புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை: புதிய பயணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 4:06 am


பிரபுவைப் பற்றி சங்கர் சொன்ன விஷயம் மகேஷின் தலைக்குள் எரிமலையை உருவாக்கியது.

“”சங்கர், நெஜமாத்தான் சொல்றியா… அந்த ராஸ்கல், இப்ப சென்னையில்தான் இருக்கானா…நல்லா பாத்தியா.. அது அவன்தானான்னு?”

“”ஆமாம் மகேஷ். நானென்ன உன்கிட்ட பொய்யா சொல்லப் போறேன். பிரபுவை ஒருநாள் தி.நகரிலேயும் இன்னொரு நாள் வடபழனி ஏ.வி.எம்.க்கு எதிரேயும் பார்த்தேன். பைக்கிலே போய்க்கிட்டிருந்தான். அவனுக்கு இங்கேதான் வேலை கிடச்சு ஜாயின்ட் பண்ணியிருப்பான்னு நெனைக்கிறேன்.”

“”அவனைச் சும்மா விடக் கூடாது. ஊரிலேயே அடிச்சு நொறுக்கியிருக்கணும். சூழ்நிலை சாதகமா இல்லாமப் போச்சு. இப்ப இங்கே வச்சு குமுறினோம்னா கேக்க நாதி இல்லே..என்ன சொல்றே?”

“”உண்மைதான். ஒரு நாளைக்கி அவனைப் பதம் பார்த்துட வேண்டியதுதான்”

“”இன்னொருநாள் அவனைப் பார்த்தா அட்ரஸ் கேட்டு வாங்கு. என்ன”

“”ஓ.கே.” என்றான் சங்கர்.

***

மகேஷ், சங்கர், பிரபு மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தான். பக்கத்து பக்கத்துக் கிராமம். பத்து கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வசிப்பவர்கள்.

மகேஷின் அப்பாவிற்கு மத்திய அரசில் உத்யோகம். வேலை இடமாற்றம் காரணமாக சென்னைக்கு மாற்றலாகி இருந்தது குடும்பம்.

மகேஷிற்கு பிரபுவிற்கும் மோதல் கல்லூரி ஆண்டு விழாவின்போதுதான் நிகழ்ந்தது.

கல்லூரி ஆண்டு விழாவில் மகேஷ் மேடையேறி ஒரு கவிதையை வாசித்தான். சக மாணவர்களின் கைதட்டலைப் பெற்றான்.

பிரபு சும்மா இருக்க முடியாமல், அந்த மேடையிலேயே அந்தக் கவிதையைப் பற்றி மட்டமாக விமர்சனம் செய்தான். அப்போது அவனை விட்டுவிட்ட மகேஷ் மறுநாள் கல்லூரி வளாகத்தில் பிரபுவைப் பிடித்தான்.

“”ஏன்டா, என்னயப் பத்தி எல்லோர்கிட்டேயும் தப்பா பேசிக் கிட்டுத் திரியிற?” என்றான்.

“”முதல்ல வார்த்தையைத் திருத்திக் கொள். நான் விமர்சனம் பண்ணியது உன்னைய இல்ல. நீ வாசிச்ச கவிதைய”

“”நீ ரசனை கெட்டவன். அதான் கவிதையே புரியலை”என்றான் மகேஷ்.

“”நீ எழுதியதா அன்னிக்கு வாசிச்சியே…அது உன்னோட கவிதையே இல்ல. பழைய புக்ல காபி பண்ணினது. அதனாலதான் அப்படிச் சொன்னேன். உண்மையை எல்லார்கிட்டேயும் சொல்லணுமா… சொல்லட்டுமா?” என்றான் பிரபு.

மகேஷ் கூனிக் குறுகிப் போனான். அவமானம் அவனைச் சாட்டையால் அடித்தது. அந்தச் சம்பவம் அத்துடன் முடிந்துவிடவில்லை. எரியும் நெருப்பில் சிறு சிறு துரும்பை எடுத்துப் போட்டதுபோல வார்த்தைகளாலும், பார்வைகளாலும் அவ்வப்போது மோதிக் கொண்டனர். ஒரு சின்ன விஷயம் பெரிதானது. சிறுநெருப்பு புகைந்து புகைந்து பெரும் பகையானது. பார்த்தால் ஒருவரையொருவர் தாக்கும் அளவுக்கு.

இந்த நிலையில் கல்லூரி படிப்பு முடியவும், மகேஷின் இடமாற்றம் நிகழவும் சரியாக இருந்தது.

அப்போது மகேஷின் மனதில் பற்றிய தீ இன்னும் அணையாமல் அப்படியே இருந்தது.

இப்போது சங்கர், பிரபுவைப் பற்றிச் சொல்லி மேலும் அதைக் கிளறி விட்டுவிட்டான்.

என்றாவது ஒருநாள் அவனிடம் ஏதாவது வம்புச் சண்டையிழுத்து அவனை அடித்தால்தான் மனது ஆறும் என்று தோன்றியது.

***

அன்று-

மகேஷ் ஒரு கம்பெனி இண்டர்வியூ விஷயமாகப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

பேருந்தின் ஜன்னலோரமாக இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, பேருந்து அசோக் நகர் நெடுஞ்சாலையில் சிக்னலுக்காக நின்றது.

மகேஷ் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது.

சிக்னலுக்கு எதிர்திசையில் பைக்கில் பிரபு இருப்பதைப் பார்த்தான். அவனைப் பார்க்கப் பார்க்க உடலெங்கும் உஷ்ணம் பரவியது.

“விடாதே பிடி’ என்று மனதிற்குள் ஆத்திரம் பொங்கியது. அதற்குள் சிக்னல் விழ எதிர்திசையில் வாகனங்கள் கிளம்புகின்றன.

பிரபு வண்டியைக் கிளப்புகிறான் அவன் பின்னால் யாரது? தெரிந்த முகமாக இருக்கிறதே. அது…அது…உமா அல்லவா?

பிரபுவின் இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடித்தபடி அமர்ந்திருக்கிறாள் உமா, மகேஷின் தங்கை.

மகேஷுக்குக் கோபம் உச்சிக்குப் போனது. ஆனாலும் கொஞ்சம் யோசித்தான்.

உமா பிறவியிலேயே கால் ஊனமாகப் பிறந்தவள். அந்த ஊனமே அவள் திருமணத்திற்குத் தடையாக இருந்தது. இதுவரை ஒருவர் கூட அவளைப் பெண் கேட்டு வரவில்லை. இவனாகச் சிலரிடம் முயற்சித்த போது அவமானமே பரிசாகக் கிடைத்தது. உமாவைக் கரையேற்ற என்ன செய்யலாம் என்று தடுமாறிக் கொண்டிருந்தான் மகேஷ்.

இந்தப் பிரபு என் தங்கை உமாவைக் காதலிக்கிறானா? அவளைக் கல்யாணம் செய்து கொள்வானா? உமாவின் எதிர்கால வாழ்வில் வெளிச்சம் தெரிந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு கண்ணெதிரே உதவிக்கரம் ஒன்று தென்படுவதைப் போல இருந்தது.

இவ்வளவு நாட்களாக மகேஷின் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் சட்டென்று காணாமல் போனது. தன் தங்கைக்குக் கணவனாகப் போகிறவன் என்ற எண்ணம் வந்ததும் ஒரு புதிய கோணத்தில் அவன் பிரபுவைப் பார்த்தான். சிக்னல் மாறி பஸ் புறப்பட்டது. புதிய பாதையில் சென்றது. மகேஷின் சிந்தனையும்.

- ஜி. சுந்தரராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 29, 2014 12:26 pm

சிறுகதை: புதிய பயணம்! 3838410834 சிறுகதை: புதிய பயணம்! 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 02, 2014 7:23 pm

ஓகே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக