் இடம்..

இப்போது அவர் காட்டியது ஆற்றை ஒட்டியபடி இருந்த நீர்த்தேக்கத்தை.

நான் இங்குதான் நின்று கொண்டிருந்தேன். பாவமன்னிப்பு கேட்பதற்காக என்னுடன் வந்தவர்கள், இங்குதான் நீரில் இறங் கினார்கள்..

எத்தனை பேர்..?

ஆறு பேர்.. பீட்டர் மாளாட்ஸியையும் சேர்த்து. எல்லோரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். நான், வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன் - ரெவரெண்ட்டின் குரல் இப்போது நடுங்கியது.

அப்புறம்..?



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 18 Jul 2014 - 1:50



ரமோட்ஸ்வே, அந்த நீர்த்தேக்கத்திலிருந்து கண்களை எடுக்காமல் கேட்டாள்..

அனைவரும் மார்பளவு நீரில் நின்று கொண்டிருந்தனர். நான் கிறிஸ்துவின் சங்கீதங்களைப் பாடி அவர்களைத் திருப்பி பாட வைத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஏதோ தவறு நடந்து விட்டது போலத் தோன்றியது. நான் உற்றுப் பார்த்தேன். ஐந்து பேர்தான் இருந் தார்கள்.

ஒருவரைக் காணவில்லை.. அப்படித்தானே?

ஆமாம். அந்த ஒருவனை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான்.

ரமோட்ஸ்வே அந்த நீர்த்தேக்கத்தைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் பெரியதாக இல்லை.

மழை நாட்கள் தவிர அங்கு, குட்டையாகத்தான் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆனால், நல்ல மழை பெய்தால், பெரு வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நீச்சல் தெரியாதவனாக இருந்தால், வெள்ளம் அடித்துச் செல்லும் அபாயமும் உண்டு.

அப்படி அடித்துச் செல்லப்பட்டிருந்தால், அந்த உடல் எங்கேயாவது நதிக்கரையில் ஒதுங்கியிருக்க வேண்டுமே.. யார் கண்ணிலாவது பட்டிருக்குமே..? நதிக்கு யாராவது வந்து போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்.. அடையாளம் தெரியாத உடல் ஒன்று நதிக்கரையில் கிடந்ததாக பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் இத்தனை நாள் வந்திருக்காதா..?

இதை அலட்சியமாக விடக் கூடாது.

ரமோட்ஸ்வே கொஞ்சம் யோசித்தாள். வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தவளுக்கு உடல் நடுங்கியது.

ஒரு வேளை ரெவரெண்ட்.. ஃபாதரே..

அவள் அவரைக் கூர்மையாகப் பார்த்தாள்.




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக