புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
1 Post - 1%
viyasan
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
19 Posts - 3%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:51 pm

அழகு மிக்க நிலவைக் கண்டு
மகிழும் வேளையில்
அங்கே வந்த மேகக் கூட்டம்
அதை மறைத்ததால்,
அழுது விட்டான் சின்னத் தம்பி
ஏங்கி ஏங்கியே!
அழுத பிள்ளை சிரித்த தேனோ?
அதையும் சொல்லுவேன்;

மறைந்தி ருந்த மேகம் பின்னர்
கலைந்து போனதால்
வானில் நிலா முன்பு போலத்
தெரிய லானது!
மறைந்த நிலவை வானில் மீண்டும்
கண்ட தம்பியின்
மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத்
திரும்பி வந்ததே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:52 pm

ராஜாஜியும் சிறுவனும்

கல்கத் தாவில் ராஜாஜி
கவர்ன ரானபின்
களிப்பை ஊட்டும் செய்தி யொன்று
வெளியில் வந்ததே.
நல்ல அந்தச் செய்தி தன்னை
உங்க ளிடத்திலே
நானிப் போது கூற வந்தேன்;
கேளும் நண்பரே !

சிறுவர் தம்மை மாளி கைக்கு
அவர் அழைத்தனர்.
தித்திப் பான பண்டத் தோடு
விருந்து வைத்தனர்.
விருந்து கவர்னர் அளித்த தாலே
பெருமை கொண்டனர்;
மிக்க மகிழ்ச்சி யோடு சிறுவர்
உண்ண லாயினர்.

அந்தச் சமயம் ராஜாஜி,
சிறுவன் ஒருவனின்
அருகில் சென்று சிரித்துக் கொண்டே
காதைப் பிடித்தனர்.
“உன்றன் காதைப் பிடித்து நானும்
முறுக்கும் போதிலே
உனது மனத்தில் இதனைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?

அகிம்சை என்று இதனை நீயும்
கருது கின்றாயா?
அன்றி இம்சை என்றே இதனைக்
கூறு கின்றாயா?”
மகிமை மி்க்க தலைவர் இதனைக்
கேட்ட வுடனேயே
மகிழ்ச்சி மிகவும் கொண்ட சிறுவன்
கூற லாயினன்:

“அகிம்சை இல்லை; இம்சை இல்லை;
தாங்கள் காட்டிடும்
அன்பு, அன்பு, அன்பு” என்றே
அவன் உரைத்தனன்.
மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர்
அவனை மெச்சினார்.
விவரம் அறிந்த சிறுவர் அங்கே
சிரிக்க லாயினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:53 pm

லண்டனில் தீபாவளி

லண்டனில் இந்திய மாணவர்கள்-மிக
நன்றாகத் தீபா வளிதினத்தைக்
கொண்டாடத் திட்டங்கள் போட்டனரே-ஒன்று
கூடிநல் ஏற்பாடு செய்தனரே !

பண்டிகை கொண்டாட வேண்டுமெனில்-அங்கே
பலமாய் விருந்து வேண்டுமன்றோ?
ஒன்றாகச் சேர்ந்து மாணவர்கள்-மிக
உற்சாக மாகச் சமைத்தனரே.

அந்தச் சமயத்தில் அவ்விடத்தே-ஓர்
அப்பாவி இந்தியர் வந்தடைந்தார்.
வந்தவர் யார்என ஒருவருமே-அந்த
மாணவர் கூட்டத்தில் கேட்கவில்லை.

ஏதும் விசாரணை செய்யவில்லை-ஆனால்,
ஏவினர் வேலைகள் செய்திடவே.
சாதுவாம் அந்த மனிதருமே-சற்றும்
தயங்கிட வேண்டுமே! இல்லை, இல்லை!

பாத்திரம் தேய்த்தனர்; பற்றுத் துலக்கினர்;
பம்பர மாய்வேலை செய்தனரே.
வேர்த்து விறுவிறுத் தேஅவரும்-பல
வேலைகள் செய்திடும் வேளையிலே,

வ.வே.சு. ஐயர் எனும்பெரியார்-அங்கு
வந்தனர்; சுற்றிலும் பார்த்தனரே.
ஏவல் புரியும் மனிதரைக் கண்டதும்
ஏனோ துடியாய்த் துடித்தனரே.

“அடடே, இவர்தாம் காந்தி!” யென்றார்-“நம்
அருமை விருந்தினர் இவரே” என்றார்.
உடனே அனைவரும் மன்னிப்புக் கோரிட,
உத்தமர் காந்தி உரைத்திடுவார்:

“ஒன்றாகச் சேர்ந்து சமையல்செய்தோம்-இது
ஒற்றுமை தன்னையே காட்டுமன்றோ?
நன்றாய் உழைத்துநாம் உண்பதிலே-சற்றும்
நாணமே இல்லை; உணர்ந்திடுவோம் !”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:54 pm

நாட்டிய நாடகம் - சண்டையும் சமாதானமும்

கமலா :

என்ன, என்ன, என்ன அதோ
சப்தம் கேட்குதே!-அடே,
எங்கள் வீட்டுத் தோட்டத் திலே
சப்தம் கேட்குதே!
சென்று நாமும் பார்த்து வரலாம்
வருவாய் தோழியே-என்ன
செய்தி என்றே அறிந்து வரலாம்
வருவாய் தோழியே!

விமலா :

வாய்தி றந்து ஏதோ வார்த்தை

சிரித்து வருகுது!
மல்லி கைப்பூ அதோ, அதோ
சொல்ல வருகுது!

மல்லிகைப் பூ :

மல்லி கைப்பூ என்ற வுடனே
மணம ணக்குமே.
மக்க ளுடைய உள்ள மெல்லாம்
மயங்கி நிற்குமே.
உள்ளம் குளிரப் பெண்கள் தலையில்
என்னை அணிவரே.
உருவம் சிறிதே ஆன போதும்
உயர்ந்த வள்நானே !

முத்து வடிவம் கொண்ட என்றன்
உடலைப் பாருங்கள்.
வெள்ளை உள்ளம் போன்ற என்றன்
நிறத்தைப் பாருங்கள்.
இத்த லத்தில் மலர்க ளுக்குள்
சிறப்பு மிக்கவள்
என்னைப் போல ஒருத்தி உண்டோ ?
இல்லை, இல்லையே !



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:55 pm

கமலா :

குவிந்தி ருக்கும் தாம ரைப்பூ
அதோ வருகுது!
கோபு ரத்துக் கலசம் போல
அதோ வருகுது!

தாமரைப் பூ :

சின்னப் பூவே மல்லிகை,
என்ன பேச்சுப் பேசினாய்?
என்னைப் போல ஒருத்தியை
எண்ணிப் பார்க்க வில்லையோ?

தண்ணீர் மேலே நிற்பவன்
தட்டைப் போல விரிபவள்
கண்ணுக் கினிதாய்த் தெரிபவள்
கடவுள் பூசைக் குரியவள்!

சிறப்பு மிக்க கலைமகள்
செல்வம் நல்கும் திருமகள்
இருவர் என்மேல் இருப்பரே.
என்போல் உண்டோ சொல்லடி?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:55 pm

விமலா :

தங்க நிறத்து அரளி அதோ
குலுங்கி வருகுது !
சண்டை போடத் தானோ அதுவும்
நெருங்கி வருகுது?


அரளிப் பூ :

மல்லி கையே! தாமரையே!
என்ன சொன்னீர்கள்?
மனித ருக்கே நீங்கள் உதவும்
கதையைச் சொன்னீர்கள்.
எல்லாம் வல்ல இறைவ னுக்கும்
பூசை செய்யவே,
இந்த உலகில் நான் பிறந்தேன்;
தெரிந்து கொள்ளுங்கள்.


அங்கம் முழுதும் மஞ்சள் பூசி
நிற்கும் என்னையே
தங்க அரளி என்றே மக்கள்
புகழ்ந்து கூறுவார்.
இங்கே உள்ள மலர்க ளுக்குள்
நானே சிறந்தவள் !
எதிர்த்துப் பேச எவருக் கேனும்
துணிச்சல் உண்டோடி?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:55 pm

கமலா :

அதோ, அதோ சாமந்தியும்
அருகில் வருகுதே!
அதுவும் இந்தச் சண்டையிலே
குதிக்கப் போகுதோ?

சாமந்திப் பூ :

மல்லிகை, தாமரை, தங்கரளி -
உங்கள்
மகிமையைக் கேட்டுச் சலித்து
விட்டேன்.
இல்லாத நில்லாத பெருமை
யெல்லாம்-நீங்கள்
ஏனோதான் பேசி மகிழுகின்றீர்?


தங்கம் போல் நானும் நிறமுடையேன்-ஈசன்
தலையிலும் கழுத்திலும் விளங்கிடுவேன்.
மங்கல காரியம் யாவிலுமே-என்னை
மக்கள் மறப்பதே இல்லையடி.

ஓரிரு நாள்களே வாழுகின்றீர்-நீங்கள்
உடலெல்லாம் வாடி வதங்குகின்றீர்.
ஆறேழு நாள்களே ஆயிடினும்-மணம்
அள்ளிப் பரப்புவேன் நான்அறிவீர்.

என்னை விரும்பி அணிந்திடுவார்-மிக்க
ஏழை எளியவர் யாவருமே.
பொன்னொளி வீசிடும் என்னைவிட-இந்தப்
பூக்களில் சிறந்தவள் யாரடியோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:56 pm

விமலா :

ஆகா ! ஆகா ! அதோ பார்.
அழகு ரோஜா மலரைப் பார் !
வேக மில்லை, கோப மில்லை,
மெல்ல மெல்ல வருகுது பார்!

கமலா :


பட்டுப் போன்ற மலர்இது
பையப் பைய வருகுது.
தொட்டுப் பார்க்கும் ஆசையைத்
தூண்டு கின்ற மலர்இது!


விமலா :

மலர்க ளுக்குள் அரசியாய்,
மணம் பரப்பும் மலரிது!
உலக முழுதும் போற்றிடும்
உயர்ந்த ஜாதி மலரிது!

கமலா :

தெய்வத் திற்குச் சூட்டலாம்;
திரும ணத்தில் அணியலாம்;
கையில் ஏந்தி நுகரலாம்;
களிப்பை ஊட்டும் மலரிது!

விமலா :

நேரு வுக்குப் பிடித்தது;
நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது;
பாரில் இதனைப் போலவே
பார்த்த துண்டோ ஒருமலர்!

கமலா :

இல்லை இல்லை, ரோஜாவும்
ஏதோ பேசப் போகுதே!

விமலா :

நல்ல தைத்தான் பேசிடும்;
நாமும் அதனைக் கேட்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:57 pm

ரோஜாப் பூ :

அருமைப் பூவே, மல்லிகையே!
அழகுப் பூவே, தாமரையே!
பெருமை யூட்டும் தங்கரளி!
பிரிய மான சாமந்தியே!

உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என்
உள்ளம் மிகமிக வாடியதே.
இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை
ஏனோ மறந்தீர், தோழியரே?

வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம்
வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும்
எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம்
இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய்.

கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல
காட்சி அளித்து விளங்குகிறோம்.
வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம்
வாரித் தேனை வழங்குகிறோம்.

திருவிழா, திருமணம், பண்டிககைள்-எல்லாம்
சிறந்திட நாமும் உதவிடுவோம்.
நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும்
நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:57 pm

என்னை விரும்பி அணிபவராம்-நேரு
இந்திய நாட்டின் சுடர்மணியாம்!
சண்டை விரும்பாத உத்தமராம்-அவர்
சாந்த வழியிலே சென்றவராம்.
சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத்
தங்கத் தலைவரின் சொற்படிநாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.


பூக்களின் குரல் :


சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.

கமலாவும் விமலாவும் :

- நாமும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
(பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)


Sponsored content

PostSponsored content



Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக