புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
251 Posts - 52%
heezulia
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
18 Posts - 4%
prajai
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
5 Posts - 1%
Barushree
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_m10உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 7:08 am


உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

இது 1995-ம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, "அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன.

பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு

அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)

உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

1616-ம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 11:40 pm


ஏப்ரல் 23: உலக புத்தக தினம்


இன்றைக்கு உலக புத்தக தினம் .ஷேக்ஸ்பியரின் நினைவாக இந்நாளை அப்படி அனுசரிக்கிறோம் .புத்தகங்கள் உலக வரலாற்றை ஏகத்துக்கும் புரட்டி போட்டிருக்கின்றன . அங்கிள் டாம்ஸ் கேபின் நூல் தான் அடிமைகளின் வலிகளை அமெரிக்க உணர்ந்து தன் மனசாட்சியை மறுபரிசோதனை செய்து கொள்ளும் உள்நாட்டு போருக்கு விதையானது .

காமன் சென்ஸ் நூல் தான் அமெரிக்க விடுதலைப்போரை வீறு கொண்டு எழச்செய்த காரணி . அது நாற்பத்தி எட்டு பக்க நூல் ! நோபல் பரிசு பெற்ற ஹெமிங்க்வேயின் புகழ் பெற்ற கிழவனும்,கடலும் நூல் நூறு பக்கங்களுக்குள் தான். பெண்ணியப்பார்வையை தமிழ் மண்ணில் ஆழமாக விதைத்த 'பெண் ஏன் அடிமையானாள்' நூலும் அளவில் சிறிய புத்தகமே !

படிக்கிற நூல் எதுவோ அது மனிதனின் குணத்தையும் மாற்றும். கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியை மகாத்மா ஆக்கியது. நீட்ஷேவின் நெருப்பு வாதங்கள் ஹிட்லரை இனப்படுகொலை செய்யும் வெறியனாக ஆக்கியது !

ஒரு நூல் கிடைப்பதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? ஒரு எழுத்தாளன் ஒரு அற்புதமான படைப்பைத்தரவோ அல்லது ஒரு நூலை கண்டேடுக்கவோ எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? சங்க நூல்களை தேடிய உ.வே.சாவுக்கு தன் வாழ்நாளே அவற்றைப்பதிப்பதில் கழிந்தது. மார்க்குவேஸ் பதினெட்டு மாதங்கள் வீட்டுக்குள் தவங்கிடந்து வார்த்தது கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த நூல் என்று கொண்டாடப்படும் நூற்றாண்டு காலத்தனிமை நாவல். பன்னிரெண்டு வருடங்கள், பதினாறாயிரம் மைல்கள் டிக்கன்ஸ் எங்கெங்கோ தேடித்தந்தது ப்ரோக்கன் தி ஹெல் நூல். அது கிடைத்ததும் "உலகின் மகிழ்ச்சியான மனிதன் நான் தான். இந்த நூலை பதிப்பித்த பின் என் உயிரே போனாலும் கவலையில்லை !" என்றார் அவர்.

டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் பெருத்த அலைகளை உண்டு செய்தது. அந்த நூல் வெளிவந்தால் கடவுளின் இருப்பும்,மதங்கள் குரிப்பிட்டவையும் கேள்விக்குள்ளாகும் என்பது தெரிந்ததால் பத்தாண்டுகள் வரை அந்த குறிப்புகளை எடுக்காமலே வைத்திருந்தார். மகளின் மறைவுக்கு பின்னரே அந்நூலை வெளியிட்டார். பகுத்தறிவின் சாளரங்கள் மேலும் வெளிச்சமாகின. மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலை டார்வினுக்கே சமர்ப்பணம் செய்தார்.

நிராகரிப்பு என்பது இன்றைக்கு புகழ் பெற்றிருக்கும் நூல்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஹாரி பாட்டர் நாவலை எழுத ஆரம்பித்தபோது, ஒழுங்கான இடம் கிடையாது, பசியால் வாடி, மன உளைச்சலுக்கு உள்ளானார். காபி கடைகளில் உட்கார்ந்து, பழைய டைப்ரைட்டரில் அடித்தே கதையை முடித்தார். அதைப் பல பதிப்பாளர்களிடம் கொண்டுபோய் நீட்ட, அவர்கள் நிராகரித்தனர். லண்டனின் மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி, 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டது. நாவல் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

ஹக்கில்பெரி பின் நூலை மார்க் ட்வைன் எழுதிய பொழுது போஸ்டன் நூலகத்துக்குள் அந்நூல் நுழையக்கூடாது என்று சொன்னார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் உலிசஸ் நூலை எழுதிய பொழுது இங்கிலாந்தும்,அமெரிக்காவும் தடை செய்திருந்தன. சேத்தன் பகத்தின் முதல் நாவல் ஆக்ஸ்போர்ட் பதிப்பக எடிட்டர்களால் நிராகரிக்கப்பட்டு ரூபா பதிப்பகத்தால் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்றது.

அண்ணா மேரி கரோலியின் மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை மரணம் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது வாசித்துக்கொண்டு இருந்தார். "இந்த நூலை படித்து முடித்தபின் மரணம் என்னைத் தழுவிக் கொண்டால் பரவாயில்லை !" என்றார் அவர். பகத் சிங் தூக்கு மேடைக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில் தாமதப்படுத்தினார். "என்ன செய்கிறீர்கள் ?" என்று கேட்கப்பட்ட "ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் !" என்று சொன்னார் அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும்,புரட்சியும் நூல்.

ஒரு பொய்யான நூல் உலகின் வரலாற்றை மாற்றிப்போட்டது. ஜான் மாண்டேவல்லி எனும் இங்கிலாந்து நபர் 'the travels' நூலில் நாய் தலை உள்ள பெண்கள்,ஒற்றைக்கண் ராட்சதர்கள்,பெரிய நத்தைகள்,முட்டிகளுக்கு நடுவே தொங்கிய விதைப்பைகளை கொண்ட ஆண்கள் ஆகியோரை எல்லாம் கடந்து இந்தியா வந்ததாகவும் அங்கே ப்ரெஸ்டர் ஜான் எனும் கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவர் ஆள்வதாகவும் கதை அளந்திருந்தார். மேலும் முப்பது அரசர்கள்,எழுபத்தி இரண்டு சிற்றரசர்கள்,முன்னூற்றி அறுபது பிரபுக்கள் அவருக்கு கீழ் இருந்ததாகவும் கிளப்பி விட்டிருந்தார். உலகம் உருண்டை,மேற்கில் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று அவர் சொன்னதை நம்பி போன கொலம்பஸ் திசைமாறி அமெரிக்காவில் லேண்ட் ஆனார். பல்வேறு கடல் சாகசக்காரர்கள் நூற்றாண்டுகளுக்கு இந்த பொய்யை நம்பினார்கள்.

இவ்வளவும் படிச்சோம். இதுக்கு மேலே தமிழ் நாட்டில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றன .புத்தக கடைகள் இருக்கின்றவனவா ?எழுத்தாளனை நாம் கொண்டாடுகிறோமா ?கேரள மக்கள் புத்தக வாசிப்பை மூச்சாக செய்பவர்கள் .எழுத்தாளர்களை மதிப்பவர்கள் ;வாசுதேவன் நாயர் ஞான பீட விருது பெற்ற பொழுது முதல்வர் அந்தோணியின் கார் அவர் வீட்டு முன் வாழ்த்த வந்து நின்றது.அப்படி ஒரு நிலை நோக்கி நம் சமூகம் பயணிக்க வேண்டும்

ஒரு சமூகத்தை கட்டமைப்பதில், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதில் ,நமக்குள் புது புது தேடல்கள் செய்ய நூல்கள் உதவும். பிள்ளைகளுக்கு வீடியோ கேம்களை வாங்கித்தரும் நீங்கள் நல்ல நூல்களை வாங்கித்தாருங்கள் ;நூலகங்களில் சேர்த்து விடுங்கள் .சிந்திக்க மறுக்கிற சமூகம் என யாரையும் முத்திரை குத்துவதற்கு முன் அந்த சமூகத்தை சிந்திக்க வைக்கும் நூல்கள் சார்ந்து அவர்களை திசை திருப்ப வேண்டிய பொறுப்புணர்வு எல்லாருக்கும் உண்டு.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 3:23 pm

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்: ஏப்.23 3838410834 

ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம்...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக