புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
11 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
9 Posts - 4%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 61 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 61 of 81 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 71 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 61 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:13 pm

தீவிரவாதி நடத்திய கொலை முயற்சியிலிருந்து தப்பினார் நவாஸ் ஷெரீப்!

சென்ற வாரம் பாகிஸ்தான் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் லஸ்கர் –இ–ஜாங்கி இயக்கத் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் காரால் மோதிக் கொலை செய்ய நடந்த முயற்சியிலிருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அவர் தன் குடும்பத்தினருடன் பஞ்சாப்பிலிருந்து இஸ்லாமாபாத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது,திடீரென ஒரு திருப்பத்திலிருந்து அசுர வேகத்தில் வந்த கார், நவாஸ் ஷெரீப்பின் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த கார்களை எல்லாம் இடித்துத் தள்ளிக் கொண்டு வந்து, நவாஸ் ஷெரீப்பின் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் நவாஸ்ஷெரீப்பின் கார் பலத்த சேதமடைந்த போதும், நவாஸ்ஷெரீப்பும் அவருடைய குடும்பத்தினரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

உடனே பாதுகாவலர்கள் விபத்துக்குள்ளாக்கிய கார் ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர். அவன் ஓட்டி வந்த காரைச் சோதனை செய்த போது காரின் பதிவு எண் போலியானது என்பது தெரிய வந்தது.

மேலும், அந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் அவன் தவறுதலாக மோதவில்லை. நவாஸ்ஷெரீப்பைக் கொல்லும் நோக்கத்திலேயே மோதியுள்ளான் என்பது தெரிந்தது.



உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:19 pm

அமெரிக்காவில் காட்டுத்தீ 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது.

9 ஆயிரம் வீரர்கள் நேற்று முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள் தீக்கிரையாகின. விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ பற்றி குறிப்பிடுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை பார்த்தது கிடையாது. 300 அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகி உள்ளது என்றார்.

இந்த தீ விபத்தின் காரணமாக 13 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுமாறு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 8:13 am

அமெரிக்காவில் காட்டுத்தீ 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ சகஜமான ஒன்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 8:19 am

உலகச் செய்திகள்!  - Page 61 103459460

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 9:49 pm

T.N.Balasubramanian wrote:
அமெரிக்காவில் காட்டுத்தீ 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ சகஜமான ஒன்று .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155574

ஆமாம் அய்யா கோடை காலத்தில் ரொம்ப சகஜம் .. அங்கு இரண்டு வருடங்கள் இருந்தோம் ..
இப்போ அங்கே வறட்சி வேற (சென்ற வருடம் பனி அளவு குறைவு ) ... தண்ணீர் பஞ்சம் ... வயல்கள், பண்ணைகள் நிறைய உள்ளன ... காட்டு தீ அங்கே வரத்தான் செய்யும் . சோகம் சோகம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:36 pm

மியான்மர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு - 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு

மியான்மரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களான ரகின், கன்னம், சாகனிங் மற்றும் மாக்வே ஆகியவை இயற்கை பேரழிவு பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த வெள்ள பெருக்கில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கனமழையால் ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்கிறது. ஆற்று வெள்ளமும், மழை வெள்ளமும் சூழ்ந்துள்ளதால் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளமானது அந்த நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி பாய தொடங்கியுள்ளது. இதனால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:38 pm

தென் சீனக் கடலில் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்: வெளியுறவுத் துறை அமைச்சர்

தென் சீனக் கடல் பகுதியில் சுமார் மூவாயிரம் மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுபாதை ஒன்றைச் சீனா கட்டிமுடிக்கும் தறுவாயில் இருப்பதாக கடந்த மாதம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. புதிதாக வெளியான செயற்கைக்கோள் படங்களும் அதை உறுதி செய்தன. அவை சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகளின் செயற்கைத் தீவுகளில் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விமான ஓடுபாதை, பெரும்பாலான சீன ராணுவ விமானங்களைச் செலுத்துவதற்குத் தேவையான நீளத்தைக் கொண்டிருப்பதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

சீனா சென்ற ஆண்டு முதல் தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருகிறது. ஆசியாவின் மற்ற பல நாடுகளும், அமெரிக்காவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால் கடல்வழி மேற்கொள்ளப்படும் தேடுதல் பணி, மீட்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு உதவும் நோக்கிலேயே அவை அமைக்கப்படுவதாக சீன அரசு கூறிவருகிறது.

தென் சீனக் கடற்பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அதே நேரம் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணை முதலிய நாடுகளும் தென் சீனக் கடலின் சில பகுதிகளில் தங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிவருகின்றன.

இந்நிலையில், கோலாலம்பூரில் நடைபெறும் 48ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெ, சீனக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:30 pm

சவுதி அரேபியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி

சவுதி அரேபியாவில், ஆசிர் மாகாணத்தில் அபா என்ற நகருக்கு அருகே தீவிரவாத தடுப்பு போலீஸ் முகாம் உள்ளது. அந்த வளாகத்தில் ஒரு மசூதியும் உண்டு.

அந்த மசூதிக்குள் இன்று மதியம் ஒருவர் உடல் முழுக்க வெடிகுண்டுகளை கட்டி வந்து வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார். இதன் காரணமாக அந்த மசூதியே குலுங்கியது.

இந்த தாக்குதலில் 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் சிறப்பு நெருக்கடி கால படையினர் என்றும், மற்றவர்கள் பணியாளர்கள் எனவும் சவுதி டெலிவிஷன் கூறியது.

இதில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.



உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:32 pm

ஆப்கானில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்து, 17 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் ஷாபுல் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள் சிக்கியதில் 12 ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊடுருவலை கண்காணித்த போது ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து விபத்துக்குள் சிக்கியது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“ஷாபுல் மாகாணம், ஷின்கேய் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள் சிக்கியதில் 5 ஹெலிகாப்டர் ஊழியர்கள், 12 ராணுவ வீரர்கள் என 17 பேர் உயிரிழந்தனர்,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஷின்கேய் மாவட்ட அதிகாரி முகமது காசிம்கான் உயிரிழப்பை உறுதிசெய்து உள்ளார். ஹெலிகாப்டர் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக முழுவிசாரணை நடத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவப்படை மற்றும் வெளிநாட்டு படைகளுக்கு விமான விபத்துக்கள் என்பது தொடர் பிரச்சனையாகவே உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கந்தகார் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள் சிக்கியதில் 5 பிரிட்டன் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு படைகள் வெளியேறியது. இருப்பினும் 13,000 வீரர்கள் அடங்கிய வெளிநாட்டு படை அங்கு தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:33 pm

14 பேரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தின்ற கொடூர பாட்டி

ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா ( வயது 68) அங்குள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். கடந்த வாரம் இவரது நண்பர் வாலண்டினா உளனோவா ( வயது79) என்பவரை கொலை செய்ததாக ரஷ்ய போலீசார் இவரை கைது செய்தனர்.

போலீசார் அங்கிருந்த சிசி டிவியை ஆய்வு செய்ததில் வாலண்டினாவின் உடல் பாகங்களை சம்சனோவா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்து இருந்தது உறுதியானது.

இதை தொடர்ந்து போலீசார் பாட்டி சம்சனோவா வின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து போலீசார் ஒரு டைரியை கைபற்ற அதன் மூலம் இந்த 69 வயதான பாட்டி 14 பேரை கொலை செய்து இருக்கும் பயங்கர தகவல் வெளியாகி உள்ளது.இந்த கொலைகார கொடூர பாட்டி தான் கொலை செய்தவர்களின் தலை மற்றும், நுரையீரல் , கை கால்களை வெட்டி எடுத்து இருப்பார் என போலீசார் சந்தேகபடுகின்றனர்.

ஓய்வூதியம் பெற்று வரும் இந்த பாட்டி நர மாமிசம் சாப்பிடும் காட்டு மிராண்டிகளோடு ஒப்பீடுகின்றனர் போலீசார்.

12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒரு வியாபாரியின் அடையாள அட்டை பாட்டியின் வீட்டில் கண்டெடுக்கபட்டு உள்ளது. அவரது தலை , கால் மற்றும் கைகளை பாட்டி வெட்டி எடுத்து உள்ளார்.

அங்கு இருந்த டைரியில் ”எனது வீட்டில் வாடகைக்கு இருந்த வாலண்டினாவை அவரது உடல் பாகங்களை பாத்ரூமில் வைத்து கத்தியால் வெட்டினேன். பின்னர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பேக்கில் போட்டு தூக்கி எறிந்து விட்டதாக” கைப்பட எழுதி உள்ளார்.

கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்ட போது பாட்டி சம்சனோவா இந்த நீதி மன்றம் கொடுக்கும் எததனை வருட சிறை தண்டனையையும் ஏற்று கொள்ள தயாராக் இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 61 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 61 of 81 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 71 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக