புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
32 Posts - 55%
heezulia
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
32 Posts - 55%
heezulia
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10பாமரர் தேவாரம் - Page 6 Poll_m10பாமரர் தேவாரம் - Page 6 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Aug 02, 2014 9:23 am


நந்தியவர் தடைசெய்ய நமனவனும் வேடனுயிர்
வந்துகொள முடியாதே வாவிதோண்டி வழிபட்டான்
அந்தவேழு கன்னியரும் சாபநீங்கப் பெற்றனரே
வந்துகாண வளம்சேரும் வைகாவூர்த் தலத்தினிலே. ... 7

ஆழிவரும் நஞ்செல்லாம் அவன்கழுத்தில் கயிலைமலை
ஆழமுயல் வல்லரக்கன் தலைவிதிர்த்தான் அயனரியும்
தாழைமலர் சூடுதலைத் தாள்காணார் பரமனருள்
வாழையெனத் தழைத்திருக்கும் வைகாவூர் திருத்தலமே. ... 8



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Aug 03, 2014 9:53 am

(இறுதிப் பகுதி)

முப்புரமும் மேருவில்லால் மொத்திநின்றான் ஔவையவள்
எப்புறமும் கால்திருப்ப எந்தைநின்றான் நாள்தோறும்
ஒப்புரவு கொள்வோர்க்கே ஒளிதருவான் வினைகளெலாம்
அப்புறப்ப டுத்திடவே வைகாவூர் மேவுவனே. ... 9

வேதநெறி விதிவத்தாய் விளங்குவதில் வேறுசிலர்
பேதமுற்றே மாற்றுநெறி என்போரின் பொய்யுரையைக்
காதுறாதே கயிலைநாதன் காப்பினிலே கட்டுண்டோர்
மேதகத்தில் வாழ்வதற்கே வைகாவூர்த் தரிசனமே. ... 10

சிரபுரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்
தருபதிகம் தினந்தோறும் சாதனையா யோதுபவர்
வருவினையும் இருவினையும் வல்வினையா யாகாதே
மருள்நீக்கி யருள்செயவே வைகாவூர் மேவினனே. ... 11

--ரமணி, 12/07/2014, கலி.28/03/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Aug 09, 2014 8:52 am

015. திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி)
(கட்டளைக் கலிவிருத்தம்)

[முதற்சீர் மா/விளச் சீர்; இரண்டின் முதலில் நேரசை;
அதன்பின் வரிக்குள் வெண்டளை; பொழிப்பு மோனை;
முதற்சீர் நேரெனில் வரிக்கு 11 எழுத்துகள்; நிரையெனில் வரிக்கு 12 எழுத்துகள்.]

கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=64
http://www.shivatemples.com/knaadut/kodumudi.php
http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_21.html
http://kodumudimagudeswarar.org/
http://www.magudeshwarar.com/
http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2012-04-07-07-29-37/2012-04-07-07-30-08

பதிகம்
சம்பந்தர்: 2.69: பெண்ணமர் மேனியி னாரும்:
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20690
அப்பர்: 5.81: சிட்டனைச்சிவ னைச்செழுஞ் சோதியை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50810
அப்பர்: 7.48: மற்றுப் பற்றெனக் கின்றி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70480

காவிரி கண்ட கணபதி யென்றன்
ஆவிரித் தேயித் தலம்புகழ் போற்றும்
பாவிரி வையருள் பார்வதி மைந்த
கோவிரிப் பாண்டிக் கொடுமுடி யானே. ... 1

[ஆவிரித்தே = ஆன்மாமை விரியச் செய்தே;
கோவிரி = நீர்/மேன்மை/கதிர்/வானம்/பூமி விரியும்]

காவிரி யெல்லையில் சக்தி மகனாம்
கோவிலுள் நர்த்தனக் கோலம் பெருமாள்
கோவிலில் கால்புலிக் கோலம் எனவே
கோவலம் கொள்வர் கொடுமுடி தானே. ... 2

[எல்லை = கரை; கால்புலிக் கோலம் = வியாக்ரபாத விநாயகர்;
கோவலம் = இறைமேன்மை]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Aug 11, 2014 8:09 am


அயன்நெடு மாலும் அரியும் இணைந்தே
பயன்நெடு மேவும் பதியுள் உறைந்தே
நயந்திடும் பத்தர் நலம்கொளச் செய்தே
உயர்நெடு கோவில் கொடுமுடி தானே. ... 3

பாரதி யில்லா அந்தணன் மும்முகம்
நீர்நலம் காக்கும் இலையுடன் வன்னி
கோரப் பல்லுறும் கோலம் அனுமனாம்
கோருதல் நேரும் கொடுமுடி தானே. ... 4



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Aug 13, 2014 9:14 am


திருப்பு கழ்ச்சேய்த் திருவுரு இங்கே
திருமால் வீரர் திருமங்கை நாச்சி
திரிபுர மங்கை யிறைவி யின்பேர்
ஒருமை காக்கும் கொடுமுடி தானே. ... 5

கறைசை யானதாம் கண்மாடன் நோயற
அரியின் பேரால் அரிகா புரமென
கருடன் போற்ற அமுத புரியென
பிரமனும் போற்றும் கொடுமுடி தானே. ... 6



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Aug 16, 2014 8:11 am

ஆதி சேடனும் வாயுக் கடவுளும்
மோதிய போதிலே மேருவின் உச்சிக்
காத மாயிரம் ஐந்தாய்ச் சிதறவே
கோதுகத் தோன்றல் கொடுமுடி யாமே. ... 7

[கோதுகம் = உள்ளக்களிப்பு]

நெடுவரை கொள்வோன் நிலத்தில் பதித்தார்
நெடுமால் வேதன் நெருப்பாய் மயக்கினார்
நெடியோ டோங்கிய நஞ்சினை யுண்டவர்
கொடுமுடி யீசராம் குட்டை உருவே. ... 8

(இறுதிப் பகுதி)

காவிரி கீழ்த்திசை மாறும் தலத்தில்
மூவகைத் தீர்த்தமாம் முத்தி தரவே
பாவினில் மூவர் பதிகம் புகழும்
கோவணன் மேவும் கொடுமுடி தானே. ... 9

இற்றை நாளதில் ஈர்க்கும் நெறிகளாம்
மற்றைப் பற்றின் மயலுளம் புக்கிலர்
புற்ற ராவணி பூந்தாள் பணிந்திடில்
குற்றமும் கொள்ளான் கொடுமுடி யோனே. ... 10

மறப்பினும் நாமம் மனமுறும் என்றும்
அறமெனும் தத்துவ நட்டன் எனவும்
கறைவளர் மாமிடற் றாரவ ரென்றும்
குறையறச் சொல்லக் கொடுமுடிக் காப்பே. ... 11

--ரமணி, 19/07/2014, கலி.04/04/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 22, 2014 10:31 am

016. திருச்சேய்ஞலூர் (இன்று சேங்கனூர்)
(வஞ்சி விருத்தம்: விளம்விளம் காய்)
(இசைப்பாடல்: ஈற்றுச் சீர் நெகிழும் வாய்பாடால் தண்பூ வாகலாம்.)

கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=380

பதிகம்:
சம்பந்தா: 1.113.1: எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்

ஆலமர் தேசிகன் ஆறணிவோன்
காலமர் மெய்யுயிர்க் காரணனாய்ப்
பாலமர் ஆவினம் பார்த்தருளூர்
சேலமர் நீர்நிலைச் சேய்ஞலூரே. ... 1

[காலமர் = காற்று அமரும்; பாலமர் ஆவினம் = பால்தரும் பசுக்கூட்டம்;
ஆண், பெண், பிற என்று பாலால் பாகுபடும் உயிர்னங்கள்;
பார்த்தருள் = கரும வினைக்கேற்ப அருளும்]

கலையணி சடைமுடிக் கண்ணுதலோன்
மலையணி கயிலையில் வதிவோனே
வலையணி மானுட மயலறவே
சிலையணிந் திடமுறும் சேய்ஞலூரே. ... 2

[வலை = வஞ்சகம், சூழ்ச்சி; சிலை = உமை]

காவலர் பன்மலர்ச் சடையேற
நாவலர் பண்ணொடு நால்வரென
காவலர் அம்பலத் தாண்டவனின்
சேவலர் தாளுறும் சேய்ஞலூரே. ... 3

[காவலர் = சோலை மலரும், பாதுகாப்பு மலரும்; சேவு-அலர் = சேவை மலரும்]

கற்றறுத் தேயவன் கழல்பற்றின்
உற்றருள் செய்வனாம் உமைகோனே
சிற்றுரு பேருயிர்ச் சிவமாகச்
செற்றுற மேவினன் சேய்ஞலூரே. ... 4

[செற்று = செறிவு, நெருக்கம்]

தாள்விரல் தலைமுடி தேடச்செய்தான்
தாள்விரல் அழுத்தியே வாடச்செய்தான்
ஊழ்விறல் குன்றியே ஓடச்செய்வான்
ஏழ்விறல் பிறப்பறச் சேய்ஞலூரே. ... 5

[விறல் = வலிமை, பெருமை]

கண்ணுதல் காமனை எரித்திடுவான்
பெண்ணுதல் இடமுறத் தரித்திடுவான்
ஒண்ணுதல் ஓமென விரித்திடுவான்
எண்ணுதல் சீர்பெறும் சேய்ஞலூரே. ... 6

எரிவனம் ஆடுவன் பேயுடனே
அரிவன மல்லிகை அர்ச்சுனனாம் ... ... [அரி = வண்டு]
விரிவன ஒடுக்கியே விரிஞானத்
திருவினை யருள்வது சேய்ஞலூரே. ... 7

புலியதள் அரையினில் உடுத்தவனே
கலையதைக் கையினில் எடுத்தவனே
அலையதன் நஞ்சினை மடுத்தவனே
சிலையுடன் சேர்ந்தருள் சேய்ஞலூரே. ... 8

திரிபுரம் எரிசெயும் வானவனே
உருவினில் ஒன்றிரண் டானவனே
திருவடி தூக்கிடும் திருவென்றே
இருளக லச்செயும் சேய்ஞலூரே. ... 9

மறையினைப் பழித்திடும் வழிகொள்வோர்
கறையுறு சொல்மனக் கண்ணறுத்தே
பறையொலித் தாடுவன் பதம்நாடில்
இறையவன் இன்னருள் சேய்ஞலூரே. ... 10

கண்மலர்க் காழியைத் தந்தவனே
பெண்மலர் இடமுற வந்தவனே
விண்மலர்ப் பிறையணி விந்தையனே
திண்மலர்த் திடும்தலம் சேய்ஞலூரே. ... 11

[ஆழி = இங்கு சுதர்சன சக்கரம்;
திண்மலர்த்திடும் = திண்மை மலரச் செய்யும்]

காழிசம் பந்தரின் களைகண்ணாய்
ஆழியிற் பிறப்பதை அறுத்தெறிந்தான்
பாழியில் பரமனைப் பண்போற்ற
ஏழிசை கொள்தலம் சேய்ஞலூரே. ... 12

[களைகண் = பற்றுக்கோடு, காப்பவன்; ஆழி = கடல்;
ஏழிசை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம், சத்தகரம் என்னும் ஏழு விதமான இசை]

--ரமணி, 01-08/08/2014, கலி.23/04/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Aug 29, 2014 10:51 am

017. திரு-ஆப்பாடி (இன்று திருவாய்ப்பாடி)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா -- அரையடி)

கோயில்:
http://temple.dinamalar.com/New.php?id=372

பதிகம்:
அப்பர்: 4.48.1: கடலக மேழி னோடும் பவனமுங் கலந்த விண்ணும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40480

சண்டே சுவரரை யாட்கொண்டு முத்தியின்
தண்ணிழல் தந்த தளிர்மதியன் மேவியருள்
ஆப்பாடி சீர்பாட ஐங்கர னேயெனக்குக்
காப்பாக நின்றே அருள்.

வேதியன் மகனாய் வந்தே
. விசாரச ருமன்பேர் தாங்கிச்
சாதக நெறியில் நின்றே
. ஆனிரை தாயாய்ப் பேணித்
தீதிலாப் பசுவின் பாலால்
. திருமணல் லிங்கம் ஆட்டத்
தாதையன் நிலைகொண் டாளும்
. தலமிதாப் பாடி யூரே. ... 1

தந்தையும் இதைய றிந்தே
. தனயனைக் கடிந்தே காலால்
எந்தைபாற் கும்பம் தள்ள
. இந்தசெய் கைபொ றாதே
தந்தையின் காலைக் கோலால்
. தனயனும் தாக்கக் கோலும்
விந்தையில் மழுவாய் மாறி
. வெட்டிய தலமாப் பாடி. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Aug 30, 2014 9:13 am

அம்மையோ டப்பன் தோன்றி
. அரியதோர் காட்சி தந்தே
எம்மகன் இனிநீ சண்டி
. கேசனாம் உன்பேர் என்றான்
எம்பெயர் பாலு கந்த
. ஈசரென் றிங்கே கூற
நம்நிரை மேய்ந்த ஊர்ப்பேர்
. நவில்வராப் பாடி யென்றே. ... 3

ஆத்தியாம் தலவி ருட்சம்
. அம்மைபேர் பெருந்த லைவி
தீர்த்தமாம் மண்ணி யாறே
. திருத்தலம் சிறிய கோவில்
மூர்த்தமாம் லிங்கச் சுற்றில்
. சூரியன் சனியு றையக்
கூத்தனின் சபையும் கொண்டே
. ஒளிருமாப் பாடி யூரே. ... 4



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 30, 2014 12:03 pm

பாமரர் தேவாரம் - Page 6 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக