புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10 
30 Posts - 83%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 42 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 42 of 81 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 61 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 42 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 5:58 pm

இந்திய எதிர்ப்பை மீறி சீன நீர்மூழ்கிகளுக்கு இலங்கை அனுமதி

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கை அரசு, தன் துறைமுகங்களுக்குள் அனுமதித்து வருகிறது. கடந்த செப்டம்பரில், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய இலங்கை, இப்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

வல்லரசு நாடு:

ஆசியா பகுதியில் வல்லரசு நாடாக விளங்கும் சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் அவ்வப்போது உரசல் போக்கை கொண்டுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், கடந்த செப்டம்பரில், ஈரான் நாடு அமைந்துள்ள பாரசீக வளைகுடா பகுதிக்கு பயணம் மேற்கொண்டன. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளும், டீசலில் இயங்கும் நீர்மூழ்கிகளும், அந்த கப்பல்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. அவற்றில், சில ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை.அந்த கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக பயணித்து, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள, பாக் நீரிணை வழியாக, பாரசீக வளைகுடாவுக்கு செல்ல இருந்தன. அந்த கப்பல்களை, இலங்கை துறைமுகத்தில் நிறுத்த, இலங்கை அனுமதிக்கக் கூடாது என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கோதபய ராஜபக்ேஷயிடம், இந்திய அரசு வலியுறுத்தியது.எனினும், அதை கேட்காமல், இந்தியாவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சில நாட்கள் தங்க அனுமதி வழங்கப்பட்டது; கடந்த செப்டம்பரில், இது நடந்தது.அப்போது, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சீனாவின் சண்டை நாடுகளில் ஒன்றான வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

நட்புறவு:

அந்த நேரத்தில், இந்திய நகரங்களை தாக்கும் தூரத்தில் உள்ள, பாக் நீரிணையில், சீன நீர்மூழ்கி கப்பல்கள் தங்க இலங்கை அனுமதி அளித்தது.அதுபோல, ஏடன் வளைகுடா என அழைக்கப்படும், எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகள் அமைந்துள்ள பகுதிக்கு சீன நீர்மூழ்கி கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் அந்த கப்பல்கள், இலங்கையின் துறைமுகத்தை அடைய உள்ளன.அங்கு, அந்த கப்பல்கள் சில நாட்கள் தங்கவும், எரிபொருட்களை நிரப்பவும், இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.சில ஆண்டுகளாகவே, சீனாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான நட்புறவு நிலவி வருகிறது. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த இலங்கை, தன் போக்கை மாற்றிக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நெருக்கம் காண்பித்து வருகிறது.

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரால் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ள இலங்கைக்கு, ஜப்பான் ஏராளமாக நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், இப்போது, ஜப்பானையும் விட, சீனா அதிகமாக நிதியுதவி வழங்கி வருகிறது. அம்பன்தோட்டை துறைமுகம், மாத்தரை சர்வதேச விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது.இதற்கு பிரதிபலனாகவும், நன்றிக் கடனாகவும், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு, இலங்கை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வருகிறது. இது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதை, இலங்கை கண்டுகொள்ளவில்லை.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 5:58 pm

டெல்லி-கோலாலம்பூர் விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கியது

புதுடெல்லியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி 129 பேரை ஏற்றி கொண்டு சென்ற மலிண்டோ விமானம் மியான்மர் வான் வழியே பறந்து சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாய்லாந்து நாட்டின் டான் முயெங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் ரக 737-900ஈ.ஆர். விமானம் ஒன்று நேற்றிரவு 10.05 மணியளவில், 3 குழந்தைகள் மற்றும் 8 விமானிகள் உட்பட 121 பயணிகளுடன் பறந்து சென்றது. மலேசியாவை சேர்ந்த இந்த விமானம் தொழில் நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் விமானி அவசரகால பட்டியலை உடனடியாக பார்த்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டார். அதன்பின்னர் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பி சென்று உள்ளார்.

விமானத்தின் தொழில்நுட்ப விவகாரம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இது குறித்து தொடர்புடைய அதிகாரிகள், இயந்திரம் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனத்திடமும் முறைப்படி அறிவிக்கப்பட்டு விட்டது என்று விமான நிலைய அறிக்கை தெரிவித்து உள்ளது. விமான பயணிகள் கோலாலம்பூர் செல்லும் மற்றொரு விமானத்தில் (மலேசிய நேரப்படி 4.45 மணி அளவில்) பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 1:12 am

இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் எச்சரிக்கையும் மீறி, சீன கப்பல்களை, தங்கள் துறைமுகத்தில் நிறுத்த, இலங்கை அனுமதி அளித்தது. இதுகுறித்து மத்திய அரசு அதிருப்தியை தெரிவித்திருந்தது.

இதற்கு 'எரிபொருள் நிரப்புவதற்காகவே, இலங்கை துறைமுகத்தில் எங்களின் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; இது, வழக்கமான நடவடிக்கை தான்' என, சீனா மழுப்பியிருக்கிறது. வெளிநாடுகளின் துறைமுகங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக, மற்ற நிறுவனங்களின் கப்பல்கள் நிறுத்தப்படுவது, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடவடிக்கை தான். இவ்வாறு, சீனா கூறியிருக்கிறது.இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தில்,'கடந்த, 2010லிருந்து, 230க்கும் அதிகமான போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ளன. இது, நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கை தான்' என, தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 4:42 pm

காதலியின் நடத்தையில் சந்தேகம் உதடு, காது, மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலர்

உலகச் செய்திகள்!  - Page 42 201411041548014738_Jilted-pensioner-sliced-off-lovers-nose-ears-and-lips_SECVPFதைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது).அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார்.

பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரான கெய்க்கு மாதம் 2 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து வந்தார். சமீப காலமாக சூ கெய்யின் நடத்தையில்  சென்னுக்கு சந்தேகம் வந்தது.  

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தனது காதலியை வீட்டில் படுக்கையில் தூங்கி கொண்டு இருந்தார் அப்போது  சென் அவரை கட்டிப்போட்டார். பின்னர், கத்தியால் காதலியின் மூக்கு, காதுகள், உதபடுகளை துண்டு துண்டாக வெட்டிபனார். அவற்றை கழிப்பபறை கோப்பபைக்குள் போட்டு மறைத்தார். பின்னர் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்தார்.


காதலி சங்குவா மருத்துவ மனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறும் போது பெண்ணின் வெட்டிய உறுப்புகளை தேடிபார்த்தோம் அனைத்தும் முழுவதும் கூர்மையான கத்தியால் துண்டு துண்டாக வெட்டபட்டு உள்ளது. மீண்டும் முகத்தை சீரமைப்பது மிகவும் கடினம் என கூறினார்.

கைது செய்யபட்ட  ஹூவாங் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 4:44 pm

ஆசிரியை குத்திக்கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டு ஜெயில்

இங்கிலாந்தில் ஆசிரியை குத்திக் கொலை செய்த மாணவனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கார்பஸ் கிறிஸ்துவ கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆன்மார்குயர் (வயது 61) என்ற ஆசிரியை ஸ்பெயின் மற்றும் மத வகுப்பு நடத்தி வந்தார். இதே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் பாடம் நடத்திக்கொண்லி இருந்த ஆசிரியை ஆன்மார்குயரை கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்தார். கொலை நடந்தபோது வகுப்பறையில் 30 மாணவர்கள் இருந்தனர். ஆசிரியரை மாணவன் கொலை செய்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியை ஆன்மார்குயர் மீது மாணவன் வெறுப்புடன் இருந்ததால் இந்த கொடூர செயலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து மாணவனை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, மாணவனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.




உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 1:03 am

முகரம் பண்டிகை நாளில் சவூதி அரேபியாவில் 5 பேர் சுட்டுக்கொலை

சவூதி அரேபியாவில் சன்னி பிரிவினரின் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் –ஆசா மாவட்டம், அல் தல்வா கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்களான ஷியா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முகரம் பண்டிகை நாளில், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த 3 மர்ம ஆசாமிகள், கண் இமைக்கும் நேரத்தில் பொதுமக்கள் மீது எந்திர துப்பாக்கிகளாலும், கைத்துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்து ‘சீல்’ வைத்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சவூதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 1:10 am


* அமெரிக்க வாழ் இந்தியரான பர்புர் சிங் (வயது 39), அங்கு கலிபோர்னியாவில் கடை ஒன்று நடத்தி வந்தார். இந்தக் கடையில் அவர் அரசின் துணை ஊட்டச்சத்து உதவி திட்டத்தை செயல்படுத்துவதில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

* இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வின்சென்ட் சிங் (45). அமெரிக்காவில் எல்க் குரோவ் என்ற இடத்தில் வசித்து வந்த இவர், அங்கு முதலீடு துறையில் ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நியூயார்க் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

* அமெரிக்காவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, கவர்னர் பதவி என பல பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் 2 டஜனுக்கும் மேலான இந்தியர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹாலே, எம்.பி. அமி பெரா, ரோ கன்னா ஆகிய மூவரின் தேர்தல் முடிவுகளை இந்திய சமூகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 1:51 am

ஈரானில் ஆடவர் வாலிபால் போட்டியை பார்த்த பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை

உலகச் செய்திகள்!  - Page 42 Ghoncheh_Ghavami_s_2184807f

ஈரான் விதிகளை மீறி ஆடவர் வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்றதாக அந்நாட்டில் பிரிட்டன் பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கான்ச்சே கவாமி(25) கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே நடத்த வாலிபால் விளையாட்டு போட்டியை காண சென்ற குற்றத்துக்காக அந்த விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆடவர் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது. பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறல்கள் நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டிய பெண்களின் கடமை" என்று கூறினார்.

ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால் கான்ச்சே மீது அரசின் விதிகளை மீது நடந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் எவின் சிறைக்கு விசாரணைகாக அனுப்பப்பட்டார்.

ஈரான் வாழ் பிரிட்டன் நாட்டு பெண்ணான கான்ச்சே கவாமியின் கைது எதிர்த்து அந்த நாட்டில் பிரிட்டன் வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (ஞாயிறு) அன்று கான்ச்சே மீதான வழக்கு தொடர்பான விசாரணையில் அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கான்ச்சே கவாமியின் சகோதரர் இது குறித்து கூறும்போது, "இரான் நாட்டு விதிகள் என்று முறையில் கான்ச்சே கைது செய்யப்பட்டதாக நீதிபதிகள் கூறினர். ஆனால் இங்கு எதுவுமே வெளிப்படையான முறையில் நடத்தப்படவில்லை என்பது தான் உண்மை. எனது சகோதரி ஏற்கனவே 5 மாத சிறை தண்டனையை பெற்று இருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களை முன்வைத்து சட்டத்தை மீறி கான்ச்சே பிரச்சாரம் செய்ததாக தண்டனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு இது தொடர்பான விவரம் இன்னும் கிடைக்கவில்லை" என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 05, 2014 8:40 am

ஈரானில் ஆடவர் வாலிபால் போட்டியை பார்த்த பெண்ணுக்கு ஓர் ஆண்டு சிறை
-
பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய
உண்மை...
அயல் நாட்டில் வாழும்போது அந்த நாட்டு சட்டங்களை மதிக்க
வேண்டும்..சட்டத்தை மீறிவிட்டு, பின்னர் அவஸ்தை படக்கூடாது...!
-


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Nov 05, 2014 8:52 am

சிவா wrote:முகரம் பண்டிகை நாளில் சவூதி அரேபியாவில் 5 பேர் சுட்டுக்கொலை


இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1101594

சவுதியில் நடக்கும் விஷயங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரிவது இல்லை ...உலகின் பெரிய மனித உரிமை மீறல்கள் அங்குதான் நடக்கிறது.

தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 42 of 81 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 61 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக