புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
56 Posts - 46%
heezulia
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Baarushree
சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_m10சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பு மற்றும் முதலீடுகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 19, 2013 9:13 pm

First topic message reminder :

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்..

பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர்.
எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர். தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

2. காப்பீடு திட்டங்களை நாடலாம். உடல்நல காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏதாவது நோயால் அவதியுறும் போது இவ்வகை திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும். கூடுதலாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணத்தை போட்டால், பணத்தை திரும்பப் பெரும் திட்டத்தின் (money-back policy) மூலம் நிறைய பயனை அடையலாம். உதாரணமாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் திட்டத்தின் கீழ் 6 வருடங்களில் முதலீடானது இரட்டிப்பாக்கப்படும்.

3. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

4. நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

5. பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

6. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறந்த பயனை பெறலாம். ஆனால் நிபுணர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.

7. ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

8. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

9. வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

10. அஞ்சலகத்தில் உள்ள பல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு மொத்தமாக சேமித்த தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த, மாதா மாதம் அதற்கு வட்டி கிடைப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பணமும் திரும்பக் கிடைக்கும்.

11. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 23, 2013 11:52 pm

Aathira wrote:இங்க கடன்ல வண்டி ஓடிக்கிட்டு இருக்குங்கோ... பைத்தியம்


பயனுள்ள தொடர் பதிவு பாலாஜி. நன்றி நன்றி

உலக மகா நடிப்புடா சாமி

சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Kollywood-news-5536



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 12:25 am

Aathira wrote:இங்க கடன்ல வண்டி ஓடிக்கிட்டு இருக்குங்கோ... பைத்தியம்


பயனுள்ள தொடர் பதிவு பாலாஜி. நன்றி நன்றி
கடன் கொடுத்தவங்க உங்கள தேடி ஓடிட்டு இருக்காங்கன்னு சொல்லுங்க




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 12:34 am

நல்ல பகிர்வு பாலாஜி சூப்பருங்க




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 24, 2013 11:10 am

பாலாஜி wrote:
Aathira wrote:இங்க கடன்ல வண்டி ஓடிக்கிட்டு இருக்குங்கோ... பைத்தியம்


பயனுள்ள தொடர் பதிவு பாலாஜி. நன்றி நன்றி

உலக மகா நடிப்புடா சாமி

சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Kollywood-news-5536
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்த்தாதான் நம்புவீங்களோ... அய்யோ, நான் இல்லை



சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Tசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Hசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Iசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Rசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 24, 2013 11:12 am

யினியவன் wrote:
Aathira wrote:இங்க கடன்ல வண்டி ஓடிக்கிட்டு இருக்குங்கோ... பைத்தியம்


பயனுள்ள தொடர் பதிவு பாலாஜி. நன்றி நன்றி
கடன் கொடுத்தவங்க உங்கள தேடி ஓடிட்டு இருக்காங்கன்னு சொல்லுங்க
நாங்க அவங்க கண்ணுல படாம ஓடிக்கிட்டு இருக்கோம்..... படமாட்டோம்ல. ஜாலி



சேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Tசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Hசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Iசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Rசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Aசேமிப்பு மற்றும் முதலீடுகள் - Page 2 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 26, 2013 1:35 pm

மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்புத் திட்டம் இது தான்

சென்னை: மூத்த குடிமக்களின் நலன் காக்க இந்திய அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். ஆங்கிலத்தில் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்) என்று அழைக்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலமாக 60 வயதான ஒருவர் அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது ஒரு வங்கியிலோ தனது சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும். அவ்வாறு அவர் சேமிக்கும் தொகைக்கு பல்வேறு வங்கிகள் அதிகப்படியான வட்டியை வழங்குகின்றன. மேலும் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இந்த கணக்கை துவங்க 55 வயதை அடைந்திருக்க வேண்டும்.

எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 5 ஆண்டுகளைக் கொண்டது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேர்ந்து சேமித்து வரும் சேமிப்பில் ஒவ்வொரு காலாண்டிலும் அதற்கான வட்டி சேர்க்கப்படும். ஆனால் இந்த வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். குறிப்பாக பணத்தை எடுக்கும்போது அதிலிருந்து வட்டி கழிக்கப்படும்.

இந்த திட்டத்தின்படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

திட்ட காலம் முடியும் முன்பே பணத்தை எடுத்துக் கொள்ளலாம். எனினும் கணக்குத் தொடங்கி ஓராண்டு முடிந்த பின்பே பணத்தை எடுக்க முடியும். மேலும் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் குடியிருக்காத வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), இந்திய வம்சாவளியினர் (பிஐஒ) மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (எச்யுஎப்) இந்த திட்டத்தில் சேர முடியாது.

இந்த திட்டத்தில் வங்கிக் கணக்கை ஒரு வங்கிக் கிளையிலிருந்து வேறொரு கிளைக்கு மாற்ற அனுமதி உண்டு.

கணக்கைத் தொடங்குபவர் தன்னுடைய பினாமியாக ஒருவரையோ பலரையோ நியமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு வேளை அவர் இறக்கும் நிலையில் அவருடைய பினாமிகள் அந்த சேமிப்பு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் கணக்கைத் தொடங்கிய பின்பு அதன் முடிவு காலத்திற்கு முன் அவர் பினாமிகளை நியமிக்க வேண்டும்.

சேமிப்பு காலமான 5 ஆண்டுகள் முடிந்துவிட்டால் அந்த காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
அவ்வாறு நீட்டிக்கப்பட் மூன்றாண்டு காலத்தில் முதல் ஆண்டு முடிவடைந்தவுடன் ஒருவர் கணக்கை முடிக்க விரும்பினால் அவருடைய சேமிப்பிலிருந்து 1.5 சதவீத தொகைக் கழிக்கப்படும். இரண்டாம் ஆண்டு முடிவடைந்த நிலையில் அவர் கணக்கை முடிக்க விரும்பினால் 1 சதவீத பணம் கழிக்கப்படும்.

இந்த வங்கிக் கணக்கைத் தொடங்கியபின் தொடங்கியவர் வெளிநாடு வாழ் இந்தியராக மாறினால் சேமிப்பு முதிர்வு அடையும் வரை அவர் கணக்குத் தொடரும். ஆனால் இந்த கணக்கிற்கு நான் ரெசிடன்ட் அக்கவுண்ட் அதாவது இந்தியாவில் குடியிருக்காதவரின் கணக்கு என்று முத்திரை கொடுக்கப்படும்.

நம் வீட்டு முதியோர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். இதன் மூலம் அவர்கள் யாரையும் சார்ந்திராமல், தங்கள் சொந்த கால்களில் நிற்கலாம்.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 02, 2013 2:22 pm

பிபிஎஃப் கணக்கை ஏன் தொடங்க வேண்டும்?

சென்னை: பொது வருங்கால வைப்பு நிதி (பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கு வரியை சேமிக்கக்கூடிய ஒரு கருவியாகும். இந்த பிபிஎஃப் கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் இந்த முதலீட்டுக்கான வட்டிக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
ஒரு பிபிஎஃப் கணக்கை அஞ்சலகம் அல்லது ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் தொடங்கலாம். ஆன்லைன் மூலம் இந்த கணக்கைத் தொடங்க வேண்டும் என்றால் அதை ஐசிஐசி வங்கியில் தொடங்கலாம்.

பிபிஎஃப் கணக்கை எவ்வாறு துவங்குவது?
1. பிபிஎஃப் கணக்கைத் துவங்க குறைந்தது ரூ.500 தேவை. ரூ.500 என்பது மிகச் சிறிய தொகையே. எனவே மாத வருமானம் பெறும் எல்லோரும் இந்த கணக்கை மிக எளிதாக துவங்கலாம்.

2. வேலைக்கு சேர்ந்தவுடன் இந்த கணக்கைத் தொடங்கிவிட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம்.

3. பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது முதல் 6வது ஆண்டுக்குள் வங்கிக் கடன் பெறலாம்.

4. பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவர் சேமித்த பணம் மற்றும் அதன்
வட்டி ஆகியவை அவருடைய நாமினிக்கு வழங்கப்படும்.

5. பிபிஎஃப் கணக்கைத் துவங்கி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு கணக்கைத் தொடரலாம்.

6. மேலும் இந்த கணக்கில் பல தவணைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் வரி விலக்கு பெறும் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு 25 வயது ஆகிறது என்று எடுத்துக் கொள்வோம். இந்த வயதிலிருந்து நீங்கள் பிபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000ஐ 8.8 சதவீத வட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறீர்கள். முதலாண்டு முடிவில் நீங்கள் ரூ.10,860 பெறுவீர்கள். பின் இந்த ரூ.10,860 மீண்டும் முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு முதலீடு செய்து வந்தால் 15 ஆண்டுகள் கழித்து நீங்கள் மொத்தமாக ரூ.3,09,010 பெறுவீர்கள். நீங்கள் முதலீடு செய்த பணத்திலிருந்து பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. முதலீட்டுக்கும் வரி விலக்கு பெறலாம்.
நீங்களும் பிபிஎஃப் கணக்கைத் துவங்கலாமே!!!!

-thatstamizh




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 05, 2013 1:50 pm

அஞ்சலக சேமிப்பு திட்டங்களும், அதன் வகைகளும்

சென்னை: அஞ்சலகங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு உண்டு. மேலும் அஞ்சலகங்கள் வழங்கும் ஒரு சில சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வரி செலுத்தவும் வேண்டியதில்லை. அதோடு அஞ்சலகத்தில் தொடங்கும் கணக்குகளை வேறு வங்கிகளுக்கும் மிக எளிதாக மாற்ற முடியும்.

அஞ்சலகங்கள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள்

மன்த்லி இன்கம் ஸ்கீம்

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு உண்டு. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ஒரு சிறிய தொகையை வருமானமாக பெறலாம். குறிப்பாக, ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியோருக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் 5 ஆண்டுகள் கால வரையறை கொண்டது.

இந்த திட்டத்தில் ஒருவர் தனியாக கணக்குத் தொடங்கினால் குறைந்தபட்சமாக ரூ.1500ம், அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து கணக்குத் தொடங்கினால் குறைந்தபட்சமாக ரூ.1500ம் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டம், ஒருவருடைய அஞ்சலக வங்கி சேமிப்பு கணக்கிற்கு ஆட்டோமேட்டிக் கிரெடிட்டை உறுதி செய்கிறது.

அஞ்சலக டைம் டெபாசிட் (டிடி) ஸ்கீம்

இந்த திட்டத்தில் வயது வந்த ஒருவரோ அல்லது இருவரோ இணைந்து கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தின் காலம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு முதலாம் ஆண்டு காலாண்டில் 7.7 சதவீத வட்டியும், 2ம் ஆண்டு காலாண்டில் 7.8 சதவீத வட்டியும், 3ம் ஆண்டு காலாண்டில் 8.4 சதவீத வட்டியும், 4வது ஆண்டு காலாண்டில் 8.5 சதவீத வட்டியும் வழங்கப்படும். ஒரு வேளை முதலீட்டு தொகை 5 ஆண்டுகளை கடந்துவிட்டால், 1961ம் ஆண்டு வருமானவரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.

இந்த திட்டத்தில் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.200 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக நம்மால் முடிந்த அளவு முதலீடு செய்யலாம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு

இந்த சேமிப்பு கணக்கில் தனி நபர் சேரலாம். குழுக்களோ அல்லது நிறுவனங்களோ இந்த கணக்கைத் தொடங்க முடியாது. இந்த கணக்கில் சேமிக்கப்படும் சேமிப்புக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எனினும் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்

வருமான வரியைச் செலுத்த வேண்டியவர்களான அரசு ஊழியர்கள், வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத வருமானம் பெறுவோர் போன்றவர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக நம்மால் முடிந்த அளவு தொகையை முதலீடு செய்யலாம். மேலும் இதிலிருந்து பெறும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் வழங்கும் சான்றிதழைக் கொண்டு மிக எளிதாக வங்கிகளில் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்தால் அந்த தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவன் கீழ் வரி விலக்கு உண்டு.

அஞ்சலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள்

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்) அகௌண்ட்

60 வயதான எந்த ஒரு இந்தியரும் இந்த கணக்கைத் தொடங்கலாம். விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 55 வயது நிரம்பியவர்களும், ஓய்வு பெற்ற 3 மாதங்களுக்குள் இந்த கணக்கைத் தொடங்கலாம். அரசு பாதுகாப்பு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த கணக்கைத் தொடங்க வயது வரம்பு இல்லை.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் மன்த்லி இன்கம் ஸ்கீம் (எம்ஐஎஸ்) மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற திட்டங்கள் மூத்த குடிமகன்களுக்கு மிகவும் பலனளிக்கும் திட்டங்களாக இருக்கின்றன. மேற்கூறிய திட்டங்களில் இணைந்து, அதிலிருந்து வரும் வட்டியை, சேமிப்பு கணக்கின் மூலம் ரெக்கரிங் டெபாசிட் கணக்கிற்கு மாற்றினால் 10.5 சதவீத வட்டி பெறலாம்.

பப்ளிக் ப்ராவிடன்ட் பன்ட் (பிபிஎஃப்)

இந்த திட்டம் மாத வருமானம் வாங்குவோருக்கும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் ஏற்ற மிகச் சிறந்த திட்டமாகும். நீண்ட காலத்திற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 8.8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இதில் இருந்து வரும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 08, 2013 12:24 pm

தனி நபரா நீங்கள்?: நிதியை சேமிக்கும் வழிகளை தெரிஞ்சுக்கோங்க

சென்னை: நீங்கள் இளமையான தனி நபராக இருந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கை கவலையற்றதாகவும், நீங்கள் அதனை மிகவும் அனுபவித்தும் வாழ்ந்து வருகிறீர்கள்.

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகள் ஏதும் இல்லாததால் நீங்கள் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக செலவழிப்பதிலும், உயரிய வாழ்க்கை முறை வாழ்வதிலும், விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் பெருஞ்செலவு பிடிக்கின்ற விடுமுறைகள் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், உங்களின் கவலையற்ற இந்த நிகழ்காலம், தொலைநோக்குப் பார்வையுடன் நீண்டகால நிதித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலிருந்து உங்களை தடுக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. ஏனெனில் நாளை என்ன நேரும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. உங்கள் நிகழ்காலம் வளமாக இருப்பின், உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக்கக்கூடிய வகையில் திட்டமிட்டுக் கொள்ளுதல் புத்திசாலித்தனம்.

உங்கள் திட்டமிடுதல் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால், உங்கள் எதிர்காலம் நேர்மாறாகும் பட்சத்தில் இன்று நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைத் தரத்தில் எதையும் இழக்காதவாறு, உங்களுக்கு கை கொடுக்கும் வண்ணம் அமைய வேண்டும்.

நீங்கள் தனிநபராக இருப்பின், நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி பார்ப்போம்.

உங்களின் தற்போதைய நிலைமை:

நீங்கள் தற்போது உங்கள் இருபதுகளில் இருப்பதாகவும், உங்கள் சம்பள வளர்ச்சி ஒரு ஆண்டுக்கு 12 சதவீதம் உள்ளதாகவும் வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் 55வது வயதில் ஒய்வு பெறும்போது பணவீக்கம் ஆண்டுக்கு சுமார் 7 சதவீதமாக இருக்கும்.

இந்நிலையில், நீங்கள் செய்ய வேண்டியவை:

செலவழிக்க தயங்காதீர்கள்:

நன்றாக செலவழிக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கத் தயங்காதீர்கள். நன்றாக செலவழித்தால் தான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். உங்கள் மொத்த மாத சம்பளத்தில் 20 சதவீதம் உங்கள் மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் செலவிடலாம். பைக் பயணங்களை அனுபவியுங்கள்; புகைப்படம் எடுக்கச் செல்லுங்கள்; அல்லது நீங்கள் மிக விரும்பும் ஏதாவதொரு செயலைச் செய்யுங்கள்.

அபாயங்களை தவிர்க்காதீர்கள்:

நீங்கள் இளமையானவர்; இன்னும் உங்களுக்கு வயது உள்ளது. கடன் முதலீடு என்பது நேரம் குறைவாக உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கானது. உங்கள் அதிகபட்ச சேமிப்பு, பங்குகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பங்கு முதலீடு என்பது அபாயகரமானது தான் என்றாலும் காலப்போக்கில் அதிக லாபம் ஈட்டக்கூடியது. நீங்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்தால், அது உங்கள் எதிர்காலம் முழுமைக்குமான நிதித்தேவையை ஈடு செய்யும். இதன் உச்ச விதி என்னவெனில், 100-லிருந்து உங்கள் வயதை கழித்தால் கிடைக்கும் எண்ணின் அளவுக்கான சதவீதத்தை உங்கள் சம்பாத்தியத்திலிருந்து பங்குகளுக்கு ஒதுக்கவும்.

ரொக்கத்துடன் இருங்கள்:

உலகம் மீண்டும் பொருளியல் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, நீங்கள் வேலையை இழக்க நேரிடுகிறது. இப்போதுள்ள நிலையற்ற சந்தையில், எந்த வேலைக்கும் உத்தரவாதம் கிடையாது. எப்போழுதும் ரொக்க நிதியுடன் இருங்கள். அப்போது தான், அடுத்த ஆறு மாதத்திற்கு நீங்கள் ஒரு பைசா சம்பாதிக்காவிட்டாலும், உங்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் - செய்யக் கூடாதவை:

அதிகமாக செலவழிக்காதீர்கள்:

செலவழிப்பது நல்லது தான். ஆனால் கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வது தவறு. உங்கள் வரையறைக்குட்பட்டு செலவழியுங்கள். உங்கள் நிதியாண்மை தொடர்பான எல்லா தவணைகளையும் கட்டிய பின்னரும், உங்களால் ஒவ்வொரு மாதமும் செலுத்தக்கூடிய அளவில் உள்ள கடன் அட்டை ரசீதுத் தொகை தான் உங்கள் வரையறை என்பது.

தவணைத் தொகையை அதிகரித்துக் கொள்ளாதீர்கள்:

நீண்ட கால கடன் திட்டத்தில், உங்கள் தகுதிக்கும் மீறி முதலீடு செய்யாதீர்கள். ஒரு கார் மற்றும் ஒரு வீட்டுக்கான தவணை மட்டுமே போதுமானது. இன்னொரு வீட்டை தவணை முறையில் வாங்குவதென்பது தகுந்த யோசனை அல்ல. வேலை இல்லாத நிலைமை உருவானால் எவ்வாறு தவணைத் தொகையை செலுத்த முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

வருங்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்:

ஒரு நாள் நீங்கள் தனிநபர் அந்தஸ்திலிருந்தும், கடமைகளற்ற நிலையிலிருந்தும் வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த சமயத்தில் கை கொடுக்கும் வகையில், முன்யோசனையோடு திட்டமிட வேண்டும். உங்களுக்கு திருமணமாகி, உங்களுக்கென ஒரு குடும்பம் உருவாகும் காலகட்டத்தை குத்துமதிப்பாக மதிப்பிடுங்கள். உங்கள் திருமணத்தின்போதும், அதற்குப் பின் குழந்தையின் படிப்புச் செலவிற்கும், அதிகமான நிதி தேவைப்படும். நீங்கள் இந்நிதித் தேவைக்கேற்ப முன்னரே திட்டமிடவில்லையென்றால், அந்தச் சமயத்தில் நீங்கள் பெரிதும் கஷ்டப்பட நேரிடும். இந்த வருங்காலத் தேவைகளுக்குத் தக்கவாறு நிதியை சேர்த்து வைப்பது அவசியம். இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை; ஏனெனில், அது உங்கள் கைகளில் தான் உள்ளது.

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 1:02 pm

திட்டங்கள் பகிர்வு சூப்பருங்க பாலாஜி

கொஞ்சம் பணத்தையும் பகிர்ந்தா பயன்படுத்தி சொல்ல ஏதுவா இருக்கும் - ஹி ஹி




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக