புதிய பதிவுகள்
» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 18 of 81 •
Page 18 of 81 • 1 ... 10 ... 17, 18, 19 ... 49 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஈராக்கில் தொடர் தாக்குதல்: பலி 34 ஆக அதிகரிப்பு
ஈராக்கில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் கார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
முகமது நபிகளின் மருமகனான இமாம் அலியின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த பரபரப்பான வேளையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாகனங்களில் வெடிகுண்டுகளை நிரப்பி வெடிக்கச் செய்ததால் அப்பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளித்தது.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் 2011ல் வாபஸ் பெற்றதையடுத்து சமீபத்தில் முதல் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். தேர்தல் நடந்து இரண்டு வாரங்கள் ஆகியும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
ஏப்ரல் 28-ம் தேதி வாக்குப்பதிவு மையங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பிறகு இப்போது தொடர் தாக்குதல் நடந்துள்ளது.
ஈராக்கில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் கார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
முகமது நபிகளின் மருமகனான இமாம் அலியின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த பரபரப்பான வேளையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாகனங்களில் வெடிகுண்டுகளை நிரப்பி வெடிக்கச் செய்ததால் அப்பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளித்தது.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் 2011ல் வாபஸ் பெற்றதையடுத்து சமீபத்தில் முதல் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். தேர்தல் நடந்து இரண்டு வாரங்கள் ஆகியும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
ஏப்ரல் 28-ம் தேதி வாக்குப்பதிவு மையங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பிறகு இப்போது தொடர் தாக்குதல் நடந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி; 300 பேர் சிக்கித் தவிப்பு
துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் உள்ளே இருந்த சுமார் 300 பணியாளர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கத்திற்குள் இருந்து இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் ஒருவர் பலியானதாக சோமா நகர நிர்வாகி தெரிவித்தார். மின் விநியோக அலகு வெடித்ததால் தீப்பிடித்ததாகவும், 200 முதல் 300 பணியாளர்கள் வரை சுரங்கத்திற்குள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுரங்கத்திற்குள் இருப்பவர்களில் 20க்கும் மேற்பட்டோர் புகையால் மூச்சுத் திணறியோ அல்லது தீயில் கருகியோ இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் இறப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. சுரங்கத்திற்குள் இருக்கும் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க உள்ளே காற்று செலுத்தப்படுகிறது.
துருக்கியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுரங்க விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 1992ல் கருங்கடல் துறைமுகம் அருகே நடந்த மோசமான சுரங்க விபத்தில் 270 பணியாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் உள்ளே இருந்த சுமார் 300 பணியாளர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கத்திற்குள் இருந்து இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் ஒருவர் பலியானதாக சோமா நகர நிர்வாகி தெரிவித்தார். மின் விநியோக அலகு வெடித்ததால் தீப்பிடித்ததாகவும், 200 முதல் 300 பணியாளர்கள் வரை சுரங்கத்திற்குள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுரங்கத்திற்குள் இருப்பவர்களில் 20க்கும் மேற்பட்டோர் புகையால் மூச்சுத் திணறியோ அல்லது தீயில் கருகியோ இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் இறப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. சுரங்கத்திற்குள் இருக்கும் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க உள்ளே காற்று செலுத்தப்படுகிறது.
துருக்கியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுரங்க விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 1992ல் கருங்கடல் துறைமுகம் அருகே நடந்த மோசமான சுரங்க விபத்தில் 270 பணியாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேஸ் புக்கில் வெளியான சூனியகாரியின் போன்று இருந்ததால் பிரேசில் பெண் அடித்து கொலை
பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்தவர் பேபியேனி டி ஜீசஸ் ( வயது 33) இவர் மந்திரம் தெரிந்த சூனியக்காரி. இவர் குழந்தைகளை கடத்துகிறார் என இவர் வசிக்கும் பகுதியில் இவர் குறித்து தவறான தகவல்கள் பேசப்பட்டது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமபலாக சென்று கடந்த வாரம் மே 5 ந்தேதி ஒரு கும்பல் இவரை சரமாறியாக தாக்கியது.இதில் அவர் பரிதாபமாக இறந்தார். ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர் மீது குற்றத்திற்கான முகாந்திரம் இல்லை என தெரிவித்து உள்ளனர்.
பேஸ் புக்கில் ஒருபடம் வெளியிடப்பட்டு இவர் சூனியக்காரி குழந்தைகளை கடத்துபவர் எச்சரிக்கையாக இருங்கள் கூறப்பட்டு இருந்தது. அந்த படத்தில் உள்ள முகம் இந்த பெண்ணின் உருவத்தை ஒத்து இருந்ததால் இத்தகைய சம்பவம் நடைபெற்று உள்ளது.ஆனால் இந்த தாக்குதலுக்கு தாங்கள் வெளியிட்ட தகவல் காரணம் அல்ல என பேஸ் புக் நிர்வாகம் மறுத்து உள்ளது.
பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்தவர் பேபியேனி டி ஜீசஸ் ( வயது 33) இவர் மந்திரம் தெரிந்த சூனியக்காரி. இவர் குழந்தைகளை கடத்துகிறார் என இவர் வசிக்கும் பகுதியில் இவர் குறித்து தவறான தகவல்கள் பேசப்பட்டது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமபலாக சென்று கடந்த வாரம் மே 5 ந்தேதி ஒரு கும்பல் இவரை சரமாறியாக தாக்கியது.இதில் அவர் பரிதாபமாக இறந்தார். ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர் மீது குற்றத்திற்கான முகாந்திரம் இல்லை என தெரிவித்து உள்ளனர்.
பேஸ் புக்கில் ஒருபடம் வெளியிடப்பட்டு இவர் சூனியக்காரி குழந்தைகளை கடத்துபவர் எச்சரிக்கையாக இருங்கள் கூறப்பட்டு இருந்தது. அந்த படத்தில் உள்ள முகம் இந்த பெண்ணின் உருவத்தை ஒத்து இருந்ததால் இத்தகைய சம்பவம் நடைபெற்று உள்ளது.ஆனால் இந்த தாக்குதலுக்கு தாங்கள் வெளியிட்ட தகவல் காரணம் அல்ல என பேஸ் புக் நிர்வாகம் மறுத்து உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனி உணவை வீணாக்கினால் அபராதம் செலுத்தவேண்டும்
பிரான்சு மற்றும் ஜப்பானில் உள்ள உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவை வீணாக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உலகெங்கும் அதிக அளவில் உணவு வீணாக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஆண்டு இந்த அளவு அதிகமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரான்சு மற்றும் ஜப்பானில் உள்ள இரு உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவை வீணாக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
பிரான்சில் உள்ள உணவகத்தில், இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உணவகம் முழுவதும் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவை வீணாக்குபவர்களின் பில்லில் கூடுதலாக 20 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.
Tsukko Meshi, என்னும் அந்த உணவை பல அரிதான பொருட்களை வைத்து தயாரிப்பதாகவும், அதனை வீணாக்கினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து வருவதாகவும் உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்சு மற்றும் ஜப்பானில் உள்ள உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவை வீணாக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உலகெங்கும் அதிக அளவில் உணவு வீணாக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஆண்டு இந்த அளவு அதிகமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரான்சு மற்றும் ஜப்பானில் உள்ள இரு உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவை வீணாக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
பிரான்சில் உள்ள உணவகத்தில், இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உணவகம் முழுவதும் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவை வீணாக்குபவர்களின் பில்லில் கூடுதலாக 20 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.
Tsukko Meshi, என்னும் அந்த உணவை பல அரிதான பொருட்களை வைத்து தயாரிப்பதாகவும், அதனை வீணாக்கினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து வருவதாகவும் உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் பெரும் தீவிபத்து: 232 பேர் பலி!
துருக்கியில் உள்ள சோமா நகரில் செயல்படும் நிலக்கரி சுரங்கத்தில், சுமார் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து செல்லும் போது, சுரங்கத்தின் மின்சாரம் வழங்கும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 232 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர், 420 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 360 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை நடந்த விசாரணையில், கார்பன் மோனாக்சைடு விஷ வாயு வெளியானதே விபத்துக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக துருக்கி பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன், தான் செல்ல இருந்த அல்பானியா நாட்டு பயணத்தை தள்ளி வைத்தார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட அவர், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
துருக்கியில் உள்ள சோமா நகரில் செயல்படும் நிலக்கரி சுரங்கத்தில், சுமார் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து செல்லும் போது, சுரங்கத்தின் மின்சாரம் வழங்கும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 232 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர், 420 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 360 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை நடந்த விசாரணையில், கார்பன் மோனாக்சைடு விஷ வாயு வெளியானதே விபத்துக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக துருக்கி பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன், தான் செல்ல இருந்த அல்பானியா நாட்டு பயணத்தை தள்ளி வைத்தார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட அவர், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
200 சிறுமிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை
லாகோஸ்: நைஜீரியா சிறையில் உள்ள கூட்டாளிகளை விடுத்தால், கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை விட்டுவிடுகிறோம்Õ என்று போகோ ஹரம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அடங்கிய 17 நிமிட வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. நைஜீரியாவில் இஸ்லாமிய மதக் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேற்கத்திய கலாசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சிபோக் நகருக்கு அருகே பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் வெடித்து சிதறியது.
இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளியில் இருந்து 276 மாணவிகளை வேன்களில் கடத்தி சென்றனர். இதில் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மாணவிகளை கடத்தி சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதை தீவிரவாதிகள் மறுத்தனர். இதற்கிடையில் மாணவிகளை மீட்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் படைகளை நைஜீரியாவுக்கு அனுப்பியுள்ளன.
பதற்றமான சூழ்நிலையில், போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேக், வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். 17 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் கடத்தப்பட்ட சிறுமிகள் ஒரு இடத்தில் அழுதபடி பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன. வீடியோவில் அபுபக்கர் ஷேக் பேசுகையில், Ôநைஜீரிய அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டாளிகளை வெளியில் விடவேண்டும். அப்படி செய்தால் சிறுமிகளை விட்டுவிடுகிறோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதற்கிடையில் கடத்தப்பட்ட மாணவிகளில் இருவர் பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும், சுமார் 223 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகோஸ்: நைஜீரியா சிறையில் உள்ள கூட்டாளிகளை விடுத்தால், கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை விட்டுவிடுகிறோம்Õ என்று போகோ ஹரம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அடங்கிய 17 நிமிட வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. நைஜீரியாவில் இஸ்லாமிய மதக் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேற்கத்திய கலாசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சிபோக் நகருக்கு அருகே பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் வெடித்து சிதறியது.
இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளியில் இருந்து 276 மாணவிகளை வேன்களில் கடத்தி சென்றனர். இதில் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மாணவிகளை கடத்தி சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதை தீவிரவாதிகள் மறுத்தனர். இதற்கிடையில் மாணவிகளை மீட்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் படைகளை நைஜீரியாவுக்கு அனுப்பியுள்ளன.
பதற்றமான சூழ்நிலையில், போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேக், வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். 17 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் கடத்தப்பட்ட சிறுமிகள் ஒரு இடத்தில் அழுதபடி பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன. வீடியோவில் அபுபக்கர் ஷேக் பேசுகையில், Ôநைஜீரிய அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டாளிகளை வெளியில் விடவேண்டும். அப்படி செய்தால் சிறுமிகளை விட்டுவிடுகிறோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதற்கிடையில் கடத்தப்பட்ட மாணவிகளில் இருவர் பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும், சுமார் 223 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறுமியிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இருந்து பாதிரியார் வெளியேற்றம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ சார்லஸ் கோப்பாலா(48). அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிவந்த இவர், 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதற்காக கடந்த 8-6-2013 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் மீது நடைபெற்ற வழக்கில் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த அவரை அமெரிக்க குடியுரிமை (அகற்றல்) துறை அதிகாரிகள் பிடித்து, இந்தியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி நாட்டை விட்டு வெளியேற்றினர்.
டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர் நேற்று ஒப்படைக்கப்பட்டதாக அறிவித்துள்ள அமெரிக்க குடியுரிமை துறை இயக்குனர், ‘கத்தோலிக்க தேவாலயத்திலும், கத்தோலிக்க சமுதாயத்திலும் மதிப்புமிக்க, நம்பிக்கைக்குரிய பதவி வகித்த லியோ சார்லஸ், அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டார்.
அமெரிக்காவில் இருந்து அவர் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாரின் மனக் காயங்களுக்கு ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ சார்லஸ் கோப்பாலா(48). அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிவந்த இவர், 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதற்காக கடந்த 8-6-2013 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் மீது நடைபெற்ற வழக்கில் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த அவரை அமெரிக்க குடியுரிமை (அகற்றல்) துறை அதிகாரிகள் பிடித்து, இந்தியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி நாட்டை விட்டு வெளியேற்றினர்.
டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர் நேற்று ஒப்படைக்கப்பட்டதாக அறிவித்துள்ள அமெரிக்க குடியுரிமை துறை இயக்குனர், ‘கத்தோலிக்க தேவாலயத்திலும், கத்தோலிக்க சமுதாயத்திலும் மதிப்புமிக்க, நம்பிக்கைக்குரிய பதவி வகித்த லியோ சார்லஸ், அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டார்.
அமெரிக்காவில் இருந்து அவர் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாரின் மனக் காயங்களுக்கு ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 10 போராளிகள் பலி
பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியினர் வசிக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அல்கொய்தா போராளிகளின் மறைவிடம் உள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் பாகிஸ்தானில் தீவிர இஸ்லாமிய சட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் இவர்களைக் குறிவைத்து அழித்துவந்தது. இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானில் பெரும் கண்டனம் எழுந்தபோதும் அமெரிக்கா தனது தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனிடையில் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தலிபான் போராளிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் நடுவில் ஒரு மாதத்திற்கு மேல் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இந்த விமானத் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன. ஆனால் அரசுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஐந்து மாதத்திற்குப் பிறகு பழைய நிலைமை தொடர்ந்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள போராளிகள் மறைவிடத்தைக் குறிவைத்து இன்று நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மூன்று ஏவுகணைகள் அந்தப் பகுதியில் வீசப்பட்டதாகவும், அதில் 10 போராளிகள் பலியானதாகவும் பத்திரிகைத் தகவலொன்று தெரிவித்துள்ளது. மேலும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்தத் தகவல் குறிப்பிட்டுள்ளது. பத்திரிகையாளர்களோ, ஊடக செய்தியாளர்களோ அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை என்பதால் உண்மை நிலவரம் நேரில் உறுதி செய்யப்படவில்லை.
பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியினர் வசிக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அல்கொய்தா போராளிகளின் மறைவிடம் உள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் பாகிஸ்தானில் தீவிர இஸ்லாமிய சட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் இவர்களைக் குறிவைத்து அழித்துவந்தது. இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானில் பெரும் கண்டனம் எழுந்தபோதும் அமெரிக்கா தனது தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனிடையில் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தலிபான் போராளிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் நடுவில் ஒரு மாதத்திற்கு மேல் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இந்த விமானத் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன. ஆனால் அரசுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஐந்து மாதத்திற்குப் பிறகு பழைய நிலைமை தொடர்ந்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள போராளிகள் மறைவிடத்தைக் குறிவைத்து இன்று நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மூன்று ஏவுகணைகள் அந்தப் பகுதியில் வீசப்பட்டதாகவும், அதில் 10 போராளிகள் பலியானதாகவும் பத்திரிகைத் தகவலொன்று தெரிவித்துள்ளது. மேலும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்தத் தகவல் குறிப்பிட்டுள்ளது. பத்திரிகையாளர்களோ, ஊடக செய்தியாளர்களோ அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை என்பதால் உண்மை நிலவரம் நேரில் உறுதி செய்யப்படவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கட்டடம் இடிந்து 100 பேர் பலி?
சியோல்: வட கொரியா நாட்டின் தலைநகர் பியாங்யாங் நகரில், கட்டப்பட்டு வந்த, 23 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக, இது போன்ற தகவல்களை மறைக்க முனையும் வட கொரியா அரசு, இந்த முறை, இந்த பயங்கர விபத்து செய்தியை வெளிப்படுத்தியதுடன், அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது
சியோல்: வட கொரியா நாட்டின் தலைநகர் பியாங்யாங் நகரில், கட்டப்பட்டு வந்த, 23 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக, இது போன்ற தகவல்களை மறைக்க முனையும் வட கொரியா அரசு, இந்த முறை, இந்த பயங்கர விபத்து செய்தியை வெளிப்படுத்தியதுடன், அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேசில் சிறையில் கலவரம்: 122 அப்பாவிகள் சிறைபிடிப்பு
பிரேசிலியா: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின், வடகிழக்கு பகுதியில் உள்ள செர்ஜிபே என்ற இடத்தில் உள்ள சிறையில், கைதிகள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டு, கைதிகளை பார்க்க வந்த உறவினர்கள், 122 பேரை நேற்று சிறைபிடித்தனர்.தங்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரி, வன்முறையில் இறங்கிய கைதிகள் வசம், நான்கு காவலர்களும் நிராயுதபாணிகளாக சிக்கிக் கொண்டுள்ளனர்.
கைதிகளுடன், சிறை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்நாட்டில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இன்னும் சில வாரங்களில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், பிரேசிலில் துவங்க உள்ள நிலையில், சிறை கைதிகளின் வன்முறை, அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டின் அதிபராக, 2011 முதல், தில்மா ரூசெப் என்ற பெண் உள்ளார்.
பிரேசிலியா: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின், வடகிழக்கு பகுதியில் உள்ள செர்ஜிபே என்ற இடத்தில் உள்ள சிறையில், கைதிகள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டு, கைதிகளை பார்க்க வந்த உறவினர்கள், 122 பேரை நேற்று சிறைபிடித்தனர்.தங்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரி, வன்முறையில் இறங்கிய கைதிகள் வசம், நான்கு காவலர்களும் நிராயுதபாணிகளாக சிக்கிக் கொண்டுள்ளனர்.
கைதிகளுடன், சிறை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்நாட்டில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இன்னும் சில வாரங்களில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், பிரேசிலில் துவங்க உள்ள நிலையில், சிறை கைதிகளின் வன்முறை, அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டின் அதிபராக, 2011 முதல், தில்மா ரூசெப் என்ற பெண் உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 18 of 81 • 1 ... 10 ... 17, 18, 19 ... 49 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 81
|
|