புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 70%
heezulia
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 3%
viyasan
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
213 Posts - 42%
heezulia
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 4%
prajai
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_m10பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 10, 2014 7:41 am

பெயர் திருடிக் குருவி - சிறுவர்கதை OuT2blsqQt2xgxGUQYKE+x1kathai_1834632h.jpg.pagespeed.ic.Ua7jKBBiBt

பெயர் திருடிக் குருவியைப் பார்த்திருக்கிறீர்களா? வருணாக் குட்டியின் செல்லப் பெயர்தான் அது. வைத்தது யார் தெரியுமா? பறவைகள்தான்.

வருணாக் குட்டிக்குத் தன் பெயர் பிடிக்கவே பிடிக்காது. “வருணாவாம் வருணா, வேற பேரே கிடைக்கலையா உங்களுக்கு?” என்று தன் அப்பா, அம்மா இருவரையும் திட்டிக்கொண்டே இருப்பாள்.

ஒருநாள் அழகான பறவை ஒன்றைப் பார்த்தாள். தரையில் அவசர அவசரமாக எதையோ கொத்திக் கொண்டிருந்தது. இவர்களைப் பார்த்ததும், அதன் கொண்டை விசிறிபோல விரிந்தது. பறவை பறந்தோடிவிட்டது.

“அப்பா, இந்தப் பறவை யோட பேரு என்னாப்பா?” என்று கேட்டாள் வருணா.

“அது பேரு கொண்டலாத்தி. அழகான கொண்டை இருக்குறதுனால அந்தப் பேரு” என்றார் அப்பா.

“பாருங்கப்பா, அதுக்கெல் லாம் எவ்வளவு அழகா பேரு இருக்கு. எனக்கு மட்டும் ஏன்பா இப்படி வச்சிங்க?” என்று சிணுங்கினாள் வருணா.

“இதையே எத்தனை தடவ சொல்வ நீ. வேணும்னா அந்தப் பறவையோட பேரைக் கடன் வாங்கிக்க” என்று சொல்லிவிட்டு அப்பா போய்விட்டார்.

அன்றைக்கு ஆரம்பித்ததுதான் வருணாக் குட்டியின் பெயர் வேட்டை.

“நாக்கை நீட்டி, மெய்மறந்து எவ்வளவு அழகாகத் தேன்குடிக்கிறாய் தேன்சிட்டே. இதோ உன் பெயரைத் திருடிக்கொள்கிறேன் பார்” - தேன்சிட்டிடமிருந்து பெயரைத் திருடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நழுவினாள் வருணா.

தேன் குடித்து முடித்துவிட்டு சுயநினைவுக்கு வந்த அந்தப் பறவை அதிர்ந்துபோனது. அதனுடைய பெயரைக் காணோம்! தேன் குடித்த பூவுக்குள் விழுந்துகிடக்கிறதா என்று எட்டிப் பார்த்தது. அங்கும் இல்லை. அதன் பெயர் எங்கும் கிடைக்கவே இல்லை. அழுதுகொண்டே கூடு நோக்கிப் பறந்தது.

இப்படித்தான் மீன்கொத்தி, அதுவும் கறுப்பு வெள்ளை மீன்கொத்தி. குளத்துக்கு மேலே அந்தரத்தில், மீனுக்காகக் காத்திருந்தபடி சிறகடித்துக்கொண்டிருந்தது. தலையைக் குனிந்து கீழே மீன் ஏதும் வருகிறதா என்று உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தரத்தில் குத்திவைத்த பூவைப் போல அழகாக இருந்தது. இதுதான் சமயம் என்று அதன் பெயரை உருவிக்கொண்டு வந்துவிட்டாள் வருணா.

மீனைப் பிடித்துவிட்டுக் கரைக்குச் சென்று அமர்ந்தபோதுதான் அந்தப் பறவையைப் பார்த்து அதன் வாயிலிருந்த மீன் ஒரு கேள்வி கேட்டது, “பேருகூட இல்லை. நீயெல்லாம் என்னைப் பிடிக்க வந்துட்டியே?”. திடுக்கிட்டுப்போனது அந்தப் பறவை. ஆமாம், பெயர் காணோம்தான். வாயிலிருந்த மீனைத் தூக்கியெறிந்தது. மீன் போய் குளத்தில் விழுந்தது.

இதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது ஒரு இலைக்கோழி.

“பெயரில்லாப் பறவைக்குப் பெரிய மூக்கு எதற்கு?” என்று கிண்டலடித்தது. அவமானத்தோடு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது பெயரை இழந்த பறவை. பாடிக்கொண்டே ஒரு இலையிலிருந்து இன்னொரு இலைக்குக் கால் வைத்தது இலைக்கோழி. அந்த இடைவெளியில் அதன் பெயரையும் திருடிக்கொண்டு வந்துவிட்டாள் வருணாக் குட்டி.

“பெயரில்லாப் பறவைக்குப் பெரிய வால் எதற்கு?” என்று மரக்கிளையிலிருந்த பறவை பதிலுக்குப் பாடியது.

இப்படியே குக்குறுவான், செண்பகம், குயில், நாரை என்று கண்ணில் படும் பறவைகளிடமிருந்தெல்லாம் பெயர்களைத் திருட ஆரம்பித்தாள் வருணாக் குட்டி. பெயர்களை இழந்த பறவைகள் நிம்மதி இழந்து வானில் அங்கு மிங்கும் பறந்தன. ஒரே கூச்சல்.

இப்படியாக எத்தனையோ பறவைகளிடமிருந்து திருடிய பெயர்களை ஒரு வலைக்குள் போட்டு வைத்திருந்தாள் வருணா. தேவையான அளவுக்குப் பெயர்கள் சேர்ந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வலையைத் தூக்கிக்கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தாள்.

அதுவரை வலைக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெயர்களெல்லாம் சிணுங்க ஆரம்பித்தன. சில பெயர்கள் சத்தம்போட்டு அழ ஆரம்பித்தன. பெயர்களின் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், பெயர்களை இழந்த பறவைகள் அந்த இடத்தைத் தேடி வந்தன. அங்கே, வலைக்குள் தங்கள் பெயர்கள் இருப்பதையும் ஒரு சிறுமி அவற்றைக் காவல்காத்துக் கொண்டிருப்பதையும் பறவைகள் பார்த்தன. பறவைகள் மகிழ்ச்சி தாங்க முடியாமல் பாட ஆரம்பித்தன.

அப்போதுதான் அந்த அதிசயம்! வலையோடு சேர்ந்து பெயர்கள் பறக்க ஆரம்பித்தன. வருணாக் குட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. வலையை இறுக்கமாகப் பிடித்து இழுக்கப் பார்த்தாள். முடியவில்லை. அவளையும் மேல் நோக்கி இழுத்தது வலை. கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் வருணாக் குட்டி.

வலை மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. வருணாக் குட்டியும், இல்லையில்லை, பெயர் திருடிக் குருவியும் மேலே மேலே போய்க்கொண்டிருந்தாள்.

மேலே மேலே… மேகத்துக்கும் மேலே… நிலவுக்கும் மேலே… விண்மீன்களுக்கும் மேலே… வானத்துக்கும் மேலே…

குழந்தைகளே, பறவைகளின் பெயர்களும் பறக்கும் என்று வருணாக் குட்டி, இல்லையில்லை, பெயர் திருடிக் குருவி தெரிந்துகொண்டது இப்படித்தான்.(தெஹிண்டு)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 3:34 pm

சத்தியமாக இந்தக் கதை புரியவில்லை!  அய்யோ, நான் இல்லை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 10, 2014 4:31 pm

அதிர்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக