புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
72 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 52 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 52 of 81 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 66 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 52 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 11:18 pm

சவூதியில் கடுமையான மணல் புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ரியாத்: சவூதி அரேபியாவில் வீசிய கடுமை யான மணல் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு சவூதி அரேபியா வில் வீசத் தொடங்கிய மணல் புயல், வளை குடா நாடுகளை முழுமையாகப் பாதித்தது. அதே நேரத்தில், சவூதியின் கிழக்கு மாகா ணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழு மையாக பாதிக்கப்பட்டது.

கடுமையாக வீசிய மணல் புயலில் மரங்கள் தூக்கி வீசப்பட்டன. வாகனங்கள், வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

சாலைகளில் முன்னால் சென்ற வாகனங் கள் தெரியாத அளவுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சவூதியின் தம்மாம், கோபார், ஜூபைல் போன்ற நகரங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம் பித்தது. மேலும் விமான போக்குவத்தும் பெரிதும் பதிக்கப்பட்டது. பல பன்னாட்டு விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்ய பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:37 pm

‘நியூயார்க் டைம்ஸ்’ எச்சரிக்கை; பாகிஸ்தானுக்கு ரூ.6,200 கோடி ஆயுதங்கள் சப்ளை செய்கிறது அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு ரூ.6,200 கோடி ஆயுதங்கள் சப்ளை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் எச்சரிக்கை

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, ‘தெற்காசியாவின் அணு அச்சங்கள்’ என்று தலைப்பிட்டு ஒரு தலையங்க கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியப் பெருங்கடலில் அணு ஆயுதங்களை நிறுத்துவதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் மட்டும்தான், பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கிற வகையில் உள்ளது. சீனா தனது அணு ஆயுத திட்டங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டிடம் தற்போது 250 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய பகுதியை பொறுத்தமட்டில் சந்தேகத்துக்கு இடமின்றி, பாகிஸ்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், கலகங்களால் அந்த நாடு மூழ்கி உள்ளது. பொருளாதார சீர்குலைவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. அரசியல் அமைப்புகள் பலவீனம் அடைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாட்டை வீழ்த்த தலீபான் தீவிரவாத அமைப்பு முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், இந்தியாவிடம் 110 அணு ஆயுதங்கள் உள்ளன.

(இந்தியாவுடன்) மோதல் ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் முதல் நாடாக பாகிஸ்தான் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில், பல நூறு கோடி டாலர்களை பாகிஸ்தான் வீணாக்கி வருகிறது. அதை அந்த நாட்டின் சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பயன்படுத்தி இருக்க முடியும். என்று தலையங்கத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஆயுத சப்ளைக்கு அமெரிக்கா ஒப்புதல்

தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் ஆயுதங்களையும், போர்த்தளவாடங்களையும் குவித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வரும் பாகிஸ்தான், 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,200 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள், போர்த்தளவாடங்கள் சப்ளை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

பாகிஸ்தான் கேட்ட ஆயுதங்கள், தளவாடங்களின் பட்டியலில் முக்கியமாக, 15 ‘ஏஎச்-1 இசட் வைபர்’ தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 32 ‘டி-700 ஜிஇ 401 சி’ என்ஜின்கள், 1000 ‘ஏஜிஎம்-114 ஆர் ஹெல்பயர் 2’ ஏவுகணைகள், 36 ‘எச்-1’ தொழில்நுட்ப புதுப்பிப்பு பணி கம்ப்யூட்டர்கள், 17 ‘ஏஎன்/ஏஏகியூ-30’ இலக்கு பார்வை சாதனங்கள் மற்றும் பல இடம்பெற்றுள்ளன. கணினி சார்ந்த ஏராளமான தளவாடங்களை சப்ளை செய்யுமாறும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஆயுதங்களையும், தளவாடங்களையும் சப்ளை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அது அறிக்கையும் அளித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தலையங்க கட்டுரை வெளியிட்ட சுவடு மறைவதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு அதே அமெரிக்கா ரூ.6,200 கோடி மதிப்பிலான ஆயுதங்களையும், போர்த்தளவாடங்களையும் விற்பனை செய்ய முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:39 pm

பாதுகாப்பு படையினரின் அதிரடியில் பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகள் பலியாகினர்.

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், கேமாரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த மோதலில் பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பின் கராச்சி பிரிவு தலைவர் உள்பட 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள், கடந்த 2014 ஆண்டு, ரேஞ்சர்ஸ் செக்டார் கமாண்டர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று கராச்சியில், சோராப் கோத் பகுதியில் ஒரு வீட்டில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தலீபான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான காரி ஜூபைர், வெடிகுண்டு நிபுணர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காமேரியில் நடந்த சண்டையில் பாகுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 12:21 pm

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாகவே பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் அமெரிக்கா போர் ராணுவ பயிற்சி மேற்கொள்வது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது.

இந்தநிலையில் வடகொரியா மேற்கு கடற்பகுதியில் நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடியதும், தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கக்கூடியதுமான 2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ் கார்ட்டர் ஜப்பான் சென்றிருந்தார். அந்த பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தென்கொரியா செல்ல இருந்தார். இந்த சமயத்தில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 12:29 pm


தாய்லாந்தில் வரலாறு காணாத வறட்சி: குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு!

தாய்லாந்து நாட்டில் இந்த ஆண்டு சரியான மழை இல்லாததால், நீர் தேக்கங்களில் வழக்கமாக இருப்பதை விட பாதி அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது.

இதனால் மக்களுக்கு சரியாக குடிநீர் வசதி செய்ய முடியவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. அதிலும் தாய்லாந்தில் வடக்கு பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

இங்கு வாரம் 2 முறை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அது ஒரு முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் தாய்லாந்தில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கிறது.

எனவே மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தேவைக்காக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இன்னும் 2 மாதங்கள் கழித்து தான் தாய்லாந்தில் மழை பெய்யும். அதற்குள் நிலைமை மிக மோசமாகிவிடும் என கணித்துள்ளனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 12:38 pm

தகவலுக்கு நன்றி............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 52 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 2:07 pm


மலேசியாவில் இருந்து பெங்களூருக்கு இடம் மாறும் ஷெல் தகவல் தொழில்நுட்பப் பிரிவு!

ஷெல் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, மலேசியாவின் சைபர் ஜெயாவில் இருந்து இந்திய நகரமான பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக ஷெல் குழுமத்தின் தலைவர் இயன் லூ கூறுகையில், “சைபர்ஜெயாவில் இருக்கும் எங்களின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றது. எனினும், எங்களின் மற்ற செயல்பாடுகள் இங்கு தொடரும். எங்களின் செயல்பாடுகளில் கூடுதல் மதிப்பு சேர்ப்பதற்காக இந்த இடமாற்றத்தை மேற்கொள்ள இருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத்திற்கு சாதகமான களமும், உலகளாவிய பார்வையும் அமைந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இந்த இடமாற்றம் காரணமாக, ஷெல் தகவல் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் சுமார் 850 பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஷெல் நிறுவனம் எவ்வித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனினும், இடமாற்றம் செய்வது பற்றி அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-

“மலேசியாவில் சுமார் 120 வருடங்களாக செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம், நாட்டின் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்புகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அது தொடரும். தற்போதய இடமாற்றத்தினால், எங்கள் நிறுவனத்தின் முதலீடுகளோ, சேவைகளிலோ எவ்வித மாறுபாடும் இருக்காது” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஷெல் நிறுவனத்தின் இந்த இடமாற்றத்திற்கு ரிங்கிட்டின் சரிவும், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் முக்கிய காரணங்களாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 9:48 pm


சவுதியில் உள்ள புனிதத்தலங்களுக்கு செல்ல கூடாது: ஈரான் மக்களுக்கு அரசு திடீர் தடை

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் மக்கா-மதினா மற்றும் சவுதி அரேபியாவில் உம்ரா செய்ய ஆண்டு முழுவதும் போகும் புனிதத்தலங்களுக்கு இனி செல்லக் கூடாது என தங்கள் நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு திடீர் தடை விதித்துள்ளது.

சமீபத்தில் உம்ரா செய்வதற்காக சவுதிக்கு சென்ற ஈரானிய சிறுவர்கள் இருவர் ஜெட்டா விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது. எனினும். இந்த திடீர் தடையின் பின்னணியில் மற்றொரு காரணமும் இருப்பதாக யூகிக்கப்படுகின்றது.

ஈரானின் அண்டை நாடான ஏமனில் ஷியாப் பிரிவை சேர்ந்த ஹவுத்தி இனப் போராளிகளுக்கும் அங்குள்ள ஆளும் சன்னி வர்க்கத்தினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் பண உதவியும், ஆயுத சப்ளையும் செய்து வருவதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி படையினரின் கை ஓங்கிய வேளையில் அவர்களை எதிர்ப்பதற்கு படைகளை அனுப்பி உதவிடும்படி சவுதி அரசிடம் ஏமன் அதிபர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, ஏமனுக்கு அனுப்பப்பட்டுள்ள சவுதி விமானப்படை விமானங்களும், கப்பல்படையும் ஹவுத்தி போராளிகளின் நிலைகளை தாக்கி அழித்து வருகின்றன. இதனால், போரில் ஹவுத்தி படைகளுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆத்திரத்தை மனதில் வைத்து ஏமனுக்கு உதவி செய்துவரும் சவுதி அரேபிய அரசை கண்டிக்கும் வகையில் சவுதியில் உள்ள புனிதத்தலங்களுக்கு செல்ல கூடாது என தங்கள் நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு திடீர் தடை விதித்துள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 9:57 pm

போகோ ஹாரம் தீவிரவாதிகளால் 8 லட்சம் குழந்தைகள் அகதிகளாக மாறிய அவலம்: யூனிசெப் தகவல்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அடிமைகளாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு 250 பள்ளி மாணவிகளை கடத்தினர். நேற்றுடன் ஓராண்டு முடிந்ததும் அவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரிய வில்லை.

இந்த நிலையில் ஐ.நா.வின் ‘யூனிசெப்’ குழந்தைகள் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 8 லட்சம் குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து அகதிகளாகியுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல சிறுமிகள் கடத்தப்பட்டு ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். பலருக்கு கட்டாய திருமணமும் நடத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களை தங்களது தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து ஆயுத பயிற்சி அளித்து வருகின்றனர். சுமார் 1 கோடி குழந்தைகள் தொடக்க கல்வி பயில முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.’’ என்று கூறப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 9:58 pm

ஐநாவில் பங்களிப்பு ; இந்தியா விருப்பத்துக்கு ஆதரவு கொடுப்போம் சீனா சொல்கிறது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இதுவரை சீனா ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் பெரும் பங்களிப்பு அளிக்க நினைக்கும் இந்தியாவின் விருப்பத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது சீன வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில் “ சர்வதேச விவகாரங்களில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் பங்களிப்புக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவத்துவம் அளிக்கிறோம்” என்றார். மேலும், ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு உரிமை இருப்பதாக பிரதமர் மோடி கூறியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஐக்கிய நாடுகள் அவை உள்பட பன்னாட்டு அமைப்புகளில் மிகப்பெரும் பங்காற்ற நினைக்கும் இந்தியாவின் விருப்பத்தை சீனா புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு அளிக்கும்” என்றார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஐந்து நாடுகளில் சீனா மட்டுமே இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மீதமுள்ள நான்கு நாடுகளான அமெரிக்க, ரஷ்யா, பிரிட்டன், மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 52 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 52 of 81 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 66 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக