புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 3 of 81 Previous  1, 2, 3, 4 ... 42 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 3 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 9:29 am

உலகச் செய்திகள்!  - Page 3 972ee442-8f62-45f2-b90b-473395e25fdd_S_secvpf

தெற்கு ரஷ்யாவின் காகாசஸ் மாகாணத்தின் வழியே கடந்த மாதம் சென்ற பயணிகள் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

ஒரு நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது பஸ்சினுள் ஒரு பெண் ஏறினாள். அடுத்த சில நிமிடங்களில் மரங்கள் அடர்ந்த சாலையில் பஸ் சென்றபோது அவளது உடல் வெடித்து சிதறியதும், பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டதையும் டிரைவர் சீட் அருகேயுள்ள சி.சி.டி.வி. கேமரா படம் பிடித்துள்ளது.

இந்த தாக்குதலில் 32 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது நய்டா அசியலோவா(30) என்றும், டகேஸ்தான் பகுதியை சேர்ந்தவள் என்பதும் தெரிய வந்தது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் காகாசஸ் மாகாணத்திற்கு அருகே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ந்த இந்த தற்கொலைப் படை தாக்குதல் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று போராடி வரும் குழுவினர் 2002-ம் ஆண்டு திரையரங்கம் மீது நடத்திய தாக்குதலில் 130 பேரும், 2010ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 35 பேரும் பலியானது நினைவிருக்கலாம்.

நய்டா அசியலோவை அவரது கணவர் தான் தற்கொலைப் படை தீவிரவாதியாக மாற்றி பஸ் மீதான இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வெடி குண்டு நிபுணரான 22 வயது ட்மிரிட்டி சோகோலோவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நய்டா அசியலோவா கணவனால் மூளைச் சலவை செய்யப்பட்ட பின்னர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு அந்த பஸ்சை வெடிக்க வைத்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்காக மனைவியின் இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டை கட்டி பலமுறை ட்மிரிட்டி சோகோலோவ் ஒத்திகை பார்த்த தகவலும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் தீவிரவாத தடுப்பு போலீசார் ட்மிரிட்டி சோகோலோவ்-வை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், டகேஸ்தான் தலைநகர் மக்கச்காலா அருகேயுள்ள கிராமத்தில் அவன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது உள்ளே இருந்த சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் ட்மிரிட்டி சோகோலோவ் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 9:30 am

வியட்னாமில் மழை வெள்ளத்திற்கு 19 பேர் பலி

வியட்னாமில் கடந்த ஒருவாரமாக பெய்த தொடர் மழையினால் பல மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குவாங் ன்காய் மாகாணத்தை சேர்ந்த 64 ஆயிரத்து 500 பேர் மற்றும் குவாங் நாம் மாகாணத்தை சேர்ந்த 16 ஆயிரத்து 600 பேர் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹோய் அன் நகரின் பல சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அதை சுற்றியுள்ள 2 மாவட்டங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி மிதக்கின்றன. பின்தின் மாகாணத்தை சேர்ந்த 12 பேரும் மத்திய மாகாணத்தை சேர்ந்த மேலும் 7 பேரும் என மொத்தம் 19 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியானதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன 10க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Nov 17, 2013 11:06 am

சவுதி அரேபியாவில் கூட நல்ல மழை பெய்து வருவதாகவும் ..தலை நகர் ரியாதை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 11:24 am

SajeevJino wrote:சவுதி அரேபியாவில் கூட நல்ல மழை பெய்து வருவதாகவும் ..தலை நகர் ரியாதை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்

உலகச் செய்திகள்!  - Page 3 1441360_10152064161797125_2032881335_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 12:29 pm

 சீனாவில் காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி

சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின் ஜியாங் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நேற்று பிற்பகலில் கிளர்ச்சியாளர்கள் அத்து மீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பெய்ஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து  5 குற்றவாளிகளை பெய்ஜிங் போலீசார் கைது செய்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:15 pm

எங்களை நிர்பந்திக்கக் கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்சே கோபம்

கொழும்பு: "மனித உரிமைமீறல் குறித்த விசாரணை விஷயத்தில், யாரும் எங்களை நிர்பந்திக்கக்கூடாது,''என, இலங்கை அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் அமைப்பில், 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின், 22வது மாநாடு, இலங்கையின், கொழும்பு நகரில், கடந்த 3 நாட்களாக நடந்தது.இலங்கையில், விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பின்பும், அங்கு மனித உரிமை மீறல்கள் தொடருவதாக, ஐ.நா., மனித உரிமை அமைப்பு புகார் தெரிவித்திருந்தது. இதை காரணம் காட்டி, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்தனர்."மத்திய அரசு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. "பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும், இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது' என, மனித உரிமை ஆர்வலர்கள் வற்புறுத்தினர்.

ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற கேமரூன், இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிந்தார். அதன் பின், ""மனித உரிமை குறித்து, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, பேசினார்.

இதுகுறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே, நிருபர்களிடம் கூறியதாவது:இலங்கையில், 30 ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதனால், தமிழர்கள், சிங்களர்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அரசியலமைப்பு படியும், சட்ட விதிமுறைகளின் படியும்தான் செயல்படுகிறோம். இவற்றையெல்லாம் மதிப்பதால் தான், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தினோம். மக்களின் மனோ நிலையை மாற்ற வேண்டியுள்ளது; வடக்கு பகுதி மக்களை மட்டுமல்ல; தெற்கில் உள்ளவர்களையும் மாற்ற வேண்டியுள்ளது.இலங்கையில் போர் முடிந்த பின், நல்லிணக்க குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவில் எம்.பி.,க்கள் உளளனர். தனியொருவனாக என்னால் எதையும் செய்ய இயலாது. நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, காலவரையறை எதையும் செய்ய இயலாது. "மற்ற நாடுகள் தலையிட்டு, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்; 4 மாதத்தில் முடிக்க வேண்டும்' என, நிர்பந்திக்கக்கூடாது; இதில் நியாயமில்லை. பிரிட்டன் பிரதமர் சொல்வது போல, மார்ச் மாத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க முடியாது. எங்களுக்கு கட்டளை பிறப்பிக்காதீர்கள். தயது செய்து, எங்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள்.இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

இலங்கை மனித உரிமை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் இந்த மாநாட்டில் தீர்மானமாக இயற்றப்பட்டன.ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட், காமன்வெல்த் அமைப்பின் தலைமை பதவியை, இலங்கையிடம் ஒப்படைத்தார். அடுத்த காமன்வெல்த் மாநாடு, மொரீஷியஸ் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறலை காரணம் காட்டி, இந்த மாநாட்டை புறக்கணித்ததால், அடுத்த மாநாடு, ஐரோப்பிய நாடான மால்டாவில், 2015ல், நடைபெற உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:17 pm

31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா லேர்டமைன், 62. சிறு வயது முதலே, வீட்டு விலங்குகளை அதிகம் நேசிக்கும் இவர், ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகளை வளர்த்து வந்தார்.

செல்லப் பிராணிகளை அதிகம் நேசித்த சான்ரா, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை துவங்கி, தெருக்களில் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளை எடுத்து வளர்த்தார். சில நாட்களுக்கு முன் சான்ரா, யாருடைய துணையும் இல்லாமல், அனைத்து பிராணிகளையும் தானே கவனித்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டார். வயது முதிர்வின் காரணமாக, கடந்த சில மாதங்களாக, மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர், தனக்குப் பின் அவர் வளர்த்த பிராணிகளின் நிலை பற்றி கவலை கொள்ளத் துவங்கினார்.இந்நிலையில், சான்ரா தான் வளர்த்த, 31 நாய்களையும், தன் காரில் ஏற்றி, தானும் விஷம் குடித்து, காரின் கதவுகளை இறுக்க மூடிவிட்டார். விஷத்தின் பாதிப்பால் சான்ரா, காரிலேயே இறந்துவிட்டார். காரின் கதவுகள் மூடப்பட்டதால், அதில் அடைக்கப்பட்டிருந்த, 30 நாய்கள் பரிதாபமாக பலியாயின. ஒரே ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.அதிகாலை, சான்ராவின் வீட்டிற்கு வந்த அவரின் நண்பர், சான்ரா காரில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் காரை சோதனையிட்டதில், சான்ராவின் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனக்குப் பின், இந்த பிராணிகளை கவனிக்க யாரும் இல்லாததால், தான் வளர்த்த பிராணிகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக அதில் எழுதியிருந்தார். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சான்ராவின் தற்கொலை, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்தனை ஆண்டுகள், தான் வளர்த்த நாய்களையே சான்ரா கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது, வேதனை அளிப்பதாக, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 18, 2013 5:18 pm

நல்ல ஒரு தொடர் பதிவு நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை




உலகச் செய்திகள்!  - Page 3 Mஉலகச் செய்திகள்!  - Page 3 Uஉலகச் செய்திகள்!  - Page 3 Tஉலகச் செய்திகள்!  - Page 3 Hஉலகச் செய்திகள்!  - Page 3 Uஉலகச் செய்திகள்!  - Page 3 Mஉலகச் செய்திகள்!  - Page 3 Oஉலகச் செய்திகள்!  - Page 3 Hஉலகச் செய்திகள்!  - Page 3 Aஉலகச் செய்திகள்!  - Page 3 Mஉலகச் செய்திகள்!  - Page 3 Eஉலகச் செய்திகள்!  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:32 pm

அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கியது; 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம்

அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கி 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. அதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மின் தடை ஏற்பட்டு பல லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.

பயங்கர சூறாவளி வீசியது

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்தடுத்து 60 தடவைகள் சுழன்று, சுழன்று வீசியது. அத்துடன் ஐஸ் கட்டி மழையும் கொட்டியது. இந்த சூறாவளியால் மரங்கள் வேருடன் சரிந்தன. மின்சார கம்பங்கள் முறிந்தன. வீட்டுக்கூரைகள் காற்றில் பறக்க, வாகனங்களை உருட்டிப்போட்டது.

10 மாநிலங்கள் பாதிப்பு

இந்த சூறாவளிக்கு வாஷிங்டன், இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி, ஒகிலஹோமா, ஒஹியோ உள்பட 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பென்சில்வானியா, நியூயார்க், மேரிலாந்து, நியூஜெர்சி ஆகிய பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. சிகாகோ உள்பட பல நகரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. சாலைகள் முழுவதும் குப்பை, கூளங்கள் மற்றும் மரங்கள் விழுந்துகிடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பு அடியோடு முடங்கியது.

6 பேர் பலி

இந்த சூறாவளிக்கு 80 வயது முதியவர், 78 வயது பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இல்லியான்சில் 3 பேரும், கென்துஸ்கி, இண்டியானா, மிச்சோரி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் கூறினர். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

5 கோடி பேர் தவிப்பு

இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி ஆகிய இடங்களில் மின்சாரம் இன்றி 5 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள். வாஷிங்டனில் வசிக்கும் அந்தோணி ஹொவுரே என்பவர் கூறுகையில், ”எங்கள் வீடு அருகே இருந்த பெரும்பாலான வீடுகளை காணவில்லை. வீடுகளை இழந்தும், மின்சாரம் தடையாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்றார். மற்றொருவர் கூறும்போது, ”சூறாவளி வருவதை பார்த்ததும் நானும், குடும்பத்தினரும் அடித்தள அறைக்கு சென்று தப்பினோம். திரும்பி வந்தபோது வீட்டின் பெரும்பகுதியை சூறாவளி அடித்துச் சென்று விட்டது” என்றார்.

சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு குறித்து அதிகாரி கூறுகையில், ”10 மாநிலங்களில் பேரழிவை உண்டாக்கி விட்டது. 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்கிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்று நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:45 pm

எகிப்தில் ரயில் விபத்து: 24 பேர் பலி

கெய்ரோ: தெற்கு எகிப்தில், சரக்கு ரயில் ஒன்று வாகனங்கள் மீது மோதியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். பெனிசுப் என்ற இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் தசூர் என்ற இடத்தில் மூன்று வாகனங்கள் மீது மோதியது. கேட் மூடாததே இந்த பெரும் விபத்திற்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 81 Previous  1, 2, 3, 4 ... 42 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக