புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
21 Posts - 84%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
1 Post - 4%
viyasan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
213 Posts - 42%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
21 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Dec 11, 2015 7:28 pm

மடை திறந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் போன்ற நடையில்

சுவைபட தகவல்களைத் தரும் டாக்டர் சார் அவர்களே,


ஆதாரமில்லாமல் எதையும் தாங்கள் பதிப்பிக்க மாட்டீர்கள் என்பதை

நான் நன்கு அறிவேன்.


"தயிர்க்கார பொம்பளை"யை மனதில் கொண்டுதான் கண்ணதாசன்

இந்தப் பாடல் வரிகளை எழுதினார் என்று தாங்கள் சொல்லித்தான்

இப்போது தெரிய வந்தது.


ஆழ்ந்து சிந்தித்தால் கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரிகளுக்குப்

பின்னும் இம்மாதிரி ஏதாவது ஒரு பின்புலம் இருக்கும் என்றே

தோன்றுகிறது. கவிஞர் கதைக்கேற்பவும் காட்சிக்கேற்பவும்

பாடல்களை இயற்றும் தருணங்களில் அவர் சொந்த அனுபவங்களும்

அவர் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தக்

கலவைகளின் வெளிப்பாடுதான் மூன்றுக்கும் பொருத்தமான

வார்த்தைகளாகப் பிரவாகிக்கிறது.


பாடல் வரிகளின் மறு அர்த்தத்தைப் பற்றி நம் கவனத்திற்கு வந்த

பாடல்கள் சில. ஆனால் நாம் அறியாமல் அவ்வாறு பல பாடல்கள்

இருக்கலாம். தங்கள் அழகு நடையில் ஒவ்வொரு பாடல்களாக

அவை வெளிவரட்டும்.


ஆவலுடன் காத்திருப்போம்.


- சிவா.சி.ஆர்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 11, 2015 7:49 pm

நன்றி எம்.கே.ஆர்.சாந்தாராம் அவர்களே ! பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 1571444738 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 28, 2015 5:01 pm

பத்மினி, ச ரோஜா தேவி இவுங்க ரெண்டு பேரையும் பத்தி தெரியாத தகவல்களை, கொடுத்துட்டீங்க
டாக்டர் சார். அடுத்து நடிகையர் திலகம் சாவி3 அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறேன். அதுக்கு முன்னால கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்குங்க. நன்றி டாக்டர் ஐயா.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Feb 04, 2016 5:57 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு. டி. என் . பாலசுப்பிர மணியன் ,

2. திரு. சி . ஆர் . சிவா ,

3. திரு. எஸ் . செளந்தர பாண்டியன்

மற்றும்

" என்றும் என் ரசிகர் " ( ! )

4. மாணிக்கம் நடேசன் ,


ஆகியோர்களுக்கு என் நன்றி !




" என்னடா ! 2015 ஆம் ஆண்டில் எழுதிய

கடிதங்களுக்கு , 2016 இல் பதில் சொல்கிறானே இவன் ! "


என்கிறீர்களா !




உண்மைதானே !

இன்னொரு புத்தகம் எழுதுவதற்கு ஒருவருக்கு

நான் உதவி செய்தேன் !

அத்தான் ' லேட் ' !



இனி ......கூடிய விரைவில் !





" தைரியமாகச்

சொல் நீ

மனிதன் தானா ?




ஹி......ஹி .....ஹி .....!

என்னை நானே திட்டிக்கொள்வதாக நீங்கள்

நினைக்க வேண்டாம் !

அடுத்த கட்டுரையில் இடம் பெறப்போகும்

பாடலின் பல்லவி !




அதனை ஒட்டி ஒரு ஜோக் !





' வால் பையன் "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 2RQlh2B1Qk2oDA6qWjSY+Vaal-Paiyan-Drama-2013-500x500




" வால் பையன் " மேடை நாடகத்தில் நாயகன்

எஸ் . வி . சேகருக்கு திடீரென்று

" வால் " முளைத்து வளரும் !

" பின் பக்கத்தில் " தான்யா !

அதனைப் பார்த்து எல்லோரும் " குரங்கு " , " குரங்கு "

என்று கிண்டல் செய்வார்கள் !

நம்ம ' வால் ' எஸ் .வி. சேகர் படா பேஜார் ஆகிவிடுவார் .....

அதாவது ... வாழ்க்கையே வெறுத்துவார் !


" சரி, நாம் தான் வெறுப்போடு இருக்கின்றோம் ....சற்று

' டிரான்ஸிஸ்டர் ' த திருப்பி பாடாவது கேட்போம் ! "


என்று ' வால் ' சேகர் ரேடியோ வைத் திருகினால் .....

என்ன பாட்டு தெரியுமா ! ?



" தைரியாமாக சொல் நீ

மனிதன் தானா , மனிதன்தானா ?

இல்லை !

நீதான் ஒரு மிருகம் ....... ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Ful1jDBSTe6g0vTQknBT+526x297-RYZ



எம்கே ஆர்சாந்தாராம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 6:16 pm

டாக்டரிடம் இருந்து " வால்"யு மிக்க பதிவுகளின் ஆரம்பம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 7:51 pm

வாங்கோ அண்ணா, நேத்து தான் நானும் இவரும் பேசிக்கொண்டோம் உங்களைப்பற்றி .............உங்களிடம் சொல்லிக்காமலே கிளம்பி வந்து விட்டேன் அண்ணா...............குழப்பமாகவே வந்துவிட்டேன்............மன்னிக்கணும்............. :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இப்போ சௌதி வந்து விட்டேன்.................உங்களின் பதிவுகளுக்காக ஆவலுடன் waiting  அண்ணா புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 05, 2016 2:34 pm

டாக்டர் ஐயா, நீங்க லேட்டா வந்தாலும் சும்மா வர மாட்டீங்க, நல்ல சரக்கோட தான் வருவீங்க, அதாவது சிறந் மத்தவங்களுக்கு தெரியாத தகவல்கள சொன்னேன், தொடருங்கள் மீண்டும் காத்திருக்கிறோம். நன்றி டாக்டர் சார்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 10, 2016 5:28 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு. பாலசுப்பிர மணியன்

2. 2. திரு . மாணிக்கம் நடேசன்

மற்றும்

3. தங்கை சுமதி


இவர்கள் அனைவருக்கும் நன்றி !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் : 7    





  " தைரியமாக  சொல் நீ மனிதன் தானா ! "


படம் :   " ஒளி விளக்கு "

பாடல் : " வாலி "

இசை :  மெல்லிசை மன்னர் .




 ' ஒளி விளக்கு "    - எம் ஜி ஆரின்  100 வது படம் !

அது மட்டுமல்ல !

பிரபல பட நிறுவமான ' ஜெமினி ' பட நிறுவனம்  எம்ஜிஆரை வைத்து தயாரிக்கும்

முதல் படமும் இதுதான் !

இசை : மெல்லிசை மன்னர்

பாடல்கள் :  வாலி

இயக்கம் : சாணக்கியா . ( ' எங்க வீட்டுப் பிள்ளை ' பட இயக்குனர் ! )



எல்லாம் ஓ. கே !

கதை ?

அங்கேதான் பெரிய ஓட்டை !  

எம்ஜிஆரின் 100 ஆவது படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் ?

சும்மா ' ஜம்முன்னு ' இருக்கவேண்டாமா !

இல்லையே ஸ்வாமி !

இந்தியில் வெளி வந்து ( அங்கே ) வெற்றி பெற்று ஓடிய :

' ஹீரோயினுக்கு ' முக்கியத்துவம் தரும் கதை கொண்ட :



" PHOOL   AUR  PHATHTHAR "


என்கிற படத்தின் ரீமேக் .......... தமிழில் எடுத்தார்கள் !

தர்மேந்திரா , மீனா குமாரி , மும்தாஜ் நடித்த இந்த படத்தில் சீனியர் நடிகை

மீனா குமாரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து :

" விதவைத் திருமணத்தை "

ஆதரித்து எடுத்த படம் !

எம்ஜிஆருக்காக கதையை :

" பிசைந்து " , -  அரைத்து -  "  - குழவியில் இட்டு ' போண்டா ' ஆக்கி

பின்பு " பஜ்ஜி " ஆக்கி பின்பு ஒரு வழியாக " மசாலா பூரி "   ஆகிய

கதை ஐப் பற்றி சொல்வதல்ல இந்த கட்டுரை - அதனை - பின்னர்

பார்ப்போம் !



இப்போது அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் :





 " ஒளி விளக்கு "  படத்தில் எம்ஜிஆர் குடிகாரர் ஆக வருவார் !

ஏன் ?

" இது என்ன கேள்வி !  ஒரிஜினல் இந்திப் படத்திலும் அதே மாதிரி

" தண்ணி '   கேரக்டர்தான், அதான் !


இந்த ' தண்ணி '  அடிக்கிற மாதிரியான வேடம் எம்ஜிஆருக்கு கொஞ்சமும்

பிடிக்கவில்லை !

எம்ஜிஆர் , தான் நடிக்கும் வேடங்களில் " நெகடிவ் கேரக்டர் '  மாதிரியான

வேடங்களை தவிர்த்து வந்தார் !


1. " அந்தமான் கைதி " படத்தில் எம்ஜிஆர் வெண்சுருட்டு .....அதானே ....

' சிகரட் '   ......ஐ பிடித்து விட்டு புகை புகையாக விட்டு பின்பு சிகரட்

துண்டுதனை அணைத்து வீதியில் வீசிவிட்டு  பின்பு தன்  வீட்டுக்குள் நுழையும்

காட்சி ஒன்று இருக்கும் .......இப்போது உள்ள ' அந்தமான் கைதி ' பட பிரதிகளில்

அந்த காட்சி காணோம் !



2. " பணக்காரி " என்கிற படம் , எம்ஜிஆர்  அந்த படத்தில் போலிஸ் அதிகாரி

ஆக வருவார் . ஆனால் அந்த படத்தில் அவர் எதிர் மறை நாயகன் - அதான் -

'வில்லன் ' ரோல் இல் வருவார் .....எனவே " பணக்காரி "   ஐ தீ வைத்துக்

கொளுத்தப் பட்டதாக  உறுதி செய்யப்படாத தகவல் உண்டு !



3. எம்ஜிஆர் , கதைப் படி  குடிகாரர் ஆக நடிக்க நேர்ந்தால் ........டோன்ட்

வொர்ரி .......படத்திலேயே அவர் குடிகாரர் ஆக நடிப்பார் !




சரி , ' ஒளி விளக்கு ' படத்தில் என்ன செய்வது ?

எம்ஜிஆருக்கு கவலை வந்துவிட்டது !

வாலியை அழைத்தார் !


" வாலி , இந்த ' ஒளி விளக்கு '   படத்தில் நான் குடிப்பவன் ஆக நடிக்கிறேன் ,

இது ஏன் ' இமேஜ் ' க்கு ஒத்து வராத வேடம் !

இதற்கு நீங்கள்தான் தீர்வு காண வேண்டும் ! "


வாலி யோசித்தார் , பின்பு சொன்னார் !  


" அண்ணே ! ஒரிஜினல் கதைப் படி நீங்கள் குடிகாரர் , எனவே

படத்தில் நீங்கள் குடித்தே ஆக வேண்டும் !  "


எம்ஜிஆருக்கு கோபம் வந்து விட்டது !


" அதுதான் எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டேனே , பின்பு

எதற்கு மறுபடியும் இப்படி சொல்கிறீர்கள் ? "

எம்ஜிஆர் குடித்தார் .......மன்னிக்க......குமுறினார் !


வாலி தொடர்ந்தார் :

" அண்ணே !  நீங்கள் அப்படியே படத்தில் நடியுங்கள் !  ஆனால்

உங்களின் மனசாட்சி உங்களை

" குடிக்காதே "

என்று கண்டிக்கிறது , சரியா ! "



எம்ஜிஆரின் முகம் சிறிது மாறுகிறது !


" சரி ! மனசாட்சி என்றால் அதனை எப்படி படத்தில் காட்டுவது ? "

கேட்டார் எம்ஜிஆர் !


வாலி உற்சாகமானார் !

மேலும் சொன்னார் :


" அது ஒண்னும் பெரிய விஷயம் இல்லே அண்ணே !

நாம எடுப்பது  கலர் படம் !

நடுவில் அசிங்கமான குடிகார எம்ஜிஆர் !

அந்த குடிகார எம்ஜிஆருக்கு இரண்டு பக்கங்களிலும்

இரண்டு அழகான  உடைகளை அணிந்த - ஒவ்வொரு பக்கத்திலும்

இரண்டு அழகான எம்ஜிஆர்கள் !

அவர்கள்தான் உங்கள் மனசாட்சி ( கள் ! )

உங்களுக்கு அறிவுரை அந்த அழகான எம்ஜிஆர்கள் போதிக்கின்றனர் !


நீங்கள் திருந்திவிடுகிறீகள் !


எப்படி ? "


முகம் மலர்ந்தார் , எம்ஜிஆர் !

" சபாஷ் வாலி !   இப்படி காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் !

நீங்கள் சொன்னதையே வைத்து  பாட்டு ஒன்றை எழுதுங்கள் !

குடியின் தீமைகளை விளக்கியும் குடியின் கொடுமையில் இருந்து

திருந்தி வாழ வும் அறிவுரை சொல்லும்படியாக பாட்டு எழுதுங்கள் ! "


சொல்லிவிட்டார் எம்ஜிஆர் , வாலி சும்மா இருக்க முடியுமா !

எழுதிவிட்டார் !




எதோ ஒரு  சூழ்நிலையில்  எம்ஜிஆரிடம் பேச , பேச

முடிவில் ஒரு பாட்டு உருவாகிவிட்டது !

இதனை வாலியே எதிர்ப்பார்க்கவில்லை !

ஆனால் எம்ஜிஆர் மிகவும் ' குஷி ' அடைந்தார் !



" வாலி !  இந்த பாட்டை கொண்டு போய்

விசு கிட்டே கொடுத்துவிட்டு பாட்டு   போட சொல்லுங்கள் ! "



உத்தரவு போட்டார் , எம்ஜிஆர் !

அதனை உடனே நிறைவேற்றினார் , வாலி !



  " தன மெட்டுக்கு பாட்டு எழுதும்போது

அந்த வரிகளை முதலில் தன்னிடம் காட்டிவிட்டுத்தான் வேறு

யாரிடமும் காட்டவேண்டும் "  ----

மெல்லிசை மன்னரின் ' சட்டம் ' இது !

" மெட்டுக்கு வார்த்தைகள் பொருந்தி வருகின்றதா என்பதை

முதலில் சரி பார்க்கும் உரிமை / கடமை தனக்கே உண்டு ! "

--- இது மெல்லிசை மன்னரின் ' பைபிள் ' விதி !




இந்த பாடல் காட்சிக் கான பாடலை எழுதியது

மட்டுமில்லாமல் அதனை எடுத்துக் கொண்டு நேரடியாக

போய்க் காட்டி அவரிடம் ' ஒ.கே ' வாங்கி விட்டு வந்தார் வாலி - இது மெல்லிசை

மன்னருக்குப் பிடிக்கவில்லை !



" அப்போ ஒண்ணு செய் , வாலி !

இந்த பாட்டை ஒ. கே பண்ணிய எம்ஜிஆர் கிட்டேயே போய் டியூன்

போட்டுக்கொங்குங்க ........போங்கோ !  "



வாலியை , மெல்லிசை மன்னர் பொரிந்து

தள்ளிவிட்டார் !



 வாலி , மெல்லிசை மன்னரை சமாதானம் செய்ய

முயன்று தோற்றுப் போய்விட்டார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 LdOyCWVTy4KbISAiRzQJ+hqdefault


' அவர்   கேட்டார் .....நான் கொடுத்தேன் .....நான் என்ன செய்வது ? "




' என்னைக் கேட்காமல் நீ என் கொடுத்தே ? "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Vj3PVY7HRgKX3jt9qoFL+MSV_jpg_2472548f


[color:60a1= #330000]வாலிக்கும் , மெல்லிசை மன்னருக்கும்

' குழாயடி சண்டை '  பெரிதாகிவிட்டது !



பொதுவாக மட்டுமல்ல ....

எப்பொழுதுமே , மெல்லிசை மன்னருக்கு கோபமமே வராது !

அது அரிது ....பின் என் இப்படி கோபிக்கிறார் ......

அதுவும் வாலி மீது ?



காரணம் இருக்கின்றது !

இதோ காரணம் !



எம்ஜிஆர்க்கு

" தைரியமாகச் சொல்  நீ மனிதன்தானா? '

என்று வாலி பல்லவி எழுதியிருந்த அதே நேரத்தில் ......


' யாரடா மனிதன் இங்கே, கூட்டி வா அவனை இங்கே  " "


என்கிற பல்லவியுடன் ஒரு பாடல் , மெல்லிசை மன்னர் இசையமைத்து

இசையமைத்து ஒளிப்பதிவும் செய்து விட்டார் !

யாருக்கு ?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு !


 யார் எழுதிய பாடல் ?

கவிஞர் கண்ணதாசன்  அதுவும் கவிஞரின் சொந்தப்படத்தில் !

" லட்சுமி கல்யாணம் "




 இப்போது சொல்லுங்கள் ... வேறு வம்பு

வேணுமா மெல்லிசை மன்னருக்கு !




அதான் கோபம் மெல்லிசை மன்னருக்கு !



சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்

மெல்லிசை மன்னர் !



 முதலில் நேரே எம்ஜிஆரிடம் சரணடைந்தார்

மெல்லிசை மன்னர் !



 " அண்ணே ! ( எம்ஜிஆர் ) என்னிடம் காட்டாமல் உங்களிடம்

மட்டும் காட்டிவிட்டு இந்த பாட்டுக்கு இசையமைக்க சொல்லிவிட்டார் , வாலி !

ரெண்டு பாடல்களுக்கும் வரிகள் கிட்டத்தட்ட ஒண்ணாயிருக்கு !

நாளைக்கு படம் ரிலீஸானதும்


" என்ன விசு ....நீ எங்க கிட்டேயும் வேலை செய்யறே ...

அப்புறம் அங்கேயும் வேலை செய்யறே !....

' எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே !'

என்று நீங்க கேட்டா  .....?  .....அதனால்தான் !  ...."



இழுத்தார் மெல்லிசை மன்னர் !

அத்தோடு இதனையும் வெளிப்படையாக சொன்னார் !


" வாலியின் பல்லவியும் நன்றாகத்தான் இருக்கிறது ! "  




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 CVVxjCb5RbKkqZlsFQKk+vaali_Msv_1521230g


 கவிஞர் -க்கும்

எம்ஜிஆருக்கும் ...

" டிஷ்யூம் - டிஷ்யூம் " நிலவியிருந்த

நேரம் அது !




எம்ஜிஆர் யோசித்து சொன்னார் !



' அப்போ ஒண்ணு செய்யுங்க , விசு !

கவிஞர் கிட்டே இதப் பத்தி பேசிப்பாருங்க ! "



உத்தரவிட்டார் , எம்ஜிஆர் !


மெல்லிசை மன்னரின் நிலை எப்படி

இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் !



வேறு வழி ?


கவிஞர் இடம் சென்றார் , மெல்லிசை மன்னர் !

சொன்னார் !

அவ்வளவு தான் !

வானத்திற்கும் பூமிக்கும் இடையே குதித்தார் :

கவிஞர் கண்ணதாசன் !


 " என்ன , விளையாடுறியா !

வட்டிக்கு வாங்கி படம் எடுக்கிறேன் !

என்ன நினைச்சுக்கின்னு இருக்கிறே !

பாட்டு இசையமைத்து படக் காட்சியைக் கூட

'ஷூட் ' பண்ணியாச்சு !

நீ நினைச்சா வெச்சிக்குன்னு இருக்க வேண்டும்.....

இல்லேன்னா எடுத்திடணும் ! "



முடியாது என்று சொல்லியிருந்தால் கூட

பரவாயில்லை !

" அர்ச்சனை '  அல்லவா செய்து விட்டார் , கவிஞர் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 VyJNGFl4S6ukV0deh4DB+valiandkanna



 வீட்டுக்குச் சென்ற மெல்லிசை மன்னர்

அறைக்குள் நுழைந்து , தாள் போட்டு அழ ஆரம்பித்தார் !



ஒரு பக்கம் எம்ஜிஆர் !


மறு பக்கம் கவிஞர் !



( மெல்லிசை மன்னர் இந்த சந்தர்ப்பத்தில்

வாய் விட்டு அழுததை , அவரே அந்த கால :

" மெட்ரோ சான்னல்"  - ' பொதிகை ' இரண்டாவது சானலில் -

இப்போது அந்த சானல் இல்லை - சொன்னது எனக்கு இன்னும்

நினைவில் உள்ளது .....ஆனால் ....

இப்போது அதற்கு ஆதாரம் இல்லை ...ஹி....ஹி .... ! )  



மறு நாள் !



நேரே எம்ஜிஆரிடம் சென்றார் , மெல்லிசை மன்னர் !

விஷயத்தை சொன்னார் !

" எங்கே அந்த " யாரடா மனிதன் இங்கே ! "

பாட்டை எனக்கு போடு ! "

என்று எம்ஜிஆர் சொல்ல ,

மெல்லிசை மன்னர் போட்டார் அந்த பாட்டை !




' தைரியமாக சொல் நீ மனிதன் தானா ! "



" யாரடா மனிதன் இங்கே ! "



இரண்டு பாடல்களையும் எம்ஜிஆர் கேட்டார் !

" அடே ! இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கே !

" மனிதன் " என்கிற சொல்தான் இரண்டு பாடல்களுக்கும் பொது !

நம் பாடல்  குடியின் தீமைகளை விளக்குகிறது!

கவிஞர்  அவர்களின் பாடல் பொதுவாக நல்ல மனிதர்களைத்

தேடும் பாடல் !

இரண்டுக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கு !

எனவே எனவே இரண்டு பாடல்களும் ஒரே சமயத்தில்

வந்தால் பெரிதாக தோன்றாது !

எனவே இரண்டு பாடல்களும் இருக்கட்டும் ! "  




எம்ஜிஆர் தீர்ப்பு சொல்ல ....

மெல்லிசை மன்னர் பேரு மூச்சு விட்டார் !

கடைசியில் எம்ஜிஆர் , மெல்லிசை மன்னரைப் பார்த்து

சொன்ன ' ஆறுதல் வார்த்தைகள் '  தான்

இந்த கட்டுரையின் " ஹைலைட் " ! இதோ !




 " நீ என்  கிட்டே கெட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கெட்ட பெயர்  வாங்கக் கூடாது ! "



அதுதான் எம்ஜிஆர் !










@@@@@@@@@@@@@@@@@@@@@




 வரப்போகும்

கட்டுரைகள் ....

' மினி '  கட்டுரைகளின் வடிவில் !


##############################




" ஒரு ' சாம்பிள் ! '




கவிஞர் முத்துலிங்கம் :



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 QxLhMRegRpKLUWScjVeA+09mp_lead_jpg_830903g


இவர் எம்ஜிஆர் படங்களில் முதன் முதலாக

" உழைக்கும் கரங்கள் " படத்திற்கு பாடல் எழுத வருகிறார் .

பாடலுக்கான காட்டி அவருக்கு சொல்லப் பட்டது !



 ' ஒருவள் ஒரு நல்லவனை காதலிக்கிறாள் !

ஆனால் அவனோ இன்னொரு பெண்ணை கரம் பிடித்து

அவள் முன்னடி நிற்கிறான் !

அந்த காட்சியைப் பார்த்து அவள் பாடும் பாட்டு - இது காட்சி ! "




முத்துலிங்கம் 4 அல்லது பல்லவிகளை எழுதினார் !

எனினும் அவருக்கு பிடித்தது இது !




 "  ஆண்டவனின் சன்னதியில்

அன்றாடம் தேடி வந்தேன் !

தேடி வந்து பார்க்கையில் - ஸ்ரீ

தேவியுடன் அவன் இருந்தான் ! "



பாடலுக்கு இசையமைக்க வந்த

மெல்லிசை மன்னர் " நன்றாக இருக்கு " என்றார் !


பாடலைப் பாட வந்த வாணி ஜெயராம் அவர்களும்

" நன்றாக இருக்கு "

என்றார் !



 ஆனால் நடந்தது என்ன ?



இயக்குனர் கே . சங்கருக்கு அந்த பல்லவி

பிடிக்காமல் , வேறு பல்லவியை தேர்வு செய்தார் .....

புதியவர் முத்துலிங்கம் தடுக்க முடியவில்லை !

ஆக , அவரது இரண்டாவது பல்லவிதான் படத்தில்

இடம் பெற்றது !

அந்த பல்லவி :




 " கந்தனுக்கு மாலையிட்டாள்

கானகத்து வண்ண மயில் !

கல்யாண கோலத்தில்

கவிதை சொன்னாள் காதல் குயில் ! "










 " சரி , இதெல்லாம் சகஜம் !

அதே எல்லாம் இங்கே ஏன் எழுதுறே ? "



என்கிறீர்களா !



மெல்லிசை மன்னரும் , முத்துலிங்கமும் , வாணி ஜெயராம்

- இவர்கள் அனைவரும் விரும்பிய

முதல் பல்லவிதான் .......



" மன்மத லீலை " படத்தில்

மெல்லிசை மன்னர் இசையமைத்த

வாணி ஜெயராம் பாடிய ,

கவிஞர் கண்ணதாசன் எழுதிய :






 " நாதெ மெனும்  கோவிலிலே

ஞான ஒளி எற்றி வைத்தேன் !

எற்றி வைத்த விளக்கினிலே - எண்ணெய்

விட நீ கிடைத்தாய் ! "  




தொடரும்


எம்கேஆர்சாந்தாராம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 10, 2016 5:50 pm

வாங்க ஐயா ,நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவுகளை பார்க்கிறேன்.... அலுவலக தொலைபேசியில் இரண்டு அழைப்புகளை நிராகரித்துவிட்டு படித்துமுடித்தேன். புன்னகை


" நீ என் கிட்டே கேட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கேட்ட வாங்கக் கூடாது ! "


அருமை அருமை புன்னகை , இந்த வார்த்தையை ஒருவர் உதட்டளவில் சொல்லியிருக்க முடியாது...

"உன்னை சுற்றி அரணாக நான் இருக்கிறேன்" என்று மனதில் நினைக்கும் ஒருவரின் உதடு தான் இது போல சொல்ல முடியும்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Feb 10, 2016 6:06 pm

ராஜா wrote:வாங்க ஐயா ,நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவுகளை பார்க்கிறேன்.... அலுவலக தொலைபேசியில் இரண்டு அழைப்புகளை நிராகரித்துவிட்டு படித்துமுடித்தேன். புன்னகை


" நீ என் கிட்டே கேட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கேட்ட வாங்கக் கூடாது ! "


அருமை அருமை புன்னகை , இந்த வார்த்தையை ஒருவர் உதட்டளவில் சொல்லியிருக்க முடியாது...

"உன்னை சுற்றி அரணாக நான் இருக்கிறேன்" என்று மனதில் நினைக்கும் ஒருவரின் உதடு தான் இது போல சொல்ல முடியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1192933




 நன்றி திரு . ராஜா அவர்களே !


தட்டச்சு  பிழைகளை பொறுத்துக் கொண்டு என்னை பாராட்டி உள்ளீரகள் !

நன்றி ஐயா !


எனவே ,

மெல்லிசை மன்னரிடம்  எம்ஜிஆர் சொன்னதை .....

இப்படி திருத்திப் படிக்கவும் !







   " நீ என் கிட்டே கெட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கெட்ட பெயர்  வாங்கக் கூடாது ! "    



நன்றி !


எம்கே ஆர்சாந்தாராம்

Sponsored content

PostSponsored content



Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக