புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!
1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.
சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.
சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.
"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!
1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.
சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.
சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"முட்டாள்களை சந்திப்பது முதல் தடவையல்ல!"
ராஜபுதனத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிஜி. அந்தப் பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். சுவாமிஜியி ஆங்கிலம் அறியாதவர் என்றெண்ணி அவரைக் கேவி செய்தும் ஏசியும் சிரித்தபடி வந்தனர். சுவாமிஜி அமைதியாக இருந்தார். தமக்கு ஆங்கிலம் தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.
ரயில் ஒரு நிலையத்தில் நின்றதும் அங்கிருந்த ஒருவரிடம், 'தண்ணீர் வேண்டும்' என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுவாமிஜி ஆங்கிலம் பேசுவதைக் கேட்ட அந்த வெள்ளையர்கள் இரு வரும் துணுக்குற்றனர். சுவாமிஜியிடம் வந்து, 'நாங்கள் இவ்வளவு உங்களைக் கேலி செய்தும் நீங்கள் எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்தீர்களே, 'அது ஏனா? ஏனெனில், நண்பர்களே, நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் தடவை அல்ல' என்றார். ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம் வந்தது. அவரை அடிப்பதற்குத் தயாராயினர். சுவாமிஜி அதற்கும் தயாராக எழுந்தார். அவரது உடம்பையும் வலுவான கைகளையும் கண்ட வெள்ளையர்கள் அவரிடம் பணிந்து போவதே மேல் என்று அமைதியாகி விட்டார்கள்.
ராஜபுதனத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிஜி. அந்தப் பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். சுவாமிஜியி ஆங்கிலம் அறியாதவர் என்றெண்ணி அவரைக் கேவி செய்தும் ஏசியும் சிரித்தபடி வந்தனர். சுவாமிஜி அமைதியாக இருந்தார். தமக்கு ஆங்கிலம் தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.
ரயில் ஒரு நிலையத்தில் நின்றதும் அங்கிருந்த ஒருவரிடம், 'தண்ணீர் வேண்டும்' என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுவாமிஜி ஆங்கிலம் பேசுவதைக் கேட்ட அந்த வெள்ளையர்கள் இரு வரும் துணுக்குற்றனர். சுவாமிஜியிடம் வந்து, 'நாங்கள் இவ்வளவு உங்களைக் கேலி செய்தும் நீங்கள் எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்தீர்களே, 'அது ஏனா? ஏனெனில், நண்பர்களே, நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் தடவை அல்ல' என்றார். ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம் வந்தது. அவரை அடிப்பதற்குத் தயாராயினர். சுவாமிஜி அதற்கும் தயாராக எழுந்தார். அவரது உடம்பையும் வலுவான கைகளையும் கண்ட வெள்ளையர்கள் அவரிடம் பணிந்து போவதே மேல் என்று அமைதியாகி விட்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விலகிய புலி!
ஒரு முறை சுவாமிஜிக்கு தோன்றியது.. என் உடம்பும், கை கால்களும் நன்றாகத்தானே இருக்கின்றன. நான் வீடு வீடாகச் சென்று பிச்சை வாங்கி உண்பது சரிதானா? என்று.
அவர் சிந்திக்கலானார். இந்த எண்ணம் எழுந்ததும் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
எனக்கு உணவு தரும் ஏழைகளுக்கு என்னால் என்ன பயன்? அவர்கள் ஒரு பிடி அரிசி மீதம் பிடிக்க முடியுமானால் சொந்தக் குழந்தைகளுக்கே அது ஒரு நாள் உணவாகுமே. அதெல்லாம்தான் போகட்டும், இந்த உடலைக் காப்பாற்றி என்ன ஆக வேண்டும்? இனி நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டார் சுவாமிஜி. அந்த எண்ணம் தீவிரமாயிற்று. ஏதாவது காட்டிற்குச் சென்று தவம் புரிந்து, உடல் வற்றி உலர்ந்து, காய்ந்து சருகுபோல தானாக விழும்வரை உண்ணா நோன்பிருப்பது என்று உறுதி செய்து கொண்டார்.
இந்த எண்ணத்துடன் ஒரு காட்டிற்குள் நுழைந்து அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்த போது மயக்க நிலையில் மரம் ஒன்றின் கீழே சாய்ந்து பகவானைத் தியானிக்கலானார்.
சிறிது தியானம் கலைந்த போது...
ஆகா.. அதோ தெரியும் இரண்டு கனல் துண்டுகள்..
அவை.. சந்தேகமேயில்லை! புலியின் கண்கள் தாம்!
அதோ, அந்தக் கண்கள் நெருங்கி நெருங்கி வந்தன. இதோ வந்துவிட்டன!
சுவாமிஜியின் உடலும் சரி, உள்ளமும் சரி இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்த அந்த புலியும் ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது.
புலியை அன்புடன் நோக்கினார் சுவாமிஜி.
ஒரு வறட்டுச் சிரிப்பு அவரது முகத்தில் படர்ந்தது. சரிதான். என்னைப் போல் இந்தப் புலியும் பட்டினி கிடந்ததாகத் தெரிகிறது. இருவரும் பட்டினி. இந்த என் உடலால் உலகுக்கு எந்த நன்மையும் விளையுமென்று தோன்றவில்லை. இந்தப் புலிக்காவது பயன்படும் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டார். அமைதியாக, அசைவின்றி தம்மை மரத்தில் நன்றாகச் சாய்த்துக் கொண்டார். கண்களை மூடி, இதோ இப்போது புலி என் மீது பாயப் போகிறது என்று நினைத்தபடி அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயக் காணோம். சற்றே சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது சென்றுவிட்டிருந்தது. ஆகா! பரம்பொருள் தம்மை எப்படியெல்லாம் காத்து வருகிறார் என்பதை அகம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை அங்கேயே ஆத்ம சிந்தனையில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எதுவும் உடம்பில் இல்லை. உடம்பும் மனமும் ஒரு புது ஆற்றலைப் பொற்றது போல் இருந்தது. தமது யாத்திரையைத் தொடர்ந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீராமர் அனுப்பிய உணவு!
கோடைக்காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுயோ இல்லை என்பதைக் கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில் ரயில் நிற்கும் போதும் நன்றாகச் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக் கேலி செய்தான். கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதிய வேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் வெயிலில் தரையில் அமர்ந்தார்.
அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும்படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வரவழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். இத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், 'ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக் கூடாது? நன்றாகச் சம்பாதித்தால் வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே!' என்று வம்பு பேசினான்.
திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம். தண்ணீர், டம்பளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். 'சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள்' என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, வாருங்கள் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க' என்றான்.
சுவாமிஜி: 'இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்ததுகூட இல்லை.'
வந்தவன்: 'இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!'
சுவாமிஜி (வியப்புடன்): 'நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்?'
வந்தவன்: ' நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம் போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, "இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி, இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில்நிலையத்திற்குப் போ" என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியதுபோல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.'
இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்த அவனார் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓமோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் கூழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.
கோடைக்காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுயோ இல்லை என்பதைக் கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில் ரயில் நிற்கும் போதும் நன்றாகச் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக் கேலி செய்தான். கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதிய வேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் வெயிலில் தரையில் அமர்ந்தார்.
அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும்படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வரவழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். இத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், 'ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக் கூடாது? நன்றாகச் சம்பாதித்தால் வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே!' என்று வம்பு பேசினான்.
திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம். தண்ணீர், டம்பளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். 'சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள்' என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, வாருங்கள் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க' என்றான்.
சுவாமிஜி: 'இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்ததுகூட இல்லை.'
வந்தவன்: 'இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!'
சுவாமிஜி (வியப்புடன்): 'நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்?'
வந்தவன்: ' நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம் போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, "இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி, இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில்நிலையத்திற்குப் போ" என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியதுபோல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.'
இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்த அவனார் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓமோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் கூழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுவாமிஜி காட்டிய ஆன்மிகம்: பகுத்தறிவைப் பயன்படுத்துவாய்!
சுவாமிஜியுடன் சக பயணியாக ஒருசமயம் வந்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும் புத்திக் கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அற்புதங்களைப் பெரிதும் நம்புபவராக இருந்தார். சுவாமிஜி தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமிஜி அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமிஜி நிகழாத பல அற்புதங்களைத் தாராளமாக அவிழ்த்து விட்டார். மகாத்மாக்களான சித்தரக்ள் தம்மிடம் வந்ததாகவும், உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த யுகம் எப்போது முடியப் போகிறது, எப்போது பிரளயம் நிகழும் அடுத்த யுகம் பிறக்கும்போது எந்தெந்த சித்தர்கள் யார் யாராகப் பிறந்து எப்படி எப்படி மனித குலத்தை வழிநடத்தப் போகிறார்கள் என்றெல்லாம் சுவாமிஜி அளந்தார். அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமிஜியை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.
அப்போதெல்லாம் சுவாமிஜி கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. யாரேனும் டிக்கட் வாங்கிக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு பயணம் செய்வார். மற்றபடி, உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்ட வழியாகட்டும் என்று இருந்து வந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார். பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அந்த மனிதர் அறிவுக் கூர்மை, இதயம் இரண்டையும் பெற்றிருந்தார். ஆனால், இரண்டையும் கெடுத்தது அவருடைய மூட நம்பிக்கை. அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமிஜி அன்புடன் அவரிடம் கூறினார்....
இவ்வளவு படிப்பும் அறிவும் உள்ள நீர், நான் கூறிய இந்தக் கற்பனைக் கதைகளை எல்லாம் நம்புகிறீரே! நண்பரே, நீர் புத்திசாலி. உம்மைப் போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா? ஆன்மீகம் என்பது அற்புதமும், சித்து விளையாட்டுகளும் அல்ல நண்பரே. இவற்றில் நாட்டம் இருக்கும் வரை ஒருவன் ஆசைகளுக்கு அடிமையாகவும் சுயநலவாதியாகவும்தான் இருப்பான். நற்பண்பு நன்னடத்தை ஆகியவற்றில்தான் உண்மையான சக்தி இருக்கிறது. அந்த சக்தியைப் பெறுவதே ஆன்மீகம். வேகங்களையும் ஆசைகளையும் வெல்வதுதான் ஆன்மிகம். வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவாத சித்து விளையாட்டுக்களைத் துரத்திச் செல்வது நமது ஆற்றலை விரயம் செய்வதே தவிர வேறில்லை. அது மனத்தைக் கெடுக்கும். இந்த அபத்தம்தான் இன்று நாட்டின் நெறியைக் குலைத்து வருகிறது. நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலு வாய்ந்த பகுத்தறிவையும் பொது நல உணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றைய தேவை... என்றார் சுவாமிஜி.
சுவாமிஜியுடன் சக பயணியாக ஒருசமயம் வந்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும் புத்திக் கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அற்புதங்களைப் பெரிதும் நம்புபவராக இருந்தார். சுவாமிஜி தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமிஜி அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமிஜி நிகழாத பல அற்புதங்களைத் தாராளமாக அவிழ்த்து விட்டார். மகாத்மாக்களான சித்தரக்ள் தம்மிடம் வந்ததாகவும், உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த யுகம் எப்போது முடியப் போகிறது, எப்போது பிரளயம் நிகழும் அடுத்த யுகம் பிறக்கும்போது எந்தெந்த சித்தர்கள் யார் யாராகப் பிறந்து எப்படி எப்படி மனித குலத்தை வழிநடத்தப் போகிறார்கள் என்றெல்லாம் சுவாமிஜி அளந்தார். அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமிஜியை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.
அப்போதெல்லாம் சுவாமிஜி கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. யாரேனும் டிக்கட் வாங்கிக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு பயணம் செய்வார். மற்றபடி, உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்ட வழியாகட்டும் என்று இருந்து வந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார். பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அந்த மனிதர் அறிவுக் கூர்மை, இதயம் இரண்டையும் பெற்றிருந்தார். ஆனால், இரண்டையும் கெடுத்தது அவருடைய மூட நம்பிக்கை. அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமிஜி அன்புடன் அவரிடம் கூறினார்....
இவ்வளவு படிப்பும் அறிவும் உள்ள நீர், நான் கூறிய இந்தக் கற்பனைக் கதைகளை எல்லாம் நம்புகிறீரே! நண்பரே, நீர் புத்திசாலி. உம்மைப் போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா? ஆன்மீகம் என்பது அற்புதமும், சித்து விளையாட்டுகளும் அல்ல நண்பரே. இவற்றில் நாட்டம் இருக்கும் வரை ஒருவன் ஆசைகளுக்கு அடிமையாகவும் சுயநலவாதியாகவும்தான் இருப்பான். நற்பண்பு நன்னடத்தை ஆகியவற்றில்தான் உண்மையான சக்தி இருக்கிறது. அந்த சக்தியைப் பெறுவதே ஆன்மீகம். வேகங்களையும் ஆசைகளையும் வெல்வதுதான் ஆன்மிகம். வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவாத சித்து விளையாட்டுக்களைத் துரத்திச் செல்வது நமது ஆற்றலை விரயம் செய்வதே தவிர வேறில்லை. அது மனத்தைக் கெடுக்கும். இந்த அபத்தம்தான் இன்று நாட்டின் நெறியைக் குலைத்து வருகிறது. நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலு வாய்ந்த பகுத்தறிவையும் பொது நல உணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றைய தேவை... என்றார் சுவாமிஜி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்மையான தேசபக்தி எது?
ராமசுவாமி ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் அவர் பின்னாளில் எத்தகைய பணியைச் செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. தேச பக்கி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமாக ஒரு நம்பிக்கையா? இல்லை. உணர்ச்சியின் எழுச்சியா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேச பக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும் துன்பமும் ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது.
இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். "அவர்களின் தீவினை அது, அதனால் கஷ்டப்படுகிறார்கள்' என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள், கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லட்சோபலட்சம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேச பக்தி'.
இத்தகைய கருத்துக்களை சுவாமிஜி அங்கே பலரிடம் பேசினார். இந்தியா முழுவதையும் மாற்றியமைக்கும் வகையில் எத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் விஜயமும் அவர் சட்டம்பி சுவாமிகள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதும் கேரளம் பின்னாளில் கண்ட சமுதாயப் புரட்சிகளுக்கு ஒரு விதையாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்பது நாட்கள் திருவனந்தபுரத்தில் பழித்துவிட்டு, 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.
ராமசுவாமி ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் அவர் பின்னாளில் எத்தகைய பணியைச் செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. தேச பக்கி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமாக ஒரு நம்பிக்கையா? இல்லை. உணர்ச்சியின் எழுச்சியா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேச பக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும் துன்பமும் ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது.
இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். "அவர்களின் தீவினை அது, அதனால் கஷ்டப்படுகிறார்கள்' என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள், கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லட்சோபலட்சம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேச பக்தி'.
இத்தகைய கருத்துக்களை சுவாமிஜி அங்கே பலரிடம் பேசினார். இந்தியா முழுவதையும் மாற்றியமைக்கும் வகையில் எத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் விஜயமும் அவர் சட்டம்பி சுவாமிகள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதும் கேரளம் பின்னாளில் கண்ட சமுதாயப் புரட்சிகளுக்கு ஒரு விதையாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்பது நாட்கள் திருவனந்தபுரத்தில் பழித்துவிட்டு, 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'ஆற்றலை இறைவன் அளிப்பார்'
திருவனந்தபுரத்தில் பேராசியர் சுந்தரராம ஜயரின் இல்லத்தில் தங்கினார் சுவாமிஜி. சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அறிஞர்களும் மேதைகளும் சாதாரண மனிதர்ககளும் அவரைச் சந்திக்க வந்தனர். அவர் பேசிய ஒவ்வொன்றிலும் ஒரு தனி ஒளி இருந்ததைக் கண்டார் ஜயர். எனவே அவரிடம் ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு சுவாமிஜி தாம் இதுவரை மேடையில் பேசியதில்லை என்றும், அதற்கு முற்பட்டால் பிறரது கேலியும் தோல்வியுமே பலனாக இருக்கும் என்று கூறி மறுத்தார். ஐயர் விடவில்லை. அமெரிக்காவில் நடைபெறப் போகின்ற சர்வமத மகாசபையில் இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி கலந்து கொள்ள வேண்டும் என்று மைசூர் மன்னர் கேட்டுக் கொண்ட விஷயம் ஐயருக்குத் தெரிந்திருந்தது. எனவே அதனைக் கூறி, 'இந்த மேடைக்குத் தயங்குகின்ற நீங்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நேரடியாகப் பதில் கூறாத சுவாமிஜி, 'என்னைத் தமது கருவியாக்கிக் கொள்ள வேண்டும், நான் சில பணிகள் செய்ய வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டார் அதற்கான ஆற்றலையும் அவரே தந்தருள்வார்' என்றார்.
'அப்படி ஒருவனுக்குத் திடீரென்று அவர் ஆற்றலைக் கொடுப்பாரா, கொடுக்க முடியுமா?' என்று சந்தேகத்தை எழுப்பினார் ஐயர். அவ்வளதான், பொங்கி எழுந்தார் சுவாமிஜி. நீங்கள் பெயரளவிற்குத்தான் வைதீகர். உங்கள் தினசரி பூஜை, பாராயணம் அனைத்தும் உள்ளீடற்றவை. இதயத்தில் நம்பிக்கையே இன்றி இதையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள், இல்லாவிட்டார், வாழ்க்கையில் தேவையானவற்றை இறைவனால் கொடுக்க முடியும் என்பதைச் சந்தேகிப்பீர்களா?' என்று இடிபோல் முழங்கினார். 'சம்மட்டிபோல் இறங்கின அவரது சொற்கள்' என்று எழுதுகிறார் ஐயர்.
ஐயரின் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியிலிருந்து வருபவர்களும் சரி சுவாமிஜியைச் சந்திப்பதை ஒரு பேறாகவே கருதினர். ஒவ்வொருவரிடமும் அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து பேசுவது சுவாமிஜிக்குக் கைவந்த கலையாக இருந்தது. இதனால் அவரிடம் பழகுகின்ற ஒவ்வொருவரும் நிறைவு பெற்றனர். ஸ்பென்சர், ஷேக்ஸ்பியர், காளிதாசர், டார்பிவின் பரிணாம வாதம், யூதர் வரலாறு, ஆரிய நாகரீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று அவர் பேசிய துறைகள் ஏராளம். இங்கு தங்கிய சில நாட்களில் சுவாமிஜி சில தமிழ் வார்த்தகளையும் கற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரத்தில் பேராசியர் சுந்தரராம ஜயரின் இல்லத்தில் தங்கினார் சுவாமிஜி. சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அறிஞர்களும் மேதைகளும் சாதாரண மனிதர்ககளும் அவரைச் சந்திக்க வந்தனர். அவர் பேசிய ஒவ்வொன்றிலும் ஒரு தனி ஒளி இருந்ததைக் கண்டார் ஜயர். எனவே அவரிடம் ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு சுவாமிஜி தாம் இதுவரை மேடையில் பேசியதில்லை என்றும், அதற்கு முற்பட்டால் பிறரது கேலியும் தோல்வியுமே பலனாக இருக்கும் என்று கூறி மறுத்தார். ஐயர் விடவில்லை. அமெரிக்காவில் நடைபெறப் போகின்ற சர்வமத மகாசபையில் இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி கலந்து கொள்ள வேண்டும் என்று மைசூர் மன்னர் கேட்டுக் கொண்ட விஷயம் ஐயருக்குத் தெரிந்திருந்தது. எனவே அதனைக் கூறி, 'இந்த மேடைக்குத் தயங்குகின்ற நீங்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நேரடியாகப் பதில் கூறாத சுவாமிஜி, 'என்னைத் தமது கருவியாக்கிக் கொள்ள வேண்டும், நான் சில பணிகள் செய்ய வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டார் அதற்கான ஆற்றலையும் அவரே தந்தருள்வார்' என்றார்.
'அப்படி ஒருவனுக்குத் திடீரென்று அவர் ஆற்றலைக் கொடுப்பாரா, கொடுக்க முடியுமா?' என்று சந்தேகத்தை எழுப்பினார் ஐயர். அவ்வளதான், பொங்கி எழுந்தார் சுவாமிஜி. நீங்கள் பெயரளவிற்குத்தான் வைதீகர். உங்கள் தினசரி பூஜை, பாராயணம் அனைத்தும் உள்ளீடற்றவை. இதயத்தில் நம்பிக்கையே இன்றி இதையெல்லாம் நீங்கள் செய்கிறீர்கள், இல்லாவிட்டார், வாழ்க்கையில் தேவையானவற்றை இறைவனால் கொடுக்க முடியும் என்பதைச் சந்தேகிப்பீர்களா?' என்று இடிபோல் முழங்கினார். 'சம்மட்டிபோல் இறங்கின அவரது சொற்கள்' என்று எழுதுகிறார் ஐயர்.
ஐயரின் வீட்டில் உள்ளவர்களும் சரி, வெளியிலிருந்து வருபவர்களும் சரி சுவாமிஜியைச் சந்திப்பதை ஒரு பேறாகவே கருதினர். ஒவ்வொருவரிடமும் அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து பேசுவது சுவாமிஜிக்குக் கைவந்த கலையாக இருந்தது. இதனால் அவரிடம் பழகுகின்ற ஒவ்வொருவரும் நிறைவு பெற்றனர். ஸ்பென்சர், ஷேக்ஸ்பியர், காளிதாசர், டார்பிவின் பரிணாம வாதம், யூதர் வரலாறு, ஆரிய நாகரீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று அவர் பேசிய துறைகள் ஏராளம். இங்கு தங்கிய சில நாட்களில் சுவாமிஜி சில தமிழ் வார்த்தகளையும் கற்றுக் கொண்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேரளத்தில் சட்டம்பி சுவாமிகளுடன்!
கொச்சி மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்திற்குப் படகில் சென்றார் சுவாமிஜி. அது டிசம்பர் 1892. சந்துலால், ராமையர் என்ற இருவர் அவரை முதன்முதலாகச் சந்தித்தனர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர்கள் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
எர்ணாகுளத்திலுள்ள பலரும் அவரைக் காண வந்தனர். அந்த வேளையில் சட்டம்பி சுவாமிகளும் எர்ணாகுளத்தில் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையும் சாஸ்திர அறிவும் உடையவர் அவர். சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காண வந்த சட்டம்பி சுவாமிகள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு, சற்று தள்ளி நின்றே அவரைத் தரிசித்துவிட்டுச் சென்றார். பக்தர்களிடமிருந்து சட்டம்பி சுவாமிகளைப் பற்றி கேள்விப்பட்ட சுவாமிஜி, 'அவ்வளவு பெரிய மகானான அவர் என்னைத் தேடி வருவதா! நானே செல்கிறேன்' என்று கூறி அவரைக் காணச் சென்றார்.
சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி தெரியாததால் இருவரும் சம்ஸ்கிருதத்தில் பேசினர். தனிமையில் பேச வேண்டும் என்பதற்காக சுவாமிஜியை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று அங்கே அவருடன் பேசினார் சட்டம்பி சுவாமிகள். பிறகு பேச்சு சின்முத்திரையைப் பற்றி திரும்பியது. 'சின்முத்திரையின் பொருள் என்ன? என்று கேட்டார் சுவாமிஜி. சட்டம்பி சுவாமிகள் தமிழ் நூர்களை நன்கு கற்றவர். எனவே சின் முத்திரைக்கு அற்புதமான விளக்கம் அளித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து. அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, 'மிகவும் நல்லது' என்று இந்தியில் கூறினார்.
சுவாமிஜியின் குரலால் மிகவும் கவரப்பட்டார் சட்டம்பி சுவாமிகள். தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்றது அவரது குரல்! ஓ, என்ன இனிமை!' என்பார் அவர். சுவாமிஜியின் கண்களையும் வெகுவாகப் புகழ்ந்தார் அவர். சட்டம்பி சுவாமிகளும் அவரது மாணவரான நாராயண குருவும் சவாமிஜியி‘யை மிகவும் போற்றிப் பாராட்டினர். 'சுவாமிஜி பறவைகளின் அரசனாகிய கருடன் என்றால் நான் வெறும் ஒரு கொசு' என்றார் சட்டம்பி சுவாமிகள். ஆனால் சுவாமிஜி அசைவ உணவு சாப்பிடுவதை மட்டும் அவர்களார் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. 'அந்த ஒரு குறை மட்டும் இல்லையென்றால் அவர் ஒரு தெய்வீக மனிதர்தான்' என்பாராம் சட்டம்பி சுவாமிகள். சுவாமிஜியும் சட்டம்பி சுவாமிகளால் மிகவும் கவரப்பட்டார். 'நான் ஓர் உண்மையான மனிதரைக் கேரளத்தில் சந்தித்தேன் ' என்று தமது குறிப்பில் எழுதினார் அவர்.
கொச்சி மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்திற்குப் படகில் சென்றார் சுவாமிஜி. அது டிசம்பர் 1892. சந்துலால், ராமையர் என்ற இருவர் அவரை முதன்முதலாகச் சந்தித்தனர். சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்ட அவர்கள் அவரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
எர்ணாகுளத்திலுள்ள பலரும் அவரைக் காண வந்தனர். அந்த வேளையில் சட்டம்பி சுவாமிகளும் எர்ணாகுளத்தில் இருந்தார். சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமையும் சாஸ்திர அறிவும் உடையவர் அவர். சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காண வந்த சட்டம்பி சுவாமிகள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு, சற்று தள்ளி நின்றே அவரைத் தரிசித்துவிட்டுச் சென்றார். பக்தர்களிடமிருந்து சட்டம்பி சுவாமிகளைப் பற்றி கேள்விப்பட்ட சுவாமிஜி, 'அவ்வளவு பெரிய மகானான அவர் என்னைத் தேடி வருவதா! நானே செல்கிறேன்' என்று கூறி அவரைக் காணச் சென்றார்.
சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி தெரியாததால் இருவரும் சம்ஸ்கிருதத்தில் பேசினர். தனிமையில் பேச வேண்டும் என்பதற்காக சுவாமிஜியை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று அங்கே அவருடன் பேசினார் சட்டம்பி சுவாமிகள். பிறகு பேச்சு சின்முத்திரையைப் பற்றி திரும்பியது. 'சின்முத்திரையின் பொருள் என்ன? என்று கேட்டார் சுவாமிஜி. சட்டம்பி சுவாமிகள் தமிழ் நூர்களை நன்கு கற்றவர். எனவே சின் முத்திரைக்கு அற்புதமான விளக்கம் அளித்தார். சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து. அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, 'மிகவும் நல்லது' என்று இந்தியில் கூறினார்.
சுவாமிஜியின் குரலால் மிகவும் கவரப்பட்டார் சட்டம்பி சுவாமிகள். தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்றது அவரது குரல்! ஓ, என்ன இனிமை!' என்பார் அவர். சுவாமிஜியின் கண்களையும் வெகுவாகப் புகழ்ந்தார் அவர். சட்டம்பி சுவாமிகளும் அவரது மாணவரான நாராயண குருவும் சவாமிஜியி‘யை மிகவும் போற்றிப் பாராட்டினர். 'சுவாமிஜி பறவைகளின் அரசனாகிய கருடன் என்றால் நான் வெறும் ஒரு கொசு' என்றார் சட்டம்பி சுவாமிகள். ஆனால் சுவாமிஜி அசைவ உணவு சாப்பிடுவதை மட்டும் அவர்களார் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. 'அந்த ஒரு குறை மட்டும் இல்லையென்றால் அவர் ஒரு தெய்வீக மனிதர்தான்' என்பாராம் சட்டம்பி சுவாமிகள். சுவாமிஜியும் சட்டம்பி சுவாமிகளால் மிகவும் கவரப்பட்டார். 'நான் ஓர் உண்மையான மனிதரைக் கேரளத்தில் சந்தித்தேன் ' என்று தமது குறிப்பில் எழுதினார் அவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வட்டார வழக்கங்களை மீற விரும்பவில்லை
மைசூரில் இருந்து கொச்சிக்குப் புறப்படத் தயாரானார் சுவாமிஜி. அவருக்கு ஏராளம் பரிசுப் பொருட்கள் காணிக்கையாக அளிக்க விரும்பினார் மன்னர். ஆனால் சுவாமிஜி எதையும் ஏற்கவில்லை.
பின்னர் 'நீங்கள் எனக்கு ஏதாவது செய்தேயாக வேண்டும் என்றால் ரயில் பயணச்சீட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டார். அவ்வாறே இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கட் ஒன்றும் கொச்சி திவானான சங்கரய்யாவிற்கு ஒர் அறிமுகக் கடிதமும் கொடுத்தார் பிரதம மந்திரி. மைசூரிலிருந்து புறப்பட்டார் சுவாமிஜி.
அன்று கொச்சிக்கோ திருவாங்கூர் சமஸ்தானத்திற்கோ ரயில் வசதி கிடையாது. எனவே திருச்சூருக்குப் போக வெண்டுமானால் இருபத்தொரு மைல் தூரத்திலுள்ள ஷோனூர் வரை ரயிலில் சென்று, பிறகு வேறு ஏதாவது வழியில்தான் போக முடியும். சுவாமிஜி அந்த இருபத்தொரு மைல் தூரத்தை மாட்டு வண்டியில் கடந்தார். அவர் செல்லும் வழியில் சுப்பிரமணிய ஐயரின் வீடு இருந்தது. அவர் கொச்சி சமஸ்தானத்தின் கல்வி அதிகாரி. வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த அவரைக்கண்ட சுவாமிஜி அவரிடம், 'இங்கே குளிப்பதற்கான இடங்கள் உள்ளனவா?' என்று கேட்டார். சுவாமிஜியின் தோற்றத்திலும் வசீகரத்திலும் கட்டுண்ட ஐயர் அவர் குளிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்ததுடன், தமது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் அவர் தங்கவும் ஏற்பாடு செய்தார். அப்போது சுவாமிஜி தொண்டை வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார் ஜயர்.
திருச்சூரில் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி கொடுங்நல்லூருக்குச் சென்றார். அந்த இடம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியது. அங்குள்ள பகவதி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமிஜி அந்தக் கோயிலுக்குச் சென்ற போது அவரை உள்ளேவிட மறுத்து விட்டனர். கேரளத்திற்கு வெளியிலிருந்து வருகின்றன அவரது ஜாதி தெரியாத காரணத்தால் அவர் உள்ளே போகக் கூடாது என்று கோயில் அதிகாரிகள் கூறிவிட்டனர். சுவாமிஜி கோயிலின் அருகில் ஓர் ஆலமரத்தடியில் அமைதியாக அமர்ந்து தேவியை மனமார எண்ணி வழிபட்டார்.
சற்று நேரத்தில் கொடுங்ஙல்லூர் இளவரசர்களான கொச்சுண்ணித் தம்பிரானும், பட்டன் தம்பிரானும் கோயிலுக்கு வந்தனர். அவர்களை சுவாமிஜியிடம் அழைத்துச் சென்றான் ஓர் இளைஞன். இளவரசர்கள் இருவரும் சம்ஸ்கிருதம் மற்றும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் பல விஷயங்களை சமஸ்கிருதத்தில் பேசினார் சுவாமிஜி. தாம் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படாததன் காரணத்தையும் அவர்களிடமிருந்தே அறிந்தார் சுவாமிஜி. அவருடன் சிறிது நேரம் பேசியதிலிருந்தே அவரது ஆன்மீக உயர்வையும் சாஸ்திர அறிவையும் உணர்ந்து கொண்ட இளவரசர்கள் அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல விரும்பினர். ஆனால் தாம் வட்டார வழக்கங்களை மீற விரும்பவில்லை என்று கூறி சுவாமிஜி வெளியிலிருந்தே தேவியை வழிபட்டார்.
மைசூரில் இருந்து கொச்சிக்குப் புறப்படத் தயாரானார் சுவாமிஜி. அவருக்கு ஏராளம் பரிசுப் பொருட்கள் காணிக்கையாக அளிக்க விரும்பினார் மன்னர். ஆனால் சுவாமிஜி எதையும் ஏற்கவில்லை.
பின்னர் 'நீங்கள் எனக்கு ஏதாவது செய்தேயாக வேண்டும் என்றால் ரயில் பயணச்சீட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டார். அவ்வாறே இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கட் ஒன்றும் கொச்சி திவானான சங்கரய்யாவிற்கு ஒர் அறிமுகக் கடிதமும் கொடுத்தார் பிரதம மந்திரி. மைசூரிலிருந்து புறப்பட்டார் சுவாமிஜி.
அன்று கொச்சிக்கோ திருவாங்கூர் சமஸ்தானத்திற்கோ ரயில் வசதி கிடையாது. எனவே திருச்சூருக்குப் போக வெண்டுமானால் இருபத்தொரு மைல் தூரத்திலுள்ள ஷோனூர் வரை ரயிலில் சென்று, பிறகு வேறு ஏதாவது வழியில்தான் போக முடியும். சுவாமிஜி அந்த இருபத்தொரு மைல் தூரத்தை மாட்டு வண்டியில் கடந்தார். அவர் செல்லும் வழியில் சுப்பிரமணிய ஐயரின் வீடு இருந்தது. அவர் கொச்சி சமஸ்தானத்தின் கல்வி அதிகாரி. வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த அவரைக்கண்ட சுவாமிஜி அவரிடம், 'இங்கே குளிப்பதற்கான இடங்கள் உள்ளனவா?' என்று கேட்டார். சுவாமிஜியின் தோற்றத்திலும் வசீகரத்திலும் கட்டுண்ட ஐயர் அவர் குளிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்ததுடன், தமது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் அவர் தங்கவும் ஏற்பாடு செய்தார். அப்போது சுவாமிஜி தொண்டை வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார் ஜயர்.
திருச்சூரில் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி கொடுங்நல்லூருக்குச் சென்றார். அந்த இடம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியது. அங்குள்ள பகவதி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமிஜி அந்தக் கோயிலுக்குச் சென்ற போது அவரை உள்ளேவிட மறுத்து விட்டனர். கேரளத்திற்கு வெளியிலிருந்து வருகின்றன அவரது ஜாதி தெரியாத காரணத்தால் அவர் உள்ளே போகக் கூடாது என்று கோயில் அதிகாரிகள் கூறிவிட்டனர். சுவாமிஜி கோயிலின் அருகில் ஓர் ஆலமரத்தடியில் அமைதியாக அமர்ந்து தேவியை மனமார எண்ணி வழிபட்டார்.
சற்று நேரத்தில் கொடுங்ஙல்லூர் இளவரசர்களான கொச்சுண்ணித் தம்பிரானும், பட்டன் தம்பிரானும் கோயிலுக்கு வந்தனர். அவர்களை சுவாமிஜியிடம் அழைத்துச் சென்றான் ஓர் இளைஞன். இளவரசர்கள் இருவரும் சம்ஸ்கிருதம் மற்றும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் பல விஷயங்களை சமஸ்கிருதத்தில் பேசினார் சுவாமிஜி. தாம் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படாததன் காரணத்தையும் அவர்களிடமிருந்தே அறிந்தார் சுவாமிஜி. அவருடன் சிறிது நேரம் பேசியதிலிருந்தே அவரது ஆன்மீக உயர்வையும் சாஸ்திர அறிவையும் உணர்ந்து கொண்ட இளவரசர்கள் அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல விரும்பினர். ஆனால் தாம் வட்டார வழக்கங்களை மீற விரும்பவில்லை என்று கூறி சுவாமிஜி வெளியிலிருந்தே தேவியை வழிபட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைசூர் திவானின் உதவி!
மைசூர் திவான் சுவாமிஜிக்குப் பரிசுகள் தர விரும்பினார். ஒருநாள் அவர் தமது உதவியாளர் ஒருவரை சுவாமிஜியுடன் கடைவீதிக்கு அனுப்பி, அவர் என்ன விரும்பினாலும் வாங்கித் தருமாறு கூறினார். கடைக்குச் சென்ற சுவாமிஜி ஒரு சிறுவனின் குதூகலத்துடன் ஒவ்வொரு பொருளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார். பிறகு அந்த உதவியாளரிடம், 'உங்கள் திவான் கட்டாயமாக எனக்கு ஏதாவது தர விரும்பினால் இந்த ஊரில் உள்ள மிகச் சிறந்த சுருட்டு ஒன்றை வாங்கிக் கொடுங்கள். அதுபோதும்' என்று கூறிவிட்டார். அவ்வாறே கொடுத்த போது அதை ஆர்வத்துடன் புகைத்தார். அதன் விலை ஒரு ரூபாய்.
ஒருநாள் சுவாமிஜியும் பிரதம மந்திரியும் மன்னரைக் காணச் சென்றனர். அப்போது மன்னர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்களுக்காக நான் என்ன செய்யட்டும்?' என்று கேட்டார். சுவாமிஜி அதற்கு நேரடியான பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவர் கூறியதில் அவரது எதிர்காலத் திட்டத்தின் ஒரு சுருக்கமே இருந்தது. முதலில் இந்தியாவின் பெருமை, அதன் ஆன்மீக மகிமை போன்றவற்றை சுமார் ஒரு மணி நேரம் கூறினார். பிறகு மேலை விஞ்ஞானக் கருத்துக்களும், இயக்கரீதியாகப் பணி செய்வதுமே இந்தியாவின் அப்போதைய தேவை என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷம் மேலை நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். தாம் மேலை நாடு சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்தார் அவர்.
இறுதியாக, 'மன்னா, எனக்கு என்ன வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்! எனது தேவை இதுதான். மேலை நாடு நமக்கு உதவ வேண்டும். எப்படித் தெரியுமா? நமது பொருளாதார நிலைமையை உயர்த்துவதன் மூலம் நமக்கு உதவி செய்ய வேண்டும். நமது மக்களுக்கு நவீன விவசாயம், நவீன தொழில்நுட்பங்கள், நவீன விஞ்ஞானம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்' என்று கூறினார். சுவாமிஜியின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர், சுவாமிஜி மேலை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கான செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஏனோ அந்த உதவியை சுவாமிஜி உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
மைசூர் திவான் சுவாமிஜிக்குப் பரிசுகள் தர விரும்பினார். ஒருநாள் அவர் தமது உதவியாளர் ஒருவரை சுவாமிஜியுடன் கடைவீதிக்கு அனுப்பி, அவர் என்ன விரும்பினாலும் வாங்கித் தருமாறு கூறினார். கடைக்குச் சென்ற சுவாமிஜி ஒரு சிறுவனின் குதூகலத்துடன் ஒவ்வொரு பொருளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார். பிறகு அந்த உதவியாளரிடம், 'உங்கள் திவான் கட்டாயமாக எனக்கு ஏதாவது தர விரும்பினால் இந்த ஊரில் உள்ள மிகச் சிறந்த சுருட்டு ஒன்றை வாங்கிக் கொடுங்கள். அதுபோதும்' என்று கூறிவிட்டார். அவ்வாறே கொடுத்த போது அதை ஆர்வத்துடன் புகைத்தார். அதன் விலை ஒரு ரூபாய்.
ஒருநாள் சுவாமிஜியும் பிரதம மந்திரியும் மன்னரைக் காணச் சென்றனர். அப்போது மன்னர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்களுக்காக நான் என்ன செய்யட்டும்?' என்று கேட்டார். சுவாமிஜி அதற்கு நேரடியான பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவர் கூறியதில் அவரது எதிர்காலத் திட்டத்தின் ஒரு சுருக்கமே இருந்தது. முதலில் இந்தியாவின் பெருமை, அதன் ஆன்மீக மகிமை போன்றவற்றை சுமார் ஒரு மணி நேரம் கூறினார். பிறகு மேலை விஞ்ஞானக் கருத்துக்களும், இயக்கரீதியாகப் பணி செய்வதுமே இந்தியாவின் அப்போதைய தேவை என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷம் மேலை நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். தாம் மேலை நாடு சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்தார் அவர்.
இறுதியாக, 'மன்னா, எனக்கு என்ன வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்! எனது தேவை இதுதான். மேலை நாடு நமக்கு உதவ வேண்டும். எப்படித் தெரியுமா? நமது பொருளாதார நிலைமையை உயர்த்துவதன் மூலம் நமக்கு உதவி செய்ய வேண்டும். நமது மக்களுக்கு நவீன விவசாயம், நவீன தொழில்நுட்பங்கள், நவீன விஞ்ஞானம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்' என்று கூறினார். சுவாமிஜியின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர், சுவாமிஜி மேலை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கான செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஏனோ அந்த உதவியை சுவாமிஜி உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பலவீனங்களை நேரில் கூறினால் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்
மைசூர் மாகாண திவானான சேஷாத்ரி ஐயரின் விருந்தினராக மூன்று நான்கு வாரங்கள் தங்கினார் சுவாமிஜி. மைசூர் அரசவையின் முக்கியப் பிரமுகர்கள் பலரை அங்கே அவரால் சந்திக்க முடிந்தது.
சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவையும் உன்னதமான லட்சியங்களையும் கண்ட திவான் அவரை மைசூர் மன்னரான சாமராஜேந்திர உடையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்பிறகு சுவாமிஜி மைசூர் மன்னரின் விருந்தினராக அரண்மனையில் தங்கினார். சுவாமிஜியுடன் இயன்ற அளவு நேரத்தைச் செலவிட்டார் மன்னர்.
ஒருநாள் அரசவைப் பிரமுகர்கள் பலரது முன்னிலையில் மன்னரும் சுவாமிஜியும் பேசிக் கொண்டிருந்தனர்.
மன்னர்: 'மன்னா! நீங்கள் பரந்த இதயம் படைத்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மற்ற அரசவையினரைப் போன்றவர்கள் தான். அதாவது, அவர்களைப்பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.'
மன்னர்: 'ஆனால் மகாராஜா, திவான் என்றாலே மன்னனை வஞ்சித்து ஆங்கிலேயனுக்குப் பொருள் சேர்ப்பவர்தானே!
இதன்பிறகும் இந்த உரையாடலை நீட்டிக் கொண்டு போக விரும்பாத மன்னர் வேறு விஷயம்பற்றி பேசத் தொடங்கினார். பின்னர் சுவாமிஜியிடம் தனிமையில் இதுபற்றி கூறினார்.
மன்னர்: 'என் அன்பிற்குரிய சுவாமிஜி! வெளிப்படையாகப் பேசுவது சிலவேனைகளில் பிரச்சினையாகிவிடும். அரசவைப் பிரமுகர்களின் முன்னிலையிலேயே அவர்களைப்பற்றி இப்படிப் பேசினால் அவர்களில் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொல்லக்கூட துணிந்துவிடுவார்கள்.'
சுவாமிஜி: 'செய்யட்டும்! உயிர் போய்விடும் என்று பயந்து ஓர் உண்மையான சன்னியாசி சத்தியத்தைக் கைவிடுவானா? மகாராஜா! ஒரு வேளை உங்கள் மகனே நாளை என்னிடம் வந்து,"எ்ன அ்பபாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். உங்களிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருப்பதாகக்கூறி உங்களை ", "இந்திரன், சந்திரன்" என்று புகழ்வேனா என்ன! நான் பொய் சொல்வதா! அது ஒருபோதும் நடக்காது.'
உண்மை என்பதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவராக இருந்தார் சுவாமிஜி. இதற்காக, உண்மை என்ற பெயரில் பிறரது மனத்தைப் புண்படுத்துவதை அறவே வெறுத்தார் அவர். ஒருவரின் பலவீனத்தை அவர் முன்னிலையில் கூறுவதும், அவரது நற்பண்புகளை அவர் இல்லாதபோது புகழ்வதும் பெரியோர் இயல்பாகும். சுவாமிஜியிடம் அந்தப் பண்பு ஊறியிருந்தது. பின்னாளில் தமது சீடர்களிடம்கூட சுவாமிஜி இப்படியே நடந்து கொண்டார். பலவீனங்களை எடுத்துக் கூறுவதால் அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நற்பண்புகள் நேராகப் புகழ்ந்தால் ஆணவம் தலைதூக்க நேரும். எனவே அதனைத் தவிர்த்தார் சுவாமிஜி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|