புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
3 Posts - 4%
viyasan
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
2 Posts - 3%
manikavi
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
2 Posts - 6%
manikavi
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
1 Post - 3%
viyasan
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
1 Post - 3%
Rutu
குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_m10குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2013


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 29, 2013 8:25 pm

First topic message reminder :

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள், 30.5.2013, சுப கிரகங்களில் முக்கியமானவரான குரு, ரிசபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மாறுகிறார். இந்தக் குரு பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பலன் என்பதை இங்கே தந்திருக்கிறோம்.

நன்றி : தமிழ் கிளப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:03 pm

துலாம்

ஆற்றைக் கடக்கிற வரையில்தான் அண்ணன், தம்பி முறை அதை கடந்தப் பின் நீ யாரோ, நான் யாரோ என்றில்லாமல் பிறர் செய்த சிறு உதவியையும் மறவாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து வரவு எட்டணா, செலவு பத்தணாவாக்கினாரே! ஏகப்பட்ட அலைச்சலையும், மன உளைச்சலையும் குருபகவான் கொடுத்தாரே! சேமிப்புகளை எல்லாம் கரைத்தாரே! மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கினீர்களே! நமக்கேன் வம்பு என்று சில இடங்களில் மௌனமாக இருந்த போதெல்லாம் தலைக்கனம் பிடித்தவன் என்று பட்டம் சூட்டப்பட்டீர்களே! 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் அமர்வதால் இனி தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வுதேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள்.

‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப திடீர் செல்வாக்கையும் வசதி, வாய்ப்புகளையும் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். குருபகவான் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் வரும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வீட்டில் தள்ளிப்போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நெடுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் தன, சப்தமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அறிவுப் பூர்வமாகவும் அனுபவப் பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். என்றாலும் மனைவியுடன் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு கருப்பை கட்டி, மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும்.

கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். முன்னேற்றம் தடைபடாது. எதிர்பார்த்த பணம் வரும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். என்றாலும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும்.

யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, தன்னை யாரும் மதிக்கவில்லையே என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆர்டர்கள் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். இரும்பு, ரியல் எஸ்டேட், சிமென்ட், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ற நல்ல மணமகன் அமைவார். ஆரோக்யம் கூடும். புது வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவமாணவிகளே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள்.

நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகாக்களின் ஆதரவு கிட்டும். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.

பரிகாரம்

கும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:05 pm

விருச்சிகம்

அநீதியான சமாதானத்தை விட நீதியான யுத்தமே மேல் என நினைக்கும் நீங்கள், ஒருபோதும் அதர்மத்திற்கு துணை போக மாட்டீர்கள். தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதே உண்மையான பிரார்த்தனை என்று நினைப்பீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும் செல்வாக்கையும் ஓரளவு பணவரவையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை 8ம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வந்து நீங்கும். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதால் அவ்வப்போது நல்லது நடக்கும்.
குருபகவான் 2ம் வீட்டை பார்ப்பதால் சாணக்கியத் தனமாகப் பேசி பல நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள்.

வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, டென்ஷன் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும். பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். குரு உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமை கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

தூக்கம் குறையும். காலில் அடிபடும். புதுவேலை கிடைக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் தன, பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிலும் வெற்றி கிட்டும். விஐபிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். மகனுக்கு வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள். குரு 8ல் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களுக்கு அதிக முன் பணம் தர வேண்டாம். அவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.

சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனியுங்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதித்து செலுத்த வேண்டி வரும். பங்குதாரர்களால் இருந்த கெடுபிடிகள் விலகும். மூலிகை, தேங்காய் மண்டி, எலக்ட்ரிக்கல், துரித உணவகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டாம். முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். புது சலுகைகளும் பதவிகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களே! யதார்த்தமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். திருமணம் தாமதமாகி முடியும். வேலை கிடைக்கும். மாணவமாணவிகளே! அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணக்கும் கொஞ்சம் கசக்கும். அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களை கேட்பதில் தயக்கம் வேண்டாம். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறுசிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி சாதிப்பீர்கள். சகாக்களுடன் உரிமையாகப் பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். விவசாயிகளே! தக்காளி, வெண்டை, பீன்ஸ், எள் வகைகளால் லாபம் உண்டு.

இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்

கடலூர் திருவந்திபுரத்தில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை தரிசித்து வணங்கி வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:06 pm

தனுசு

நாலுந்தெரிந்த நீங்கள், அரத்தை அரங்கொண்டும் வைரத்தை வைரங்கொண்டும் அறுக்க வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள். ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறு போட்டு பார்த்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆள இருக்கிறார். எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். முதலில் உங்கள் செல்போனின் ரிங்க் டோனை மாற்றுங்கள். குளியலறைப் பாடகராக இருந்த நீங்கள், கடந்த ஓராண்டு காலமாக முனகிக் கொண்டும் முகம் வாடியும் இருந்தீர்களே! இனி பாட ஆரம்பிப்பீர்கள். பெற்ற பிள்ளையிடம் கூட பேசுவதற்குக் கூட பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்கிற்கு பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களைதானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! கொடுத்த பணத்தை கேட்கப்போய் பொல்லாப்பானதே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும்.

வீட்டிற்கு ஏன் வருகிறோம் என்றநிலை மாறி வீட்டிற்கு சீக்கிரம் செல்லலாம் என்ற நிலை இனி வரும். ஈகோவாலும், உப்புக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்னையாலும் கணவன் மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேருவீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். முடங்கிக் கிடந்த வாகனம் ஓடும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும். மற்றவர்களை குறை கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்கு சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டாகும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். பழைய கடன் பிரச்னை தீரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னை சுமுகமாகும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். நவீனரக கேமரா, செல்போன் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புதுவேலை கிடைக்கும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் நினைத்தது நிறைவேறும். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

வியாபாரத்தில் கடன் பிரச்னையாலும் பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி பண உதவி கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆர்வம் பிறக்கும். அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பணியாட்களிடம் கறாராக இருங்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும். விலகிச்சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி, பண்ணை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகளாலும் சக ஊழியர்களாலும் ஓரங்கட்டப்பட்டீர்களே! இனி மரியாதை கிடைக்கும்.

வேலைச்சுமை குறையும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். கேட்ட இடத்திற்கே இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி வரும்.
கன்னிப் பெண்களே! உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். விரக்தி, சோம்பலிலிருந்து மீளுவீர்கள். காதல் கனியும். திருமணமும் வெகு விமரிசையாக முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள். மாணவமாணவிகளே! வகுப்பறையில் முதல் வரிசையில் அமருங்கள். நினைவாற்றல் கூடும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். இசை, இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். கலைத்துறையினரே! இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமொழிகளில் பிரபலமாவீர்கள். உங்களின் கலை மற்றும் படைப்புத் திறன் வளரும். மூத்த கலைஞர்களை மதிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசியல்வாதிகளே! வேறு அணிக்கு மாற வேண்டி வரும். தொகுதி மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். விவசாயிகளே! சூரிய காந்தி, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் தீரும்.

இந்த குரு பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:08 pm

மகரம்

உழைப்பே ஓய்வுக்கு திறவுகோல், சுறுசுறுப்பே செல்வத்துக்கு திறவுகோல் என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும் கௌரவத்தையும் குழந்தை பாக்யத்தையும் வீடு, மனை சேர்க்கையையும் தந்த குருபகவான் இப்போது 28.5.2013 முதல் 12.6.2014 வரை 6ம் வீட்டில் மறைவதால் முன்கோபம் அதிகமாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாகப் பேச வேண்டி வரும். நீங்கள் மாறிவிட்டதாக சிலர் சொல்லிக் கொள்வார்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கக்கூடும்.

பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. வீண் சந்தேகமும், ஈகோ பிரச்னையாலும் பிரிவு வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். குருபகவான் உங்களின் தன ஸ்தானத்தை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சில இடங்களில் வளைந்து பேசி காரியத்தை முடிப்பீர்கள். 10ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலைச்சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். 12ம் வீட்டையும் குரு பார்ப்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சாதுக்கள், சந்நியாசிகளின் ஆசி கிட்டும். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, லாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முக்கியப் பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும் மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார். அவருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நட்பு வட்டம் விரியும். கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும். கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். திருமணம் கூடி வரும்.

சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றம் வந்து செல்லும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் விரையாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்து வகையில் வழக்கு வந்து நீங்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். வேலையாட்களை விரட்டாதீர்கள். தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டேஷனரி, பதிப்பகங்கள், கமிஷன் மூலம் லாபம் பெறுவீர்கள்.

வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என்று செல்லாமல் முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வீண் பழிகளை சுமக்க வேண்டியது வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டியது வரும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடிப் பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள். காதல் கசந்து இனிக்கும்.

நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். திருமணம் சிறப்பாக முடியும். மாணவ மாணவிகளே! விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள். விடைகளையும் எழுதிப் பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். கிசுகிசுத் தொல்லைகளால் டென்ஷனாவீர்கள். அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். கோஷ்டிப் பூசலாலும் எதிர்க்கட்சியினராலும் அலைகழிக்கப்படுவீர்கள். விவசாயிகளே! அகலக்கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:10 pm

கும்பம்

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும் என்பதை அறிந்த நீங்கள், பதவியும் பணமும் வந்தாலும் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும் சின்னாபின்னமாக்கிய குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்வதால் இனி நல்லதே நடக்கும். கடந்த ஓராண்டு காலமாக மருத்துவர்களே உங்கள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் மயங்கினார்களே! மருந்து, மாத்திரையால் வயிறும் புண்ணானதே! உருகுலைந்து போயிருக்கும் நீங்கள், இனி அழகும் ஆரோக்யமும் பெறுவீர்கள். அடிக்கடி தொல்லை தரும் வாகனத்தையும் மாற்றுவீர்கள். காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்ததே இனி அமைதி திரும்பும். சிலர் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று நம்பி வீடு கட்டத் தொடங்கி முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இனி வீடு கட்டி முடித்து கோலாகலமாக
கிரகப்பிரவேசம் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

எலியும் பூனையுமாக இருந்த கணவன்மனைவி இனி நகமும் சதையுமாக மாறுவீர்கள். குழந்தை இல்லாமல் கோயில் குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். சுருங்கியிருந்த உங்கள் முகம் மலரும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். பதினோராவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சங்கம், டிரஸ்ட் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென்று நினைப்பீர்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய கடனை நினைத்து சில நேரங்களில் அஞ்சுவீர்கள். வேற்றுமொழியினர் உதவிகரமாக இருப்பார்கள். காய்ச்சல், சளித் தொந்தரவு, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அவசரத்திற்கு கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் தன லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் கூடி வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் வதந்திகளும் வரக்கூடும். முக்கிய சொத்துப் பத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது வரும்.

ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் களையிழந்து போயிருந்த கடை இனி அதிக வாடிக்கையாளர்களின் வருகையால் களைகட்டும். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். கெமிக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் நிலைப்போமா, நிலைக்க மாட்டோமா என்ற பயம் இனி நீங்கும்.

உங்களை அலைகழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் இனி உண்டு. புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும். அடி வயிற்றிலிருந்த வலி, தூக்கமின்மை விலகும். காதல் கனியும். திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! உங்கள் ஆசைப்படி கல்யாணம் முடியும். மாணவ மாணவிகளே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு பரிசும் பாராட்டும் கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும். வீடு வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! எதிலும் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். கட்சியில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களை மதித்து பேசுவார்கள். முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். கடன் தீரும்.

இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும் வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 14, 2013 12:12 pm

மீனம்

செடியாக இருந்தபோது வளையாதது மரமான பிறகு வளையாது என்பதை அறிந்த நீங்கள், குழந்தைகளை கட்டுப்பாடுடன் வளர்ப்பதில் வல்லவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிநாதனான குருபகவான் எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்க விடாமல் தடுத்தார். சின்னச் சின்ன வேலைகளைகூட போராடி முடித்தீர்கள். சொந்த பந்தங்களுக்காக செலவு செய்தும் நன்றியில்லாமல் போனதே! இப்போது குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உள்ள காலகட்டம் வரை 4ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் ஓரளவு நீங்கும். இதுவரை தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். விஐபிகள் அறிமுகமாவார்கள். நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் 4ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும் நடத்தைக் கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.

மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அரசாங்கத்தின் முறையான அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். குடிநீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் அடைப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் ஈகோ பிரச்னையால் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தின் பொருட்டு அல்லது மனத்தாங்கலின் பொருட்டு கணவன் மனைவி பிரிய வேண்டி வரும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி தாமதமாக கிடைக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சுவலி, கைகால் வலி, அசதி வந்து போகும். தாயாருடன், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபுறம் செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும். வாகனத்தின் இன்சூரன்ஸ் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் தன, பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரி செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப்போய் பெயர் கெடும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

அரைகுறையாக நின்ற கட்டிடப் பணியை தொடங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம். ஷேர் மூலமாகவும் பணம் வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களின் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சில நேரங்களில் எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்.

அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளும் அறிவாற்றலை பெறுவீர்கள். புது ஏஜென்சி யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள்மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். சம்பளம் உயரும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். ஆனால், சக ஊழியர்களுடன் பிரச்னைகள் வரும். சிறு அவமானங்கள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! தாயாருடன் மோதல் வரும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.

காதல் விவகாரத்தை தள்ளி வைத்து உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். மாணவ மாணவிகளே! லட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். உண்மையான நண்பர்களை உணர்ந்து கொள்ளுங்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள் வரக்கூடும். பரபரப்பாக இருப்பீர்கள். ஆனால் பணவரவு சுமார்தான். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும் எதிர்க் கட்சியினரால் அமுக்கப்பட்டாலும் அனைத்தையும் முறியடித்து முன்னேறுவீர்கள். உண்ணா விரதம், ஊர்வலங்களை முன்னின்று நடத்தி புகழடைவீர்கள். விவசாயிகளே! மரப்பயிர் லாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த குரு மாற்றம் உங்களை நாலாவிதத்திலும் சிரமப்பட வைத்தாலும் புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடியில் அருளும் பிரத்யங்கரா தேவியை தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 2:17 pm

எனக்கு நல்ல தான் சொல்லிருக்கு புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 14, 2013 4:31 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே!



குரு பெயர்ச்சி பலன்கள் - 2013 - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 7:40 pm

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி நண்பரே!

சிவா, இது ஏற்கனவே நான் போட்டுவிட்டேன், இணைத்துவிடலாமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 16, 2013 8:44 pm

இந்த வருஷம் எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு ராசி பலனுங்கோ - இணைத்துவிட்டேன்ம்மா




Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக