புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது.
அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன. அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன.
அந்தக் காட்டை சிங்க ராஜா நன்றாக ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி நடத்தி வந்த சிங்கராஜாவுக்கு 60 வயது ஆவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தன. சிங்கராஜாவின் அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாகக் கொண்டாட மற்ற மிருகங்கள் தீர்மானித்தன. விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன.
விழாவன்று, சிங்கராஜாவும் ராணியும் அமர்வதற்கு தேக்கு மரத்தாலான சிம்மாசனமும் தோதகத்தி மரத்தினால் ஒரு பல்லக்கும் செய்வது என அமைச்சர் நரியும் தளபதி கரடியும் முடிவு செய்தன. எனவே காட்டில் உள்ள மரங்களிலேயே மிகவும் நல்ல மரங்களாகப் பார்த்துத் தேர்வு செய்து அவற்றை வெட்டின. விழா நடப்பதற்கான மேடை அமைப்பதற்காகவும் ஏராளமான மாமரங்களை வெட்டின.
நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் மற்ற மிருகங்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரிகள் அமைக்கவும் முடிவு செய்தன. இதற்காக ஏராளமான பலகைகள் தேவைப்பட்டன.
அதற்காக காட்டிலுள்ள அகன்று வளர்ந்த பெரிய மரங்கள் பல வெட்டப்பட்டன.
விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து மிருகங்களும் தங்களுக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை உற்சாகமாகச் செய்து கொண்டிருந்தன.
அந்தக் காட்டில் ஏழை முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் பரணி. பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அதற்குப் பரணி என்று பெயர் வைத்திருப்பதாகவும் பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றும் அம்மா முயல் அடிக்கடி கூறுவாள். ஆனால் பரணி முயல் ஒருவருடைய தோட்டத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தது. ஆனாலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.
சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாணத்துக்கு காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
பரணி முயலுக்கும் அந்த அழைப்பிதழ் வந்தது.
உடனே பரணி யோசிக்க ஆரம்பித்தது. சிங்கராஜாவுக்குப் பரிசாகக் கொடுக்கத் தன்னிடம் போதுமான வசதி இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.
மா, புளி, பலா, அரசு, வேம்பு ஆகிய மர விதைகளைச் சிறிய தொட்டிகளில் போட்டு வளர்க்க ஆரம்பித்தது.
சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாண தினமும் வந்தது. சிங்கத்தின் குகையிலிருந்து விழா மேடை வரை, வரிசையாக வாழை மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
அன்று காலையில் அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே வளர்ந்திருந்த நிழலான இடத்தில் அமைந்திருந்த காட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச் சிங்கராஜாவும் ராணியும் வந்தனர். மான்கள் மந்திரம் ஓத சிங்கராஜாவும் ராணியும் கோவிலை 108 முறை வலம் வந்தனர்.
பின் ஆயுள் ஹோமம் செய்தனர். மதியம் சாப்பிட வந்த மிருகங்களுக்கு தவிட்டு கானப்பயிறு நெய்சாதம், கேப்பை பாயசம், அவித்த மொச்சை, முளைக்கீரை பெரியல், கொள்ளு ரசம் என விருந்து அமர்க்களப்பட்டது.
தொடரும்..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாலை வேளையில் சிங்கராஜாவும் ராணியும் தோதகத்தி பல்லக்கில் காட்டில் ஊர்வலமாக வந்தனர். யானைகள் மலர் மாலைகள் அணிவிக்க, மேடையில் தேக்கினால் செய்த சிம்மாசனத்தில் சிங்கராஜாவும் ராணியும் அமர்ந்திருந்தனர்.
மேடையில் குயில்கள் பாட, குரங்குகள் மத்தளம் அடிக்க, கரடிகள் நாதஸ்வரம் வாசிக்க, மயில்கள் நடனமாட விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எல்லோரும் சிங்கராஜாவுக்குத் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளைக் கொடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர். சிலர் பொன்னாடை போர்த்தினர். சிலர் குத்துவிளக்குகளைப் பரிசாக அளித்தனர். மற்றவர்கள் வெள்ளியில் ஆன பொருட்களைப் பரிசாகக் கொடுத்தனர். எல்லோரும் சிங்கராஜாவிடமும் ராணியிடமும் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பி தங்கள் இடத்துக்கு வந்த அமர்ந்து கொண்டிருந்தனர்.
கடைசியில் தயங்கித் தயங்கி வந்த பரணி முயல் தனது பரிசை எடுத்து சிங்கராஜாவுக்கு முன்பு எடுத்து வைத்தது.
ஐந்து சிறிய அழகிய தொட்டிகளில் தான் வளர்த்த மரக்கன்றுகளைத்தான் பரிசாகக் கொண்டு வந்திருந்தது பரணி முயல். சிங்கராஜாவிடம் மிகவும் பணிவுடன் அவற்றை அளித்தது.
இந்தக் காட்சியைக் கண்ட மற்ற மிருகங்கள் சிரிக்க ஆரம்பித்தன. சிங்கராஜாவுக்கும் ராணிக்கும் பரணியின் பரிசு ஆச்சரியத்தை அளித்தது. மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு, சிங்கராஜா பரணி முயலைப் பார்த்து, ""உனக்கு இந்தப் பரிசைக் கொடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?'' என்று கேட்டது.
அதற்கு, பரணி முயல், ""சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! முதல் காரணம் நானொரு கூலித் தொழிலாளி. என்னிடத்தில் விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுக்கப் பொருளாதார வசதி இல்லை. மற்றொரு காரணம் இந்த விழாவுக்காக காட்டிலிருந்து பலவகையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் காட்டில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது. மரங்கள் இல்லையேல் காடுகள் இல்லை. மழையும் சரியாகப் பெய்யாது.
மழையில்லையென்றால் மீண்டும் மரங்கள் வளர்வது தடைபட்டு விடும். காட்டின் செழிப்பு குறைந்து போய்விடும். அப்புறம் நாமெல்லாம் வாழ்வதற்கு நல்ல இடமில்லாமல் போய்விடும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அதனால்தான் இப்படியொரு பரிசை உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சில நாட்களுக்கு முன்பாகவே இந்த மரக்கன்றுகளை வளர்க்க ஆரம்பித்தேன்'' என்று கூறியது.
""ஆமாம், நீ சொல்வது உண்மைதான். இந்த விழாவுக்காக ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாதது எனது தவறுதான். நீதான் எனது அறிவுக் கண்களைத் திறந்தாய் பரணி. மற்றவர்கள் கொடுத்த பரிசுகளை விட மதிப்பு மிக்கது நீ தந்த பரிசு. இனி இந்த மாதிரி ஆடம்பர விழாக்களுக்காக மரங்களை வெட்டக்கூடாது என்று ஆணையிடுகிறேன். மேலும் இப்போது மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஈடாக எனது பிறந்த நாளை முன்னிட்டு 60 மரக்கன்றுகளை நடுவதற்கும் உத்தரவிடுகிறேன்.
உனக்கும் ஒரு வேலை தருகிறேன். அதன்படி உனக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் மரக்கன்றுகளை வளர்த்து நீ எங்களுக்கு அளிக்க வேண்டும். அதற்கான ஊதியம் உனக்குத் தரப்படும். நீ தரும் மரக்கன்றுகள் அனைத்தும் காட்டில் ஆங்காங்கே நடப்பட்டு சிறந்த முறையில் வளர்க்கப்படும்...'' என்று சிங்கராஜா தனது கம்பீரக் குரலில் அறிவித்தது.
மற்ற மிருகங்கள் அனைத்தும் வாயடைத்து நின்றன. அவற்றின் திகைப்பு அடங்க வெகு நேரமாயிற்று. பரணி முயல் சிங்கராஜாவுக்கு நன்றி கூறிவிட்டு சந்தோஷமாகத் தனது வீட்டுக்குத் திரும்பியது.பரணி முயலுக்கென தனி நிலம் கிடைத்துள்ளதால் அதுவும் ஒரு காலத்தில் தரணி ஆளப்போவது நிச்சயம்தானே!
நன்றி : சிறுவர் மணி
மேடையில் குயில்கள் பாட, குரங்குகள் மத்தளம் அடிக்க, கரடிகள் நாதஸ்வரம் வாசிக்க, மயில்கள் நடனமாட விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எல்லோரும் சிங்கராஜாவுக்குத் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளைக் கொடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர். சிலர் பொன்னாடை போர்த்தினர். சிலர் குத்துவிளக்குகளைப் பரிசாக அளித்தனர். மற்றவர்கள் வெள்ளியில் ஆன பொருட்களைப் பரிசாகக் கொடுத்தனர். எல்லோரும் சிங்கராஜாவிடமும் ராணியிடமும் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பி தங்கள் இடத்துக்கு வந்த அமர்ந்து கொண்டிருந்தனர்.
கடைசியில் தயங்கித் தயங்கி வந்த பரணி முயல் தனது பரிசை எடுத்து சிங்கராஜாவுக்கு முன்பு எடுத்து வைத்தது.
ஐந்து சிறிய அழகிய தொட்டிகளில் தான் வளர்த்த மரக்கன்றுகளைத்தான் பரிசாகக் கொண்டு வந்திருந்தது பரணி முயல். சிங்கராஜாவிடம் மிகவும் பணிவுடன் அவற்றை அளித்தது.
இந்தக் காட்சியைக் கண்ட மற்ற மிருகங்கள் சிரிக்க ஆரம்பித்தன. சிங்கராஜாவுக்கும் ராணிக்கும் பரணியின் பரிசு ஆச்சரியத்தை அளித்தது. மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு, சிங்கராஜா பரணி முயலைப் பார்த்து, ""உனக்கு இந்தப் பரிசைக் கொடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?'' என்று கேட்டது.
அதற்கு, பரணி முயல், ""சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே! முதல் காரணம் நானொரு கூலித் தொழிலாளி. என்னிடத்தில் விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுக்கப் பொருளாதார வசதி இல்லை. மற்றொரு காரணம் இந்த விழாவுக்காக காட்டிலிருந்து பலவகையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் காட்டில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது. மரங்கள் இல்லையேல் காடுகள் இல்லை. மழையும் சரியாகப் பெய்யாது.
மழையில்லையென்றால் மீண்டும் மரங்கள் வளர்வது தடைபட்டு விடும். காட்டின் செழிப்பு குறைந்து போய்விடும். அப்புறம் நாமெல்லாம் வாழ்வதற்கு நல்ல இடமில்லாமல் போய்விடும். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அதனால்தான் இப்படியொரு பரிசை உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சில நாட்களுக்கு முன்பாகவே இந்த மரக்கன்றுகளை வளர்க்க ஆரம்பித்தேன்'' என்று கூறியது.
""ஆமாம், நீ சொல்வது உண்மைதான். இந்த விழாவுக்காக ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாதது எனது தவறுதான். நீதான் எனது அறிவுக் கண்களைத் திறந்தாய் பரணி. மற்றவர்கள் கொடுத்த பரிசுகளை விட மதிப்பு மிக்கது நீ தந்த பரிசு. இனி இந்த மாதிரி ஆடம்பர விழாக்களுக்காக மரங்களை வெட்டக்கூடாது என்று ஆணையிடுகிறேன். மேலும் இப்போது மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஈடாக எனது பிறந்த நாளை முன்னிட்டு 60 மரக்கன்றுகளை நடுவதற்கும் உத்தரவிடுகிறேன்.
உனக்கும் ஒரு வேலை தருகிறேன். அதன்படி உனக்கு ஒரு ஏக்கர் நிலம் தரப்படும். அதில் மரக்கன்றுகளை வளர்த்து நீ எங்களுக்கு அளிக்க வேண்டும். அதற்கான ஊதியம் உனக்குத் தரப்படும். நீ தரும் மரக்கன்றுகள் அனைத்தும் காட்டில் ஆங்காங்கே நடப்பட்டு சிறந்த முறையில் வளர்க்கப்படும்...'' என்று சிங்கராஜா தனது கம்பீரக் குரலில் அறிவித்தது.
மற்ற மிருகங்கள் அனைத்தும் வாயடைத்து நின்றன. அவற்றின் திகைப்பு அடங்க வெகு நேரமாயிற்று. பரணி முயல் சிங்கராஜாவுக்கு நன்றி கூறிவிட்டு சந்தோஷமாகத் தனது வீட்டுக்குத் திரும்பியது.பரணி முயலுக்கென தனி நிலம் கிடைத்துள்ளதால் அதுவும் ஒரு காலத்தில் தரணி ஆளப்போவது நிச்சயம்தானே!
நன்றி : சிறுவர் மணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம ராஜாவுக்கு 60 வயசு ஆயிடுச்சா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதுக்குள்ளவா ?யினியவன் wrote:நம்ம ராஜாவுக்கு 60 வயசு ஆயிடுச்சா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க சொல்றது சரி தான் பூவன் - அம்மா தலைப்பை கிழட்டு சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்ன்னு தான் வெச்சிருக்கணும்பூவன் wrote:அதுக்குள்ளவா ?யினியவன் wrote:நம்ம ராஜாவுக்கு 60 வயசு ஆயிடுச்சா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா எனக்கு ஒரு டவுட்டு:
காட்டில் வாழும் சிங்கத்தின் லைப் ஸ்பேன் 15 வருஷம், ஜூவில் வாழ்ந்தால் 25 வருஷம் தான் - கதைக்காக 60 வதோ?
காட்டில் வாழும் சிங்கத்தின் லைப் ஸ்பேன் 15 வருஷம், ஜூவில் வாழ்ந்தால் 25 வருஷம் தான் - கதைக்காக 60 வதோ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானா கதை எழுதினேன், கதைக்காக அவங்க 60 என்று போட்டிருப்பாங்க முயல் என்ன பரணி நக்ஷத்திரத்தில் பிறக்குமா? குழந்தைகளுக்கு சொல்வதறக்காக இப்படி சொல்லி இருப்பாங்கயினியவன் wrote:அம்மா எனக்கு ஒரு டவுட்டு:
காட்டில் வாழும் சிங்கத்தின் லைப் ஸ்பேன் 15 வருஷம், ஜூவில் வாழ்ந்தால் 25 வருஷம் தான் - கதைக்காக 60 வதோ?
கதை இன் கருத்து தானே முக்கியம்
இந்த கதை இன் கருத்து எவ்வளவு நல்ல கருத்து இனியவன்
குழந்தைகள் மனதில் மரம் வெட்டக்கூடாது மற்றும் வளர்க்கணும் என்று பதியுமே !
.
.
.
வயதான சிங்கம் இல்லையா, அதுதான் வயதை கணக்கிடுவதில் தவறு நடந்திருக்கும்.
மேலும், நாம் FEB.29th பிறந்தவங்களுக்கு 4 வருடத்துக்கு ஒருமுறை 1 வயது கூட்டனுமா என்று கேட்போமே அது காட்டில் 'உல்டா' ஆய்டுத்தோ என்னவோ
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல கதை
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
நேற்று இந்த கதையை தான் குழந்தைகளுக்கு சொன்னேன் அக்கா ........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பாபு, நான் இனியவனுக்கு எழுதிய பதில் போல, குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே நல்ல சுற்று சூழல் வேண்டும் என்றால் மரங்கள் அவசியம் , அனாவஸ்யமாய் அவற்றை வெட்டக்கூடாது என்று சொல்லி மனதில் பதியவைக்கணும். மேலும் பரிசுகள் வழங்கும்போது சின்ன சின்ன செடிகளை அளிக்கவேண்டும் அவர்களுக்கு. நாங்கள் இந்த முறை எங்கள் 'ஜெனசிசில்' பரிசுகள் அப்படித்தான் கொடுத்தோம்DERAR BABU wrote:நேற்று இந்த கதையை தான் குழந்தைகளுக்கு சொன்னேன் அக்கா ........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|