புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 51 of 100 •
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பணிப்பெண்களுக்கு உதவுங்களேன்!
என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!
பி.ராம்குமார்,சென்னை.
என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!
பி.ராம்குமார்,சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1125823krishnaamma wrote:பணிப்பெண்களுக்கு உதவுங்களேன்!
என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!
பி.ராம்குமார்,சென்னை.
சூப்பர் ஐடியா !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1125823krishnaamma wrote:பணிப்பெண்களுக்கு உதவுங்களேன்!
என் நண்பரின் வீட்டில், விதவைப் பெண் ஒருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வந்தார். அதற்காக, அவருக்கு மாதம், 3,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்ததோடு, அப்பெண்ணின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசி ஒன்று எடுத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார் நண்பர்.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அப்பெண் இறந்து விட, அதற்கான இழப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் அவரின் ஒரே மகளுக்கு, எல்.ஐ.சி., மூலமாக கிடைத்தது. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கைக்கு பெருந்துணையாக இருக்கும்.
இந்த நல்வழியை, உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் செயல்படுத்தி, அவர்களின் எதிர்காலத்துக்கு உதவலாமே!
பி.ராம்குமார்,சென்னை.
ஆமாமா நல்ல ஐடியா தான்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருமண மண்டபத்தில் தேவை,'லாக்கர்' வசதி!
சமீபத்தில் என் மகனுக்கு திருமணம் நடந்தது. சத்திரத்தில் சில அறைகளே இருந்ததாலும், அருகாமையில் வேறு நல்ல தங்குமிடம் இல்லாததாலும், எல்லாரும் சத்திரத்திலேயே தங்கும்படி நேரிட்டது. பெரிய அறைகள் இரண்டு இருந்ததால், அமர்ந்து பேசவும், படுக்கவும் பிரச்னை இல்லை.
ஆனால், அனைவரும் தங்கள் சூட்கேஸ் மற்றும் பைகள் போன்ற லக்கேஜ்களை அறைகளில் வைத்து எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. எல்லாருடைய லக்கேஜையும் ஓரிரு அறைகளில் அடைக்க வேண்டியிருந்ததால், ஒவ்வொரு முறையும் அவரவருடையதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், 'மண்டப உரிமையாளர்கள், திருமணத்துக்கு வருபவர்களின் லக்கேஜை வைத்து பூட்டும்படி தோராயமாக நாலடிக்கு மூன்றடி என்ற கணக்கில், பல அடுக்கு லாக்கர்களை நிறுவினால், பெரும் உதவியாக இருக்கும். லக்கேஜ் தொலைவதோ, இடம் பெயர்ந்து வைக்கப்படுவதோ தவிர்க்கப்படும். இதற்காக தனியாக ஒரு தொகையை வசூலித்தால் கூட தவறில்லை; எல்லாரும் தரத் தயாராக இருப்பர்...' என்றார்.
இது, நடைமுறைப்படுத்தக்கூடிய எளிய யோசனை தான்; திருமண மண்டப உரிமையாளர்கள் ஆவன செய்வரா?
ஆர்.ரகோத்தமன்,ஸ்ரீபெரும்புதூர்.
சமீபத்தில் என் மகனுக்கு திருமணம் நடந்தது. சத்திரத்தில் சில அறைகளே இருந்ததாலும், அருகாமையில் வேறு நல்ல தங்குமிடம் இல்லாததாலும், எல்லாரும் சத்திரத்திலேயே தங்கும்படி நேரிட்டது. பெரிய அறைகள் இரண்டு இருந்ததால், அமர்ந்து பேசவும், படுக்கவும் பிரச்னை இல்லை.
ஆனால், அனைவரும் தங்கள் சூட்கேஸ் மற்றும் பைகள் போன்ற லக்கேஜ்களை அறைகளில் வைத்து எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. எல்லாருடைய லக்கேஜையும் ஓரிரு அறைகளில் அடைக்க வேண்டியிருந்ததால், ஒவ்வொரு முறையும் அவரவருடையதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், 'மண்டப உரிமையாளர்கள், திருமணத்துக்கு வருபவர்களின் லக்கேஜை வைத்து பூட்டும்படி தோராயமாக நாலடிக்கு மூன்றடி என்ற கணக்கில், பல அடுக்கு லாக்கர்களை நிறுவினால், பெரும் உதவியாக இருக்கும். லக்கேஜ் தொலைவதோ, இடம் பெயர்ந்து வைக்கப்படுவதோ தவிர்க்கப்படும். இதற்காக தனியாக ஒரு தொகையை வசூலித்தால் கூட தவறில்லை; எல்லாரும் தரத் தயாராக இருப்பர்...' என்றார்.
இது, நடைமுறைப்படுத்தக்கூடிய எளிய யோசனை தான்; திருமண மண்டப உரிமையாளர்கள் ஆவன செய்வரா?
ஆர்.ரகோத்தமன்,ஸ்ரீபெரும்புதூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் பானு
....ஏதோ நம்மால் முடிந்தது செய்யலாம் தானே ?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபலபுத்தி கணவரா?
தினசரி என்னை பைக்கில் ஏற்றி என் அலுவலகத்தில் இறக்கி விடும் என் கணவர், அப்படியே அலுவலகத்திற்குள் வந்து அங்கிருக்கும் சக பெண் ஊழியர்களோடு அரட்டையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். என் கணவர் சபலபுத்திக்காரர் என்பதால், எனக்கு, இது எரிச்சலாக இருக்கும். இதுபற்றி நான் ஏதாவது சொன்னால், 'உன்னை அலுவலகத்தில் கொண்டு வந்து விடுறதே, நீ சக ஆண் ஊழியர்களோடு எப்படி பழகுறேங்கிறத கண்காணிக்க தான்...' என்று என்னிடமே கூறுவார். அதேசமயம், தன் யோக்கியதனத்தை உணராமல் இருந்தார்.
ஒருமுறை அவரிடம், 'அனாவசியமா என் அலுவலகத்திற்குள் வராதீங்க; நீங்க வந்து போன பின், பெண் ஊழியர்கள் எல்லாம் உங்கள கேலி செய்றாங்க. 'இவ்வளவு பெரிய தொப்பைய வச்சுக்கிட்டு பேன்ட்டை இன் செய்து, அருவெறுப்பாக வரலாமா'ன்னு பேசுறாங்க...' என்றேன்.
இதைக்கேட்டதும், என் கணவர் முகம் வாடி, அன்று முதல் என் அலுவலகத்திற்குள் வருவதில்லை. சபலப்புத்தியுள்ள கணவனை, மனைவி தான், சாமர்த்தியமாக திருத்த வேண்டும். ரொம்ப இடம் கொடுத்து விட்டால், நம் இடம் காலியாகி விடும்.
பி.சத்தியப்பிரியா,
கோவை.
தினசரி என்னை பைக்கில் ஏற்றி என் அலுவலகத்தில் இறக்கி விடும் என் கணவர், அப்படியே அலுவலகத்திற்குள் வந்து அங்கிருக்கும் சக பெண் ஊழியர்களோடு அரட்டையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். என் கணவர் சபலபுத்திக்காரர் என்பதால், எனக்கு, இது எரிச்சலாக இருக்கும். இதுபற்றி நான் ஏதாவது சொன்னால், 'உன்னை அலுவலகத்தில் கொண்டு வந்து விடுறதே, நீ சக ஆண் ஊழியர்களோடு எப்படி பழகுறேங்கிறத கண்காணிக்க தான்...' என்று என்னிடமே கூறுவார். அதேசமயம், தன் யோக்கியதனத்தை உணராமல் இருந்தார்.
ஒருமுறை அவரிடம், 'அனாவசியமா என் அலுவலகத்திற்குள் வராதீங்க; நீங்க வந்து போன பின், பெண் ஊழியர்கள் எல்லாம் உங்கள கேலி செய்றாங்க. 'இவ்வளவு பெரிய தொப்பைய வச்சுக்கிட்டு பேன்ட்டை இன் செய்து, அருவெறுப்பாக வரலாமா'ன்னு பேசுறாங்க...' என்றேன்.
இதைக்கேட்டதும், என் கணவர் முகம் வாடி, அன்று முதல் என் அலுவலகத்திற்குள் வருவதில்லை. சபலப்புத்தியுள்ள கணவனை, மனைவி தான், சாமர்த்தியமாக திருத்த வேண்டும். ரொம்ப இடம் கொடுத்து விட்டால், நம் இடம் காலியாகி விடும்.
பி.சத்தியப்பிரியா,
கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விபத்துகளை தவிர்க்க...
எங்கள் பகுதியில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற பெரிய கட்டடங்கள் கட்டும் போது, விபத்துகளை தவிர்ப்பதற்காக, 'கவனமாக வேலை செய்யவும், விபத்துகளை தவிர்ப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைப்பர். ஆனால், அந்த இடத்திலோ, 'உங்கள் அன்பானவர்கள் உங்களுக்காக வீட்டில் காத்துக் கொண்டிருக்கின்றனர்; எனவே, கவனமுடன் வேலை செய்யுங்கள்...' என்று எழுதி வைத்து, வீட்டிலுள்ள சொந்த பந்தங்களை ஞாபகப்படுத்தியிருந்தனர்.
பெரிய கட்டடங்கள் கட்டும் இடங்களில், இதுபோல எழுதி வைத்து விபத்துகளை தவிர்க்கலாமே!
ஜெ.கண்ணன், சென்னை
எங்கள் பகுதியில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற பெரிய கட்டடங்கள் கட்டும் போது, விபத்துகளை தவிர்ப்பதற்காக, 'கவனமாக வேலை செய்யவும், விபத்துகளை தவிர்ப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைப்பர். ஆனால், அந்த இடத்திலோ, 'உங்கள் அன்பானவர்கள் உங்களுக்காக வீட்டில் காத்துக் கொண்டிருக்கின்றனர்; எனவே, கவனமுடன் வேலை செய்யுங்கள்...' என்று எழுதி வைத்து, வீட்டிலுள்ள சொந்த பந்தங்களை ஞாபகப்படுத்தியிருந்தனர்.
பெரிய கட்டடங்கள் கட்டும் இடங்களில், இதுபோல எழுதி வைத்து விபத்துகளை தவிர்க்கலாமே!
ஜெ.கண்ணன், சென்னை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உழைப்பு இருந்தால் மட்டும் போதாது!
சமீபத்தில், என் தூரத்து உறவினரின் மகனை, ஒரு திருமண வீட்டில் பார்த்தேன். இதற்கு முன் அவன் தந்தை இறந்த போது, பள்ளி மாணவனாக பார்த்தது. பரஸ்பர விசாரிப்புக்கு பின், 'இப்போ என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு, 'காலை, 7:00 மணியிலிருந்து, 10:00 மணி வரை, மினரல் வாட்டர் சப்ளை செய்வேன்; பின், 10:00 மணியிலிருந்து ஒரு கூரியர் நிறுவனத்தில், 'டெலிவரி' மற்றும் 'பிக்-அப்' செய்வேன். மாலை, 4:00 மணிக்கு மேல் ஒரு ஓட்டலில் பில்லிங் கேஷியராக, 10:00 மணி வேலை வரை பார்ப்பேன்...' என்றான்.
மேலும், தொலைத்தொடர்பு வழியாக டிகிரி படிப்பதாகவும் கூறிய போது அசந்து போனேன்.
அவன் அப்பா இறக்கும் போது, லட்ச ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாகவும், அதையெல்லாம் அடைத்ததோடு தற்போது, இரு சக்கர வண்டி வாங்கியிருப்பதாகவும் கூறினான். கடந்த மூன்று ஆண்டுகளாக தன் கடின உழைப்பால், நிறைய சம்பாதித்ததோடு, அப்பணத்தை வீணாக்காமல் சேமித்து, கடனை அடைத்துடன், தன் பொருளாதார வளத்தை பெருக்கி கொண்ட அந்த இளைஞனை மனதார பாராட்டினேன்.
இக்காலத்து இளைஞர்கள் செலவுக்கு பணம் போதவில்லை என்று, பகுதி நேர வேலைக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதை சேமித்து, தன் வாழ்க்கை உயர்வுக்கு பயன்படுத்துவதே, உழைப்பிற்கான உண்மையான சிறப்பு என்பதை, அந்த இளைஞன் மூலம் உணர்ந்தேன்.
ஜி.எலிசபெத் ராணி,
மதுரை.
சமீபத்தில், என் தூரத்து உறவினரின் மகனை, ஒரு திருமண வீட்டில் பார்த்தேன். இதற்கு முன் அவன் தந்தை இறந்த போது, பள்ளி மாணவனாக பார்த்தது. பரஸ்பர விசாரிப்புக்கு பின், 'இப்போ என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு, 'காலை, 7:00 மணியிலிருந்து, 10:00 மணி வரை, மினரல் வாட்டர் சப்ளை செய்வேன்; பின், 10:00 மணியிலிருந்து ஒரு கூரியர் நிறுவனத்தில், 'டெலிவரி' மற்றும் 'பிக்-அப்' செய்வேன். மாலை, 4:00 மணிக்கு மேல் ஒரு ஓட்டலில் பில்லிங் கேஷியராக, 10:00 மணி வேலை வரை பார்ப்பேன்...' என்றான்.
மேலும், தொலைத்தொடர்பு வழியாக டிகிரி படிப்பதாகவும் கூறிய போது அசந்து போனேன்.
அவன் அப்பா இறக்கும் போது, லட்ச ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாகவும், அதையெல்லாம் அடைத்ததோடு தற்போது, இரு சக்கர வண்டி வாங்கியிருப்பதாகவும் கூறினான். கடந்த மூன்று ஆண்டுகளாக தன் கடின உழைப்பால், நிறைய சம்பாதித்ததோடு, அப்பணத்தை வீணாக்காமல் சேமித்து, கடனை அடைத்துடன், தன் பொருளாதார வளத்தை பெருக்கி கொண்ட அந்த இளைஞனை மனதார பாராட்டினேன்.
இக்காலத்து இளைஞர்கள் செலவுக்கு பணம் போதவில்லை என்று, பகுதி நேர வேலைக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதை சேமித்து, தன் வாழ்க்கை உயர்வுக்கு பயன்படுத்துவதே, உழைப்பிற்கான உண்மையான சிறப்பு என்பதை, அந்த இளைஞன் மூலம் உணர்ந்தேன்.
ஜி.எலிசபெத் ராணி,
மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:உழைப்பு இருந்தால் மட்டும் போதாது!
சமீபத்தில், என் தூரத்து உறவினரின் மகனை, ஒரு திருமண வீட்டில் பார்த்தேன். இதற்கு முன் அவன் தந்தை இறந்த போது, பள்ளி மாணவனாக பார்த்தது. பரஸ்பர விசாரிப்புக்கு பின், 'இப்போ என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு, 'காலை, 7:00 மணியிலிருந்து, 10:00 மணி வரை, மினரல் வாட்டர் சப்ளை செய்வேன்; பின், 10:00 மணியிலிருந்து ஒரு கூரியர் நிறுவனத்தில், 'டெலிவரி' மற்றும் 'பிக்-அப்' செய்வேன். மாலை, 4:00 மணிக்கு மேல் ஒரு ஓட்டலில் பில்லிங் கேஷியராக, 10:00 மணி வேலை வரை பார்ப்பேன்...' என்றான்.
மேலும், தொலைத்தொடர்பு வழியாக டிகிரி படிப்பதாகவும் கூறிய போது அசந்து போனேன்.
அவன் அப்பா இறக்கும் போது, லட்ச ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாகவும், அதையெல்லாம் அடைத்ததோடு தற்போது, இரு சக்கர வண்டி வாங்கியிருப்பதாகவும் கூறினான். கடந்த மூன்று ஆண்டுகளாக தன் கடின உழைப்பால், நிறைய சம்பாதித்ததோடு, அப்பணத்தை வீணாக்காமல் சேமித்து, கடனை அடைத்துடன், தன் பொருளாதார வளத்தை பெருக்கி கொண்ட அந்த இளைஞனை மனதார பாராட்டினேன்.
இக்காலத்து இளைஞர்கள் செலவுக்கு பணம் போதவில்லை என்று, பகுதி நேர வேலைக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதை சேமித்து, தன் வாழ்க்கை உயர்வுக்கு பயன்படுத்துவதே, உழைப்பிற்கான உண்மையான சிறப்பு என்பதை, அந்த இளைஞன் மூலம் உணர்ந்தேன்.
ஜி.எலிசபெத் ராணி,
மதுரை.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிறந்த நாள் கொண்டாட...
என் உறவினர் குழந்தைக்கு பிறந்த நாள் என்பதால், வாழ்த்து தெரிவிப்பதற்காக உறவினர் வீடு சென்றிருந்தேன். வழக்கமாக, அக்குழந்தையின் பிறந்த நாளுக்கு, பள்ளிக்கு அணிந்து செல்ல ஒரு உடையும், மாலையில், 'கேக்' வெட்டி, பார்ட்டி கொடுக்க இன்னொரு உடை என, இரண்டு டிரஸ் வாங்குவர்.
குழந்தையை வாழ்த்தி பரிசுப் பொருள் கொடுத்த பின், 'இன்று பள்ளிக்கூடத்துக்கு என்ன கலர் டிரஸ் போட்டுகிட்டு போனே... எத்தனை சாக்லேட் கொடுத்தே...' என்று கேட்டேன். அதற்கு அவள், 'இன்னக்கி பள்ளிக் கூடத்துக்கு புது டிரஸ் போட்டுக்கல ஆண்டி... அதுக்கு பதிலா எங்க பள்ளி நூலகத்துக்கு, நான்கு புத்தகம் வாங்கி கொடுத்தேன்...' என்று பெருமையாகச் சொன்னாள். 'அப்படியா என்ன புத்தகம் கொடுத்தே...' என்று கேட்டேன். அவளும் புத்தகத்தை பற்றி ஆர்வமாக சொன்னாள்.
வீட்டிற்கு கிளம்பும் போது, உறவுப் பெண்ணிடம் இது பற்றிக்கேட்ட போது, 'இவங்க பள்ளியில, இப்படி பிறந்த நாட்களின் போது, சில குழந்தைங்க ரொம்ப விலை உயர்ந்த டிரஸ் போட்டு வர்றாங்களாம். இது கொஞ்சம் வசதி குறைந்த குழந்தைகளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும்ன்னு புது டிரஸ் போட்டு வர பள்ளியில தடை போட்டுருக்காங்க.
'அதேமாதிரி, தினமும், குறைஞ்சது ரெண்டு குழந்தைங்களாவது, பிறந்த நாள்ன்னு சாக்லேட் கொடுக்குறாங்க. இப்படி அடிக்கடி சாக்லேட் சாப்பிட்டு, பல் சொத்தை, வயிற்றில் பூச்சி, ஒவ்வாமைன்னு குழந்தைகளோட உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுறதால, சாக்லேட் கொண்டு வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. ஆனால், காலையில் அசம்பளியில எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிருவாங்களாம்.
'விருப்பப்படுறவங்க பிறந்த நாள் அன்று, பள்ளிக்குப் புத்தகங்கள அவரவர் சவுகரியப்படி வாங்கிக் கொடுக்கலாம்ன்னு சொல்லியிருந்தாங்க. அதுவும் நல்லது தானே... நாம என்ன விலையில வாங்கிக் கொடுக்குறோம்ங்கிறது மற்ற குழந்தைகளுக்கு தெரியாது. இதனால, ஏற்றத்தாழ்வு பிரச்னை இல்ல; அதோட அவங்க பள்ளியில குழந்தைகள் படிக்க ஏராளமான புத்தகங்களும் கிடைக்கும். பெத்தவங்க அவங்க ரசனைப்படி புத்தகங்க வாங்குறதால, நல்ல தரமான பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். புத்தகம் வாங்குறதுக்கு குழந்தைங்க நம்மோட கடைக்கு வர்றதால, அவங்களுக்கும் புத்தகம் படிக்கிற பழக்கம் ஏற்படும்...' என்றாள்.
இது நல்ல யோசனையாக தோன்றியது. இதை மற்ற பள்ளிகளும் பின்பற்றலாமே!
மீனலோசினி பட்டாபிராமன்,
சென்னை.
என் உறவினர் குழந்தைக்கு பிறந்த நாள் என்பதால், வாழ்த்து தெரிவிப்பதற்காக உறவினர் வீடு சென்றிருந்தேன். வழக்கமாக, அக்குழந்தையின் பிறந்த நாளுக்கு, பள்ளிக்கு அணிந்து செல்ல ஒரு உடையும், மாலையில், 'கேக்' வெட்டி, பார்ட்டி கொடுக்க இன்னொரு உடை என, இரண்டு டிரஸ் வாங்குவர்.
குழந்தையை வாழ்த்தி பரிசுப் பொருள் கொடுத்த பின், 'இன்று பள்ளிக்கூடத்துக்கு என்ன கலர் டிரஸ் போட்டுகிட்டு போனே... எத்தனை சாக்லேட் கொடுத்தே...' என்று கேட்டேன். அதற்கு அவள், 'இன்னக்கி பள்ளிக் கூடத்துக்கு புது டிரஸ் போட்டுக்கல ஆண்டி... அதுக்கு பதிலா எங்க பள்ளி நூலகத்துக்கு, நான்கு புத்தகம் வாங்கி கொடுத்தேன்...' என்று பெருமையாகச் சொன்னாள். 'அப்படியா என்ன புத்தகம் கொடுத்தே...' என்று கேட்டேன். அவளும் புத்தகத்தை பற்றி ஆர்வமாக சொன்னாள்.
வீட்டிற்கு கிளம்பும் போது, உறவுப் பெண்ணிடம் இது பற்றிக்கேட்ட போது, 'இவங்க பள்ளியில, இப்படி பிறந்த நாட்களின் போது, சில குழந்தைங்க ரொம்ப விலை உயர்ந்த டிரஸ் போட்டு வர்றாங்களாம். இது கொஞ்சம் வசதி குறைந்த குழந்தைகளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும்ன்னு புது டிரஸ் போட்டு வர பள்ளியில தடை போட்டுருக்காங்க.
'அதேமாதிரி, தினமும், குறைஞ்சது ரெண்டு குழந்தைங்களாவது, பிறந்த நாள்ன்னு சாக்லேட் கொடுக்குறாங்க. இப்படி அடிக்கடி சாக்லேட் சாப்பிட்டு, பல் சொத்தை, வயிற்றில் பூச்சி, ஒவ்வாமைன்னு குழந்தைகளோட உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுறதால, சாக்லேட் கொண்டு வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. ஆனால், காலையில் அசம்பளியில எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிருவாங்களாம்.
'விருப்பப்படுறவங்க பிறந்த நாள் அன்று, பள்ளிக்குப் புத்தகங்கள அவரவர் சவுகரியப்படி வாங்கிக் கொடுக்கலாம்ன்னு சொல்லியிருந்தாங்க. அதுவும் நல்லது தானே... நாம என்ன விலையில வாங்கிக் கொடுக்குறோம்ங்கிறது மற்ற குழந்தைகளுக்கு தெரியாது. இதனால, ஏற்றத்தாழ்வு பிரச்னை இல்ல; அதோட அவங்க பள்ளியில குழந்தைகள் படிக்க ஏராளமான புத்தகங்களும் கிடைக்கும். பெத்தவங்க அவங்க ரசனைப்படி புத்தகங்க வாங்குறதால, நல்ல தரமான பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். புத்தகம் வாங்குறதுக்கு குழந்தைங்க நம்மோட கடைக்கு வர்றதால, அவங்களுக்கும் புத்தகம் படிக்கிற பழக்கம் ஏற்படும்...' என்றாள்.
இது நல்ல யோசனையாக தோன்றியது. இதை மற்ற பள்ளிகளும் பின்பற்றலாமே!
மீனலோசினி பட்டாபிராமன்,
சென்னை.
Page 51 of 100 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 100
|
|