புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
30. ஸ்தல புராணம்
1. ஸ்தல வரலாறும் மகிமையும்
கோயில் கும்பிடுவதில் எங்கள் சைவத் தமிழரை
குறை சொல்ல ஏலாது நீறிட்ட நெற்றியில்
சந்தனப் பொட்டும்,
மிஞ்சின சந்தனம் மேனிமுழுவதும்
பூசின கோலமும் சரிகைச் சால்வை யடு
நீளவே தொங்கும் தங்கச் சங்கிலியும்
ஆடவரும் அழகோ அப்பப்பா இப்புவியில்
தேவரும் கால் பதியார் திகைத்து.
காசி கதிர்காமம் சேதிசிதம்பரமும்
திருப்பதியும் சென்று திருப்பாற் கடல்
கடைந்து வரு வரன்றே.
கோயில் கட்டுவதிலும் என்ன குறைவோ?
ஆதித் தமிழ் மன்னர் மூட்டுதிருப் பணியின்
மீதியை எம்முதலாளி மார்தான் தொடருகிறார்
ஆளுக்கொரு கோயில்! அரசின் கீழும்
ஆலின் கீழும் இருந்த வயிரவர் சூலங்கள்
கோயில் கொண்டது இவர் கொள்கையால் அன்றோ.
அய்யனார் கோயில் வயிரவா கோயில்
அம்மன் கோயில் பிள்ளையார் கோயில்
எத்தனை எத்தனை எண்ணில் அடங்கா
கறையான் புற்றுகள் கட்டினாற்போல
முழத்துக் கொருகோயில் முன்னின்று கட்டினார்.
சுரண்டிய பணத்தில் பொதுப் பணிக்கென்று
செப்புச் சல்லியும் செலவிட்டறியார்
நானொரு கோயில் முதலாளி என்று
நாலு பேர் மத்தியில் 'நானை' எழுப்பும்
பிஸினெஸில் விழுந்த கறுப்பை மறைக்கவும்
பிராயச் சித்தம் தேடும் வகையிலும்
கோயில் கட்டினார் கோயில் கட்டினார்
கட்டிய கோயிலில் என்னதான் கண்டார்?
எண் சாண் உடம்பிற்கு ஒர் இருப்பிடம் தேடி
பஞ்சாயத்தில் பதவி கொண்டமர்ந்ததும்.
கோயில் காசை றோளில் விட்டதும்
குருக்கள் மாரை பெருச்சாளியாக்கியதும்
குறைகளை மறைக்கக் கோபுரம் எழுப்பி
கோபுரத்திலே பாதியை விழுங்கும்
கும்பிடுகள்ளரைக் கொண்டு திரிந்ததும்
கூஜா காவிகளுக்குத் 'தம்பிடி' ஈந்ததும்-
இப்படியான
சரியை கிரியைகள் சகலதும் கண்டார்.
திருவிழாக்களுக்கும் ஏதும் பஞ்சமா என்ன?
முதலாளிமார் தம்
சொந்தப் பெருமைத் தொந்திகள் நிமிர்த்த
வந்து போகும் வருஷங்கள் தோறும்.
முதலாந் திருவிழா உபயகாரரோ
மல்லாகத்துச் சிகரம் அமைத்தால்
இரண்டாந் திருவிழா உபயகாரரோ
அளவெட்டிச் சிகரம் அமையாது உறங்கார்.
சின்னமேள, நாட்டியக் கச்சேரி என்ன குறைவோ?
ஒருநாள்
'கன்னிகா' குழு வந்து கலக்கியெறிய
மறுநாள்
மல்லிகா குழுவோ புழுதி கிளப்பும்.
காவடி, கரகம், ஏறுபடி யோடு
சீனடி சிலம்படி மோசடி எல்லாம்
ஆலய முன்றலின் அரங்கெழுந்து ஆடும்.
கண்கொள்ளா இக் காட்சிகள் கண்டு
இறைவனின் இஷ்ட சித்தி பெற்றுய்ய
சாரிசாரியாய் சனம்வந்து கூடும்.
கூத்தாட்டு அவைக் குழாம் கலைந்தேகி
தாமஸ குணத்தில் அழுந்திக் குறட்டை இழுக்கும்.
1. ஸ்தல வரலாறும் மகிமையும்
கோயில் கும்பிடுவதில் எங்கள் சைவத் தமிழரை
குறை சொல்ல ஏலாது நீறிட்ட நெற்றியில்
சந்தனப் பொட்டும்,
மிஞ்சின சந்தனம் மேனிமுழுவதும்
பூசின கோலமும் சரிகைச் சால்வை யடு
நீளவே தொங்கும் தங்கச் சங்கிலியும்
ஆடவரும் அழகோ அப்பப்பா இப்புவியில்
தேவரும் கால் பதியார் திகைத்து.
காசி கதிர்காமம் சேதிசிதம்பரமும்
திருப்பதியும் சென்று திருப்பாற் கடல்
கடைந்து வரு வரன்றே.
கோயில் கட்டுவதிலும் என்ன குறைவோ?
ஆதித் தமிழ் மன்னர் மூட்டுதிருப் பணியின்
மீதியை எம்முதலாளி மார்தான் தொடருகிறார்
ஆளுக்கொரு கோயில்! அரசின் கீழும்
ஆலின் கீழும் இருந்த வயிரவர் சூலங்கள்
கோயில் கொண்டது இவர் கொள்கையால் அன்றோ.
அய்யனார் கோயில் வயிரவா கோயில்
அம்மன் கோயில் பிள்ளையார் கோயில்
எத்தனை எத்தனை எண்ணில் அடங்கா
கறையான் புற்றுகள் கட்டினாற்போல
முழத்துக் கொருகோயில் முன்னின்று கட்டினார்.
சுரண்டிய பணத்தில் பொதுப் பணிக்கென்று
செப்புச் சல்லியும் செலவிட்டறியார்
நானொரு கோயில் முதலாளி என்று
நாலு பேர் மத்தியில் 'நானை' எழுப்பும்
பிஸினெஸில் விழுந்த கறுப்பை மறைக்கவும்
பிராயச் சித்தம் தேடும் வகையிலும்
கோயில் கட்டினார் கோயில் கட்டினார்
கட்டிய கோயிலில் என்னதான் கண்டார்?
எண் சாண் உடம்பிற்கு ஒர் இருப்பிடம் தேடி
பஞ்சாயத்தில் பதவி கொண்டமர்ந்ததும்.
கோயில் காசை றோளில் விட்டதும்
குருக்கள் மாரை பெருச்சாளியாக்கியதும்
குறைகளை மறைக்கக் கோபுரம் எழுப்பி
கோபுரத்திலே பாதியை விழுங்கும்
கும்பிடுகள்ளரைக் கொண்டு திரிந்ததும்
கூஜா காவிகளுக்குத் 'தம்பிடி' ஈந்ததும்-
இப்படியான
சரியை கிரியைகள் சகலதும் கண்டார்.
திருவிழாக்களுக்கும் ஏதும் பஞ்சமா என்ன?
முதலாளிமார் தம்
சொந்தப் பெருமைத் தொந்திகள் நிமிர்த்த
வந்து போகும் வருஷங்கள் தோறும்.
முதலாந் திருவிழா உபயகாரரோ
மல்லாகத்துச் சிகரம் அமைத்தால்
இரண்டாந் திருவிழா உபயகாரரோ
அளவெட்டிச் சிகரம் அமையாது உறங்கார்.
சின்னமேள, நாட்டியக் கச்சேரி என்ன குறைவோ?
ஒருநாள்
'கன்னிகா' குழு வந்து கலக்கியெறிய
மறுநாள்
மல்லிகா குழுவோ புழுதி கிளப்பும்.
காவடி, கரகம், ஏறுபடி யோடு
சீனடி சிலம்படி மோசடி எல்லாம்
ஆலய முன்றலின் அரங்கெழுந்து ஆடும்.
கண்கொள்ளா இக் காட்சிகள் கண்டு
இறைவனின் இஷ்ட சித்தி பெற்றுய்ய
சாரிசாரியாய் சனம்வந்து கூடும்.
கூத்தாட்டு அவைக் குழாம் கலைந்தேகி
தாமஸ குணத்தில் அழுந்திக் குறட்டை இழுக்கும்.
2. ஸ்தலக் குழப்பமும்
சத்தியாக்கிரகமும்
இப்படியாக நம் வேளாண் மரபுச்
சைவத் தமிழ்ப் பெருங்குடி மக்கள்
ஆலய வழிபாடு செய்து வருகையில்
ஆலயச் சுவர்களின் அடைப்புக்கு வெளியில்
ஊர்மனையெங்கும் ஒலித்தன குரல்கள்
உரிமை கோரும் விழித்தோர் குரல்கள்!
"உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்"
உரிமை இழந்தோர் உரத்துக் கேட்டார்
எழுந்த குரல்களில் ஏறிய ஞானம்
ஆணவச் சுவர்களில் அறைந்து ஒலித்தன.
மாவிட்டபுரத்துக் கந்தன் கோயில்
பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
வல்லிபுரத்து ஆழ்வார் கோயில்
எங்கும் உரிமைக் குரல்கள் கேட்டன
"உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்"
இழிசனர் என்று இவரால் நசுக்கப்பட்டோர்
வழிபாட்டுரிமை கோரி எழுந்தார்.
"எங்களையுந் தண்ணீர் அள்ளவிடுங்கள்"
"பொதுக் கிணறுகளில் சமத்துவம் வேண்டும்"
சின்னஞ் சிறிய தீவுகளில் கூட
உரிமைக் குரல்கள் உரத்தே கேட்டன.
உரிமைக்குரல்கள் கேட்கக் கேட்க
உறங்கிக் கிடந்த சைவ மரபு
சடுதியாய் விழித்தது சன்னதம் கொண்டது
சன்னதம் கொண்டதும் 'சைவாசாரம்'
தன்னிலை மறந்து ஆடத் தொடங்கிற்று.
சின்னமேளக் 'கூத்தை' மறந்தது
உண்டியல் காசில் பிழைத்ததை மறந்தது
வேஷம் விளம்பரம் யாவும் மறந்தது
வேதாகமங்களைச் சான்றுக் கிழுத்து
ஆசார விதிகளை அலசிக் காட்டிற்று.
'பேசாமல் போனால் சாமியும் பொறுக்கும்
நாமும் பொறுப்போம் பிறகு மெல்ல
காலம் செல்லப் பார்க்கலாம்' என்று
பூசி மெழுகியும் பார்த்தது
ஆயினும்
போராட்டமோ மேலும் தொடர்ந்தது.
ஒடுக்கப் பட்டோர், முற்போக் காளர்
ஒன்று திரண்டார்
கோயில்கள் முன்பும் கிணறுகள் முன்பும்
உரிமை கோரி உட்கார்ந்தார்கள்.
சத்தியாக்கிரகமும்
இப்படியாக நம் வேளாண் மரபுச்
சைவத் தமிழ்ப் பெருங்குடி மக்கள்
ஆலய வழிபாடு செய்து வருகையில்
ஆலயச் சுவர்களின் அடைப்புக்கு வெளியில்
ஊர்மனையெங்கும் ஒலித்தன குரல்கள்
உரிமை கோரும் விழித்தோர் குரல்கள்!
"உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்"
உரிமை இழந்தோர் உரத்துக் கேட்டார்
எழுந்த குரல்களில் ஏறிய ஞானம்
ஆணவச் சுவர்களில் அறைந்து ஒலித்தன.
மாவிட்டபுரத்துக் கந்தன் கோயில்
பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
வல்லிபுரத்து ஆழ்வார் கோயில்
எங்கும் உரிமைக் குரல்கள் கேட்டன
"உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்"
இழிசனர் என்று இவரால் நசுக்கப்பட்டோர்
வழிபாட்டுரிமை கோரி எழுந்தார்.
"எங்களையுந் தண்ணீர் அள்ளவிடுங்கள்"
"பொதுக் கிணறுகளில் சமத்துவம் வேண்டும்"
சின்னஞ் சிறிய தீவுகளில் கூட
உரிமைக் குரல்கள் உரத்தே கேட்டன.
உரிமைக்குரல்கள் கேட்கக் கேட்க
உறங்கிக் கிடந்த சைவ மரபு
சடுதியாய் விழித்தது சன்னதம் கொண்டது
சன்னதம் கொண்டதும் 'சைவாசாரம்'
தன்னிலை மறந்து ஆடத் தொடங்கிற்று.
சின்னமேளக் 'கூத்தை' மறந்தது
உண்டியல் காசில் பிழைத்ததை மறந்தது
வேஷம் விளம்பரம் யாவும் மறந்தது
வேதாகமங்களைச் சான்றுக் கிழுத்து
ஆசார விதிகளை அலசிக் காட்டிற்று.
'பேசாமல் போனால் சாமியும் பொறுக்கும்
நாமும் பொறுப்போம் பிறகு மெல்ல
காலம் செல்லப் பார்க்கலாம்' என்று
பூசி மெழுகியும் பார்த்தது
ஆயினும்
போராட்டமோ மேலும் தொடர்ந்தது.
ஒடுக்கப் பட்டோர், முற்போக் காளர்
ஒன்று திரண்டார்
கோயில்கள் முன்பும் கிணறுகள் முன்பும்
உரிமை கோரி உட்கார்ந்தார்கள்.
சத்யாக்கிரகம்.
சத்யாக் கிரகம் என்றதும் உடனே
சைவாசாரம் கொண்டதே கோபம்
பஞ்சாயத்தும் பரிபாலன சபையும்
ஒன்றாய்க்கூடி சமிக்ஞைகள் செய்தன.
முதலாளிமார்கள், முழுசாய் விழுங்கும்
குருக்கள் மார்கள், கொண்டைக்காரர்
குறுகல் புத்தி ஆசார சீலர்கள்
கொடுக்கை வரிந்து பணியில் இறங்கினார்.
சன்னதம் கொண்ட அன்புச் சைவம்
சண்டித் தனங்கள் செய்ய எழுந்தது.
கோயிற் செலவிலே 'தீர்த்தம்' வார்க்கவும்
குடித்த வெறியரோ துள்ளி எழும்பினார்
கொண்டைக்காரர் தடி கொண்டு ஆடினார்
குருக்கள்மார் யாக அடுப்பை ஊதினார்.
விரதகாரப் பெண்டுகள் எல்லாம்
சிரசுகள் ஆட்டிச் சிலுப்பத் தொடங்கினார்
ஆசார சீலரோ இவற்றுக் கெல்லாம்
ஆதாரமாய் நின்று தேவாரம் பாடினார்
கோயிலை அடைத்தும் கிணறுகள் சுற்றி
வேலிகள் போட்டும் காத்தனர் சிலபேர்
முதலாளிமாரோ மேலிடம் வரையும்
முழுமூச்சோடு 'காரியம்' பார்த்தனர்
காக்கிச் சட்டைக்காரர் வந்தார்
தாழ்த்தப்பட்டோர், முற்போக்காளர்
தாக்கப்பட்டார் அமைதியோடிருந்து
உரிமை கேட்டோர் உதைக்கப்பட்டார்
சிறையினுள்ளும் தள்ளப் பட்டார்.
இறைவனின் பேரால் இத்தனை நடந்தும்
சைவத்தின் பேரால் சண்டித்தனங்கள்,
சதிகள் நடந்தும் எங்கள் சித்தாந்தச்
செம்மல்கள், மணிகள் எல்லாம்
அன்பே சிவம் என்று அமர்ந்தே இருந்தார்;
நந்திகளாகவே குந்தியிருந்தார்.
விழாக்களில் பேசிய களைப்பு மேலீட்டால்
விழுந்து படுத்த நம் தமிழ்த் தலைவர்களோ
வீட்டை இறுக்கிப் பூட்டியே படுத்தார்
சத்தியம் கதவிலே தட்டிக் கேட்கவும்
புரண்டும் படுத்திலார்! பிரச்சினையிலிருந்து
தப்புதற்காகவோ
'தமிழ் தமிழ்' என்று இவர் பிதற்றுவார் ஏதோ
கனவிலுந் தமிழைக் காப்பவர் போல.
கனவுலகத்தில் எவர்தான் உறங்கினும்
சத்தியம் மட்டும் உறங்குவதில்லை.
விழித்தபடியே சலியாதியங்கும்
விழிப்பு சத்தியம் இயக்கம் சத்தியம்.
சத்திய இயக்கச் சுழற்சியின் போக்கே
சமூக வரலாறு.
வரலாற்று வளர்ச்சியில் வந்ததோர் சட்டம்
சட்டத்துக்கான திருத்தங்களும் வந்தன.
சட்டத்தையும் ஒருகை பார்க்கிறேன் என்று
சைவாசாரத்தை கிறீஸ்தவர் முன்னே
பிறிவிக் கவுன்சிலில் நிரூபிக்கப் போனவரின்
'கயிறி'ன் புரிகளும் அறுபடலானது.
சாமியைத் தூக்கி உள்ளே அடைத்தும்
சாதியைத் தூக்கித் தலையிலே வைத்தும்
சன்னதம் ஆடியவர் விறைத்துப் போக
சத்தியம் கதவை அடித்துத் திறந்தது.
தேனீர்க் கடைகளும் சில திறந்து கொண்டன.
சிற்றூர் ஒன்றில்
தண்ணீர்க் கிணறும் சகலர்க்கும் திறந்தது.
இவ்வாறாக
ஊருக்கொவ்வொரு உதாரணம் விளைந்தது.
ஆயினும்
சாதி இன்னும் ஒழிந்த பாடில்லை
நீதி முற்றாய் நிமிரவே இல்லை.
சட்டத்தையும் மீறிச் சுழித்து
சாதித் தடிப்பு வாழவே செய்யுது
சட்டத்தைக் காக்கும் அமைப்புகளே
முட்டுக்கட்டைப் பிற்போக்காயின.
அமைப்பின் கட்டுகள் அறுபடாதவரை
சட்டம் வெறும் சடலமே
அதனால்
அமைப்பை மாற்றி அமைத்தல் அவசியம்.
சத்யாக் கிரகம் என்றதும் உடனே
சைவாசாரம் கொண்டதே கோபம்
பஞ்சாயத்தும் பரிபாலன சபையும்
ஒன்றாய்க்கூடி சமிக்ஞைகள் செய்தன.
முதலாளிமார்கள், முழுசாய் விழுங்கும்
குருக்கள் மார்கள், கொண்டைக்காரர்
குறுகல் புத்தி ஆசார சீலர்கள்
கொடுக்கை வரிந்து பணியில் இறங்கினார்.
சன்னதம் கொண்ட அன்புச் சைவம்
சண்டித் தனங்கள் செய்ய எழுந்தது.
கோயிற் செலவிலே 'தீர்த்தம்' வார்க்கவும்
குடித்த வெறியரோ துள்ளி எழும்பினார்
கொண்டைக்காரர் தடி கொண்டு ஆடினார்
குருக்கள்மார் யாக அடுப்பை ஊதினார்.
விரதகாரப் பெண்டுகள் எல்லாம்
சிரசுகள் ஆட்டிச் சிலுப்பத் தொடங்கினார்
ஆசார சீலரோ இவற்றுக் கெல்லாம்
ஆதாரமாய் நின்று தேவாரம் பாடினார்
கோயிலை அடைத்தும் கிணறுகள் சுற்றி
வேலிகள் போட்டும் காத்தனர் சிலபேர்
முதலாளிமாரோ மேலிடம் வரையும்
முழுமூச்சோடு 'காரியம்' பார்த்தனர்
காக்கிச் சட்டைக்காரர் வந்தார்
தாழ்த்தப்பட்டோர், முற்போக்காளர்
தாக்கப்பட்டார் அமைதியோடிருந்து
உரிமை கேட்டோர் உதைக்கப்பட்டார்
சிறையினுள்ளும் தள்ளப் பட்டார்.
இறைவனின் பேரால் இத்தனை நடந்தும்
சைவத்தின் பேரால் சண்டித்தனங்கள்,
சதிகள் நடந்தும் எங்கள் சித்தாந்தச்
செம்மல்கள், மணிகள் எல்லாம்
அன்பே சிவம் என்று அமர்ந்தே இருந்தார்;
நந்திகளாகவே குந்தியிருந்தார்.
விழாக்களில் பேசிய களைப்பு மேலீட்டால்
விழுந்து படுத்த நம் தமிழ்த் தலைவர்களோ
வீட்டை இறுக்கிப் பூட்டியே படுத்தார்
சத்தியம் கதவிலே தட்டிக் கேட்கவும்
புரண்டும் படுத்திலார்! பிரச்சினையிலிருந்து
தப்புதற்காகவோ
'தமிழ் தமிழ்' என்று இவர் பிதற்றுவார் ஏதோ
கனவிலுந் தமிழைக் காப்பவர் போல.
கனவுலகத்தில் எவர்தான் உறங்கினும்
சத்தியம் மட்டும் உறங்குவதில்லை.
விழித்தபடியே சலியாதியங்கும்
விழிப்பு சத்தியம் இயக்கம் சத்தியம்.
சத்திய இயக்கச் சுழற்சியின் போக்கே
சமூக வரலாறு.
வரலாற்று வளர்ச்சியில் வந்ததோர் சட்டம்
சட்டத்துக்கான திருத்தங்களும் வந்தன.
சட்டத்தையும் ஒருகை பார்க்கிறேன் என்று
சைவாசாரத்தை கிறீஸ்தவர் முன்னே
பிறிவிக் கவுன்சிலில் நிரூபிக்கப் போனவரின்
'கயிறி'ன் புரிகளும் அறுபடலானது.
சாமியைத் தூக்கி உள்ளே அடைத்தும்
சாதியைத் தூக்கித் தலையிலே வைத்தும்
சன்னதம் ஆடியவர் விறைத்துப் போக
சத்தியம் கதவை அடித்துத் திறந்தது.
தேனீர்க் கடைகளும் சில திறந்து கொண்டன.
சிற்றூர் ஒன்றில்
தண்ணீர்க் கிணறும் சகலர்க்கும் திறந்தது.
இவ்வாறாக
ஊருக்கொவ்வொரு உதாரணம் விளைந்தது.
ஆயினும்
சாதி இன்னும் ஒழிந்த பாடில்லை
நீதி முற்றாய் நிமிரவே இல்லை.
சட்டத்தையும் மீறிச் சுழித்து
சாதித் தடிப்பு வாழவே செய்யுது
சட்டத்தைக் காக்கும் அமைப்புகளே
முட்டுக்கட்டைப் பிற்போக்காயின.
அமைப்பின் கட்டுகள் அறுபடாதவரை
சட்டம் வெறும் சடலமே
அதனால்
அமைப்பை மாற்றி அமைத்தல் அவசியம்.
3. ஸ்தல மாற்றம்
அமைப்பின் மாற்றம் என்பது
புறத்தை மட்டும் கருதுவதன்று
சத்தியவிரோதமாய்
சாதிகள் ஆயிரம் அகத்திலே உள்ளன.
அகத்தை ஆளும் அறியாமை அமைப்பு
அமைப்பைக் காக்கும் முக்குணக் கூட்டு
கூட்டில் விளைந்த சாதிகள்.
அவற்றையும் தகர்த்தல் வேண்டும்
அகத்தை நீக்கிய புறம்
புறத்தை நீக்கிய அகம்
இரண்டும் அறியாமையின் அடுத்தபக்கம்
அகமும் புறமும் ஒருங்கே மாற்றம்
அதுவே ஞானம்.
அகத்தில் சாதி மனோபாவம் வீங்கியவன்
புறத்தில் மாற்றம் விளைப்பன் என்பது பொய்.
அதனால் இன்று
அகப்பிரவேசம் அவசியமாகும்.
சாதிகள் தேங்கிய காயங்களாக
கோயில்கள் இருக்கையில்
ஆலயங்களோடு ஆலயப் பிரவேசமும்
அவசியமற்றே போவதுண்மையே.
காயங்கள் இனிமேல் காய்ந்து உதிரும்
அகமும் உடலும் ஆலயம் ஆகும்
வாழும் மனிதர் தெய்வங்கள் ஆவர்
வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகும்.
வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகி
வாழும் மனிதர் தெய்வங்களாக
சாதி வர்க்கங்கள் இவை தாண்டப்படுமே
சாதி வர்க்கங்கள் தாண்டுத லென்பது
சத்தியத்தோடு ஒன்றுதல்தானே.
சமூகம் முழுமையும்
சத்தியத்தோடு ஒன்றுதல் நிகழ
சத்திய ஞானம் பொது உடைமை ஆகும்;
பொருளாதாரப் பொதுவுடமைப் போக்கின்
பூரணத் தோற்றமும் அங்கே பிறக்கும்.
......
அமைப்பின் மாற்றம் என்பது
புறத்தை மட்டும் கருதுவதன்று
சத்தியவிரோதமாய்
சாதிகள் ஆயிரம் அகத்திலே உள்ளன.
அகத்தை ஆளும் அறியாமை அமைப்பு
அமைப்பைக் காக்கும் முக்குணக் கூட்டு
கூட்டில் விளைந்த சாதிகள்.
அவற்றையும் தகர்த்தல் வேண்டும்
அகத்தை நீக்கிய புறம்
புறத்தை நீக்கிய அகம்
இரண்டும் அறியாமையின் அடுத்தபக்கம்
அகமும் புறமும் ஒருங்கே மாற்றம்
அதுவே ஞானம்.
அகத்தில் சாதி மனோபாவம் வீங்கியவன்
புறத்தில் மாற்றம் விளைப்பன் என்பது பொய்.
அதனால் இன்று
அகப்பிரவேசம் அவசியமாகும்.
சாதிகள் தேங்கிய காயங்களாக
கோயில்கள் இருக்கையில்
ஆலயங்களோடு ஆலயப் பிரவேசமும்
அவசியமற்றே போவதுண்மையே.
காயங்கள் இனிமேல் காய்ந்து உதிரும்
அகமும் உடலும் ஆலயம் ஆகும்
வாழும் மனிதர் தெய்வங்கள் ஆவர்
வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகும்.
வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகி
வாழும் மனிதர் தெய்வங்களாக
சாதி வர்க்கங்கள் இவை தாண்டப்படுமே
சாதி வர்க்கங்கள் தாண்டுத லென்பது
சத்தியத்தோடு ஒன்றுதல்தானே.
சமூகம் முழுமையும்
சத்தியத்தோடு ஒன்றுதல் நிகழ
சத்திய ஞானம் பொது உடைமை ஆகும்;
பொருளாதாரப் பொதுவுடமைப் போக்கின்
பூரணத் தோற்றமும் அங்கே பிறக்கும்.
......
31. மீண்டும் உயிர்த்தல்
கல்லறைகள் ஒரு நாட் பெயரும்
அன்று
புதைகுழி நீத்து எம் உணர்வுகள்
உயிர்பெறும்.
சமாதி கட்டியாயிற்று என
ஒருகணம் சந்தோஷத்தோடு
சுகபாணம் அருந்திக் களித்திருப்பீர்
சிறு பொழுதே.
அதற்குள் மீண்டும்
உயிர் பெற்றெழுவோம்.
எதிர் பார்த்திருக்க மாட்டீர்
எம் உயிர்த்தெழலை
உம் திகைப்புகள்
கல்லறையாய் மாற.
முன்னொருகால்
சிலுவை தாங்கிய நாயகனின்
சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை
இதோ மீண்டும் அவன்
உயிர்ச் சுவடுகளின் அரவம்
காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.
சிலுவையின் கீழ் அவன்
சிந்திய குருதித் துளிகள்
என்றுமே காய்ந்திலது
இதோ
இன்னும் பச்சையாக
இன்றைக்கும் சத்தியமாய்.
சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும்
உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.
முள் முடி சூட்டியவர்
சவுக்கால் அடித்தவர்கள்
ஆணி அறைந்தவர்கள்
இன்னும் உள்ளார்;
இன்னும் உள்ளார்.
ஆட்சி பீடங்களில்
அதிகாரத்தோடு உள்ளார்.
அவர்களின் கொடுமையில்
சிலுவை தாங்குவோர்
சிந்தும் குருதித் துளிகள்
இன்னும் இந்தப்
பூமியை நனைக்கிறது.
ஒடுக்கு முறைக்குள்ளானோரின்
ஒவ்வொரு கல்லறையிலும்
அவர்கள் நினைப்பது போல்
உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது
புதிய உருவெடுக்கும்.
கல்லறைகள் ஒரு நாட் பெயரும்
அன்று
புதைகுழி நீத்து எம் உணர்வுகள்
உயிர்பெறும்.
சமாதி கட்டியாயிற்று என
ஒருகணம் சந்தோஷத்தோடு
சுகபாணம் அருந்திக் களித்திருப்பீர்
சிறு பொழுதே.
அதற்குள் மீண்டும்
உயிர் பெற்றெழுவோம்.
எதிர் பார்த்திருக்க மாட்டீர்
எம் உயிர்த்தெழலை
உம் திகைப்புகள்
கல்லறையாய் மாற.
முன்னொருகால்
சிலுவை தாங்கிய நாயகனின்
சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை
இதோ மீண்டும் அவன்
உயிர்ச் சுவடுகளின் அரவம்
காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.
சிலுவையின் கீழ் அவன்
சிந்திய குருதித் துளிகள்
என்றுமே காய்ந்திலது
இதோ
இன்னும் பச்சையாக
இன்றைக்கும் சத்தியமாய்.
சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும்
உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.
முள் முடி சூட்டியவர்
சவுக்கால் அடித்தவர்கள்
ஆணி அறைந்தவர்கள்
இன்னும் உள்ளார்;
இன்னும் உள்ளார்.
ஆட்சி பீடங்களில்
அதிகாரத்தோடு உள்ளார்.
அவர்களின் கொடுமையில்
சிலுவை தாங்குவோர்
சிந்தும் குருதித் துளிகள்
இன்னும் இந்தப்
பூமியை நனைக்கிறது.
ஒடுக்கு முறைக்குள்ளானோரின்
ஒவ்வொரு கல்லறையிலும்
அவர்கள் நினைப்பது போல்
உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது
புதிய உருவெடுக்கும்.
2
சிலுவை ஏற்றுவோர்க்கும்
சிலுவை சுமப்பவர்க்கும்
இடையிலுள்ள முரண்பாடு
இன்று நேற்று எழுந்ததன்று.
மோதி மோதி முரண்பட்டுப் புதிது
குதிர்வது உண்மையே.
ஞானம்-அஞ்ஞானம்
தர்மம்-அதர்மம் என
ஓதிற்றே வேதம் அன்று,
அதுவேதான்.
அந்த வரலாற்றின் ஓட்டம்
என்றும் உறைந்து போவதில்லை
சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும்
குருதித் துளியிலும் உறைந்து படாமல்
உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு.
ஒவ்வொரு புதுத்தளமாய் அது
களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.
இன்றைக்கும் அதன்
இயல்பு உந்தல் நிகழ்வேதான்
உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப்
புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள்
பொடி உதிர இதோ
உண்மை உயிர்த் தெழுகிறது.
அஞ்ஞான இருட் பாறை
அடைப்புக்குள் அதிர்வுறவரும்
உண்மையின் வெளிப்பாடு சிலவேளை
அசிங்கமாய்ப் படலாம்,
அருவருப்பாய்த் தெரியலாம்.
அவையெல்லாம் பொய்மை சார்ந்த
பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.
தூண் பிளந் தெழுந்த
நரசிங்க அவதாரத்தின்
பிறாண்டல்களால் பிளவுற்று
உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி
எழுதப்படுகிறது.
அதன் இன்றைய சாட்சியாய்
இங்கும் நிகழ்வன
புத்தெழுச்சியின் கோலமே!
.....
சிலுவை ஏற்றுவோர்க்கும்
சிலுவை சுமப்பவர்க்கும்
இடையிலுள்ள முரண்பாடு
இன்று நேற்று எழுந்ததன்று.
மோதி மோதி முரண்பட்டுப் புதிது
குதிர்வது உண்மையே.
ஞானம்-அஞ்ஞானம்
தர்மம்-அதர்மம் என
ஓதிற்றே வேதம் அன்று,
அதுவேதான்.
அந்த வரலாற்றின் ஓட்டம்
என்றும் உறைந்து போவதில்லை
சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும்
குருதித் துளியிலும் உறைந்து படாமல்
உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு.
ஒவ்வொரு புதுத்தளமாய் அது
களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.
இன்றைக்கும் அதன்
இயல்பு உந்தல் நிகழ்வேதான்
உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப்
புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள்
பொடி உதிர இதோ
உண்மை உயிர்த் தெழுகிறது.
அஞ்ஞான இருட் பாறை
அடைப்புக்குள் அதிர்வுறவரும்
உண்மையின் வெளிப்பாடு சிலவேளை
அசிங்கமாய்ப் படலாம்,
அருவருப்பாய்த் தெரியலாம்.
அவையெல்லாம் பொய்மை சார்ந்த
பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.
தூண் பிளந் தெழுந்த
நரசிங்க அவதாரத்தின்
பிறாண்டல்களால் பிளவுற்று
உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி
எழுதப்படுகிறது.
அதன் இன்றைய சாட்சியாய்
இங்கும் நிகழ்வன
புத்தெழுச்சியின் கோலமே!
.....
32. விடுதலை ஒன்றே உடைமையாய்....
விடுதலை
ஆத்மார்த்தமானது.
என்னிடமிருந்து யாரும் அதைப் பறித்துவிட முடியாது,
எனக்குள்ள ஒரே ஒரு உடைமை
விடுதலையுடைமையே.
கைவிலங்கு, சிறைக்காவல், முள்வேலி
சித்திரவதைகள், தூக்குக்கயிறு இவையெல்லாம்
விடுதலையைச் சிறையிடா, மாறாக
சிறையுண்டிருந்த என் குறுகிய உணர்வு வட்டத்தினின்றும்
என்னை விடுவித்து
விடுதலையின் ஸ்பரிசித்தலை நோக்கி விரைவுபடுத்தும்;
விடுதலை நாட்டத்தை வேகப்படுத்தும்.
என்னகவிடுதலையை விபரிக்க இயலாது இதுகாறும்
தூங்கிக் கிடந்த மாயைத் தளங்கள்
தூங்கும் அப்பிரதேசங்களில்
அடக்குமுறை ஆணவக்காரரின் படைகளின் ஊடுருவலால்
விடுதலை உணர்வுகள் விழிப்பெய்துகின்றன.
ஒடுக்குமுறையின் உக்கிரகத்தால்
விழிப்பெய்தல் நிகழ
விடுதலை வீர்யம் விகசித்து எழுகிறது
ஆன்ம வீர்யம்.
அதன் எழுச்சியில்,
வேலி கட்டி நின்ற
சிறுவட்டம் தகர்வுற
விடுதலை உணர்வுப் பெருந்தளம் விரிகிறது.
இப்போது
நான் போருக்கு எழுகிறேன்;
என் விடுதலைப் பிரதேசங்களின் மீதான ஆக்கிரமிப்புக்கு
எதிராக.
ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம்
ஆணவத்திற்கு எதிரான போராட்டம்
அதர்மத்திற்கு எதிரான போராட்டம்
ஆரம்பமாகி வளர வளர
விடுதலையின் ஸ்பரிசம் சித்திக்கிறது.
விடுதலை ஒன்றே இலக்காயிருக்க
சதா அகமும் புறமும் போராடுதல் ஒன்றே
என் தொழில்.
ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் அதேதருணம்
ஒருங்கே நிகழும் தியாகம், சுயநலமறுப்பு என்பவற்றின்
விளைவான அகச் சுத்திகரிப்பு.
சுத்திகரிக்கப்பட்ட இப் பெருந்தள உணர்வுநிலையில்
பொருளார்ந்த சுமை இல்லை
போலி மதிப்பீடுகள் இல்லை.
சிறுவட்டச் சேமிப்புகள் இல்லை.
சாதி, சமயப் பேத வீக்கங்கள் இல்லை.
எனக்கு நானே பூட்டிக் கொண்ட
இவ்விலங்குகளை உதறி எழுந்து
விடுதலைப் பிராந்தியத்துள் இதோ நான்
காலடி வைக்கிறேன்.
சுமைகளில்லாதவன் வழிப்பயணம் மிக இலகுவானது.
இனிமை நிறைந்தது.
மன வீக்கங்கள் கழன்று போக
விடுதலைத் தென்றலை நுகர்ந்து
மனசு நிரம்பி வழிய
விடுதலை ஒன்றே உடைமையாய்....
விடுதலை
ஆத்மார்த்தமானது.
என்னிடமிருந்து யாரும் அதைப் பறித்துவிட முடியாது,
எனக்குள்ள ஒரே ஒரு உடைமை
விடுதலையுடைமையே.
கைவிலங்கு, சிறைக்காவல், முள்வேலி
சித்திரவதைகள், தூக்குக்கயிறு இவையெல்லாம்
விடுதலையைச் சிறையிடா, மாறாக
சிறையுண்டிருந்த என் குறுகிய உணர்வு வட்டத்தினின்றும்
என்னை விடுவித்து
விடுதலையின் ஸ்பரிசித்தலை நோக்கி விரைவுபடுத்தும்;
விடுதலை நாட்டத்தை வேகப்படுத்தும்.
என்னகவிடுதலையை விபரிக்க இயலாது இதுகாறும்
தூங்கிக் கிடந்த மாயைத் தளங்கள்
தூங்கும் அப்பிரதேசங்களில்
அடக்குமுறை ஆணவக்காரரின் படைகளின் ஊடுருவலால்
விடுதலை உணர்வுகள் விழிப்பெய்துகின்றன.
ஒடுக்குமுறையின் உக்கிரகத்தால்
விழிப்பெய்தல் நிகழ
விடுதலை வீர்யம் விகசித்து எழுகிறது
ஆன்ம வீர்யம்.
அதன் எழுச்சியில்,
வேலி கட்டி நின்ற
சிறுவட்டம் தகர்வுற
விடுதலை உணர்வுப் பெருந்தளம் விரிகிறது.
இப்போது
நான் போருக்கு எழுகிறேன்;
என் விடுதலைப் பிரதேசங்களின் மீதான ஆக்கிரமிப்புக்கு
எதிராக.
ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம்
ஆணவத்திற்கு எதிரான போராட்டம்
அதர்மத்திற்கு எதிரான போராட்டம்
ஆரம்பமாகி வளர வளர
விடுதலையின் ஸ்பரிசம் சித்திக்கிறது.
விடுதலை ஒன்றே இலக்காயிருக்க
சதா அகமும் புறமும் போராடுதல் ஒன்றே
என் தொழில்.
ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் அதேதருணம்
ஒருங்கே நிகழும் தியாகம், சுயநலமறுப்பு என்பவற்றின்
விளைவான அகச் சுத்திகரிப்பு.
சுத்திகரிக்கப்பட்ட இப் பெருந்தள உணர்வுநிலையில்
பொருளார்ந்த சுமை இல்லை
போலி மதிப்பீடுகள் இல்லை.
சிறுவட்டச் சேமிப்புகள் இல்லை.
சாதி, சமயப் பேத வீக்கங்கள் இல்லை.
எனக்கு நானே பூட்டிக் கொண்ட
இவ்விலங்குகளை உதறி எழுந்து
விடுதலைப் பிராந்தியத்துள் இதோ நான்
காலடி வைக்கிறேன்.
சுமைகளில்லாதவன் வழிப்பயணம் மிக இலகுவானது.
இனிமை நிறைந்தது.
மன வீக்கங்கள் கழன்று போக
விடுதலைத் தென்றலை நுகர்ந்து
மனசு நிரம்பி வழிய
விடுதலை ஒன்றே உடைமையாய்....
* * * முற்றும்* * *
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|