புதிய பதிவுகள்
» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Today at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
73 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 4 of 81 Previous  1, 2, 3, 4, 5 ... 42 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 4 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:49 pm

ஏவுகணை தாக்கி அமெரிக்க கப்பல் சேதம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கடற்படை வீரர்கள், தெற்கு கலிபோர்னியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏவுகணைகள் மூலமான வான்வழித் தாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தவறாக ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, வழிகாட்டி கப்பலை தாக்கியது. இதில், இருவர் காயம் அடைந்தனர். கப்பலின் ரடார் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Nov 18, 2013 7:19 pm

சிவா wrote: ஏவுகணை தாக்கி அமெரிக்க கப்பல் சேதம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கடற்படை வீரர்கள், தெற்கு கலிபோர்னியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏவுகணைகள் மூலமான வான்வழித் தாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தவறாக ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, வழிகாட்டி கப்பலை தாக்கியது. இதில், இருவர் காயம் அடைந்தனர். கப்பலின் ரடார் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது


மோதியது ஒரு PTA Pilotless Target Aircraft ஆளிலா விமானம் என்று கூட சொல்லலாம் ..விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது ..தாக்குதலுக்கு உள்ளான கப்பல் USS Chancellorsville எந்த வித ஆபத்தும் இல்லை

பயிற்சிக்காக PTA வில் வெடிமருந்துகள் இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை

தாக்கிய PTA

உலகச் செய்திகள்!  - Page 4 1280px-BQM-74E_launch



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 11:54 am

மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

உலகச் செய்திகள்!  - Page 4 Tun-Dr.-Mahathir-Mohamad1-300x219

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தலைநகர் தேசிய இருதய கழகத்தில் (National Heart Institute) பொதுப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகாதீரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்பில் ஏற்பட்டுள்ள நோய் தோற்று காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது உடலில் ஏற்படும் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு, மகாதீர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவக் குழுவினர் தற்போது அவருக்கு உடற்பயிற்சிகள் உட்பட பயிற்சி அளித்து கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாதீரின் குடும்பத்தினரைத் தவிர மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:22 pm

மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கைக்கு சீனா அறிவுரை

மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு குறித்து செய்தியாளர் ஒருவர், சீன வெளியுறவுத் துறை செய்தி டொடர்பாளர் கின் காங்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நாட்டின் சமூக, பொருளாதார பின்னணியைப் பொருத்து, அந்நாட்டின் மனித உரிமைகளைப் பேணுவதில் நாடுகளுக்கு இடையே வித்தியாசம் ஏற்படலாம். ஆனால், தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு மனித உரிமைகளை பாதுகாக்க அந்தந்த நாடுகள் முயற்சிப்பது அவசியம்" என்றார்.

மேலும், இலங்கைக்கு, மற்ற நாடுகள் ஆக்கபபூர்வமான உதவிகளைச் செய்ய வேண்டும். இலங்கை,மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

சீனாவைப் பொருத்த வரை இதுவரை இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தது. முதல் முறையாக சீனா, மனித உரிமைகள் விவகாரம் குறித்து இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கூட, இலங்கை உள்நாட்டு விவகாரத்தை அந்நாட்டு மக்களே சரி செய்து கொள்வார்கள் என்று கூறியிருந்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 12:45 pm

சிவா wrote:மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கைக்கு சீனா அறிவுரை

.
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Nov 19, 2013 7:26 pm

லெபனானில் உள்ள இரானிய தூதரகத்தில் மனித வெடி குண்டு மற்றும் கார் குண்டு வெடித்து 23 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 4 BZbBS-nCIAAPQOq

உலகச் செய்திகள்!  - Page 4 67qmB3f



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:20 am

கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு


கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:21 am

 இத்தாலியில் புயல்–மழைக்கு 14 பேர் சாவு பாலங்களை வெள்ளம் அடித்து சென்றது

இத்தாலி நாட்டில் உள்ள சர்டினியா தீவை புயல் தாக்கியது. இதனால் பலத்த மழை பெய்து கடுமையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அங்குள்ள ஒல்பியா பகுதியிலுள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பல இடங்களில் பாலங்கள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து சாலைகளில் நின்ற கார்களையும் அடித்து சென்றது.

இதனால் தீவில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த புயல்–மழைக்கு இதுவரை 14 பேர் பலியாகி விட்டனர். ஒல்பியா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டிற்குள் பிணமாக கிடந்தனர். மற்றொரு இடத்தில் கார் வெள்ளத்தில் சிக்கி அதில் பயணம் செய்த தாயும், குழந்தையும் இறந்தார்கள். பாலம் இடிந்து விழுந்ததில் போலீஸ் அதிகாரி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்ததுடன் 3 போலீசாரும் காயம் அடைந்தனர். பாலங்களை தண்ணீர் அடித்து சென்றதாலும், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் நிவாரணப்பணிகளில் ஈடுபட முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:21 am

 பாகிஸ்தானில் இந்திய சினிமாப்படங்களை வெளியிட திடீர் கட்டுப்பாடு லாகூர் ஐகோர்ட்டு உத்தரவு

இந்தியாவில் இந்தி சினிமாப்படங்கள் வெளியாகும் அதே நேரத்தில் பாகிஸ்தானிலும் வெளியாகி வந்தன. இஸ்லாமாபாத், லாகூரில் இந்திய சினிமாப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், இந்திய எதிர்ப்பு சிந்தனை உள்ளவருமான முப்ஷீர் லுக்மான் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் இந்திய சினிமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாப்படங்கள் இந்தியர்கள் மூலம் பாகிஸ்தானில் திரையிட சட்டப்படி அனுமதி கிடையாது. எனவே போலி ஆவணங்கள் மூலம் இந்திய சினிமாப்படங்கள் திரையிடுகிறார்கள். அதை தடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதை நீதிபதி காலித் மகமூத் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, ‘போலி சான்றிதழ் மற்றும் பாகிஸ்தான் அல்லது வெளிநாட்டினர் சார்பில் இல்லாத இந்திய படங்களை திரையிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டார். அத்துடன் பாகிஸ்தான் தணிக்கைத்துறை (சென்சார் போர்டு) மற்றும் வருவாய் வாரியம் இதுபற்றி வரும் 25–ந் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.

இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை கூடுதல் நேரம் ஒளிபரப்பியதாக சமீபத்தில் 10 தனியார் டி.வி.நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பாகிஸ்தான் தகவல் ஒழுங்குமுறை அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். தற்போது இந்திய சினிமாப்படங்களுக்கு கோர்ட்டு மூலம் தடை ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:26 am


இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது: ராஜபட்ச

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் கருத்தை இலங்கை அதிபர் ராஜபட்ச மீண்டும் நிராகரித்தார். இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனையொட்டி கொழும்பில் செய்தியாளர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், போர்க் குற்றங்கள் குறித்து மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட வேண்டும்; இல்லையெனில் சர்வதேச விசாரணையை பிரிட்டன் வலியுறுத்தும் என்றும் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளது குறித்து கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ராஜபட்ச பதில் அளிக்கையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் இந்த கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவிகரமாக இருந்தால் வரவேற்போம். ஆனால், எங்களுக்கு யாரும் கட்டளையிடமுடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.

பிளவுபடுத்த வேண்டாம்: அவர் மேலும் கூறியதாவது; "எங்களது கருத்துகளுக்கு மதிப்பு கொடுங்கள். எங்கள் செயலுக்கு உறுதுணையாக இருங்கள். ஆனால் சமூகத்துக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். (டேவிட் கேமரூனை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.)

என்மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்கிறீர்கள். என்னுடைய மக்களுக்கு நானே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போர்க் குற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற குழுவை அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

கால அவகாசம்: மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு, கால அளவை நிர்ணயிக்க கூடாது. எங்கள் நாட்டிற்கு என்று சட்ட அமைப்பு மற்றும் அரசியலமைப்பு உள்ளது.

ஏற்கெனவே மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைய காலமாகும். மேலும், வடக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தெற்குப் பகுதி மக்களின் மனநிலையையும் நாங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.

அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். ஆனால் இதனை ஒரு வாரம் அல்லது மூன்று அல்லது நான்கு வாரங்களில் செய்ய வேண்டும் என்று என்னை நீங்கள் நிர்பந்திக்கக்கூடாது.

காமன்வெல்த்தை மதிக்கிறேன்: காமன்வெல்த் அமைப்பு மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். அதன்காரணமாகத்தான், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தினோம்.

எங்கள் நாட்டிற்கு என்று நாடாளுமன்றம் உள்ளது. அதன்மூலம் அமைக்கப்பட்ட குழுவிடம், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி மக்களை கேட்டு இருக்கிறோம். என்னால் தனியாக இதனை செய்ய முடியாது' என்றும் தெரிவித்தார் ராஜபட்ச.

பத்திரிகையாளர் குற்றச்சாட்டு: கொழும்புவுக்கு காமன்வெல்த் மாநாடு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று ராஜபட்ச பேட்டி அளித்தபோது, போர்க் குற்றம் குறித்து மட்டும் கேள்விகளை எழுப்பினர். இதனால், ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அதுகுறித்து கேள்விகளை கேட்காமல், காமன்வெல்த் மாநாடு குறித்து மட்டும் கேள்விகளை கேட்கும்படி காமன்வெல்த் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் ஓருவர், இலங்கைக்கு எதிராக காமன்வெல்த் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். காமன்வெல்த் மாநாட்டில் கவனம் செலுத்தாமல், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இலங்கையின் வடபகுதிக்கு சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா, காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு இலங்கையின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனாலேயே கேமரூன் இலங்கையின் வடபகுதிக்கு சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 81 Previous  1, 2, 3, 4, 5 ... 42 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக