புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இவர்? - ஸ்டாலின் !
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.
nandri - siruvarmalar
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.
nandri - siruvarmalar
சீனா வின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய
மாசேதுங், தான் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறவே
1962ம் ஆண்டில் இந்தியாவுடன் போர் தொடுத்தார் என்று
சீன போர் வல்லு நரான வாங் ஜிசி கூறி யுள்ளார்.
-
அப்போது சீனா கைப்பற்றிய இந்திய பகுதியை இன்னும்
மீட்டுக்கொண்டேயிருக்கிறோம்...!!!
மாசேதுங், தான் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறவே
1962ம் ஆண்டில் இந்தியாவுடன் போர் தொடுத்தார் என்று
சீன போர் வல்லு நரான வாங் ஜிசி கூறி யுள்ளார்.
-
அப்போது சீனா கைப்பற்றிய இந்திய பகுதியை இன்னும்
மீட்டுக்கொண்டேயிருக்கிறோம்...!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரத்துக்கு நன்றி ராம்ayyasamy ram wrote:சீனா வின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய
மாசேதுங், தான் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறவே
1962ம் ஆண்டில் இந்தியாவுடன் போர் தொடுத்தார் என்று
சீன போர் வல்லு நரான வாங் ஜிசி கூறி யுள்ளார்.
-
அப்போது சீனா கைப்பற்றிய இந்திய பகுதியை இன்னும்
மீட்டுக்கொண்டேயிருக்கிறோம்...!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது ஓர் ராணுவப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்தில் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி பெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்பது அவர்களது ஆசை. ஆனால், பள்ளிக்கூடத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே பனியாயிருக்கும். பாறை பாறையாய்ப் பனிக் கட்டிகள் உறைந்திருக்கும். ஆகையால், அவர்கள் விளையாட முடியவில்லையே... என்று ஏங்குவர்.
அவர்களது ஏக்கத்தை அறிந்தான் புதிதாக அங்கு வந்து சேர்ந்த ஒரு மாணவன். உடனே, "இதற்கு என்ன செய்யலாம்?' என்று யோசித்தான். சிறிது நேர யோசனைக்குப் பின், ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவுப்படி மற்ற மாணவர்களை அழைத்துக்கொண்டு பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் ஓர் இடத்திற்குச் சென்றான். அவர்களுடன் சேர்ந்து பனிக்கட்டிகளால் அங்கேயே ஓர் அரண் ஏற்படுத்தினான். பிறகு என்ன செய்தான் தெரியுமா?
நண்பர்களில் பாதிப்பேரை அரணுக்கு அந்தப் பக்கத்திலும், பாதிப்பேரை இந்தப் பக்கத்திலும் நிற்க வைத்தான். பிறகு, இந்தப் பக்கத்தில் நிற்போரைப் பார்த்து, ""தோழர்களே, நீங்கள்தான் எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், தெரியுமா? இந்த அரணைத் தாக்க வேண்டும்,'' என்றான்.
அதே சமயம், அந்தப் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ""நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எதிரிகள் அரணைத் தாக்காதபடி தடுத்துக் காக்க வேண்டும். அது மட்டுமல்ல... அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்யவும் வேண்டும். சரிதானா... ம் நடக்கட்டும் யுத்தம்!'' என்று முழங்கினான்.அவ்வளவுதான், இரு சாராரும் யுத்தத்தில் இறங்கி விட்டனர். வெகு மும்முரமாக யுத்தம் நடந்தது.
அந்தப் போலி யுத்தத்தைப் பார்க்க சுற்றுப் புறத்திலுள்ள மக்களெல்லாம் வந்து கூடி விட்டனர். அவர்கள், யுத்தம் செய்யும் முறையைத் திறமையாகக் கற்றுக் கொடுத்த அந்த மாணவனைப் பாராட்டினர்."இவன் இவ்வளவு சிறியவனாக இருக்கிறான்! இந்த வயதிலேயே போர் நடத்தும் முறையை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறானே!' என்று கூறி வியந்தனர்.
அதே மாணவன் ஒரு காலத்தில் மிகமிகப் பெரிய வீரனாக விளங்குவான் என்றோ, ஐரோப்பாக் கண்டத்தை ஆட்டி வைப்பான் என்றோ, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. உருவத்தில் குள்ளமான அந்த நபரை உங்களால் யூகிக்க முடிகிறதா?
விடை: அந்த வீரர், மாவீரன் நெப்போலியன். அவர் பெயரை கேட்டாலே பெரிய அரசர்கள் கூட நடுங்குவர்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நெப்போலியன் - வீரத்தின் மறு பெயர். தகவல் அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளியில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கேள்வித்தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த எட்டுக் கேள்விகளுமே கடினமான கேள்விகள். அதனால் கேள்வித்தாளைப் பார்த்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கேள்விகளில் ஒன்று கூட வரவில்லை. கேள்வித்தாளைப் பார்த்துப் பார்த்து அவர்கள் திகைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் மிகவும் கெட்டிக்கார மாணவன் ஒருவன் இருந்தான். அவனும் கேள்வித்தாளைப் பார்த்து விழித்துக் கொண்டு தான் இருந்தான்.கேள்விகள் இவ்வளவு கடினமாக இருக்கின்றனவே! எப்படிப் பதில் எழுதுவது? என்று எண்ணி அவன் விழிக்கவில்லை; இந்த எட்டுக் கேள்விகளில் நான்கு கேள்விகளுக்கு மட்டும்தானே விடை கேட்டிருக்கிறார்கள்? எந்த நான்கிற்கு விடை எழுதுவது?' என்று தெரியாமல்தான் அவன் விழித்தான்.
சிறிதுநேரம் இப்படி யோசனை செய்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். விறுவிறு என்று விடை எழுத ஆரம்பித்தான். அந்த எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டான். விடைகளின் அடியிலே ஒரு குறிப்பையும் எழுதி வைத்தான்.
""ஐயா, பரீட்சை அதிகாரி அவர்களே, எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதி விட்டேன். ஏதேனும் நான்கு விடைகளுக்கு, மார்க் போட்டால் போதும்!'' என்று எழுதியிருந்தான்.
பரீட்சை அதிகாரி அவனது விடைகளைப் படித்துப் பார்த்தார், குறிப்பையும் படித்துப் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாக இருந்தது.
எந்த நான்கு விடைகளுக்கு மார்க் போடுவது? என்றே அவருக்கு புரியவில்லை! ஏன் தெரியுமா? அவன் எழுதியிருந்த எட்டு விடைகளுமே மணி மணியாக இருந்தன!
இவ்வளவு தூரம் கெட்டிக்காரனாக இருந்த அந்த மாணவன் பெரியவனானதும், ஒரு வக்கீலாக விளங்கினான். மாதம் ரூபாய் நாலாயிரம், ஐயாயிரம் சம்பாதித்தான். ஆனாலும், வருமானத்தைப் பெரிதாகக் கருதவில்லை. வக்கீல் தொழிலை உதறித் தள்ளி விட்டு, தேச விடுதலைக்காகப் பாடுபட்டான். காந்திஜியின் முக்கிய சீடனாக விளங்கினான். நம் பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியாகவும் விளங்கினான். அவர் யார் என்று இப்பவாவது கண்டுபிடிச்சிட்டீங்களா?
விடை: பாபு ராஜேந்திர பிரசாத்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:நெப்போலியன் - வீரத்தின் மறு பெயர். தகவல் அருமை.
நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அண்ணன் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். சொந்தமாக ஓர் அச்சகமும் வைத்திருந்தார். அங்கேதான் அவருடைய சொந்தத் தம்பியும் வேலை பார்த்து வந்தான். எழுத்துக் கோப்பது, அச்சடிப்பது, பத்திரிகையை வீட்டுக்கு வீடு கொண்டுபோய்ப் போடுவது, இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் அந்தத் தம்பி செய்து வந்தான்.
அவனுக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நிறையப் படித்துத் தானும் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மனதில் தோன்றியதை எல்லாம் எழுதினான். எழுதியதையெல்லாம் பத்திரிகைகளில் வெளியிட விரும்பினான். அண்ணனிடம் கட்டுரைகளைக் கொடுத்தால் அவர் வெளியிடுவாரா? என்று யோசித்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒருநாள் இரவு, தான் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான். நேராக அச்சகத்தை அடைந்தான். தெருப்பக்கமாக இருந்த ஜன்னல் வழியாக ஆசிரியரின் அறைக்குள் கட்டுரை யைப் போட்டுவிட்டு வீடு திரும்பினான். இதை அப்போது எவருமே பார்க்கவில்லை.
மறுநாள் காலையில் ஆசிரியரான அண்ணன், அறைக்குள் நுழைந் தார். கீழே ஒரு காகிதக் கற்றை கிடப்பதைக் கண்டார். உடனே குனிந்து அதை எடுத்தார்; படித்துப் பார்த்தார். கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. எழுதியவர் யார் என்று பார்த்தார். பெயரைக் காணோம்! திரும்பித் திரும்பிப் பார்த்தார். பயனில்லை. <உடனே, அந்த கட்டுரையைத் தம்முடைய நண்பர்களிடம் காட்டினார். எல்லாரும் அதை மிக மிகப் பாராட்டினர். பத்திரிகைகளில் உடனே வெளியிட வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே அண்ணன் செய்தார்.
தம்பி இப்படியே பல கட்டுரையை எழுதி எவருக்கும் தெரியாமல் அறைக்குள் போட்டு வைத்தான். எல்லாமே அச்சில் வந்தன. ஆனாலும், எழுதியவர் யார் என்று மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை.
"புகழை, விரும்பாத ஓர் அறிஞர்தான் இப்படிச் செய்து வருகிறார்!' என்று நினைத்தார்.
ஆனால், எவ்வளவு நாட்களுக்கு தான் இது ரகசியமாகவே இருக்க முடியும்? ஒருநாள் அம்பலமாகி விட்டது. உண்மை தெரிந்ததும், எல்லாரும், தம்பியைப் பாராட்டினர். அதே தம்பி பிற்காலத்தில் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராக விளங்கினார்.
அரசியல், கலை, விஞ்ஞானம், வேதாந்தம், பொருளாதாரம் முதலிய எல்லாவற்றிலும் அவன் நிபுணனாக விளங்கினான்.
அவர் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?
விடை: அந்த தம்பி தான் இவர் பெஞ்சமின் பிராங்களின். அவர் கண்டுபிடித்த "இடிதாங்கி'யால் தான் இன்று பெரிய பெரிய கட்டடங்களெல்லாம் இடியினால் சேதமாகாமல் நிமிர்ந்து நிற்கின்றன.
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
தொடருங்கள் .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
KINGUMAR wrote: தொடருங்கள் .....
நன்றி உமர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு பணக்காரருக்கு சில பெண் குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகளை அவர் வெளியில் அனுப்பவே மாட்டார். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பார். ஆண் குழந்தைகளுடன் அவர்கள் பேசக் கூடாது; சேர்ந்து விளையாடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவு!
அந்தப் பணக்காரர் வீட்டுக்கு எதிரில் சமீபத்தில் ஒரு வீடு குடியேறியது. அந்த வீட்டில் ஒரு சில பையன்கள் இருந்தனர். அதில் ஒரு பையனுக்கு அந்தப் பணக்காரருடைய போக்குபிடிக்கவில்லை. ஒருநாள் அந்தப் பணக்காரரிடத்திலே இதைக் கூறி விட்டான். உடனே அவருக்குக் கோபம் வந்து விட்டது.""நான் அப்படித்தான் செய்வேன். எங்கே எந்த பயலாவது என் பெண்கள் இருக்கும் இடத்திற்குப் போய் விடட்டும், பார்க்கலாம்,'' என்று வீராப்பாகப் பேசினார்.
""ப்பூ, என்ன பிரமாதம்! நானே போய்க் காட்டுகிறேன்,'' என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அந்தப் பையன். அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்றே பணக்காரர் நினைத்தார். ஆனால், அவன் அதை காரியத்திலே காட்டிவிட்டான்.
ஒருநாள் மாலை நேரம், அந்தப் பையன் ஒரு சிறுமியைப் போல் அழகாக வேஷம் போட்டுக் கொண்டான். வேஷம் அவனுக்கு மிக மிகப் பொருத்தமாக இருந்தது. யாராலும் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த வேஷத்துடன் அவன் பணக்காரர் வீட்டுக்கு போனான். பணக்காரரின் முன்னே போய் நின்றான்.
""ஐயா, நான் பக்கத்து ஊர்க்காரி. இந்த ஊர்ச் சந்தைக்கு வந்தேன். என் கூட வந்தவர்கள், என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய்விட்டனர். இருட்டிப் போனதால் ஊருக்குப் போக பயமாயிருக்கிறது. இன்றிரவு மட்டும் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பீர்களா?'' என்று தயவாய்க் கேட்டான்.பணக்காரரின் மனம் உடனே இளகிவிட்டது.""சரி, வா!'' என்று பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையனை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த அவருடைய பெண் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பணக்காரருடைய பெண்களும் அவனை ஒரு பெண் என்றே நம்பி விட்டனர். அவனிடம் அன்பாகப் பேசினர். தின்பதற்கு பலகாரங்கள் கொடுத்தனர். அவனுடன் சேர்ந்து விளையாடினர். மூன்று மணி நேரம் இப்படி ஓடி விட்டது.
அப்போது,""தம்பி! தம்பி!'' என்ற குரல் தெருவிலிருந்து வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும், பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையன், ""அண்ணா, இதோ வந்துவிட்டேன்!'' என்று கூறிக்கொண்டே எழுந்தான். தன்னைத் தேடிக்கொண்டு வந்த அண்ணன் வாசலில் நிற்பதைக் கண்டான். உடனே வாசலை நோக்கி ஓடினான். அப்போதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது. அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அன்றுமுதல், அந்தப் பணக்காரர் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதே இல்லை.
அன்று மாறுவேஷம் போட்டு பணக்காரரின் மனதை மாற்றிய அந்தப் பையனின் பெயர் "கதாதரன்.' இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
விடை: பணக்காரரின் மனதை மாற்றியது இவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|