புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10பாமரர் தேவாரம் - Page 12 Poll_m10பாமரர் தேவாரம் - Page 12 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 27, 2015 8:26 am

மிகவும் அழகான படம்!  பகிர்ந்தமைக்கு நன்றி.
ரமணி

[quote="ayyasamy ram"]பாமரர் தேவாரம் - Page 12 103459460
பாத தரிசனம் பாப விமோசனம்.......
ஆடிய பாதம் பணிந்தால் வல்வினைகள்
ஓடியே போகும்.....
-


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 29, 2015 8:48 am

(இறுதிப் பகுதி)

மாலும் நான்முகனும் மாறிலி தாள்தலை .. வான்கொள் அழல்தன்னில்
காலும் கையுமுளை நாடலிற் கண்ணுற .. லாகா துருவென்றே
ஏல முன்னனென இன்னருள் செய்தவன் .. ஈங்கோய் மலைமேவும் ... ... [ஏல முன்னன் = மிகவும் முற்பட்டவன்]
நீல கண்டனவன் நெஞ்சகம் நின்றிட .. நீங்கும் வினைதானே. ... 9

தேரர் சைனருடன் மேலைம தம்பல .. தீர்வா மிதுநாளில்
வேரின் காட்சியுறும் நேர்வழி சொல்வது .. வேதன் மதமென்றே
ஈரி தழ்மலரும் கொன்றைய ணிந்தவன் .. ஈங்கோய் மலையானே
காரி ருள்மயலின் மும்மலம் நீக்கிடும் காப்பாய் நினைநெஞ்சே. ... 10

காழி யன்னைதரு பாலமு துண்டுகங் .. காளன் புகழ்பாடும்
ஏழை நந்தனனை ஞானியென் றாக்கிய .. ஈங்கோய் மலையானே
ஆழி யாம்பிறவி நீந்துபு ணையெனும் .. ஆன்றோர் நெறிகொண்டே
வாழும் நாளதனில் புண்ணியம் சேர்த்திடும் .. வண்மை பெறுநெஞ்சே. ... 11

--ரமணி, 01-07/01/2015, கலி.22/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 09, 2015 7:40 am

திருவேட்களம் (சிதம்பரம் அடுத்து)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=855
http://www.shivatemples.com/nofct/nct02.php

பதிகம்
சம்பந்தர்: அந்தமுமாதியு மாகியவண்ணல்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10390
அப்பர்: நன்று நாடொறும் நம்வினை போயறும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50420

காப்பு
வேட்களம் நின்றருள் வேழ விநாயக!
பாட்டினில் பாசுபதப் பட்டனைப் பாடிட
நாட்டம் கொளுமென்சொல் நல்வித மாகவே
ஆட்கொண் டருள்தரு வாய்.

[பட்டன் = சுவாமி, கடவுள்]

பதிகம்
பாசுபதம் விழைந்தவனாய்ப் பார்த்தனவன் தவம்செய்ய
ஆசுபதம் வேடனென அவதரிக்க, வனத்தில்மூ
காசுரனின் பன்றியுரு கணையால்பார்த் தனும்கொல்லப்
பூசலினை மேற்கொண்ட புண்ணியனூர் வேட்களமே. ... 1

[ஆசுபதம் = பற்றுக்கோடாய் விளங்கும் பாதம்]

தற்பரையும் சினங்கொண்டாள் தனஞ்சயன்வில் லாலடிக்கச்
சற்குணாநீ சினமறுத்தே தள்ளிநிற்பாய் என்றவீசன்
பொற்பதத்தால் அருச்சுனனைப் பொய்கையிலே எறிந்துபின்னர்
பற்குணனுக் கருள்செய்த பரமன்வாழ் வேட்களமே. ... 2

[தற்பரை = உமாதேவி; சற்குணா = இத்தலத்தில் அம்பாள் பெயர்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Feb 10, 2015 7:57 am

அம்பிகையின் கருவறையில் அன்றுநேர்ந்த வரலாறாய்
தும்பையணித் தூயனுடன் சுவேதவாகன் தனதுவில்லில்
அம்பூன்றிச் சமர்செய்த அழகுசிற்பத் தூண்களுற
அம்பலத்தான் அமர்ந்தருளும் அருட்டலமாம் வேட்களமே. ... 3

[சுவேதவாகன் = வெண்புரவியை வாகனமாகக் கொண்ட அருச்சுனன்]

கருவறையின் வெளிச்சுவரில் கணபதியும் துளக்கிலியும்
இரவியுடன் சந்திரனும் இலங்கியருள் செய்திடவே
முருகனும்தன் சன்னிதியில் முன்னின்றே மனையருடன்
அருணகிரித் துதிபெற்ற அருந்தலமாம் வேட்களமே. ... 4

[துளக்கிலி = அசைவற்ற சிவன், இங்கு தட்சிணாமூர்த்தி]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Feb 11, 2015 9:12 am

வேணுவனம் நிகழ்கதையால் வேய்மரமே தலவிருட்சம்
கேணியெனத் திகழ்குளத்தைக் கிருபாதீர்த் தம்மென்பர்
காணவரும் கோவிலிலே கலையழகும் சாத்திரமும்
தாணுமேவி யருள்செய்யும் தலமெனவே வேட்களமே. ... 5

அந்தமாதி யாகுமண்ணல் ஆரழலைக் கையேந்தி
சொந்தமென நகுதலையும் சோமனுடன் வானதியும்
சந்தமொலிக் கழற்பாதம் தந்தசூகம் அரையிலங்க
வெந்தபொடி மெய்பூசி விடையவனாய் வேட்களமே. ... 6

[சோமன் = சந்திரன்; தந்தசூகம் = பாம்பு]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 12, 2015 8:22 am

கறிவளரும் மலையெடுத்தான் கண்வளர்சேய் கண்ணெரித்தான்
வெறிவளர முனியெரிந்த வேழத்தைத் தோலுரித்தான்
எறிவளரும் பதந்தூக்கி எமன்நெஞ்சில் உதைத்தானே
நெறிவளர நின்றருளும் நிலைகொண்டான் வேட்களமே. ... 7

[கறிவளரும் மலையெடுத்தான் = மிளகுக் கொடிகள் நிறைந்த
கோவர்த்தனகிரியை எடுத்த கண்ணன்--இது சம்பந்தர் பாடலில் வரும் பிரயோகம்;
கண்வளர்சேய் = அந்தத் திருமாலின் மகனாகிய மன்மதன்; எறி = வீச்சு, உதை]

வல்லரக்கன் பனியார்ந்த வரைபேர்க்க யத்தனிக்கக்
கல்லால நிழலான்தன் கால்விரலால் அழுத்திடவே
அல்லலுற்ற அரக்கனவன் ஆர்த்தழுதே துதிபாட
மல்லனவன் வாள்தந்தே வந்தமர்ந்தான் வேட்களமே. ... 8

[மல்லன் = பெருமையிற் சிறந்தோன்]


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 12, 2015 10:23 am

பாமரர் தேவாரம் - Page 12 4q6df9z7TV2mgyToVcQd+T_500_855
-
பாமரர் தேவாரம் - Page 12 103459460

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 13, 2015 6:09 pm

(இறுதிப் பகுதி)

மாலயன்தாள் தலைதேடி மயல்சூழத் தழலானான்
மாலமுடன் எரிவனத்தில் மகிழ்ந்தாடிப் பறையொலிப்பான்
மாலையெனக் கொன்றையுடன் மத்தமலர் சூடிடுவான்
ஆலயத்தில் அருள்பெறவே ஆகிவரும் வேட்களமே. ... 9

[மாலம் = பேய்]

எத்தனையோ நெறியெனவே இறைவழியைக் காட்டுமின்று
அத்தனென இறைநிற்கும் அறவாழ்வே சிவநெறியே!
சித்தத்தில் இவ்வுண்மை திடமாகக் கொள்ளுவோர்க்கே
இத்தருணம் வினைகொள்ளும் ஈசனென வேட்களமே. ... 10

[அத்தன் = தகப்பன், தலைவன், மூத்தோன், குரு, கடவுள்]

திருநாவுக் கரசருடன் திருஞான சம்பந்தர்
அருளாளன் புகழ்பாடும் அருட்பதிகம் ஓதுவார்க்கு
மருள்நீங்கும் மயல்நீங்கும் மறியேந்தி மனம்நிற்கும்
திருவருளால் வினைநீங்கும் திரும்பவரும் பிறப்பிலையே! ... 11

--ரமணி, 06/02/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Feb 26, 2015 8:38 am

திருவாரூர் தியாகேசர்

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=598
http://www.shivatemples.com/sofct/sct087.php

பதிகம்
சம்பந்தர் (5), அப்பர் (21), சுந்தரர் (8)
http://www.shaivam.org/tamil/thiru_adangal.htm

காப்பு
(அளவியல் இன்னிசை வெண்பா)

நாற்பெருவி நாயகரும் நானெழுதும் பாக்களுக்கு
ஆற்பதமாய்ச் சொல்லொலியும் ஆர்ப்பரித்தே ஆண்டுவர
தாற்பரியம் ஆவதெல்லாம் தங்கிநிற்கும் ஏறுதரக்
காற்பதத்தில் வேண்டுவனே காப்பு.

[நாற்பெரு விநாயகர் = திருவாரூக் கோவிலில் 84
விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்குத் தனிச்சிறப்பு உண்டு.
--தினமலர் கோயில் பக்கம்
ஆற்பதம் = பற்றுக்கோடு]

பதிகம்
(எண்சீர் விருத்தம்: புளிமா தேமா விளம் மா
. புளிமா தேமா விளம் மா)


பிறந்தால் இல்லை பிறப்பெனச் சொல்லும்
. பெருமை கொண்ட சிவத்தல மாகச்
சிறந்த ஊரில் தென்றிசைக் கிழவன்
. சிவனை வேண்டி இறைப்பணி செய்ய
அறையில் சண்டி கேஸ்வர ராக
. அமரக் காணும் சன்னிதி இங்கே!
சிறவே செய்யும் அடியவர் வாழும்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 1

[தென்றிசைக் கிழவன் = எமனின் பெயர்களில் ஒன்று;
சிறவு = சிறந்த செயல்:
’சிறவே செய்து வழுவாதே சிவனே நின்தாள் சேர்ந்தாரே--திருவாசகம் 5.86’]

அரவப் புற்றில் நிலைக்களம் கொண்ட
. அணியன் இங்கே மூலவ ராவார்
உருவில் லிங்க வடிவுறத் தானே
. உதித்த மூர்த்தி யென்றிவர் சிறப்பே
உருவில் மூச்சாய் செய்திடும் அஜபம்
. உததித் தூங்கல் தியான மாகும்
திருமால் மார்பில் தாங்கிடும் ஈசர்
. திருவா ரூரின் தியாகரே யலரோ? ... 2

[உததி = கடல்; அஜபம் = சொல்லற்று மூச்சின் ஏற்ற இறக்கங்களால் செய்யும் ஹம்ஸஜபம்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 27, 2015 9:44 am

கமலாம் பாளோ டல்லியங் கோதை
. கவினார் பேரில் உமையவள் நின்றே
அமையும் கைகள் இரண்டெனக் கொண்டே
. அருள்செய் ஆதி சக்தியின் உருவாம்
கமறும் தொல்லைக் கடன்களைத் தீர்த்தே
. கவறும் நோயும் தீருண வீசர்
திமிலம் வேதம் நான்கொலி சேரும்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 3

[திமிலம் = பேரொலி; ’திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்’--திருவாசகம்]

விசையை யெட்டு சன்னிதி மேவி
. விவாகத் தடையும் குறைகளும் தீர்ப்பாள்
இசைவில் கோள்கள் ஒன்பதோர் கோட்டில்
. இணையக் கூர்ந்தே கணபதி காண்பார்
பசையார் லிங்கம் மரகத மாகப்
. பரந்தா மன்றன் நெஞ்சினிற் கொள்வார்
திசைகள் எட்டும் புகழுறும் தலமாம்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 4

[விசையை = துர்க்கை;]


Sponsored content

PostSponsored content



Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக