புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 57 of 81 •
Page 57 of 81 • 1 ... 30 ... 56, 57, 58 ... 69 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
எல்லைப்பிரச்சினையை ஒருநாள் இரவில் தீர்த்து விட முடியாது: சீனா சொல்கிறது
பிரதமர் நரேந்திர மோடி நாளை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினையை ஒருநாள் இரவில் தீர்த்து விட முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக வியாழக்கிழமை சீனா செல்கிறார். அங்குள்ள மிகவும் பழமையான நகரமும், அதிபர் ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சான்சியின் தலைநகருமான சியான் நகரை அவர் சென்றடைகிறார்.அங்கு மோடியை வரவேற்கும் ஜின்பிங், அவருடன் சாதாரண முறையில் பேச்சு நடத்துகிறார். அப்போது எல்லைப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். எல்லை தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள் குறித்து பேச்சுவார்த்தையில் போது விவாதிக்கப்படும். இரு தரப்பும் எல்லைப்பிரச்சினையை விரைவாகவே தீர்க்க தயாராக இருக்கிறது. இதை தீர்க்க நாம் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். எல்லை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விரைவான தீர்வு காணப்படவேண்டும் என்பதுதான் இரு தரப்புக்குமான விருப்பம். எனினும் எல்லைப்பிரச்சினை என்பது வரலாறுகளில் எஞ்சியுள்ள கேள்வியாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் ஒருநாள் இரவில் தீர்க்கப்படக்கூடியது அல்ல” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினையை ஒருநாள் இரவில் தீர்த்து விட முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக வியாழக்கிழமை சீனா செல்கிறார். அங்குள்ள மிகவும் பழமையான நகரமும், அதிபர் ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சான்சியின் தலைநகருமான சியான் நகரை அவர் சென்றடைகிறார்.அங்கு மோடியை வரவேற்கும் ஜின்பிங், அவருடன் சாதாரண முறையில் பேச்சு நடத்துகிறார். அப்போது எல்லைப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். எல்லை தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள் குறித்து பேச்சுவார்த்தையில் போது விவாதிக்கப்படும். இரு தரப்பும் எல்லைப்பிரச்சினையை விரைவாகவே தீர்க்க தயாராக இருக்கிறது. இதை தீர்க்க நாம் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். எல்லை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விரைவான தீர்வு காணப்படவேண்டும் என்பதுதான் இரு தரப்புக்குமான விருப்பம். எனினும் எல்லைப்பிரச்சினை என்பது வரலாறுகளில் எஞ்சியுள்ள கேள்வியாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரம் ஒருநாள் இரவில் தீர்க்கப்படக்கூடியது அல்ல” என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கான் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு, தலிபான் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் ‘பார்க் பேலஸ்’ என்ற விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு நேற்றுஇரவு, பிரபல இசைக்கலைஞர் அல்டாப் உசேன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு துருக்கி, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விருந்தினர்களுடன், உள்நாட்டினரும் வந்திருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 4 இந்தியர்கள், ஒரு அமெரிக்கர் உள்பட 11 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரும், சிறப்பு படையினரும் அங்கு விரைந்தனர். அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது.
7 மணி நேர சண்டைக்கு பின்னர் அதிகாலைதான் இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இறுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆனது. விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமர் சின்கா வந்திருப்பார் என்ற எண்ணத்தில் அவரைக் குறிவைத்துத்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று கூறுகிறது.
தாக்குதல் தொடர்பாக இந்திய தூதர் அமர் சின்கா, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘துரதிர்ஷ்டவசமாக காபூல் விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் மற்றவர்களுடன் இந்தியர்கள் சிலரும் பலியாகி விட்டனர்’ என குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் பலியானதை ஆப்கான் அரசு வட்டாரங்கள் உறுதி செய்தன. அவர்களில் 2 பேர் ஆடிட்டர்கள் என்றும், ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டதை அந்த நாட்டின் தூதரக செய்தி தொடர்பாளர் மோனிகா கன்னிங்ஸ் உறுதி செய்தார்.
இந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ‘காபூலில் அதிபர் அஷரப் கனியின் அரசுக்கு அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் ஆதரவு அளித்து வருவதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள வெளிநாட்டு படையினர், எந்த இடத்திலும் எங்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருந்து விட முடியாது என்பதை உணர வேண்டும்’ என தலிபான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் ‘பார்க் பேலஸ்’ என்ற விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு நேற்றுஇரவு, பிரபல இசைக்கலைஞர் அல்டாப் உசேன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு துருக்கி, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விருந்தினர்களுடன், உள்நாட்டினரும் வந்திருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்தவர்கள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 4 இந்தியர்கள், ஒரு அமெரிக்கர் உள்பட 11 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரும், சிறப்பு படையினரும் அங்கு விரைந்தனர். அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது.
7 மணி நேர சண்டைக்கு பின்னர் அதிகாலைதான் இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இறுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆனது. விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமர் சின்கா வந்திருப்பார் என்ற எண்ணத்தில் அவரைக் குறிவைத்துத்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று கூறுகிறது.
தாக்குதல் தொடர்பாக இந்திய தூதர் அமர் சின்கா, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘துரதிர்ஷ்டவசமாக காபூல் விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் மற்றவர்களுடன் இந்தியர்கள் சிலரும் பலியாகி விட்டனர்’ என குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் பலியானதை ஆப்கான் அரசு வட்டாரங்கள் உறுதி செய்தன. அவர்களில் 2 பேர் ஆடிட்டர்கள் என்றும், ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டதை அந்த நாட்டின் தூதரக செய்தி தொடர்பாளர் மோனிகா கன்னிங்ஸ் உறுதி செய்தார்.
இந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ‘காபூலில் அதிபர் அஷரப் கனியின் அரசுக்கு அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் ஆதரவு அளித்து வருவதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள வெளிநாட்டு படையினர், எந்த இடத்திலும் எங்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருந்து விட முடியாது என்பதை உணர வேண்டும்’ என தலிபான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் 55 பேர் பலி
இரண்டு கிராமங்கள் மீது போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 அப்பாவி போது மக்கள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு நைஜீரிய அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வெடி குண்டு மற்றும் அப்பாவி மக்களை சுட்டு கொல்வது என பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைதுகுரி நகரின் அருகே இருக்கும் பேல் மற்றும் காயாமலா என்ற இரு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பேல் கிராமத்தை சேர்ந்த 30 பேரும் காயாமலா கிராமத்தில் 25 பேரையும் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இரண்டு கிராமங்கள் மீது போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 அப்பாவி போது மக்கள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு நைஜீரிய அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வெடி குண்டு மற்றும் அப்பாவி மக்களை சுட்டு கொல்வது என பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைதுகுரி நகரின் அருகே இருக்கும் பேல் மற்றும் காயாமலா என்ற இரு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பேல் கிராமத்தை சேர்ந்த 30 பேரும் காயாமலா கிராமத்தில் 25 பேரையும் தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!
இந்தோனேசிய ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது கொடூரமான, மனிதத்தன்மையற்ற, தரம் தாழ்ந்த செயல் என மனித உரிமைகள் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
எனினும் நல்ல நடத்தையற்றவர்களால் ராணுவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்று தெரிவித்துள்ள இந்தோனேசிய ராணுவம், அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் இத்தகைய பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
இந்நிலையில் அனைத்துலக மனித உரிமை சட்டத்தின்படி, இவ்வாறு பரிசோதனை நடத்துவது தவறு என்றும் இந்த நடவடிக்கையை இந்தோனேசிய ராணுவம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் என்ற குழு வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது பாலியல் ரீதியான வன்முறை என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கன்னித்தன்மை பரிசோதனைக்காக இந்தோனேசிய ராணுவம் பின்பற்றும் முறை அறிவியல் அடிப்படையற்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிலரை பேட்டி கண்டுள்ள இந்த அமைப்பு, இந்த பரிசோதனை மிகவும் வலி மிகுந்ததாகவும், மன உளைச்சல் தருவதாகவும் இருந்தது என சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஒழுக்கமற்ற பெண்கள் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க இத்தகைய பரிசோதனை அவசியம் என இந்தோனேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபட் பஸ்யா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தான் இந்நாடு இன்னும் முன்னேறாமல் உள்ளது என நினைக்கிறேன்!
இந்தோனேசிய ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது கொடூரமான, மனிதத்தன்மையற்ற, தரம் தாழ்ந்த செயல் என மனித உரிமைகள் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
எனினும் நல்ல நடத்தையற்றவர்களால் ராணுவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்று தெரிவித்துள்ள இந்தோனேசிய ராணுவம், அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் இத்தகைய பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
இந்நிலையில் அனைத்துலக மனித உரிமை சட்டத்தின்படி, இவ்வாறு பரிசோதனை நடத்துவது தவறு என்றும் இந்த நடவடிக்கையை இந்தோனேசிய ராணுவம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் என்ற குழு வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது பாலியல் ரீதியான வன்முறை என்று குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கன்னித்தன்மை பரிசோதனைக்காக இந்தோனேசிய ராணுவம் பின்பற்றும் முறை அறிவியல் அடிப்படையற்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிலரை பேட்டி கண்டுள்ள இந்த அமைப்பு, இந்த பரிசோதனை மிகவும் வலி மிகுந்ததாகவும், மன உளைச்சல் தருவதாகவும் இருந்தது என சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஒழுக்கமற்ற பெண்கள் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க இத்தகைய பரிசோதனை அவசியம் என இந்தோனேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபட் பஸ்யா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தான் இந்நாடு இன்னும் முன்னேறாமல் உள்ளது என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
செய்திகளுக்கு நன்றி
நேபாளில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைக்க வாய்ப்பு
கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மீண்டும் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா அங்கு ஆளுங்கட்சியை மாற்றம் செய்து எதிர்கட்சிகள் என்ற பாகுபாடின்றி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே தேசிய அரசாக அமைக்க தயாராக இருப்பதாக தகவல்தொடர்பு துறை மந்திரி மைனேந்திர ரிஜால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற கொய்ராலா தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் இதுவரை எவ்விதமான முன்னேற்ற நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அங்குள்ள பல அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளில் பிரிந்து கிடக்கின்றன. குறிப்பாக, ஆட்சி செய்யும் முறை, தேர்தல் முறை, நீதி மற்றும் அரசியல் கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிளவுபட்டு கிடக்கின்றன.
நிலநடுக்க பேரழிவும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், அரசின் நடவடிக்கைகளின் மேல் சந்தேகப்பட்டு எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதை விட அனைவரும் ஒன்றிணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீ்ட்டுவதே சிறந்தது என ரிஜால் தெரிவித்தார்.
கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மீண்டும் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா அங்கு ஆளுங்கட்சியை மாற்றம் செய்து எதிர்கட்சிகள் என்ற பாகுபாடின்றி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே தேசிய அரசாக அமைக்க தயாராக இருப்பதாக தகவல்தொடர்பு துறை மந்திரி மைனேந்திர ரிஜால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற கொய்ராலா தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் இதுவரை எவ்விதமான முன்னேற்ற நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அங்குள்ள பல அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளில் பிரிந்து கிடக்கின்றன. குறிப்பாக, ஆட்சி செய்யும் முறை, தேர்தல் முறை, நீதி மற்றும் அரசியல் கட்டமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிளவுபட்டு கிடக்கின்றன.
நிலநடுக்க பேரழிவும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், அரசின் நடவடிக்கைகளின் மேல் சந்தேகப்பட்டு எதிர்மறையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதை விட அனைவரும் ஒன்றிணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீ்ட்டுவதே சிறந்தது என ரிஜால் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாப்பிள்ளையின் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும்: சவுதி இளம்பெண்கள் போர்க்கொடி
திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதற்கு சவுதி அரசு அனுமதி அளித்து விட்டால் அரபு நாடுகளில் பெண்களுக்கு இவ்வகை உரிமையை அளித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
பெண்களுக்கான திருமணத்தை நிச்சயிக்கும் குடும்ப தலைவரான தந்தை, மணமகன் வசதியானவராக இருக்கிறாரா? மத ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில் எப்படி உள்ளார்? என்பதை மட்டுமே அளவுக்கோலாக வைத்து மாப்பிள்ளை தேடுவதால் அவரது கடந்தகால வாழ்க்கையை பின்னாளில் அறியவரும் பெண்கள் விவாகரத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்படி, 70 சதவீதம் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
இதை தவிர்க்கும் வகையில் சவுதி பெண்களுக்கு வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வழங்கப்பட வேண்டும் என கருத்து கூறும் குடும்பநல பெண் வழக்கறிஞரான நஜ்வா சலா, அதே வேளையில், திருமணத்துக்கு முன்னர் சற்று முரண்பாடான முறையில் வாழ்ந்துள்ளார் என்பதை வைத்து, ஒரு ஆணை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. முன்னர் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி, திருந்தி, திருமணத்துக்கு பின்னர் ஒழுக்கசீலர்களாக வாழும் ஆண்களும் உண்டு என்பதை நாம் மறுத்துவிட முடியாது எனவும் இவர் குறிப்பிடுகிறார்.
சவுதி அரசின் சட்ட ஆலோசகரான மருத்துவர் அஹமது அல்-முஆபி, இந்த கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்து ரகசியங்களுக்கும் போர்வையாக நானே இருக்கிறேன் என்று இறைவன் கூறியுள்ளான். இந்த கோரிக்கை அந்த காரணத்தை அர்த்தமற்றதாக்கி விடும். திருமணம் என்பது ஒரு ஆணின் அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்தும் நிர்ப்பந்த நிகழ்ச்சி அல்ல. இப்படி அனைத்து விஷயங்களையும் மணமகளுடன் பகிர்ந்து கொண்டால் கணவர்கள் மீது மனைவியரின் பிடி இறுகிவிடும்.
ஒரு ஆணின் ரகசியம் அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அதை வெளிப்படுத்த வேண்டும் என யாரையும் வற்புறுத்த கூடாது. குறைகளோ, பிரச்சனைகளோ இல்லாத ஒரு ஆண்மகனை இந்த உலகில் பார்ப்பது மிகவும் மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.
திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதற்கு சவுதி அரசு அனுமதி அளித்து விட்டால் அரபு நாடுகளில் பெண்களுக்கு இவ்வகை உரிமையை அளித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
பெண்களுக்கான திருமணத்தை நிச்சயிக்கும் குடும்ப தலைவரான தந்தை, மணமகன் வசதியானவராக இருக்கிறாரா? மத ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில் எப்படி உள்ளார்? என்பதை மட்டுமே அளவுக்கோலாக வைத்து மாப்பிள்ளை தேடுவதால் அவரது கடந்தகால வாழ்க்கையை பின்னாளில் அறியவரும் பெண்கள் விவாகரத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்படி, 70 சதவீதம் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
இதை தவிர்க்கும் வகையில் சவுதி பெண்களுக்கு வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வழங்கப்பட வேண்டும் என கருத்து கூறும் குடும்பநல பெண் வழக்கறிஞரான நஜ்வா சலா, அதே வேளையில், திருமணத்துக்கு முன்னர் சற்று முரண்பாடான முறையில் வாழ்ந்துள்ளார் என்பதை வைத்து, ஒரு ஆணை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. முன்னர் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி, திருந்தி, திருமணத்துக்கு பின்னர் ஒழுக்கசீலர்களாக வாழும் ஆண்களும் உண்டு என்பதை நாம் மறுத்துவிட முடியாது எனவும் இவர் குறிப்பிடுகிறார்.
சவுதி அரசின் சட்ட ஆலோசகரான மருத்துவர் அஹமது அல்-முஆபி, இந்த கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்து ரகசியங்களுக்கும் போர்வையாக நானே இருக்கிறேன் என்று இறைவன் கூறியுள்ளான். இந்த கோரிக்கை அந்த காரணத்தை அர்த்தமற்றதாக்கி விடும். திருமணம் என்பது ஒரு ஆணின் அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்தும் நிர்ப்பந்த நிகழ்ச்சி அல்ல. இப்படி அனைத்து விஷயங்களையும் மணமகளுடன் பகிர்ந்து கொண்டால் கணவர்கள் மீது மனைவியரின் பிடி இறுகிவிடும்.
ஒரு ஆணின் ரகசியம் அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அதை வெளிப்படுத்த வேண்டும் என யாரையும் வற்புறுத்த கூடாது. குறைகளோ, பிரச்சனைகளோ இல்லாத ஒரு ஆண்மகனை இந்த உலகில் பார்ப்பது மிகவும் மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1136885
உலகில் பல நாடுகளிலும் நடப்பது தானே..!! சில நாடுகளில் ஆண்களுக்கும் கூட
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:சிவா wrote:இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1136885
உலகில் பல நாடுகளிலும் நடப்பது தானே..!! சில நாடுகளில் ஆண்களுக்கும் கூட
நம் நாட்டில் இல்லைதானே! அதுவரை மகிழ்ச்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
55 ஆண்டுகளில் முதல்முறையாக பணவாட்டத்தை சந்தித்த பிரிட்டன்
பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள், மூலதனப் பொருட்கள் என எல்லாவற்றின் விலைகளும் குறைந்திருக்கும். வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் '0' சதவீதத்தை விட குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது. ஆனால், பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கும்.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரையில் அங்கு கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் 0 சதவீதமாக இருந்தது. கடந்த 1960-க்கு பிறகு முதல்முறையாக கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் நெகட்டிவ்வாக வந்துள்ளது. குறிப்பாக, விமானம் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தில் கட்டணங்கள் குறைந்துள்ளன. தொடர்ந்து பணவாட்டத்தின் விகிதம் பிரிட்டனில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறு பணவாட்டம் அதிகரிப்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள், மூலதனப் பொருட்கள் என எல்லாவற்றின் விலைகளும் குறைந்திருக்கும். வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் '0' சதவீதத்தை விட குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது. ஆனால், பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கும்.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் வரையில் அங்கு கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் 0 சதவீதமாக இருந்தது. கடந்த 1960-க்கு பிறகு முதல்முறையாக கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ் நெகட்டிவ்வாக வந்துள்ளது. குறிப்பாக, விமானம் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தில் கட்டணங்கள் குறைந்துள்ளன. தொடர்ந்து பணவாட்டத்தின் விகிதம் பிரிட்டனில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறு பணவாட்டம் அதிகரிப்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 57 of 81 • 1 ... 30 ... 56, 57, 58 ... 69 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 57 of 81
|
|