புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_m10அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த வீடும் சில மரங்களும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 18, 2014 6:44 pm

First topic message reminder :

மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை அடிக்கடி திருப்பி பார்த்து, தனக்கிருக்கும் வேலைகளின் அவசரத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தான் சரவணன்.''எப்படா வர்றதா சொன்னான், அந்த குமாரு? எனக்கு வேலை இருக்குடா,'' என்று, தம்பி செந்திலைப் பார்த்து கேட்டான் சரவணன்.''வந்துடுவார்ணே, அதுக்கு முன்னால, அப்பாகிட்ட எல்லாத்தையும், சொல்லி புரியவச்சுட்டியா... அவர் பாட்டுக்கு உளறி, காரியத்த கெடுத்துடப் போறாரு.''

மகன்கள் பேசிக் கொள்வது, கல்யாண முருங்கை மரத்தடியில் அமர்ந்திருந்த, சத்திய மூர்த்திக்கு துல்லியமாய் கேட்டது. கண்களை மூடி, அப்படியே மரத்தடியில் அமர்ந்திருந்தார்.பத்து நிமிடத்தில், குமார் வந்து விட்டான். கண்களில், முதல் நாள் குடித்த பீரின் மிச்ச கிறக்கம், எஞ்சியிருக்க, கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு, உதவியாள் பின் தொடர வந்தான். அவனைக் கண்டதும் சரவணனும், செந்திலும், வாயெல்லாம் பல்லாக, குனிந்து, நெளிந்து வரவேற்றனர்.

கல்யாண முருங்கை மரத்தை அன்பாய் தடவிய சத்தியமூர்த்திக்கு, பழைய எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, அணிவகுத்து வரத்துவங்கியது. மனைவி காந்திமதி நகை, நட்டுகளை, அடமானம் வைத்து, இந்த இடத்தை வாங்கிப் போட்டதுடன், மூன்றே வருடத்தில், அழகாய் வீட்டையும் கட்டி விட்டாள். வீட்டைச் சுற்றி இருந்த இடத்தில், ஒரு செவலை பசுவும், முட்டைக் கோழிகளையும் வளர்த்தாள். அந்தப் பகுதியிலேயே மிக அழகான, வீடு இதுதான்.
காந்திமதியைப் போல், வீட்டை நேசிக்கிற மனுஷியை பார்ப்பது, அரிது என்று தோன்றும் சத்தியமூர்த்திக்கு. சரவணன், செந்திலோடு சேர்த்து, இந்த வீட்டை மூன்றாவது குழந்தையாய் தான், அவள் பேணிப் பாதுகாத்தாள். அவளுடைய மறைவிற்கு பின், மருமகள்கள், இந்த வீட்டை கூட்டிப் பெருக்கவே அழுதனர்.

'நாலு இடத்துக்கு போய் பாருங்க, கண்ணாடி மாதிரி பிளாட்டுகளெல்லாம் எப்படி, 'பள பள'ன்னு இருக்குன்னு. நாம மட்டும், இந்த மாயாபஜார் காலத்து வீட்டிலே இருந்து, இரண்டு வேளையும் பூவும், இலையுமா கூடை கூடையா வாரிக்கொட்ட வேண்டியிருக்கு...'

மருமகள்கள் ரேவதியும், சாந்தியும் தினமும் பாடிய இந்த பாட்டு, மிகச் சரியாய் வேலை செய்து, இன்று குமார் மூலம், அவர்கள் நினைத்த காரியம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இரண்டு பிளாட்டும், எழுபது லட்சம் ரொக்கமும் தருவதாய் பேரம் படிந்திருந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் கறாராய் இருந்தான் குமார்.
'பாருங்கோ மிஸ்டர் சரவணன் அண்ட் செந்தில்... என்னதான், நமக்குள்ள டீலிங் முடிஞ்சிருந்தாலும், இந்த இடம், உங்க அப்பா பேர்லதான் இருக்கு; சோ, நான் அவர்கிட்ட, ஒரு வார்த்தை பேசிடணும். அப்பத்தான் எனக்கும், திருப்தி...' கறாராய் சொல்லி விட்டான் குமார். அதற்காகத்தான் இன்று, அப்பாவை பார்க்க, நேரில் வந்திருந்தான்.

''உங்கப்பாவ பாக்கலாமா சரவணன்?'' குமார் கேட்டபோது, மனைவி ரேவதியைப் பார்த்து, அப்பாவை அழைத்து வருமாறு கண் அசைத்தான். காம்பவுண்ட் சுவரில், பந்தலில்லாமல் படர்ந்து கிடந்த ரோஜாச் செடிகளையும், மல்லிச் செடிகளையும் கவலையோடு பார்த்துக் கொண்டு இருந்தார் சத்தியமூர்த்தி.''மாமா... உள்ளே வாங்க; குமார் சார் உங்க வாயால சம்மதம் கேட்க வந்திருக்காரு,'' குரலை தாழ்த்தி சொன்னாள் ரேவதி.

''ம், ஆகட்டும். யம்மாடி ரேவதி, பரண்ல வெட்டுக்கத்தி கிடந்ததே பாத்தியா,'' என்றார் அமைதியாய்.
சம்பந்தமில்லாமல் பேசுகின்ற மாமனார் மீது, எரிச்சலாய் வந்தது ரேவதிக்கு. அதைக் காட்டுகின்ற நேரம் இதுவல்ல என்று நினைத்து, பல்லை கடித்துக் கொண்டாள்.

''இப்போ எதுக்கு மாமா வெட்டுகத்தியும், சுருள் கத்தியும்... உள்ளே குமார் உட்காந்துட்டு இருக்காரு.''
''இருக்கட்டும்மா...வந்தவர் இங்க தானே இருப்பாரு. அங்க பாரேன்... ரோஜா செடியும், மல்லிச் செடியும் படர வழியில்லாம, தவியா தவிச்சிட்டு நிற்குது. அதுங்களை, சரியா கத்தரிச்சு, நூல் வேலி கட்டி விடலாம்ன்னு பாத்தேன்,'' என்றார் அப்பிராணியாய்.

மருமகள் பார்வையில் அமிலம் கக்கவே, மெதுவாய் கையை ஊன்றி எழுந்தார். வேஷ்டியில் உதிர்ந்திருந்த கல்யாண முருங்கை பூக்களை, தட்டி விட்டு, மெதுவாய் நடந்தார். குமார் சாவதானமாய் சோபாவில் சாய்ந்திருந்தான். இவரைக் கண்டதும் நிமிர்ந்து அமர்ந்து, வணக்கம் சொன்னான்.

''ஐயா... இந்த இடத்த, எங்களுக்கு குடுக்றதுல உங்களுக்கு சம்மதம் தானே?''
மகன்கள் இருவரையும் முகம் உயர்த்தி பார்த்தார்; சன்னமாய் பெருமூச்சு வந்தது.
''ஐயா... இவங்க என்னை, விற்கறதுக்கு கிரயம் பேசி இருந்தாக்கூட, சம்மதம்தேன்,'' என்றார் விட்டேத்தியாக. அப்பாவை முறைத்தான் செந்தில்.

''இதனால, உங்களுக்கு எந்த மனக்கஷ்டமும் இல்லையே... இதோ பாருங்க பெரியவரே, இந்த வீட்டை நாங்க எடுத்துட்டு, உங்களுக்கு இதையே நவநாகரீகமா மாத்தி தர்றதோட, கைநிறைய பணமும் தர்றோம். அதனால, இங்க இருந்து விலகிப்போயிடுவோமோன்னு நினைச்சு, எந்த வருத்தமும் பட தேவை இல்லை.''
குமார், வார்த்தைகளில், வெண்ணெய் தடவி, பேசினான்.
சூழலுக்கு பொருந்தாத அமைதி, அந்த இடத்தில் நிலவி, தர்மசங்கடப்படுத்தியது.
''சொல்லுங்க ஐயா... உங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லையே?''

''இல்லங்க. எதையும் ஆட்சேபிக்குற கட்டத்தையெல்லாம், நான் தாண்டி வந்துட்டேன். பழுத்துப் போன இலைக்கு ஆதாரம் வேரா, கிளையான்னு கேட்டா, யாருக்கும் சொல்லத் தெரியாது. என்னை மாதிரி, பழுத்த இலையோட நெலமையும் அப்படித்தான். எனக்கு ஆதரவு இந்த வீடா, என் பிள்ளைகளான்னு கேட்டா, என்னால பதில் தர முடியாது. என் வீடு எனக்கு ஜீவாதாரம்... நான் சம்பாதிச்சு, அரும்பாடுபட்டு சேர்த்த சொத்து; என் மனைவியோட ஞாபகங்கள் வாசம் செய்ற இடம். ஆனா, என் பிள்ளைக, என் வாழ்க்கையோட மொத்த சொத்து. அவுங்களோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தலையாட்டுறது தானே, நல்ல தகப்பனோட கடமை.''

சத்தியமூர்த்தியை அதிசயமாய் பார்த்தான் குமார். மகன்கள் வெற்றி புன்னகையுடன், கைகுலுக்க குமாரிடம் கரம் நீட்டினர். வெளியில் வந்தார் சத்தியமூர்த்தி. வானம் களங்கமாய் இருந்தது. 'ஓ'வென, ரத்தக் கண்ணீர் வடிப்பதுபோல், கல்யாண முருங்கை, பூக்களை கொத்து கொத்தாய் இரைத்தது போல் பூக்கள், தரையில் குவிந்திருந்தன.
மனிதர்களின் பிடிமானங்களும், விருப்பங்களும், வேறுபடுகிற களங்களை நினைக்கும் போது, வேடிக்கையாய் இருந்தது சத்தியமூர்த்திக்கு. காந்திமதிக்கு இந்த காற்றோட்டமும், அத்தோடு சேர்ந்த வீடும் நிரம்ப பிடிக்கும். சருகுகளையும், இலைகளையும் சுத்தப்படுத்துவதே, ஒரு உயர்ந்த பணியாய் நினைத்து வாழ்ந்தாள். ஆனால், ரேவதிக்கும், சாந்திக்கும் இவை அசவுகரியங்களாய் தோன்றியிருக்கிறது. இந்த நிதர்சனங்களை ஏற்றுக் கொள்வது, காலத்தின் கட்டாயம்.

படர பந்தலற்ற கொடிகள், பச்சை குழந்தைகளாய், காற்றில் கைநீட்டி இவரைப் பார்த்து அழைத்தன. நெஞ்சு பொறுக்காமல், பக்கத்து வீட்டு பட்டாபியிடம், வெட்டுக்கத்தி வாங்கி வந்து, அதன் முனைகளை சீறாய் கத்தரித்து விட்டார். கிணற்று மேட்டில் கிடந்த மூங்கில் கொம்புகளை ஒழுங்காய் சீவி, ஊன்றி, சணலால் பிணைத்து, மெல்லிய பந்தலாய் உருவாக்கி, கொடிகளை படர விட்டார். விளக்கு மாற்றை தேடி எடுத்து, வாசலில் படர்ந்து கிடந்த குப்பைகளை வாரிக் குவித்தார். வெளியில் வந்த குமாருக்கு, இந்த விஷயங்கள் ஆச்சரியமாய் இருந்தது.
''மிஸ்டர் சத்தியமூர்த்தி, உங்களுடைய வீடு கிரயமாயாச்சு; இன்னும், ஒரு மாசத்துல இந்த இடத்த நீங்க காலி செய்தாகணும். கரெக்டா அந்த தேதியிலிருந்து ஏழாவது மாசம், நாங்க உங்களுக்கு போர்ஷன்களை தந்திடுவோம். அப்படியிருக்க, பிய்த்து வீசப்போற செடிகளுக்கு, ஏன் கொடி கட்டறீங்க,'' என்று கேட்டான் குமார்.
மந்தகாசமாய் சிரித்தார் சத்தியமூர்த்தி.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 20, 2014 12:49 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109532-topic#1058953"]
krishnaamma wrote:[link="/t109532-topic#1058890"]எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த கதை Guest உங்களுக்கு? புன்னகை

எனக்கும் தான்மா புன்னகை

நன்றி பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 20, 2014 12:49 pm

subasu wrote:[link="/t109532-topic#1058994"]
krishnaamma wrote:[link="/t109532-topic#1058890"]எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த கதை Guest உங்களுக்கு? புன்னகை
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு.
அருமை!

நன்றி ! புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 20, 2014 12:50 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:[link="/t109532-topic#1058890"]எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த கதை  Guest உங்களுக்கு? புன்னகை
கோடிங்கில் அம்மா கைதேர்ந்துவிட்டாரே பலே


 ஜாலி ஜாலி ஜாலி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sat May 17, 2014 1:08 am

Super



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 17, 2014 11:41 pm

பிள்ளைகளையும், உணர்வுகளையும் ஒன்றாய் பார்த்து, அதில் பிள்ளைகளுடைய உணர்வுகளுக்கே முதல் உரிமை தந்த நல்ல மனிதனை, உயர்ந்த தகப்பனை, அன்று தான்.....
எழுபது வயசுல இறக்கத்தானே போறோம்ன்னு, அறுபது வயசுல இருந்து சாப்பிடாமயா இருக்கோம்...
இந்த வீட்டை விட, என் குழந்தைகளுடைய சந்தோஷம் எனக்கு பெரிசா தெரியுது. அதனால சரின்னு சொன்னேன். நிச்சயமாய் மற்ற வீடுகளில் நடக்கிற மாதிரி, என் பிள்ளைக என்னை எந்தக் கட்டாயமும் படுத்தல, 'என் காலத்துக்கு பின் என்னவோ செய்ங்க'ன்னு, ஒரு வார்த்தையில தடுத்திருக்கலாம்; அது சுயநலம். என்னால, அதுபோல என் குழந்தைகளுடைய விருப்பு, வெறுப்புகளை தள்ளிப் போட்டுட முடியல.
அருமையான மற்றும் யதார்த்தமான வரிகள். எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது கிருஷ்ணா-ம்மா.

krishnaamma wrote:எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த கதை விமந்தனி உங்களுக்கு?  புன்னகை 
நான் re-entry ஆனது மே மாதம் தானே? அது எப்படி கிருஷ்ணா-ம்மா ஏப்ரல் மாதமே என்னிடம் கருத்து கேட்டீர்கள்? சொல்வீர்களா?



அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்த வீடும் சில மரங்களும்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்த வீடும் சில மரங்களும்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக