புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 3 of 100 •
Page 3 of 100 • 1, 2, 3, 4 ... 51 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி அசுரன்அசுரன் wrote:ஆஹா துறவி கதை மிக மிக அற்புதம். இதை நான் எனது மாணவர்களுக்கு அசெம்பிளி டாக் கிற்கு பயன்படுத்திக்கொள்கிறேன் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மருத்துவராக இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில், மண்டபத்தில் நுழையும் போதே, அனைவருக்கும் ஐஸ்கிரீம் கப் தரப்பட்டது. "எல்லாரும், விருந்தின் கடைசியில் தானே ஐஸ்கிரீம் தருவர். நீங்கள் ஏன் முன்னாடியே தருகிறீர்கள்...' என்று, மருத்துவ நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், "உணவு உண்ட பின், ஜில்லென்ற ஐஸ்கிரீம் சாப்பிட்டால், உடலில் வெப்ப சக்தி குறைந்து, ஜீரண கோளாறு வரும். டாக்டராக இருக்கும் நானே, இந்த தவறை செய்யக் கூடாது...' என்றார். ஜீரண கோளாறை தவிர்க்க, விருந்துக்கு பின், ஐஸ்கிரீம் தருவதை தவிர்க்கலாமே!
நன்றி - வாரமலர் -- கோ.ருக்குமணி, கள்ளக்குறிச்சி.
நன்றி - வாரமலர் -- கோ.ருக்குமணி, கள்ளக்குறிச்சி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசுடைமை வங்கி ஒன்றில், வேலை பார்க்கும் நான், சமீபத்தில், தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும், பால்ய சிநேகிதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆபீசில், சபலிஸ்டுகளை எப்படி சமாளிக்கிறாய்?' என்று, சிரித்துக் கொண்டே கேட்டேன்.
"அந்த விஷயத்துல நான் சமர்த்து. ஆபீசுல பத்து வருஷமா, பழந்தின்னு கொட்டை போட்டவங்களெல்லாம், என்னைப் பார்த்து, புருவம் உயர்த்தி, ஆச்சரியப்படற அளவுக்கு நான் பாப்புலர்...
"எப்படின்னு கேக்கறியா? காலைல ஆபீசுக்கு போனவுடனே, "இன்னிக்கு பஸ்சுல, ஒரு காலிப்பய என்கிட்ட, சில்மிஷம் பண்ணினான். செருப்பை கழட்டி, "பளார் பளார்'ன்னு அறைஞ்சேன். அலறி, அடிச்சிட்டு தப்பிச்சோம், பிழைச்சோம்ன்னு இறங்கி ஓடிப் போயிட்டான்'ன்னு எல்லாருக்கும் கேட்கும்படி, டுபாக்கூர் விடுவேன்.
"இந்த மாதிரி, அவ்வப்போது யாருக்கும் சந்தேகம் வராதபடி, "கப்ஸா' அடிச்சி விடுவேன். இதை உண்மையின்னு நம்பி, "எம்மா...அவளா நெருப்புல்லா'ன்னு சொல்லுவாங்க அந்த மாதிரியான சபல ஆசாமிகள் உட்பட, யாரும் என்கிட்ட வாலாட்ட மாட்டாங்க...' என்றாள் பெருமையாக!
வேலைக்கு செல்லும் சகோதரிகளே... நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்த மாதிரி பொய் சொன்னாலும் பரவாயில்லை... நெருப்புங்கற இமேஜை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதுவே, பாதுகாப்பு கவசமாய் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும்.
நன்றி - தினமலர் - சி.கலாராணி, புதுச்சேரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும், என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன், நவநாகரிகமான காதல் ஜோடி ஒன்று, பைக்கில் சென்று கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த இளம் பெண், காதலனின் தாடையை பிடித்துக் கிள்ளுவதும், கழுத்தில் முத்தமிட்டு, இரு கைகளால் காதலனின் இடுப்பை இறுக்கமாக அணைத்தும், "கிச்சு கிச்சு' மூட்டியபடி சென்றாள்.
காதலனோ, சுற்றுப்புறத்தை எல்லாம் மறந்து, காதலியின், "கிளுகிளுப்பு'களை அனுபவித்தவாறு, பைக் ஓட்டிச் சென்றான்.
"இவர்கள் இப்படி விளையாட்டாக செய்வது, விபரீதத்தில் முடியப் போகிறதே...' என்று, என் கணவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, அந்த விபரிதம் நடந்து விட்டது.
எங்களுக்கு பின்னால் இருந்து, பைக்கில் வந்த வில்லன் ஒருவன், இளம் ஜோடியின் பைக் அருகில் சென்று, இளம் பெண்ணின் மார்பை அழுத்தி விட்டு, வேகமாக சென்று விட்டான். இதைப்பார்த்த நாங்கள், அதிர்ந்து விட்டோம். அதிர்ச்சியில், உறைந்து போயிருந்தாள் அந்த இளம் பெண். பைக்கை, ஓரமாக நிறுத்தி விட்டான் இளைஞன். அதன் பின், என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
இளம் ஜோடிகளே... உங்கள், பருவ விளையாட்டுகளை, நான்கு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடத்தில் அரங்கேற்றினால், இப்படிப்பட்ட விபரீதங் கள் நடக்க வாய்ப்புள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
நன்றி - வாரமலர் — கமலா மூர்த்தி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர், அவரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பேச்சை, வேதவாக்கு போல் கேட்பார். தன் கணவர் ஏதாவது சொன்னால் கூட, அதை அவ்வளவாக ஏற்பது கிடையாது. சமீபத்தில், அப்பெண்மணியின் வீட்டில் பிரச்னை ஏற்பட, வழக்கம் போல் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பிரச்னையை கூற, "எத்தனை நாட்கள் தான், கணவர் உன்னிடம் பேசாமல் இருப்பார்... ஒருநாள், கண் முன்னாடியே கிணற்றுக்குள் குதி. அப்பவாவது, உன் மேல் அவருக்கிருப்பது பாசமா அல்லது வேஷமா என்பது புரியும்!' எனக் கூற, அப்பெண்மணியும் அப்படியே செய்து விட்டார்.
கிணற்றில் குதித்த வேகத்தில், தலையில் நன்றாக அடிபட்டு விட்டது. நல்ல வேளை... அப்பெண்மணி யின் கணவர் உயிரை காப்பாற்றி விட்டார். அடுத்தவர்களுக்கு, "அட்வைஸ்' கூறும், அட்வைஸ் அம்புஜங்களே... மற்றவர் குடும்பத்தில், பிரச்னை வராத மாதிரி, அறிவுரை கூற முடிந்தால் கூறுங்கள்; அதை விடுத்து, இப்படி அபத்தமான (ஆபத்தான) அறிவுரை கூறி, வேதனைக்குள்ளாக்காதீர்!
நன்றி - வாரமலர் — எல். சந்திரகலா, போரூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமீபத்தில், என் பேரனின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது, அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு, உணவு தயார் செய்து கொடுத்தோம். அந்த இல்லத்தில் இருந்த பொறுப்பாளரிடம் பேசிக் கொண்டு இருந்த போது, "இதுபோல் உதவுபவர்கள் எல்லோருமே சாப்பிடும் உணவுப் பொருட்களாகத்தான் கொடுக்கின்றனர்.
"சில சமயம், ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி, இரண்டு, மூன்று குடும்பத்தினர் உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து விடுவர். அப்போதெல்லாம் உணவு மிஞ்சிவிடும். இதைத் தவிர்க்க, தானமளிக்க விரும்புவோர், முன் கூட்டியே, எங்களிடம் வந்து கேட்டால், எங்கள் இல்லக் குழந்தைகளுக்கு, தேவைப்படும் மருந்துப் பொருட்களை வாங்கித் தரச் சொல்ல முடியும்...' என்றார்.
அவர் கூறியது பயனுள்ளதாக இருந்ததால், அதை நினைவில் வைத்து, அடுத்து வந்த எங்கள் திருமண நாளின் போது, அந்த இல்லம் சென்று, மருந்துப் பொருட்களின், "லிஸ்ட்' வாங்கி வந்து, எங்களின், "பட்ஜெட்' பணத்தில் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மருந்துப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.
இதுபோல் மற்றவர்களும் செய்யலாம் தானே!
நன்றி - வாரமலர் — கே. எம். பாருக். சென்னை.
"சில சமயம், ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி, இரண்டு, மூன்று குடும்பத்தினர் உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து விடுவர். அப்போதெல்லாம் உணவு மிஞ்சிவிடும். இதைத் தவிர்க்க, தானமளிக்க விரும்புவோர், முன் கூட்டியே, எங்களிடம் வந்து கேட்டால், எங்கள் இல்லக் குழந்தைகளுக்கு, தேவைப்படும் மருந்துப் பொருட்களை வாங்கித் தரச் சொல்ல முடியும்...' என்றார்.
அவர் கூறியது பயனுள்ளதாக இருந்ததால், அதை நினைவில் வைத்து, அடுத்து வந்த எங்கள் திருமண நாளின் போது, அந்த இல்லம் சென்று, மருந்துப் பொருட்களின், "லிஸ்ட்' வாங்கி வந்து, எங்களின், "பட்ஜெட்' பணத்தில் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மருந்துப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.
இதுபோல் மற்றவர்களும் செய்யலாம் தானே!
நன்றி - வாரமலர் — கே. எம். பாருக். சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மா காலையிலேயே என் மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்..... எனக்கு என்னமோ
இன்னிக்கு முடியவே இல்லம்மா ....குக்கர் நீ வைத்துவிடம்மா ....முடிந்தால் நான் அப்புறமாக
ஒரு பொரியலும் ரசமும் பண்ணிவிடுகிறேன் என்று ...
அம்மா சமையல் நன்றாக இருக்கும்.... பசங்களும்.........ஐயா .... பாட்டி சமையல் ...நன்றா
இருக்கும் என்று ஜொள்ளு விடுவார்கள்... என் மனைவி சமையலும் நன்றாக
இருக்கும் ...... இருந்தாலும் அம்மாவின் கை வண்ணம் கொஞ்சம்
டேஸ்ட் ஜாஸ்தி ...
அம்மாவுக்கு எண்பது வயது .... இருந்தாலும் அவள் வேலையை அவள் பார்த்துக்கொண்டு முடிந்தமட்டும் சமையலும்
பண்ணிக்கொண்டு .... ஏதோ கடவுள் புண்ணியத்தில் வீட்டிற்குள் நடமாடி கொண்டிருப்பாள்.
வீட்டுக்கு வெளியில் வந்து கம்பௌண்டுக்கு உள்ளேயே ஒரு பத்து நிமிஷம் காலையிலும்
மாலையிலும் வாக்கிங் போவாள் ....தன்னால் முடிந்த உதவியை வீட்டில் செய்துகொண்டிருப்பாள் ....
எல்லாவிதமான சாப்பாட்டு பொடிகளும் பண்ணி வைத்துவிடுவாள்..
அம்மா முடியவில்லை என்று சொன்னது என் காதிலும் கேட்டது. ஆனால் நான் ஒன்றும்
கேட்டுக்கொள்ளவில்லை(கேட்டால் என் அருமை மனைவிக்கு கொஞ்சம் - மறுபடியும்
சொல்லுகிறேன் கொஞ்சம்தான் - பிடிக்காது என்பது வேறு விஷயம் )..... நான் கலையில்
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் ஒன்றும் கேட்கவில்லை ..
மதியம் என் மனைவியிடமிருந்து போன் ..... நான் என்மனதில் என்னடாது .... அம்மாவுக்கு ஏதோ
என்று போன் ஆன் செய்தேன் ..... ஏங்க ....நாளைக்கு வெள்ளிகிழமை
இல்லையா ...வரும்போது பூஜை சாமான் வாங்கிட்டு வந்துடுங்க ...... என்றாள்... நான்
சரி என்று சொல்லிவிட்டு .... அம்மா சாதாரணமாக இருக்கிறாளா என்று கேட்பதற்குள் அந்த
பக்கத்தில் போன் கட்…………….நானும்….. ஏதாவது என்றால் இவள் சொல்லியிருப்பாளே என்று என்
மனதை சமாதான படுத்திக்கொண்டேன் ...
மாலை/இரவு கிளம்பும்போது வங்கியில் எட்டு மணி வரை லேட் ஆகிவிட்டது ..... நல்ல பசி வேறு...
வீட்டுக்கு சென்ற உடனே சாப்பிடவேண்டும் என்று நினைத்துகொண்டே வீட்டுக்கு போகும்போது மறக்காமல் பூஜை
சாமான் வாங்கிகொண்டு போனேன் ... (மறந்தால் என்ன ஆகும் என்று திருமணம் ஆனவர்களுக்கு தெரியுமே... ! ! ! )
அம்மாதான் கதவை திறந்தாள் ......எப்படி இருக்கேம்மா .... இப்போ பரவாயில்லையா .... என்று கேட்டுகொண்டே உள்ளே வந்தேன் ………….. இந்த வலது கைதான்டா
வலித்துக்கொண்டே இருக்கிறது .... ஒண்ணும் தூக்கமுடியவில்லை... என்று அம்மா சொன்னதை காதில்
வாங்கிக்கொண்டு டிரஸ் மாற்றிக்க சென்றேன் மனைவி பசங்களுக்கு ஹோம் ஒர்க்
சொல்லி கொடுப்பதில் மும்முரமாக இருந்தாள்
கை கால் அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன் .... அம்மாதான் தட்டு வைத்து சாப்பாடு
போட்டாள்... நீ உட்கார்ந்து கொள் அம்மா நான் பார்துகொள்ளுகிறேன் என்றேன்
...... இருக்கட்டும்டா ... உனக்கு சாப்பாடு போட்டுவிட்டு நான் படுத்து கொள்ளுகிறேன்
என்றாள். நான் சாப்பிட்டு \முடிக்கும் வரை எனக்கு பக்கத்திலேயே உட்கர்ந்திருந்தாள்….
சாப்பிட்டு விட்டு கை கழுவினேன் .... அம்மாவிடம் ஏதாவது மாத்திரை வேணுமா என்று
கேட்டேன் .... அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிட்டாள்... நான் கொஞ்சம்
நியூஸ் பார்க்கலாமே என்று டிவி ஆன் பண்ணினேன் ....
என் மனைவி பசங்களுக்கு ஹோம் வொர்க் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்... என்னங்க வந்தவுடன் டிவி ஆன் பண்ணிட்டீங்க ....
பசங்களுக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு டிவி ஆப் பண்ணிடுங்க.
.... அப்படியே எனக்கு ஒரு தட்டிலே கொஞ்சம் ரைசும் (சாப்பாடு) மோரும் போட்டு
கொடுக்கிறீங்களா………. ரொம்ப டயர்டா……….. இருக்கு எனக்கு என்றாள் .... நான் டிவி ஆப் பண்ணி
விட்டு அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என் பையன்களிடம் கொஞ்சம் விளையாடி விட்டு .... படுக்க சென்றேன்... ஆண்டவா நாளைய பொழுது நல்ல
பொழுதாக விடிய வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டு ... முக்கியமான ஒன்றை சொல்ல மறந்திவிட்டேன் ....நான்
கொடுத்த தலைப்புக்கும் இந்த என் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் உங்கள்
மண்டையே பிய்துகொண்டிருப்பது எனக்கு தெரிகிறது...
விளக்கம் இதோ:
அருமையான அம்மா .... அதாவது
அம்மா நம்மை அருமையாக
பார்துகொள்ளுவாள் ..... (அவளுக்கு
உடம்பு முடியாவிட்டாலும்)
அருமையான மனைவி .... அதாவது நாம்
நம் மனைவியை அருமையாக
பார்துகொள்ளவேண்டும்....
(அவளுக்கு உடம்பு
முடிந்தாலும்)
இதுதான் உலக நியதியோ ...
நட்புடன் வெங்கட் - நன்றி வெங்கட்
இன்னிக்கு முடியவே இல்லம்மா ....குக்கர் நீ வைத்துவிடம்மா ....முடிந்தால் நான் அப்புறமாக
ஒரு பொரியலும் ரசமும் பண்ணிவிடுகிறேன் என்று ...
அம்மா சமையல் நன்றாக இருக்கும்.... பசங்களும்.........ஐயா .... பாட்டி சமையல் ...நன்றா
இருக்கும் என்று ஜொள்ளு விடுவார்கள்... என் மனைவி சமையலும் நன்றாக
இருக்கும் ...... இருந்தாலும் அம்மாவின் கை வண்ணம் கொஞ்சம்
டேஸ்ட் ஜாஸ்தி ...
அம்மாவுக்கு எண்பது வயது .... இருந்தாலும் அவள் வேலையை அவள் பார்த்துக்கொண்டு முடிந்தமட்டும் சமையலும்
பண்ணிக்கொண்டு .... ஏதோ கடவுள் புண்ணியத்தில் வீட்டிற்குள் நடமாடி கொண்டிருப்பாள்.
வீட்டுக்கு வெளியில் வந்து கம்பௌண்டுக்கு உள்ளேயே ஒரு பத்து நிமிஷம் காலையிலும்
மாலையிலும் வாக்கிங் போவாள் ....தன்னால் முடிந்த உதவியை வீட்டில் செய்துகொண்டிருப்பாள் ....
எல்லாவிதமான சாப்பாட்டு பொடிகளும் பண்ணி வைத்துவிடுவாள்..
அம்மா முடியவில்லை என்று சொன்னது என் காதிலும் கேட்டது. ஆனால் நான் ஒன்றும்
கேட்டுக்கொள்ளவில்லை(கேட்டால் என் அருமை மனைவிக்கு கொஞ்சம் - மறுபடியும்
சொல்லுகிறேன் கொஞ்சம்தான் - பிடிக்காது என்பது வேறு விஷயம் )..... நான் கலையில்
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் ஒன்றும் கேட்கவில்லை ..
மதியம் என் மனைவியிடமிருந்து போன் ..... நான் என்மனதில் என்னடாது .... அம்மாவுக்கு ஏதோ
என்று போன் ஆன் செய்தேன் ..... ஏங்க ....நாளைக்கு வெள்ளிகிழமை
இல்லையா ...வரும்போது பூஜை சாமான் வாங்கிட்டு வந்துடுங்க ...... என்றாள்... நான்
சரி என்று சொல்லிவிட்டு .... அம்மா சாதாரணமாக இருக்கிறாளா என்று கேட்பதற்குள் அந்த
பக்கத்தில் போன் கட்…………….நானும்….. ஏதாவது என்றால் இவள் சொல்லியிருப்பாளே என்று என்
மனதை சமாதான படுத்திக்கொண்டேன் ...
மாலை/இரவு கிளம்பும்போது வங்கியில் எட்டு மணி வரை லேட் ஆகிவிட்டது ..... நல்ல பசி வேறு...
வீட்டுக்கு சென்ற உடனே சாப்பிடவேண்டும் என்று நினைத்துகொண்டே வீட்டுக்கு போகும்போது மறக்காமல் பூஜை
சாமான் வாங்கிகொண்டு போனேன் ... (மறந்தால் என்ன ஆகும் என்று திருமணம் ஆனவர்களுக்கு தெரியுமே... ! ! ! )
அம்மாதான் கதவை திறந்தாள் ......எப்படி இருக்கேம்மா .... இப்போ பரவாயில்லையா .... என்று கேட்டுகொண்டே உள்ளே வந்தேன் ………….. இந்த வலது கைதான்டா
வலித்துக்கொண்டே இருக்கிறது .... ஒண்ணும் தூக்கமுடியவில்லை... என்று அம்மா சொன்னதை காதில்
வாங்கிக்கொண்டு டிரஸ் மாற்றிக்க சென்றேன் மனைவி பசங்களுக்கு ஹோம் ஒர்க்
சொல்லி கொடுப்பதில் மும்முரமாக இருந்தாள்
கை கால் அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன் .... அம்மாதான் தட்டு வைத்து சாப்பாடு
போட்டாள்... நீ உட்கார்ந்து கொள் அம்மா நான் பார்துகொள்ளுகிறேன் என்றேன்
...... இருக்கட்டும்டா ... உனக்கு சாப்பாடு போட்டுவிட்டு நான் படுத்து கொள்ளுகிறேன்
என்றாள். நான் சாப்பிட்டு \முடிக்கும் வரை எனக்கு பக்கத்திலேயே உட்கர்ந்திருந்தாள்….
சாப்பிட்டு விட்டு கை கழுவினேன் .... அம்மாவிடம் ஏதாவது மாத்திரை வேணுமா என்று
கேட்டேன் .... அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிட்டாள்... நான் கொஞ்சம்
நியூஸ் பார்க்கலாமே என்று டிவி ஆன் பண்ணினேன் ....
என் மனைவி பசங்களுக்கு ஹோம் வொர்க் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்... என்னங்க வந்தவுடன் டிவி ஆன் பண்ணிட்டீங்க ....
பசங்களுக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு டிவி ஆப் பண்ணிடுங்க.
.... அப்படியே எனக்கு ஒரு தட்டிலே கொஞ்சம் ரைசும் (சாப்பாடு) மோரும் போட்டு
கொடுக்கிறீங்களா………. ரொம்ப டயர்டா……….. இருக்கு எனக்கு என்றாள் .... நான் டிவி ஆப் பண்ணி
விட்டு அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என் பையன்களிடம் கொஞ்சம் விளையாடி விட்டு .... படுக்க சென்றேன்... ஆண்டவா நாளைய பொழுது நல்ல
பொழுதாக விடிய வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டு ... முக்கியமான ஒன்றை சொல்ல மறந்திவிட்டேன் ....நான்
கொடுத்த தலைப்புக்கும் இந்த என் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் உங்கள்
மண்டையே பிய்துகொண்டிருப்பது எனக்கு தெரிகிறது...
விளக்கம் இதோ:
அருமையான அம்மா .... அதாவது
அம்மா நம்மை அருமையாக
பார்துகொள்ளுவாள் ..... (அவளுக்கு
உடம்பு முடியாவிட்டாலும்)
அருமையான மனைவி .... அதாவது நாம்
நம் மனைவியை அருமையாக
பார்துகொள்ளவேண்டும்....
(அவளுக்கு உடம்பு
முடிந்தாலும்)
இதுதான் உலக நியதியோ ...
நட்புடன் வெங்கட் - நன்றி வெங்கட்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, மாணவர்களுக்கு, "டியூஷன்' எடுப்பதுடன், ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, பி.ஏ., மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். என் பள்ளியின் நிர்வாகி, என் பிறந்த நாள் அன்று, பரிசாக, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார். அதில், என் அழகை வர்ணித்தும், அந்த அழகு தனக்கு கிடைக்குமெனில், காலில் விழுவதற்கும் தயார் என்றும் எழுதி இருந்தார்.
இது, எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இத்தனைக்கும், அவருக்கு, வயது 56. அவர் மகன், கல்லூரியில் படிக்கிறான். என் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள, நான் ஏதும் பேசாமல் இருந்ததை, தவறாக புரிந்து கொண்டு, அவ்வப்போது பரிசு பொருட்கள் கொடுப்பதுடன், "பண கஷ்டம் இருந்தால், என்னிடம் சொல்; நான் தருகிறேன். ஆனால், யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றெல்லாம், பேச ஆரம்பித்து விட்டார்.
இன்னும் போனால், தொடர்ந்து பல பிரச்னைகள் வரக்கூடும் என்று நினைத்து, வேலையை விட்டு விட்டேன். இப்போது, டியூஷன் மட்டுமே எடுத்து வருகிறேன். இந்த காலத்தில், இளைஞர்களை கூட நம்பி விடலாம். ஆனால், வயதானவர் என்ற போர்வையில் இருக்கும் இப்படிப்பட்டவர்களை, நம்பவே கூடாது.
நன்றி _ வாரமலர் — வ.மனோகரி, கம்பம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும், என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க. அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?
நன்றி - வாரமலர் — வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
Page 3 of 100 • 1, 2, 3, 4 ... 51 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 100
|
|