புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
by T.N.Balasubramanian Today at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
raajmithun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 62 of 100 •
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருமண மண்டபத்தில்...
நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். பொதுவாக, திருமண மண்டபம் என்றால், அலங்கார விளக்குகள், தோரணங்கள் மற்றும் பலூன்களை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நண்பர் வீட்டு திருமணத்தில், புதுமையாக, பாசிட்டீவான, உற்சாகமூட்டும் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.
மணமேடைக்கு நேர் எதிரில், மணமக்களை வாழ்த்துவது போல், 'மணவிழா காணும் மணமக்கள் மணிவிழா காண வாழ்த்துகள்...' மற்றும் 'இறைவனை வேண்டினால் பிறப்பது ஆண் குழந்தை; இறைவனே வந்து பிறந்தால் பெண் குழந்தை...' போன்ற வாசகங்களும், வரவேற்பு இடத்தில், 'அன்பளிப்பு பொருளின் மதிப்பை காட்டிலும், அன்பளிக்கும் விதமே மதிப்பு மிக்கது...' என்றும் பொன் மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.
நல்லன பார்ப்பதும், நல்லன கேட்பதும் அரிதாகி விட்ட அவசர யுகத்தில், இம்முயற்சி பாராட்டும்படி இருந்தது.
உமா அரசு, திருப்பத்தூர்.
நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். பொதுவாக, திருமண மண்டபம் என்றால், அலங்கார விளக்குகள், தோரணங்கள் மற்றும் பலூன்களை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நண்பர் வீட்டு திருமணத்தில், புதுமையாக, பாசிட்டீவான, உற்சாகமூட்டும் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.
மணமேடைக்கு நேர் எதிரில், மணமக்களை வாழ்த்துவது போல், 'மணவிழா காணும் மணமக்கள் மணிவிழா காண வாழ்த்துகள்...' மற்றும் 'இறைவனை வேண்டினால் பிறப்பது ஆண் குழந்தை; இறைவனே வந்து பிறந்தால் பெண் குழந்தை...' போன்ற வாசகங்களும், வரவேற்பு இடத்தில், 'அன்பளிப்பு பொருளின் மதிப்பை காட்டிலும், அன்பளிக்கும் விதமே மதிப்பு மிக்கது...' என்றும் பொன் மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.
நல்லன பார்ப்பதும், நல்லன கேட்பதும் அரிதாகி விட்ட அவசர யுகத்தில், இம்முயற்சி பாராட்டும்படி இருந்தது.
உமா அரசு, திருப்பத்தூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145526krishnaamma wrote:திருமண மண்டபத்தில்...
நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். பொதுவாக, திருமண மண்டபம் என்றால், அலங்கார விளக்குகள், தோரணங்கள் மற்றும் பலூன்களை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நண்பர் வீட்டு திருமணத்தில், புதுமையாக, பாசிட்டீவான, உற்சாகமூட்டும் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.
மணமேடைக்கு நேர் எதிரில், மணமக்களை வாழ்த்துவது போல், 'மணவிழா காணும் மணமக்கள் மணிவிழா காண வாழ்த்துகள்...' மற்றும் 'இறைவனை வேண்டினால் பிறப்பது ஆண் குழந்தை; இறைவனே வந்து பிறந்தால் பெண் குழந்தை...' போன்ற வாசகங்களும், வரவேற்பு இடத்தில், 'அன்பளிப்பு பொருளின் மதிப்பை காட்டிலும், அன்பளிக்கும் விதமே மதிப்பு மிக்கது...' என்றும் பொன் மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.
நல்லன பார்ப்பதும், நல்லன கேட்பதும் அரிதாகி விட்ட அவசர யுகத்தில், இம்முயற்சி பாராட்டும்படி இருந்தது.
உமா அரசு, திருப்பத்தூர்.
அருமையான ஐடியா..............எல்லோரும் பின்பற்றினால் நல்லது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாயிற் சிறந்ததொரு...
புதிதாக மாற்றலாகி வந்த எங்கள் கம்பெனி கிளைமேலாளருக்கு, வாடகைக்கு வீடு பார்க்க, வீட்டு புரோக்கரை அழைத்து சென்றிருந்தேன். புரோக்கரிடம், மேலாளர், 'எங்க வீட்ல மனைவி, ஒரு குழந்தை மற்றும் எங்க அம்மான்னு நான்கு பேர் இருக்கோம். அதுக்கு தகுந்த மாதிரி வீடு வேணும். முதல் மாடியா இருந்தாக் கூட பரவாயில்ல; ஆனா, வீட்டுக்கு பக்கத்துல பட்டரை, பண்ணை, தொழிற்சாலை இருக்கக் கூடாது. அதைவிட நூறு மீட்டர் தூரத்திற்கு கோவில், தேவாலயம், மசூதி இல்லாம பாத்துக்கங்க...' என்றார்.
'என்ன சார்... கோவில் இல்லாத ஊரில குடியிருக்க வேண்டாம்ன்னு சொல்லுவாங்க; நீங்க என்னடான்னா அப்படியே உல்டாவா சொல்றீங்களே...' என்றார் புரோக்கர்.
அதற்கு மேலாளர், 'எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. அதனால, பெரும்பாலும் ராத்திரி அவங்களுக்கு தூக்கம் வர்றது இல்ல; அதிகாலையில கொஞ்ச நேரமும், மதியம் சிறிது நேரமும் தான் அசந்து தூங்குவாங்க. அருகில் வழிபாட்டு தலங்கள் இருந்தா, பூஜை, வழிபாடு, திருவிழான்னு ஒலி பெருக்கி சத்தம் இருக்கும். அதனால, அவங்க உடல்நிலை இன்னும் பாதிக்கும். அவங்களோட கடைசி காலத்தில அமைதியாவும், நிம்மதியாவும் இருக்கணும்ன்னு என் மனைவி தான் இந்த நிபந்தனைகளை போட்டிருக்காங்க...' என்றார்.
புரோக்கர் சென்றதும் மேலாளரிடம், 'இந்தக் காலத்தில தன் சுயநலத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் பெற்றோரை தனியா விட்டுட்டு தனிக்குடித்தனமோ அல்லது வெளியூரோ ஓடிப் போயிடுறாங்க. ஆனா, நீங்க உங்க அம்மா மேலேயும், உங்க மனைவி, மேலேயும் காட்டுற அக்கறை, உண்மையிலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கு சார்...' என்றேன்.
அவர் சிரித்தபடி, 'இந்த உலகத்துல அம்மாவ விட பெரிய கடவுள் எதுங்க... அவங்களுக்கு செய்ற பணிவிடைக்கு மேல ஒரு வழிபாடு இருக்கா...' என்றார்.
அவரது வார்த்தைகளை யோசித்த போது, என் தாயை நேசிக்க வைத்தது!
எஸ்.அழகுசுந்தர், மாடக்குளம்.
புதிதாக மாற்றலாகி வந்த எங்கள் கம்பெனி கிளைமேலாளருக்கு, வாடகைக்கு வீடு பார்க்க, வீட்டு புரோக்கரை அழைத்து சென்றிருந்தேன். புரோக்கரிடம், மேலாளர், 'எங்க வீட்ல மனைவி, ஒரு குழந்தை மற்றும் எங்க அம்மான்னு நான்கு பேர் இருக்கோம். அதுக்கு தகுந்த மாதிரி வீடு வேணும். முதல் மாடியா இருந்தாக் கூட பரவாயில்ல; ஆனா, வீட்டுக்கு பக்கத்துல பட்டரை, பண்ணை, தொழிற்சாலை இருக்கக் கூடாது. அதைவிட நூறு மீட்டர் தூரத்திற்கு கோவில், தேவாலயம், மசூதி இல்லாம பாத்துக்கங்க...' என்றார்.
'என்ன சார்... கோவில் இல்லாத ஊரில குடியிருக்க வேண்டாம்ன்னு சொல்லுவாங்க; நீங்க என்னடான்னா அப்படியே உல்டாவா சொல்றீங்களே...' என்றார் புரோக்கர்.
அதற்கு மேலாளர், 'எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. அதனால, பெரும்பாலும் ராத்திரி அவங்களுக்கு தூக்கம் வர்றது இல்ல; அதிகாலையில கொஞ்ச நேரமும், மதியம் சிறிது நேரமும் தான் அசந்து தூங்குவாங்க. அருகில் வழிபாட்டு தலங்கள் இருந்தா, பூஜை, வழிபாடு, திருவிழான்னு ஒலி பெருக்கி சத்தம் இருக்கும். அதனால, அவங்க உடல்நிலை இன்னும் பாதிக்கும். அவங்களோட கடைசி காலத்தில அமைதியாவும், நிம்மதியாவும் இருக்கணும்ன்னு என் மனைவி தான் இந்த நிபந்தனைகளை போட்டிருக்காங்க...' என்றார்.
புரோக்கர் சென்றதும் மேலாளரிடம், 'இந்தக் காலத்தில தன் சுயநலத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் பெற்றோரை தனியா விட்டுட்டு தனிக்குடித்தனமோ அல்லது வெளியூரோ ஓடிப் போயிடுறாங்க. ஆனா, நீங்க உங்க அம்மா மேலேயும், உங்க மனைவி, மேலேயும் காட்டுற அக்கறை, உண்மையிலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கு சார்...' என்றேன்.
அவர் சிரித்தபடி, 'இந்த உலகத்துல அம்மாவ விட பெரிய கடவுள் எதுங்க... அவங்களுக்கு செய்ற பணிவிடைக்கு மேல ஒரு வழிபாடு இருக்கா...' என்றார்.
அவரது வார்த்தைகளை யோசித்த போது, என் தாயை நேசிக்க வைத்தது!
எஸ்.அழகுசுந்தர், மாடக்குளம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 62 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 62 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 62 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமயோசித புத்தி!
சமீபத்தில், பக்கத்து வீட்டுக்காரரும், என் நெருங்கிய நண்பருமான ஒருவர், எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டார். அவர், அடிக்கடி நண்பர்களிடம் கை மாத்தாக பணம் வாங்குவார்; சொன்னபடி திருப்பி கொடுத்தும் விடுவார். அவருடைய, 16ம் நாள் காரியம் முடிந்த மறுநாள், அவர் கடன் வாங்கி இருப்பதாக கூறி, நண்பர்கள் சிலரும், மற்றவர்களும் வந்தனர். வந்தவர்களோ அவ்வளவு, இவ்வளவு என, இஷ்டத்துக்கு கூறினர்.
நண்பரின் மனைவி அறையினுள் சென்று, ஒரு டைரியை எடுத்து வந்து, என்ன தேதியில், எந்த சந்தர்ப்பத்தில், யாரிடம் எவ்வளவு வாங்கினார் என்ற விவரத்தையும், அதில் எவ்வளவு திருப்பி கொடுத்துள்ளார் என்பதையும் கூறினார். இதைக் கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தங்கள் கணக்குகளை சரி பார்த்து வருவதாக கூறி, நைசாக நழுவினர்.
நண்பர் மட்டும் கடன் விவரங்களை பதிவு செய்யாமலோ, மனைவியிடம் பகிராமலோ இருந்து இருந்தால், அவரின் காப்பீடு மற்றும் இழப்பீடு பணம் எதுவும் குடும்பத்திற்கு உதவி இருக்காது.
ஆகவே, வாசகர்களே... நம் வாழ்க்கை நிச்சயமற்றது; எனவே நம்மை சார்ந்தோரை, நம் மரணத்திற்கு பின்பும் காக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை மறவாதீர்!
ஜெ.மகேந்திரன், கோவை.
சமீபத்தில், பக்கத்து வீட்டுக்காரரும், என் நெருங்கிய நண்பருமான ஒருவர், எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டார். அவர், அடிக்கடி நண்பர்களிடம் கை மாத்தாக பணம் வாங்குவார்; சொன்னபடி திருப்பி கொடுத்தும் விடுவார். அவருடைய, 16ம் நாள் காரியம் முடிந்த மறுநாள், அவர் கடன் வாங்கி இருப்பதாக கூறி, நண்பர்கள் சிலரும், மற்றவர்களும் வந்தனர். வந்தவர்களோ அவ்வளவு, இவ்வளவு என, இஷ்டத்துக்கு கூறினர்.
நண்பரின் மனைவி அறையினுள் சென்று, ஒரு டைரியை எடுத்து வந்து, என்ன தேதியில், எந்த சந்தர்ப்பத்தில், யாரிடம் எவ்வளவு வாங்கினார் என்ற விவரத்தையும், அதில் எவ்வளவு திருப்பி கொடுத்துள்ளார் என்பதையும் கூறினார். இதைக் கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தங்கள் கணக்குகளை சரி பார்த்து வருவதாக கூறி, நைசாக நழுவினர்.
நண்பர் மட்டும் கடன் விவரங்களை பதிவு செய்யாமலோ, மனைவியிடம் பகிராமலோ இருந்து இருந்தால், அவரின் காப்பீடு மற்றும் இழப்பீடு பணம் எதுவும் குடும்பத்திற்கு உதவி இருக்காது.
ஆகவே, வாசகர்களே... நம் வாழ்க்கை நிச்சயமற்றது; எனவே நம்மை சார்ந்தோரை, நம் மரணத்திற்கு பின்பும் காக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை மறவாதீர்!
ஜெ.மகேந்திரன், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவிக்கு பரிசு கொடுக்க போகிறீர்களா?
நண்பர் ஒருவர், அவர் மனைவியின் பிறந்தநாள் அன்று குறுந்தகடு ஒன்றை பரிசாக கொடுத்ததாக கூறினார். அதற்கு, 'நகை, புடவை அல்லது அவர் விரும்பும் ஏதாவதொரு பொருளை பரிசாக தந்தால் மகிழ்வார். 'சிடி' கொடுப்பதால் என்ன லாபம்...' என்றேன்.
அதற்கு, நண்பர், 'அந்த, 'சிடி'யில், என் மனைவியின் நல்ல குணங்களைப் பற்றி, அவளுடைய தோழிகள், அலுவலக நண்பர்கள், அலுவலக மேலாளர் மற்றும் உறவினர்கள் பேசியதை பதிவு செய்துள்ளேன். அவர்களது, 'பாசிடிவ்'வான விமர்சனங்களும், அவர்கள் கூறிய பிறந்த நாள் வாழ்த்து மற்றும் ஆசிகளை கேட்ட என் மனைவி அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல; மகிழ்ச்சி கடலில் திளைத்துப் போனாள்.
'அவள் மீது நான் கொண்டுள்ள அன்பையும், காதலையும் புரிந்து கொண்டதை, அவள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். கணவன் - மனைவி உறவுக்கு இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். புடவையும், நகையும் பரிசளித்திருந்தால் இத்தகைய புரிந்துணர்வு கிடைத்திருக்குமா...' என்றார்.நண்பரின் அணுகுமுறையை பாராட்டினேன்.
இனி, என் மனைவிக்கும், பிறந்தநாள் பரிசாக, இந்த முறையையே பின்பற்ற முடிவெடுத்துள்ளேன்.
அப்ப... நீங்க!
பா.பாலாஜி, பண்ருட்டி.
நண்பர் ஒருவர், அவர் மனைவியின் பிறந்தநாள் அன்று குறுந்தகடு ஒன்றை பரிசாக கொடுத்ததாக கூறினார். அதற்கு, 'நகை, புடவை அல்லது அவர் விரும்பும் ஏதாவதொரு பொருளை பரிசாக தந்தால் மகிழ்வார். 'சிடி' கொடுப்பதால் என்ன லாபம்...' என்றேன்.
அதற்கு, நண்பர், 'அந்த, 'சிடி'யில், என் மனைவியின் நல்ல குணங்களைப் பற்றி, அவளுடைய தோழிகள், அலுவலக நண்பர்கள், அலுவலக மேலாளர் மற்றும் உறவினர்கள் பேசியதை பதிவு செய்துள்ளேன். அவர்களது, 'பாசிடிவ்'வான விமர்சனங்களும், அவர்கள் கூறிய பிறந்த நாள் வாழ்த்து மற்றும் ஆசிகளை கேட்ட என் மனைவி அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல; மகிழ்ச்சி கடலில் திளைத்துப் போனாள்.
'அவள் மீது நான் கொண்டுள்ள அன்பையும், காதலையும் புரிந்து கொண்டதை, அவள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். கணவன் - மனைவி உறவுக்கு இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். புடவையும், நகையும் பரிசளித்திருந்தால் இத்தகைய புரிந்துணர்வு கிடைத்திருக்குமா...' என்றார்.நண்பரின் அணுகுமுறையை பாராட்டினேன்.
இனி, என் மனைவிக்கும், பிறந்தநாள் பரிசாக, இந்த முறையையே பின்பற்ற முடிவெடுத்துள்ளேன்.
அப்ப... நீங்க!
பா.பாலாஜி, பண்ருட்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குடும்பத் தலைவிகள் சிந்திக்கலாமே!
சமீபத்தில், மதுரையில் உள்ள நண்பரைக் காண அவர் வீட்டுற்கு சென்றிருந்தேன். அன்று உடல்நிலை சரியில்லாததால், நண்பர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர்.
'என்ன... நீ மட்டும் தனியா இருக்கே... எங்கே உன் மனைவி...' என்று நண்பரிடம் கேட்டேன். 'வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படின்னு மூன்று நாட்களுக்கான இலவசப்பயிற்சியில கலந்துக்க போயிருக்கா...' என்றார்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே, பயிற்சி முடிந்து வந்த நண்பர் மனைவி, என்னை வரவேற்று, சிறுதானியங்களில் செய்யப்பட்ட சில தின்பண்டங்களையும், 'காளான் சூப்'பும் கொடுத்தார்.
அத்துடன், தான் சென்று வந்த பயிற்சியைப் பற்றியும், இதற்கு முன், தான் பயிற்சி பெற்ற, 'சிறு தானியங்களில், தின்பண்டங்கள் செய்வது எப்படி, வீட்டில் காளான் வளர்ப்பு' போன்ற பயிற்சிகளை பற்றியும் தெரிவித்தார்.
'இதற்கெல்லாம் எப்படி நேரம் இருக்கு?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'காலையில பிள்ளைகள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, பயிற்சிக்கு போயிடுவேன். மாலையில் பிள்ளைங்க வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன். இப்ப உங்களுக்கு கொடுத்த காளான் சூப் கூட, எங்கள் வீட்டில வளர்ந்த காளான்ல செய்தது தான்...' என்று கூறி, வீட்டின் மூலையில் இருந்த அந்த சின்ன காளான் குடிலைக் காட்டினார்.
மேலும், அவர் கூறும் போது, 'சிறுதானிய தின்பண்டமும், நான் தயாரித்தது தான். இதுபோன்ற பயனுள்ள இலவசப் பயிற்சிகள்ல கலந்துக்கிறதுனால, எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிச்சுறலாம்ன்னு மனசுல தன்னம்பிக்கை வருது...' என்றார்.
குடும்பத் தலைவிகள் பகலில், 'டிவி' சீரியல்களில் நேரத்தைக் கழிக்காமல், இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகள் மீதும் கவனம் செலுத்தினால், குடும்பத்துக்கு நல்லதுதானே!
எஸ்.ராமு, திண்டுக்கல்.
சமீபத்தில், மதுரையில் உள்ள நண்பரைக் காண அவர் வீட்டுற்கு சென்றிருந்தேன். அன்று உடல்நிலை சரியில்லாததால், நண்பர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர்.
'என்ன... நீ மட்டும் தனியா இருக்கே... எங்கே உன் மனைவி...' என்று நண்பரிடம் கேட்டேன். 'வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படின்னு மூன்று நாட்களுக்கான இலவசப்பயிற்சியில கலந்துக்க போயிருக்கா...' என்றார்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே, பயிற்சி முடிந்து வந்த நண்பர் மனைவி, என்னை வரவேற்று, சிறுதானியங்களில் செய்யப்பட்ட சில தின்பண்டங்களையும், 'காளான் சூப்'பும் கொடுத்தார்.
அத்துடன், தான் சென்று வந்த பயிற்சியைப் பற்றியும், இதற்கு முன், தான் பயிற்சி பெற்ற, 'சிறு தானியங்களில், தின்பண்டங்கள் செய்வது எப்படி, வீட்டில் காளான் வளர்ப்பு' போன்ற பயிற்சிகளை பற்றியும் தெரிவித்தார்.
'இதற்கெல்லாம் எப்படி நேரம் இருக்கு?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'காலையில பிள்ளைகள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, பயிற்சிக்கு போயிடுவேன். மாலையில் பிள்ளைங்க வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன். இப்ப உங்களுக்கு கொடுத்த காளான் சூப் கூட, எங்கள் வீட்டில வளர்ந்த காளான்ல செய்தது தான்...' என்று கூறி, வீட்டின் மூலையில் இருந்த அந்த சின்ன காளான் குடிலைக் காட்டினார்.
மேலும், அவர் கூறும் போது, 'சிறுதானிய தின்பண்டமும், நான் தயாரித்தது தான். இதுபோன்ற பயனுள்ள இலவசப் பயிற்சிகள்ல கலந்துக்கிறதுனால, எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிச்சுறலாம்ன்னு மனசுல தன்னம்பிக்கை வருது...' என்றார்.
குடும்பத் தலைவிகள் பகலில், 'டிவி' சீரியல்களில் நேரத்தைக் கழிக்காமல், இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகள் மீதும் கவனம் செலுத்தினால், குடும்பத்துக்கு நல்லதுதானே!
எஸ்.ராமு, திண்டுக்கல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உஷாரய்யா உஷாரு!
சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.
நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.
'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.
மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.
எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.
நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.
'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.
மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.
எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
மேற்கோள் செய்த பதிவு: 1149141krishnaamma wrote:உஷாரய்யா உஷாரு!
சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.
நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.
'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.
மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.
எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!
வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
வடிவேல் காமெடியின் ரீமேக் போல உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 62 of 100
|
|