புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழே... அமுதே... - Page 3 Poll_c10தமிழே... அமுதே... - Page 3 Poll_m10தமிழே... அமுதே... - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே... அமுதே...


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 4:47 pm

First topic message reminder :

1. இலை

தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...

ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.

அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?

பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!

கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.

அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.

சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!

இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...

என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 10:59 am

6. பானை (மண் கலங்கள்)


"அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?"

என ஆடுகளம் திரைப்படத்தில் டாப்ஸீயைப் பார்த்து தனுஷ் பாடும் போது; டாப்ஸீயைப் போட்டு வெளுக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய பானை இருக்குமா? என யோசிக்க தோன்றுகிறது நம்முடைய முதுமக்கள் தாழியெல்லாம் நினைவுக்கு வருகிறது.

பானைகளை பற்றி ஆராய்ச்சி செய்த தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ப. அருளி, நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற - வழங்கப்பெறும்) பானை வகைகளிலில் சிலவற்றை குறிப்பிடுகிறார்.

1. அஃகப் பானை - தவசம் (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13. ஓதப் பானை - ஈரப் பானை
14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடித்தற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும், நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
22. கரிப் பானை - கரி பிடித்த பானை
23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிறம் வாய்ந்த பானை
24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (கொச்சை வழக்கில் கழுனிப் பானை எனப் பெறுகின்றது)
27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (கொச்சை வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும், கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37. சவப் பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
42. சோற்றுப் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை
43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
44. சின்ன பானை - சிறிய பானை
45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை
46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற் கேற்றவாறு உருவமைந்த பானை
52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
54. படரப் பானை - அகற்ற பெரிய பானை
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59. மடைக் கலப் பானை - திருமண வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60. மிண்டப் பானை - பெரிய பானை
61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை
63. முடலைப் பானை - உருண்டை யுருவப் பானை
64. முரகுப் பானை - பெரிய பானை - திரண்டு உருண்ட பானை
65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68. வழைப் பானை - வழ வழப்பார்ந்த புதுப்பானை
69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:03 am

அம்மாடியோவ் இம்பூட்டு பானை வகைகளா? தமிழ் அழகு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 11:11 am

அசுரன் wrote:அம்மாடியோவ் இம்பூட்டு பானை வகைகளா? தமிழ் அழகு

நன்றி தலைவா.... மேலும் தொடர்வேன் ..........



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:13 am

dsudhanandan wrote:
அசுரன் wrote:அம்மாடியோவ் இம்பூட்டு பானை வகைகளா? தமிழ் அழகு

நன்றி தலைவா.... மேலும் தொடர்வேன் ..........
காத்திருக்கிறோம் (றேன்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 11:14 am

69 பானை வகைகளா? ஆயகலைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளதே! அறியத் தந்தமைக்கு நன்றி சுதா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 22, 2011 2:14 pm

7. ஆண்டு விழா பெயர்கள்

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 23, 2011 3:43 pm

8. நீர் நிலைகள்

வெயில் காலம் தொடங்கி விட்டது... தண்ணீர் குறைபாடும், தண்ணீர் சிக்கனமும் கண்டிப்பாகிவிட்டது. தண்ணீரை எப்படி சேமிப்பது? என்றெல்லாம் யோசிக்கும் காலம் இது. அப்ப, நீர் நிலைகளைப் பற்றி தமிழ் என்னதாஞ் சொல்லுதுன்னு பார்க்கலாமா....

1. அகழி (Moat) : கோட்டைக்கு வெளில அகழ்ந்தமைச்சிருக்குற நீர் அரண்
2. அணை, அணைக்கட்டு (Dam) : ஆற்றின் குறுக்கே அணைத்துக் கட்டப்பட்ட நீர்நிலை
3. அருவி (Water fall) : மலைமுகட்டுல இருக்குற தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது
4. ஆழிக்கிணறு (Well in shore) : கடலருகே இருக்கும் கிணறு
5. ஆறு (River) : அறுத்துக் கொண்டு பெருகி ஓடுவது
6. இலஞ்சி (Reservoir for drinking) : குடிதண்ணீர்த் தேக்கம்
7. உறை கிணறு (Ring well) : மணலில் தோண்டி, சுடுமண் வளையமிட்ட கிணறு
8. ஊருணி (Drinking water tank) : பருகுநீர் உள்ள நீர்நிலை
9. ஊற்று (Spring) : நிலத்தடியிலிருந்து நீர் ஊறி வரும் நிலை
10. ஏரி (Irrigation Tank / Lake): வேளாண்மைக்கு உதவும் நீர் நிலை
11. ஓடை (Brook) : ஊற்றெடுத்து ஓடி வரும் வாய்க்கால்
12. கட்டுக்கிணறு (Built-in-well) : அகச்சுவர் கட்டியெழுப்பிய கிணறு
13. கடல் (Sea) : பரவை என்றும் சொல்லப்படும் பெரும் நீர் நிலை
14. கம்வாய் / கண்மாய் (Irrigation Tank): ஏரிக்கு தென் மாவட்டங்களில் சொல்லப்படுவது
15. கலிங்கு (Sluice with many vent ways): தேக்கம் உடைப்பெடுக்காமல் இருக்கக் கட்டப்படும் கடைவாய் நீர் வெளி
16. கால் (Channel) : நீரோடும் வழி
17. கால்வாய் (Supply channel to a tank): ஏரி, குளம், ஊருணிக்கு நீர் கொண்டு செல்லும் வழி
18. குட்டம் (Large pond): பெருங்குட்டை
19. குட்டை(Small Pond): சிறுகுட்டை
20. குண்டம் (Small pool): சிறு குளிக்கும் நீர் நிலை
21. குண்டு (Pool) : சிறுகுழியான நீர் நிலை
22. குமிழி (Rock cutwell) : நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச் செய்த நீர் நிலை
23. குமிழி ஊற்று (Artesian fountain) : அடியிலிருந்து கொப்புளித்து வரும் நீர் நிலை
24. குளம் (Bathing Tank) : ஊரார் குளிக்கப் புழங்கும் நீர் நிலை
25. கூவம் (Abnormal tank) : ஒழுங்கில் அமையாத நீர்நிலை
26. கூவல் (Hollow) : ஆழமற்ற, கிணறு போனறதொரு பள்ளம்
27. கேணி (Large Well) : பெருங்கிணறு
28. சிறை (Reservoir) : தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை (Mountain Pool) : மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை
30. சேங்கை (Tank with duck weed) : பாசிக் கொடி மண்டிய குளம்
31. தடாகம், தடம் (Beautiful bathing tank) : அழகுற அமைக்கப்பட்ட குளம்
32. தளிக்குளம் (Tank sorrounding a temple) : கோவிலின் நாற்புறமும் சூழ்ந்த அகழி போன்றதொரு நீர் நிலை
33. தாங்கல் (Irrigationtank) : தமிழகத்தின் ஒரு பகுதியில் ஏரியின் மறு பெயர்
34. திருக்குளம் (Temple tank): ’புட்கரணி’ எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். கோவிலுக்கு அணித்தாகிய குளம்.
35. தெப்பக்குளம் (Temple tank along with parapet walls) : மக்கள் காண்பதற்கேற்ப உள்ள கோயிற்குளம்.
36. தொடுகிணறு (Digwell) : ஆற்றின் ஊடகத் தோண்டிய கிணறு
37. நடைகேணி (Large well with steps) : நடந்து சென்று தண்ணீர் எடுக்கக் கூடிய கிணறு
38. பிள்ளைக்கிணறு (Well in middle of lake) : குளம், ஏரி போன்றவற்றின் உள்ளமைந்த கிணறு
39. பொங்குகிணறு (Well with bubbling spring) : கொப்புளித்து ஊற்றெடுக்கும் கிணறு
40. பொய்கை (Nature Lake): தாமரை முதலிய மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர் நிலை
41. மடு (Deep place in a river): ஆற்றினிடையே உள்ள ஏதமான ஆழ் பகுதி
42. மடை(Small sluice with single ventway): ஒரு கண்ணுடைய சிறுமதகு
43. மதகு (Slice with many ventways): அடைப்புத் திறப்பு கொண்ட பல கண்களாய் அமைந்த மடை
44. மறுகால் (Surplus water channel): மிகைநீர் கழிக்கக் கூடிய கால்வாய்
45. வலயம் (Round tank): வட்டமாய் அமைந்த குளம்
46. வாய்க்கால் (Small water course): ஏரியிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறு கால்
47. வாவி (Stream): ஆற்று, ஊற்று நீர் வழிந்தோடு நிலை, நீரோடி
48. புனற்குளம் (Tank of rain water): அகத்தில், மழைநீரால் நிரம்பியுள்ள நீர்நிலை
49. பூட்டைக்கிணறு(Well with water lift): பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 23, 2011 6:54 pm

9. நீர் நிலைகள் (தொடர்ச்சி)

மேற் குறிப்பிட்டன தவிர நீர்நிலையைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள்:

1. அருநிலை
2. அலந்தை
3. இலந்தை
4. உடுவை
5. உவளகம்
6. உவன்றி
7. ஏல்வை
8. கயம்
9. குடா
10. குழி
11. கொண்டம்
12. பள்ளம்
13. கோட்டகம்
14. சரசு
15. சலதரம்
16. சலாசயம்
17. சித்தேரி
18. சுண்டை
19. சூழி
20. தட்டம்
21. தாங்கல்
22. பயம்பு
23. வாரி
24. ஓருமம்

---- இந்த சொற்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பனவாதலால், மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 25, 2011 12:58 pm

10. பைய எனும் சொல்....

நெல்லையைச் சார்ந்த ஒருவர் சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்யும்போது பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.

நடத்துனர்: சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன்...
நெல்லைக்காரர்: ”பையக் கொடுங்க”
நடத்துனர்: ஏய்யா, நாந்தான் அப்புறம் தரேன் என்று சொன்னேனே... உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே?

இதை நாம் நகைச்சுவையாக கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.... ஆனால் பைய என்பது "மெதுவாக / பிறகு" என பொருள்படும் ஒரு தூய தமிழ்ச் சொல்.

”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய, பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”

என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது.

ஆனால் இப்போது இத்தகைய சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால் நம்மை வினோதமாக பார்க்கிறார்கள்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 1:10 pm

மிகவும் அருமை! தமிழில் அறியாத விடயங்கள் இவ்வளவு உள்ளனவா என வியக்க வைக்கிறது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக