புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 9 of 81 •
Page 9 of 81 • 1 ... 6 ... 8, 9, 10 ... 45 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்திய எல்லைக்குள் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்
காஷ்மீர் எல்லைப்பகுதியான தவுலத் பெக் ஒல்டி பகுதிக்குள் கடந்த ஏப்ரல் மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தன. சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய அவர்கள் கூடாரங்கள் அமைத்து, சீன கொடிகளையும் நாட்டினர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் சீன படைகள் மீண்டும் காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள செப்சி பகுதியில் ஊடுருவி முகாமிட்டுள்ளனர். கடந்த வாரம் 22 சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 10 கூடாரங்களை அமைத்து, சீன கொடிகளையும் நாட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
காஷ்மீர் எல்லைப்பகுதியான தவுலத் பெக் ஒல்டி பகுதிக்குள் கடந்த ஏப்ரல் மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தன. சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய அவர்கள் கூடாரங்கள் அமைத்து, சீன கொடிகளையும் நாட்டினர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் சீன படைகள் மீண்டும் காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள செப்சி பகுதியில் ஊடுருவி முகாமிட்டுள்ளனர். கடந்த வாரம் 22 சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 10 கூடாரங்களை அமைத்து, சீன கொடிகளையும் நாட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இஸ்ரேல் பஸ்சில் குண்டு வெடித்தது டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்
இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகருக்கு அருகே பயணிகள் பஸ் ஒன்று சென்றது. அதில் பின்பக்க இருக்கையில் மர்ம பை இருந்தது. இதை கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து டிரைவரிடம் கூறினார். உடனே டிரைவர் சுதாரித்து பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் வெறியேற்றினார். சற்று நேரத்தில் பையில் பதுக்கி வைத்த குண்டு வெடித்து பஸ் ஜன்னல்கள் நொறுங்கின. டிரைவரின் சாமர்த்தியத்தால் 12 பயணிகள் காயமின்றி தப்பினர்.இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் பாலஸ்தீன ஹாமாஸ் இயக்கம் காரணம் என தெரியவருகிறது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகருக்கு அருகே பயணிகள் பஸ் ஒன்று சென்றது. அதில் பின்பக்க இருக்கையில் மர்ம பை இருந்தது. இதை கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து டிரைவரிடம் கூறினார். உடனே டிரைவர் சுதாரித்து பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் வெறியேற்றினார். சற்று நேரத்தில் பையில் பதுக்கி வைத்த குண்டு வெடித்து பஸ் ஜன்னல்கள் நொறுங்கின. டிரைவரின் சாமர்த்தியத்தால் 12 பயணிகள் காயமின்றி தப்பினர்.இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் பாலஸ்தீன ஹாமாஸ் இயக்கம் காரணம் என தெரியவருகிறது.
கலவரம் எதிரொலி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை எதிர்காலத்தில் புகார் வந்தால் நடவடிக்கை
கலவரம் எதிரொலியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் 200 பேருக்கு சிங்கப்பூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எதிர்காலத்தில் அவர்கள்மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
சிங்கப்பூரில் கலவரம்
சிங்கப்பூரில், ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் தமிழரான சக்திவேல் குமாரவேலு (வயது 39) என்பவர் தனியார் பஸ் விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரங்கள் நடந்தன. 39 போலீசார் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 16 போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட 25 வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.
1969–ம் ஆண்டுக்கு பிறகு சிங்கப்பூரில் இப்படி ஒரு கலவரம் நடந்தது இதுவே முதல் முறை. இந்தக் கலவரங்களில் 400 வெளிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர்களில் 56 இந்தியர்கள், ஒரு வங்காளதேச பிரஜை ஆகியோர் சமீபத்தில் அங்கிருந்து அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
போலீஸ் எச்சரிக்கை
இந்த நிலையில் 200 வெளிநாட்டு தொழிலாளர்களை போலீசார் நேற்று நேரில் வரவழைத்தனர். அவர்கள் சிங்கப்பூர் சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கன்டோன்மென்ட் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நேரில் வந்தனர். அவர்களுடன் அவர்களது நிறுவன அதிபர்களும் வந்திருந்தனர்.
வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும், சிங்கப்பூர் சட்டத்திற்கு கட்டப்பட்டு வாழ வேண்டும், அவர்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது, புகாரும் வரக்கூடாது, அப்படி குற்றச்செயலில் ஈடுபட்டால், புகார் வந்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும், அவர்கள் வேலை உரிமைகளும் பறிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
இந்த எச்சரிக்கை வாய் வார்த்தைகள் மூலமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 28 இந்தியர்கள் இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
கலவரம் எதிரொலியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் 200 பேருக்கு சிங்கப்பூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எதிர்காலத்தில் அவர்கள்மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
சிங்கப்பூரில் கலவரம்
சிங்கப்பூரில், ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் தமிழரான சக்திவேல் குமாரவேலு (வயது 39) என்பவர் தனியார் பஸ் விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரங்கள் நடந்தன. 39 போலீசார் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 16 போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட 25 வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.
1969–ம் ஆண்டுக்கு பிறகு சிங்கப்பூரில் இப்படி ஒரு கலவரம் நடந்தது இதுவே முதல் முறை. இந்தக் கலவரங்களில் 400 வெளிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர்களில் 56 இந்தியர்கள், ஒரு வங்காளதேச பிரஜை ஆகியோர் சமீபத்தில் அங்கிருந்து அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
போலீஸ் எச்சரிக்கை
இந்த நிலையில் 200 வெளிநாட்டு தொழிலாளர்களை போலீசார் நேற்று நேரில் வரவழைத்தனர். அவர்கள் சிங்கப்பூர் சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கன்டோன்மென்ட் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நேரில் வந்தனர். அவர்களுடன் அவர்களது நிறுவன அதிபர்களும் வந்திருந்தனர்.
வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும், சிங்கப்பூர் சட்டத்திற்கு கட்டப்பட்டு வாழ வேண்டும், அவர்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது, புகாரும் வரக்கூடாது, அப்படி குற்றச்செயலில் ஈடுபட்டால், புகார் வந்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும், அவர்கள் வேலை உரிமைகளும் பறிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
இந்த எச்சரிக்கை வாய் வார்த்தைகள் மூலமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 28 இந்தியர்கள் இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
தாய்லாந்தில் அரசு எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தாய்லாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யிங்லக் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், யிங்லக் ஷினவத்ரா வெளிநாட்டில் வசிக்கும் தன் அண்ணன் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தக்ஷின் ஷினவத்ராவின் ஆட்சி 2006 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக்ஷின் ஷினவத்ராவுக்கு பொது மன்னிப்பு வழங்க தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும் மலிந்து விட்டதாகவும் கூறி எதிர்க்கட்சியினர் கடந்த சில வாரங்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதமர் யிங்லக் கலைத்து விட்டார். வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சி கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காபந்து பிரதமராகச் செயல்படும் யிங்லக் முழுமையாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாங்காக் வீதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி பிரம்மாண்டப் பேரணி நடத்தினர். ஐந்து முக்கிய வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால், போக்குவரத்து முடங்கியது. இதனிடையே, தாய்லாந்து ராணுவத் தலைமை, “தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டுவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தாய்லாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யிங்லக் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், யிங்லக் ஷினவத்ரா வெளிநாட்டில் வசிக்கும் தன் அண்ணன் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தக்ஷின் ஷினவத்ராவின் ஆட்சி 2006 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக்ஷின் ஷினவத்ராவுக்கு பொது மன்னிப்பு வழங்க தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும் மலிந்து விட்டதாகவும் கூறி எதிர்க்கட்சியினர் கடந்த சில வாரங்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதமர் யிங்லக் கலைத்து விட்டார். வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சி கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காபந்து பிரதமராகச் செயல்படும் யிங்லக் முழுமையாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாங்காக் வீதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி பிரம்மாண்டப் பேரணி நடத்தினர். ஐந்து முக்கிய வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால், போக்குவரத்து முடங்கியது. இதனிடையே, தாய்லாந்து ராணுவத் தலைமை, “தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டுவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் வன்முறை வங்காளதேசத்தில் ராணுவம் குவிப்பு
வங்காளதேசத்தில் ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மற்றும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெற்று விட்டனர்.
இந்த தேர்தலை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். எனவே வன்முறையை தடுக்க தலைநகர் டாக்கா உள்பட முக்கிய நகரங்களில் இன்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.
வங்காளதேசத்தில் ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மற்றும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெற்று விட்டனர்.
இந்த தேர்தலை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். எனவே வன்முறையை தடுக்க தலைநகர் டாக்கா உள்பட முக்கிய நகரங்களில் இன்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.
பாக்தாத் கிறிஸ்தவ ஆலயம் குண்டுவெடிப்பு ; பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரிப்பு
தெற்கு பாக்தாத்தில் டோரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது கிறிஸ்துமஸ் ஆலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் மருத்துவக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது கிடைத்த தகவல்களின் படி பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவில் மட்டும் ஈராக்கில் 441 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி, 8,000 க்கும் கிறிஸ்துவர்கள் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு பாக்தாத்தில் டோரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது கிறிஸ்துமஸ் ஆலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் மருத்துவக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது கிடைத்த தகவல்களின் படி பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவில் மட்டும் ஈராக்கில் 441 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி, 8,000 க்கும் கிறிஸ்துவர்கள் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 24 பேர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க வட மகாணங்களில் கடந்த சில நாட்கலாக வீசிவரும் பனிப்புயலுக்கு 24-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகி உள்ளனர் பனிப்புயலால் அமெரிக்க முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்று தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மின்சாரம் தடைபட்டதால் நேற்று கிறிஸ்துமஸ் விழா அவ்வூர் மக்கள் இருளிலேயே கொண்டாடினர். பனிப்புயலால் பாதிக்கப்ட்டவர்களை அந்நாட்டு ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.பனிப்புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிக்கிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பனிப்புயலால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரகனக்கான விமான சேவைகள் ரத்து செய்யபட்டௌ உள்லனர். பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கி உள்ளனர். இது போல் இங்கிலாந்து ,கனடா,ரஷ்யா போன்ற நாடுகளும் கடும்பனிப்பொழிவால் பாதிக்கபட்டு உள்ளன
அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க வட மகாணங்களில் கடந்த சில நாட்கலாக வீசிவரும் பனிப்புயலுக்கு 24-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகி உள்ளனர் பனிப்புயலால் அமெரிக்க முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்று தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மின்சாரம் தடைபட்டதால் நேற்று கிறிஸ்துமஸ் விழா அவ்வூர் மக்கள் இருளிலேயே கொண்டாடினர். பனிப்புயலால் பாதிக்கப்ட்டவர்களை அந்நாட்டு ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.பனிப்புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிக்கிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பனிப்புயலால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரகனக்கான விமான சேவைகள் ரத்து செய்யபட்டௌ உள்லனர். பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கி உள்ளனர். இது போல் இங்கிலாந்து ,கனடா,ரஷ்யா போன்ற நாடுகளும் கடும்பனிப்பொழிவால் பாதிக்கபட்டு உள்ளன
எகிப்து முன்னாள் பிரதமர் கைது; போலீஸ் தலைமை அலுவலத்தில் கார் குண்டு வெடித்து 15 பேர் பலி
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் இடைக்கால அரசில் பிரதமராக இருந்தவர் ஹிஷாம் குண்டில். இவர் பதவியில் இருந்த போது 1996-ம் ஆண்டில் தனியார் மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை மீண்டும் தேசிய மயமாக்க ஆளுங்கட்சி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை காண்டில் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கு எகிப்து கோர்ட்டு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து கெய்ரோ கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தலைமறை வாக இருந்தார்.
இந்த நிலையில் காண்டில் சூடான் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக தலைநகர் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலை வனம் வழியாக சென்ற போது அவரைபோலீசார் கைது செய்தனர். காண்டில் கைது செய்யப்பட்டதை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
அவர் கைது செய்யபட்ட சிறிது நேரத்தில் போலீஸ் தலைமைத்தில் கார் வெடித்தது இதில் 12 போலீஸ் காரர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள்.
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் இடைக்கால அரசில் பிரதமராக இருந்தவர் ஹிஷாம் குண்டில். இவர் பதவியில் இருந்த போது 1996-ம் ஆண்டில் தனியார் மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை மீண்டும் தேசிய மயமாக்க ஆளுங்கட்சி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை காண்டில் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கு எகிப்து கோர்ட்டு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து கெய்ரோ கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தலைமறை வாக இருந்தார்.
இந்த நிலையில் காண்டில் சூடான் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக தலைநகர் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலை வனம் வழியாக சென்ற போது அவரைபோலீசார் கைது செய்தனர். காண்டில் கைது செய்யப்பட்டதை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
அவர் கைது செய்யபட்ட சிறிது நேரத்தில் போலீஸ் தலைமைத்தில் கார் வெடித்தது இதில் 12 போலீஸ் காரர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள்.
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் மூளும் அபாயம்; பாதுகாப்புக்காக கூடுதலாக 7 ஆயிரம் ராணுவ வீரர்களை ஐ.நா. அனுப்பியது
தெற்கு சூடானில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி ஜ.நா.வின் அமைதி முகாமில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக 7 ஆயிரம் ராணுவ வீரர்களை ஐ.நா. நேற்று அனுப்பியது.
தெற்குசூடானில் அதிபர்கள் மோதல்
கடந்த 2011–ம் ஆண்டு உதயமான தெற்குசூடானில் பழங்குடி தலைவரான சல்வாகீர் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் துணை அதிபராக இன்னொரு பழங்குடி இனத்தை சேர்ந்த ரிக் மசூது இருந்து வருகிறார்.
இந்த நிலையில் துணை அதிபரை சல்வாகீர் அதிரடியாக நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அதிபரின் படைக்கும் துணை அதிபரின் ரிக்மசூது புரட்சிப்படையினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது.
ஆயிரம் பேர் பலி–மக்கள் வெளியேற்றம்
கடந்த 3 நாட்களாக நடந்த இந்த மோதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஏராளமான அப்பாவி பொதுமக்கள் வெளியேறி வருகிறார்கள். தஞ்சம் தேடி ஓடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படையினர் 6 இடங்களில் முகாம் அமைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். ஐ.நா.வின் அமைதிப்படையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 43 பேர் இடம் பெற்று உள்ளனர்.
புரட்சிபடையினர் அமைதிப்படை முகாம் மீது நடத்திய தாக்குதலை அமைதிப்படை முறியடித்தது. இதில் இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு இந்திய ராணுவத்தை ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது.
உள்நாட்டு போர் மூளும் அபாயம்
இந்த நிலையில் தெற்குசூடானில் அரசு படைக்கும் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால் தெற்குசூடானில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு பயந்து அங்கிருந்து அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி அமைதிப்படையின் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவ்வாறு தஞ்சம் புகும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை செய்ய ஐ.நா.சபை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூடுதலாக 7 ஆயிரம் வீரர்கள்
தெற்கு சூடானில் உள்ள ஐ.நா.வின் அமைதிப்படையில் தற்போது 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு பாதுகாப்பு வசதியை மேம்படுத்துவதற்காக தெற்கு சூடானுக்கு 12,500 ராணுவ வீரர்களும், 1323 போலீசாரையும் ஐ.நா.சபை கூடுதலாக அனுப்பி உள்ளது. இவர்களையும் சேர்த்து ஐ.நா. அமைதிமுகாமில் தற்போது 14 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஐ.நா.சபையின் மனிதநேய தலைவர் டோபி லான்சர் கூறுகையில், ‘தெற்கு சூடானில் நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். தெற்குசூடானில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஐ.நா.சபை தலைவர் பான் கி மூன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அமெரிக்க மந்திரி பேச்சு
இதற்கிடையே தெற்குசூடானில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.சபை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க ராணுவ மந்திரி ஜான்கெர்ரி மற்றும் எத்தியோப்பியா நாட்டு மந்திரி ஆகியோர், தெற்கு சூடான் அதிபர் சல்வார்கீருருடன் டெலிபோனில் பேசினார்கள். அப்போது அவர்கள் தெற்குசூடானில் அமைதி நிலவவும், நியாயமான தேர்தலை நடத்தவும் கேட்டுக்கொண்டனர்.
தெற்கு சூடானில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி ஜ.நா.வின் அமைதி முகாமில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக 7 ஆயிரம் ராணுவ வீரர்களை ஐ.நா. நேற்று அனுப்பியது.
தெற்குசூடானில் அதிபர்கள் மோதல்
கடந்த 2011–ம் ஆண்டு உதயமான தெற்குசூடானில் பழங்குடி தலைவரான சல்வாகீர் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் துணை அதிபராக இன்னொரு பழங்குடி இனத்தை சேர்ந்த ரிக் மசூது இருந்து வருகிறார்.
இந்த நிலையில் துணை அதிபரை சல்வாகீர் அதிரடியாக நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அதிபரின் படைக்கும் துணை அதிபரின் ரிக்மசூது புரட்சிப்படையினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது.
ஆயிரம் பேர் பலி–மக்கள் வெளியேற்றம்
கடந்த 3 நாட்களாக நடந்த இந்த மோதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஏராளமான அப்பாவி பொதுமக்கள் வெளியேறி வருகிறார்கள். தஞ்சம் தேடி ஓடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படையினர் 6 இடங்களில் முகாம் அமைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். ஐ.நா.வின் அமைதிப்படையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 43 பேர் இடம் பெற்று உள்ளனர்.
புரட்சிபடையினர் அமைதிப்படை முகாம் மீது நடத்திய தாக்குதலை அமைதிப்படை முறியடித்தது. இதில் இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு இந்திய ராணுவத்தை ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது.
உள்நாட்டு போர் மூளும் அபாயம்
இந்த நிலையில் தெற்குசூடானில் அரசு படைக்கும் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால் தெற்குசூடானில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு பயந்து அங்கிருந்து அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி அமைதிப்படையின் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவ்வாறு தஞ்சம் புகும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை செய்ய ஐ.நா.சபை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூடுதலாக 7 ஆயிரம் வீரர்கள்
தெற்கு சூடானில் உள்ள ஐ.நா.வின் அமைதிப்படையில் தற்போது 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு பாதுகாப்பு வசதியை மேம்படுத்துவதற்காக தெற்கு சூடானுக்கு 12,500 ராணுவ வீரர்களும், 1323 போலீசாரையும் ஐ.நா.சபை கூடுதலாக அனுப்பி உள்ளது. இவர்களையும் சேர்த்து ஐ.நா. அமைதிமுகாமில் தற்போது 14 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஐ.நா.சபையின் மனிதநேய தலைவர் டோபி லான்சர் கூறுகையில், ‘தெற்கு சூடானில் நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். தெற்குசூடானில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஐ.நா.சபை தலைவர் பான் கி மூன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அமெரிக்க மந்திரி பேச்சு
இதற்கிடையே தெற்குசூடானில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.சபை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க ராணுவ மந்திரி ஜான்கெர்ரி மற்றும் எத்தியோப்பியா நாட்டு மந்திரி ஆகியோர், தெற்கு சூடான் அதிபர் சல்வார்கீருருடன் டெலிபோனில் பேசினார்கள். அப்போது அவர்கள் தெற்குசூடானில் அமைதி நிலவவும், நியாயமான தேர்தலை நடத்தவும் கேட்டுக்கொண்டனர்.
ரோஸ்மாவின் மகன் நியூயார்க்கில் 110 மில்லியனுக்கு ஆடம்பர குடியிருப்பு வாங்கியுள்ளார்!
பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் மகனான ரிசா ஷாரிஸ் அப்துல் அசிஸ் (வயது 36), அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 33.5 மில்லியன் டாலர் (110 மில்லியன்) விலையில் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்த மகனான ரிசா, இந்த குடியிருப்பை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வாங்கியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
கடந்த 2000 ஆம் ஆண்டு லண்டனில் பொருளாதாரப் பட்டப்படிப்பை முடித்த ரிசா, வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். 2002 வரை கேபிஎம்ஜி என்ற நிறுவனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தற்போது ஹாலிவுட்டில் பிரபல நட்சத்திரமாகிவிட்ட ரிசா, ஜோய் மேக்பார்லாண்ட் என்பவருடன் இணைந்து ரெட் கிரானைட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அண்மையில் “வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்” என்ற படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sponsored content
Page 9 of 81 • 1 ... 6 ... 8, 9, 10 ... 45 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 81
|
|