புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 36%
prajai
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
jairam
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 5%
prajai
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 6 matches for தைராய்டு

Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Thyroid

மனித உடலின் முக்கியப் பணிகளைச் செய்வதில் சுரப்பிகளுக்குப் பெரும்பங்கு உண்டு. உடலில் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தச் சுரப்பிகளுக்கு ரசாயனங்களை உற்பத்தி செய்வதுதான் வேலை. அந்த ரசாயனங்களைத்தான் ஹார்மோன்கள் என்கிறோம். இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் வழியாக உடலுறுப்புகள், தோல், தசைகள், திசுக்கள் என அனைத்துக்குமான தகவல் களைக் கொண்டு செல்கின்றன. இந்தத் தகவல்கள்தான் நமது உடலில் ஒவ்வோர் உறுப்பும் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கும். எனவே, நமது உடல் செயலாற்றுவதற்கு சுரப்பிகள் சரியாகப் பணியாற்ற வேண்டும். மனித உடலில் முக்கியமான சுரப்பிகளில் ஒன்று தைராய்டு. கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பிதான் தைராய்டு. இந்தச் சுரப்பியில் உற்பத்தி யாகும் ஹார்மோன், உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை  4.2 கோடி பேருக்கு தைராய்டு தொடர்பான குறைபாடுகள், நோய்கள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்கள் இந்தக் குறை பாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நான்கு பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் தைராய்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இரண்டு வகை


ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏன் இந்தக் குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது என்ற கேள்விக்கு மருத்துவ அறிவியல் இதுவரை விடை கண்டு பிடிக்கவில்லை.

தைராய்டு சுரப்பியில் பொதுவாக இரண்டு வகை குறைபாடுகள் ஏற்படும்.

ஹைப்போ தைராய்டு - தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தியாகும் பிரச்னை.

ஹைப்பர் தைராய்டு - தேவைக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன் உற்பத்தியாகும் பிரச்னை.

ஹைப்போ தைராய்டு


தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மிகப்பொதுவான பிரச்னை `ஹைப்போ தைராய்டு' குறைபாடு. ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் உடல் உறுப்புகள், உடலில் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் சற்று மந்தமாக நடக்கும். சோர்வு, சோம்பல், முடி உதிர்வு, எடை அதிகரிப்பு, வறண்ட சருமம், சருமத்தில் அரிப்பு, மலச்சிக்கல், சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கலாம். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு ஓரிரு அறிகுறிகள் மட்டும் காணப்படலாம். அறிகுறியே இல்லாமலும் இருக்கலாம். ரத்தப் பரிசோதனையின்போது மட்டுமே குறைபாடு இருப்பது தெரிய வரும்.

ஹைப்பர் தைராய்டு


தைராய்டு சுரப்பியில் தேவைக்கு அதிகமாக ஹார்மோன் சுரப்பதால் ஏற்படும் பிரச்னை `ஹைப்பர் தைராய்டு'. ஹைப்போ தைராய்டு குறைபாடுள்ளவர் களுக்கு காணப்படும் அறிகுறிகள் அப்படியே நேரெதிராக இருக்கும். துறுதுறுப்புடன் இருப்பது, படபடப்பு, அதிக எடை குறைவது, அடிக்கடி மலம் கழித்தல், கைகளில் நடுக்கம், தூக்கமின்மை, `ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety attack) உள்ளிட்டவை இருக்கும். தைராய்டு குறைபாடுடையவர்களில் 70% பேருக்கு ஹைப்போ தைராய்டு இருக்கலாம், 30% பேருக்கு ஹைப்பர் தைராய்டு இருக்கலாம். ஒப்பீட்டளவில் ஹைப்போ தைராய்டு குறைபாடுதான் அதிகம் பேரை பாதிக்கிறது.

எந்த வயதில் வரும்?


பிறவியிலேயே இந்தப் பிரச்னை வருவதற்கு வாய்ப்புள்ளது. பிறவியிலேயே பிரச்னை இருக்கும் குழந்தைகளுக்கு பிறந்த 20 நாள் களிலேயே அதற்கான ஹார்மோன் கொடுக்க வேண்டும். இது ஆட்டோ இம்யூன் பிரச்னை என்பதால் இந்த வயதில்தான் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

குடும்பத்தில் யாருக்கேனும் ஹைப்பர், ஹைப்போ தைராய்டு பிரச்னை இருக்கிறது என்றால் மற்றவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த வயதிலிருந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை குடும்ப மருத்துவர் இருந்தால், அவருக்கு அந்த நபரின் குடும்பத் தினர், அவர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து தெளிவாகத் தெரியும் என்பதால், ஏதேனும் அசாதாரணமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யும்படி பரிந்துரைப்பார்.

பருவமடையும்போது வரலாம், மாதவிடாய் சுழற்சி நடைபெறும்போது வரலாம், கர்ப்ப காலம், பிரசவம் முடிந்த பிறகு என எப்போது வேண்டுமானாலும் தைராய்டு பாதிப்பு வரலாம். பெரும்பாலும் அறிகுறிகள் தென்படும். திடீரென்று இர்ரெகுலர் பீரியட்ஸ் அல்லது அதிக ரத்தப்போக்கு, முடி உதிர்வு என ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்து வரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

பரிசோதனைகள்


எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு குறைபாடு இருப்பதைக் கண்டறிய முடியும். குறைபாடு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய Thyroid Profile (Thyroid Function Tests - TFT) என்ற பரிசோதனையைச் செய்ய வேண்டும். அதில் TSH, free T4 ஆகிய வற்றின் அளவுகளை வைத்தே குறைபாட்டை அறிந்துகொள்ள முடியும்.

குடும்ப பின்னணியில் தைராய்டு குறைபாடு இருப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் ஆண்டுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளலாம். தைராய்டு குறைபாட்டுக்கு முதன்முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் என்றால், ஒன்றரை மாதத்தில் மீண்டும் பரி சோதனை செய்து பார்க்க வேண்டும். பரிசோதனை முடிவை வைத்து பிரச்னைக்கு சரியான அளவு மாத்திரை கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிவார்கள். சிலர் பல ஆண்டுகளாக தைராய்டுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். நீண்ட காலமாக ஒரே அளவு மாத்திரையே பரிந் துரைக்கப்பட்டு வரும். இப்படிப்பட்டவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மாத்திரையின் அளவை மருத்துவர்கள் மாற்றும்போது 6-8 மாதங்களுக்குள் பரிசோதனை செய்து, புதிய மாத்திரையின் அளவு சரியாக தைராய்டு அளவை நிர்வகிக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். எனவே, புதிதாக மாத்திரையின் அளவை மாற்றியவர்கள் 2-3 மாத இடைவெளியில் மருத்துவரை அணுகுவது அவசியம்.

ஹார்மோன் சமநிலையின்மை வரலாம்


தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் அனைவருக்கும் பிற ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என்று கூற முடியாது. தைராய்டு ஆன்டிபாடிக்கள் இருப்பவர்களுக்கு நீர்க்கட்டி (பிசிஓடி) வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. பிசிஓடி என்பது வாழ்வியல் நோய், அது வராமல் நம்மால் தடுக்க முடியும். பொதுவாக, தைராய்டுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக உள்ளதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், கருமுட்டையின் ஹார்மோன்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் பரிசோதித்துப் பார்த்து, பிரச்னை இருக்கும் பட்சத்தில் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

மெனோபாஸும் தைராய்டும்


மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜென் பற்றாக்குறை காரணமாக, பல ஹார்மோன்களின் சமநிலைமையின்மை உடலில் வர வாய்ப்புள்ளது. சில நேரங்களில் மெனோபாஸ் அறிகுறிகளும் தைராய்டு குறைபாட்டுக்கான அறிகுறிகளும் ஒன்றுபோலவே இருக்கும். குறிப்பாக, மனநிலையில் ஏற்ற இறக்கம், எடை அதிகரிப்பு, உடலில் வெப்பநிலை மாற்றங்கள் போன்றவை இருக்கலாம். அந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட்டாலும் இதே போன்ற அறிகுறிகளே தென்படலாம். எனவே, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏற்கெனவே தைராய்டு குறைபாடு ஏற்பட்டு தொடர்ச்சியாக மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், மெனோபாஸ் நிலையை அடையும்போதும் அவர்களின் தைராய்டு அளவு இயல்பாகவே இருக்கும்.

ஹைப்போ, ஹைப்பர் குறைபாடுகள் தவிர, வேறு சில நோய்கள், பிரச்னைகளும் இந்தச் சுரப்பியில் ஏற்படலாம்.

`தைராய்டு நாடியூல்' (Thyroid Nodule) - இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தப்பரிசோதனையில் தைராய்டின் அளவு இயல்பாக இருக்கும். ஆனால் கழுத்தில் மட்டும் கட்டி உருவாகும். அது ஒரு கட்டியாகவும் (சிங்கிள் நாடியூல்) இருக்கலாம் அல்லது சின்ன சின்ன தாக நிறைய கட்டிகளாகவும் (நாடியூல்கள்) உருவாகலாம்.

தைராய்டு புற்றுநோய் - உடலில் பிற பாகங்களில் ஏற்படுவதுபோல் தைராய்டு சுரப்பியிலும் புற்றுநோய் பாதிக்கலாம்.

இரண்டாம் நிலை ஹைப்போ தைராய்டிசம் - தைராய்டு சுரப்பி சரியாக இயங்க வேண்டும் என்றால் மூளையில் இருக்கும் ‘மாஸ்டர் கிளாண்ட்’ என்று அழைக்கப்படும் பிட்யூட்டரி சுரப்பி சரியாக இயங்க வேண்டும். எளிமை யாகச் சொன்னால், பிட்யூட்டரி சுரப்பி சாவி கொடுத்தால் தான் தைராய்டு சுரப்பி ஹார்மோனை சுரக்கும். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தைராய்டு குறைபாடு ஏற்படலாம். இதனை மத்திய அல்லது இரண்டாம் நிலை ஹைப்போ தைராய்டிசம் (Central or Secondary Hypothyroidism) என்று அழைப்பார்கள்.

தைராய்டைட்டிஸ் (Thyroiditis) - தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கம் (Inflammation). கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. சிலருக்கு வலியுடன் வீக்கம் ஏற்படும். எச்சில் விழுங்கும்போது, கழுத்துப் பகுதியில் வீக்கம், கழுத்துப் பகுதியைத் தொட்டால் வலி ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகளின் மூலமாகவே தீர்வு காண முடியும்.

`ஹேஷிமோட்டோ தைராய்டிட்டிஸ்' (Hashimoto Thyroiditis) - ஹைப்போ தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான பொது வான காரணம் இது. மரபணு காரணங்களால், ஆட்டோ இம்யூன் குறைபாட்டின் பின்னணியுடன் ஏற்படும் ஹைப்போ தைராய்டு பிரச்னையை ஹேஷிமோட்டோ தைராய்டைட்டிஸ் என்கிறோம். இந்தப் பிரச்னையைக் கண்டறிந்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஹேஷிமோ என்ற மருத்துவர் என்பதால் இந்தப் பிரச்னை அவர் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

`போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்' (Postpartum Thyroiditis) - பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் பிரச்னை. இது பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். சில பெண்களுக்கு நிரந்தரமாக ஹைப்போ தைராய்டு பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது.

இரும்புச்சத்து குறைபாடு - தைராய்டு பிரச்னை இருப்பவர் களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. தைராய்டு ஹார்மோன் சரியாகச் சுரந்தால்தான் இரும்புச்சத்து உற்பத்தியும் சீராக இருக்கும். இதனால் அனீமியா பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டு பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். தைராய்டு பிரச்னைக்குத் தீர்வு கண்டு, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அனீமியா குறைபாடு சரியாக வாய்ப்புள்ளது.

கூடுதல் அயோடின் சுரப்பு - இது மிக மிக அரிதான பிரச்னை. ஹைப்பர் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டு ஹார்மோன் மிக அதிகமாகச் சுரந்தால் சில நேரங்களில் அயோடின் சுரப்பும் அதிகமாக இருக்கும். அயோடின் சுரப்பு இயல்புக்கு வரும் வரை குறிப்பிட்ட காலத்துக்கு உணவி லிருந்து கூடுதல் அயோடின் எடுக்க வேண்டாம் என்று சொல்வோம். கடல் உணவுகளில் அதிகம் அயோடின் காணப்படும் என்பதால் அதுபோன்ற உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம். மீன் சாப்பிட விரும்பினால் நன்னீர் மீன்களை எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.

தைராய்டு சுரப்பி நீக்கம்


தைராய்டு புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் உள்ள கட்டிகள் வளர்ச்சியடைந்து கொண்டே இருப்பது, தைராய்டு கட்டியினால் குரலில் மாற்றம் ஏற்படுவது போன்ற காரணங் களுக்காக சுரப்பி நீக்கும் (Thyroidectomy) அறுவை சிகிச்சை செய்யப்படும். இதுதவிர, கழுத்தில் இருக்கும் தைராய்டு கட்டி பெரிதாகத் துருத்திக்கொண்டு இருந்தால், அழகியல் காரணங் களுக்காகவும் அதை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

தைராய்டு சுரப்பி வண்ணத்துப்பூச்சியைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும். அதன் றெக்கையை பாலம் போன்ற அமைப்பு (Isthmus ) இணைக்கும். அறுவை சிகிச்சையின்போது முழு தைராய்டு சுரப்பியையும் நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறுவை சிகிச்சையின்போதே மருத்துவர்கள் திசுப் பரிசோதனை மேற்கொள்வார்கள். அதில் புற்றுநோய் இல்லாத சாதாரண கட்டி என்றால், பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஒருபுறத்தை மட்டும் (Partial Thyroidectomy) நீக்குவார்கள்.

திசுப் பரிசோதனையில் புற்றுநோய் அறிகுறிகள் தென் பட்டால் முழு சுரப்பியையும் நீக்கிவிடுவார்கள். அப்போது அருகிலிருக்கும் நிணநீர் கணுக்களையும் (lymph Nodes) பரிசோதிப்பார்கள். அதிலும் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றையும் நீக்கிவிடுவார்கள்.

ஒருபுறம் மட்டும் அறுவை சிகிச்சை செய்து நீக்கம் செய்து விட்டால், குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரைச் சந்திக்கு ம்போது அந்த இடத்தைப் பரிசோதிப்பார்கள். கூடுதலாக ரத்தப் பரிசோதனைகளும் செய்ய வேண்டியிருக்கும். ஏதேனும் கட்டிகள் போன்று தென்பட்டால், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து மற்றொரு புறத்தில் இருக்கும் சுரப்பியின் மீதிப்பகுதியையும் நீக்க வேண்டியிருக்கும். ஆனால், இது போன்ற பிரச்னைகள் வருவது மிகவும் அரிதுதான்.

மாத்திரைகளை மாற்றி எடுத்துக்கொள்ளலாமா?


தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் தங்களுக்குள் மாத்திரைகளை சில நேரம் மாற்றி எடுத்துக்கொள்கின்றனர். உதாரணத்துக்கு, கணவன், மனைவி இருவருக்கும் தைராய்டு குறைபாடு இருந்து வெவ்வேறு மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதில் ஒருவருக்கு மாத்திரை தீர்ந்துவிட்டாலோ அல்லது மாத்திரை எடுத்துச் செல்ல மறந்துவிட்டாலோ இருவருக்கும் தைராய்டு குறைபாடு தானே என்று ஒருவரின் மாத்திரையை மற்றவர் எடுத்துக்கொள்வார்கள். இது முற்றிலும் தவறானது. காரணம், ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்கப்படும். ஹைப்பர் தைராய்டுக்கு சுரப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வழங்கப்படும். அதே போல மாத்திரையின் அளவு நபருக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். இரண்டு மாத்திரைகளும் வேறு வேறு வேலைகளைச் செய்வதால், அதற்கு பதில் இது என்று எடுத்துக்கொள்ள முடியாது. அந்தந்தப் பிரச்னைக்குப் பரிந்துரைக்கும் மாத்திரைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுமைக்கும் மாத்திரையா?


ஹைப்போ தைராய்டு குறைபாடு இருந்தால் பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும் தைராய்டுக்கான ஹார்மோன், ஹார்மோன் மாத்திரை கொடுக்க ஆரம்பித்து விடுவோம். எனவே, குறைபாடு கண்டறியப்பட்டு மாத்திரை பரிந்துரைக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து, தேவைப் பட்டால் மாத்திரையின் அளவிலும் மாற்றங்கள் செய்து, உணவு, உடற்பயிற்சி, ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, முறை யான தூக்கம் ஆகியவற்றைப் பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

வருடத்துக்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ மருத்துவரை அணுகி, எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் அளவு சரியாக உள்ளதா என்பதை செக் செய்து கொள்ள வேண்டும்.

தேவையைவிட அதிக அளவு மாத்திரை எடுத்துக்கொண்டால் எடை குறைவு, எலும்புத் தேய்மானம், படபடப்பு போன்றவை ஏற்படலாம். சரியான அளவு மாத்திரை எடுத்துக் கொண்டால் எந்தவிதப் பிரச்னையும் வராது.  

ஹைப்பர் தைராய்டு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் நிச்சயம் பரிசோதனை செய்ய வேண்டும். சிலருக்கு படிப்படியாக அளவைக் குறைத்து நிறுத்தவும் வாய்ப்புள்ளது. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து அது மாறுபடும்.

வெகு எளிதாக சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவ நிலை தைராய்டு. அதை நிர்வகிப்பதும் எளிது, அதனால் வரும் பிரச்னைகளும் குறைவு. நாம்தான் கூகுள், வாட்ஸ்அப் பார்த்து தேவை யில்லாதவற்றைச் செய்து, மாத்திரையை நிறுத்தி அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம்.

இதை பெரிய நோயாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி, குறிப்பிட்ட இடைவெளி

யில் ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு அளவைத் தெரிந்துகொண்டு அதை நிர்வகிப்பதன் மூலம் இந்தக் குறைபாட்டை எளிதாக கையாள முடியும்” என்கிறார் டாக்டர் ஸ்ருதி.

சந்தேகங்கள்... விளக்கங்கள்


முடி உதிர்வு, உடல் பருமன், உடல்வலி, செரிமான பிரச்னை என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிற பிரச்னை தைராய்டு. மருந்து, மாத்திரைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு சரியான உணவுப் பழக்கமும் வாழ்க்கைமுறையும்கூட இவர்களுக்கான தீர்வுகளாகப் பரிந்துரைக்கப் படுவதுண்டு. தைராய்டு பாதிப்புக்கான உணவுப்பழக்கம், அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மற்றும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை, என்ன காரணம் என எல்லாவற்றையும் விளக்குகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்.

தைராய்டு உணவுப்பழக்கம்... இதெல்லாம் முக்கியம்


``ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் வருவது. தைராய்டுக்கான உணவுகள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இனிப்புகளின் மீதான தேடல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் ‘ஹைப்போகிளைசீமியா’ பாதிப்பு, இன்சுலின் எதிர்ப்புத்திறன் போன்றவற்றை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும். நாளமில்லா சுரப்பிகளும் கணையமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதால் இரண்டோடும் சம்பந்தப்பட்ட சர்க்கரை நோய் பிரச்னைகளை முதலில் சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. அதற்கு...

அதிக புரதமும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்தும் குறைவான கார்போ ஹைட்ரேட்டும் உள்ள உணவுகள் அவசியம்.

பதப்படுத்தப்பட்ட, பாலிஷ் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை அறவே தவிர்க்கவும்.

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோளம் போன்று மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும். எந்தப் பொருளை வாங்கினாலும் அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சர்க்கரை அளவை கவனிக்கத் தவற வேண்டாம்.

தவிர்க்க வேண்டியவை


பால் மற்றும் பால் பொருள்களையும், குளுட்டன் உணவுகளையும் தவிர்ப்பது சிறந்தது. அதாவது பால், பனீர், சீஸ், காபி, டீ, கஸ்டர்டு, ஐஸ்க்ரீம், கேக், இனிப்புகள் போன்றவற்றையும், கோதுமை உணவுகளான சப்பாத்தி, பிரெட், பிஸ்கட், உப்புமா, தோசை, பரோட்டா மற்றும் கட்லெட், பீட்சா, சூப், பர்கர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

நச்சுகளைக் குறைப்போம்


பை, சமையல் பாத்திரங்கள், பாட்டில்கள் என பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்த வேண்டாம். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீர்குலைப்பதில் பிளாஸ்டிக்குக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதே காரணம்.

போலவே.... செயற்கை இனிப்புகள், அதிகப்படியான உப்பு, ப்ரிசர்வேட்டிவ், செயற்கை சுவையூட்டிகள், மணமூட்டிகள், கொழுப்பு போன்றவையும் வேண்டாம்.

ஸ்ட்ரெஸ்ஸுக்கும் தைராய்டுக்கும் தொடர்பு உண்டா?


ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்கு ஒவ்வொரு தினத்தையும் ஏதேனும் ஓர் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற ஒன்றுடன் தொடங்க வேண்டும். ஸ்ட்ரெஸ் அதிகமானால் அது மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வாயு பிரிதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தலாம். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும்போது அது தைராய்டு பாதிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, உடலின் நோய் எதிர்ப்புத்திறனையும் பாதிக்கும். கார்ட்டிசால் ஹார்மோன் அளவு அதிகரித்தால் அது உடல்பருமனுக்கும் காரணமாகும்.

முட்டைகோஸும் காலிஃபிளவரும் சாப்பிடலாமா?


தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற வற்றைச் சாப்பிடக்கூடாது என்றொரு பரவலான கருத்து உண்டு. தைராய்டு பாதித்தவர்கள், முட்டைகோஸ், காலிஃபிளவர், புரொக்கோலி, சோயா, முள்ளங்கி போன்றவற்றை பச்சையாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.

முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட பச்சைக் காய்கறிகள், கீரைகள், சோயா போன்றவற்றில் ‘காய்ட்ரஜென்’ (Goitrogen) என்ற சாரம் இருக்கும். இது தைராய்டு செயல்பாட்டை பாதிப்பதால் தைராய்டு சுரப்பியானது இன்னும் சிரமப்பட்டு இயங்கவேண்டியிருக்கும். அதனால் தைராய்டு சுரப்பி பெரிதாகும். இந்த நிலையை நாம் ‘காயிட்டர்’ (Goiter) அதாவது ‘முன்கழுத்துக் கழலை’ என்று சொல்கிறோம். அதனால்தான், தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காய்ட்ரஜென் உள்ள காய்கறிகளை பச்சையாகச் சாப்பிடாமல் நன்கு வேகவைத்துச் சாப்பிடு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புரோபயாடிக்ஸும் வைட்டமின் `டி’யும்


குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புரோபயாடிக்குகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பழைய சாதம், தயிர், மோர், கொம்புச்சா பானம் போன்றவற்றில் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக்ஸ் அதிகம் இருக்கும்.

உங்கள் உடலில் வைட்டமின் டி அளவு சரியாக உள்ளதா என பரிசோதனையின் மூலம் தெரிந்துகொண்டு, குறைவாக இருக்கும்பட்சத்தில் மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளவும்.

இந்த ‘7’ம் தைராய்டுக்கு ஆகாது.


1. சோயா சங்க்ஸ், டோஃபு எனப்படும் சோயா பனீர், சோயாவிலிருந்து பெறப்படும் டெம்ப்பே, மிசோ போன்றவை.

2. முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, புரொக்கோலி உள்ளிட்ட பச்சைக் காய்கறிகள்.

3. பிரெட், பாஸ்தா, நூடுல்ஸ் உள்ளிட்ட குளுட்டன் உணவுகள்.

4. டீப்ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள்.

5. சாக்லேட், கேக், ஐஸ்க்ரீம், பேக்கரி உணவுகள் என இனிப்பு அதிகம் சேர்த்த உணவுகள்.

6. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்.

7. புகை மற்றும் மதுப் பழக்கங்கள்.

பழங்கள் சாப்பிடலாமா?


ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் சாப்பிடலாம். பேரிக்காய், ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவையும் சாப்பிடலாம். உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு அது நார்மலாக இருக்கும்பட்சத்தில் இந்தப் பழங்களில் ஒன்றிரண்டை தினமும் அப்படியே சாப்பிடலாம்.

பால் குடிக்கலாமா?


தைராய்டு பாதிப்புள்ளவர்கள் பால் குடிப்பதால் உடல் வீக்கம் அதிகரிக்கலாம் என்பதால் `லாக்டோஸ்ஃப்ரீ' பால் குடிக்கலாம். பாதாம் பாலும் (பாதாம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து எடுக்கப்படுவது. ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது) இவர்களுக்கு நல்லது.

அரிசி சோறு ஓகேவா?


தைராய்டு பாதித்தவர்கள் அரிசி சோறு சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உடல்பருமன், இன்சுலின் எதிர்ப்புத்திறன் பிரச்னை உள்ளவர்கள் அளவைக் குறைத்து உண்பது அவசியம்.

தைராய்டு நோயாளிகளும் உடல் பருமன் பிரச்னையும்


உடல் பருமன் என்பது தைராய்டு நோயாளிகள் பலரும் சந்திக்கிற மிகப் பெரிய பிரச்னை. ஹைப்பர் தைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு உடலின் வளர்சிதை மாற்றம் மந்தமாவதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும். இது மட்டுமன்றி, உடலியக்கமே இல்லாதது, தண்ணீர் குறைவாக அருந்துவது, தைராய்டுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாதது, தேவையற்ற சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்வது, போதிய அளவு தூக்கம் இல்லாதது போன்றவையும் உடல் எடையை அதிகரிக்கும். லெப்டின் மற்றும் க்ரெலின் ஆகிய ஹார்மோன்கள் குறைவதாலும் உடல் எடை கூடும். ஹைப்போதைராய்டிசம் பாதித்தவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத்திறன் பிரச்னை சகஜமாக இருக்கும். அதனால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்து, கொழுப்பும் கூடி, உடல் பருமன் ஏற்படும்.

கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்


உணவில் நார்ச்சத்தை அதிகப்படுத்தவும்.

முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஒவ்வொரு வேளைக்கும் தரமான புரதச்சத்துள்ள உணவுகள் இடம்பெற வேண்டும்.

நட்ஸ், சீட்ஸ், எண்ணெய், மீன் என உணவில் ஆரோக்கிய கொழுப்புக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

உடலில் நீர் வறட்சி ஏற்படக்கூடாது. தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவு உணவை தாமதமாகச் சாப்பிடுவது கூடாது.

தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டியது மிக மிக அவசியம்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான தூக்கத்தில் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது.’’

தைராய்டு இருப்பவர்கள் வெயிட் லாஸ் பண்ண முடியாதா?


ஹைப்போ தைராய்டு பிரச்னை இருந்தாலே அதை உடல் பருமனுடன் பொருத்திப் பார்க்கிறார்கள். பல நேரங்களில் எடை அதிகரிப்பு பிரச்னைக்கு மருத்துவரைப் பார்க்கும்போதுதான் தைராய்டு குறைபாடு இருப்பதும் தெரிய வருகிறது. ஹைப்போ தைராய்டுடன் எடை அதிகரிப்பது என்பது மிக அதிகமாக நடைபெறுவது கிடையாது. ஒருவேளை தைராய்டு ஹார்மோன் அளவு மிக மிகக் குறைவாக இருந்தால், அதற்கான மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது 6- 7 கிலோ வரை எடை குறையவும் வாய்ப்புள்ளது. மிதமான அளவு குறைபாடு இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்பதும் எடை குறையாது என்பதும் தவறான கருத்துதான். தைராய்டு பிரச்னைக்கு மாத்திரை சரியாக எடுத்துக் கொண்டு, டயட் சரியாகப் பின்பற்றி, நேரத்துக்கு தூக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை போன்றவற்றின் மூலம் எடை குறைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

சர்க்கரை நோயாளிகள் அலர்ட்


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைராய்டு குறைபாடு வருவதற்கு வாய்ப்புள்ளது. டைப் 1 சர்க்கரை நோயாளி களுக்கு இன்சுலினும் இயற்கையாகச் சுரக்காத நிலையில், தைராய்டு பிரச்னையும் வர வாய்ப்புள்ளது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்தப் பிரச்னை வாய்ப்புள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, டைப் 1, டைப் 2 என எந்த வகை சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

குறிச்சொற்கள் #தைராய்டு #Thyroid #Thyroiditis #hyperthyroid #hypothyroid

விகடன்

மாரடைப்பு


இதய நோய்களில் மாரடைப்புதான் முன்னணியில் உள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக நமது உடல் சில அலெர்ட் சிக்னல்களைக் கொடுக்கும். அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவு மூச்சு வாங்குவது, மாடிப்படி ஏறும்போது அல்லது சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, தாடைப் பகுதியில் வலி, நடக்கும்போது பல் வலிப்பது போன்ற உணர்வு, தோள்பட்டை மற்றும் இடது கையில் பரவும் வலி (Exertional pain) போன்றவை மாரடைப்புக்கான அலெர்ட் சிக்னல்கள்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பாதிப்பு, மெனோபாஸ் அடைந்த பெண்கள், உடல் இயக்கம் இல்லாதது, அதீத மன அழுத்தம், குறட்டைப் பிரச்னை.

சுய பரிசோதனை


உடல் ஏதேனும் எச்சரிக்கை சிக்னலை கொடுத்தால் அல்லது ஆபத்தானவர்கள் பட்டியலில் இருந்தால் அல்லது இரண்டுமே இருந்தால் கீழே கூறப்பட்டுள்ள பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது மாடிப்படி ஏறிய உடன் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும். மிகவும் ரிலாக்ஸ்டான நிலையில் இருக்கும்போது மட்டுமே இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனைகள் தோராயமான முடிவுக்கு வருவதற்காக மட்டுமே. அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வீட்டிலுள்ள பல்ஸ்ஆக்ஸிமீட்டர் கருவியில் இதயத்துடிப்பை (Pulse) பரிசோதிக்க வேண்டும். இதயத்துடிப்பு 70 -100 வரை இருந்தால் நார்மல். 100-க்கு மேல் சென்றால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. விளையாட்டு வீரர்கள் தவிர, பிறருக்கு இதயத்துடிப்பு 50-க்கும் குறைவாக இருந்தால் இதயம் சார்ந்த வேறு பிரச்னையாக இருக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகவும்.

உறங்கும்போது குடும்பத்தினர் யாரையாவது இதயத்துடிப்பை பரிசோதிக்கச் சொல்லலாம். உறங்கும்போது இதயத்துடிப்பு அதிகமாக இருந்தால் இதயத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியில் பரிசோதிக்கும்போது 120/80 - 130/90 என்ற அளவு வரை இருந்தால் நார்மல். அதற்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் இதயத்தில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது மாடிப்படி ஏறிய உடன் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும்.

சாப்பிட்டு 20-30 நிமிடங்களுக்குப் பிறகு இதயப் பகுதியிலோ தோள்பட்டையிலோ வலியை உணர்ந்தால் அது இதயத்தில் ஏற்படும் வலி. நாம் சாப்பிட்ட உடன் ஜீரண வேலைகளுக்காக இதயத்திலிருந்து ரத்த விநியோகம் குடல் பகுதிக்குச் செல்லும். ரத்த ஓட்டம் குடலுக்குச் செல்லும்போது, இதயத்துக்குப் போதுமான ரத்தம் இல்லாமல் போகும்போது இதயத்தில் வலி ஏற்படும். எனவே, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சாப்பிட்ட உடன் 5-10 நிமிடங்களுக்குள் வலி வந்தால் அது உணவு, குடல் பகுதியை இரிட்டேட் செய்வதால் ஏற்படும் வலி.



வயிற்று அல்சர்


வயிற்றுப்புண் (Peptic ulcer) என்று பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்தப் பிரச்னை, வயிற்றுப் பகுதியிலும் குடலின் ஆரம்ப பகுதியிலும் ஏற்படும். பெரியவர்கள், சிறியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் புகை, மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஆண்களிடம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ (Helicobacter Pylori) என்ற பாக்டீரியாதான் இந்தப் பிரச்னைக்கு 90% காரணம். சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதாலும், உணவு வழியாகவும், வேறு நபரிடமிருந்தும் வாய் வழியாக இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்று இரைப்பையில் தங்கும். அதனால் ஏற்படும் பக்கவிளைவான அல்சர், வயிற்றிலும் குடல் பகுதியிலும் வரும். மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் இது ஏற்படலாம்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடாததும், அதிக காரமாகச் சாப்பிடுவதும்தான் இதற்கு காரணம் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய ஆராய்ச்சி யாளர்களான பேரி ஜெ மார்ஷல் மற்றும் ராபின் வாரன் ஆகிய இருவரும் ‘பெப்டிக் அல்சர்’ பிரச்னைக்கு காரணமான ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவை கண்டறிந்த பிறகு, இந்தக் கருத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதற்காக, ஜெ.மார்ஷல் மற்றும் ராபின் வாரன் இருவரும் 2005-ம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றனர்.

சுய பரிசோதனை


சாப்பிட்டால் வயிற்றில் வலி குறைவது அல்லது அதிகரிப்பது

அதிக நேரம் சாப்பிடாமல் இருந்தால் வலி ஏற்படுவது

தார் போன்ற அடர் கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்

மேல் வயிற்றுவலி

- இவை அல்சருக்கான பொதுவான அறிகுறிகள்.

அல்சரால் வரும் சிக்கல்கள்


வயிற்றுக்குள் இருக்கும் உணவு, குடலுக்குள் செல்லாது. இதனால் சாப்பிட உடன் வாந்தி வரும்.

குடல் அரித்து மலத்தில் ரத்தம் கசியும்.

பசியின்மை, எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.

தீர்வுகள் என்ன?


ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 99 சதவிகிதம் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். பிரச்னை தீவிரமடைந்தால் அறுவை சிகிச்சைதான் தீர்வு.

கண்புரை


தேசிய பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1.2 கோடிக்கும் அதிகமானோருக்கு பார்வை இழப்பு உள்ளது. இவற்றில் 80.1% கண்புரையால் ஏற்பட்ட பார்வை இழப்பு. ஓராண்டில் மட்டும் சுமார் 38 லட்சம் பேருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது.



மூன்று வகை பாதிப்பு


வயது மூப்பு காரணத்தால் ஏற்படும் கண்புரை (Senile Cataract) தான் மிகவும் பொதுவானது. கர்ப்ப காலத்தில் தாய் ஏதாவது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், மரபணு காரணங்களால் பிறந்த குழந்தைக்கும் `கண் புரை’ (Congenital Cataract) ஏற்படலாம். சர்க்கரை நோய், விபத்தினால் கண்ணி லுள்ள லென்ஸ் சேதமடைவது உள்ளிட்ட காரணங்களால் நடுத்தர வயதினரை பாதிப்பதை ‘இரண்டாம் நிலை கண்புரை’ (Secondary Cataract) என்பார்கள்.

கண்களில் இயற்கையாக இருக்கும் லென்ஸ்தான் கண்களுக்குள் நுழைகிற ஒளிக்கதிர்களை ஃபோகஸ் செய்து மூளைக்குத் தகவல் அனுப்பும். சில புரதங்களால் ஆன அந்த லென்ஸ், ஒளிபுகும் வகையில் (Transparent) இருக்கும். வயதாக ஆக, லென்ஸிலிருக்கும் புரதத்தில் ஏற்படும் மாற்றங்களால் அதன் நிறம் மாறிவிடும். அதனால் ஒளிக்கதிரை மூளைக்குக் கடத்தும் திறன் குறைந்து, சரியாக ஃபோகஸ் செய்யாமல், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி முதிர்ச்சியடைந்த புரையாக மாறும்.

சுய பரிசோதனை


பார்வை மங்கிக்கொண்டே வருதல்

பனிபடர்ந்தது போன்று தெரிவது

இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதது

எதிரில் வரும் வாகன வெளிச்சம் படர்ந்து அதிக ஒளிவட்டம் போல் தெரிவது

வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது

பிறந்த குழந்தையின் கண் கருவிழி வெள்ளையாகத் தெரிவது.

சராசரியாக 55 வயதுக்கு மேல் கண்புரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வயது, மரபணு, நோய்கள், சுற்றுச்சூழல் போன்ற காரணிகளால் இது ஏற்படுகிறது. சிலருக்கு கண்புரை பாதிப்பு மெதுவாக அதிகரிக்கும். சிலருக்கு வேகமாக முற்றிய நிலைக்குச் சென்றுவிடும். அறிகுறிகள் தென்பட்ட உடனே அறுவை சிகிச்சை செய்தால் புரையை அகற்றி விட்டு செயற்கை லென்ஸ் பொருத்தப்படும். பிரச்னை தீவிரமடைந்தால் கண்ணில் அழுத்தம் அதிகரித்து, நரம்புகள் சேதமடையும். சேதமடைந்த நரம்புகளை சீரமைக்க முடியாது என்பதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம்.



குடல்வால் அழற்சி


சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் வால் போன்ற அமைப்பு (Appendix) இருக்கும். அந்த வால் பகுதியில் ஏற்படும் தொற்று `அப்பெண்டிசைட்டிஸ்’ எனப்படும் குடல்வால் அழற்சி (Appendicitis). ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். இந்தப் பிரச்னை ஏற்பட பிரத்யேக காரணங்கள் கிடையாது. மலச்சிக்கல், மலம் இறுகி கல்போன்று மாறி குடல்வாலின் வாய்ப்பகுதியில் அடைத்துக்கொள்வதாலும் இது ஏற்படலாம்.

அறிகுறிகள்: தொப்புளைச் சுற்றி வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு அல்லது வாந்தியெடுத்தல், பசியின்மை, லேசான அல்லது மிதமான காய்ச்சல்.

சுய பரிசோதனை


படுக்கையில் மல்லாந்து நேராகப் படுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு கால்களையும் லேசாக மடக்கிய நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். குத்துக்காலிடும் அளவுக்கு மடக்க வேண்டாம்.

அப்போது வயிறு சற்று தளர்வாக, இயல்பான நிலையில் இருக்கும்.

கைவிரல்கள் நான்கையும் சேர்த்தாற்போல வைத்துக் கொள்ளுங்கள்.

தொப்புளுக்குக் கீழ் அடிவயிற்றில் வலது பக்கத்தில் (Right Lower Abdomen) விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும்.

அழுத்தும்போது வலித்தாலோ, அழுத்திவிட்டு சட்டென்று விரல்களை எடுக்கும் போது அதிகமான வலியிருந்தாலோ குடல் வால் பிரச்னையாக இருக்கலாம்.

தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் இருக்கிறதா என்றும் பரிசோதிக்கலாம்.

உரிய நேரத்தில் கவனிக்காமல், குடல்வால் பகுதியில் பொத்தல் ஏற்பட்டு சீழ் வெளியேறினால் ரத்தத்தில் நச்சேற்றம் பரவி உயிரிழப்புகூட நிகழலாம்.

அறிகுறிகள் தென்பட்டதும், மருத்துவரை அணுகினால் நுண்துளை அறுவைசிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை எளிதாக நீக்கிவிடலாம். சில நாள்களில் நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பிவிடலாம்.



பல் சார்ந்த பிரச்னைகள்


உலக அளவில் 350 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு பல் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், பெரும்பாலானோர் தாங்க முடியாத வலி ஏற்படும்போதுதான் மருத்துவரிடம் செல்கின்றனர்.

வாய் சுகாதாரம் பேணாதது, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவது, புகையிலை, மதுப்பழக்கம் உள்ளிட்டவை பல் சார்ந்த பிரச்னைகளுக்கான பொதுவான காரணங்கள்.

சுய பரிசோதனை


முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக் கொள்ளவும் அல்லது செல்போனின் முன் பக்க கேமராவை ஆன் செய்து கொள்ளவும்.

வெளிச்சமான இடத்தில் நின்றுகொண்டு பற்களைப் பரிசோதிக்கத் தொடங்க வேண்டும்.

வாயின் மேற்பகுதி, கீழ்ப்பகுதி இரண்டிலும் பின்வரிசையிலிருந்து முன்வரிசை வரை பொறுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.

பல் சொத்தை இருந்தால் பற்களின் மேல் பகுதியில் உணவு ஒட்டிக்கொள்ளலாம்.

பற்களின் மேல் கறுப்பாகக் காணப்பட்டால் பல்சொத்தை இருக்கிறது என்று அர்த்தம்.

பற்களைக் கடிக்கும்போது வலி ஏற்பட்டால் பல்சொத்தை அதிகமாகி வேர் வரை பாதித்திருக்கக்கூடும்.

பல்லில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் கறை படிந்திருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். அது கால்குலஸ் (Calculus) அல்லது டார்டார் (Tartar) எனப்படும்.

கறையை நாக்கால் தொட்டுப்பார்த்தால் சொரசொரப்பாக இருக்கும்.

பல்லின் மேற்பகுதியிலோ, அதிக இடைவெளியின் காரணமாக இரண்டு பற்களுக்கும் நடுவிலோ உணவு சிக்கி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இரண்டு பற்களுக்கு நடுவே உணவு சிக்கியிருந்தால் ஈறு பிரச்னையாக இருக்கலாம்.

பற்களின் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் மெழுகு போன்ற படிவம் படிந்திருந்திருப்பது ஈறுகளின் உள்ளே அழுக்கு சேர்ந்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

பிரஷ் செய்யும்போதும், ஆப்பிள் போன்று எதையாவது கடிக்கும்போதும் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அது ஈறு பிரச்னையின் முதல் நிலையாக இருக்கலாம்.

கால்குலஸ் பிரச்னையை அலட்சியம் செய்தால் ஈறுகள், எலும்பை பாதித்து பல் ஆட ஆரம்பித்துவிடும். பல் சொத்தைக்கு முதல் அறிகுறி பல்கூச்சம். ஈறு இறங்கினாலோ, பற்கள் தேய்ந்திருந்தாலோகூட பல் கூச்சம் ஏற்படலாம். சாப்பிடும்போது மட்டும் பல் வலிக்கிறது. அதற்குப் பிறகு சரியாகிவிடுகிறது என்றால் பல்லை அடைப்பதன் மூலம் அதிலிருக்கும் சொத்தையை சரி செய்யலாம்.

இரவில் அதிகரிக்கும் பல்வலி, வீக்கம் போன்றவை பல்லை எடுக்க வேண்டும் அல்லது வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்கான அலர்ட். பிரச்னையைக் கண்டறிந்ததும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பற்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காப்பாற்றலாம்.



செவித்திறன் இழப்பு


மனிதர்களிடையே காணப்படும் உணர்திறன் குறைபாடுகளில் பொதுவானது செவித்திறன் இழப்பு. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

மரபணு காரணங்கள், பிரசவ நேரத்தில் குழந்தையின் காதுக்கு ரத்த ஓட்டம் குறைதல், டௌன் சிண்ட்ரோம் போன்ற பிறவிக் குறைபாடுகளால் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரலாம். சளித் தொந்தரவு, அடினாய்டு அழற்சி போன்ற காரணங்களால் செவிப்பறையின் பின்னால் ஒரு திரவம் சேரும். வெளியிலிருந்து காதுக்குள் நுழையும் ஒலி, அந்தத் திரவம் வழியாக ஊருடுவ இயலாமல், மூளைக்குச் செல்ல வேண்டிய தகவல் போய்ச் சேராமல் செவித்திறன் குறைவு அல்லது இழப்பு ஏற்படும். பள்ளிக் குழந்தைகளின் செவித்திறன் இழப்புக்கு இதுவே காரணம்.

வைரஸ் தொற்று, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், அளவுக்கு அதிகமான ஒலியை உள்வாங்குதல், ஹெட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் பெரியவர்களுக்கு இது ஏற்படலாம். விபத்துகளின் காரணமாக காதிலிருந்து மூளைக்குச் செல்லக்கூடிய நரம்புகள் அறுந்தாலோ, காதினுள் இருக்கும் மூன்று சிறிய எலும்புகள் வேறு இடத்துக்கு நகர்ந்தாலோ, காது ஜவ்வு கிழிந்தாலோ செவித்திறன் பாதிக்கப்படும். வயது முதிர்வினாலும் செவித்திறன் பாதிக்கப்படலாம்.

சுய பரிசோதனை


டிவி பார்க்கும்போது, பாடல் கேட்கும்போது இயல்பைவிட அதிக சத்தத்தில் வைத்துக் கேட்பது

யாராவது பேசும்போது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்வது

ஒரு காது கேட்காதபோது, நம்மை அறியாமலேயே ஒரு பக்கமாக தலையைத் திருப்பிக் கேட்பது

அருகிலிருப்பவர்களைவிட அதிக சத்தமாகப் பேசுவது

வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் அல்லது இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் வலது பக்கம் என செல்போனை மாற்றி வைத்துப் பேசுவது

யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருப்பது.

தீர்வு என்ன?


பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறனில் பிரச்னை இருந்தால் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பள்ளிப்பருவ குழந்தைகளுக்கு காதில் திரவம் சேரும் பிரச்னைக்கு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் செவிப்பறையில் துளையிட்டு அங்கு சேர்ந்திருக்கும் திரவம் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் சிறிய குழாய் பொருத்தப்படும். நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு, தொற்றுக்கு சிகிச்சை எடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.

விபத்தினால் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கும் சிகிச்சை எடுத்தாலே போதுமானது. ஆனால், விபத்தில் காது நரம்புகள் அறுந்துவிட்டால் திறனை மீட்டெடுக்க முடியாது. ஹெட்போன் பயன்பாட்டினால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் இழப்பு ஏற்படத் தொடங்கும். நரம்புகள் சேதமடைந்துவிட்டால் செவித்திறனை மீட்டெடுக்க முடியாது. எனவே, ஹெட்போன் பயன்பாட்டைக் குறைப்பதே நல்லது. வயது முதிர்வினால் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு காது கேட்கும் கருவி பொருத்திக் கொள்ளலாம்.

செவித்திறன் பிரச்னை இருந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். தாமதிப்பது கேட்கும் திறனைக் குறைத்துக்கொண்டே போய், நிரந்தர செவித்திறன் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.



குறிச்சொற்கள்
#மார்பகப்_புற்றுநோய்
#சிறுநீர்ப்பாதைத்_தொற்று
#வெள்ளைப்படுதல்
#தைராய்டு
#மூலநோய்
#ஒற்றைத்_தலைவலி
#குறட்டை
#மனச்சோர்வு
#மாரடைப்பு
#வயிற்று_அல்சர்
#கண்புரை
#குடல்வால்_அழற்சி
#பல்_சார்ந்த_பிரச்னைகள்
#செவித்திறன்_இழப்பு


விகடன்
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் DzqfO0J

பெண்களில் 50-60 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர் தொற்றுப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மில்லி சிறுநீரில் ஒரு லட்சத்துக்கும் மேலாக, குறிப்பிட்ட பாக்டீரியா காணப்பட்டால் அதை சிறுநீர்ப்பாதைத் தொற்று என மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள்.

உடல்நலம், மனநலம் எதுவாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால் தீவிர பாதிப்பை மட்டுமல்ல, அதிக செலவையும் தவிர்க்கலாம். வீட்டிலேயே எளிய சுய பரிசோதனையின் மூலம் பிரச்னைகளைக் கண்டறிவதற்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவர்கள் ஆலோசனைகள் அளித்துள்ளனர். இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிசோதனைகள் ஒரு தெளிவுக் காக மட்டுமே. எனவே, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.



மார்பகப் புற்றுநோய்


பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள்: மார்பகத்தில் வலி மிகுந்த அல்லது வலியில்லாத கட்டி, காம்பில் ரத்தம், நீர் அல்லது சீழ் வடிதல், புண், காம்பு உள்நோக்கி இழுக்கப் பட்டிருத்தல், மார்பகத்தின் சருமம் ஆரஞ்சுப்பழம் போன்று புள்ளிகளுடன் இருப்பது, சிவப்பு நிறம், தடிப்பு, அக்குள் பகுதியில் நெறிக்கட்டி, மார்பகங்கள் சம அளவில் இல்லாதிருத்தல்.

சுய பரிசோதனை


கண்ணாடியின் முன் நின்று தோள்பட்டையை நேராக வைத்து, கைகளை இடுப்பில் வைத்து மார்பகங்கள் இயல்பான வடிவிலும் நிறத்திலும் இருக் கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

இரண்டு கைகளை உயர்த்திய நிலையிலும் மேலே சொன்னதைப் பரிசோதிக்க வேண்டும்.

அடுத்ததாக, ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, கை விரல்கள் நான்கையும் சேர்த்தாற்போல் வைத்து, மார்பகப் பகுதிகளில் ஏதேனும் கட்டி தென்படுகிறதா என நுனிவிரல்களால் மென்மையாக வட்ட இயக்கத்தில் தடவிப் பார்க்க வேண்டும்.

இடது புறத்தை வலது கை விரல்களைக் கொண்டும், வலது புறத்தை இடது கை விரல்களைக் கொண்டும் மார்பகத்தின் மேலே, கீழே, பக்கவாட்டுப் பகுதி மற்றும் அக்குள் ஆகியவற்றில் இதே முறையில் பரிசோதிக்க வேண்டும்.

மாதத்தில் ஒருமுறை இவ்வாறு பரிசோதிக்க வேண்டும். மாதவிடாய் நாள்களுக்குப் பிறகு பரிசோதிப்பது நல்லது.



சிறுநீர்ப்பாதைத் தொற்று


பெண்களில் 50-60 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சிறுநீர் தொற்றுப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மில்லி சிறுநீரில் ஒரு லட்சத்துக்கும் மேலாக, குறிப்பிட்ட பாக்டீரியா காணப்பட்டால் அதை சிறுநீர்ப்பாதைத் தொற்று என மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள். சிறுநீர்க்குழாயின் அளவு சிறியதாக இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் இடம், வெஜைனா, ஆசனவாய் மூன்றும் அருகருகில் இருப்பதாலும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, பொதுக் கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துதல், மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவது போன்றவை இந்தப் பிரச்னையை உருவாக்கலாம்.

சுய பரிசோதனை


மருத்துவப் பரிசோதனையில்தான் இதை உறுதி செய்ய முடியும். இருப்பினும் கீழே குறிப்பிட்டுள்ள கேள்விகளில் ஒன்று அல்லது அதற்கு மேலானவற்றுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம்.

1. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறதா?

2. அடிவயிற்றில் வலி உள்ளதா?

3. குளிருடன் காய்ச்சல் அடிக்கிறதா?

4. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா?

5. சிறுநீர் கழித்த பின்னரும் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு உள்ளதா?

6. சீராகப் பிரியாமல் சிறுநீர் விட்டுவிட்டு வருகிறதா?

7. வெள்ளையாக இல்லாமல் சிறுநீரின் நிறம் கலங்கியதுபோல இருக்கிறதா?

8. சீழுடன் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா? (இந்த அறிகுறி சிறுநீர் வெளியேறும் இடத்தில் ஏற்பட்டிருக்கிறதா அல்லது வெஜைனாவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெஜைனாவில் ஏற்பட்டால் அது அந்தப் பகுதியைச் சார்ந்த தொற்றாக இருக்கலாம்.)

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஓரிரு நாள்களுக்கு மேல் நீடித்தால் அது சிறுநீர்ப்பாதைத் தொற்றாக இருக்கலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் தொற்று தீவிரமாகி பல உறுப்புகளை பாதிக்கும். சிறுநீரில் காணப்படும் பாக்டீரியா, ரத்தத்தில் கலந்துவிட்டால் ரத்தத்தில் நச்சேற்றம் ஏற்பட்டு உயிரிழப்புகூட ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகினால் வெறும் மருந்துகளிலேயே சரி செய்துவிடலாம்.



வெள்ளைப்படுதல்


வெள்ளைப்படுதல் எல்லா பெண்களுக்கும் இயல்பாக இருக்கும் உடலியல் செயல்பாடு. பீரியட்ஸுக்குப் பிறகு அடுத்த பத்து நாள்களுக்கு வெள்ளைப்படுதல் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கும். பீரியட்ஸ் நிறைவடைந்த நேரத்தில் வெளியாகும் திரவம் நீர்த்துக் காணப்படும்.

கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெடிக்கும் நாள் மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு நாள்களை கருத்தரிக்க உகந்த காலம் என்போம். இந்த நான்கைந்து நாள்களில் வெள்ளைப்படுதலில் நீர்த்தன்மையும், அளவும் மேலும் அதிகரிக்கும். அந்த நான்கைந்து நாள்களுக்குப் பிறகு அடுத்த பத்து நாள்கள் வரை திரவம் கெட்டியாகவே காணப்படும். பீரியட்ஸ் ஏற்படும் வரை அதே நிலையில்தான் இருக்கும்.

எது பிரச்னை?


மலத்துவாரத்திலிருக்கும் பாக்டீரியா, பூஞ்சையினால் தொற்று ஏற்படலாம். உடலுறவின்போது துணையிடமிருந்து தொற்று பரவலாம். கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்புத்திறனைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், அனீமியா உள்ளவர்கள், கர்ப்பிணிகள் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பூஞ்சைத்தொற்று ஏற்படலாம். பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருந்தால் வெள்ளைப்படுதலின் நிறம், வாடை, அளவு என அனைத்தும் மாறுபடும். பாதுகாப்பற்ற உடலுறவு, ஒன்றுக்கும் மேற்பட்டவர் களுடனான பாலியல் செயல்பாடுகளால் ‘பாக்டீரியல் வெஜைனோசிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று வரலாம். பூஞ்சைத் தொற்று, பாக்டீரியல் வெஜைனோசிஸ் உள்ளிட்ட தொற்றுகள் என அனைத்தும் சேர்ந்து ஒரே நேரத்தில் பாதிப்பை (Mixed Infection) ஏற்படுத்தலாம்.

சுய பரிசோதனை


பூஞ்சைத் தொற்று - வெள்ளைப்படுதல், தயிர் போன்று கெட்டியாக வெளியேறும்.

பாக்டீரியல் வெஜைனோசிஸ் - மீன் போன்ற வாடை, மஞ்சள் நிறத்துடன் தண்ணீர் போன்று வெளியேறும்.

ஒரே நேரத்தில் பல தொற்றுகள் - மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கலாம்.

அந்தரங்கப் பகுதி, தொடை இடுக்கில் அரிப்பு, சருமம் வழண்டுபோகும் அளவுக்கு காயம், புண்கள், எரிச்சல்.

வெஜைனா பகுதியில் வைக்கக்கூடிய மாத்திரையிலேயே பெரும்பாலும் பிரச்னை சரியாகிவிடும். நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்துவிட்டு, இந்தப் பிரச்னைக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். சிலருக்கு உட்கொள்ளும் மாத்திரையும் களிம்பும் தேவைப்படலாம். மெனோபாஸுக்கு பிறகு அல்லது 45 வயதுக்கு மேல் வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். அது புற்று நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.



தைராய்டு


நமது கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பி தைராய்டு. உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்வதிலும் இந்தச் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் ‘மாஸ்டர் கிளாண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் குறைபாடு ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகையாக இருக்கிறது. இந்தப் பிரச்னை, பெண்களை அதிகம் பாதிக்கிறது. நான்கு பெண் களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் இந்தப் பிரச்னை காணப்படுகிறது.

யாருக்கு வரலாம்?


பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்னை இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அறிகுறிகள்: ஹைப்போ தைராய்டு - சோர்வு, மந்தம், முடி உதிர்தல், வறண்ட சருமம், அரிப்பு, மலச்சிக்கல், சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, எடை கூடுதல்.

ஹைப்பர் தைராய்டு - படபடப்பாக இருப்பது, எடை குறைதல், அடிக்கடி மலம் கழித்தல், கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, `ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety Attack).

எல்லாருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்காது. ஓரிரு அறிகுறிகள் மட்டுமே காணப்படும். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், ரத்தப் பரிசோதனையில் மட்டும் பிரச்னை காணப்படும். எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் குறைபாட்டைக் கண்டறியலாம். குறைபாடு உறுதியானால் மாத்திரையைத் தவறாமல் உட்கொண்டு, ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என இருந்தால் தைராய்டு பிரச்னையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.



மூல நோய்


ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் மூலநோயால் ஏற்படும் வலியால் அவதிப்படுகின்றனர். மலச்சிக்கல் தொடர்கதையாகி மலம் கழிக்க சிரமப்பட்டு, அதிக அழுத்தம் கொடுக்கும்போது ஆசனவாய்ப் பகுதியின் ரத்தநாளங்கள் வீங்குவதுதான் மூலநோய்.

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை, வயது முதிர்ச்சி, தைராய்டு, வெயிலில் அதிகம் அலையும் வேலை பார்ப்பவர்களுக்கும் ஏற்படலாம். உடல் உழைப்பு குறைந்து, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் அதிகரித்துள்ளது. இந்தப் பழக்கம் மூலநோய் உருவாகும் தன்மையுடையவர்களுக்கு அதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

3 நிலைகள்


நிலை 1: ஆசனவாயின் உள்பகுதியில் மட்டும் ரத்தநாளங்களில் வீக்கம் இருக்கிறது. வெளியில் எதுவும் அறிகுறிகள் தென்படவில்லை.

நிலை 2: மலம் கழிக்கச் சிரமப்படும்போது வீங்கியிருக்கும் ரத்தநாளம் வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றுவிடும்.

நிலை 3: வீக்கம் அதிகரித்து சதை ஆசனவாயின் வெளியில் தொங்குவது.

சுய பரிசோதனை


நாள்பட்ட மலச்சிக்கல்

ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு உணர்வு அல்லது வலி

மலம் கழிக்கும்போது வலியில்லாத ரத்தக்கசிவு

மலம் கழித்த பிறகு சுத்தம் செய்யும்போது சதை அல்லது வீக்கம் தென்படுதல்.

முதல்நிலையிலேயே சிகிச்சை பெற்றால் நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம், உடல் இயக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றால் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சரி செய்துவிடலாம். 2-ம் நிலையில் மாத்திரைகள், உணவு, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றால் சரிசெய்ய முடியும். சிலருக்கு அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ செயல்முறை தேவைப்படலாம். 3-ம் நிலைக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. மலத்தில் ஒரு துளி ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் அது இயல்பானது இல்லை. மூலம் மட்டுமல்லாமல் ஆசனவாய் வெடிப்பு, குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எனவே, ரத்தக்கசிவு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஒற்றைத் தலைவலி


மைக்ரேன் பாதிப்புள்ளவர்களில் மூன்றில் இருவர் பெண்கள். தலைவலியை முதன்மை நிலை, இரண்டாம் நிலை என இரண்டாகப் பிரிக்கலாம். தாங்க முடியாத அளவுக்கு வலிக்கிறது என்றால் அது `மைக்ரேன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி.

நோய், விபத்தினால் காயம் என எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்படும் தலைவலி முதன்மை நிலை. மூளையில் பிரச்னை, சைனஸ் தொந்தரவு என ஏதாவது காரணத்தால் ஏற்படுவது இரண்டாம் நிலை. மைக்ரேன் என்பது முதன்மை நிலையைச் சேர்ந்தது. பூப்பெய்தும் வயதையொட்டி அல்லது 20-30 வயதுக்குள் பெரும்பாலும் இந்தப் பிரச்னை தொடங்கும். மெனோபாஸ் நிலையைக் கடந்தவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருவது குறையும்.



காரணங்கள்


மரபியல், குடும்பப் பின்னணி, மன அழுத்தம், தூக்கமின்மை, கருத்தடை மாத்திரைகள்... காரணம் இல்லாமலும் வரலாம்.

சுய பரிசோதனை


தலைவலி வருவதற்கு முன்பு ‘ஆரா’ (Aura) என்பதை உணர்வார்கள். அதாவது, மங்கலான பார்வை, ஒளிரும் வெளிச்சம், ஸிக்-ஸாக் கோடுகள், விதவிதமான உருவங்கள் போன்றவை பார்வைக்குத் தெரியும்.

‘ஆரா’ விலக விலக 2-3 மணி நேரத்துக்குள் தலைவலி மெள்ள அதிகரிக்கத் தொடங்கும்.

பெரும்பாலும் ஒருபுறம் மட்டுமே தலைவலி இருக்கும், சிலருக்கு இருபுறமும் ஏற்படலாம்.

‘விண்’ணென்று தெறிப்பது போன்ற தீவிரமான தலைவலியாக இருக்கும். வாந்தி ஏற்படலாம்.

வலி 4 முதல் 72 மணி நேரம்கூட நீடிக்கலாம்.

யாரும் பேசினால் எரிச்சலுணர்வு தோன்றும் `போனோபோபியா’ (Phonophobia) அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் எரிச்சலுணர்வு தோன்றும் ‘போட்டோபோபியா’ (Photophobia) ஏற்படும்.

தடுப்பது எப்படி?


பூ, பெர்ஃபியூம் வாசனைகள், சீஸ், சாக்லேட் போன்ற உணவுகள் என ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் விஷயங்களைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். தூங்கும் முறையை சரிப்படுத்தி, சரிவிகித உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். போதை, புகை, மதுப்பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். வருடத்துக்கு ஓரிரு முறை வருகிறது என்றால் அவர்களுக்கு வலி மாத்திரை பரிந்துரைக்கப்படும். அடிக்கடி மைக்ரேன் ஏற்படுபவர்களுக்கு தடுப்பு முறை, தெரபி மற்றும் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.



குறட்டை


நாம் சுவாசிக்கும் காற்று, மூக்கு, தொண்டை வழியே சுவாசக் குழாயின் மூலம் நுரையீரலை அடைகிறது. சுவாசக் குழாய் சுருங்கினாலோ, சுவாசக் குழாய்க்குச் செல்லும் காற்று தடைப்பட்டாலோ குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) ஏற்படலாம். இந்தப் பிரச்னை, ஆண்களை அதிகம் பாதிக்கிறது. மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடலுழைப்பு குறைவது, உடல் பருமன் ஆகிய காரணங்களால் முகம், கழுத்து ஆகிய இடங்கள் பருத்து, சுவாசக்குழாய் சுருங்கி சுவாசம் தடைப்படும். இதனால் ஆக்ஸிஜன் உடலுக்குச் செல்வதும் தடைப்படுவதால், உடலின் அனைத்து செல்களிலும் ஆக்ஸிஜன் குறைந்து ‘கிரானிக் ஹைப்போக்ஸியா’ (Chronic Hypoxia) எனும் நிலை ஏற்படலாம். இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும்போது ரத்த ஓட்டமும் குறைந்து மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுவாசக்குழாய், நுரையீரலில் ஏதேனும் பிரச்னை, தைராய்டு, நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னை, சர்க்கரை நோய், மூளையில் கட்டி, ரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படுதல் போன்ற காரணங்களாலும் ‘ஸ்லீப் ஆப்னியா’ ஏற்படலாம். மூக்கு, தொண்டைப் பகுதியில் சதை வளர்தல் பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

சுய பரிசோதனை


எந்த நிலையில் படுத்துத் தூங்கினாலும் குறட்டை விடுதல்.

வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, பேசிக் கொண்டிருக்கும்போதோ தூங்கி விடுதல்.

கண்ணாடி முன் நின்று வாயை நன்றாகத் திறந்து பார்க்கும்போது `அண்ணம்’ எனப்படும் உள்நாக்கு தெரியாமல் இருப்பது.

பற்களுக்குள் அடங்காமல் நாக்கு வெளியே துருத்திக்கொண்டு இருப்பது.

கழுத்தின் சுற்றளவு 42 இஞ்சுக்கு மேல் இருப்பது மற்றும் தொப்பை (ஆண்களுக்கு).

பெண்களுக்கு 30-க்கு மேல் காணப்படும் BMI அளவு.

மூன்று மாதங்களுக்கும் மேல் அறிகுறிகள், குறட்டையுடன் மூச்சுத்திணறல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். லேசான பாதிப்புக்கு மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும். மிதமான பாதிப்புக்கு உறக்கத்தில் சுவாசம் தடைப்படாமல் இருக்கப் பொருத்திக் கொள்ளும் கருவிகள் பரிந்துரைக்கப்படும். தீவிர பாதிப்புக்கு, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும்.



மனச்சோர்வு


மனநலப் பிரச்னைகளில் மிகவும் பொதுவானவை மன அழுத்தம் (Stress) மற்றும் மனச்சோர்வு (Depression). மன அழுத்தம் தீவிரமாகி அது மனச்சோர்வு என்ற நோயாக மாறினால் மருத்துவ சிகிச்சை அவசியம். உலக மக்கள்தொகையில் 4-5% பேர் மனச்சோர்வினால் பாதிக்கப்படலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மனச்சோர்வால் பாதிக்கப்படலாம்.

ஆண்களைவிட பெண்கள்தான் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். பெண்களின் உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் அதற்கு காரணம். பூப்பெய்தும் வயது, மகப்பேறு காலம், மெனோபாஸ் போன்ற காலங்களில் பெண்கள் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

புறச்சூழலால் மட்டும் மனச்சோர்வு ஏற்படுவதில்லை. மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஹார்மோனின் பங்களிப்பு இருக்கிறது. முக்கியமாக `செரட்டோனின்’ என்ற ரசாயனத்தின் அளவு மூளையில் குறைந்தால் யாருக்கு வேண்டுமானாலும் திடீரென்று மனச்சோர்வு ஏற்படலாம்.

சுய பரிசோதனை


நாள் முழுவதும் சோகமான மனநிலையில் இருப்பது

குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதற்குக்கூட ஆற்றல் இல்லாமல் இருப்பது

விரும்பிச்செய்யும் பொழுதுபோக்குகளில்கூட ஈடுபாடு இல்லாதது

ஞாபக மறதி, கவனச்சிதறல்

அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை

குறைவாகச் சாப்பிட்டு எடை மெலிவது அல்லது அதிகம் சாப்பிட்டு எடை அதிகரிப்பது

தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, தற்கொலை எண்ணம்

இரண்டுக்கும் மேலான அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

மனச்சோர்வு உடையவர்கள், சிகிச்சை பெற்றால்தான் அதிலிருந்து விடுபட முடியும். குறைந்தது ஆறு மாதங்கள், அதிகபட்சம் ஓராண்டு வரை சிகிச்சை பெற்றால் போது மானது.


குறிச்சொற்கள்
#மார்பகப்_புற்றுநோய்
#சிறுநீர்ப்பாதைத்_தொற்று
#வெள்ளைப்படுதல்
#தைராய்டு
#மூலநோய்
#ஒற்றைத்_தலைவலி
#குறட்டை
#மனச்சோர்வு
#மாரடைப்பு
#வயிற்று_அல்சர்
#கண்புரை
#குடல்வால்_அழற்சி
#பல்_சார்ந்த_பிரச்னைகள்
#செவித்திறன்_இழப்பு

தைராய்டு எனும் கேடயம் அதிகம் சுரந்தால் உடலில் என்னவெல்லாம் நடக்கும்?!


நமது கழுத்து முன்புறத்தில்,

வெறும் முப்பது கிராம் எடை கூட இல்லாத பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த தைராய்டு சுரப்பிதான், நமது எடையை முப்பது கிலோ வரை கூட்டவோ குறைக்கவோ செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்...

சிறிய தோற்றம், பெரிய செயலாக்கம் என்றிருக்கும் இந்த தைராய்டு சுரப்பிதான், நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. Thyreos என்றால் கிரேக்க மொழியில் கேடயம் என்று பொருளாம்.


உண்மையில் உடலை இது கேடயம் போலக் காப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று கூறும் மருத்துவர்கள் இதன் செயல்பாடுகளையும் விளக்குகிறார்கள்.

கரு உருவான பதினோராவது வாரம் தனது பணியைத் துவக்கும் தைராய்டு சுரப்பி, கருவிலேயே குழந்தையின் மூளை, உடல் உருவாக்கத்தில் முக்கியப் பங்கேற்கிறது. நாம் பிறந்த பிறகு நமது வளர்ச்சியையும் ஒழுங்குபடுத்தி, பருவமடைதல், மீண்டும் கருத்தரித்தல் மற்றும் கருவளர்தல் என மனிதச்சங்கிலி அறுபடாமல் பார்த்துக் கொள்கிறது என்பதாலேயே இதனை மாஸ்டர் கிளாண்ட் என அழைக்கின்றனர் நாளமில்லா சுரப்பி நிபுணர்கள்.

இந்த மாஸ்டர் கிளாண்டில் ஏற்படும் வீக்கத்தை, "முன்கழுத்து கழலை" அதாவது Goiter என்று அழைக்கும் மருத்துவ உலகம், இந்தத் தைராய்டு தனது வேகத்தை குறைத்து நமது உடல் எடையைக் கூட்டுவதை 'ஹைப்போதைராய்டிசம்' (Hypothyroidism) என்றும், இந்தச் சுரப்பி தறிகெட்டு வேகமாக ஓடுவதை "ஹைப்பர்தைராய்டிசம்" (Hyperthyroidism) என்றும் கூறுகிறது.

இவற்றில் குறைந்தநிலையான ஹைப்போதைராய்டிசம் நமக்குப் பரிச்சயமான ஒன்றாக இருப்பதால், அதிகம் சுரக்கும் நிலையைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

பெண்களில் அதிகம் காணப்படும் இந்த தைராய்டு அதிக சுரப்பு நிலை 'க்ரேவ்ஸ் டிசீஸ்' (Graves' Disease) எனப்படுகிறது. அதாவது, சுரப்பியும் அதிகம் சுரந்து, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளும் அதிகம் சுரப்பதால், இது வண்டி தானே ஓடி, தானே மோதிக் கொள்வதைப்போன்ற ஆட்டோ இம்யூன் நிலை. அதாவது தன்னுடல் தாக்குநோயாக மாறுகிறது என்று கூறும் மருத்துவர்கள், இந்த நிலையில் அதிகப் பசி, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, அதீத எடையிழப்பு ( 20 கிலோ வரை), படபடப்பு, நடுக்கம், அதிக வியர்வை, மாதவிடாய் பிரச்னைகள், தூக்கமின்மை போன்ற அறிகுறிகளுடன் முடி கொட்டுதல், முன்கழுத்து வீக்கம், கண்களில் வீக்கம், மூச்சுத்திணறல், இருதய செயலிழப்பு ஆகியன ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

தைராய்டு டெஸ்ட் மற்றும் தைராய்டு ஸ்கேனிங் போன்ற எளிய பரிசோதனைகள் மூலமாக, ஹைப்பர்தைராய்டிசம் உறுதிபடுத்தப்பட்டால், நோயின் தன்மை மற்றும் அதன் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சையின் மூலமாகவோ நோயை நன்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனாலும், அரிதாக சிலருக்கு ஏற்படும் மிதமிஞ்சிய தைராய்டு சுரப்பு, தைராய்டு ஸ்டார்மை ஏற்படுத்தி, பெரும் பாதிப்புகளோடு உயிரிழப்பு வரைக்கூட போகலாம் என்பதால், இந்த ஹைப்பர்தைராய்டிசம் நிலையில் கவனம் மிகவும் அவசியம்.

இந்த தன்னுடல் தாக்குநோய் என்பது மரபணுக்கள் மூலமாக, குடும்பங்களில் சகோதர சகோதரிகளிடம் காணப்படுகிறது என்பதால், இதைப் பற்றிய புரிதலும், மற்ற தன்னுடல் தாக்குநோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் இங்கு அவசியமாகிறது.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதும், பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், கேரட்கள் மற்றும் கனிகளையும், தயிரையும் சேர்த்துக் கொள்வதுடன் வைட்டமின் டி தரும் சூரிய வெளி நடை இவர்களுக்கு மிக உதவும்.

உண்மையில் உலகெங்கும் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் தைராய்டு சுரப்பி பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், இவர்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கே இதைக் குறித்த விழிப்புணர்வு உள்ளது என்கிறது சர்வதேச தைராய்டு அமைப்பு. திடீரென எடை கூடினால் மட்டுமல்ல, திடீரென எடை குறையும்போதும் தைராய்டு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

குறிச்சொற்கள் #தைராய்டு #தொண்டைப்பகுதியில்_கட்டி #ஹைப்போதைராய்டிசம் #ஹைப்பர்தைராய்டிசம் #Hypothyroidism #Hyperthyroidism #Thyroid #Thyroidism
Topics tagged under தைராய்டு on ஈகரை தமிழ் களஞ்சியம் Thyroid

கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது?


தைராய்டு கிளாண்ட்



``நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதய செயல்பாடு என மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படை இந்த தைராக்சின் ஹார்மோன்.

பெண்களுக்கே அதிக பாதிப்பு



தைராய்டு தொடர்பான பாதிப்புகள் ஆண்களைவிட, பெண்களுக்கே அதிக அளவு ஏற்படுகிறது. தைராய்டு கிளாண்டில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படலாம். முதலாவது, அதன் செயல்திறனில் ஏற்படும் பாதிப்பு. செயல்திறன் பாதிக்கப்பட்டால் ஹார்மோன் சுரப்பு குறையலாம், அல்லது அதிகரிக்கலாம். ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அதனை ஹைப்போதைராய்டிசம் என்றும், அதிகமான ஹார்மோன் சுரந்தால் அதை ஹைப்பர்தைராய்டிசம் என்றும் கூறுவார்கள். செயல்திறன் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

பெரும்பாலானோருக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியம். இந்தக் குறைபாட்டை போக்கவே அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே கருத்தரித்த பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடற்சோர்வு, முகம், கை,கால்கள் வீக்கம், மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் ஏற்படுவது ஆகியவற்றை இந்த ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் எனலாம்.

என்ன பாதிப்பு ஏற்படும்?



ஹைப்பர் தைராய்டிச பாதிப்பு ஏற்பட்டால் உடல் எடை குறைவு, கை நடுக்கம், வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கண் வெள்ளைவிழி இமைகளுக்கு வெளியே வருதல் ஆகிய பிரச்னைகள் எற்படும். இவை தைராய்டு கிளாண்டின் செயல்பாடு பாதிப்பதால் ஏற்படும் விளைவுகள். இரண்டாவது, தைராய்டு பகுதியில் கட்டிகள் ஏற்படலாம். இதனை நாடியுல்ஸ் (Nodule) எனக் கூறுவார்கள். இதில் 85% கட்டிகள் சாதாரண கட்டிகளாக இருக்கும். 15% கேன்சர் கட்டிகளாக இருக்க வாய்ப்புள்ளது. கேன்சர் தவிர்த்த மற்ற கட்டிகள் வர ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

கழுத்தில் வீக்கம் அல்லது கட்டியுடன் வந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டிகள் சிலருக்கு நெஞ்சுக்கூடு வரை கூட நீண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இவை பெரும்பாலும் வெளியே தெரியாது. 3 சென்டி மீட்டருக்கு மேல் தைராய்டு கட்டி வளர்ந்தால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பு உள்ளது. தைராய்டு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மூன்று முக்கிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில் முதன்மையானது தைராய்டு புரொஃபைல் டெஸ்ட், டி.எஸ்.எஸ், டி3, டி4 என்ற பரிசோதனைகள் மூலமாக தைராய்டு கிளாண்ட் சரியாகச் செயலாற்றுகிறதா என்பது கண்டறியப்படும். இரண்டாவதாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கட்டியின் அளவு, கட்டியின் எண்ணிக்கை, சாதாரண கட்டியா அல்லது கேன்சர் கட்டியா, கேன்சர் கட்டியாக இருந்தால் அருகே உள்ள நெறிக்கட்டிகளுக்கு பரவியிருக்கிறதா என்பது உறுதி செய்யபடும். தைராய்டு கட்டி நெஞ்சுக்கூடு வரை நீண்டிருந்தால் சி.டி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

உணவுப் பழக்கத்தால் கட்டுப்படுத்தலாம்



மூன்றாது பரிசோதனை, அக்கட்டியில் இருந்து ஊசி மூலம் செல்களை எடுத்து அதனை ஆய்வு செய்வார்கள். இதன் மூலம், ஏற்பட்டுள்ள கட்டி கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது கண்டறியப்படும். இந்த மூன்று பரிசோதனைகள், மற்றும் கைகளால் தொட்டுப்பார்த்து கட்டியின் தன்மையைக் கண்டறிந்த பிறகே அது கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது உறுதி செய்யப்படும். சாதாரண கட்டியாக இருந்து, அதன் அளவு 3 சென்டி மீட்டருக்கு கீழே இருந்து, அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. அதைத் தொடர்ந்து கண்காணித்தாலே போதுமானது. உணவுப் பழக்கத்தின் மூலம் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சாதாரண கட்டியாக இருந்து 3 சென்டி மீட்டருக்கு மேல் வளர்ந்து, பிரச்னை ஏற்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

கேன்சர் கட்டியாக இருந்தால் கட்டாய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தைராய்டில் ஏற்படும் கட்டி வளர்ந்து, பேச்சுக்குழாயில் நரம்புகளை பாதித்து குரலில் மாற்றம் ஏற்பட்டால் அது கேன்சர் கட்டியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பாப்பிலாரி கார்சினோமா, ஃபாலிக்யூலர் கார்சினோமா, மெடியுலரி மற்றும் அனபிளாஸ்டிக் என நான்கு வகையான கேன்சர்கள் தைராய்டில் ஏற்படலாம். இதில் 80 சதவிகிதம் கேன்சர் பாப்பிலாரி மற்றும் ஃபாலிக்யூலர் கார்சினோமா பாதிப்பு தான் ஏற்படுகிறது.

அயோடின் சத்து அவசியம்



பாப்பிலாரி, ஃபாலிக்யூலர் கேன்சர் முறையான அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ அயோடின் அபிலேஷன் சிகிச்சை மூலம் 90 சதவிகிதத்திற்கும் மேல் நல்லபடியாக குணப்படுத்த முடியும். மீதமுள்ள கேன்சர்களில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினால் அதனை குணப்படுத்த முடியாது. ஆனால் தைராய்டு கேன்சரில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினாலும் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். மேலும், தொண்டைப்பகுதியில் கட்டி போல் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு தைராய்டு பிரச்னையைத் தீர்க்கலாம்".

குறிச்சொற்கள் #தைராய்டு #தொண்டைப்பகுதியில்_கட்டி #ஹைப்போதைராய்டிசம் #ஹைப்பர்தைராய்டிசம் #Hypothyroidism #Hyperthyroidism #Thyroid #Thyroidism

தைராய்டு


#தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உணவு வகைகள் எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலங்களில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதுகுறித்து காண்போம்..

தைராய்டு உள்ளவர்கள் பொதுவாக ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், பீட்சா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பரங்கிக்காய் விதையில் உள்ள ஜிங்க் சத்து தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு முக்கியமான சத்தாகும்.

கருவேப்பிலையில் உள்ள காப்பர் சத்து தைராக்சின் உற்பத்தியை ஊக்குவிப்பதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்டுக் கீரையில் உள்ள செலினியம் சத்து டி4-ஐ டி3 ஆக மாற்றுவதால் தண்டுக் கீரை எடுப்பது நல்லது.

கோடை காலத்தில் குளிர்ச்சி அளிக்கும் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.

புளிக்காத தயிர் சாப்பிடுவதன் மூலம் அயோடின் சத்தயும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.

பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் தைராய்டு பிரச்சினைகளை குறைக்கும் நல்ல உணவுகளாகும்

Back to top