புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
49 Posts - 30%
i6appar
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
1 Post - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
49 Posts - 30%
i6appar
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
1 Post - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10பாமரர் தேவாரம் - Page 13 Poll_m10பாமரர் தேவாரம் - Page 13 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 28, 2015 8:39 am

உடலை மூடி முகத்தினை மட்டும்
. உறுவோர் காண தரிசனம் தருவார்
நடனப் பாதம் இடமது காணும்
. நலநாள் ஆமே மார்கழிச் செங்கை
திடமாய் ஊன்றும் வலப்புறப் பாதத்
. திணமே காணப் பங்குனிக் கதிர்நாள்
திடுமென் றேசொல் ஒலிநடம் செய்யும்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 5

[செங்கை = ஆதிரை நாள்; திணம் = திண்ணம்; கதிர்நாள் = உத்திரம்;
சொல் = பறை]

திரும கள்தன் கணவனை அடையச்
. சிவனை வேண்டி அருள்பெற இவ்வூர்
திருவா ரூரென் றேபெயர் கொண்டே
. திருமண் நீறின் ஒருமையைச் சொலுமே!
திருவா ரூரே முந்துறும் கோயில்
. சிதம்ப ரம்பின் எனும்கருத் தாலே
திருச்சிற் றம்ப லம்பதம் இங்கே
. திருமு றைப்பண் ணோதலில் இல்லை! ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 01, 2015 9:07 am

மதியம் மத்தம் கூவிளம் சூடி
. மழுவும் தீயும் கரத்தினில் தாங்கி
வதியும் மங்கை இடப்புறம் அருள
. வனத்தில் கூளிக் கணத்துடன் ஆடிச்
சிதைவீழ் மேனிச் சாம்பரை யணிந்தே
. சிதலை கொண்டே சிறப்பருள் வாரைத்
திதிகா லத்துள் ஒருமுறை காணத்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 7

[கூளி = பேய்; சிதலை = நோய்; திதிகாலம் = ஆயுள்]

இலங்கை வேந்தன் மலைதொட முயல
. இவர்தன் பாதத் தொருவிரல் கொண்டே
நலியச் செய்யவ் விராக்கதன் வேண்ட
. நலமும் வாளும் தந்தருள் செய்தார்
பொலியும் ஞானப் பொசிவினைத் தரவே
. புண்ணியன் பாதம் புகலுறும் அடியார்
சிலிர்த்தே காணும் செஞ்சடைக் கடவுள்
. திருவா ரூரின் தியாகரே அலரோ? ... 8

[மலைதொட முயல = (கயிலை) மலையைத் தோண்ட முயல]



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 01, 2015 9:52 am

நல்ல பதிவுங்க அன்பரே..........

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 02, 2015 7:50 am

(இறுதிப் பகுதி)

வலவன் வேதா அடிமுடி தேட
. வளரும் தீயாய் வானுற நின்றே
நிலவும் மூலம் முழுமுதல் தாமே
. நினைவிற் கொள்வீர் என்றுரைத் தாரே!
புலரும் காலை பின்னுறும் மாலைப்
. பொழுதில் உள்ளம் உள்வரக் காணத்
திலகம் நெற்றிக் கண்ணெனத் தெரியும்
. திருவா ரூரின் தியாகரே அலரோ? ... 9

[வலவன் = திருமால்; வேதா = பிரம்மன்]

மறையைத் தள்ளல் மாண்பெனச் சொல்லும்
. வழிகள் இந்நாள் இருப்பது விலக்கி
இறைவன் தந்த நெறிமுறை யொன்றே
. இகத்தில் வாழச் சிறந்ததா மென்னும்
உறுதியில் வாழும் அடியவர்க் கெல்லாம்
. உமைகோன் என்றும் உய்வினைத் தருவார்
சிறையாய் இம்மை தொடருதல் நீங்கத்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 10

திருநா வேந்தர் இருபதின் ஒன்றும்
. திருஞா னத்தர் இரண்டொடு மூன்றும்
திருத்தன் நண்பர் சுந்தரர் எட்டும்
. திருக்கை லாயப் பரமனின் மீது
திருப்பண் செய்தே பாடிய பதிகம்
. திருநாள் என்றே தினம்சொல வருமே
திருவும் தீர்வும் திருவடிக் காப்பும்
. திருவா ரூரர் தியாகரி னருளால். ... 11

--ரமணி, 24/02/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 23, 2015 8:38 am

திருக்குடவாயில் (இன்று குடவாசல்)
(எழுசீர்ச் சந்தவிருத்தம்)

’தனதான தான தனதான தான தனதான தான தனனா’
என்ற சந்தம்: சில இடங்களில் முதற்சீர் ’தானான’ என்றும் வரும்.
சம்பந்தர் தேவாரம்: 2.88.1
’துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20880

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=312
http://www.shivatemples.com/sofct/sct094.php

பதிகம்
சம்பந்தர்:2.022 திகழுந் திருமா லொடுநான் முகனும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20220
2.058 கலைவாழு மங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20580

காப்பு
அனுமதிவி நாயக ஆதிமுக் கண்ண
இனுமிரட்டை சித்தி இறைமகனே சொல்தந்து
கோணேஸ் வரரின் குடவாயிற் கோவிலை
வாணாளில் பாட வருள்.

[அனுமதி விநாயகர், ஆதிகஜானனர், இரட்டை விநாயகர்,
சித்தி விநாயகர், மாலை வழிபாட்டு விநாயகர் என்று
பல உருவங்களில் கணபதி குடவாயிற் கோவிலில் அருள்செய்கிறார்.]

பதிகம்
திருக்குடவாயில் (இன்று குடவாசல்)
(எழுசீர் சந்த விருத்தம்: தனதான/தானான தான தனதான தான தனதான தான தனனா)

அழிகால நாளில் உயிரீட்ட மார அமுதீந்து கும்பம் இடுவார்
குழிதூங்கு கூளி யுருலிங்க மாகி குடவாயில் காவல் புரிவார்
சுழியாக வேறோர் பவமேறு போழ்து சுசிவேட னாக வகிர்வார்
விழுமூன்று பங்கு குடவுச்சி வீழ்ந்த குடவாயில் மேவு சிவனே. ... 1

[ஈட்டம் = கூளி = கூட்டம், திரள்; சுழி = விதி;
சுசிவேடன் = சந்திரனைச் சூடிய வேடன்]

கருடாழ்வர் மூக்கு வடுமேனி கொண்டு கனலேந்தி காட்சி தருவார்
அருள்செய்த வர்தாய் அடிமைத்த ளையை அறவேய கற்ற வருவார்
இருள்தன்னை நீக்கி யொளிசெய்யும் ஈசர் இகவாழ்வில் நன்று செயவே
உருவான லிங்க வடிவாயி ருப்பர் குடவாயில் மேவு சிவனே. ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 25, 2015 8:29 am

கோணேஸ்வ ரன்பேர் கொளுமீச ரோடு குழலன்னை துர்க்கை யுருவம்
வாணாளில் ஏறு வினையாவு மேக வளம்சேரு மன்னை துதியால்
நாணாளு மேத்த நலிவேக வாழ்வில் நலமாக வைக்கு மரனார்
கோணார்பி றையர் குளிர்மங்கை பாகர் குடவாயில் மேவு சிவனே. ... 3

[நாணாளும் = நாள் + நாளும் = தினந்தோறும்;
கோணார் பிறையர் = வளைவுள்ள பிறையை அணிபவர்]

அவிர்செஞ்ச டையர் நடராச வேடம் அகமார வின்னல் குறையும்
சிவகாமி யன்னை உடனிற்க நம்முள் தினவேறு பாவ மழியும்
நிவர்லிங்க மேனி ஒருசன்னி தான நிறமாகும் செம்மை விழுமம்
குவடன்ன கோவில் தனதென்று வாழ்வர் குடவாயில் மேவு சிவனே. ... 4

[நிவர்லிங்கம் = ஓங்கி உயர்ந்த லிங்கம்; குவடு = மலை, குன்று]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 27, 2015 10:06 am

ஏரம்பர் காட்சி பலவாக நின்று எதுவென்று நல்ல னசெய்வார்
ஆரம்ப ஓசை எதுவென்று சொல்லி அரனாரை யாண்ட முருகன்
சீராரும் வண்ணம் சிவநேசர் சொன்ன திருவண்ண மேவி யருள்வன்
கூரம்பு போன்று வதைசெய்வி னைகொள் குடவாயில் மேவு சிவனே. ... 5

[ஆரம்ப ஓசை = ஓம் என்னும் பிரணவவொலி; சிவநேசர் = இங்கு அருணகிரிநாதர்]

கோச்செங்க ணிங்கு குடநாடர் வென்று குடவாயில் இட்டர் சிறையில்
ஏச்சங்கு தீர குடநாடர் நீரை இசையாது நீத்தர் உயிரை
பாச்சங்க காலம் இதுநேர்ந்த வாறு படமாகு பாடல் உளதே
கூச்சல்கள் தீர குழைதோட ணிந்த குடவாயில் ஈசன் உளனே. ... 6

[குடநாடர் = சேரன், இங்கு மன்னன் கணைக்கால் இரும்பொறை;
ஏச்சு = பழிச்சொல்]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 30, 2015 9:03 am

அலையாறு கங்கை தணியாரும் இந்து அவிர்செஞ்ச டையர் அணியாய்
கலைமான்க ரத்தில் பெருமான்வ னத்தில் களைமானி டத்தில் கொளுவார்
தொலையாத பாவம் இலையாக வென்று தொழுதீசர் கொள்ளு மனதில்
குலையாத ஞானம் அழியாத மைதி குடவாயில் ஈசர் அருளே. ... 7

[களைமான் = அழகிய மானாகிய உமையன்னை]

மலைகொள்ள வந்த நனிவல்ல ரக்கர் மயல்கொள்ள வைத்த சிவனார்
அலைமுப்பு ரங்கள் நகைசெய்து மாய அனலாக நோக்கி யருள்வார்
உலையாகும் ஊனில் தினம்வேகும் ஆவி யொளியேற வைக்கும் இறைவன்
குலதெய்வ மூலம் அரனென்ற காட்சி குடவாயில் மேவு சிவனே. ... 8


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2015 2:28 pm

பாமரர் தேவாரம் - Page 13 103459460

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 31, 2015 8:43 am

அலைதூங்கு மாலன் அலர்தூங்கு வேதன் அடியுச்சி தேட அழலாய்
நிலைகொண்டு நிற்க அவர்நீல கண்டர் நிலைகண்டு போற்ற மகிழ்வார்
நிலவொன்று சூடி நதியொன்று பாய நிறமின்றி நிற்கும் இறைவன்
குலைவாழை யீனும் வயல்சூழ்ந்த கோவில் குடவாயில் மேவு சிவனே. ... 9

மறையின்று நீங்கும் அறமாக இன்று மலிவாக உள்ள உலகில்
சிறையின்று மீள வழிசொல்வ தென்று சிவஞானம் உள்ளம் விழைவார்
கருநீல கண்டர் நெறிதன்னில் வாழ்வர் கலியாட்சி ஓங்கும் இதுநாள்
குறையொன்று மின்றி அவர்வாழ வைப்பர் குடவாயில் மேவு சிவனே. ... 10


Sponsored content

PostSponsored content



Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக