புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 1%
sanji
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீரின் அருமை உணர்வோம்! Poll_c10நீரின் அருமை உணர்வோம்! Poll_m10நீரின் அருமை உணர்வோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரின் அருமை உணர்வோம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 4:55 pm

உலகில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தற்போது எண்ணெய் வளம் பெற்று வருகிற முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்னும் 50 ஆண்டுகளில் நன்னீர் முக்கியத்துவம் பெற்றுவிடுமென அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இயற்கை வளங்கள், மனித வளம், நீடிப்புத் திறனுள்ள பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஆயுத பலம், பூகோள ராஜதந்திரங்கள் ஆகியவற்றுடன் நன்னீர் வளமும் எதிர்கால அரசியலை வடிவமைக்கும் காரணியாக அமையும். தேவையான அளவில் நன்னீரும் உணவும் ஆற்றலும் கிடைக்கிற வரைதான் உலகில் அமைதி நிலவும்.

இயற்கை தன் நீரியல் சுழற்சிச் செயல்பாடுகள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 43 ஆயிரம் பில்லியன் கன மீட்டர் அளவுக்கு நன்னீர் இருப்பைப் புதுப்பிக்கிறது. அதனிடமுள்ள மொத்த நீர் இருப்பு வரையறுக்கப்பட்டு விட்ட மாறிலி. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் உலக ஜனத்தொகை இரட்டிப்பாகியுள்ளது. உலகின் தொழில் துறைகளும் பொருளாதாரமும் அதைவிட வேகமாக வளர்ந்து வருகின்றன. குடிநீர் வழங்கல் எதிர்காலத்தில் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று நீர் வணிகர்கள் நாவில் நீரூறக் காத்திருக்கிறார்கள்.

அறிவியலார் நாளைய நன்னீர்த் தேவைகளை நிறைவு செய்ய புதிய உத்திகளைக் கண்டறிந்து வருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த இகார் செக்ட்ஸர் என்ற நீரியல் நிபுணர் கடலடித் தரையிலிருந்து தற்போது எண்ணெய் எடுப்பதைப் போல நன்னீரையும் எடுக்க முடியும் என்கிறார்.

கடலடித் தரையில் பல இடங்களில் நன்னீர் ஊற்றுகள் பீறிட்டெழுந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிப்படும் நீர் மேலெழுந்து கடலின் மேற்பரப்புக்கு வரக்கூடிய அளவுக்கு அந்த ஊற்றுகளில் அழுத்தமும் விசையும் தென்படுகின்றன.

ரஷ்ய அறிவியல் கழகத்தின் நீர்ப் பிரச்னை ஆய்வகம், உப்பு நீர்க் கடலடித் தரைக்கும் கீழே தூய நீர் தேங்கியுள்ள நீர்த் தேக்கங்களைக் கண்டறிந்துள்ளது. கடற்கரையோர ஆழமற்ற பரப்புகளிலும் அவற்றுக்கப்பாலுள்ள கண்டச் சரிவுகளிலும், ஆழ்கடலின் அடித் தரைகளிலும் துளைகளிட்டு அவர்கள் கடலடி நீர்த் தேக்கங்களை அளவிட்டுள்ளனர். அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில்கூட இத்தகைய நிலத்தடி நீர்த் தேக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைக்கெட்டாத வண்ணம் கடலடித் தரையில் புதைந்துள்ள நன்னீரை வெளிப்படுத்தினால், நன்னீர்ப் பற்றாக்குறையுள்ள பல கடலோரப் பிரதேசங்களுக்குத் தேவையானதை விட அதிகமாகவே நன்னீர் கிடைக்குமென்று இகார் செக்ட்ஸர் உறுதியளிக்கிறார். அவரது ஆய்வுக் குழு உலகு முழுவதிலுமுள்ள நிலத்தடி நீரோட்டம் மூலம் கடலுக்குள் பாயும் மொத்த நன்னீரின் அளவைக் கணக்கிட்டிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாமல் கடலில் கலந்து கொண்டிருக்கிற நிலத்தடி நீரோடைகளின் நீர் அளவைக் கணக்கிடுவது கடினம். அதன் காரணமாகவே உலகின் நன்னீர் இருப்புகளை மதிப்பிடும்போது நிலத்தடி நீர் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

பூமியின் நடு உறையிலிருந்து வெளிப்படும் வாயுக்களில் நிறைய நீராவியும் கலந்துள்ளது. அதுவும் கடல் நீரில் கலக்கிறது. எரிமலைகளிலிருந்தும் வென்னீர் ஊற்றுகளிலிருந்தும் பூமியின் ஆழ்பிளவுகளிலிருந்தும் ஏராளமான நன்னீர் வெளியாகிறது. அவ்வாறு வெளிப்பட்டு கடலில் கலக்கும் நன்னீர் அளவு ஆண்டுக்கு அரை முதல் ஒரு கன கிலோ மீட்டர் வரையிருக்கலாமென்று ரஷ்ய நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். அது ஒரு லட்சம் கோடி லிட்டருக்கு சமம்.

அடுத்து தரைப் பகுதியிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக கடலில் கலந்து கொண்டேயிருக்கிறது. இந்த நீரின் அளவை கணக்கிடவே முடியாது. உலகிலுள்ள மொத்த நீரின் அளவை சரியாக கணக்கிட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஒவ்வோராண்டும் ரஷ்ய ஆய்வர்கள் கடலோரக் கரைகளையும் கரையோரக் கடல்களையும் ஒரே சமயத்தில் ஆய்ந்து 2,400 கன கிலோ மீட்டர் அளவில் நன்னீர் கடற்கரைகளின் ஊடாகக் கசிந்து கடலில் சங்கமித்து விடுவதாக மதிப்பிட்டுள்ளனர்.

வட அமெரிக்கக் கண்டத்தின் கரைகளிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கன கிலோ மீட்டர் அளவுக்கு நன்னீர் கடலுக்குப் போய் விடுகிறது. தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து இவ்வாறு வெளியேறும் நீரின் அளவு சற்றே குறைவு. ஆஸ்திரேலிய கண்டத்தில் அது சுமார் 25 கன கிலோ மீட்டர் அளவிலுள்ளது. பெருங் கண்டங்களிலிருந்து வெளியேறிக் கடலில் பாய்கிற மொத்த நிலத்தடி நீரின் அளவை விட, சிறு தீவுகளிலிருந்து அதிக அளவு நீர் கடலில் கலக்கிறது. அதற்கு அத்தீவுகளின் தட்பவெப்ப நிலையும், அவற்றின் மேடு பள்ளத் தரையமைப்பும் காரணமாகின்றன.

தென் துருவத்தில் சுமார் 24 மில்லியன் கன கிலோ மீட்டர் அளவுக்கு நன்னீர் உறைந்து கிடக்கிறது. அது உலகின் நன்னீர் இருப்பில் 80 முதல் 90 சதவீதம். ஆண்டுதோறும் 1,000 முதல் 1,300 கன கிலோ மீட்டர் வரையிலான அளவுக்கு பனிப் பாறைகள் அன்டார்டிகாவிலிருந்து வெளியேறி கடலில் மிதந்து கரைகின்றன. அவை சுமார் 600 கோடி மக்களுக்கு தேவையான நன்னீரை கடலில் கரைத்து விடுகின்றன.

குறைந்தபட்சமாக பத்துக் கோடி கன மீட்டர் பருமனுள்ள பனிமலையைக் கட்டி இழுத்து வந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோர நாடுகள், வட அமெரிக்காவின் தென் மேற்குக் கரை போன்ற இடங்களுக்கு நன்னீர் வழங்கும் பல கனவுத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஒரு பனிமலையின் எடை நூறு மில்லியன் டன்னாக இருக்கும். பெரும் பொருட் செலவும், தொழில்நுட்பச் சிக்கல்களும் அத்திட்டங்களை நிறைவேற்றத் தடையாக உள்ளன.

கடல் நீரின் வெப்ப நிலை பனிமலையின் வெப்பநிலையைவிட 15 செல்சியஸ் டிகிரி அதிகமாக உள்ள இடங்களில் கடல் நீரின் வெப்பத்தால் ஒரு திரவத்தை ஆவியாக்கி மின் உற்பத்திச் சாதனங்களை இயக்கலாமெனவும், ஆவியைப் பனிமலையின் குளிர்ச்சியைப் பயன்படுத்தித் திரும்பவும் திரவமாக்கிக் கொள்ளலாம் எனவும் ஆய்வுத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு கன கிலோ மீட்டர் பருமனுள்ள பனிக்கட்டி மூன்றாண்டுகளுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும் என்கிறார்கள்.

இவையெல்லாம் ஆகாயக் கோட்டை போன்ற திட்டங்களாகத் தோன்றினாலும் இவற்றை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை விரைவில் தோன்றி விடலாம். விதை நெல்லை விற்று உணவை வாங்குவதைப் போல நாளைக்கான நன்னீரை உலகம் இன்றே செலவழித்துக் கொண்டிருக்கிறது.

நீர்வளம் குறைந்ததால் கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல்லுயிர்ப் பன்மை பாதியாகக் குறைந்துள்ளது. நிலத்தடி நீரை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் ஆறுகளின் சுயமான நீரோட்டப் பாணிகளும், சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பும் அவற்றைச் சார்ந்திருக்கும் பல்லுயிர்ப் பன்மையும் நிலை குலைந்திருக்கின்றன.

ஒரு நாட்டில் நீர்வளம் அற்றுப்போனால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர்ந்து அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்துவர். சீனா, திபெத்தில் உள்ள பிரும்மபுத்திரா நதியில் அணைகளைக் கட்டி தன் வட பகுதிகளுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுமானால், வங்கதேசம் வறண்டு அதன் மக்கள் இந்தியாவிலும் மியான்மரிலும் புகலடைவர். அது ஜனத்தொகை விகிதங்களை மாற்றி, மதம் மற்றும் இனங்களுக்கிடையிலான மோதல்களுக்கு வழிகோலும்.

சூடானின் உள்நாட்டுப் போருக்கு தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கான போட்டிதான் காரணம். தன் பகுதியிலுள்ள நீல நைல் நதியில் எதியோப்பியா ஒரு பெரிய அணை கட்டி வருவதை ஆட்சேபித்து, எகிப்து அதன் மேல் படையெடுக்கப்போவதாக மிரட்டி வருகிறது. இத்தகைய சச்சரவுகளில் பயங்கரவாதிகள் தலையிட்டு நிலைமையை அதிகச் சிக்கலாக்கி விடலாம் என அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசு தனது வெளியுறவுக் கொள்கை வகுப்பில் தண்ணீர் ஒரு மையக் கூறாக அமையும் என்று கூறியிருக்கிறது.

தொழிற்சாலைகளை அமைக்க ஏதுவாக தண்ணீர் வளமுள்ள இடங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. ஒடிசாவில் பாஸ்கோ எஃகு உற்பத்தி நிறுவனம் தொடங்குவதை உள்ளூர் மக்கள் எதிர்ப்பதற்கு தண்ணீர்ப் பிரச்னையும் ஒரு காரணம்.

தென் கொரியா, தனக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளை நீர்வளம் மிக்க அயல்நாடுகளில் நிறுவுமாறு தொழிலதிபர்களை வற்புறுத்துகிறது. மாமிச உணவு உற்பத்திக்கு அதிக நீர் செலவாகிறபடியால் பல நாடுகள் தம் மக்களைச் சைவ உணவுக்கு மாறும்படி வேண்டுகோள் விடுக்கின்றன.

பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்காதே என்று சொல்வதை விட்டு விட்டு தண்ணீரைப் பணமாகச் செலவழிக்காதே என அறிவுரை கூறும் காலம் வந்து விடும் போலிருக்கிறது. (கே.என். ராமசந்திரன் dinamani)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 27, 2014 4:59 pm

கடல் நீரை சொற்ப செலவில் நன்னீராக்கும்
திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்...
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Mar 27, 2014 5:20 pm

நீரின் அருமை உணர்வோம்! 103459460 நீரின் அருமை உணர்வோம்! 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக