புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
75 Posts - 54%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
70 Posts - 54%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
43 Posts - 33%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 13 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 9:19 am

தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடும் மோடி: மம்தா காட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி வங்காள மொழி செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரும்பான்மையான அரசியல்வாதிகளிடையே வெளிப்படையான தன்மை இல்லை. மக்களின் நம்பகத்துக்கு உகந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதில்லை. குஜராத்தில் ஒரு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்திலும் மோடி ஏன் போட்டியிட வேண்டும்?

இதில் இருந்து வெற்றி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. அவர் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றாலும், ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் தன்னை வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு அவர் நீதி செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

அப்படி இருக்கையில், வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் எங்கே இருக்கிறது? மோடி பெருமை அடித்த குஜராத் மாடலை நாடு முழுவதும் உருவாக்கிவிட முடியாது. அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலம் எவ்வளவோ நன்றாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மற்றும் மனித வளர்ச்சி அளவுக்கோலின்படி, மேற்கு வங்காளத்தை விட குஜராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. கலவரத்தின் முகமோ, கலவரக்காரர்களின் கட்சியோ அதிகாரத்துக்கு வருவதை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 2:20 am

எங்கள் ஆட்சியில் வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள்: மோடி ஆவேசப் பேச்சு

மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்பதாக குற்றம் சாட்டிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் வங்காளதேசத்தினர் நாட்டை விட்டு விரட்டப்படுவார்கள் என்று ஆவேசத்துடன் எச்சரித்தார்.

இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

மேற்கு வங்காள மாநிலத்துக்கு பீகாரில் இருந்து மக்கள் வரும் போது, அவர்கள் உங்களுக்கு (மம்தா) வெளி நபர்களாக தெரிகிறார்கள். ஒடிசாவில் இருந்து மக்கள் வரும் போது, அவர்கள் உங்களுக்கு வெளி நபர்களாக தெரிகிறார்கள். மார்வாரிகள் வெளி நபர்களாக தெரிகிறார்கள். ஆனால், வங்காளதேசத்தினர் வரும் போது மட்டும் உங்கள் முகம் பிரகாசமாகி விடுகிறது.

மம்தா பானர்ஜியாகட்டும், மாயாவதி ஆகட்டும், சோனியா காந்தியாகட்டும், இவர்கள் அனைவருமே ஓட்டு வங்கி அரசியலில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்கிறார்.

இந்த ஓட்டு வங்கி அரசியல் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை இருளடைய செய்து விட்டது. இந்த நாடு இப்படி இயங்குவதை அனுமதிக்க முடியாது. உங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டை நீங்கள் நாசப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சகோதர, சகோதரிகளே.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மே 16-ம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் தங்கள் பெட்டி, படுக்கையுடன் எல்லையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை இங்கிருந்தபடியே நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 2:33 am

யாருக்கும் பயப்பட மாட்டேன்: பிரியங்கா பதில்

ரே பரேலி: என் மீதும், என் கணவர் மீதும், மோடி மற்றும் பா.ஜ., நடத்தும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் தராமல் அமைதியாக இருக்க மாட்டேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். பா.ஜ.,வின் அரசியல் நிலை பற்றி தொடர்ந்து பேசுவேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா கூறியுள்ளார்.

பா.ஜ., குற்றச்சாட்டு: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா நில அபகரித்து ஊழல் தொடர்பாக பா.ஜ., வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதற்கு ராபர்ட் வத்ரா வளர்ச்சி மாடல் எனவும் பா.ஜ., பெயரிட்டுள்ளது. சோனியா குடும்பம் அளித்த சலுகை காரணமாக இந்த மாடல் வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய பா.ஜ.,வின் ரவிசங்கர் பிரசாத், இதில் சட்டவிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறினார். சோனியா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக வத்ரா மிகப்பெரிய ஒப்பந்தங்களை பெற முடிந்தது எனவும் கூறினார். ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் வத்ராவின் முறைகேடுகள் குறித்து இந்த வீடியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியாவில், சோனியா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக வத்ரா வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பா.ஜ., தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கவில்லை எனவும், ஊழல் தொடர்பான பிரச்னையை மட்டுமே தாங்கள் எழுப்புவதாகவும் கூறிய அவர், சிலர் பெரிய மனது பற்றி பேசுகிறார். யாருடைய பெரிய மனது, ஒரு லட்ச ரூபாய் முதலிட்டில் வர்த்தகத்தை துவக்கிய வத்ரா, சிறிய காலத்தில் பெரிய தொழிலதிபராக முடிந்தது என கேள்வி எழுப்பினார். பிரியங்காவை தவிர, காங்கிரசுக்கு வத்ராவை ஆதரிப்பதற்கான முக்கிய காரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத்தலைவர் ராகுலும் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அமைதியாக இருக்க மாட்டேன்-பிரியங்கா பதில்: பா.ஜ., குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த வத்ராவின் மனைவியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளுமான பிரியங்கா கூறியதாவது: தாயுக்கு மகள் ஆதரவு தெரிவிப்பதிலும், சகோதரருக்கு சகோதரி ஆதரவு தெரிவிப்பதிலும் எந்தவித பிரச்னையுமில்லை. பா.ஜ., பதவியை பிடிப்பதற்கு போராட்டம் நடத்துகிறது. யாருக்கும் நான் பயப்பவில்லை. பா.ஜ.,வின் அழிவு உண்டாக்கக்கூடிய அரசியலை பற்றி தொடர்ந்து பேசுவேன். என் மீதும், என் கணவர் மீதும் பா.ஜ., மற்றும் மோடி கூறும் தனிநபர் விமர்சனங்கள் குறித்து பதிலளிக்காமல், நான் நீண்ட நாட்கள் அமைதியாக இருக்க மாட்டேன். பா.ஜ.,வின் குற்றச்சாட்டுக்களில் புதியது ஏதுமில்லை. தொடர்ந்து அவர்கள் பேசட்டும்.அவர்கள் பேசுவார்கள் என்பது எனக்கு தெரியும். பழிவாங்கும் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. அதேநேரத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும். அவர்கள் இன்னும் என கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:52 am

இந்தியாவை சொர்க்கம் போன்று மாற்றப்போவதாக ஒருநாளும் கூறவில்லை: நரேந்திர மோடி


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.


அதில், மதச்சார்பின்மை என்ற போர்வைக்குள் மறைந்துகொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையும், அதே அளவும் பாஜக ஆதரவு அலையும் உள்ளது. இந்தியாவை சொர்க்கம் போன்று மாற்றப்போவதாக ஒருநாளும் கூறவில்லை. நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் என்னிடம் தீர்வு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:54 am

பாஜகவினர் வாஜ்பாய் வளர்ப்பு மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை மறந்துவிட்டார்கள்: ப.சிதம்பரம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்தது பற்றி பேசுகிறவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வளர்ப்பு மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை மறந்துவிட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசியலுக்கு தொடர்பில்லாத பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பேசுவதற்கு முன்பு, நீங்கள் முதலில் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் ஏன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்ற கேள்வியைத் தான் எழுப்பியிருக்க வேண்டும். வாஜ்பாயின் வளர்ப்பு மகள் கருணா சுக்லா நீண்ட காலமாக அரசியலில் இருந்தவர். பாஜகவில் எம்.பி. பதவி வகித்தவர். அவர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ராம்தேவை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:55 am

தமிழக பாஜக தலைவர்கள் வதோரா, வாரணாசி, அமேதி பயணம்

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழக பாஜக தலைவர்கள் செல்கிறார்கள்.

கோவை பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வாரணாசி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலமும் பேசுவதால், பிரசாரம் செய்வதில் மொழி பிரச்சினை இல்லை என்றார்.

இந்தியில் சரளமாக பேசும் புலமை பெற்ற சிவகங்கை பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா வதோதரா தொகுதியில் மோடிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மோடி தமிழக வருகையின்போது அவரது இந்தி பேச்சை எச்.ராஜாதான் தமிழில் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் நடிகை ஸ்மிருதிஇரானி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அமேதி சென்றுள்ளார். அங்கு ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 3:55 am

மோடி எங்களை கவுரவபடுத்தி விட்டார்: லதா ரஜினிகாந்த் பேட்டி


பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நன்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார் என்று கூறினார்.

24-ந் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார். இதுபற்றி லதாவிடம் கேட்டபோது ‘‘ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது’’ என்று கூறினார்.

கோச்சடையான் படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளேன். இது எனக்கு சிறப்பான தருணம் என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 11:03 pm


மதசார்பின்மை பற்றி மோடியிடம் இருந்து எனக்கு விரிவுரை தேவையில்லை: உமர் அப்துல்லா

மதச்சார்பின்மை பற்றி சான்றிதழோ அல்லது விரிவுரையோ உங்களிடம் இருந்து எனக்கு தேவையில்லை என்று மோடிக்கு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லாவின் தந்தையும் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா மோடிக்கு ஆதரவு அளிப்பவர்கள் கடலில் தான் குதிக்க வேண்டும் என்று பேசியதை அடுத்து வார்த்தை போர் துவங்கியுள்ளது.

இன்று காலை பரூக் அப்துல்லாவின் கருத்து பற்றி டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்து இருந்த மோடி, மோடிக்கு வாக்கு அளிப்பவர்கள் கடலில் குதிக்கவேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, அப்துல்லா தானும் தனது குடும்பத்தினரும் கண்ணாடி முன் நின்று காஷ்மீரை எப்படி பாழாக்கியுள்ளோம் என்று பார்க்க வேண்டும்.மதச்சார்பின்மைக்கு அதிக தீங்கு விளைவித்தவர்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தினருமாகத்தான் இருப்பீர்கள் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள உமர் அப்துல்லா, மதசார்பின்மை குறித்து உங்களிடம் இருந்து எனக்கு சான்றிதழ் தேவையில்லை. ஒருவேளை சான்றிதழ் பெறும் நாள் வந்தால் அன்றய தினம் எனது பதவியை ராஜினாமா செய்து இருப்பேன். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதற்கு பெரும்பாலான காஷ்மீர் முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் திரும்பிவருவதையே விரும்புகிறார்கள். இந்தநிலையில், மோடியின் அறிக்கை, அவர்களை புண்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 11:05 pm


நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் இல்லை, அவரது நோக்கத்திற்கு எதிரானவர்கள் - பரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநிலம் பழைய ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா, இந்த தேசம், மக்களுக்கு சொந்தம். எனவே, என்ன செய்வது என்று மக்களுக்கு தெரியும். மதவாத சக்திகளிடம் இருந்து எங்களை இறைவன் காப்பாற்ற வேண்டும். இந்தியா, மதவாத நாடாக மாற முடியாது. ஒருவேளை அப்படி மாறினால், இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது. தீவிரவாதிகள் என் மீது ஆயிரக்கணக்கான கையெறி குண்டுகளை வீசினாலும், நான் பயப்பட மாட்டேன்’. ‘‘மோடிக்கு ஓட்டு போடுபவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இத்தகைய பேச்சை அடுத்து பாரதீய ஜனதா மற்றும் பரூக் அப்துல்லா இடையிலான வார்த்தை போர் முண்டுள்ளது. காஷ்மீர் மதசார்பின்மையை பரூக் அப்துல்லா, அவரது தந்தை மற்றும் அவரது மகன் சீர்குலைத்துவிட்டனர் என்று நரேந்திர மோடி கூறினார்.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த கூட்டத்தில் பேசிய பரூக் அப்துல்லா, நாங்கள் நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள் இல்லை அவரது நோக்கத்திற்கு எதிரானவர்கள். நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட விரும்புகிறார். நாங்கள் இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றுகிறோம். ஆனால் அதனை அவர்கள் மீறுகின்றனர். காஷ்மீர் பண்டிட்கள் திரும்பி வருவார்கள் என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 11:06 pm


குஜராத்தை பற்றி ஒன்றும் அறியாதவராய் இருக்கிறார் ராகுல் காந்தி: நரேந்திர மோடி


குஜாராத்தை பற்றி ஒன்றும் அறியாதவராய் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார் என்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். பாடன் மக்களவை தொகுதிக்குட்ட்ட கேரலு என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் கூறுகயில், எனது சொந்த நகரான வத்நகருக்கு இது வரை 100க்கும் மேற்பட்ட பிரநிதிகளை, நான் உண்மையிலேயே தேநீர் விற்றேனா இல்லையா என்று கண்டறிய காங்கிரஸ் அனுப்பி சோதித்துள்ளது.

நீங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ராகுல் காந்தியின் பேச்சை கேளுங்கள். அவருடய கணக்கு படி 27ஆயிரம் கோடி வேலை வாய்ப்புகள் குஜராத்தில் காலியாக உள்ளது என்கிறார். குஜராத்தில் மொத்த மக்கள் தொகையே 6 கோடியாக உள்ள நிலையில் இது எப்படி சாத்தியம்? என்ன வகையான மாதிரி நபரை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.

ராகுல் காந்தி சமீபத்தில் குஜராத்தில் லோக் அயுக்தா அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் குஜாராத்தில் லோக் அயுக்தா இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.ராகுல் பாய் உங்களுக்கு இது போன்ற அறிவு இல்லை என்றால்? இந்தியாவுக்கு என்ன ஆகும். என்றார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குற்றம் சாட்டிய அவர், நர்மதா அணை விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக சோனியா காந்தி குஜராத்திற்கு அநீதி இழைத்து விட்டார் என்று தெரிவித்தார். மேலும், குஜராத் மக்களுக்கு குடீநீர் இல்லை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, தண்ணீர் ரயில் மூலமாக சவுரசாஷ்டிரா பிராந்தியத்துக்கு அனுப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் பெரிய குழாய்கள் அங்கு அமைத்துள்ளோம்.

அம்மா மகன் அரசாங்கத்தில் அவர்களுடைய அரசியல் ஆலோசகர் நாட்டை வழிநடத்துகிறார். நர்மதா அணையில் தடுப்புகளை கட்ட நீங்கள் அனுமதி அளிக்கவில்லை. இதன் படி குஜராத்திற்கு நன்கு மடங்கு தண்ணீர் அதிகமாக அளித்து இருக்க வேண்டும். ஆனால், தடுப்புகளை அமைத்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தனது தளத்தை குஜராத்தில் இழந்துவிடும் என்று அவருடைய அலோசகர் அவர்களை எச்சரித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sponsored content

PostSponsored content



Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக