புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
73 Posts - 46%
heezulia
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
1 Post - 1%
சிவா
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
1 Post - 1%
prajai
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
304 Posts - 43%
heezulia
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_m10கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 28, 2013 11:24 pm

கீதை 11 : 1 அர்ச்சுணன் கூறுகிறார் : மிக உயர்ந்ததும் ரகசியமானதும் ஆன்மாவைதேற்றுவதுமான உபதேசங்களை என் மீது தயவுகூர்ந்து அருளினீர்கள் ! அதைக்கேட்டதனால் எனது அஞ்ஞானம் அகன்றது !

கீதை 11 : 2 தாமரைக்கண்ணா ! எல்லா படைப்பினங்களின் உற்பத்தி மற்றும் அழிவு தொடர்பான ஆழமான விவரங்களை அறிந்துகொண்டேன் ! அத்தோடு எல்லையற்ற உமது மஹிமையையும் உணர்ந்துகொண்டேன் !

கீதை 11 : 3 சகலவற்றின் அதிபதியே ! ( பரமேஸ்வரா ) கடவுளின் உன்னதமான வெளிப்பாடே ! ( நாராயணனே ) சகல உருவங்களின் மொத்த சொருபமான புருஸோத்தமரே ! இப்போது உங்களது மனித சொரூபத்தை காண்பதுபோல தங்களது பரமாத்ம சொரூபத்தையும் காண ஆசைப்படுகிறேன் !

கீதை 11 : 4 யோகங்களால் விளையும் அமானுஸ்ய சக்திகளின் அதிபதியே ! ( யோகேஸ்வரா ) என்னால் தாங்கிக்கொள்ளுமளவு எனது சக்திக்குட்பட்ட அளவு உமது பரமாத்ம சொரூபத்தை காட்டும் படி இறைஞ்சுகிறேன் !

கீதை 11 : 5 கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணர் கூறினார் ! பார்த்தா ! நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் பற்பலவிதமாகவும் பலரூபமாகவும் பலவர்ணமாகவும் உள்ள பரமாத்ம தெய்வீக சொரூபத்தை உன்னால் முடிந்தளவு பார் !!

கீதை 11 : 6 பரத குலத்தோன்றலே ! பற்பல வெளிப்பாடுகளான ஆதித்யர்கள் , வசுக்கள் , ருத்ரர்கள் , அஸ்விணிகள் ,மருத்துகள்  மற்றும் பல தேவதூதர்கள் இன்னும் யாரும் பார்த்திராத அதிசயமான விவரங்களை இப்போது பார் !

( ஆதித்யர்கள் பண்ணிருவர் ; வசுக்கள் எண்மர் ; ருத்ரர்கள் சிவன் அனுமன் முதலான பதினொருவர் ; ஹயக்கிரீவர்கள் இருவர் அஸ்விணிகள் மற்றும் மருத்துகள் நாற்பத்தொன்பது பேர் என வேதங்களில் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன ! இதில் சிவன் , பிரம்மா கூட தேவதூதர்களாகத்தான் இருப்பதாக காணக்கிடைக்கிறது மனிதனாக இருந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றவர்கள் அனைவரும் தேவதூதர்கள் என்ற நிலையையே அடைகிறார்கள் ! இவர்கள் அனைவரும் மனிதர்களைவிட தெய்வீக சக்தி உள்ளவர்களாக இருந்தாலும் இவர்களையும் வழிபடுவது கூடாது ! அது கடவுளை அவமதிப்பதாக ஆகிவிடும் ! ஆனால் இவர்கள் மூலமாக கடவுளை வழிபடுவது ஏற்புடையது !  இவர்களின் குருத்துவம் நம் ஆன்மீக சாதனங்களை வளர்த்து முன்னேற உதவி செய்யும் ! )


கீதை 11 : 7 அர்ச்சுணா ! இப்போது இந்த உடலில் அண்டசராசரங்கள் அனைத்தையும் நீ பார்க்கலாம் ! இயங்குவன இயங்காதவன இதுவரை நீ பார்க்க விரும்பியவைகள் இனிமேலும் நீ பார்க்க விரும்புபவைகள் அனைத்தையும் அந்த பரமாத்ம சொரூபத்தில் உன்னால் காணமுடியும் !

கீதை 11 : 8 ஆனால் அதை உனது ஊணகண்ணால் காணமுடியாது ! ஆகவே தெய்வீக பார்வையை உனக்கு அருளுகிறேன் ! இப்போது எனது மஹிமையை தரிசிப்பாயாக !

கீதை 11 : 9 சஞ்சயன் திருதிராட்டிணனிடம் கூறினான் : இவ்வாறு கூறிவிட்டு சகல யோக சக்திகளின் அதிபதியும் ; சகல பாவத்தையும் தீர்க்கவல்லவரும்  கடவுளின் உன்னதமான வெளிப்பாடுமாகிய கிரிஸ்ணர் தனது பரமாத்ம சொரூபத்தை வெளிப்படுத்தினார் !

கீதை 11 : 10 அனேக முகங்களையும் அனேக கண்களையும் அனேக தெய்வீகத்தோற்றங்களையும் கொண்ட பரமாத்ம சொரூபத்தை அர்ச்சுணன் கண்டான் ! அது திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ! தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை ஏந்தியிருந்தது !

கீதை 11 : 11 தெய்வீகமான மாலைகளையும் ; ஆடைகளையும் அணிந்து தெய்வீக வாசணைத்திரவியங்களால் கமழ்ந்து கொண்டிருந்தது ! சர்வ வியாகபத்தோடு எல்லையற்றவராகவும் அளவில்லாத மஹிமையுடனும் எப்புறத்திலும் முகங்களுடன் பரந்து விரிபவராகவும் விஸ்வரூபத்தை அர்ச்சுணன் கண்டான் !

கீதை 11 : 12 ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே நேரத்தில் உதித்தால் எவ்வளவு பிராகாசம் இருக்குமோ அவ்வளவு அனந்தகோடி பிரகாசம் மின்னியது !

கீதை 11 : 13 தனித்தனியாய் பிரிந்துள்ள ஆயிரகணக்கான பல விதமான தோற்றங்களை அடக்கியதும் பரந்து விரிவதுமான பிரபஞ்சம் முழுவதையும் தேவர்களின் அதிபதியான கிரிஸ்ணரின் சரீரத்தில் ஒரே இடத்தில் அர்ச்சுணன் தரிசித்தான் !

( விஸ்வ ரூபத்தை தரிசிப்பது ஒரு பெரும் பாக்கியமே ! மகாபாரதத்தில் இந்த பாக்கியம் மூன்று நபர்களுக்கு கிடைத்துள்ளது ! அர்ச்சுணன் ,கர்ணன் , பீஸ்மர் ஆகியோருக்கு இந்த பாக்கியம் அருளப்பட்டுள்ளது ! இதற்கு அந்த ஆத்துமாக்களுக்கு அதற்குரிய பக்குவம் , தகுதி இருந்திருக்கிறது என்பதை சாதகர்கள் உணரவேண்டும் !

பக்தியும் மற்றும் ஞானமும் சேர்ந்து முகிழ்க்கும்போது ராஜயோகம் அல்லது ராஜ வித்யை சித்திக்கிறது !

ஆரம்ப கால துவைத பக்திக்கும் அத்வைத ஞானம் முற்றும்போது உண்டாகிற தெளிவால் -- தன்னிலை உணர்ந்து தன்னைஆத்ம சொரூபமாக உணர்ந்த ஒரு ஆத்மாவிற்கு கடவுளின் மீதும் அவரது வெளிப்பாடாகிய நாராயணன் மீதும் நாராயணன் பூமியில் மனிதனாக அவதரித்த அவதாரங்களின் மீதும் உண்டாகிற பக்திக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன ! அதுவே விசிஸ்ட்டாத்வைதம் !

இந்த விசிஸ்ட்டாத்வைத சாதகர்கள் சகலத்தையும் நாராயணனிலிருந்து தோன்றி நாராயணனில் மறையும் நாரயண அம்சங்களாகவே புரிந்துகொள்ளவேண்டும் என்பதையே கீதையின் 9 & 10 அத்தியாயங்களின் ரகசியம் !

ஆழ்ந்த ஞானத்தில் உண்டாகிற பக்தி அறிதல் , தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றை கடந்து உணர்ந்து கலந்திருத்தல் என்பதாகவே ஆகிவிடும் ! அந்த உணர்வை எட்டிய சாதகன் நான் நீ என்ற பேதத்தையும் உணர்வளவில் கடந்துவிடுவான் ! மற்ற மனிதர்கள் யாரையும் நாராயணின் ஒரு வெளிப்பாடாக தானும் பிறருமே ஒரு தற்காலிக வெளிப்படாகவே உணருவான் ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிற வேறெதுவும் இல்லாத ஒரு நிலை அடையும் ! அங்கு சுயமோ பிறரைப்பற்றிய பயமோ அற்றுப்போய் விடும் !

உண்மையில் அந்த நிலையை ஒரு சாதகன் அடைவதே `` விஸ்வரூப தரிசனம் `` காண்பது ! கண்ணால் காண்பது அல்ல உள்ளதால் உணர்ந்து தெளிந்து உள்ளே விழைந்த ஞானத்தால் மட்டுமே அடையக்கூடிய தரிசனம் ! அந்தத்தரிசனமே ஒரு யோகம் ! )


கீதை 11 : 14 விதிர்விதிர்த்து நிலைதடுமாறி மயிர்க்கால்கள் கூச்செரிந்தும் வியப்புமேலிட்டவனாய் அர்ச்சுணன் இரு கைகளையும் கூப்பியவனாக தலைசாய்த்து வணங்கி கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணரை துதிக்கதொடங்கினான் !

கீதை 11 : 15 எனதருமை கிரிஸ்ணா ! சற்குருவே ! அனைத்து தேவதூதர்களையும் அனைத்து படைப்பினங்களையும் ஒன்று சேர உம் சரீரத்தில் காண்கிறேன் ! படைப்பு தொழிலுக்கு நியமிக்கபட்ட பிரம்மாவை தாமரையில் அமர்ந்திருப்பவராகவும் ; அதுபோல ருத்திரர் சிவனையும் ; இன்னும் மகா முணிவர்களையும்  சாதுக்களையும் அசுரர்களையும் தெய்வீக சர்ப்பங்களையும் காண்கிறேன் !

கீதை 11 : 16 அண்டபகிரண்டங்களின் தலைவனே ! உமது பரமாத்ம சொரூபத்தில் பலபல கைகளையும் தோள்களையும் வாய்களையும் கண்களையும் எல்லையே இல்லாமல் பரந்து பரந்து எங்கெங்கும் விரிந்துகொண்டே இருப்பதாக காண்கிறேன் ! உம்மிடத்தில் முடிவையோ நடுவையோ துவக்கத்தையோ என்னால் காண முடியவில்லை !

கீதை 11 : 17 இந்த பரமாத்ம சொரூபம் அதன் ஒளிவெள்ள பிரகாசத்தால் காண்பதற்கு கடிணமானதாக இருக்கிறது !வெடித்து சிதறுகிற தீப்பிழம்புகளால் எண்திசையிலும் பரவி நிறைவதாகவும் அளவிடமுடியாத சூரியக்கதிர்வீச்சு போலவும் நான் காண்கிறேன் அத்தோடு பலவகையான மகுடங்களையும் ஆரங்களையும் பதக்கங்களையும் அணிந்துள்ளதாகம் மகிமையைக்காண்கிறேன் !

கீதை 11 : 18 நீரே உன்னதமும் மூலப்பொருளுமாகிய பிரதான பெளதீகம் ! இந்தப்பேரண்டம் முழுமையும் முடிவாக மறையும் இடம் நீரே ! நீரே ஆதியானவர் ! நீரே அழிவில்லாதவர் ! நீரே தெய்வீக சம்பத்துகள் பெளதீக சம்பத்துகள் யாவற்றையும் நிர்வகிக்கிறவர் ! நீரே கடவுளின் அதி உயர்ந்த வெளிப்பாடாகவும் இருக்கிறவர் !

கீதை 11 : 19 ஆதியும் அந்தமும் நடுவும் இல்லாதவர் நீரே ! உமது மகிமை எல்லையற்றதாக விரிந்துகொண்டே இருப்பது ! எண்ணிறந்த கைகளையும் சந்திர சூரிய நட்சத்திரங்களை ஒத்த கண்களையும் உடையவர் நீரே ! உமது வாயிலிருந்து ஜுவாலிக்கிற அக்கிணி புறப்படுவதையும் உமது கதிர்வீச்சுக்களால் பேரண்டம் முழுவதும் தகித்து எரிவதாகவும் காண்கிறேன் !

கீதை 11 : 20 நீர் ஒருவரே வானங்கள் நட்சத்திர மண்டலங்கள் அனைத்திலும் அவற்றுக்கு ஊடாகவும் விரவியிருப்பவராக காண்கிறேன் ! உன்னதமானவரே ! ஆச்சரயமான படுபயங்கரமுமான இந்த பரமாத்ம சொரூபத்தை காணும்போது எல்லா நட்சத்திர மண்டலங்களும் தூசியைப்போல ஆகிவிட்டன !

கீதை 11 : 21 வானமண்டல சேனைகளான தேவதூதூதர்களின் திரள்கூட்டமும் உம்மிடம் சரணடைகின்றன ! அவைகளில் சிலவோ ( அசுரர்கள் ) சுயமகிமை தேடியதற்காக அச்சமடைந்தனவாக கைகளை கூப்பி தொழுது உம்மிடம் மன்றாடி தொழுகின்றன ! உம்மைத்துதித்து உம்மிலே ஐக்கியமடைகின்றன !

கீதை 11 : 22 சிவன் முதலான ருத்ரர்கள் பதினொருவர் ,பண்ணிரெண்டு ஆதித்யர்கள் ,எட்டு வசுக்கள் , சாத்யர்கள் , விஸ்வகர்மாக்கள் , அசுவினிகள் இருவர் , நாற்பத்தொன்பது மருத்துகள் , மரணமில்லா பெருவாழ்வு பெற்ற மனிதர்களின் கூட்டங்களும் ,கந்தர்வகள் யஷர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைத்து தேவதூதர்களின் கூட்டங்களும் பிரமிப்படைந்து உம்மையே கண்டு துதிக்கிறார்கள் !

கீதை 11 : 23 நீண்ட புஜங்களை உடையவரே ! பலமுகங்களும் கண்களும் பல கைகள் தொடைகள் திருவடிகளும் பல வயிறுகளும் பல வாய்களும் அதில் பயங்கரமான கோரைப்பற்களும் உடையதான உமது பரமாத்ம சொரூபத்தை கண்டு எல்லா மண்டலங்களும் நடுநடுங்குகின்றன ! நானும் அவ்வாறே நடுங்குகிறேன் !

கீதை 11 : 24 பரந்து விரியும் விஸ்ணுவே ! பல வண்ண கதிர்களை உமிழும் வானளாவிய உம்மையும் சகலத்தையும் விழுங்கும் உமது வாயையும் ஒளிமிகுந்த கண்களையும் கண்டு பயத்தினால் நடுங்கி என் மனம் தைரியத்தையும் சமநிலையையும் இழந்துவிட்டது !

கீதை 11 : 25 ஜகத் குருவே ! அகில உலகங்களின் ரட்சகரே ! கோரைப்பற்களையும் ஊழிகாலத்து நெருப்பு போல ஜுவாலிக்கும் திருமுகங்களையும் கண்டு தடுமாற்றம் அடைகிறேன் ! நிம்மதி இழந்துவிட்டேன் ; ரட்சித்து அருள்புரிய வேண்டும் !!

கீதை 11 : 26 திருதுராஸ்ட்ரர்கள் அனைவரும் அவர்களின் துனைவர்களான அரசர்கள் அனைவருடனும் ஏன் பீஸ்மருடனும் துரோனருடனும் கர்ணனுடனும் மற்றும் நமது தரப்பு சேனைகளின் தலைவர்களும் கூட உமது படுபயங்கரமான வாய்க்குள் வேகமாக உள்ளிழுக்கப்படுகிறார்கள் !

கீதை 11 : 27 அவர்களில் சிலர் பல்லிடிக்கில் சிக்கி தலைநொருங்கியும்  சின்னாபின்னமாக்கப்பட்டு கிடக்கின்றனர் !

கீதை 11 : 28 பற்பல வேகமான நீரோட்டங்களும் ஆறுகளும் எவ்வாறு விரைந்தோடி கடலில் புகுந்து மறைகின்றனவோ அவ்வறே இம்மண்ணுலக வீரர்கள் அனைவரும் விரைந்தோடி உமது வாயில் புகுகின்றனர் ! உமது வாயினின்று ஜுவாலிக்கும் திக்கொழுந்துகளில் கலந்து மறைகிறார்கள் !

கீதை 11 : 29 விட்டில்பூச்சிகள் விளக்கில் தாமாகவே விழுந்து அழிவதைப்போல சகல மனுக்குலமும் நாலாபுறமுமிருந்து வெகுவேகமாக உமது வாயில் விழுந்து அழிகிறார்கள் !  

கீதை 11 : 30  அனைத்து உலகங்களையும் ஜுவாலிக்கிற உமது வாயால் விழுங்கிக்கொண்டும் நாலாபுறமும் நாக்குகளால் துழாவுகிறீர்கள் ! விஸ்ணுவே ! படுபயங்கரமான உமது காந்தியால் அனைத்தையும் தகிக்கிறீர்கள் !

கீதை 11 : 31  தேவதூதர்களிலும் உன்னதமானவரே ! உம்மைத்துதிக்கிறேன் ! பயங்கர வடிவுள்ள நீங்கள் யார் ? ஆதிபுருஷனே உம்மை புரிந்து கொள்ள விளைகிறேன் எனக்கு வெளிப்படுத்துவீராக ! இன்னும் உம்மை - உமது வெளிப்பாடுகளை முற்றுணராதவனாகவே இருக்கிறேன் ! அருள்புரிவீராக !!  

கீதை 11 : 32 யுகபுருஷரான கிரிஸ்ணர் கூறினார் : யுகங்கள் தோறும் சிருஸ்ட்டிகளை அழிப்பவனாகிய நியாயதிபதி நானே ! இப்போதும் அனைவரையும் அழிப்பதில் ஈடுபட்டுள்ளேன் ; உங்களைத்தவிற இருதரப்பிலும் எல்லாவீர்ரகளும் அழிக்கபடுவார்கள் !

கீதை 11 : 33 எனவே எழுந்து போரிடுவாயாக ! எதிரிகளை வென்று வளமான அரசினை அனுபவிப்பாயாக ! ஏனெனில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட ஏற்கனவே நிச்சயக்கபட்டுவிட்டனர் ; திறமையான போராளியே அதன் கருவியாக மட்டுமே ஆவாயாக !!

கீதை 11 : 34 துரோணர் , பீஸ்மர் , ஜயத்ரன் . கர்ணன் மற்றும் இதர மாவீர்ர்கள் அனைவரும் ஏற்கனவே என்னால் அழிவுக்கு நியமிக்கப்பட்டுவிட்டனர் ; அழிப்பது நீயல்ல ; நீ வெறுமனே கருவி மட்டுமே ! குழப்பமடையாமல் போரிடுவாயாக ! வெற்றி பெறுவாய் !

கீதை 11 : 35 இதைக்கேட்டுணர்ந்த அர்ச்சுணன் கூப்பிய கரங்களுடன்  நடுங்கியபடி மீண்டும்மீண்டும் கிரிஸ்ணரை வணங்கினான் ! பயத்துடனும் தழுதழுத்த குரலில் கூறலானான் :

கீதை 11 : 36 சகல புலண்களையும் சரியாக அடக்கியாள்பவரே ! உம்மை அறிந்துணர்ந்த சித்த புருஷர்கள் ( புலண்களை அடக்கியாளத்தெரிந்தால் மட்டும் போதாது யார் நாராயணனை தமது சித்தத்தால் அறிந்து உணர்ந்தவர்களோ அவர்களே சித்தர்கள் ) உமது பெருமைகளால் மகிழ்கின்றனர் ! முழு உலகமும் உம் மீது பற்றுதல் கொண்டு உம்மை வந்தனை செய்கின்றனர் ; ஆனால் அசுரர்களோ பயத்தினால் உம்மிடமிருந்து சிதறி ஓடுகின்றனர் !

கீதை 11 : 37 மஹாத்மாவே ! பிரம்மாவாலும் வணக்கத்திற்குரிய தகுதியுள்ளவர் நீரே ! ஏனெனில் தாங்களே ஆதி படைப்பாளர் ! எல்லையற்றவரே ! தேவர்களின் தேவனே ! அகிலத்தின் அடைகலம் நீரே ; ஏனெனில் அழிவற்றவர் நீரே ! ஜடத்தோற்றங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட பரமானவர் நீரே ! காரணங்கள் அனைத்திற்கும் காரணமும் நீரே !

கீதை 11 : 38 நீரே ஆதிதேவர் ! ஆதிபுருஷர் ! பழமையானவரும் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தின் இறுதி அடைக்கலமுமானவரும் நீரே ! அனைத்தையும் அறிந்தவரும் அனைவராலும் அறியப்படவேண்டிய இலக்கும் நீரே ! பரமான புகலிடமும் நீரே ! எல்லையற்ற ரூபமானவரும் பிரபஞ்ச தோற்றம் முழுவதிலும் பரவியுள்ளவரும் நீரே !

கீதை 11 : 39  நீரே வாயு ! நீரே எமன் ! நீரே அக்னி ! நீரே வருணன் ! நீரே சந்திரன் ! நீரே மனுக்குலத்தின் உடையவர் ! ஆதிமூலத்தின் குமாரனும் நீரே ! எனது மரியாதை கலந்த வணக்கங்களை ஆயிரமாயிரம் முறைகள் சமர்பிக்கிறேன் !!

கீதை 11 : 40 முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லாத்திக்குகளிலிருந்தும் உம்மை வணங்குகிறேன் ! எல்லையற்ற சக்தியும் எல்லையற்ற ஆற்றலும் நீரே ! நீரே எங்கும் பரவி நிறைகின்றீர் !!

கீதை 11 : 41 உம்மை நண்பன் என எண்ணிக்கொண்டு கிரிஸ்ணா  யாதவா நண்பனே என்றெல்லாம் அகந்தையுடன் அழைத்துள்ளேன் ! உம்மை ஆழமாக உணராமல் பித்தத்தினாலும் பிரேமையினாலும் புத்திக்குறைவாலும் நான் செய்தவை அனைத்தையும் பொருத்தருள்வீராக !

கீதை 11 : 42 பொழுதுபோக்கின்போதும் ; உணவருந்தும்போதும் ; ஒரே படுக்கையில் படுத்திருந்தபோதும் நண்பர்களுக்கு மத்தியிலும் தனியாகவும் கூட கிண்டலும் கேலியும் செய்துள்ளேன் ! இழிவுகளை கடந்தவரே ! இத்த்கைய குற்றங்களையும் மன்னிப்பீராக !!

கீதை 11 : 43 அகிலத்தில் அசைகின்ற அசையாத அனைத்திற்கும் தந்தை நீரே ! வழிபாட்டிற்குரிய சற்குருவும் நீரே ! உமக்கு சமமாகவே ஒன்றாகவோ புகழத்தக்கவர் யாரும் இல்லை ! அளவற்ற வல்லமை உள்ளவரே ! மூவுலகங்களிலும் உம்மை விட உயர்ந்தவர் யார் உளர் ?

கீதை 11 : 44 எனவே நான் மரியாதைக்குரிய வணக்கங்களை கீழே விழுந்து சமர்பிக்கிறேன் ! எவ்வாறு தந்தை தனது மகனது குற்றங்களையும்  ; நண்பன் நண்பனது குற்றங்களையும் ; கணவன் மனைவியின் குற்றனகளையும் பொறுத்துக்கொள்கிறார்களோ அவ்வாறே எனது தவறுகள் யாவையும் பொறுத்தருள்வீராக ! உமது கருணையை வேண்டுகிறேன் !!

கீதை 11 : 45 இதுவரை நான் என்றுமே கண்டிராத உமது விஸ்வருபத்தரிசணத்தை கண்டதால் மிகவும் மகிழ்கிறேன் ! ஆனாலும் பயத்தால் குழம்புகிறேன் ! தேவர்களின் தலைவனே ! அகிலத்தின் அடைகலமே ! கருணைகாட்டி தங்களது தெய்வீக ரூபத்தையும் காட்டியருள்வீராக !!

கீதை 11 : 46 விஸ்வரூபமே ! ஆயிரம் கரங்களையுடையவரே ! மகுடத்துடனும் சங்கு சக்கரம் கதை மற்றும் தாமரை மலருடனும் நான்கு கரத்துடன் விளங்கும் அழகிய ரூபத்தையும் காண விரும்புகிறேன் !!

கீதை 11 : 47 யுகபுருஷன் கிரிஸ்ணர் கூறினார் : எனதன்பு அர்ச்சுணா ! எனது ஆத்ம சக்தியால் இந்த தெய்வீக விஸ்வரூபத்தை உனக்கும் மகிழ்வுடன் காண்பித்தேன் ! எல்லையற்றதும் பிரகாசம் மிக்கதுமான முழு ரூபத்தை உலகத்தில் உன்னைத்தவிர யாரும் கண்டதில்லை !!

கீதை 11 : 48 குரு வம்சத்தில் சிறந்தவனே ! யாகங்களை செய்வதாலோ ; வேதங்களை கற்பதாலோ ; தானங்களாலோ ; புண்ணிய செயல்களாலோ அல்லது கடும் தவங்களாலுமோ இந்த ரூபத்தை ஜடவுலகில் காண்பதற்கு இயலாது ! உன்னைப்போல தெய்வீகப்பார்வை அருளப்பெறாத மற்றவர்களால் காண்பதற்கு இயலாது !!

கீதை 11 : 49 எனது பயங்கரமான உருவத்தை கண்டு மிகவும் பாதிக்கப்பட்டு குழம்பியுள்ளாய் ! இனி இது முடிவு பெறட்டும் ! எல்லாக்குழப்பங்களிலிருந்தும் விடுபடுவாயாக ! நீ விரும்பும் அழகிய ரூபத்தையும் மீண்டும் அமைதியான ரூபத்தையும் காண்பாயாக !!

கீதை 11 : 50 சஞ்சயன் கூறினான் : இவ்விதமாக அர்ச்சுணனிடம் பேசியபடி கிரிஸ்ணர் நான்கு கரங்களையுடைய அழகிய நாராயண ரூபத்தையும் காட்டி ( செளமிய நாராயணன் ) மீண்டும் மனித ரூபத்தையும் காட்டி அச்சம் நீக்கி உற்சாகப்படுத்தினார் !!



கீதை 11 : 52 யுகபுருஷன் கூறினார் : காண்பதற்கு அரியதான இந்த விஸ்வருபத்தை நீ கண்டதுபோல தேவதூதர்களும் தரிசித்ததில்லை ! அந்த ரூபத்தை தரிசிக்க நித்தமும் அவர்கள் நாடுகின்றனர் !

கீதை 11 : 53 வேதங்களை கற்பதாலோ ; தானங்களாலோ ; கடும் தவங்களாலுமோ இந்த ரூபத்தை காண்பதற்கு இயலாது ! நேர் வழியில் என்னை பின்பற்றுவதால் ஞானதிருஸ்ட்டியடைந்து உன்னைப்போல காணமுடியும் !!

கீதை 11 : 54 பக்தி கலக்காத நவீன நாத்திக ஞானத்தினால் என்னைப்பற்றிய உண்மைகளின் ரகசியங்களில் நுழையமுடியாது ! எதிரிகளை வெல்லும் அர்ச்சுணா ! ஞானபக்தியால் மட்டுமே இது சாத்தியமாகும் !!

கீதை 11 : 55 பாண்டுவின் மைந்தனே ! என்னை பரமாத்மாவாக உணர்ந்து என் மூலம் கடவுள் மீது பக்திபிரேமையுற்று ; பலன் விளைவில் பற்றிலாமல் எங்களுக்கு அர்ப்பனமாக சகல கர்மங்களையும் செய்து மன களங்களிலிருந்து விடுபடவும் எங்களை அடையவும் இலக்கை வைத்து சகல உயிர்களிடத்தும் பகையற்ற நேயத்தை அடைபவனே எங்களை வந்தடைவான் !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 28, 2013 11:26 pm

கீதை 11 ; 39 பரபிதாமஹஷ்.

இந்த வார்த்தைக்கு பிதாமஹஷ் + ப்ர என்று விளக்கம் கொடுக்கின்றனர்! அதாவது பிதாமகனின் தந்தை! பிதாமகன் என்றால் பிரம்மா - பிரம்மாவின் தந்தை கிரிஸ்ணர் என்று விளக்கம் கொடுக்கின்றனர்!

பீஸ்மருக்கும் பிதாமகன் என்ற பெயருண்டு! பீஸ்மரின் தந்தை கிரிஸ்ணர் என்றும் பொருள் கொள்ளவே முடியாது!

ஆனால் நான் பரபிதா + மஹஷ் என்று பொருள் கொண்டுள்ளேன்! இந்த பரபிதா என்பது ஆதிமூலத்தை குறிக்கிறது! வைணவ சம்பிரதாயத்தில் ஆதிமூலம் என்ற வார்த்தை உள்ளது! இந்த வார்த்தையைத்தான் இயேசு பரமபிதா என்று கடவுளை குறிக்க பயன்படுத்தினார்!

பரமபிதா அரூபமானவர்! அவரின் வார்த்தையே முதல் வெளிப்பாடு என்று ஆப்ரஹாமிய வேதங்களும் ஒத்துக்கொள்ளுகிறது! அந்த வார்த்தையே நரல்(சத்தம்) + ஆயணன் = நாராயணன்! அரூபமான கடவுளின் வெளிபாடு நாராயணன்! பரமாத்மா! அவரே சகலமுமாக வெளிப்பட்டு சகலத்திலும் விரவி இருப்பதால் விஸ்ணு!

அவர் யுகங்கள்தோறும் பூமிக்கு இரங்கி வருவது அவதாரம்! ராமர் , கிரிஸ்ணர் , இயேசு மூவரும் நாரயணனே! -- ஒருவரே! பரமபிதாவின் குமாரன்!

ஆகவே தான் நாராயணன் மூலமாக கடவுளை வழிபடுவது என்பது சரியானது!

நாராயணன் மூலமாக என்பதும் ராமர் மூலமாக என்பதும் கிரிஸ்ணர் மூலமாக என்பதும் இயேசு மூலமாக என்பதும் ஒன்றே! இந்த உண்மை புரிந்தால் மத வேறுபாடுகள் மறையும்! அவதாரங்கள் மூலமாக ஒரே இறைவனை வழிபடுவது என்பது சரியானது! உண்மையை மாயை மறைக்கும்போது கடவுளை விட்டுவிட்டு அவதாரங்களை கடவுளாக்கி மத வேறுபாடுகளை உற்பத்தி செய்து சண்டை போட்டு கலத்தை கழிக்கிறோம்!

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக