புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
viyasan
நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_m10நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:20 am

First topic message reminder :

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 KdQzBA4R1mQzOOpaAxxO+Harivansh-Rai-Bachchan

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “மதுஷாலா” என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது. மேலும் “சோவியத் லேண்ட் நேரு விருதினை” வென்றுள்ளார். இவர் பிரபல இந்தித் திரைப்பட நடிகரான “அமிதாப் பச்சனின்” தந்தை ஆவார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அற்புதக் கவிஞராகவும், மொழிப்பெயர்ப்பாளராகும் விளங்கிய ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 27, 1907

பிறப்பிடம்: பாபுபட்டி, உத்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: கவிஞர் மற்றும் எழுத்தாளர்

இறப்பு: ஜனவரி 18, 2003

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், 1907 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில், அலகபாத்திற்கு அருகிலுள்ள “பாபுபட்டி” என்ற இடத்தில் பிரதாப் நாராயண் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் சரஸ்வதி தேவிக்கு மூத்த மகனாக ஒரு காயஸ்தா எனப்படும் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடங்கினார். பிறகு காயஸ்தா பாத்ஷாலஸ்லிருந்து உருது கற்கத் தொடங்கிய அவர், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து உயர் கல்வி கற்றார். 1941 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராக சுமார் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1952 ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர் பட்டம்’ பெற்றார்.

ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்

இங்கிலாந்தில் முனைவர் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவர், மீண்டும் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில் அலகாபாத் நிலையத்திலுள்ள “ஆல் இந்திய ரேடியோவிலும்” சில நேரங்களில் பணிபுரிந்தார். பின்னர் 1955 ஆம் ஆண்டு தில்லிக்கு சென்ற அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்தி மொழி சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சுமார் பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியபோது, மக்மத், ஓதெல்லோ, பகவத்கீதை மற்றும் உமர்கயாம் பற்றிய “ருபாயியத்” போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தகங்களுக்கு இந்தியில் மொழிப்பெயர்க்கும் பணி இவரிடம் வந்து சேர்ந்தது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:35 am

அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:

அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.

அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:

1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.

இறப்பு:

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார். அவர் புற்று நோயால் அவதிபட்டுக் கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார். அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள் :

திமுக வில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 25, 2014 11:35 am

குஷ்வந்த சிங்
----------------------
விருதைத் திருப்பி கொடுத்தவர்
-
1974-ல் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஆனால் அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை 1984-ல் அவர் திரும்ப ஒப்படைத்தார். பின்னர் 2007-ல் இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
-
20-3-2014 ல் தனது 99 வது வயதில் காலமானார்
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:36 am

அண்ணாவின் படைப்புகள்:

1939 – கோமளத்தின் கோபம்
1942 – களிங்கரணி
1943 – பார்வதி B.A
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி

குறிப்பிடத்தக்க படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்

காலவரிசை:

1909 – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்

1930 – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.

1934 – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1935 – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.

1938 – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

1944 – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1948 – அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி” திரையிடப்பட்டது.

1949 – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.

1962 – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1967 – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968 – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.

1969 – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.

1969 – பிப்ரவரி 3 ம்தேதிதன்னுடைய 59 வது வயதில்சென்னையில்காலமானார்.

1972 – அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.

1978 – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.

1987 – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.

2010 - அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:38 am

ரவீந்திரநாத் தாகூர்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 Cga6rmB6TpeUmTWf9Ivg+Rabindranath-Tagore

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று,ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி வாகை சூட்டப்பட்டவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர். ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார். அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. நம் நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கிய அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் அவர்களைப் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: மே 7, 1861

பிறந்த இடம்: கல்கத்தா

இறப்பு: ஆகஸ்ட் 7, 1941

தொழில்: கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி, கல்வியாளர், ஓவியர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடகாசிரியர், மெய்யியலாளர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார். அவர் தேவேந்திரநாத் மற்றும் சாரதா தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது மகன். அவரது தாத்தா த்வாரகனாத் தாகூர் ஒரு பணக்கார உரிமையாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.

ஆரம்ப கால கல்வி

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், ஓரியண்டல் செமினரி பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பாரம்பரிய கல்விமுறைப் பிடிக்காததால், பல ஆசிரியர்களின் கீழ் வீட்டிலேயேபடிக்கத் துவங்கினார். இவருக்கு பதினொரு வயதில் ‘உபாநயன்’ என்ற பூணூல் சடங்கு நடத்தப்பட்டது. இதன் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டு, பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்திற்கு சென்றனர். பின்னர், இமயமலைப் பகுதியான டல்ஹௌசியை அடையும் முன், அம்ரித்சாரிலும் தங்கினர். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பலருடைய சுயசரிதைகள்மற்றும் வரலாறுகளைக் கற்றதுடன், வீட்டிலேயே வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களையும் படித்தார். காளிதாசரின் மரபார்ந்த கவிதைகளையும் ஆர்வத்துடன் கற்றார்.

கவிதைகள் எழுதும் ஆர்வம்

1874ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டில், அதாவது 1875ல்,தாகூர் அவர்களின் தாயார் சாரதா தேவி காலமானார். கவிதைகளில் ரவீந்திரநாத்தாகூர் அவர்களின் முதல் கவிதைப் புத்தகமான‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை) 1878ல் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், தாகூர் அவர்கள் சட்டம் பயில்வதற்காக அவரது மூத்த சகோதரரான சத்யந்திரநாத்துடன் கடல்வழியாக இங்கிலாந்து சென்றார். ஆனால், ஷேக்ஸ்ப்பியர் மற்றும் பிறரது ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே 1880ல் வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.பின்னர், ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:39 am

இல்லற வாழ்க்கை

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ஆனால், இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர்.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள்

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1884ல், ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும், அவர் ‘ராஜா-ஓ-ராணி’ (கிங் மற்றும் ராணி) மற்றும் ‘விசர்ஜன்’ (தியாகம்) –என்ற நாடகங்களையும் எழுதினார். 1890 ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார். 1893 முதல் 1900 வரை, தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார். 1901ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார். பழைய இந்திய ஆசிரம முறை அடிப்படையில்,அவர் சாந்திநிகேதனில் ‘போல்பூர் பிராமசார்யாஸ்ரமம்’ என்றொரு பள்ளியைத் துவங்கினார். 1902 ஆம் ஆண்டில், அவரது மனைவி மிருணாளினி இறந்தார். பின்னர், தாகூர் அவர்கள் இயற்றிய கவிதைகள் தொகுப்பான ‘ஸ்மரன்’ (மெமோரியம் அங்குலம்), என்ற படைப்பை அவரது மனைவிக்காக அர்ப்பணித்தார்.

வங்கப்பிரிவினையில் தாகூரின் பங்கு

1905ல், கர்சன் பிரபு, வங்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார்.இந்த முடிவை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கடுமையாகப் போராடினார். தாகூர் அவர்கள், பல தேசிய பாடல்களை எழுதி, பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அவர் பிரிக்கப்படாத வங்காள அடிப்படை ஒற்றுமையை குறிக்கும் விதமாக‘ராக்கிபந்தன் விழாவை’வங்கத்தில் அறிமுகப்படுத்தினார்.

தாகூரின் கீதாஞ்சலியும், நோபல் பரிசும்

1909ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், ‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார். 1912 ஆம் ஆண்டில், இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார். இந்த லண்டன் பயணத்தின் போது, அவர் கீதாஞ்சலியில் இருந்து சில கவிதைகள் மற்றும் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.இவர் லண்டனில் மதிக்கத்தக்க ஆங்கிலேய ஓவியரான வில்லியம் என்பவரை சந்தித்தார். அவரது கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரோத்தென்ஸ்டீன்அவர்கள், அவரது கவிதைகளைப் பிரதிகள் எடுத்து, ஈட்ஸ் மற்றும் பிற ஆங்கிலக் கவிஞர்களுக்கும் கொடுத்தார். ஈட்ஸ் அவர்களும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். செப்டம்பர் 1912ல்,லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்ட போது, தாகூர் அவர்கள், அதற்கு முன்னுரை எழுதினார். 1913 ஆம் ஆண்டில்,ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. 1915 ஆம் ஆண்டில்,தாகூர் அவர்களுக்கு, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.

சுதந்திர போராட்டத்தில் தாகூரின் பங்கு

1919ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, தாகூர் அவர்கள் ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் அவர்கள் வழங்கிய ‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார். அவர் காந்திஜியின் ஒரு ஆதரவாளராக இருந்தாலும், அரசியலில் இருந்து விலகியே இருந்தார். அவர் கொள்கை என்ற நோக்கில் இருந்து தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்த்து, அதற்கு பதிலாக ஆன்மீக மதிப்புகள் மற்றும் பண்பாடு, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மைகள் கொண்ட ஒரு புதிய உலக கலாச்சாரத்தை உருவாக்க எண்ணினார். அவரது கருத்துக்களுக்கு ஒரு கருத்தியல் ஆதரவு பெறாதாதன் காரணமாக, அவருடைய சிந்தனைகளில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கியே இருந்தார். 1916 முதல் 1934 வரை, அவர் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:39 am

தாகூரின் பரந்த மனப்பான்மையும், கூர்ந்த அறிவுத் திறமையும்

1921ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். அவர் தனது புத்தகங்களுக்காகக் கிடைத்த நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத்தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார். தாகூர் அவர்கள், ஒரு படைப்பாக்க மேதையாக மட்டுமல்லாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், குறிப்பாக மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவராகவும் திகழ்ந்தார். தற்கால நவீன நியூட்டனின் இயற்பியலில் தாகூர் அவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருந்ததால், புதிதாக வளர்ந்து வரும்குவாண்டம் மெக்கானிக்ஸின் கொள்கைகள் மற்றும் குழப்பங்களின் பேரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் 1930ல் நடந்த ஒரு விவாதத்தில், அவரால் தனது கருத்துகளை முன் வைக்க முடிந்தது. அவரது சமகாலத்தவர்களானஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹெச்.ஜி.வெல்ஸ் போன்றோருடன் நடந்த கூட்டங்கள் மற்றும் நாடா பதிவு உரையாடல்கள் மூலமாக அவரது திறமைகளைசங்கிரகிக்கமுடிந்தது.1940ல்,சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்து, ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

இறப்பு

நீண்ட காலம் நோய்வாய்பட்டகுருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.

காலவரிசை

1861: கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார்.

1873: பூணூல் சடங்கிற்குப் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார்.

1874: அவரின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது.

1875: அவரது தாயார் சாரதா தேவி காலமானார்.

1878: முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை)வெளியிடப்பட்டது.

1878: சட்டம் பயில்வதற்காக கடல்வழியாக இங்கிலாந்து சென்றார்

1880: கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.

1883: டிசம்பர் 9ஆம் தேதி, 1883ஆம் ஆண்டில் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார்

1884: ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். 1890:தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார்.

1893–1900: தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார்.

1901: பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார்.

1902: அவரது மனைவி மிருணாளினி இறந்தார்.

1909:‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார்.

1912: இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார்.

1912: லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்டது.

1913: கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.

1915:ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.

1919: ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர்‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார்.

1916 –1934: சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1921:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

1940:சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1941: கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:40 am

டி. சதாசிவம்

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 7vQSPHOwQDWo52WRdViD+Sadasivam

‘டி.சதாசிவம்’ என்றும் ‘தியாகராஜ சதாசிவம்’ என்றும் ‘கல்கி தியாகராஜ சதாசிவம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் அவர் தீபகற்ப இந்தியாவிலிருந்து வந்த மிகப் பெரிய சுதந்திர போராட்ட வீரர்களுள் ஒருவராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பல கலகங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தாலும், தியாகராஜ சதாசிவம் அவர்கள் ஒரு திறமையான பாடகர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜ சதாசிவம் அவர்களை ஒரு சுதந்திர போராட்ட வீரராக பலருக்குத் தெரிந்திருந்தாலும், திரையுலகில் தயாரிப்பாளராக இவருடைய பங்களிப்பு மிகவும் பேசப்பட்டது. மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றான புகழ்பெற்ற தமிழிதழான ‘கல்கியை’, கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து துவங்கியது, டி.சதாசிவம் அவர்களின் வாழ்க்கையை பெரிதும் அலங்கரித்தது. இத்தகைய புகழ் தரும் பறைசாற்றல்கள் இருந்தாலும், டி.சதாசிவம் அவர்கள் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பாரம்பரிய கர்நாடக பாடகர்களுள் ஒருவரான எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் கணவர் என்று நன்கு அறியப்பட்டார்.

பிறப்பு: செப்டம்பர் 4, 1902

பிறந்த இடம்: ஆங்கரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா

இறப்பு: நவம்பர் 22, 1997

தொழில்: எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், டி.சதாசிவம் அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். டி.சதாசிவம் அவர்கள், தனது வாழ்க்கைப் பயணத்தை சென்னை மாகாணத்தின் கீழ் வரும் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆங்கரையில் தொடங்கினார். அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில், செப்டம்பர் 4, 1902ல் பிறந்தார். ஆகவே, தனது இளம் வயதிலேயே, மரபுசார்ந்த விஷயங்களை அறிந்துக் கொண்டார்.

ஆரம்ப வாழ்க்கை

ஒரு சிறுவனாக இருக்கும் காலத்திலேயே டி.சதாசிவம் அவர்கள், சுதந்திர போராட்டத்தில் சேர வேண்டுமென்பதற்காக தனது பள்ளியை விட்டுவிட்டார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும். தொடக்கத்தில், விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரமான செயல்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், சிறுது காலத்திற்குப் பின், அவர் காந்தியடிகளின் அஹிம்சைத் தத்துவங்களைப் பின்பற்றினார். ஆங்கிலேயரைக் கொன்ற சுதந்திர போராட்ட வீரரான, சுப்ரமணிய சிவாவின் தீவிர பக்தரான டி.சதாசிவம் அவர்கள், ‘பாரத் சமாஜில்’ சேர்ந்தார். டி. சதாசிவத்தின் தைரியத்தைக் கண்டு வியந்த சுப்ரமணிய சிவா அவர்கள், அவரைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார். பின்னர், சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழுநோயால் அவதியுற்ற சுப்ரமணிய சிவாவிற்கு சேவை செய்தார்.

தொழில்

1920ல், சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான ‘சட்டமறுப்பு இயக்கத்தின்’ தன்னை ஒரு அங்கமாக கருதி செயல்பட தொடங்கினார். அவர் வகித்த இந்தப் பங்கே அவரது இசைத் திறமையை வெளிக்கொண்டு வர உதவியது. டி.சதாசிவம் அவர்கள் கிராமம், கிராமமாக சென்று தன் இசைத் திறமையின் மூலம் தேச பக்திப் பாடல்களைப் பாடினார். இது மக்களை மிகவும் கவர்ந்தது. அவரது திறமையும், சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்புணர்வும், மக்களை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லமால் சுதந்திர உணர்வையும் விதைத்தது.

இல்லற வாழ்க்கை

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை, ஜூலை மாதம் 1936ல் டி.சதாசிவம் அவர்கள் சந்தித்தார். இதுவே, அவர் வாழ்வின் மிக அற்புதமான நிகழ்வாகும். இருவரும் ஈடிணையாயிருந்தனர். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாடகியாக இருந்ததால், டி.சதாசிவம் அவர்களின் சித்தாந்த மற்றும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும், ஆதரவு தரவும் முடிந்தது. அதேசமயம், சதாசிவம் அவர்களும், சுப்புலட்சுமி அவர்களின் இசை வாழ்க்கைக்கு ஆதரவுத் தந்து பெரும் வழிகாட்டியாக இருந்தார். இருப்பினும், அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், டி.சதாசிவம் அவர்கள் ஏற்கனவே அபிதகுசாம்பாள் என்பவரை மணமுடித்திருந்தார். அவர்களுக்கு ராதா, விஜயா என்ற மகள்களும் இருந்தனர். இதற்கிடையில், அவரது மனைவி ஜூலை 10, 1940ல் இறந்ததால், எம்.எஸ்.சுப்புலட்சுமியை மணமுடித்தார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:40 am

கல்கி நாளிதழ்

1941ல், டி.சதாசிவம் அவர்கள், தன் வாழ்வில் பெரும் திருப்பத்தை சந்தித்தார். இந்த ஆண்டில், அவருடைய நண்பரான ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து “கல்கி” என்ற தேசிய வாராந்திர பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிக்கை, பல பிரதிகள் விற்று மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 1954ல், பத்திரிகையாசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பின், டி.சதாசிவம் அவர்கள், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ‘கல்கி’ நாளிதழின் தரத்தையும், குணத்தையும் கருத்தில் கொண்ட டி.சதாசிவம் அவர்கள், எந்த ஒரு சமரசமுமில்லாமல் மிக சிறப்பான உள்ளடக்கத்தையே வெளியிட விரும்பினார்.

சதாசிவம் ஆற்றிய தொண்டுகள்

டி. சதாசிவம் அவர்கள், ஒரு சிறந்த நண்பராக இருந்தார். இளம் வயதிலிருந்த நட்பு வட்டத்தை, அவர் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். ஏழை, எளியோருக்கு அவர் செய்த அபரிமிதமான தொண்டும், அவர்களுக்கு செய்து கொடுத்த வசதியும் பெரிதும் பேசப்பட்டது. மேலும், வேலையற்றோருக்கு பல உதவிகளும் செய்தார். டி. சதாசிவம் அவர்கள் தனது மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சேர்ந்து அறக்கட்டளைக்காக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் வரை வழங்கினார். டி. சதாசிவம் அவர்களை ‘மனிதருள் மாணிக்கம்’ என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களாலேயே சொல்ல முடியும்.

டி.சதாசிவம் அவர்களின் ஆன்மீகத் தலைவரான, காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியராக இருந்த மறைந்த ‘சந்திரசேகராந்திர சரஸ்வதி’ அவர்களின் நினைவாக ஒரு ‘மணி மண்டபம்’ கட்ட நிதித் திரட்ட முயன்றார். இதனையே, தனது வாழ்வின் இறுதி நோக்கமாக கொண்டிருந்தார். தனது நண்பர்களின் உதவியுடன், காஞ்சிபுரத்திற்கருகே மணி மண்டபத்தைக் கட்டி முடித்தார். இதுவே, நண்பர்களின் மீது எவ்வளவு பற்றுடையவராக இருந்தாரோ, அதே அளவு தனது குருவிடத்திலும் பற்றுடையவராக இருந்தார் என்பதற்கு சான்று. தனது குருவை, ‘பூமியின் கடவுள்’ என்று நினைத்து வழிபாடு செய்தார்.

இறப்பு

’கல்கி’ தியாகராஜ சதாசிவம் அவர்கள், தமிழ்நாட்டின் தென்னகரமான சென்னை மாநகரில், நவம்பர் 22, 1997ல் தனது 95வது வயதில் காலமானார்.

பரம்பரைச்சொத்து

டி.சதாசிவம் அவர்கள் இன்று இல்லையென்றாலும், அவரது புராணம் இன்றும் வாழ்கின்றது. சி.ராஜகோபாலாச்சாரியின் மரணத்திற்குப் பின், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்ற சுதந்திர போராளிகளுள் ஒருவராவார். எனினும், நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அவர் கொண்ட ஈடுபாட்டிலும், பற்றிலும், அவர் தனது இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார்.

காலவரிசை

1902: சென்னை மாகாணம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருக்கும் ஆங்கரையில் பிறந்தார்.

1920: சட்டமறுப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

1936: எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை சந்தித்தார்.

1940: அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை மணமுடித்தார்.

1941: தனது நண்பரான ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, தேசிய வாராந்திர நாளிதழான ‘கல்கியை’ தொடங்கினார்.

1997: சென்னையில் காலமானார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:41 am

சரோஜினி நாயுடு

நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்  - Page 3 HqbFu8vlS6C2wfDSyvrG+Sarojini-Naidu

சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பிறந்தநாளே, ‘மகளிர் தினமாக’ இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி அறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: பிப்ரவரி 13, 1879

பிறப்பிடம்: ஹைதராபாத்

இறப்பு: மார்ச் 2, 1949

தொழில்: கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பேச்சாளர், ஆளுநர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், ஹைதெராபாத்தில், ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார். அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். அவர் ஹைதெராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராவார். சரோஜினி நாயுடு அவர்களின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர் ஆவார், மேலும், அவர் பெங்காலியில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தார், சரோஜினி நாயுடு அவர்கள். அவரது சகோதரர்களுள் ஒருவரான பிரேந்திரநாத் ஒரு புரட்சியாளர். அவரது மற்றொரு சகோதரரான ஹரிந்திரநாத் ஒரு கவிஞர், நாடகக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார்.

ஆரம்ப கால கல்வி

சரோஜினி நாயுடு அவர்கள், இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக இருந்தார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் தனது பன்னிரண்டு வயதில், சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று தேசிய புகழ் பெற்றார். அவரது தந்தை, அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

கவிதைகள் மீது பற்று

சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பில் சிறிது இடைவெளி விட்டு, பல்வேறு புத்தகங்களைப் படித்தார். பல கவிதைகள் எழுதிய அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதெராபாத் நிஜாம், வெளிநாடு சென்று அவர் படிக்க உதவித்தொகையும் வழங்கினார். தனது 16 வது வயதில், அவர் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரி படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் கல்விப் பயின்றார். அங்கு அவர், அவரது சமகால புகழ்பெற்ற மேதைகளான ‘ஆர்தர் சைமன்’ என்பவரையும், எட்மண்ட் காஸ் என்பவரையும் சந்தித்தார். காஸ் அவர்கள், சரோஜினி நாயுடு அவர்களின் கவிதைகளில் இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோயில்கள், சமூக சூழல், போன்றவற்றை ஒட்டியே எழுதுமாறு அவருக்கு அறிவுரைக் கூறினார். அவர் தற்கால இந்திய வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளைத் தனது கவிதைகளில் சித்தரித்தார். சரோஜினி நாயுடு அவர்களுடைய படைப்புகளான “தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”, மற்றும் “தி ப்ரோகேன் விங் (1912)” இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.

காதல் மற்றும் இல்லற வாழ்க்கை

சரோஜினி நாயுடு அவர்கள், தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். தொழில்ரீதியாக அவர் ஒரு மருத்துவராக இருந்த அவர் ஒரு அல்லாத பிராமணர். 19வது வயதில் சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பினை முடித்த பின்னர், உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், அவர் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ஜெயசூர்யா, பத்மஜ், ரந்தீர், மற்றும் லீலாமணி.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:42 am

இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு

1905ல், வங்க பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய பெண்களுக்கான சுயமரியாதையை, அவர்களுக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.

சரோஜினி ஆற்றிய பணிகள்

சரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்’ சட்டமான ‘ரௌலெட் சட்டத்தினைப்’ பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.

1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.

சரோஜினி நாயுடு அவர்கள், 1925ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.

1925ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல், நடந்த “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார். காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.

ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

இறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.

காலவரிசை

1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905: வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக