புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
26 Posts - 43%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
Jenila
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Jenila
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 23, 2015 8:15 am

தமிழ் விடுதூது ஒரு தமிழ் சிற்றிலக்கிய நூல். தூது வகையைச் சேர்ந்தது. மதுரை சொக்கநாதர் (சிவன்) மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தமிழை அவர்பால் தூதாக அனுப்புவது போலப் பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடிய புலவர் பெயர் தெரியப்படவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் இருந்து தமிழ்ப்பற்றும், சைவ சமயப் பற்றும் உடையவர் என்பது மட்டும் புலனாகுகிறது. இந்த நூலைப் முதலில் அச்சில் வெளியிட்டவர் உ. வே. சாமிநாதையர். மொத்தம் 268 கலிவெண்பா பாக்கள் உள்ள இந்நூலில் மதுரையில் நடைபெற்ற சிவனது திருவிளையாடல் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

தமிழ்விடு தூதுவில் இடம்பெற்றுள்ள 268 கலி வெண்பாக்களுள் இதுவும் ஒன்று . டாக்டர் உ .வே .சாமிநாத ஐயருக்கு மிகவும் பிடித்தமான வரிகள் இவை .

பொருள் :
=======
தமிழ் மொழியே ! உன்னால்தான் நான் வாழ்ந்து வருகிறேன் . தேவர்கள் உண்ணுகின்ற அமிழ்தம் கிடைத்தாலும் , அதை நான் விரும்பமாட்டேன் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 23, 2015 8:18 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
==========================
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 23, 2015 10:25 am

பயனுள்ள்ள திரியைத் தொடர்தமைக்கு மிக்க நன்றி.

தாங்கள் குறிப்பிட்ட வரிகள் எட்டாம் திருமுறை, மாணிக்கவாசகர் தில்லையில் அருளிய போற்றித்திருஅகவல் இருந்து எடுத்தது..

குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 165

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 23, 2015 10:25 am

பயனுள்ள்ள திரியைத் தொடர்தமைக்கு மிக்க நன்றி.

தாங்கள் குறிப்பிட்ட வரிகள் எட்டாம் திருமுறை, மாணிக்கவாசகர் தில்லையில் அருளிய போற்றித்திருஅகவல் இருந்து எடுத்தது..

குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 165

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 23, 2015 10:28 am

சரியான விடையளித்த திரு சதாசிவம் அவர்களுக்கு மிக்க நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 23, 2015 10:44 am

இனி அடுத்த நுனிப் புல்லை மேய்வோமா !

இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
========================

கல்லாதான் கற்ற கவி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 10:46 am


மாணிக்கவாசகரால் பாடப்பட்டு இறைவனால்
எழுதப்பட்டது என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு நூல்.
திருவாசகம்
-
“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும்
உருகார்” என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று அல்ல
என்பதினை இந்நூலினைப் படித்தோர் அறிவர்.”
-
இந்நூலில்தான் மாணிக்கவாசகர்
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
என்கிறார்
-
எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும்,
இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக்
கூறுகின்றார் மாணிக்கவாசகர்
-
அவர் அவ்வாறு சொல்ல வேண்டியக் காரணம் என்ன?
-
மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும்
சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக
உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி
இருக்கின்றார்.
-
‘தென்னவனின் நாடா???”
-
சற்று விளக்கமாகப் பார்ப்போம். இங்கே தான் மொழி
அறிஞர்கள் நம் உதவிக்கு வருகின்றார்கள்.
-
தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும்.
பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை
ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால்
‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
-
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால்
ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த
நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர்
கூறுகின்றார்.
-
“பழைய நாடா???” - பாண்டியன் மதுரையை அல்லவா
ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும்
மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த
இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின.
அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர்
‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த
குமரிக்கண்டத்தையேதான்.
-
ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’
என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
-
ஏனெனில், இறைவன் மனிதனை முதன் முதலில்
படைத்தது இக்கண்டத்திலேயே தான்.
-
ஏன் இறைவனைப் பற்றிய எழுச்சி தமிழகத்தில் தமிழில்
எழுந்தது?
-
ஏனெனில், உலகின் முதல் மனிதன் தமிழன். அவன்
இறைவனிடம் பேசிய மொழி தமிழ்!!! இவை தான் அந்தக்
கேள்விகளுக்கு பதில்…
-
------------------

நன்றி--இணையம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 5:32 pm

இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
========================

கல்லாதான் கற்ற கவி





ஔவையாரின் மூதுரை விளக்கம் – 14
=====================================

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

விளக்கம்.
============

நூல்களைப் படிக்காதவன், மற்றவர்கள் படிக்கும் போது அதைப் பார்த்து அரை குறையாகக் கற்றுக்கொண்டு பாட்டைப் பாடுவது, காட்டிலே மயிலானது தனது அழகிய தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்க , அதைப்பார்த்துக் கொண்டு பக்கத்திலேயிருந்த வான்கோழியானது தன்னையும் அம்மயில் என நினைத்துத் தன்னுடைய விகாரமான இறக்கைகளைப் பரப்பி ஆடினதை ஒக்கும்.

(கருத்து – கல்வியறிவில்லாதவன் கற்றவர்களைப் போல் நடிப்பது கூடாது என்பதாம்)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 5:36 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !
==========================================

செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 26, 2015 10:37 am

நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது!   அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? இதோ பாடல்….

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்

குறிஞ்சித்திணைப் பாடல்

கருத்துரை:

என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)

சொல்பொருள் விளக்கம்:

யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும்- நீயும் நானும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் .

பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே

Sponsored content

PostSponsored content



Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக