புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவெம்பாவை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
![திருவெம்பாவை - Page 3 ETL4zjnZTwCriZPyKfRp+thiruvembaavai](https://www.filepicker.io/api/file/eTL4zjnZTwCriZPyKfRp+thiruvembaavai.jpg)
புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர்.
÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் செய்த திருக்கோவையாரைக் கூறலாம். அடுத்து திருவாசகத்திலும் பல பாடல்கள் மகளிர் விளையாட்டுப் பாடல்களாக உள்ளன. அவைகளில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களாக இருப்பதைக் காண்கிறோம்.
÷இது முதலான சில காரணங்களால் திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.
÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.
÷மக்கள் ஆண்டில் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் என்றும், அந்த நாளில் விடியற்காலை நேரம் மார்கழித் திங்கள் என்னும் மரபாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் மற்றை நாட்களிலெல்லாம் எவ்வாறு இருப்பினும், மார்கழித் திங்களில் பெரும்பாலும் எல்லா மக்களுமே விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் ஆகிய ஒழுக்கமுடையவர்களாய் இருப்பர். அவர்களில் மணம் ஆகாத கன்னிப் பெண்டிர் அத்திங்களில் ஒருவரையொருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கியும் வருவார்கள்.
இந் நிலைமையில் சிவநெறிச் செல்வரது மகளிர் நிலையில் வைத்து மாணிக்கவாசகர் "திருவெம்பாவை'யை அம்மகளிர் கூற்றாக அருளிச் செய்துள்ளார். இப்பகுதியில் இலக்கியச் சுவையான நவரசங்களையும் நாம் காண்பதோடு, சிவபெருமானது அளவிலா பக்திச் சிறப்பையும் காண்கிறோம். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்பது ஒரு வழக்கம். எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய அவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. ÷திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். அதுபற்றி சிவபெருமானை "அண்ணாமலையான்' என்றே குறிப்பிடுகின்றார். அவருடைய திருவடியின் சிறப்பை இதன் இறுதிப் பாடலில் விரிவாக அருளுகின்றார்.
சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.
அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். ÷அனைத்துத் தேவர்களுடைய முடிகளிலுள்ள மணிகளின் ஒளித்திரட்சி சிவபெருமானின் திருவடிகள் வீசும் ஒளியின் முன் வேறு காணப்படாது அதனுள் அடங்கிவிடுகின்றன. இந்தச் செய்தியை மாணிக்கவாசகர், நீராடச் சென்ற பெண்கள், "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தில் இடம்பெறச் செய்கிறார்.
(மேற்கண்டவை மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)
தொடரும்
![திருவெம்பாவை - Page 3 ETL4zjnZTwCriZPyKfRp+thiruvembaavai](https://www.filepicker.io/api/file/eTL4zjnZTwCriZPyKfRp+thiruvembaavai.jpg)
புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர்.
÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் செய்த திருக்கோவையாரைக் கூறலாம். அடுத்து திருவாசகத்திலும் பல பாடல்கள் மகளிர் விளையாட்டுப் பாடல்களாக உள்ளன. அவைகளில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களாக இருப்பதைக் காண்கிறோம்.
÷இது முதலான சில காரணங்களால் திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.
÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.
÷மக்கள் ஆண்டில் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் என்றும், அந்த நாளில் விடியற்காலை நேரம் மார்கழித் திங்கள் என்னும் மரபாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் மற்றை நாட்களிலெல்லாம் எவ்வாறு இருப்பினும், மார்கழித் திங்களில் பெரும்பாலும் எல்லா மக்களுமே விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் ஆகிய ஒழுக்கமுடையவர்களாய் இருப்பர். அவர்களில் மணம் ஆகாத கன்னிப் பெண்டிர் அத்திங்களில் ஒருவரையொருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கியும் வருவார்கள்.
இந் நிலைமையில் சிவநெறிச் செல்வரது மகளிர் நிலையில் வைத்து மாணிக்கவாசகர் "திருவெம்பாவை'யை அம்மகளிர் கூற்றாக அருளிச் செய்துள்ளார். இப்பகுதியில் இலக்கியச் சுவையான நவரசங்களையும் நாம் காண்பதோடு, சிவபெருமானது அளவிலா பக்திச் சிறப்பையும் காண்கிறோம். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்பது ஒரு வழக்கம். எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய அவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. ÷திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். அதுபற்றி சிவபெருமானை "அண்ணாமலையான்' என்றே குறிப்பிடுகின்றார். அவருடைய திருவடியின் சிறப்பை இதன் இறுதிப் பாடலில் விரிவாக அருளுகின்றார்.
சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.
அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். ÷அனைத்துத் தேவர்களுடைய முடிகளிலுள்ள மணிகளின் ஒளித்திரட்சி சிவபெருமானின் திருவடிகள் வீசும் ஒளியின் முன் வேறு காணப்படாது அதனுள் அடங்கிவிடுகின்றன. இந்தச் செய்தியை மாணிக்கவாசகர், நீராடச் சென்ற பெண்கள், "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தில் இடம்பெறச் செய்கிறார்.
(மேற்கண்டவை மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)
தொடரும்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமையான பாடல்கள், அழகான விளக்கம்...
தொடருங்கள் சாமி
தொடருங்கள் சாமி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![திருவெம்பாவை - Page 3 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்''
என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது.
வரதராஜபிள்ளை இப்பாட்டிற்கு, ""ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும் உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று தெருவின்கண் கேட்ட அளவிலேயே எங்கள் தோழி ஒருத்தி, பொருமி அழுது, உடம்பை மறந்து, மலர்நிறைந்த படுக்கையின்மீதிருந்து புரண்டு விழுந்து, இந்நிலத்தே ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை. என்ன வியப்பு!'' என்று பொருள் கொண்டுள்ளார். அவர் கருத்துப்படி இப்பாடல் எழுப்பப்படும் பெண்ணொருத்தியும், வாழ்த்தொலி கேட்டு மயங்கிய பெண்ணொருத்தியுமாக இருவர் நிலையைக் கூறுவதாகும்.
அருணைவடிவேல் முதலியார், ""மாதேவன் வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்டவளும் உள்ளே கிடப்பவளும் ஒருத்தியே'' என்கிறார். அஃது இன்னொரு பெண்ணின் நிலையினைக் கூறுவதாயின், அவள் கிடந்தாள் என்று மட்டும் கூறியொழியாது பின்னர் எழுந்து வந்தாள் என்றும் ஒருதலையாகக் கூறவேண்டும். அப்படிக் கூறாமையால் பொருந்தாது என்கிறார். மேலும்,
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
என்பது வரை, ""சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன என்றும், எஞ்சிய பகுதி அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகையாடிக் கூறுவன என்றும் இவையும் அவள் கேட்டு எழுந்துவருவாள் என்னும் கருத்தினால் கூறுவனவேயாம்'' என்றும் தெரிவிக்கிறார். "நம் தோழி உறக்கத்தால் எழாது இருக்கிறாள் அல்லள்; நமது பாடல் வீதியில் எழும்போதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிலேயே மெய்ம்மறந்து கிடக்கிறாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது?' என்பது அப்பகுதியின் திரண்ட பொருள் என்று எழுதுகிறார்.
இப்பாடலில் ஒரு பெண்ணின் நிலையே பேசப்படுகிறது என்பது சரியே. ஆனால், பாட்டில் "வாழ்த்தொலிபோய்' என்னும் தொடர் அமைந்துள்ளது. "வாழ்த்தொலி இங்குப் போயிற்று' என்று வாராது; "அங்குப் போயிற்று' என்றுதான் வரும். எழுப்ப வந்த பெண்கள், உறங்குபவள் வீட்டின் வாசலில் நிற்கிறார்கள். ஆகவே, வாழ்த்திய வாழ்த்தொலி அங்கு வீதியில் போய் ஒலிக்க, இங்கு இவள் அதனைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறாள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. பலரும் இந்தப் "போய்' என்பதனை விடுத்து வீதியில் வாழ்த்திக்கொண்டு வந்தது கேட்டு என்றே பொருள் கூறியுள்ளனர். இப்படிப் பொருள்கொள்ளும்போது "போய்' என்பது வறிதே நிற்கிறது. இச்சொல் ஏடு எழுதுபவரால் ஓசையின்பத்திற்காகச் சேர்க்கப்பட்டுவிட்டதோ என்னும் ஐயம் உண்டாகிறது. "வாழ்த்தொலிபோய் வீதிவாய்' என்பது காய் முன் நேராய் வெண்சீர் வெண்டளை ஆகும். "வாழ்த்தொலி வீதிவாய்' என்பது விளமுன் நேராய் இயற்சீர் வெண்டளை ஆகும்.
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
என்று இருந்தாலும் யாப்புக் கெடாது. நாம் வாழ்த்திய வாழ்த்தொலி வீதிமுனையில் கேட்டலும் விம்மி விம்மி அழுதாள் என்று பொருளும் பொருத்தமாக அமைகிறது. இப்பாட்டிலேயே ஆறு இடங்களில் இயற்சீர் வெண்டளை வருதல் காணலாம். இது குறித்து அறிஞர்கள் சிந்திப்பார்களாக. - முனைவர் தெ. ஞானசுந்தரம் / dinamani
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்''
என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது.
வரதராஜபிள்ளை இப்பாட்டிற்கு, ""ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும் உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று தெருவின்கண் கேட்ட அளவிலேயே எங்கள் தோழி ஒருத்தி, பொருமி அழுது, உடம்பை மறந்து, மலர்நிறைந்த படுக்கையின்மீதிருந்து புரண்டு விழுந்து, இந்நிலத்தே ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை. என்ன வியப்பு!'' என்று பொருள் கொண்டுள்ளார். அவர் கருத்துப்படி இப்பாடல் எழுப்பப்படும் பெண்ணொருத்தியும், வாழ்த்தொலி கேட்டு மயங்கிய பெண்ணொருத்தியுமாக இருவர் நிலையைக் கூறுவதாகும்.
அருணைவடிவேல் முதலியார், ""மாதேவன் வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்டவளும் உள்ளே கிடப்பவளும் ஒருத்தியே'' என்கிறார். அஃது இன்னொரு பெண்ணின் நிலையினைக் கூறுவதாயின், அவள் கிடந்தாள் என்று மட்டும் கூறியொழியாது பின்னர் எழுந்து வந்தாள் என்றும் ஒருதலையாகக் கூறவேண்டும். அப்படிக் கூறாமையால் பொருந்தாது என்கிறார். மேலும்,
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
என்பது வரை, ""சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன என்றும், எஞ்சிய பகுதி அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகையாடிக் கூறுவன என்றும் இவையும் அவள் கேட்டு எழுந்துவருவாள் என்னும் கருத்தினால் கூறுவனவேயாம்'' என்றும் தெரிவிக்கிறார். "நம் தோழி உறக்கத்தால் எழாது இருக்கிறாள் அல்லள்; நமது பாடல் வீதியில் எழும்போதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிலேயே மெய்ம்மறந்து கிடக்கிறாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது?' என்பது அப்பகுதியின் திரண்ட பொருள் என்று எழுதுகிறார்.
இப்பாடலில் ஒரு பெண்ணின் நிலையே பேசப்படுகிறது என்பது சரியே. ஆனால், பாட்டில் "வாழ்த்தொலிபோய்' என்னும் தொடர் அமைந்துள்ளது. "வாழ்த்தொலி இங்குப் போயிற்று' என்று வாராது; "அங்குப் போயிற்று' என்றுதான் வரும். எழுப்ப வந்த பெண்கள், உறங்குபவள் வீட்டின் வாசலில் நிற்கிறார்கள். ஆகவே, வாழ்த்திய வாழ்த்தொலி அங்கு வீதியில் போய் ஒலிக்க, இங்கு இவள் அதனைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறாள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. பலரும் இந்தப் "போய்' என்பதனை விடுத்து வீதியில் வாழ்த்திக்கொண்டு வந்தது கேட்டு என்றே பொருள் கூறியுள்ளனர். இப்படிப் பொருள்கொள்ளும்போது "போய்' என்பது வறிதே நிற்கிறது. இச்சொல் ஏடு எழுதுபவரால் ஓசையின்பத்திற்காகச் சேர்க்கப்பட்டுவிட்டதோ என்னும் ஐயம் உண்டாகிறது. "வாழ்த்தொலிபோய் வீதிவாய்' என்பது காய் முன் நேராய் வெண்சீர் வெண்டளை ஆகும். "வாழ்த்தொலி வீதிவாய்' என்பது விளமுன் நேராய் இயற்சீர் வெண்டளை ஆகும்.
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
என்று இருந்தாலும் யாப்புக் கெடாது. நாம் வாழ்த்திய வாழ்த்தொலி வீதிமுனையில் கேட்டலும் விம்மி விம்மி அழுதாள் என்று பொருளும் பொருத்தமாக அமைகிறது. இப்பாட்டிலேயே ஆறு இடங்களில் இயற்சீர் வெண்டளை வருதல் காணலாம். இது குறித்து அறிஞர்கள் சிந்திப்பார்களாக. - முனைவர் தெ. ஞானசுந்தரம் / dinamani
பாடல் எண் : 17
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.
(தொடரும்)
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.
(தொடரும்)
பாடல் எண் : 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.
(தொடரும்)
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.
(தொடரும்)
பாடல் எண் : 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?
(தொடரும்)
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?
(தொடரும்)
![திருவெம்பாவை - Page 3 DPNGK0bMSxulKk1WRrrh+sivan](https://www.filepicker.io/api/file/DPNGK0bMSxulKk1WRrrh+sivan.jpg)
பாடல் எண் : 20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்.
எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்;
எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்,
எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்.
திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்.
நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்.
இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.
(பாடலுக்கு உண்டான விளக்கம், தேவாரம் இணையதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது. நன்றி!)
“திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு”
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த திருவாசகத்தினுள் சிவபுராணத்துக்கு ஒத்தநிலையில் உலகில் உள்ள பல்வேறு மக்களாலும் உணரப்பெற்ற பெருமையுடைய பகுதிகளே திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.
திருஞானசம்பந்தப் பெருமான் தோணித்துறை புகுந்தவர்; திருநாவுக்கரசர் அறத்துறை புகுந்தவர்; சுந்தரர் பெருமான் அருட்டுறை புக்கவர்; மணிவாசகப்பெருமான் பெருந்துறை புகுந்தவர்.
தோணித்துறை, அறத்துறை, அருட்டுறை ஆகிய மூன்றையும் மருவியுயர்ந்து நின்றதால் பெருந்துறை எனப்பெற்றது. இங்கே குறிப்பிடப் பெற்றவைகளையெல்லாம் தலங்களாக எண்ணுவது ஒருவகை. அனுபவப்படிகளாகக் கொள்ளுதல் திருவாசகத்தை அனுபவிப்பதற்குத் துணை செய்யும்.
திருவாசகத்தை மணிவாசகப் பெருந்தகை செல்லும் தலங்கள் தோறும் நின்று இறையனுபவம் பெற்றுப்பாடியனவாக அமைத்துக்கொள்ளுவது ஒரு வகை. ஆயினும் இன்று நமக்குக் கிடைக்கும் திருவாசகம் இரண்டாம் முறையாகப் பாடப்பெற்றதாக அமைத்துக்கொள்வது பொருத்தமுடையது.
தில்லைக் கூத்தப்பெருமான் மணிவாசகரைத் திருவாசகத்தைப் பாடுமாறு அருளிச்செய்ய; அவரும் பாட, எழுதிக்கொண்ட வடிவமைப்புடையதே இன்று நாம் பெற்றிருக்கும் திருவாசகம். இதனாலேயே மணிவாசகப் பெருந்தகை,
“திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு”
என்று சிவபுராணத்திற் கூறியருள்வாராயினர். இதனாலேயே கோவைத்திருவாசகம் எனப்பெற்றது. கோவையாக அமைத்து நிரலே வடிவமைத்துச் சொல்லப் பெற்ற திருவாசகம் என்பது பொருள்.
- பேராசிரியர் டாக்டர். வை. இரத்தினசபாபதி
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த திருவாசகத்தினுள் சிவபுராணத்துக்கு ஒத்தநிலையில் உலகில் உள்ள பல்வேறு மக்களாலும் உணரப்பெற்ற பெருமையுடைய பகுதிகளே திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.
திருஞானசம்பந்தப் பெருமான் தோணித்துறை புகுந்தவர்; திருநாவுக்கரசர் அறத்துறை புகுந்தவர்; சுந்தரர் பெருமான் அருட்டுறை புக்கவர்; மணிவாசகப்பெருமான் பெருந்துறை புகுந்தவர்.
தோணித்துறை, அறத்துறை, அருட்டுறை ஆகிய மூன்றையும் மருவியுயர்ந்து நின்றதால் பெருந்துறை எனப்பெற்றது. இங்கே குறிப்பிடப் பெற்றவைகளையெல்லாம் தலங்களாக எண்ணுவது ஒருவகை. அனுபவப்படிகளாகக் கொள்ளுதல் திருவாசகத்தை அனுபவிப்பதற்குத் துணை செய்யும்.
திருவாசகத்தை மணிவாசகப் பெருந்தகை செல்லும் தலங்கள் தோறும் நின்று இறையனுபவம் பெற்றுப்பாடியனவாக அமைத்துக்கொள்ளுவது ஒரு வகை. ஆயினும் இன்று நமக்குக் கிடைக்கும் திருவாசகம் இரண்டாம் முறையாகப் பாடப்பெற்றதாக அமைத்துக்கொள்வது பொருத்தமுடையது.
தில்லைக் கூத்தப்பெருமான் மணிவாசகரைத் திருவாசகத்தைப் பாடுமாறு அருளிச்செய்ய; அவரும் பாட, எழுதிக்கொண்ட வடிவமைப்புடையதே இன்று நாம் பெற்றிருக்கும் திருவாசகம். இதனாலேயே மணிவாசகப் பெருந்தகை,
“திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு”
என்று சிவபுராணத்திற் கூறியருள்வாராயினர். இதனாலேயே கோவைத்திருவாசகம் எனப்பெற்றது. கோவையாக அமைத்து நிரலே வடிவமைத்துச் சொல்லப் பெற்ற திருவாசகம் என்பது பொருள்.
- பேராசிரியர் டாக்டர். வை. இரத்தினசபாபதி
இன்று சிலை மாதம் (மார்கழி) பிறக்கிறது உறவுகளே!
திருவெம்பாவை ஓதி பயன்பெறுங்கள்!
அன்புடன்
சாமி
திருவெம்பாவை ஓதி பயன்பெறுங்கள்!
அன்புடன்
சாமி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தனுர் மாதத்தில் படிக்க வேண்டிய @ பாடவேண்டி பாடல் ...பயன்படுத்துவோம்...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|