புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
48 Posts - 51%
heezulia
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
48 Posts - 51%
heezulia
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்து! - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 11:35 am



ராமு என்ற ஏழைச் சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் கடைவாசலில் நின்று, கண்ணாடிக் கதவிற்குள்ளிருக்கும் அந்த அழகான பந்தை ஆசையோடு பார்த்துக் கொண்டு இருப்பான். ஏன் என்றால் அவனால் அதை வாங்க முடியாதே... அவனுக்குப் அந்த பந்தை வாங்கக் காசு ஏது? ஒருநாள் கடைக்காரனைக் கேட்டதற்கு அவன், அதன் விலை ஐந்து ரூபாய் என்றான். ராமுவின் முகம் ஏமாற்றத்தால் வாடிவிட்டது.

ஒரு பெருமூச்சுடன் பந்தை மறுபடியும் பார்த்துவிட்டு ராமு மேலே நடந்தான். பந்தை ஆகாயத்தில் தூக்கிப் போட்டுப் பிடிப்பது போலவும், பந்து துள்ளிக் குதித்து ஓட, ராமு அதைத் தாவி பிடிப்பது போலவும், கனவு கண்டு கொண்டே நடந்தான்.

அவன் கனவைக் கலைத்தது ஒரு பரபரப்பான குரல்.

""தம்பி, என் கைக்கடிகாரம் எங்கேயோ நழுவி விழுந்துவிட்டது. கொஞ்சம் தேடிப்பாரேன். எனக்கு வயசாயிடுத்து. கண்ணே சரியாத் தெரியலே... தேடித் தந்தா உனக்கு ஐந்து ரூபாய் தரேன்,'' என்று பரிதாபமாக ஒரு கிழவர் ராமுவை வேண்டினார்.

ஒவ்வொரு பையனும், ""நான் தேடித்தரேன் தாத்தா'' என்று குதிபோட்டுக் கொண்டு ஓடினர்.

""யார் தேடித் தந்தாலும் சரி, ஐந்து ரூபாய் பரிசாகத் தருவேன். இந்த வழியாகத்தான் வந்தேன். இங்கே தான் விழுந்திருக்கும்,'' என்றார் கிழவர்.

ஐந்து ரூபாய்!
ராமுவிற்கு நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உடனே அந்தக் கண்ணாடி பீரோவில் இருந்த பளபளக்கும் பந்துதான் அவன்முன் காட்சியளித்தது.

""கடவுளே! கைக்கடிகாரம் என் கையில் கிடைக்கும் படி செய். எனக்கு ஐந்து ரூபாய் தருவார் தாத்தா. உடனே அந்தப் பந்தை வாங்கிவிடுவேன்,'' என்று நினைத்தபடி வந்தவழியே திரும்பித் தேட ஆரம்பித்தான்.

சாலை வழியே தேடிக்கொண்டு வரும் போது ராமுவின் கண்களில் ஒரு வினோதப் பொருள் தென்பட்டது. பரபரப்புடன் அதை நெருங்கிப் பார்த்தான் ராமு.

"ஐயோ பாவம்!' என்று வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன.

அது ஒரு சின்னக் குஞ்சுப் பறவை. புல் தரையில் விழுந்து கிடந்தது. இன்னும் இறக்கை முளைக்கவில்லை. தன் சின்னச் சிறகை ஆட்டி, ஆட்டி எழுந்திருக்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை. மரத்தின் மேலிருந்த கூண்டிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. தாய்ப் பறவை கீச்சு மூச்சென்று கத்தியபடி மேலும் கீழும் பறந்தபடி தன் குஞ்சைக் கவனித்துக் கொண்டிருந்தது.

"ராமுவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. பாவம், அதனால் தன் குஞ்சை மேலே கொண்டு போக முடியவில்லை. தன்னைக் கண்டதும் உதவிக் கேட்டு தான் இப்படிக் கத்தி ஆரவாரம் செய்கிறது' என்று நினைத்தான் ராமு. பறவையைக் கூட்டில் சேர்த்துவிடுவதுதான் தனது கடமை என்று தீர்மானித்தான்.

இதை எடுத்துக்கொண்டு மரத்திலேறிக் கூட்டில்விட்டுக் கொண்டிருந்தால் என் கையில் கடிகாரமும் அகப்படாது. பந்தும் வாங்க முடியாது; தனக்கு முன்னால் பையன்கள் எல்லாம் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டான். பிறகு வந்து பறவையை கவனிக்கலாம் என்று எண்ணி, அவர்களுக்கு முன் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு அடி முன்னால் நடந்தான்.

திடீரென்று குஞ்சு கிரீச்சிட்டது. திரும்பிப் பார்த்த ராமு, குஞ்சு எழுந்திருக்க முயன்று மல்லாந்து விழுந்துவிட்டதைக் கண்டான். குஞ்சு தவிப்பதைக் கண்ட தாய்ப்பறவை துடித்தது. கத்தியபடி சுற்றிச் சுற்றிப் பறந்தது.

அந்தப் பரிதாபமான காட்சி ராமுவை உருக்கிவிட்டது. இப்படியே இதை விட்டு விட்டுப் போனால், பூனைக்கோ, கழுகுக்கோ அது இரை ஆகிவிடும் என்பதும் அப்போது தான் ஞாபகம் வந்தது. பந்தை மறந்தான்.

கீழே குனிந்து குஞ்சை மெதுவாகத் தூக்கினான். அதன் பட்டுப்போன்ற மிருதுவான மெல்லிய உடலின் ஸ்பரிசம் ராமுவின் உடலைச் சிலிர்க்கச் செய்தது. பஞ்சு போன்ற அதை ஜாக்கிரதையுடன் கையில் ஏந்தியபடி மரத்தில் ஏறினான்.

தாய்ப்பறவையின் ஆனந்தத்தைக் கேட்கவா வேண்டும்? அது ராமுவைச் சுற்றி சுற்றி சந்தோஷ ஆரவாரம் செய்தது. ஒரு உயிரைக் காப்பாற்றினோம் என்ற பெருமை ராமுவுக்குத் தாங்கவில்லை. பச்சிளங்குஞ்சை அதன் கூட்டில் சேர்த்து விட்டு மரத்திலிருந்து கீழே குதித்த ராமு, "அப்பா' என்று அலறினான். அவன் காலிலிருந்து ரத்தம் கசிந்தது.

கீழே குனிந்த ராமுவுக்கு அழுகைக்குப் பதில் ஆனந்தம்தான் உண்டாயிற்று. கால் வலியையும் மறந்தான். புல்லினிடையே பளிச்சிட்ட எதையோ எடுத்துக்கொண்டு ஓட்டமாக ஓடினான்.

ராமுவின் காலில் குத்தியது என்ன தெரியுமா? கடிகாரத்தைக் கட்டிக்கொள்ள அதனுடன் ஒரு தோல் பட்டை இணைத்திருக்கு மல்லவா? அதன் ஒரு முனையில் மறு முனையை மாட்டி இழுத்துச் செறுக, ஒரு ஊசி இருக்குமல்லவா? அதுதான் அவன் காலில் குத்தியது. நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

தாத்தாவிடம் கடிகாரத்தை கொடுத்தான். தாத்தா அவனுக்கு ஐந்து ரூபாய் பரிசாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, பந்தை வாங்க சந்தோஷமாக கடைக்கு சென்றான் ராமு.
***
சிறுவர் மலர்



பந்து! - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 12, 2013 11:40 am

நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




பந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Uபந்து! - சிறுவர்கதை Tபந்து! - சிறுவர்கதை Hபந்து! - சிறுவர்கதை Uபந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Oபந்து! - சிறுவர்கதை Hபந்து! - சிறுவர்கதை Aபந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Eபந்து! - சிறுவர்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 12, 2013 11:53 am

நன்றி தேங்யு அங்கிள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 12:47 pm

அந்த ஸ்ட்ராப் குத்தி ரத்தம் வர அளவுக்கு டீடெயில் வேணுமா?

நல்ல பகிர்வு பாஸ்.






Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக