புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
72 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 68 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 68 of 81 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 74 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 68 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 24, 2018 5:09 am

நவம்பர் 7-ம் தேதி சீனாவில் சர்வதேச இணைய மாநாடு

சீனாவின் வூஜென் நகரில் வரும் நவம்பர் 7ம் தேதி சர்வதேச
இணைய மாநாடு நடைபெற உள்ளது.


சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் ஜீஜியாங்
மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு மூன்று
நாட்கள் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த உலகளாவிய பகிர்வு மற்றும்
அனைவராலும் நிர்வகிக்கப்படுவதன் மூலம் ஒரு பகிரங்க
விவாதத்தை பகிர்ந்து கொள்ளும் சைபர்ஸ்பேஸ்
சமுதாயத்தை உருவாக்குவது" என்ற பொருளில்
ஆண்டுதோறும் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

முதலாவது சர்வதேச இணைய மாநாடு கடந்த 2014ம்
ஆண்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு நடைபெறும் 5வது இணைய மாநாட்டில்
7ம் தேதி காலை சீனத் தலைவர்களின் தொடக்க உரையுடன்
தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து சீனா மற்றும் சர்வதேச முக்கிய
பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து
கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்தல் மற்றும்
எதிர்காலத்தைத் தீர்மானித்தல், உலக முன்னணி இணைய
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் வெளியிடப்
படுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்வாக நவம்பர் 8-ம் தேதி காலை
இணைய உலகின் எதிர்காலம் குறித்து நிபுணர்கள் மற்றும்
வர்த்தக தலைவர்கள் கலந்து கொள்ளும் கருத்துக்களம்,
உலக முன்னணி இணைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
சாதனைகள் வெளியீட்டு விழா நடக்கிறது.
-
--------------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 24, 2018 5:16 am

அக்டோபர் 24, 2018

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடத்தல்
பெட்ரோலை கொண்டு சென்ற வேனும், லாரியும் மோதி
விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 3 கார்கள் எரிந்து
நாசமாகின.

* ஆஸ்திரேலியாவில் போர்ட் அகஸ்டா நகரில் நகராட்சி
கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிற சீக்கியரான
சன்னி சிங், இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்.
இது தனக்கு மிகுந்த வருத்தம் அளித்துள்ளதாக அவர்
வேதனை தெரிவித்துள்ளார்.



* வங்காளதேசத்தில் அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி
ஆதரவு பத்திரிகை ஆசிரியர் உசேன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

டி.வி. விவாதம் ஒன்றில் அவர் பெண் பத்திரிகையாளர்
ஒருவரை தகாத வார்த்தைகள் கூறியதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.


* தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளிகளாக பதிவானது.
நாடு முழுவதும் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள்
பீதியடைந்து வீதிகளுக்கு வந்து தஞ்சம் புகுந்தனர்.
எனினும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக
தகவல் இல்லை.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், முதலீட்டாளர்
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று சவுதி அரேபியா
போய்ச் சேர்ந்தார்.


* இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி
பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அழுத்தம் தர
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தயாராகி வருகிறார் என
தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
--------------------------
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 4:07 pm

காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் அதிசயம்:
புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த
ஜோடிக்கு ரூ.2 கோடி பரிசு

=
உலகச் செய்திகள்!  - Page 68 Hertz-making-water-2
-
டேவிட் ஹெர்ட்ஸ், இவரின் மனைவி லாரா டாஸ் ஹெர்ட்ஸ் – படம்: ஏபி

———–
காற்றில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான
தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த
அமெரிக்க ஜோடிக்கு ரூ.2 கோடி(15 லட்சம்டாலர்) பரிசு
வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சேர்ந்த
டேவிட் ஹெர்ட்ஸ், இவரின் மனைவி லாரா டாஸ் ஹெர்ட்ஸ்
ஆகியோரே இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் தொழில் நுட்பத்தின் மூலம் நாள்தோறும்
காற்றின் மூலம் குறைந்தபட்சம் 2 ஆயிரம் லிட்டர்
சுத்தமான நீரை எடுக்க முடியும்.

இதற்கு இந்திய மதிப்பின் படி 15ரூபாய்க்குள் (2சென்ட்கள்)
மட்டுமே செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள்,
தொழிலதிபர்கள் இணைந்து, “திஎக்ஸ் பிரைஸ்” எனும்
போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சமூகத்துக்குப்
பயன்படும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து
அறிமுகப்படுத்துவோர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டி நடத்தப்படுவதன் நோக்கம் புதிய தொழில்
நுட்பங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தி, சுற்றுச்
சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், பூமியின்
சூழலை மேம்படுத்த வேண்டும் என்பது நோக்கமாகும்.

இந்தப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில்,
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சேர்ந்த டேவிட் ஹெர்ட்ஸ்,
இவரின் மனைவி லாரா டாஸ் ஹெர்ட்ஸ் ஜோடி கண்டு
பிடித்த தொழில்நுட்பத்துக்கு முதல் பரிசு கிடைத்தது.

காற்று மூலம் தண்ணீர் எடுக்கும் இவர்களின் தொழில்
நுட்பம் அனைவரையும் கவர்ந்தது, செலவு குறைவாகவும்,
எளிதாகக் கிடைக்கும் பொருட்கள், கழிவுப்பொருட்களைக்
கொண்டு தண்ணீர் எடுக்கலாம் என்பதால் போட்டி
நடுவர்களால் ஏற்கப்பட்டது.

இவர்களின் தொழில்நுட்பத்தின்படி, பெரிய கப்பலில் சரக்கு
கொண்டு செல்லப்படும் பெரிய கன்டெய்னருக்குள் காற்றைச்
செலுத்தி அந்தக் காற்றை மரக்கழிவுகள், மரத்தூள்,
மரக்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி சூடுபடுத்துவதன்
மூலம் காற்றில் உள்ள ஈரப்பதம் வெப்பத்தால், நீராக மாறும்.
இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுத்தமான நீராக இருக்கும்
என்று தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு முதல்பரிசு கிடைத்துள்ளது குறித்து
டேவிட் ஹெர்ட்ஸ் கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் நாள்ஒன்றுக்கு குறைந்த
பட்சம் 2 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுக்க முடியும்.
இது செலவில்லாத, சிக்கனமான முறையாகும்.

நாம் தண்ணீரை உருவாக்க மரத்தூள், மரக்குப்பை
கிடைக்காவிட்டால், பரவாயில்லை, அதற்குப் பதிலாக
தேங்காய் மட்டை, தவிடு, நிலக்கடலை தோள், காய்ந்த
புற்கள் மற்றும் இயற்கை கழிவுகள் ஆகியவற்றை
எரியூட்டப் பயன்படுத்தலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தை இயற்கை பேரிடர் காலங்கள்,
பூகம்பம், நிலச்சரிவு, வறட்சி போன்ற காலங்களில் பயன்
படுத்தி மக்களுக்கு எளிதாகச் சுத்தமான தண்ணீர் கொடுக்க
முடியும்.

ஆனால், எங்கள் தொழில்நுட்பத்தை இன்னும் சிறிது மேம்
படுத்த வேண்டும்.

இவ்வாறு டேவிட் ஹெர்ட்ஸ் தெரிவித்தார்.

——————————-
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:36 am

* கூகுள் இணைய தள நிறுவனத்தில், பாலியல் தொல்லை
புகாருக்கு ஆளான 48 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களில் 13 பேர் முதுநிலை மேலாளர்களாக இருந்தவர்கள்.
இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரியான தமிழர் சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ளார்.
-
--------------------------------------


* வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி
டிரம்பை மத்திய புலனாய்வு படை (சிஐஏ) தலைவர்
ஜினா காஸ்பெல் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது அவர், தான் துருக்கிக்கு சென்று,
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை தொடர்பாக
நடத்தி வந்த விசாரணை பற்றிய தகவல்களை டிரம்பிடம்
பகிர்ந்து கொண்டார்.
-
------------------------------------------------

* ரியாத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்,
சவுதி அரேபியா 56 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து
14 ஆயிரத்து 400 கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்து
போட்டுள்ளது.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:37 am



* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் 3 செல்போன்கள் இருப்பதாக
‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டது.
இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
அதில் டிரம்பிடம் ஒரே ஒரு ஐபோன் மட்டுமே உள்ளதாகவும்,
அது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ ஐபோன் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------------------

* ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தலீபானின்
முன்னாள் துணைத்தலைவர் முல்லா அப்துல் கனி, பாகிஸ்தானில்
9 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இப்போது அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இதை ஆப்கானிஸ்தான் தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
----------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 6:49 am

வெளிநாடுகளில் இம்ரான் சகோதரி பினாமி பெயரில் சொத்து குவிப்பு
-
உலகச் செய்திகள்!  - Page 68 Tamil_News_large_2132696
-
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் சகோதரி வெளிநாடுகளில்
பினாமி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வெளி நாட்டிற்கு சட்ட விரோத பண
பரிமாற்றம் நடந்தவருவது குறித்து அந்நாட்டின் புலனாய்வு
பிரிவு விசாரணை நடத்தியது.

தொடர்ந்து பட்டியல் ஒன்றையும் தயாரித்தது.
இந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி முன்
சமர்ப்பித்தது.

பட்டியலில் ஐக்கிய அரபு நாடுகளில் பினாமி பெயர்களில
சொத்துவாங்கி குவித்துள்ள அரசியல் வாதிகள், அரசு
அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பட்டியலில் 40க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் பாக்., பிரதமர் இம்ரான் கானின் சகோதரி
அலீமா கான் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து அவரது வீட்டு முகவரி மற்றும் இமெயிலுக்கு
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 12:55 pm



கொழும்பு – இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் பரபரப்பான திருப்பங்களைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளதில், ஒருவர் கொல்லப்பட்டார்.

3 நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் இராஜபக்சேயைப் புதிய பிரதமராக நடப்பு அதிபர் சிறீசேனா இலங்கைப் பிரதமராக நியமித்தார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார். அமைச்சர்களையும் நீக்கினார்.

எனினும் ராஜபக்சே முறையாகப் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் நானே இன்னும் பிரதமராகத் தொடர்கிறேன் என்றும் நடப்புப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். தனது அதிகாரத்துவ இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துவரும் ரணில், அங்கு தனது ஆதரவாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் ஒன்று திரட்டி வைத்திருக்கிறார்.

இந்த குழப்பங்களுக்கிடையில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அதிபர் மைத்திரிபால சிறீசேனாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

புதிய பிரதமர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடுதான் அதிபரால் நியமிக்கப்பட முடியும் என்பதால், பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அனுமதியின்றி நாடாளுமன்றத்தை முடக்கியதற்கும் சபாநாயகர் ஜெயசூரியா அதிபர் சிறீசேனாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

வன்முறை வெடித்தது

இந்த விவகாரம் தொடங்கியது முதல் ராஜபக்சேவுக்கு ஆதரவான ஊழியர் சங்கங்களும், ஆதரவாளர்களும் அரசாங்கக் கட்டடங்களை முற்றைகையிட்டு, ரணிலுக்கு ஆதரவான அமைச்சர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

நாட்டின் அரசு சார்பு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைமையகத்தின் உள்ளே நுழைய, நீக்கப்பட்ட பெட்ரோலியத் துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பட்டபோது, அங்கு கைகலப்பு ஏற்பட்டது. ரணதுங்காவின் பாதுகாவலர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட, அதன் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து வன்முறைகள் நாடெங்கிலும் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில் இலங்கை விவகாரம் குறித்துக் கருத்துரைத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், அனைத்துத் தரப்புகளும் வன்முறையில் இறங்காமல், அமைதியான தீர்வுகளைக் காண முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதிபர் சிறீசேனா உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் இலங்கை மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கடமைகளை ஆற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – தங்களின் தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்ற உரிமை அவர்களுக்கு தரப்பட வேண்டும் என்றும் அறிக்கையொன்றின் வழி தெரிவித்தது.



உலகச் செய்திகள்!  - Page 68 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 01, 2018 5:26 am


உலகச் செய்திகள்!  - Page 68 201810312053341658_Protests-erupt-against-Asia-Bibis-acquittal-in-different_SECVPF

பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீவிக்கு 2009–ம் ஆண்டு உடன் வேலை செய்த பெண்களுடன் தண்ணீரை எடுத்துக் குடித்த விவகாரத்தில் வாக்குவாதம் எழுந்தது. ஆசியா பீவி வாதிட்டபோது, அவர் தெய்வ நிந்தனை குற்றம் செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் கோர்ட்டு சென்றதும் வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து 2010–ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிப்பது வழக்கமான ஒன்று. தெய்வ நிந்தனை அங்கு கொடிய குற்றமாக கருதப்படுகிறது. இதனையடுத்து லாகூர் ஐகோர்ட்டும் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்தது.

இதனையடுத்து தெய்வ நிந்தனை வழக்கில் கீழ் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணை விடுதலை செய்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு குறித்து ஆசியா பீவி பேசுகையில், என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் உண்மையிலேயே என்னை விடுதலை செய்து விடுவார்களா? என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் தனிமைச்சிறையில் வாடியவர் ஆசியா பீவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆசியா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை நிலவுகிறது. வன்முறை அதிகரிக்கக்கூடும் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளை பாகிஸ்தான் அரசும், மாகாண அரசுக்களும் உஷார் நிலையில் வைத்துள்ளது.

இந்துக்கள் மதத்தின் மீது இந்த அளவிற்கு பற்று வைத்திருந்தால் இங்குள்ள பல நாய்கள் வாயையும் மற்றவற்றையும் மூடிக் கொண்டு இருந்திருக்கும்




உலகச் செய்திகள்!  - Page 68 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 12:57 am


உலகச் செய்திகள்!  - Page 68 201811012135097496_Christian-woman-Asia-Bibi-likely-to-be-flown-out-of-Pakistan_SECVPF

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் ஆசியா பீவி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆசியா பீவி நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீவி(வயது 47). அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் ஆசியா பீவிக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவியை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. பீவி எந்த நாட்டிற்கு செல்வார் என்ற தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அவர் நாட்டைவிட்டுச் சென்றால் அவருக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகள் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.

ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டங்களில் ஈடுபட்டு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர். டயர்களை கொளுத்தி போட்டனர். போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. பஞ்சாப் மாகாணத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளி இறுதி வகுப்பு துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. செல்போன் சேவை, இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 68 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 12:58 am



சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.

அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 68 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 68 of 81 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 74 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக