புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா
தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய
கருணாநிதி; தனது மைனாரிட்டி ஆட்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது, அதனை வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு காவல் துறையை சீரழித்த கருணாநிதி; அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், மனம் போன போக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
கருணாநிதி தனது அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது என்றும்; ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கூறி இருக்கிறார்; எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘armchair critic’ என்ற ஒரு சொலவடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளாமல்; சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.
தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த
34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், 1.5.2014 அன்று பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் பெங்களூரு-கவுகாத்தி விரைவு ரயில், 1ஙூ மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தவுடன், எஸ் 4 மற்றும் எஸ் 5 ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து, ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையத்திற்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் போது, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்வார்கள். அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் வண்டி புறப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆராயப்படுகின்றன. முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க,
ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது. எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
இந்த விபத்து குறித்து கருணாநிதியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு; இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா
தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய
கருணாநிதி; தனது மைனாரிட்டி ஆட்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது, அதனை வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு காவல் துறையை சீரழித்த கருணாநிதி; அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், மனம் போன போக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
கருணாநிதி தனது அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது என்றும்; ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கூறி இருக்கிறார்; எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘armchair critic’ என்ற ஒரு சொலவடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளாமல்; சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.
தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த
34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், 1.5.2014 அன்று பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் பெங்களூரு-கவுகாத்தி விரைவு ரயில், 1ஙூ மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தவுடன், எஸ் 4 மற்றும் எஸ் 5 ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து, ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையத்திற்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் போது, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்வார்கள். அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் வண்டி புறப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆராயப்படுகின்றன. முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க,
ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது. எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
இந்த விபத்து குறித்து கருணாநிதியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு; இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொஞ்சம் பொறுங்க பாஸு...டெல்லில இருந்தும் பெங்களூருல இருந்தும் ஆப்பு வரட்டும்...அப்பா நடக்கும் பாருங்க ஒரே அய்யாப்போரும் அம்மாப்போரும்...ஆனா நமக்கு அது செம போருதான்...எப்பவும் போல...
சாத்தான் வேதம் ஓதுவது போன்று நடப்பது யார்?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதிலடி!
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டபோது, 'முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது' என்று சுருக்கமாகப் பதில் அளித்தேன்.
ஆனால், ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையில் வேண்டுமென்றே வழக்கம்போல என்மீது அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.
அதற்குப் பதிலளித்திடும் வகையிலேதான் கடந்த 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது (10-5-2014) ஜெயலலிதா “முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்” என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா தன்னுடைய அறிக்கைகளில் அடிக்கடி “சாத்தான் வேதம் ஓதுகிறது” என்று குறிப்பிடுவது வழக்கம். முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள்.
ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மாற்றல் மனு ஒன்றை 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையை மீண்டும் அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செய்ததற்குப் பிறகு தி.மு.க அரசு தொடர்ந்து எப்போதும் போல முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.எனினும் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்க நினைக்கும் ஜெயலலிதா, இனியாவது குறைந்தபட்சம் முல்லைப் பெரியாறு பிரச்சினையையாவது அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், அது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை - பொதுமக்களின் குடிதண்ணீர்ப் பிரச்னை என்பதால், அரசு நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதே நல்லது". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காவிரி விவகாரம்: ஜெயலலிதா இனிமேலாவது உணருவாரா? கருணாநிதி கேள்வி
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றையதினம் நாளேடுகளில் வந்துள்ள செய்திகளில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியிடம் பேசியதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், ஆதாரம் இல்லாமல் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தற்போது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியதோடு, இது குறித்து பிரதமர் மோடியை வரும் 10ஆம் தேதியன்று கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று நேரில் சந்தித்து முறையிடவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநில அரசு இந்தப் பிரச்னைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழுவினை பிரதமரைச் சந்திக்க அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது.
ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்ற பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியாக அனைத்துக் கட்சிகளை அழைத்து யோசனை கேட்பதோ, பிரதமரிடம் முறையிடுவதோ என்பதெல்லாம் கிடையாது.
குறைந்த பட்சம் அவர்களுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றாவது முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தாரா என்றால் அதுவும் கிடையாது.
குறுவைச் சாகுபடி இந்த ஆண்டும் தொடர்ந்து கேள்விக் குறியாகி விட்ட நிலையில் முதலமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றையதினம் நாளேடுகளில் வந்துள்ள செய்திகளில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியிடம் பேசியதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், ஆதாரம் இல்லாமல் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தற்போது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியதோடு, இது குறித்து பிரதமர் மோடியை வரும் 10ஆம் தேதியன்று கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று நேரில் சந்தித்து முறையிடவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநில அரசு இந்தப் பிரச்னைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழுவினை பிரதமரைச் சந்திக்க அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது.
ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்ற பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியாக அனைத்துக் கட்சிகளை அழைத்து யோசனை கேட்பதோ, பிரதமரிடம் முறையிடுவதோ என்பதெல்லாம் கிடையாது.
குறைந்த பட்சம் அவர்களுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றாவது முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தாரா என்றால் அதுவும் கிடையாது.
குறுவைச் சாகுபடி இந்த ஆண்டும் தொடர்ந்து கேள்விக் குறியாகி விட்ட நிலையில் முதலமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடக்கூடாது என்று கருணாநிதி நினைக்கிறாரோ? - ஜெயலலிதா பதில்
காவிரி மேலாணமை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவேரி நதிநீர் குறித்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி; முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அப்போதைய மத்திய அரசை கண்டிக்க அஞ்சிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி முடக்கி வைத்த கருணாநிதி, இன்று திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்டது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் கருணாநிதி. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அப்போதே தொடர்ந்து வலியுறுத்தினேன். 2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு காரணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தன்னுடைய குடும்ப வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பது தான். தான் பிறந்த ஊரை வளமாக்க நடவடிக்கை எடுக்காமல், வளமான இலாகாக்களை போராடிப் பெற்று தன்னை வளப்படுத்திக் கொண்டார் கருணாநிதி. இப்படிப்பட்ட திரு. கருணாநிதி, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கூறியிருப்பது, இது போன்ற வாரியம் அமைவதை விரும்பவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
2011 ஆம் ஆண்டு நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தேன். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படுவதற்கு முன்பு, தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு பிரதமரைச் சந்தித்து பேசியதாக கருணாநிதி தெரிவித்தார்.
ஆனால், பேசியதன் மர்மம் குறித்து கருணாநிதி இன்றுவரை எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், உச்ச நீதிமன்றம் மூலம் எனது தலைமையிலான தமிழக அரசு போராடியதன் விளைவாக, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது.
இதனைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நான் கடிதமும் எழுதினேன்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், அவர்கள் ஆட்சியில் இருந்த வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் அது குறித்து வாய் திறக்காத கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்தும், தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு தூது அனுப்பிய கருணாநிதி; காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஏன் மத்திய அரசிடம் முறையிடவில்லை? ஏன் வலியுறுத்தவில்லை? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, தன்னலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கருணாநிதி, மக்கள் செல்வாக்கை இழந்தவுடன் திடீரென்று தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல். ஆனால், தமிழக மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. அனைத்துக் கட்சிகளுமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. எனவே, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல். மத்திய அமைச்சர் அனந்தகுமார் கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதால், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்தினை அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது குறித்து தமிழகத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும், பிரதமரோ, அல்லது இந்தத் துறை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரோ தெரிவிக்கவில்லை.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமரிடம் நான் 3.6.2014 அன்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளேன். பிரதமரும், அவற்றை கனிவுடன் கேட்டு, ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழக அரசுடன் நல்லுறைவை பேணுவதையே பிரதமர் விரும்புகிறார். தமிழகத்திற்கு உதவும் எண்ணத்தில் அவர் இருக்கிறார். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அம்சமாகும். இதைச் செயல்படுத்த மத்திய அரசிற்கு சிறிய கால அவகாசம் தேவைப்படும்.
இந்த விஷயத்தில் நடுநிலையுடன் பிரதமர் செயல்படுவார் என்ற நம்பிக்கை தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது நியாயமானது தான். பிரதமரை நான் சந்தித்து இது குறித்து எடுத்துரைத்த பின், முழுமையாக ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் கருணாநிதி அதற்குள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி; ஆட்சி அதிகாரம் பறிபோன பிறகு; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் விரட்டி அடித்து மூலையில் உட்கார வைத்த பிறகு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்குவது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தினைக் கொண்டுள்ளதால், அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடக் கூடாது என்ற கெடுமதியில் தான் இவ்வாறு சொல்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்ற வரிகளை கருணாநிதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவிரி மேலாணமை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவேரி நதிநீர் குறித்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி; முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அப்போதைய மத்திய அரசை கண்டிக்க அஞ்சிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி முடக்கி வைத்த கருணாநிதி, இன்று திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்டது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் கருணாநிதி. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அப்போதே தொடர்ந்து வலியுறுத்தினேன். 2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு காரணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தன்னுடைய குடும்ப வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பது தான். தான் பிறந்த ஊரை வளமாக்க நடவடிக்கை எடுக்காமல், வளமான இலாகாக்களை போராடிப் பெற்று தன்னை வளப்படுத்திக் கொண்டார் கருணாநிதி. இப்படிப்பட்ட திரு. கருணாநிதி, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கூறியிருப்பது, இது போன்ற வாரியம் அமைவதை விரும்பவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
2011 ஆம் ஆண்டு நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தேன். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படுவதற்கு முன்பு, தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு பிரதமரைச் சந்தித்து பேசியதாக கருணாநிதி தெரிவித்தார்.
ஆனால், பேசியதன் மர்மம் குறித்து கருணாநிதி இன்றுவரை எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், உச்ச நீதிமன்றம் மூலம் எனது தலைமையிலான தமிழக அரசு போராடியதன் விளைவாக, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது.
இதனைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நான் கடிதமும் எழுதினேன்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், அவர்கள் ஆட்சியில் இருந்த வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் அது குறித்து வாய் திறக்காத கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்தும், தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு தூது அனுப்பிய கருணாநிதி; காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஏன் மத்திய அரசிடம் முறையிடவில்லை? ஏன் வலியுறுத்தவில்லை? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, தன்னலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கருணாநிதி, மக்கள் செல்வாக்கை இழந்தவுடன் திடீரென்று தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல். ஆனால், தமிழக மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. அனைத்துக் கட்சிகளுமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. எனவே, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல். மத்திய அமைச்சர் அனந்தகுமார் கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதால், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்தினை அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது குறித்து தமிழகத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும், பிரதமரோ, அல்லது இந்தத் துறை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரோ தெரிவிக்கவில்லை.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமரிடம் நான் 3.6.2014 அன்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளேன். பிரதமரும், அவற்றை கனிவுடன் கேட்டு, ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழக அரசுடன் நல்லுறைவை பேணுவதையே பிரதமர் விரும்புகிறார். தமிழகத்திற்கு உதவும் எண்ணத்தில் அவர் இருக்கிறார். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அம்சமாகும். இதைச் செயல்படுத்த மத்திய அரசிற்கு சிறிய கால அவகாசம் தேவைப்படும்.
இந்த விஷயத்தில் நடுநிலையுடன் பிரதமர் செயல்படுவார் என்ற நம்பிக்கை தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது நியாயமானது தான். பிரதமரை நான் சந்தித்து இது குறித்து எடுத்துரைத்த பின், முழுமையாக ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் கருணாநிதி அதற்குள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி; ஆட்சி அதிகாரம் பறிபோன பிறகு; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் விரட்டி அடித்து மூலையில் உட்கார வைத்த பிறகு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்குவது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தினைக் கொண்டுள்ளதால், அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடக் கூடாது என்ற கெடுமதியில் தான் இவ்வாறு சொல்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்ற வரிகளை கருணாநிதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
நண்பர்களே,
ஹேமாவதி ஆணை கட்ட அனுமதி அளித்தவர் கலைஞர். முடிவு ஒன்றும் எட்டப்படாமல் காவிரி விவகாரத்தில் காவிரியை தமிழகத்துக்கு கொண்டுவந்ததாக சைதாபேட்டை யில் காவிரி சிலை வைத்து குடம் குடமாய் தண்ணீர் கொட்டி விழா எடுத்தவர் அன்னார். கோவை குண்டு வெடிப்பு அயோத்த்யாவுக்கு பதிலடி என்று முரசொலியில் முழங்கியவர். முல்லை பெரியாறு விவகாரத்தில் சொதப்பியவர் மக்கள் திலகம். இலங்கை பிரச்சினை முதற்கொண்டு பெரும்பாலான தொந்தரவுகள் அந்நாளின் அரசியல். அப்போது விதைக்கப்பட்ட விதை இபோதைய வினை அறுவடை.
என்றும் நண்பன்,
R K சிவம்.
ஹேமாவதி ஆணை கட்ட அனுமதி அளித்தவர் கலைஞர். முடிவு ஒன்றும் எட்டப்படாமல் காவிரி விவகாரத்தில் காவிரியை தமிழகத்துக்கு கொண்டுவந்ததாக சைதாபேட்டை யில் காவிரி சிலை வைத்து குடம் குடமாய் தண்ணீர் கொட்டி விழா எடுத்தவர் அன்னார். கோவை குண்டு வெடிப்பு அயோத்த்யாவுக்கு பதிலடி என்று முரசொலியில் முழங்கியவர். முல்லை பெரியாறு விவகாரத்தில் சொதப்பியவர் மக்கள் திலகம். இலங்கை பிரச்சினை முதற்கொண்டு பெரும்பாலான தொந்தரவுகள் அந்நாளின் அரசியல். அப்போது விதைக்கப்பட்ட விதை இபோதைய வினை அறுவடை.
என்றும் நண்பன்,
R K சிவம்.
பெரியாறு அணை கேரளாவுக்கு சொந்தமா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை: தமிழகத்திற்கு சொந்தமானது என்று பட்டியலிடப்பட்ட முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளும், கேரள மாநிலத்திற்குச் சொந்தமானது என தேசியப் பதிவேட்டில் மாற்றப்பட்டுள்ளதற்கு எதிராக, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள பெரிய அணைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளும் 2009 ஆம் ஆண்டு வரை தமிழகத்திற்குச் சொந்தமானது என தேசியப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற மத்திய நீர்வள ஆணையக் கூட்டத்தில், இதற்கு கேரளா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த 4 அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
காவிரி பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் தம்மால்தான் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டப்பட்டது என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கேரளாவின் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைப்பதற்கு கேரளா எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, இதற்கு தமிழக அரசின் பதில் என்ன எனக் கேட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கருணாநிதியின் "நதிநீர் பிரச்சினையில்..." அறிக்கைக்கு ஜெயலலிதா பதிலடி
கருணாநிதி வெளியிட்ட "நதிநீர் பிரச்சினையில் கேரளமும் தமிழகமும்" என்ற அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது என்று முதல்வர் ஜெயலலிதா பதில் அறிக்கையில் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கை வருமாறு:
மக்களின் செல்வாக்கை முற்றிலும் இழந்து விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, “நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்” என்ற தலைப்பில் எதையும் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணாக “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப ஓர் அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல் தானாகவே அறிக்கை எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்பதை திரு.கருணாநிதி ஏற்கெனவே பல முறை வெளிபடுத்தி இருக்கிறார்.
திரு. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கேரள சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி, “முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த உண்மை நிலையை நான் மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பின் குறிப்பில், “இந்த அணைகள் கேரள மாநிலத்தில் உள்ளன” என்றும், “தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், அணைகள் அமைந்துள்ள இடத்தின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை விவரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. எனவே தான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் கேரள மாநில அணைகள் பட்டியலின் கீழ் காட்டப்பட்டு உள்ளன. அதே சமயத்தில், பின் குறிப்பில் “இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரிய அணைகள் குறித்த இந்தப் பதிவேட்டில், புவியியல் அமைப்புப்படி அணை அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் நோக்கத்தில், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்களை உள்ளடக்கிய சில மாற்றங்களை தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் ஏதேனும் தவறு உள்ளதாக கருதினால், திரு.கருணாநிதி ஏன் அப்போதே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை? அன்று ஏன் மவுனமாக இருந்தார்? இதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மேற்படி அணைகள் தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், தமிழ்நாடு அரசின் வற்புறுத்தலின் பேரில், தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில், 2கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று பின் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் கீழ் வரும் அணைகள் பட்டியலிலும், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று மேற்படி அணைகளுக்கு எதிராக தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 27.12.2013 அன்று நடைபெற்ற 32-வது அணை பாதுகாப்பு தேசிய குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் கீழ் வரும் அணைகள் பட்டியலில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை அணைப் பாதுகாப்பு தேசியக் குழு ஏற்றுக் கொண்டது. இது போன்ற கோரிக்கைகள் பிற மாநிலங்களிடமிருந்து வரப் பெற்று, தேசியப் பதிவேடு புதுப்பிக்கப்படும் போது, தமிழ்நாட்டின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கோரிக்கையின் வாசகங்கள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் சார்பில், மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவருக்கு விரிவான கடிதமும் எழுதப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், மத்திய நீர்வளக் குழுமத்தின் அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ள குறிப்பில், பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் உள்ள அணைகளின் பட்டியல்கள், அணைகளின் இருப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கீழ் அந்த அணைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும்; இந்தத் தகவல்களின் அடிப்படையில், யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது என்றும்; இந்தப் பதிவேட்டில் ஏதாவது தவறு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டால், அவை திருத்தப்படும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முல்லைப் பெரியாறு குறித்த 7.5.2014 நாளைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் தேக்கடி மாவட்டத்தில் இருக்கிறது என்றும், இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேற்காணும் விளக்கங்களிலிருந்து, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் புவியியல் அமைப்புபடி கேரளாவில் இருந்த போதிலும், அவை தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்பதும்; தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. எனவே, திரு. கருணாநிதி கூறுவது போல், தமிழ்நாட்டின் உரிமை எதுவும் பறிபோகவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், இவற்றை எல்லாம் ஆய்ந்து பார்க்காமல், “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கேற்ப நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் இந்தச் செயலை நினைக்கும் போது, “ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை கேரளாவிற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல் இருப்பது மட்டுல்லாமல், உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பது போல் உள்ளதால், இவரது அறிக்கையே உச்சநீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகக் கூடியது. “எண்ணித் துணிக கருமம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப செயல்படுவது நல்லது, இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்பதை திரு. கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அடுத்தபடியாக, “காவேரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ந்துவிட்டதா? மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா?” என்று வினவியிருக்கிறார் திரு. கருணாநிதி. காவேரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தவரையில், மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தி இருக்கிறேன். இது தொடர்பாக, சில சர்ச்சைகளை மத்திய அமைச்சர்கள் எழுப்பியவுடன், இது குறித்து 31 பக்கங்கள் கொண்ட விளக்கமான கடிதத்தினை மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு எழுதி இருக்கிறேன். தற்போதைய மத்திய அரசு நிச்சயம் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது தலைமையிலான அரசின் பகீரத முயற்சியின் காரணமாகத் தான், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதை திரு. கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவு, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனை என அனைத்திலும் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்த திரு. கருணாநிதிக்கு தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றி பேசவே எந்த அருகதையும் இல்லை.
“முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா?” என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் கேள்வியிலிருந்தே, இந்தப் பிரச்சனையில் எனக்கும், எனது தலைமையிலான அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிட்டதே என்ற திரு. கருணாநிதியின் ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் தெரிந்து கொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், ஒரு மேற்பார்வைக் குழுவை அமைக்கவும், அந்தக் குழுவில் மத்திய அரசின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவது உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக, கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் “நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியம் இல்லை” என்று பேசியதை சுட்டிக்காட்டி, இதற்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, “நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி கூறியதற்கு பதில் அளிக்க வக்கில்லாமல்; நதிநீர் இணைப்புத் திட்டத்தையே முடக்க நினைத்த காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து; சுயநலத்திற்காக நதிநீர் இணைப்புப் பிரச்சனையில் வாய்மூடி மவுனம் சாதித்த திரு. கருணாநிதி, இப்போது வாய் திறப்பது விந்தையாக இருக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டத்தினை நான் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டு வருகிறேன். நதிநீர் இணைப்பு குறித்த பொதுநல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒரு சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்த தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட்டக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியிலே ஆட்சியில் இருந்த போது மவுனம் சாதித்த திரு. கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்த பிறகு கூட, தன் மகளுக்காக மத்திய அரசிடம் மன்றாடிய திரு. கருணாநிதி; ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை? மகளா, மாநிலமா என்றால் மகள் தான் என்பது திரு. கருணாநிதியின் நிலைப்பாடாக அப்போது இருந்தது. இப்போது அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காக கேரள அமைச்சர் கூறியதையெல்லாம் மேற்கோள் காட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
“வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று கங்கை-காவிரி இணைப்புக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வித்திட்ட மகாகவி 4பாரதியாரின் கனவினை நனவாக்கும் வகையில், அதன் முதற்கட்டமாக 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அத்திக்கடவு-அவிநாசி வெள்ளப் பெருக்கு கால்வாய் திட்டம்; 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பெண்ணையாறு (சாத்தனூர் அணை) – பாலாறு இணைப்புத் திட்டம் மற்றும் பெண்ணையாறு-நெடுங்கால் அணைக்கட்டு-பாலாறு இணைப்புத் திட்டம்; 5,166 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி ஆற்றின் வெள்ள நீரை வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும், 11,421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி படுகை கால்வாய் முறைகளை நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றை முதற்கட்டமாக நிறைவேற்ற நிதி ஒதுக்குமாறும்; மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், பாலாறு, காவேரி மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கவும்; மேற்கு நோக்கி பாயும் பம்பா மற்றும் அச்சன்கோயில் நதிகளின் நீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பிவிடவும் ஆவன செய்யுமாறு, மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து 3.6.2014 அன்று நான் வலியுறுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரையில், தமிழர்களின் நலன் தான் முக்கியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொத்தத்தில், திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் முயற்சி போல் அமைந்துள்ளது. தமிழர்களின் நலன் கருதி, இது போன்ற செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். திரு கருணாநிதியின் அரை வேக்காட்டு அறிக்கையை வெளியிட்ட பத்திரிகைகள் மீது கோபித்துக் கொள்ளாமல், இந்த நல்ல விளக்கத்தைக் கூற எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்ட "நதிநீர் பிரச்சினையில் கேரளமும் தமிழகமும்" என்ற அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது என்று முதல்வர் ஜெயலலிதா பதில் அறிக்கையில் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கை வருமாறு:
மக்களின் செல்வாக்கை முற்றிலும் இழந்து விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, “நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்” என்ற தலைப்பில் எதையும் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணாக “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப ஓர் அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல் தானாகவே அறிக்கை எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்பதை திரு.கருணாநிதி ஏற்கெனவே பல முறை வெளிபடுத்தி இருக்கிறார்.
திரு. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கேரள சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி, “முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த உண்மை நிலையை நான் மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பின் குறிப்பில், “இந்த அணைகள் கேரள மாநிலத்தில் உள்ளன” என்றும், “தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், அணைகள் அமைந்துள்ள இடத்தின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை விவரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. எனவே தான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் கேரள மாநில அணைகள் பட்டியலின் கீழ் காட்டப்பட்டு உள்ளன. அதே சமயத்தில், பின் குறிப்பில் “இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரிய அணைகள் குறித்த இந்தப் பதிவேட்டில், புவியியல் அமைப்புப்படி அணை அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் நோக்கத்தில், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்களை உள்ளடக்கிய சில மாற்றங்களை தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் ஏதேனும் தவறு உள்ளதாக கருதினால், திரு.கருணாநிதி ஏன் அப்போதே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை? அன்று ஏன் மவுனமாக இருந்தார்? இதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மேற்படி அணைகள் தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், தமிழ்நாடு அரசின் வற்புறுத்தலின் பேரில், தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில், 2கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று பின் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் கீழ் வரும் அணைகள் பட்டியலிலும், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று மேற்படி அணைகளுக்கு எதிராக தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 27.12.2013 அன்று நடைபெற்ற 32-வது அணை பாதுகாப்பு தேசிய குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் கீழ் வரும் அணைகள் பட்டியலில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை அணைப் பாதுகாப்பு தேசியக் குழு ஏற்றுக் கொண்டது. இது போன்ற கோரிக்கைகள் பிற மாநிலங்களிடமிருந்து வரப் பெற்று, தேசியப் பதிவேடு புதுப்பிக்கப்படும் போது, தமிழ்நாட்டின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கோரிக்கையின் வாசகங்கள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் சார்பில், மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவருக்கு விரிவான கடிதமும் எழுதப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், மத்திய நீர்வளக் குழுமத்தின் அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ள குறிப்பில், பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் உள்ள அணைகளின் பட்டியல்கள், அணைகளின் இருப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கீழ் அந்த அணைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும்; இந்தத் தகவல்களின் அடிப்படையில், யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது என்றும்; இந்தப் பதிவேட்டில் ஏதாவது தவறு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டால், அவை திருத்தப்படும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முல்லைப் பெரியாறு குறித்த 7.5.2014 நாளைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் தேக்கடி மாவட்டத்தில் இருக்கிறது என்றும், இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேற்காணும் விளக்கங்களிலிருந்து, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் புவியியல் அமைப்புபடி கேரளாவில் இருந்த போதிலும், அவை தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்பதும்; தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. எனவே, திரு. கருணாநிதி கூறுவது போல், தமிழ்நாட்டின் உரிமை எதுவும் பறிபோகவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், இவற்றை எல்லாம் ஆய்ந்து பார்க்காமல், “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கேற்ப நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் இந்தச் செயலை நினைக்கும் போது, “ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை கேரளாவிற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல் இருப்பது மட்டுல்லாமல், உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பது போல் உள்ளதால், இவரது அறிக்கையே உச்சநீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகக் கூடியது. “எண்ணித் துணிக கருமம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப செயல்படுவது நல்லது, இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்பதை திரு. கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அடுத்தபடியாக, “காவேரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ந்துவிட்டதா? மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா?” என்று வினவியிருக்கிறார் திரு. கருணாநிதி. காவேரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தவரையில், மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தி இருக்கிறேன். இது தொடர்பாக, சில சர்ச்சைகளை மத்திய அமைச்சர்கள் எழுப்பியவுடன், இது குறித்து 31 பக்கங்கள் கொண்ட விளக்கமான கடிதத்தினை மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு எழுதி இருக்கிறேன். தற்போதைய மத்திய அரசு நிச்சயம் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது தலைமையிலான அரசின் பகீரத முயற்சியின் காரணமாகத் தான், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதை திரு. கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவு, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனை என அனைத்திலும் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்த திரு. கருணாநிதிக்கு தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றி பேசவே எந்த அருகதையும் இல்லை.
“முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா?” என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் கேள்வியிலிருந்தே, இந்தப் பிரச்சனையில் எனக்கும், எனது தலைமையிலான அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிட்டதே என்ற திரு. கருணாநிதியின் ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் தெரிந்து கொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், ஒரு மேற்பார்வைக் குழுவை அமைக்கவும், அந்தக் குழுவில் மத்திய அரசின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவது உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக, கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் “நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியம் இல்லை” என்று பேசியதை சுட்டிக்காட்டி, இதற்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, “நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி கூறியதற்கு பதில் அளிக்க வக்கில்லாமல்; நதிநீர் இணைப்புத் திட்டத்தையே முடக்க நினைத்த காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து; சுயநலத்திற்காக நதிநீர் இணைப்புப் பிரச்சனையில் வாய்மூடி மவுனம் சாதித்த திரு. கருணாநிதி, இப்போது வாய் திறப்பது விந்தையாக இருக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டத்தினை நான் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டு வருகிறேன். நதிநீர் இணைப்பு குறித்த பொதுநல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒரு சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்த தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட்டக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியிலே ஆட்சியில் இருந்த போது மவுனம் சாதித்த திரு. கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்த பிறகு கூட, தன் மகளுக்காக மத்திய அரசிடம் மன்றாடிய திரு. கருணாநிதி; ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை? மகளா, மாநிலமா என்றால் மகள் தான் என்பது திரு. கருணாநிதியின் நிலைப்பாடாக அப்போது இருந்தது. இப்போது அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காக கேரள அமைச்சர் கூறியதையெல்லாம் மேற்கோள் காட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
“வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று கங்கை-காவிரி இணைப்புக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வித்திட்ட மகாகவி 4பாரதியாரின் கனவினை நனவாக்கும் வகையில், அதன் முதற்கட்டமாக 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அத்திக்கடவு-அவிநாசி வெள்ளப் பெருக்கு கால்வாய் திட்டம்; 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பெண்ணையாறு (சாத்தனூர் அணை) – பாலாறு இணைப்புத் திட்டம் மற்றும் பெண்ணையாறு-நெடுங்கால் அணைக்கட்டு-பாலாறு இணைப்புத் திட்டம்; 5,166 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி ஆற்றின் வெள்ள நீரை வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும், 11,421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி படுகை கால்வாய் முறைகளை நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றை முதற்கட்டமாக நிறைவேற்ற நிதி ஒதுக்குமாறும்; மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், பாலாறு, காவேரி மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கவும்; மேற்கு நோக்கி பாயும் பம்பா மற்றும் அச்சன்கோயில் நதிகளின் நீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பிவிடவும் ஆவன செய்யுமாறு, மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து 3.6.2014 அன்று நான் வலியுறுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரையில், தமிழர்களின் நலன் தான் முக்கியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொத்தத்தில், திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் முயற்சி போல் அமைந்துள்ளது. தமிழர்களின் நலன் கருதி, இது போன்ற செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். திரு கருணாநிதியின் அரை வேக்காட்டு அறிக்கையை வெளியிட்ட பத்திரிகைகள் மீது கோபித்துக் கொள்ளாமல், இந்த நல்ல விளக்கத்தைக் கூற எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|