புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
74 Posts - 47%
heezulia
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kargan86
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:57 pm

First topic message reminder :

முதற்பகுதி

1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு

உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில்
மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!

வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்!

நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
அப்படி இப்படி வலதுகை யசைத்தும்

புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.
நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்!

பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!

பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு

வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்.
புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்

குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:08 pm


21. ஜீவமுத்தம்


வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்;
வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று
வடதிசைநோக் கிச்சென்றாள். நெருங்க லானார்!
வளர்புதர்கள் உயர்மரங்கள் நிறைந்த பூமி!
நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே
நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும்
வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்!
வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்!

பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட் டத்தைப்
புலைத்தொழிலும் கொலைத்தொழிலும் புரிவோ ரான
வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்;
வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான்.
தன்நடையை முடுக்கினான். எதிரில் மங்கை
தளர்நடையும் உயிர்பெற்றுத் தாவிற் றங்கே!
என்னஇது! என்னஇது! என்றே அன்னோன்
இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான்.

"நிச்சயமாய் அவர்தாம்"என் றுரைத்தாள் மங்கை
"நிசம்"என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல்
கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்; கைகள்
கொட்டினாள்! ஆடினாள்! ஓட லானாள்.
"பச்சைமயில்; இங்கெங்கே அடடா என்னே!
பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று
கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான்.
கடிதோடி னாள்அத்தான் என்ற ழைத்தே!

நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது
நெடுமரத்தின் மறைவினின்று நீள்வாள் ஒன்று
பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப்
பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின்
சாந்தமுகந் தனைக்கண்டாள்; உடலைக் காணாள்!
தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்!
தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்
செத்ததற்குச் செத்தாள்அத் தென்னாட் டன்னம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:09 pm

இரண்டாம் பகுதி

முறையீடு



22 தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்

திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்
தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி

சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில்
நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும்

நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து
சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார்

அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன்
திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்!

அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத்
தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான்.

ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ!
தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான்

சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்
உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர்,

பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை
ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு

வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்
கடவுள் கருணை இதுவாம்! - வடவர்

அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப்
பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம்.

வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின்
நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும்

தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர்

குமர குருபரன் ஞான குருவாய்
நமை யடைந்தான் நன்றிந்த நாள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:11 pm


23. குருபரனுக் கருள்புரிந்தான்

கயிலாச புரத்தில் நல்ல
சண்முகக் கவிரா யர்க்கும்
மயில்நிகர் சிவகா மிக்கும்
வாயிலாப் பிள்ளை யாக
அயலவர் நகைக்கும் வண்ணம்
குருபரன் அவத ரித்தான்
துயரினால் செந்தூர் எய்திக்
கந்தனைத் துதித்தார் பெற்றோர்.

நாற்பது நாளில் வாக்கு
நல்காயேல் எங்கள் ஆவி
தோற்பது திண்ண மென்று
சொல்லியங் கிருக்கும் போது
வேற்படை முருகப் பிள்ளை
குருபரன் தூங்கும் வேளை
சாற்றும்அவ் வூமை நாவிற்
சடாட்சரம் அருளிச் சென்றான்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:11 pm


24. ஊமையின் உயர்
கவிதை

அம்மையே அப்பா என்று
பெற்றோரை அவன் எழுப்பிச்
செம்மையே நடந்த தெல்லாம்
தெரிவித்தான். சிந்தை நைந்து
கைம்மையாய் வாழ்வாள் நல்ல
கணவனைப் பெற்ற தைப்போல்
நம்மையே மகிழ வைத்தான்
நடமாடும் மயிலோன் என்றார்.

மைந்தனாம் குருப ரன்தான்
மாலவன் மருகன் வாழும்
செந்தூரில் விசுவ ரூப
தரிசனம் செய்வா னாகிக்
கந்தரின் கலிவெண் பாவாம்
கனிச்சாறு பொழியக் கேட்ட
அந்தஊர் மக்கள் யாரும்
அதிசயக் கடலில் வீழ்ந்தார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:12 pm


25. ஞானகுருவை நாடிச் சென்றான்

ஞானசற் குருவை நாடி
நற்கதி பெறுவ தென்று
தானினைந் தேதன் தந்தை
தாயார்பால் விடையும் கேட்டான்.
ஆனபெற் றோர்வ ருந்த
அவர்துயர் ஆற்றிச் சென்றான்
கால்நிழல் போற் குமார
கவியெனும் தம்பி யோடே.

மீனாக்ஷி யம்மன் பிள்ளைத்
தமிழ்பாட விரைந்து தம்பி
தானதைக் குறிப் பெடுக்கத்
தமிழ்வளர் மதுரை நாடிப்
போனார்கள்; போகும் போது
திருமலை நாய்க்க மன்னன்
ஆனைகொண் டெதிரில் வந்தே
குருபரன் அடியில் வீழ்ந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:12 pm


26. யானைமேல் பானைத் தேன்


"என்னையும் பொருளாய் எண்ணி
எழுதரும் அங்க யற்கண்
அன்னைஎன் கனவில் தோன்றி
அடிகள்நும் வரவும், நீவிர்
சொன்னநற் றமிழும் பற்றிச்
சொன்னதால் வந்தேன். யானை
தன்னில்நீர் எழுந்த ருள்க
தமிழுடன்" என்றான் மன்னன்.

தெய்விகப் பாடல் தன்னைத்
திருவரங் கேற்று தற்கே
எய்துமா றனைத்தும் மன்னன்
ஏற்பாடு செய்தான். தேவர்
துய்யநற் றமிழ்ச்சா ராயம்
துய்த்திடக் காத்தி ருந்தார்;
கையில்வாத் தியங்கள் ஏந்திக்
கந்தர்வர் கண்ணாய் நின்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:12 pm


27. அவையிடைச் சிவை


அரங்கிடை அரசன் ஓர்பால்,
அறிஞர்கள் ஓர்பால் கேட்கத்
தெரிந்தவர் கலையில் வல்லோர்
செந்தமிழ் அன்பர் ஓர்பால்
இருந்தனர். அரிய ணைமேல்
இருந்தனன் குருப ரன்தான்!
வரும்சனம் தமிழ ருந்த
வட்டிக்க ஆரம் பித்தான்.

அப்போது கூட்டத் தின்கண்
அர்ச்சகன் பெற்ற பெண்ணாள்
சிப்பத்தைப் பிரித் தெடுத்த
சீனத்துப் பொம்மை போன்றாள்
ஒப்பியே ஓடி வந்தாள்
காற்சிலம் பொலிக்க! மன்னன்
கைப்பற்றி மடியில் வைத்தான்;
கவிதையில் அவாவை வைத்தான்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:13 pm


28. தெய்வப் பாடல்


குமரகு ருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி
அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான்; மற்றோர்
அமுதப்பாட் டாரம் பித்தான்.
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
சமானமொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர்.

"தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே! நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கைஅகழ்ந்
தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே! வளர்சிமைய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே! எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்தில்அழ
கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே! மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:13 pm


29. இறைவி மறைவு

என்றந்தப் பாடல் சொன்னான்
குருபரன்! சிறுமி கேட்டு
நன்றுநன் றென இசைத்தாள்;
நன்றெனத் தலை அசைத்தாள்;
இன்னொரு முறையுங் கூற
இரந்தனள்; பிறரும் கேட்கப்
பின்னையும் குருப ரன்தான்
தமிழ்க்கனி பிழியுங் காலை,

பாட்டுக்குப் பொருளாய் நின்ற
பராபரச் சிறுமி நெஞ்சக்
கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
கொஞ்சினாள் அரங்கு தன்னில்.
ஏட்டினின் றெழுத்தோ டோடி
இதயத்துட் சென்ற தாலே
கூட்டத்தில் இல்லை வந்த
குழந்தையாம் தொழும் சீமட்டி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:13 pm


30. திருவடி சரணம்


முழுதுநூல் அரங்கேற் றிப்பின்
முடிமன்னன் குதிரை யானை
பழுதிலாச் சிவிகை செம்பொன்
காணிக்கை பலவும் வைத்துத்
தொழுதனன். குருப ரன்பின்
துதிநூலும் நீதி நூலும்
எழுதிய அனைத்தும் தந்தே
சின்னாட்கள் இருந்து பின்னே,

தம்பியை இல்லம் போக்கித்
தான்சிராப் பள்ளி யோடு
செம்மைசேர் ஆனைக் காவும்
சென்றுபின் திருவா ரூரில்
பைம்புனற் பழனத் தாரூர்
நான்மணி மாலை பாடி
நம்மைவந் தடைந்த காலை
நாமொரு கேள்வி கேட்டோம்.

"ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடு மானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்."

ஆகுமித் திரு விருத்த
அனுபவப் பயனைக் கேட்க
ஈகுவோன் கையி லொன்றும்
இல்லாமை போல் தவித்துத்
தேகமும் நடுங்கி நின்று
திருவடி சரணம் என்றான்
ஏகிப்பின் வருக என்றோம்
சிதம்பரம் ஏகி உள்ளான்.

சென்றஅக் குருப ரன்தான்
திரும்பிவந் திடுமோர் நாளும்
இன்றுதான். சிறிது நேரம்
இருந்திடில் காணக் கூடும்.
என்றுநற் றேசி கர்தாம்
இருநாய்கண் மாருங் கேட்க
நன்றுற மொழிந்தார். கேட்ட
நாய்கன்மார் காத்தி ருந்தார்.


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக