புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
6 Posts - 18%
i6appar
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
3 Posts - 9%
Jenila
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
88 Posts - 35%
i6appar
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:43 am

மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள்

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி வருகிறார்.

இவ்வாறு பேசி வரும் அவரை கைது செய்வதுடன், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனி அவர் கலந்து கொள்ளவும் தடை விதிக்கவேண்டும் என மம்தா கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

இந்து, முஸ்லிம், வங்காளி மற்றும் வங்காளி அல்லாதவர்கள் என அனைவரையும் நாங்கள் எங்கள் நெஞ்சங்களில் ஒன்றாகவே வைத்துள்ளோம். அவர்களில் ஒருவர் மீது மோடி கை வைத்தாலும் நாங்கள் டெல்லியை முற்றுகையிடுவோம்.

வகுப்புவாதத்தை வேர்விட வைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. கலவரங்களை உருவாக்குபவர்கள் நாட்டின் தலைவராக முடியாது. அவரது கருத்துகளை கேட்டுத்தான் அசாமில் அப்பாவி சிறுபாண்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டை வழி நடத்துபவர்களே கலவரத்தை உருவாக்க நினைத்தால் நாடு என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் என மம்தா பேசினார்.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 5:54 am

காங்கிரஸ் கோட்டையில் விழுந்தது ஓட்டை; சீமாந்திரா தேர்தலில் கட்சிக்கு கடும் நெருக்கடி

விஜயவாடா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த, ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில், தற்போது, அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தெலுங்கானா மாநில அறிவிப்பால், அங்கு நடக்கவுள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ், படுதோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் ஒன்றாக, ஆந்திரா திகழ்ந்தது. கடைசியாக நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

33 பேர்:

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 33 பேர், வெற்றி பெற்றனர். மத்தியில், இரண்டாவது முறையாக ஐ.மு., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, ஆந்திர மாநிலம் முக்கிய காரணமாக விளங்கியது. ஆனால், 'ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்' என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, காங்கிரசின் செல்வாக்கை, அதல பாதாளத்துக்கு தள்ளி விட்டது. ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி, சீமாந்திரா என, அழைக்கப்படுகிறது. தெலுங்கானா அறிவிப்பால், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், காங்கிரஸ் மீது, கடும் கோபத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்தார். இதேபோல், முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, தனியாக கட்சி துவக்கியுள்ளார். ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், இவரின் கட்சிக்கு சென்று விட்டனர். இதனால், சீமாந்திராவில், காங்கிரஸ் கூடாரம் காலியாகி விட்டது. இந்நிலையில், சீமாந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும், நாளை தேர்தல் நடக்கவுள்ளது.

கடும் போட்டி:

இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கும், கடும் போட்டி நிலவுகிறது. கிரண்குமார் ரெட்டியும், தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இவர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில், காங்கிரஸ் கட்சி, இருக்கும் இடமே தெரியவில்லை. பல தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, அந்த கட்சிக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சாம்பசிவ ராவ் கூறியதாவது:

காத்திருப்பர்:

சீமாந்திரா பகுதி, காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. முன்பெல்லாம், இந்திரா, ராஜிவ், சோனியா போன்ற தலைவர்கள் இங்கு வந்தால், இரண்டு லட்சம் மக்கள், அவர்களை பார்ப்பதற்காக காத்திருப்பர். ஆனால், சமீபத்தில், இந்துர்பூருக்கு ராகுல் வந்தபோது, சில ஆயிரம் பேர் தான், இருந்தனர். காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளதற்கு, இது, நல்ல உதாரணம். இந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் தான், காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:11 am

502 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்தது

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் நேற்றுடன் 502 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற 64 தொகுதிகளுக்கான 8ம் கட்ட ஓட்டுப்பதிவில் 66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 81.28 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:37 am


கடந்த முறை சிவகங்கையில் நடந்தது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் - தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பேட்டி

மே 16 ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.

தேர்தல் தொடர்பாக இதுவரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ரூ.10 லட்சத்துக்குறைவான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் பணத்துக்கு உரியவர்கள் அதற்கான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தால் அது வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த கணக்கில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அவர்களது வெற்றி தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும். சிவகங்கையில் கடந்த முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது போல் இந்த முறை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சுற்றின் போதும் ஏஜென்ட்களிடம் கையெழுத்து பெறப்படும். அதன்பின்னரே அடுத்த சுற்று தொடங்கும்.

இவ்வாறு தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:35 am


மக்களவைத் தேர்தல் 2014: வாக்குப்பதிவில் புதிய சாதனை!

ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலேயே அதிக வாக்குப்பதிவு சதவீதம் இதுவாகும்.

கடந்த 1984-85-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராஜீவ் காந்தி அரசியலில் களமிறங்க, அப்போது ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக 64.01 சதவீத வாக்குகள் பதிவாகின.

மக்களவைத் தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

9-வது கட்ட வாக்குப்பதிவு

இறுதி மற்றும் 9-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில், மேற்கு வங்க மாநிலத்தில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் மோடி

“2014- பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. வாட்டும் வெயில், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ளனர்” என ட்விட்டர் தளத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:36 am

ஒரு எம்.பி.யை கொண்ட கட்சி என்றாலும் பரவாயில்லை யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் பா.ஜனதா அறிவிப்பு

ஒரு எம்.பி.யை கொண்ட கட்சி என்றாலும் பரவாயில்லை, யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று பா.ஜனதா கூறியது.

அமித் ஷா

பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்க பா.ஜனதா தயாராக உள்ளது. இதுகுறித்து, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

272–க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் போட்டியிட்டோம். அது கிடைக்கப்போகிறது. இருப்பினும், ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட கட்சியாக இருந்தாலும், எங்களை ஆதரிக்க விரும்பினால், தேச நலன்கருதி அதை ஏற்றுக்கொள்வோம். பா.ஜனதா கூட்டணிக்கு 290 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 50 முதல் 55 இடங்கள் கிடைக்கும்.

அத்வானிக்கு என்ன பொறுப்பு

தேர்தலுக்கு பிறகு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு என்ன பொறுப்பு அளிப்பது என்பதை கட்சியின் உயரிய அமைப்பான ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும். எனக்கு என்ன பொறுப்பு என்பதையும் கட்சி முடிவு செய்யும். கட்சியின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன்.

இந்த தேர்தல் முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இது, நரேந்திரமோடியின் வெற்றி, பா.ஜனதாவின் வெற்றி.

உ.பி. வியூகம்

உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களைப் பிடிக்க நாங்கள் அதிரடி வியூகம் வகுத்தோம். மாநிலத்தை இரண்டு, மூன்று தொகுதிகள் அடங்கிய 30 பிளாக்குகளாக பிரித்தோம். ஒவ்வொரு பிளாக்கிலும் தனித்தனி வியூகத்துடன் செயல்பட்டோம். கட்சியின் அமைப்புரீதியான கட்டமைப்பை பலப்படுத்த கடுமையாக பாடுபட்டேன். உ.பி.யின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கட்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:55 am

காங்கிரசை கைகழுவுகிறது பவார் கட்சி:நிலையான ஆட்சிக்கே ஆதரவு என்கிறது

மும்பை:கடந்த 15 ஆண்டாக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும், தேசியவாத காங்., கட்சியின் அணுகுமுறையில், தற்போது மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக, அக்கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

சமரசம்:காங்கிரசும், மத்திய விவசாய அமைச்சர், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும், மகாராஷ்டிரா மாநிலத்தில், 15 ஆண்டாக, கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இருகட்சி தலைவர்களுக்கும் இடையே, அவ்வப்போது மோதல் ஏற்பட்டாலும், மூத்த தலைவர்கள் தலையிட்டு, சமரசம் செய்வது வழக்கமாக உள்ளது.இந்த லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, தேசியவாத காங்., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்துவதாக, தகவல் வெளியானது. பின், அது வதந்தி என, தெரியவந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, கருத்துக் கணிப்புகளும் வெளிவந்து விட்டன. கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளன.'மத்தியில், பா.ஜ., ஆட்சி அமையும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால், தேசியவாத காங்., கட்சியின் அணுகுமுறையில், திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான, பிரபுல் படேல், நேற்று கூறியதாவது:காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில், நாங்கள் அங்கம் வகிப்பது உண்மை தான். அதே நேரத்தில், உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. நிலையான ஆட்சி அமைவதே, நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சி அமைத்தால், அது, நல்ல விஷயம் தான். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அது, நிலையான ஆட்சியாக இருக்க வேண்டும்.

நாட்டின் நலன்:பா.ஜ., நிலையான ஆட்சியை தந்தால், அதை வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் கொள்கைகள், வேறுபட்டவையாக இருக்கலாம்.ஆனால், நாட்டின் நலன் சார்ந்த விஷயத்தில், அனைவருக்கும் ஒரே கருத்து தான். நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலான அரசு அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 1:04 pm

தோல்வியை ஏற்றுக் கொள்ள தயாராகும் ராகுல் 'கட்சி நடத்திய சர்வேயிலும் பா.ஜனதாவுக்கு 225-230 தொகுதிகள்'

படுதோல்வியை சந்திக்கும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக மறுத்தது. ராகுல் காந்தி மற்றும் அவரது உதவியாளர்கள் ஒன்றாக கை கோர்த்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக பஞ்ச் வார்த்தைகள் மற்றும் நல்ல நகைச்சுவை வார்த்தைகளை கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள் நாங்கள் இந்தகளத்தில் தான் தோற்றுள்ளோம் ஆனால் போரில் தோற்கவில்லை என்று பேசுகின்றனர். நாடு முழுவதும் ராகுலின் குழு எடுத்த உள்கட்சி சர்வேயில் கட்சி 100 தொகுதிகளை கூட தாண்டாது என்று தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன. கட்சி 85 முதல் 92 தொகுதி வரையிலே வெற்றி பெறும் என்றும், பாரதீய ஜனதா 225 முதல் 230 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சர்வேயில் தெரிய்வந்துள்ளது.

2009 பாராளுமன்றத் தேர்தலில் 206 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ், இந்த தேர்தலில் 100க்கும் கீழான தொகுதியிலே வெற்றி பெறும் என்று தெரியவந்ததை அடுத்து தோல்வியை ஏற்றுக் கொள்ள அவர் தாயாராகி வருவதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட ராகுல் காந்திக்கு உதவி செய்ய மூத்த அரசியல் தலைவர்களை கட்சி தேடி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 15, 2014 10:26 pm

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது .
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறதோ?
பார்ப்போம்
ரமணியன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 10:32 pm

T.N.Balasubramanian wrote:[link="/t108308p135-2014#1063876"]தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது .
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறதோ?
பார்ப்போம்
ரமணியன்

நல்லா இருக்கே இந்த கணக்கு.சூப்பர் அய்யா.

Sponsored content

PostSponsored content



Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக