புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 4 of 15 •
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
களைகட்டியது உலக கோப்பை கால்பந்து முக்கிய அணிகள் பிரேசில் வருகை
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசில் நாட்டில் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்குகின்றன. ஒரு மாதம் நடக்க உள்ள கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் ஏற்கனவே பிரேசிலுக்கு வந்து விட்டன. வெளிநாடுகளில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வந்த அணிகளும் நேற்று பிரேசிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள ஈக்வடார், பிரான்ஸ் அணிகள் நேற்று மதியம் பிரேசில் நாட்டில் போர்டோ அலெக்ரே, சாவா போலோ நகரங்களுக்கு வந்து சேர்ந்தன. பிரான்ஸ் அணி ரிபைரோ பிரெடோ பகுதிக்கும், ஈக்வடார் அணி வியாமோ பகுதிக்கும் சென்றன. அங்கு இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட உள்ளன. முன்னாள் உலக சாம்பியன்களான அர்ஜென்டினா, உருகுவே அணிகள் நேற்று மாலை பிரேசில் வந்தன. 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அணியான உருகுவே, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிகள் பெலோ ஹரிசாண்டே நகருக்கு வந்து சேர்ந்தன. இந்த இரு அணிகளும் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் அணிக்கு பரம எதிரியாக கருதப்படுபவை. உருகுவே அணி வரும் 14ம் தேதி தங்களது துவக்க போட்டியில் கோஸ்டாரிகாவை எதிர்த்து விளையாடுகிறது.
பிரான்ஸ், ஈக்வடார், அர்ஜென் டினா அணிகள் மறுநாளான 15ம் தேதியன்று முறையே ஹோண்டுராஸ், போஸ்னியா ஹெர்சகோவினா, சுவிட்சர்லாந்து அணிகளுடன் மோதுகின்றன. மொத்தத்தில், உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் 25 நாடுகளின் தேசிய அணிகள் இதுவரை பிரேசில் வந்து சேர்ந்து விட்டன. முக்கிய அணிகள் பிரேசில் வந்து சேர்ந்துவிட்டதால், பிரேசில் கால்பந்து ரசிகர்கள் தங்களது விருப்ப வீரர்களைக் காண அவர்கள் பயிற்சி செய்யும் ஊர்களில் குவிந்து வருகின்றனர். இதனால், இப்போதே பிரேசிலில் கால்பந்து திருவிழா களைகட்டி விட்டது.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசில் நாட்டில் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்குகின்றன. ஒரு மாதம் நடக்க உள்ள கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் ஏற்கனவே பிரேசிலுக்கு வந்து விட்டன. வெளிநாடுகளில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வந்த அணிகளும் நேற்று பிரேசிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள ஈக்வடார், பிரான்ஸ் அணிகள் நேற்று மதியம் பிரேசில் நாட்டில் போர்டோ அலெக்ரே, சாவா போலோ நகரங்களுக்கு வந்து சேர்ந்தன. பிரான்ஸ் அணி ரிபைரோ பிரெடோ பகுதிக்கும், ஈக்வடார் அணி வியாமோ பகுதிக்கும் சென்றன. அங்கு இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட உள்ளன. முன்னாள் உலக சாம்பியன்களான அர்ஜென்டினா, உருகுவே அணிகள் நேற்று மாலை பிரேசில் வந்தன. 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அணியான உருகுவே, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிகள் பெலோ ஹரிசாண்டே நகருக்கு வந்து சேர்ந்தன. இந்த இரு அணிகளும் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் அணிக்கு பரம எதிரியாக கருதப்படுபவை. உருகுவே அணி வரும் 14ம் தேதி தங்களது துவக்க போட்டியில் கோஸ்டாரிகாவை எதிர்த்து விளையாடுகிறது.
பிரான்ஸ், ஈக்வடார், அர்ஜென் டினா அணிகள் மறுநாளான 15ம் தேதியன்று முறையே ஹோண்டுராஸ், போஸ்னியா ஹெர்சகோவினா, சுவிட்சர்லாந்து அணிகளுடன் மோதுகின்றன. மொத்தத்தில், உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் 25 நாடுகளின் தேசிய அணிகள் இதுவரை பிரேசில் வந்து சேர்ந்து விட்டன. முக்கிய அணிகள் பிரேசில் வந்து சேர்ந்துவிட்டதால், பிரேசில் கால்பந்து ரசிகர்கள் தங்களது விருப்ப வீரர்களைக் காண அவர்கள் பயிற்சி செய்யும் ஊர்களில் குவிந்து வருகின்றனர். இதனால், இப்போதே பிரேசிலில் கால்பந்து திருவிழா களைகட்டி விட்டது.
உலகக் கோப்பைக் கால்பந்து: லண்டனிலிருந்து பிரேசிலுக்கு ஸ்கூட்டரில் சென்ற ரசிகர்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைப் பார்க்க லண்டனிலிருந்து பிரேசிலுக்கு வெஸ்பா ஸ்கூட்டரிலேயே சென்றார் இங்கிலாந்து ரசிகர்.
கிறிஸ் ஹாலெட் என்ற இந்த நபருக்கு வயது 44. லண்டனிலிருந்து வெஸ்பா ஸ்கூட்டரில் புறப்பட்ட இவர் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.
24,000 கிமீ தூரத்தை இவர் 4 மாதங்களில் கடந்துள்ளார்.
தனது இந்தப் பயணம் முதுகைப் பதம் பார்த்தது என்றாலும் விமானத்தில் செல்வதை விட இன்பமாகவே இருந்தது என்கிறார் ஹாலெட்.
உலகக் கோப்பைக் கால்பந்தில் பங்குபெறும் 32 நாடுகளில் 18 நாடுகளை இவர் தனது ஸ்கூட்டரில் கடந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இத்தாலியில் 2-வது உலகக் கோப்பை
1990 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது. இதன்மூலம் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இருமுறை உலகக் கோப்பையை நடத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றது இத்தாலி.
இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் 6 கண்டங்களைச் சேர்ந்த 116 அணிகள் பங்கேற்றன. அதில் இருந்து 22 அணிகள் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. போட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா ஆகியவை நேரடித் தகுதி பெற்றன.
இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தது ஜெர்மனி. பெனால்டி ஷூட் அவுட் முறையில் அரையிறுதியில் தோல்வி கண்ட இங்கிலாந்தும், இத்தாலியும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. இதில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
பெரிய அளவில் கோலின்றி அமைந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்திலும் (2.21) குறைவான கோல்கள் அடிக்கப்பட்டதோடு, மொத்தம் 16 ரெட் கார்டுகளும் வழங்கப்பட்டன. அதில் ஒன்று இறுதியாட்டத்தில் வழங்கப்பட்டதாகும். உலகக் கோப்பை வராற்றில் இறுதியாட்டத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது முதல்முறையாகும். எனினும் அதிக ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது, அதிக கோலடித்தவருக்கான விருது என இரண்டையும் இத்தாலியின் சால்வடார் ஷிலாச்சி தட்டிச் சென்றார்.
1990 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 115
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,517,348
கோலடிக்கப்படாத ஆட்டம் - 5
டிராவான ஆட்டம் - 12
டாப் ஸ்கோர்
சால்வடார் ஷிலாச்சி (இத்தாலி) - 6
டோமஸ் ஸ்குராவி (செக்.குடியரசு) - 5
மைக்கேல் (ஸ்பெயின்) - 4
ரோஜர் மில்லா (கேமரூன்) - 4
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 4
லோதார் மட்ஹஸ் (ஜெர்மனி) - 4
ரெட் கார்டு - 16
யெல்லோ கார்டு - 169
1990 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது. இதன்மூலம் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இருமுறை உலகக் கோப்பையை நடத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றது இத்தாலி.
இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் 6 கண்டங்களைச் சேர்ந்த 116 அணிகள் பங்கேற்றன. அதில் இருந்து 22 அணிகள் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. போட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா ஆகியவை நேரடித் தகுதி பெற்றன.
இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தது ஜெர்மனி. பெனால்டி ஷூட் அவுட் முறையில் அரையிறுதியில் தோல்வி கண்ட இங்கிலாந்தும், இத்தாலியும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. இதில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
பெரிய அளவில் கோலின்றி அமைந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்திலும் (2.21) குறைவான கோல்கள் அடிக்கப்பட்டதோடு, மொத்தம் 16 ரெட் கார்டுகளும் வழங்கப்பட்டன. அதில் ஒன்று இறுதியாட்டத்தில் வழங்கப்பட்டதாகும். உலகக் கோப்பை வராற்றில் இறுதியாட்டத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது முதல்முறையாகும். எனினும் அதிக ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது, அதிக கோலடித்தவருக்கான விருது என இரண்டையும் இத்தாலியின் சால்வடார் ஷிலாச்சி தட்டிச் சென்றார்.
1990 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 115
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,517,348
கோலடிக்கப்படாத ஆட்டம் - 5
டிராவான ஆட்டம் - 12
டாப் ஸ்கோர்
சால்வடார் ஷிலாச்சி (இத்தாலி) - 6
டோமஸ் ஸ்குராவி (செக்.குடியரசு) - 5
மைக்கேல் (ஸ்பெயின்) - 4
ரோஜர் மில்லா (கேமரூன்) - 4
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 4
லோதார் மட்ஹஸ் (ஜெர்மனி) - 4
ரெட் கார்டு - 16
யெல்லோ கார்டு - 169
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன்
1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்ஸிகோவில் மே 31 முதல் ஜூன் 28 வரை நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.
இதையடுத்து மெக்ஸிகோவில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் இரு உலகக் கோப்பையை நடத்திய முதல் நாடு என்ற பெருமை மெக்ஸிகோ வசமானது.
ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஆர்ஜென்டீனா சாம்பியன்
அரையிறுதியில் ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், மேற்கு ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முதல் பாதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜோஸ் பிரௌன் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜார்ஜ் வல்டானோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையை எட்டியது. 73-வது நிமிடம் வரை இதே நிலை நீடிக்க, 74-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி எழுச்சி பெற்றது. மேற்கு ஜெர்மனியின் கார்ல் ஹெய்ன்ஸ் முதல் கோலை அடிக்க, 80-வது நிமிடத்தில் ரூடி வாலர் அடுத்த கோலை அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.
இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன் ஆனது.
உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, 5 அழகான கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த மரடோனா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன.
மரடோனாவின் மாயாஜாலம்
இந்த உலகக் கோப்பையின் காலிறுதியில் இங்கிலாந்தும், ஆர்ஜென்டீனாவும் மோதின. அதில் ஆர்ஜென்டீன கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அவர் தலையால் பந்தை முட்டியபோது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.
இதே ஆட்டத்தில் மரடோனா மற்றொரு கோலும் அடித்தார். அப்போது இங்கிலாந்தின் 5 வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்தை எடுத்துச் சென்ற மரடோனா, கடைசியாக கோல் கீப்பரையும் வீழ்த்தி கோலடித்தார். இந்த கோல், பின்னாளில் நூற்றாண்டின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.
1986 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 132
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,407,431
ஓர் ஆட்டத்தில் அதிக கோல், புட்ராகினோ (ஸ்பெயின்) - 4 கோல்கள்
கோலடிக்கப்படாத ஆட்டம் - 4
டிராவான ஆட்டம் - 14
டாப் ஸ்கோர்
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 6 கோல்
டீகோ மரடோனா (ஆர்ஜென்டீனா) - 5 கோல்
எமிலியோ புட்ராகினோ (ஸ்பெயின்) - 5 கோல்
கரேகா (பிரேசில்) - 5 கோல்
ரெட் கார்டு - 8
யெல்லோ கார்டு - 137
1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்ஸிகோவில் மே 31 முதல் ஜூன் 28 வரை நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.
இதையடுத்து மெக்ஸிகோவில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் இரு உலகக் கோப்பையை நடத்திய முதல் நாடு என்ற பெருமை மெக்ஸிகோ வசமானது.
ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஆர்ஜென்டீனா சாம்பியன்
அரையிறுதியில் ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், மேற்கு ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முதல் பாதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜோஸ் பிரௌன் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜார்ஜ் வல்டானோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையை எட்டியது. 73-வது நிமிடம் வரை இதே நிலை நீடிக்க, 74-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி எழுச்சி பெற்றது. மேற்கு ஜெர்மனியின் கார்ல் ஹெய்ன்ஸ் முதல் கோலை அடிக்க, 80-வது நிமிடத்தில் ரூடி வாலர் அடுத்த கோலை அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.
இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன் ஆனது.
உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, 5 அழகான கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த மரடோனா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன.
மரடோனாவின் மாயாஜாலம்
இந்த உலகக் கோப்பையின் காலிறுதியில் இங்கிலாந்தும், ஆர்ஜென்டீனாவும் மோதின. அதில் ஆர்ஜென்டீன கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அவர் தலையால் பந்தை முட்டியபோது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.
இதே ஆட்டத்தில் மரடோனா மற்றொரு கோலும் அடித்தார். அப்போது இங்கிலாந்தின் 5 வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்தை எடுத்துச் சென்ற மரடோனா, கடைசியாக கோல் கீப்பரையும் வீழ்த்தி கோலடித்தார். இந்த கோல், பின்னாளில் நூற்றாண்டின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.
1986 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 132
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,407,431
ஓர் ஆட்டத்தில் அதிக கோல், புட்ராகினோ (ஸ்பெயின்) - 4 கோல்கள்
கோலடிக்கப்படாத ஆட்டம் - 4
டிராவான ஆட்டம் - 14
டாப் ஸ்கோர்
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 6 கோல்
டீகோ மரடோனா (ஆர்ஜென்டீனா) - 5 கோல்
எமிலியோ புட்ராகினோ (ஸ்பெயின்) - 5 கோல்
கரேகா (பிரேசில்) - 5 கோல்
ரெட் கார்டு - 8
யெல்லோ கார்டு - 137
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- சம்பத்புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014
சிறப்பான கோர்வையான விவரங்கள்..
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
நாளை உலக கோப்பை ஆரம்பம்
பேலோ ஹரிஜாண்டே: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே உள்ளிட்ட 25 அணிகள், பிரேசில் மண்ணில் களமிறங்கின.
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நாளை துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
போட்டியை நடத்தும் பிரேசில் அணிக்கு அடுத்து, கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி அர்ஜென்டினா. கடந்த 1978, 1986 என, இருமுறை சாம்பியன் ஆன இந்த அணி, இம்முறை மெஸ்சி தலைமையில் சாதிக்க களமிறங்கியுள்ளது.
இதற்கான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று பிரேசிலின் பெலோ ஹரிசாண்டே வந்தடைந்தனர். இந்த அணி இங்குள்ள வெஸ்பாசியானோவில் தங்கி பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதேபோல உருகுவே, பிரான்ஸ் மற்றும் ஈகுவடார் அணிகளும் நேற்று பிரேசில் சென்றன.
இதுகுறித்து பிரேசில் பயிற்சியாளர் டிசாம்ப்ஸ் கூறுகையில்,‘‘ பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இத்தொடருக்காக அனைத்து வீரர்களும் நல்லமுறையில் தயாராகி உள்ளோம். எங்களது மூன்றாவது லீக் போட்டியில் ஈகுவடார் அணியை ரியோ டி ஜெனிரோவில உள்ள மரகானா மைதானத்தில் சந்திக்கவுள்ளது இப்போதிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார்.
பேலோ ஹரிஜாண்டே: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே உள்ளிட்ட 25 அணிகள், பிரேசில் மண்ணில் களமிறங்கின.
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நாளை துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
போட்டியை நடத்தும் பிரேசில் அணிக்கு அடுத்து, கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி அர்ஜென்டினா. கடந்த 1978, 1986 என, இருமுறை சாம்பியன் ஆன இந்த அணி, இம்முறை மெஸ்சி தலைமையில் சாதிக்க களமிறங்கியுள்ளது.
இதற்கான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று பிரேசிலின் பெலோ ஹரிசாண்டே வந்தடைந்தனர். இந்த அணி இங்குள்ள வெஸ்பாசியானோவில் தங்கி பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதேபோல உருகுவே, பிரான்ஸ் மற்றும் ஈகுவடார் அணிகளும் நேற்று பிரேசில் சென்றன.
இதுகுறித்து பிரேசில் பயிற்சியாளர் டிசாம்ப்ஸ் கூறுகையில்,‘‘ பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இத்தொடருக்காக அனைத்து வீரர்களும் நல்லமுறையில் தயாராகி உள்ளோம். எங்களது மூன்றாவது லீக் போட்டியில் ஈகுவடார் அணியை ரியோ டி ஜெனிரோவில உள்ள மரகானா மைதானத்தில் சந்திக்கவுள்ளது இப்போதிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துவக்க விழாவில் இரும்பு மனிதன்
சாவ் பாலோ: உலக கோப்பை துவக்க விழாவில், ‘இரும்பு மனிதனை’ போன்று உடை அணிந்த ஒருவர் பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார்.
உலக கோப்பை தொடர் பிரேசிலில் ஜூன் 12ல் துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் துவக்கவிழா சாவ் பாலோ நகரில் நடக்கிறது. 25 நிமிடங்கள் நடக்கும் இதில் மொத்தம் 600 நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதைக்காண 60 ஆயிரம் பேர் மைதானத்தில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஒரு புதுமை நிகழ்த்தப்படவுள்ளது. அதாவது, பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்த பின், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், ரோாபோ போன்று இரும்பு உடை அணிந்து, பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார். இதனை பிரேசில் டாக்டர் மிக்குயல் நிகோலெலிஸ் வடிவமைத்துள்ளார். இதன்படி மனித மூளையில் இருந்து கிடைக்கப்பெறும் சிக்னலுக்கு ஏற்ப, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த உடையில் இருந்து வெளியாகும் எலக்ட்ரானிக் சிக்னல் மூலம், பந்தை உதைக்க வைக்கின்றனர்.
இதுகுறித்து பிரேசில் டாக்டர் மிக்குயல் நிகோலெலிஸ் கூறியது:
மனித உடல் சம்பந்தப்படாத ஒரு புறக்கூடு ஒன்று, மனித மூளையின் உதவியால் இயக்கப்படுவது இது தான் முதன் முறை. கடந்த 2009ல் பிரேசிலுக்கு உலக கோப்பை நடத்தும் வாய்ப்பு கிடைத்தவுடன், புதிதாக ஏதாவது செய்யும் படி எங்களிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தான் இந்த ‘ஐடியா’ உருவானது. இதற்காக பிரேசில் அரசிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 82 கோடி வரை பெற்றுள்ளோம். இது அமெரிக்கா அரசு இயந்திர கைகள் உருவாக்க செலவு செய்யும் பணத்தை விட, ஐந்து மடங்கு குறைவு தான். மற்றபடி அதிகமான தொகை பெற்றதாக கூறுவது தவறு.
இவ்வாறு மிக்குயல் நிகோலெலிஸ் கூறினார்.
சாவ் பாலோ: உலக கோப்பை துவக்க விழாவில், ‘இரும்பு மனிதனை’ போன்று உடை அணிந்த ஒருவர் பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார்.
உலக கோப்பை தொடர் பிரேசிலில் ஜூன் 12ல் துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் துவக்கவிழா சாவ் பாலோ நகரில் நடக்கிறது. 25 நிமிடங்கள் நடக்கும் இதில் மொத்தம் 600 நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதைக்காண 60 ஆயிரம் பேர் மைதானத்தில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஒரு புதுமை நிகழ்த்தப்படவுள்ளது. அதாவது, பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்த பின், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், ரோாபோ போன்று இரும்பு உடை அணிந்து, பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார். இதனை பிரேசில் டாக்டர் மிக்குயல் நிகோலெலிஸ் வடிவமைத்துள்ளார். இதன்படி மனித மூளையில் இருந்து கிடைக்கப்பெறும் சிக்னலுக்கு ஏற்ப, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த உடையில் இருந்து வெளியாகும் எலக்ட்ரானிக் சிக்னல் மூலம், பந்தை உதைக்க வைக்கின்றனர்.
இதுகுறித்து பிரேசில் டாக்டர் மிக்குயல் நிகோலெலிஸ் கூறியது:
மனித உடல் சம்பந்தப்படாத ஒரு புறக்கூடு ஒன்று, மனித மூளையின் உதவியால் இயக்கப்படுவது இது தான் முதன் முறை. கடந்த 2009ல் பிரேசிலுக்கு உலக கோப்பை நடத்தும் வாய்ப்பு கிடைத்தவுடன், புதிதாக ஏதாவது செய்யும் படி எங்களிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தான் இந்த ‘ஐடியா’ உருவானது. இதற்காக பிரேசில் அரசிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 82 கோடி வரை பெற்றுள்ளோம். இது அமெரிக்கா அரசு இயந்திர கைகள் உருவாக்க செலவு செய்யும் பணத்தை விட, ஐந்து மடங்கு குறைவு தான். மற்றபடி அதிகமான தொகை பெற்றதாக கூறுவது தவறு.
இவ்வாறு மிக்குயல் நிகோலெலிஸ் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 15
|
|