புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
21 Posts - 84%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
1 Post - 4%
viyasan
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
213 Posts - 42%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
21 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun Nov 15, 2015 5:59 pm

சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் : 5.





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 GVLo9OGOQPyEu3G84CRM+images




அடுத்து :

உடனே வரும் கட்டுரை ! ( அடே சூப்பருங்க ! )

கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர

தூது விட்ட பாடல் ! !



" பட்டணத்தில் பூதம் " ( 1967 ) (





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Ci1Y7CGiSGaqIZxt7z1q+Pattanathil_Bhootham_poster





' பட்டணத்தில் பூதம் ' படத்தில் ஒரு ' டூயட் ' பாடல் !

பாடலிக்கு இசை :

ஆர் . கோவர்த்தனம் .

பாடலைப் பாடிய வர்கள் :

டி எம் எஸ் - சுசீலா


பாடலை எழுதியவர் :


கண்ணதாசன் .



எல்லாமே தயார் தான் .........................ஆனாலும் .......

' பிராப்ளம் ........பிராப்ளம் ..........பிராப்ளம் .....

ஒரே பிராப்ளம் !


யாருக்கு ?


இசையமைப்பாளர் ஆர் . கோவர்த்தனம் அவர்களுக்கு !


என்னவாம் ?


கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு அழகாக ' டியூன் ' போட்டு விட்டார் ......

பாடலும் அழகாக அமைந்துவிட்டது .............................

ஆனால்

படத்தின் இயக்குனர் எம் . வி . ராமன் ' கஜல் ' முறையில் பாடலை

இசையமைக்க சொல்லிவிட்டாராம் ........ !

பொதுவாக , பாடல்களை எழுதிவிட்டு அதற்கு ' டியூன் ' போட்டு

பாடலை வடிவைப்பது ஆர் . கோவர்த்தனக்கு வழக்கம் !



" பாடலை எழுதிவிட்டு பின்னர் அதற்கு மெட்டு அமைத்து

பாட்டை அமைத்தால் 100 க்கு 100 சதவிகிதம் பாடல்கள்

வெற்றி பெறும் !

அப்படி இல்லாமல் மெட்டு அமைத்து அதன் பின்னர் பாடலை

அந்த மெட்டுக்குள் ' உள்ளே புகுத்துவது ' சரிவராது !

அப்படி செய்தால் 100 பாடல்களில் 10 பாடல்கள் கூட

வெற்றி

பெறாது ! "

-----------------------------------------------சொல்கிறார் கோவார்த்தனம் !


ஆனால் அப்படி சொன்னவருக்கே சோதனை !

கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இயக்குனர் உத்தரவு படி

'கஜல் ' முறைப்படி இசையமைக்கவேண்டும் !


முடியுமா ?


முடியும் !


பாடல்வரிகளை மாற்றி விட்டால் !

ஆனால் .........

" பாடல் வரிகளை மாற்றக் கூடாது ! "

----------- சொன்னவர் கவியரசு !

என்னவாம் ?

காரணம் இருக்கு ......இறுதியில் அது உங்களுக்குத் தெரியும் !

பாடல் வரிகளை மாற்ற கோவர்த்தனம் அவர்களுக்கே மனம்

வரவில்லை !

பாடல் வரிகள் அவ்வளவு அற்புதமாக அமைந்துள்ளன !



சரி , அப்புறம் என்னய்யா ஆச்சு ? "

என்கிறீர்களா !


என்னவாகும் .....


. " இட்லி இல்லேன்னா தோசை தான் ......

தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "


கதைதான் ஆனது !






" ஆனவோன்னா ' சஸ்பன்ஸ் ' போட்டு எழுதுறான்யா இந்த ஆளு ! "


என்கிறீர்களா !


சொல்கிறேன் !



" பாடல் வரிகளை மாற்ற முடியவில்லை என்றால்

" கஜல் டியூன் " ஐ நீங்கள் தியாகம் செய்ய வேண்டும் ! "


சொன்னவர் இசையமைப்பாளர் , இயக்குனரிடம் !


இயக்குனர் " சரி " என்று தலையாட்ட


" வீணை மற்றும் " லைட் கிலாச்சிகள் " மெட்டில்

பாட்டு அரங்கேறி பாட்டு ஹிட் ஆனது !




அந்த பாட்டுத்தான் :


" அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி !

என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி ! "





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 ZWlr5C93T5OPEWXnnbtf+mqdefault



சரி , கண்ணதாசனின் வரிகள்

ஏன் மாற்றப்படவில்லை ? "



கண்ணதாசன் அப்போது

காங்கிரஸ் கட்சியில் சேர

துடித்தார் !

எனவே ......அவர் ...

" சிவகாமி மகனிடம் " பாட்டில் தூது விட்டார் !


" சரியா ! ' அது யார்யா ' சிவகாமியின் மகன் ' ? "


வேறு யார் .....

" கர்ம வீரர் காமராஜ் தான் ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 HcLMzw4TIC2Afdo1we4g+kamaraj-mother2-copy


" சிவகாமியும் - அவரது செல்வனும் !





பாடல் :







@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




அடுத்த பாடல் !





சரோஜாதேவியை

திட்டியும் ( ! )

பத்மினியும் வாழ்த்தி ...............வரவேற்றும்

கண்ணதாசன்

எழுதிய பாடல் !




எம்கே ஆர்சாந்தாராம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 15, 2015 6:50 pm

மிக அருமை
 

" இட்லி இல்லேன்னா தோசை தான் ......
தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "

சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 7:06 pm

இதை பலவாறு அறிப்பட்ட கதை அதை பகிர்ந்தமைக்கு நன்றி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 17, 2015 1:13 pm

நம்ம டாக்டர் சார் இருக்காங்களே, சும்மா சாதாரணமா சகல விசயங்களையும் கறச்சி கலந்து சுந்தர எழுத்தோட, இதமா பதமா நம்மை படிக்க வச்சிடுவாரு. சும்மா படிச்சிகிட்டே இருக்கலாம், அம்புட்டு சுவையாக இருக்கும் அவரோட எழுதும் திறன். வாழ்த்துகள் டாக்டர் சார்.


pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Wed Nov 18, 2015 8:56 am

அருமையான பதிவுகள்!

மேலும் தொடர வேண்டுகிறேன்


செல்வா!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 22, 2015 11:28 am

mkrsantharam wrote:[center][size=24][color=#993300]   ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  
எம்கே ஆர்சாந்தாராம்
[/u]
மேற்கோள் செய்த பதிவு: 1173257

சுத்தத் தமிழில் திட்டி விடுகிறோம்.

திரைப்பட உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தங்களை இது போன்ற ஆயிரம் கதைகள் திரும்பிப் பார்க்கட்டும்.  அதைத் தொடர்ந்து எழுதி எழுதித் தங்கள் கைகள் வலிக்காது இருக்கட்டும்.

அழகான பதிவுகள். முழுப் பதிவும்  இன்றைய என் காலைக்கு உணவாகியது. நன்றிகள் எம். கே. சாந்தாராம்.



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Aபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Aபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Tபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Hபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Iபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Rபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Aபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 22, 2015 5:38 pm

mkrsantharam wrote:ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  
எம்கே ஆர்சாந்தாராம்
அது எப்படி எங்களால் முடியும் ஐயா ....

இறைவன் உங்களுக்கு நோய்நொடியில்லாத நீண்ட ஆயுளை அளித்து , நீங்கள் இது போல இன்னும் பல்லாயிரம் கட்டுரைகளை எழுதி உலக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 22, 2015 6:38 pm

MKR Santharam wrote:( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  மகிழ்ச்சி )

மணம் கமழும் சந்தன பதிவுகள்
மனம் வருமா திட்டுவதற்கு ?
தொடருங்கள் அய்யா , எப்போதும் போல் ,
ஆர்வத்தை தூண்டும் நடையில் ,
அழகு தமிழில் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அணிவகுத்து நிற்போம் , படிப்பதற்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Dec 11, 2015 5:03 pm

கடிதங்களை அன்புடன்

வரைந்த :



1. திரு . ஹரி பிரசாத்

அடியேன் எழுதும் எழுத்துக்களை அணு அணுவாக

நீங்கள் ரசிப்பதற்கு , உங்களின்

மேற்கோளே சாட்சி !

நன்றி , ஹரி பிரசாத் !




2 . திரு . பழ முத்து ராமலிங்கம் :


" அனைவருக்கும் அறிந்த செய்திதான் , ஆனால் திரு. ஹரி பிரசாத்

போன்ற இளம் தலை முறைக்கு இந்த தொகுப்பு

புதியவை தானே !

உங்களுக்கு என் நன்றி !
"





3 . மாணிக்கம் நடேசன் :


ஐயா , தங்களின் பாராட்டுக்களுக்கு நான் எப்பொழுதும்

நன்றி உடையவனாக இருப்பேன் !

நன்றி ஐயா !





.4 . திரு . பி . கே . செல்வா


உங்களுக்கும் நன்றி ஐயா !




5. சகோதரி . ஆதிரா :

அன்புச் சகோதரி !

திரைப்படங்களைப் பற்றியும் , திரைப்படப் பாடல்களையும்

நீங்கள் எங்கே ரசிக்கப் போகிறீர்கள் என்று

" தப்பு கணக்கு "

போட்டுவிட்டேன் !

உங்களின் எழுத்துக்களில் தொனித்த நகைச் சுவை உணர்வை

மிகவும் ரசித்தேன் !

மிகவும் நன்றி , சகோதரி !






6. திரு. ராஜா :


உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி , ராஜா சார் !





7. திரு . தி . என் . பாலசுப்பிரமணியன்


உங்களின் மனம் கவரும் எழுத்துக்களுக்கு மிக்க

நன்றி , ஐயா !





ஆகிய அனைவருக்கும் நன்றி !

நன்றி !

நன்றி !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் : 6





" ஏனடி ரோஜா !

என்னடி சிரிப்பு !

எதனை கண்டாயோ ! "



படம் : " காட்டு ரோஜா " ( 1963 )

பாடியவர் : பி . சுசீலா

இசை : கே . வி . மகாதேவன்

பாடல் : கவியரசு . கண்னதாசன் .





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 IX1OeZmTS96uA22JM6Xw+maxresdefault




" நாட்டிய " பேரொளி " பத்மினி .




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 OwEISjTRmmF0peEZTnnT+artist_25582



லலிதா - பத்மினி - ராகினி - ஆகிய சகோதரிகள்

முதலில் , அந்த கால பிரபல நடனக் கலை நிபுணர் உதய சங்கர் ,

தயாரித்த " கல்பனா " என்கிற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம்

ஆயினர் !

அந்த படத்தைப் பார்த்த ஏ . வி. எம் செட்டியார் , பின்னர் தான் தயாரித்த

" வேதாள உலகம் " படத்திற்கு நடனமாட பத்மினி - லலிதா வை

ஒப்பந்தம் செய்தார் !

அதன் பின்னர் நிறைய படங்கள் !

பத்மினியின் நடனங்கள் நிறைந்த படங்கள் !

" மணமகள் " படத்தில் பத்மினியின் நடிப்பைப் பார்த்து ,

" இப்படி எல்லாம் உணர்ச்சிகரமாக இவர் நடிக்கிறாரே , நான்

இப்படி எல்லாம் நடிக்க வருமா ! "

என்று ' பெரு மூச்சு ' விட்டவர் :

பத்மினிக்கு பின் நடிக்க வந்த " ஜூனியர் " :

சிவாஜி கணேசன் !

அதற்கு பின்னர் அதே சிவாஜியுடன் 44 படங்களுக்கும்

மேல் பத்மினி நடித்தார் !

அதற்கு பின்னர் எம்ஜிஆர் - ஜெமினி கணேசன் - எஸ் .எஸ் . ஆர்

, இந்தி நடிகர் ராஜ் கபூர் என அனைத்து இந்திய நடிகர்களுடன்

நடித்து அகில இந்திய நட்சத்திரம் என்கிற பெயருடன்

மகப் பெரிய புகழுடன் விளங்கி வந்தார் !



இது பத்மினி !



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




" அபிநய சரஸ்வதி "

பி . சரோஜாதேவி .




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 LiPhpOf9SbyYRPXc47CA+images



தமிழில் , " தங்க மலை ரகசியம் " போன்ற படங்களில் சிறு சிறு

வேடங்களில் நடித்து வந்த சரோஜாதேவி எம்ஜிஆரின் " நாடோடி மன்னன் " படத்தில்

அதாவது பத்மினி நடித்து புகழ் பெற்று ஏறக்குறைய 8 ஆண்டுகள் வந்த " ஜூனியர் "

நடிகை பி . சரோஜாதேவி .

ஸ்ரீதரின் " கல்யாண பரிசு " இவரை உச்சத்தில் கொண்டு போய் விட்டது ! அப்போதில்

இருந்து இவருக்கு ஏறுமுகம் தான் !

அந்த படத்திற்கு பின் இவர் பத்மினியை " ஓவர் டேக் " செய்தார் !


இது சரோஜாதேவி !




" என்னய்யா ஆச்சு , உமக்கு ? ஏன் இந்த நடிகைகளின்

ஆராய்ச்சி ? "



என்றா கேட்கிறீர்கள் ?



" சோழியன் குடுமி சும்மா ஆடுமய்யா ! "


1961 ஆம் ஆண்டில் நடிகை பத்மினி , டாக்டர் ராமசந்திரனை திருமணம்

செய்து கொண்டு அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 ZUMtQ5WsSemRrmJEGPtp+Padmini-Husband-1970s


அவ்வளவுதான் !


பி . சரோஜாதேவி காட்டில் மழை !

ஆனால் ......செம்பரம்பாக்கம் ஏரியை ,

, ஏரி நிரம்பி இரண்டு நாட்கள் கழித்தும் முறைப்படி அனுமதி

வாங்கி , திறக்கவே முடியாத அளவுக்கு

அடை மழை !


பத்மினி விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இவரை மொய்த்துக் கொண்டார்கள் !

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் - இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு

சரோ ( ! ) வை " புக் ' செய்ய அலைந்தார்கள் !


எப்படி ?


1. சரோ வை அறிமுகம் செய்த எம்ஜிஆர் இவருக்காக காத்துக் கிடந்த

கொடுமை !

" ஏன் கடமை " படத்தின் படப் பிடிப்பை சொதப்பினார் !



2. ஒரே சமயத்தில் - ஒரே கால கட்டத்தில் :

காலையில் சிவாஜியுடன் படப்பிடிப்பு : " ஆலையமணி "

மாலை - இரவு எம்ஜிஆருடன் படப்பிடிப்பு : " பணத்தோட்டம் " !



3. சிவாஜியின் " புதிய பறவை " படப்பிடிப்பில் ஒரே சொதப்பல் !



4. எம்ஜிஆரின் " தெய்வத்தாய் " படத்தில் இவர் செய்த " கோல் மால் " கள் .

" இனி எம்ஜிஆருடன் இவர் நடிக்கும் இறுதிப் படம்

" தெய்வத்தாய் " என்று சொல்லும் அளவுக்கு இருந்தது !



இப்படி பல புகார்கள் - நடிகை சரோஜாதேவி இடம் !





இந்த " கூத்து" க்களை வேடிக்கை பார்த்து வந்த

கவியசு கண்னதாசன் , சரோஜா தேவி மீது வெறுப்பு கொண்டார் !

" இந்த பெண் தமிழ்ப் பட உலகை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறார் ! "

என்று வெறுப்புடன் சொன்னார்


பின்பு சொன்னார் :



" இந்த " தயிர்க்கார பொம்பளைக்கு "

இவ்வளவு ' டிமாண்டா ! "



அது என்ன " தயிர்க்கார பொம்பளை ? "


அது வேறு ஒண்ணும் இல்லே !

நடிகை சரோஜா தேவி யின் தாயார் , கர்நாடகாவில் அவர் நடிக்க வருவதற்கு

முன் தயிர் வியாபாரம் செய்து வந்தாராம் !

அத்தான் !

இதனை நான் சொல்லவில்லை, ..................

கண்ணதாசன் சொன்னது !




[color:ef79= #339900]இந்த சமயத்தில் தான் ..................


நடிகை பத்மினி , திருமணத்திற்கு ப பின் .....

மீண்டும் நடிக்க வந்தார் !



" காட்டு ரோஜா " ( 1963 ) படத்தில் ஒப்பந்தம்

ஆனார் !

கண்னதாசன் அந்த படத்திற்கு பாடல்களை எழுதினார் !



இதுதான் நல்ல சமயம் ..........

பத்மினியை வரவேற்று .....

சரோ வை சாடி அவர் எழுதிய பாடல் :


" ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு ! "



இனி பாடலுக்கு வருவோம்








இந்த பாடல் முழுவதும் ,

நடிகை பத்மினி , நடிகை சரோஜா தேவி யை நோக்கி நக்கலாக பாடுவதாக

கண்ணதாசன் எழுதியுள்ளார் !

எனவேதான், படப்பிடிப்பு நடத்தும் போது, பத்மினியின் கையில்

ரோஜாப் பூக்களை திணித்துகே கொடுத்து ,

" அம்மா சரோஜாதேவி ! இந்த பாடல் நிஜ ரோஜாக்களைப் பார்த்து தான்

பத்மினி பாடுகின்றார் !

உங்களை நினைத்து அல்ல ! "

என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர் !



இந்த அழகில் இந்த படத்தின் பெயர் :


" காட்டு ரோஜா "


" ஏனடி ரோஜா "


என்பதை :


" ஏனடி
ரோஜா "

என்று நினைத்துக் கொள்ளுங்கள் !



" அன்று போனவள் இன்று வந்துவிட்டாய் என

புன்னகை செய்தாயோ ! "



இதற்கு நான் விளக்கம் சொல்லணுமாக்கும் ! சூப்பருங்க



இப்படி பாடலின் அனைத்து வரிகளும் சரோஜா தேவியை

நினைத்து எழுதியிருப்பார் , கவியசு !




" மொட்டாக நின்றவளே !

முள்ளோடு வந்தவளே ! "




அது என்ன முள் ?

ரோஜாவுக்கு முள் இருக்கும்லே , அத்தான் .......!

நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் !




" எத்தனை காலங்கள் மாறிய போதும்

என்றும் இளமையடி ! - எனக்கு

என்றும் இளமையடி ! "




நடிகை பத்மினிக்கு திருமணம் ஆனா போதும்

அவர் எப்போதும் இளமையோடுதான் இருப்பார் என்பதை

கண்ணதாசன் சொல்லுகிறார் !



அது மட்டுமா !




" ரத்தினக் கம்பளமே !

அடி முத்திரை மோதிரமே ! - நீ

நாளை பொழுதுக்கும் வாடி விழுந்திடும்

மாயக் கதையடியோ ! "




அதாவது ......


பத்மினிக்கு எப்போதும் ' மார்கெட் ' உண்டு !

சரோஜாதேவிக்கு கூடிய சீக்கிரம்

மார்கெட் விழுந்துவிடும் -

என்கிறார் !



உண்மைதான் !

திருமணம் ஆகி மறு பிரவேசம் செய்த பத்மினி

பிறகு பல ஆண்டுகள் தமிழ்த் திரை உலகில்

கோலோச்சினார் !


ஆமாம் 1986 ஆம் ஆண்டில் " லக்ஷ்மி வந்தாச்சு " படம் வரை

பத்மினி நடித்தார் !



சரோஜா தேவி ?


1976 ஆம் ஆண்டில் அவர் நடித்த :

" பத்து மாத பந்தம் " படத்திகு அப்புறம் அவர் தமிழில்

நிலைத்து நிற்க முடியவில்லை !




கண்ணதாசன் ஒரு

தீர்க்கதரசிதான் !






@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@






அடுத்த பாடல் :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 23 0If5X20oRVOjo9nfvrch+mgr




பாடலாசிரியர் வாலியால்

மெல்லிசை மன்னரை

அழவைத்த ( உண்மையிலே ! ) பாடல் !




எம்கேஆர்சாந்தாராம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2015 5:37 pm

காட்டு ரோஜா வை பற்றிய தகவல்களை ,
காட்டிய அழகு , என்ன சொல்லுவது போங்க ,ரோஜா மனம்தான் அன்பு மலர் அன்பு மலர்
film news Anandhan போன்ற தகவல் களஞ்சியம் நீங்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக