புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
உரத்த சிந்தனை _1
தனியார் பள்ளியில் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரும் பகல் கொள்ளை நடைபெறுகிறது ஆனாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
அரசு பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன அரசு பள்ளிகளின் இன்றைய நிலை கவலை தரக்கூடியது என்பது வேதனையான உண்மை
காரணம் என்ன
இன்றிலிருந்து உண்மைகள் பலவற்றை முன்வைக்கப் போகிறேன் அரசுப்ப்ள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் பிடிக்காமல் போகும்
உண்மை சுடுவது இயற்கைதானே?
க்ண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் வேலையல்ல இது! கல்வித்துறையில் புகுந்துள்ள புல்லுருவிகளை புலப்படுத்த இந்த வேலை !
அரசுப் பள்ளி நூலகம்
++++++++++++++++++++
TRUE KNOWLEDGE IS BEYOND OUR INSTITUTION என்று சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையில் படித்த இந்த வரிகள் என்றும் மற்க்க இயலாதது
“நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு உண்மையான அறிவு இருக்கிறது” என்னே சத்தியமான வார்த்தைகள்!
ப்ள்ளிப் பாடப்புத்தகத்தில் அறிவை தேடுவது அறியாமைதான் வேறென்ன!
பாடப்புத்தகம் தாண்டி ஒருமாணவன் அறிவைத் தேடுவான் என்றால் அவனுக்கு உள்ள ஒரே புகலிடம் பள்ளி நூலகம்
பெரும்பாலான பள்ளியில் நூலகம் இருப்பதே மாணவர்களுக்கு தெரியாது
இன்றும் சொல்லப்போனால் நூலகப் பெறுப்பு வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு கூட தெரியாது, !
நூலக அலமாரிகள் திறந்தே பல ஆண்டுகள் கடந்திருக்கும் என்பதுதானே எதார்த்தம்
படிக்கும் ஆசையோடு இருக்கும் மாணவனுக்கு திறக்காத நூலகத்தால் என்ன பயன் ?
கற்கும் பழக்கத்தை அடியோடு கைவிட்ட ஆசிரியர்கள் நூலகப்பொறுப்புக்கு வந்தால் அவரும் படிக்கமாட்டார் படிப்பவ்னையும் விடமாட்டார்!
கிராமங்களில் சொல்வார்கள் “வைக்கோல் போரில் படுத்துக்கிடக்கும் நாய் மாதிரி” என்று
நாய் வைக்கோல் திங்காது ...ஆசையோடு திங்கவரும் மாடுகளையும் விரட்டியடித்துக்கொண்டிருக்கும் இந்த வேலையைதான் நூலகப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்
சிலர் சொல்ல்லாம் ஆசிரியர்கள் பணிச்சுமை நேரமின்மை என்று,,அது காரணமல்ல,.... அதிக வேலையே இல்லாத சிறப்பாசிரியர்கள் பலர் நூலகப்பொறுப்பு வகிக்கம் பள்ளிகளில் கூட இதே நிலைதான்
தீர்வுதான் என்ன ?
பள்ளி நூலகத்திற்கென தனியான நுலகர் நியமிக்கப்படி வேண்டும் அவர்கள் மாணவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவார்கள்
ஆசிரியர்கள் படித்த நூல்க்ள் என்ன என்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வரவேண்டும்
RMSA திட்டத்தில் நூல்கள் வாங்க ஆண்டிற்கு 10000 ரூபாய் அளிக்கப்படுகிறது பள்ளிகள் முழுமையாக பயன்படுத்துகிறதா?
பள்ளிக்க்ளுக்கு வழங்கப்படும் நூல “கமிஷன் அடிப்படையில்தான்” தேர்வு செய்யப் படுகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது
தேனி வளப்ப்பது எப்படி? தென்னை சாகுபடி போன்ற தலைப்பிலான புத்தகங்களால் மாணவர்களுக்கு என்ன பயன்
எனக்கு தெரிந்து ஒரு ஆசிரியர்
1950 .60 வதுகளில் வெளியான பல அரிய நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று கொஞ்ச நாள்களில் “அமுக்கி விட்டார்”
அவருக்கு பணிமாறுதல் கிடைத்த போது அவர் ஒப்படைக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை கொடுத்தபோது புத்தகங்களை காணவில்லை அதற்குரிய தொகையை கட்டிவிடுகிறேன் என்றார்
இதுதான் காணமல் போன புத்தகங்களுக்கான நடைமுறை
பதிவேட்டில் பார்த்தால் பழைய புத்தகங்களின் விலை அன்றைய மதிப்பில் 2 ரூபாய் 3 ரூபாய் என்று இருக்கும்... பணத்தை கட்டிவிடுவார்
அரிய புத்தகங்கள் அவருக்கே சொந்தம்
அரசுப் சொத்தை கொள்ளையடிப்பதில் நம்மவர்கள் பலர்தான் கில்லாடிகளாயிற்றே !
தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உரத்த சிந்தனை _1
தனியார் பள்ளியில் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரும் பகல் கொள்ளை நடைபெறுகிறது ஆனாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
அரசு பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன அரசு பள்ளிகளின் இன்றைய நிலை கவலை தரக்கூடியது என்பது வேதனையான உண்மை
காரணம் என்ன
இன்றிலிருந்து உண்மைகள் பலவற்றை முன்வைக்கப் போகிறேன் அரசுப்ப்ள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் பிடிக்காமல் போகும்
உண்மை சுடுவது இயற்கைதானே?
க்ண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் வேலையல்ல இது! கல்வித்துறையில் புகுந்துள்ள புல்லுருவிகளை புலப்படுத்த இந்த வேலை !
அரசுப் பள்ளி நூலகம்
++++++++++++++++++++
TRUE KNOWLEDGE IS BEYOND OUR INSTITUTION என்று சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையில் படித்த இந்த வரிகள் என்றும் மற்க்க இயலாதது
“நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு உண்மையான அறிவு இருக்கிறது” என்னே சத்தியமான வார்த்தைகள்!
ப்ள்ளிப் பாடப்புத்தகத்தில் அறிவை தேடுவது அறியாமைதான் வேறென்ன!
பாடப்புத்தகம் தாண்டி ஒருமாணவன் அறிவைத் தேடுவான் என்றால் அவனுக்கு உள்ள ஒரே புகலிடம் பள்ளி நூலகம்
பெரும்பாலான பள்ளியில் நூலகம் இருப்பதே மாணவர்களுக்கு தெரியாது
இன்றும் சொல்லப்போனால் நூலகப் பெறுப்பு வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு கூட தெரியாது, !
நூலக அலமாரிகள் திறந்தே பல ஆண்டுகள் கடந்திருக்கும் என்பதுதானே எதார்த்தம்
படிக்கும் ஆசையோடு இருக்கும் மாணவனுக்கு திறக்காத நூலகத்தால் என்ன பயன் ?
கற்கும் பழக்கத்தை அடியோடு கைவிட்ட ஆசிரியர்கள் நூலகப்பொறுப்புக்கு வந்தால் அவரும் படிக்கமாட்டார் படிப்பவ்னையும் விடமாட்டார்!
கிராமங்களில் சொல்வார்கள் “வைக்கோல் போரில் படுத்துக்கிடக்கும் நாய் மாதிரி” என்று
நாய் வைக்கோல் திங்காது ...ஆசையோடு திங்கவரும் மாடுகளையும் விரட்டியடித்துக்கொண்டிருக்கும் இந்த வேலையைதான் நூலகப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்
சிலர் சொல்ல்லாம் ஆசிரியர்கள் பணிச்சுமை நேரமின்மை என்று,,அது காரணமல்ல,.... அதிக வேலையே இல்லாத சிறப்பாசிரியர்கள் பலர் நூலகப்பொறுப்பு வகிக்கம் பள்ளிகளில் கூட இதே நிலைதான்
தீர்வுதான் என்ன ?
பள்ளி நூலகத்திற்கென தனியான நுலகர் நியமிக்கப்படி வேண்டும் அவர்கள் மாணவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவார்கள்
ஆசிரியர்கள் படித்த நூல்க்ள் என்ன என்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வரவேண்டும்
RMSA திட்டத்தில் நூல்கள் வாங்க ஆண்டிற்கு 10000 ரூபாய் அளிக்கப்படுகிறது பள்ளிகள் முழுமையாக பயன்படுத்துகிறதா?
பள்ளிக்க்ளுக்கு வழங்கப்படும் நூல “கமிஷன் அடிப்படையில்தான்” தேர்வு செய்யப் படுகிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது
தேனி வளப்ப்பது எப்படி? தென்னை சாகுபடி போன்ற தலைப்பிலான புத்தகங்களால் மாணவர்களுக்கு என்ன பயன்
எனக்கு தெரிந்து ஒரு ஆசிரியர்
1950 .60 வதுகளில் வெளியான பல அரிய நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று கொஞ்ச நாள்களில் “அமுக்கி விட்டார்”
அவருக்கு பணிமாறுதல் கிடைத்த போது அவர் ஒப்படைக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை கொடுத்தபோது புத்தகங்களை காணவில்லை அதற்குரிய தொகையை கட்டிவிடுகிறேன் என்றார்
இதுதான் காணமல் போன புத்தகங்களுக்கான நடைமுறை
பதிவேட்டில் பார்த்தால் பழைய புத்தகங்களின் விலை அன்றைய மதிப்பில் 2 ரூபாய் 3 ரூபாய் என்று இருக்கும்... பணத்தை கட்டிவிடுவார்
அரிய புத்தகங்கள் அவருக்கே சொந்தம்
அரசுப் சொத்தை கொள்ளையடிப்பதில் நம்மவர்கள் பலர்தான் கில்லாடிகளாயிற்றே !
தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
பாலாவை பார்த்து ரொம்ப நாளாச்சு .
யோசிக்க வைத்த பதிவு . நடைமுறையில் நடப்பது தான் .
முன்பெல்லாம் library hours என்று இருக்கும் .கட்டாயமாக மாணவர்கள் ஒரு பீரியட் அங்கு சென்று உபயோகமாக நேரத்தை செலவிட வேண்டும் .
மனது வைத்தால் , ஆம் , மனது வைத்தால் சரி பண்ணக்கூடிய விஷயமே .
பெற்றோர்கள் /ஆசிரியர்கள் /பள்ளி நிர்வாகம் /மாணவர்கள் ---மனது வைத்தால் மட்டுமே .
ரமணியன்
யோசிக்க வைத்த பதிவு . நடைமுறையில் நடப்பது தான் .
முன்பெல்லாம் library hours என்று இருக்கும் .கட்டாயமாக மாணவர்கள் ஒரு பீரியட் அங்கு சென்று உபயோகமாக நேரத்தை செலவிட வேண்டும் .
மனது வைத்தால் , ஆம் , மனது வைத்தால் சரி பண்ணக்கூடிய விஷயமே .
பெற்றோர்கள் /ஆசிரியர்கள் /பள்ளி நிர்வாகம் /மாணவர்கள் ---மனது வைத்தால் மட்டுமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பல ஆசிரியர்களுக்கு பிடிக்காத செயல் வகுப்பில் "பாடம் நடத்துவதுதான்"
பாடம் நடத்துவதை தவிர்ப்பதற்கு பள்ளியில் எந்த வேலை கொடுத்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள் கம்யூட்டர் இயக்குவதிலிருந்து கழிவறை சுத்தம் செய்வது வரை..,,,,
45 நிமிட கற்பித்தல்நேரத்தில் 15 நிமிடங்கள் கூட் முழுமையாக ஈடுபடவில்லை என்றால் ஒரு மாணவன் எப்படி கற்றுக்கொள்ளமுடியும்?
இப்படி வேலை செய்வதிலிருந்து தப்பிக்கும் மனநிலைக்கு ஒ.பி, அடிப்பது என்று பெயர்
சிலர் ஒ.பியை முதல் பாடவேளையிலேயே ஆரம்பித்துவிடுவதுதான் கொடுமை,...
சில ஆசிரியர்கள் ஒ,பி அடிப்பதற்கு செய்யும் உத்திகள் என்ன தெரியுமா?
ஒரு ஆசிரியருக்கு 4 பாடவேலை வகுப்பு இருக்கிறது 3 பாடவேளை ஓய்வு என்று வைத்துக்கொள்வோம் இவர் தனது 3 ஓய்வு பாடவேளையை ஆசிரியர்கள் அறையிலோ ...சக ஆசிரியர்களுடன் அரட்டையிலோ முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் 4 வது பாட வேளை வகுப்பில் பாடம் நடத்துவதறக்கான மணி ஒலித்தபிறகே கழிவறைக்கு சென்று வர தோன்றும் அவர்மட்டும் போகமாட்டார் இன்னும் இரண்டு மூன்று ஆசியர்கள் வரும் வரை காத்திருந்து யாத்திரை யை தொடங்கி முடித்து இவர் வகுப்பிற்கு சென்று சேரும் போது கிட்டதட்ட கால் மணிநேரம் கடந்திருக்கும்
பாடவேளையில் ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைக்க வேண்டும் என்பது விதி...பல ஆசிரியர்கள் அப்படி செய்வதில்லை வகுப்பில் பாடம் நடத்தும்போது அழைப்பு வந்தால் பேச ஆரம்பித்துவிடுவார்கள் வகுப்பு அப்புறம் "அம்போ "தான்
புதிய கல்வி மதிப்பீட்டு முறையில் "ப்ராஜெக்ட் " எப்படி கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை இந்த ஒ.பி ஆசிரியர்களுக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது
வகுப்பில் நுழைந்த வுடன் "ஏய் தவளை படம் போடு.... வண்ணத்து பூச்சி வரைந்து காட்டு என்று கட்டளையிட்டு விட்டு ஓய்வெடுக்கலாம் அவன் வரைநது காட்டுவதற்குள் பாட வேளை முடிந்துவிடும்
ஒரு மனதில் தோன்றியதெல்லாம் "ப்ராஜெக்ட் " கொடுப்பதில் கில்லாடிக்ள்
ஒரு ஆசிரியர் கொடுத்த செயல்திட்டம் என்ன தெரியுமா...,,,," குருவி கூடு கொண்டு வா"
பாவம் ,,,,எத்தனை குருவிகள் கூட்டை இழந்த்தோ தெரியவில்லை ,,,மறுநாள் 50 குருவி கூடுகள் வந்துசேர்ந்த்து பள்ளிக்கு
சிலர் சிலிப் "டெஸ்ட் " என்று கொடுப்பார்க்ள் ஒரு நாள் பாடம் நடத்திவிட்டு அதற்கு ஒன்பது நாள் "டெஸ்ட் " வைப்பது,,,, இவர்கள் நோக்கம் நேரத்தை ஓட்ட வேண்டும் "டெஸ்ட் " பேப்பர்களை திருத்துவதே இல்லை
வகுப்பறையில் மாணவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்துவிட்டு தான் கையோடு கொண்டுவந்திருந்த ஜாக்கெட் பொத்தான் தைப்பது "கஜா"எடுப்பது என்.று சொந்த வேலையை சிரந்தையாக பார்த்த ஆசிரியை நானே பார்த்திருக்கிறேன்
ஒட்டுமொத்த ஆசிரியர்களுமே இப்படி நடந்துகொள்வதில்லை அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பை நேரம் காலம் கருதாது ந்டத்தும் ஆசிரியர்கள் தனது கை காசை செலவு செய்து மாணவர்களுக்காக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் இந்த ஓ,பி ஆசிரியர்களை ஒப்பிட்டால் நல்லாசிரியர்களின் எண்ணிக்கை குறைவு
ஒரு ஆசிரியரின் சம்பளத்தை பாடவேளைக்கு பகிர்ந்து பார்த்தால் 45 நிமிடத்திற்கு சுமார் 300 ரூபாயிலிருந்து 600 ..............700 ............என நீளும்
இவர்கள் வீட்டில் எடுபிடி வேலைக்கு வரும் சித்தாளுக்கு ஒரு நாளைக்கு ருபாய் 150 தருவார்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த சித்தாள் கொஞ்சம் நேரம் வேலை செய்யாமல் நின்றாலே போதும் இவர்கள் தாண்டிக்குதிப்பார்கள் திட்டித் தீர்பார்கள் காசு வீணாக போகிறதே என்று...ஆனால்
இவர்களை கேட்க யார்..?
பாரதி சொன்னதை போல படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான போவான் ஐயோ என்று போவான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது
தீர்வுதான் என்ன
ரொம்ப சிம்பிள்
சரியான தலைமை வேண்டும் ....கண்காணிப்பு அவசியம்
பள்ளி வேலையில் டீக்கடைக்கு போவது... வங்கிக்கு போவது ....எழவுக்கு போவது ...அனுமதி பெற்று சொந்த வேளையை பார்ப்பது இவற்றை அனுமதிக்கவே கூடாது
ஒரு ஆசிரியருக்கு பாட வேலை இருந்தால் மாணவர்கள் முழுமையாக வகுப்பில் பயன்பெறும் வகையில் அந்த ஆசிரியரை வேறு எந்த வேலைக்கும் தலைமையாசிரியர் பயன்படுத்தகூடாது
எல்லாவற்றிற்கும் மேலாக மனச்சாட்சி வேண்டும் தன்னிடம் ஒப்படைக்க பட்டிருக்கும் குழந்தைகள் ஏழைகள் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் எனற உணர்வும் அவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டியது தன் கடமை என்ற உணர்வும் ஆசிரியருக்கு அவசியம்
ஒரு முறை காமராஜரிடம் "சத்துணவுதிட்டம் தந்தால் போதுமான நிதிஇருக்காது பற்றாக்குறை வரும் "என்று அதிகாரிகள் சொன்னபோது ..........."பிள்ளைங்க படிக்கனும்பா அதுங்களுக்கு சோறுபோட நான் பிச்சைஎடுக்கவும் தயார்னேன் "....... என்றார் இவரை நினைவிற்கொள்ளவேண்டும்
பள்ளிக்கூடம், சத்துணவு திட்டம் என்று ஆயிரம் வசதிகளை செய்துகொடுத்த காமராசர் ஆசிரியர்களை பார்த்து சொன்னது ஒவ்வொரு ஆசிரியர் நெஞ்சிலும் நிற்கவேண்டும் அது :
"ஏழை புள்ளைங்க .......ஆசிரியர்களான உங்களை நம்பிதான் இருக்குதுங்க ... அதுங்கள ஏமாத்திடாதிங்க...,..."
தொடரும் ......
பாடம் நடத்துவதை தவிர்ப்பதற்கு பள்ளியில் எந்த வேலை கொடுத்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள் கம்யூட்டர் இயக்குவதிலிருந்து கழிவறை சுத்தம் செய்வது வரை..,,,,
45 நிமிட கற்பித்தல்நேரத்தில் 15 நிமிடங்கள் கூட் முழுமையாக ஈடுபடவில்லை என்றால் ஒரு மாணவன் எப்படி கற்றுக்கொள்ளமுடியும்?
இப்படி வேலை செய்வதிலிருந்து தப்பிக்கும் மனநிலைக்கு ஒ.பி, அடிப்பது என்று பெயர்
சிலர் ஒ.பியை முதல் பாடவேளையிலேயே ஆரம்பித்துவிடுவதுதான் கொடுமை,...
சில ஆசிரியர்கள் ஒ,பி அடிப்பதற்கு செய்யும் உத்திகள் என்ன தெரியுமா?
ஒரு ஆசிரியருக்கு 4 பாடவேலை வகுப்பு இருக்கிறது 3 பாடவேளை ஓய்வு என்று வைத்துக்கொள்வோம் இவர் தனது 3 ஓய்வு பாடவேளையை ஆசிரியர்கள் அறையிலோ ...சக ஆசிரியர்களுடன் அரட்டையிலோ முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் 4 வது பாட வேளை வகுப்பில் பாடம் நடத்துவதறக்கான மணி ஒலித்தபிறகே கழிவறைக்கு சென்று வர தோன்றும் அவர்மட்டும் போகமாட்டார் இன்னும் இரண்டு மூன்று ஆசியர்கள் வரும் வரை காத்திருந்து யாத்திரை யை தொடங்கி முடித்து இவர் வகுப்பிற்கு சென்று சேரும் போது கிட்டதட்ட கால் மணிநேரம் கடந்திருக்கும்
பாடவேளையில் ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைக்க வேண்டும் என்பது விதி...பல ஆசிரியர்கள் அப்படி செய்வதில்லை வகுப்பில் பாடம் நடத்தும்போது அழைப்பு வந்தால் பேச ஆரம்பித்துவிடுவார்கள் வகுப்பு அப்புறம் "அம்போ "தான்
புதிய கல்வி மதிப்பீட்டு முறையில் "ப்ராஜெக்ட் " எப்படி கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை இந்த ஒ.பி ஆசிரியர்களுக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது
வகுப்பில் நுழைந்த வுடன் "ஏய் தவளை படம் போடு.... வண்ணத்து பூச்சி வரைந்து காட்டு என்று கட்டளையிட்டு விட்டு ஓய்வெடுக்கலாம் அவன் வரைநது காட்டுவதற்குள் பாட வேளை முடிந்துவிடும்
ஒரு மனதில் தோன்றியதெல்லாம் "ப்ராஜெக்ட் " கொடுப்பதில் கில்லாடிக்ள்
ஒரு ஆசிரியர் கொடுத்த செயல்திட்டம் என்ன தெரியுமா...,,,," குருவி கூடு கொண்டு வா"
பாவம் ,,,,எத்தனை குருவிகள் கூட்டை இழந்த்தோ தெரியவில்லை ,,,மறுநாள் 50 குருவி கூடுகள் வந்துசேர்ந்த்து பள்ளிக்கு
சிலர் சிலிப் "டெஸ்ட் " என்று கொடுப்பார்க்ள் ஒரு நாள் பாடம் நடத்திவிட்டு அதற்கு ஒன்பது நாள் "டெஸ்ட் " வைப்பது,,,, இவர்கள் நோக்கம் நேரத்தை ஓட்ட வேண்டும் "டெஸ்ட் " பேப்பர்களை திருத்துவதே இல்லை
வகுப்பறையில் மாணவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்துவிட்டு தான் கையோடு கொண்டுவந்திருந்த ஜாக்கெட் பொத்தான் தைப்பது "கஜா"எடுப்பது என்.று சொந்த வேலையை சிரந்தையாக பார்த்த ஆசிரியை நானே பார்த்திருக்கிறேன்
ஒட்டுமொத்த ஆசிரியர்களுமே இப்படி நடந்துகொள்வதில்லை அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பை நேரம் காலம் கருதாது ந்டத்தும் ஆசிரியர்கள் தனது கை காசை செலவு செய்து மாணவர்களுக்காக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் இந்த ஓ,பி ஆசிரியர்களை ஒப்பிட்டால் நல்லாசிரியர்களின் எண்ணிக்கை குறைவு
ஒரு ஆசிரியரின் சம்பளத்தை பாடவேளைக்கு பகிர்ந்து பார்த்தால் 45 நிமிடத்திற்கு சுமார் 300 ரூபாயிலிருந்து 600 ..............700 ............என நீளும்
இவர்கள் வீட்டில் எடுபிடி வேலைக்கு வரும் சித்தாளுக்கு ஒரு நாளைக்கு ருபாய் 150 தருவார்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த சித்தாள் கொஞ்சம் நேரம் வேலை செய்யாமல் நின்றாலே போதும் இவர்கள் தாண்டிக்குதிப்பார்கள் திட்டித் தீர்பார்கள் காசு வீணாக போகிறதே என்று...ஆனால்
இவர்களை கேட்க யார்..?
பாரதி சொன்னதை போல படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான போவான் ஐயோ என்று போவான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது
தீர்வுதான் என்ன
ரொம்ப சிம்பிள்
சரியான தலைமை வேண்டும் ....கண்காணிப்பு அவசியம்
பள்ளி வேலையில் டீக்கடைக்கு போவது... வங்கிக்கு போவது ....எழவுக்கு போவது ...அனுமதி பெற்று சொந்த வேளையை பார்ப்பது இவற்றை அனுமதிக்கவே கூடாது
ஒரு ஆசிரியருக்கு பாட வேலை இருந்தால் மாணவர்கள் முழுமையாக வகுப்பில் பயன்பெறும் வகையில் அந்த ஆசிரியரை வேறு எந்த வேலைக்கும் தலைமையாசிரியர் பயன்படுத்தகூடாது
எல்லாவற்றிற்கும் மேலாக மனச்சாட்சி வேண்டும் தன்னிடம் ஒப்படைக்க பட்டிருக்கும் குழந்தைகள் ஏழைகள் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் எனற உணர்வும் அவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டியது தன் கடமை என்ற உணர்வும் ஆசிரியருக்கு அவசியம்
ஒரு முறை காமராஜரிடம் "சத்துணவுதிட்டம் தந்தால் போதுமான நிதிஇருக்காது பற்றாக்குறை வரும் "என்று அதிகாரிகள் சொன்னபோது ..........."பிள்ளைங்க படிக்கனும்பா அதுங்களுக்கு சோறுபோட நான் பிச்சைஎடுக்கவும் தயார்னேன் "....... என்றார் இவரை நினைவிற்கொள்ளவேண்டும்
பள்ளிக்கூடம், சத்துணவு திட்டம் என்று ஆயிரம் வசதிகளை செய்துகொடுத்த காமராசர் ஆசிரியர்களை பார்த்து சொன்னது ஒவ்வொரு ஆசிரியர் நெஞ்சிலும் நிற்கவேண்டும் அது :
"ஏழை புள்ளைங்க .......ஆசிரியர்களான உங்களை நம்பிதான் இருக்குதுங்க ... அதுங்கள ஏமாத்திடாதிங்க...,..."
தொடரும் ......
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தங்களின் அனுபவங்களை அழகான கட்டுரையாகத் தொடர்வதற்கு முதற்கண் நன்றி.
அரசுப் பள்ளிகளில் தரம் வெகுவாக குறைந்துள்ளது, ஆதலால் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே பிள்ளைகள் நன்கு படிக்க முடியும் என்ற மாய வலையில் பெற்றவர்கள் வீழ்ந்திருக்கும் பொழுது இது போன்ற கட்டுரைகள் அவர்களை மேலும் கதிகலங்கச் செய்யும் என்பதில் எள்ளளவும் அச்சமில்லை..
ஆயினும் இக்கட்டுரை ஒருதலைப்பட்சமாக எழுதப்பட்டுள்ளதோ என்ற அச்சம் ஏற்படுகிறது...தனியார் பள்ளிகளில் அழகான கட்டமைப்புகள் உள்ளது, ஆனால் விளம்பரப்படுத்தவே இவைகள் பயன்படுகிறது. மாணவர்கள் பயன்பாட்டுக்கு வருவது வெகுகுறைவே...நூலகம், விளையாட்டு, மற்ற செயல்பாடுகள் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவைகள் முழுவதும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
எத்தனை தனியார் பள்ளிகளில் நூலகம் இருக்கிறது. அதில் மாணவர் படிக்க அனுமதிப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் பணம், இனம், மொழி, மதம் சார்ந்த முன்னுரிமைகள் ஏராளம். அங்கு அனைவரும் ஒரே மாதிரி நடத்தப்படுவதில்லை. இடை, கடை நிலை மாணவர்கள் பெரும்பாலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஆசிரியர் பணியே குறைவான வேலைப்பளு கொண்ட பணி என்ற எண்ணம் மக்களிடையே உண்டு. இதை நம்பியே வேலைக்கு சேரும் ஆசிரியர்களும் உண்டு. வெட்டியாய் பொழுது போக்கும் ஆசிரியர்கள் இன்று மட்டுமல்ல, பல வருடங்களாக இப்பணியில் உள்ளனர். இதில் அவர்களின் கடமையைச் செய்வதில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள வேறுபாடு வெகு குறைவு.
அரசுப் பள்ளிகளில் கேட்க ஆளில்லை, ஆனால் தனியார் பள்ளிகளில் பாடம் எடுக்க போதிய ஆசிரியர் இருப்பதில்லை. படிப்பை தவிர பணம் வசூலிப்பது எப்படி என்ற குறிக்கோளே மேலோங்கி நிற்கிறது. அங்கும் ப்ராஜெக்ட், அதைப் படி, இதைச் செய் என்று காலம் கடத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். தரமான கல்வி கொடுக்கும் தனியார் பள்ளிகளும், அதில் தரமான ஆசிரியர்களும் விரல் விட்டும் என்னும் அளவில் தான் உள்ளனர்.
இந்நிலையில் அரசுப்பள்ளிகளின் அவல நிலையை மட்டும் எழுதுவது சரியா ?
அரசுப் பள்ளிகளில் தரம் வெகுவாக குறைந்துள்ளது, ஆதலால் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே பிள்ளைகள் நன்கு படிக்க முடியும் என்ற மாய வலையில் பெற்றவர்கள் வீழ்ந்திருக்கும் பொழுது இது போன்ற கட்டுரைகள் அவர்களை மேலும் கதிகலங்கச் செய்யும் என்பதில் எள்ளளவும் அச்சமில்லை..
ஆயினும் இக்கட்டுரை ஒருதலைப்பட்சமாக எழுதப்பட்டுள்ளதோ என்ற அச்சம் ஏற்படுகிறது...தனியார் பள்ளிகளில் அழகான கட்டமைப்புகள் உள்ளது, ஆனால் விளம்பரப்படுத்தவே இவைகள் பயன்படுகிறது. மாணவர்கள் பயன்பாட்டுக்கு வருவது வெகுகுறைவே...நூலகம், விளையாட்டு, மற்ற செயல்பாடுகள் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவைகள் முழுவதும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
எத்தனை தனியார் பள்ளிகளில் நூலகம் இருக்கிறது. அதில் மாணவர் படிக்க அனுமதிப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் பணம், இனம், மொழி, மதம் சார்ந்த முன்னுரிமைகள் ஏராளம். அங்கு அனைவரும் ஒரே மாதிரி நடத்தப்படுவதில்லை. இடை, கடை நிலை மாணவர்கள் பெரும்பாலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஆசிரியர் பணியே குறைவான வேலைப்பளு கொண்ட பணி என்ற எண்ணம் மக்களிடையே உண்டு. இதை நம்பியே வேலைக்கு சேரும் ஆசிரியர்களும் உண்டு. வெட்டியாய் பொழுது போக்கும் ஆசிரியர்கள் இன்று மட்டுமல்ல, பல வருடங்களாக இப்பணியில் உள்ளனர். இதில் அவர்களின் கடமையைச் செய்வதில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள வேறுபாடு வெகு குறைவு.
அரசுப் பள்ளிகளில் கேட்க ஆளில்லை, ஆனால் தனியார் பள்ளிகளில் பாடம் எடுக்க போதிய ஆசிரியர் இருப்பதில்லை. படிப்பை தவிர பணம் வசூலிப்பது எப்படி என்ற குறிக்கோளே மேலோங்கி நிற்கிறது. அங்கும் ப்ராஜெக்ட், அதைப் படி, இதைச் செய் என்று காலம் கடத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். தரமான கல்வி கொடுக்கும் தனியார் பள்ளிகளும், அதில் தரமான ஆசிரியர்களும் விரல் விட்டும் என்னும் அளவில் தான் உள்ளனர்.
இந்நிலையில் அரசுப்பள்ளிகளின் அவல நிலையை மட்டும் எழுதுவது சரியா ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
"ஏழை புள்ளைங்க .......ஆசிரியர்களான உங்களை நம்பிதான் இருக்குதுங்க ... அதுங்கள ஏமாத்திடாதிங்க...,..."
நிறைய ஆசிரியர்கள் இதை நினைப்பதே இல்லை.....
சில ஆசிரியர்கள் இதை மறப்பதே இல்லை..... (எனக்கு கிடைத்த ஓரிரண்டு ஆசிரியர் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் இந்த ரகம்...அந்த வகையில் நான் பாக்கிய சாலி.....)
என் பனிரெண்டாம் வகுப்பு ஆசிரியர்....அவருடைய வேலை வகுப்பிற்கு வருவது......மாணவர்களை எழுப்பி பாடத்தை வாசிக்க சொல்வது....அந்த வகுப்பில் எத்தனை பக்கம் வாசிக்கப்படதோ அது வரை அவர்கள் பாடம் எடுத்தாயிற்று அடுத்த வகுப்பில் மீண்டும் பாப்போம் என்று கூறி சென்று விடுவார்.....
அடுத்து அவர் செய்வது டெஸ்ட் வைப்பது...அதுவும் எப்படி......சரி பசங்களா.......நாளைக்கு ஒன்றாம் பக்கத்தில் இருந்து இருநூறாம் பக்கம் வரை படித்து விட்டு வாருங்கள் டெஸ்ட்.........அதாவது ஒரு நாளில் நாங்கள் இருநூறு பக்கத்தை படித்து டெஸ்ட் எழுத வேண்டும்...........டெஸ்ட் எழுதிய பேபர் இது வரை வந்தது இல்லை.......
இதற்காக அவர் வகுப்பு எடுக்க தெரியாது ஆசிரியர் என்று நான் கூற மாட்டேன்.......காரணம்...ஒரு முறை நாங்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு இரண்டு நாள் சென்றிருந்தேன் அந்த ஆசிரியர் மேலும் ஒரு மாணவர்.அங்கு திருப்பூர் மாவட்ட பள்ளிகள் அனைத்தும் கலந்து இருந்தன.........அங்கு ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு தலைப்பில் வகுப்பு எடுக்க வேண்டும்.......அங்கு வகுப்பு எடுத்தவர்களில் மிக சிறப்பாக எடுத்தது எங்க ஆசிரியை தான்.....எனக்கு பிரமிப்பு இவங்க இப்டி எல்லாம் கூட வகுப்பு எடுப்பார்களா என்று........இது போன்ற ஆசிரியர்களை என்ன சொல்ல.?
சதாசிவம் சார் சொன்னது போல்.....தனியார் பள்ளிகளும் அதே நிலை தான்........
நன்றிகள் பாலா சார்....தொடருங்கள்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கருத்துகளுக்கு நன்றி சதாசிவம்
பெரும் ஊதியம் தரும் உழைப்பு என்றவகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையை மட்டுமே நான் சுட்டிகாட்டுகிறேன்
நீங்கள் சுட்டிகாட்டுவதை போல் தனியார் பள்ளிக்கு பெற்றோர்களை இட்டு செல்லும் ஆபத்து இருக்கிறது
கல்வியை முழுக்க வியாபாரமாக மாற்றியது தனியார் பள்ளிகளே
அதற்கு சரியான மாற்றாக விளங்க வேண்டிய அரசுப்பள்ளிகள் தரம் தாழ்ந்து போய்விட்டது என்ற ஆதங்கமே எனது கட்டுரை ...என் .அனுபவம் கூட
இன்று ஒரு சம்பவம் நான் பத்தாம் வகுப்பாசிரியர் எனது வகுப்பில் ஒரு புதிய மாணவனை கண்டேன்
பொதுவாக பத்தாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க மாட்டோம் அந்த மாணவன் பெயர் பியஸ் கான் என்றான் இன்றுதான் சேர்ந்திருக்கிறான் ... விசாரித்தேன் அவன் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை திருத்துறைபூண்டியில் ஒரு தனியார் பள்ளியில் படித்திருக்கிறான் ஆங்கிலவழி ..அவன் தந்தை லாரி ஓட்டுனர் ...இந்த ஆண்டு 21000 கட்டணமாக கேட்டிருக்கிறார்கள் ... பணம் கட்ட வழியில்லை என்பதால் எங்கள் பள்ளியை நோக்கி வந்திருக்கிறான் ....தமிழ் வழியில் பயில ....
அவன் கடந்த ஆண்டு பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 94 ஆங்கிலம் 92 கணிதம் 97 என்று மதிப்பெண் பட்டியல் கட்டுகிறது
ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து படித்த ஒரு சிறுவனை .... வெறும் பணம் கட்ட முடியவில்லை என்ற காரணத் திற்காக துரத்தி விட்டது பள்ளி நிர்வாகம்
வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது ....
அவனிடம் சொன்னேன் ....அந்தப்பள்ளியைவிட நாங்கள் உன்னை அதிக மதிப்பெண் வாங்க செய்வோம் கவலை பாடாதே... என்று...அவன் முகத்தில் புன்னகை மலர்ந்து எனது மாணவர்கள் புதிய நண்பனுக்கு கைதட்டினார்கள்
பெரும் ஊதியம் தரும் உழைப்பு என்றவகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையை மட்டுமே நான் சுட்டிகாட்டுகிறேன்
நீங்கள் சுட்டிகாட்டுவதை போல் தனியார் பள்ளிக்கு பெற்றோர்களை இட்டு செல்லும் ஆபத்து இருக்கிறது
கல்வியை முழுக்க வியாபாரமாக மாற்றியது தனியார் பள்ளிகளே
அதற்கு சரியான மாற்றாக விளங்க வேண்டிய அரசுப்பள்ளிகள் தரம் தாழ்ந்து போய்விட்டது என்ற ஆதங்கமே எனது கட்டுரை ...என் .அனுபவம் கூட
இன்று ஒரு சம்பவம் நான் பத்தாம் வகுப்பாசிரியர் எனது வகுப்பில் ஒரு புதிய மாணவனை கண்டேன்
பொதுவாக பத்தாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க மாட்டோம் அந்த மாணவன் பெயர் பியஸ் கான் என்றான் இன்றுதான் சேர்ந்திருக்கிறான் ... விசாரித்தேன் அவன் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை திருத்துறைபூண்டியில் ஒரு தனியார் பள்ளியில் படித்திருக்கிறான் ஆங்கிலவழி ..அவன் தந்தை லாரி ஓட்டுனர் ...இந்த ஆண்டு 21000 கட்டணமாக கேட்டிருக்கிறார்கள் ... பணம் கட்ட வழியில்லை என்பதால் எங்கள் பள்ளியை நோக்கி வந்திருக்கிறான் ....தமிழ் வழியில் பயில ....
அவன் கடந்த ஆண்டு பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 94 ஆங்கிலம் 92 கணிதம் 97 என்று மதிப்பெண் பட்டியல் கட்டுகிறது
ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து படித்த ஒரு சிறுவனை .... வெறும் பணம் கட்ட முடியவில்லை என்ற காரணத் திற்காக துரத்தி விட்டது பள்ளி நிர்வாகம்
வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது ....
அவனிடம் சொன்னேன் ....அந்தப்பள்ளியைவிட நாங்கள் உன்னை அதிக மதிப்பெண் வாங்க செய்வோம் கவலை பாடாதே... என்று...அவன் முகத்தில் புன்னகை மலர்ந்து எனது மாணவர்கள் புதிய நண்பனுக்கு கைதட்டினார்கள்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தங்களின் புரிதலுக்கு நன்றி பாலா
இன்று கல்வி வியாபாரமாகிவிட்டது. preKg குழந்தைக்கும் நன்கொடை கொடுக்கும் அவல நிலைக்கு பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்... தலைமை ஆசிரியர் பணம் எடுத்து ஓடிப்போய் விட, மீண்டும் மாணவர்களிடம் வசூல் செய்த தனியார் பள்ளிகளும் இங்குண்டு. இவர்களுக்கு பணமே பிரதானம்.
உங்களின் ஆதங்கம் நியாமானதே, ஆயினும் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் இரண்டு பள்ளிகளுமே பொறுப்பற்றுத் தான் இயங்குகிறது. அரசுப் பள்ளியில் ஆசிரியர் சுகத்தை அனுபவிக்கிறார், தனியார் பள்ளியில் நிர்வாகம் அனுபவிக்கிறது. இரண்டு பள்ளியிலும் மாணவர்களின் நிலை ஒன்று தான். பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. இரு தரப்பிலும் கடமையைச் செவ்வனே செய்ய முயலும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
பெற்றவர்கள் கொஞ்சம் மேலும் பொறுப்புடன், பள்ளிகூடத்தில் சேர்த்து விடுவதோடு தன் கடமை முடிந்து விடாமல், ஒவ்வொரு விசயத்திற்கும் பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்டாலே போதும். குறைந்த பட்சம் பலனாவது கிடைக்கும்.
இன்று கல்வி வியாபாரமாகிவிட்டது. preKg குழந்தைக்கும் நன்கொடை கொடுக்கும் அவல நிலைக்கு பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்... தலைமை ஆசிரியர் பணம் எடுத்து ஓடிப்போய் விட, மீண்டும் மாணவர்களிடம் வசூல் செய்த தனியார் பள்ளிகளும் இங்குண்டு. இவர்களுக்கு பணமே பிரதானம்.
உங்களின் ஆதங்கம் நியாமானதே, ஆயினும் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் இரண்டு பள்ளிகளுமே பொறுப்பற்றுத் தான் இயங்குகிறது. அரசுப் பள்ளியில் ஆசிரியர் சுகத்தை அனுபவிக்கிறார், தனியார் பள்ளியில் நிர்வாகம் அனுபவிக்கிறது. இரண்டு பள்ளியிலும் மாணவர்களின் நிலை ஒன்று தான். பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. இரு தரப்பிலும் கடமையைச் செவ்வனே செய்ய முயலும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
பெற்றவர்கள் கொஞ்சம் மேலும் பொறுப்புடன், பள்ளிகூடத்தில் சேர்த்து விடுவதோடு தன் கடமை முடிந்து விடாமல், ஒவ்வொரு விசயத்திற்கும் பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்டாலே போதும். குறைந்த பட்சம் பலனாவது கிடைக்கும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|