புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
Page 16 of 32 •
Page 16 of 32 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 32
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அல்லல் பட வைத்த அவசர பயணம்!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்களை ஏற்றிச் செல்ல வழக்கமாக கம்பெனி பஸ் வரும். அன்று அந்த நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பஸ் கிளம்பியது.
அப்போதுதான் என்னுடன் பணிபுரியும் ராஜேஷ் பஸ்சுக்குப் பின்னால் ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் நான் டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன். டிரைவரோ `சார், ஏற்கனவே நான் அடிக்கடி லேட்டா வரேன்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. நீங்க வேறு இன்னும் லேட் பண்ண வைக்கிறீங்க` என்று அலுப்புடன் நிறுத்தினார்.
பஸ்சில் ஏறிய ராஜேஷ், அதே வேகத்தில் கையில் வைத்திருந்த இரண்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் ஒன்றை அங்கிருந்த குப்பை மேட்டில் அவசர அவசரமாக வீசினார். பஸ் கொஞ்சதூரம் சென்றிருக்கும். திடீரென ராஜேஷ் "அய்யய்யோ'' என்று அலறினார், என்னவென்று பார்த்தபோது "தவறுதலா பையை மாற்றி குப்பை மேட்டில் வீசி விட்டேன். அதில் வீட்டுச்சாவி, பணம், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, இன்னும் சில முக்கிய பொருட்கள் உள்ளன. வண்டியை நிறுத்துங்கள்'' என்று அழாத குறையாக கெஞ்சினார்.
ஆனால் டிரைவர் கண்டு கொள்ளவே இல்லை. நிலைமையை புரிந்து கொண்ட மற்றவர்கள் அனைவரும் பஸ்ஸை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் பஸ்ஸை திரும்பவும் ராஜேஷ் ஏறிய இடத்திற்கே கொண்டு வந்தார்.
எங்கள் பஸ் வருவதற்கும் குப்பைலாரி வருவதற்கும் சரியாக இருந்தது. கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் எல்லாம் அம்போ தான், நல்ல வேளையாக பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்குபவரும் அந்த நேரத்தில் வரவில்லை. ராஜேஷ் பை கிடைத்துவிட்டது. லேட்டாக ஆபீஸ் போனாலும் நிம்மதியாக போய்ச் சேர்ந்தோம்.
வாழ்க்கையே அவசர கதியாகி விட்டது. அதனால் நாம் என்ன செய்கிறோம் என்று அறியாமலே பல தவறுகள் நேர்ந்து அல்லல்படுகிறோம். கொஞ்ச நேரம் முன்னதாக கிளம்பினால் இத்தகைய அல்லல்களை தவிர்க்கலாமே!
என்.வி.சுப்பிரமணியன், ஜாகீர் அம்மா பாளையம்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்களை ஏற்றிச் செல்ல வழக்கமாக கம்பெனி பஸ் வரும். அன்று அந்த நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பஸ் கிளம்பியது.
அப்போதுதான் என்னுடன் பணிபுரியும் ராஜேஷ் பஸ்சுக்குப் பின்னால் ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் நான் டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன். டிரைவரோ `சார், ஏற்கனவே நான் அடிக்கடி லேட்டா வரேன்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. நீங்க வேறு இன்னும் லேட் பண்ண வைக்கிறீங்க` என்று அலுப்புடன் நிறுத்தினார்.
பஸ்சில் ஏறிய ராஜேஷ், அதே வேகத்தில் கையில் வைத்திருந்த இரண்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் ஒன்றை அங்கிருந்த குப்பை மேட்டில் அவசர அவசரமாக வீசினார். பஸ் கொஞ்சதூரம் சென்றிருக்கும். திடீரென ராஜேஷ் "அய்யய்யோ'' என்று அலறினார், என்னவென்று பார்த்தபோது "தவறுதலா பையை மாற்றி குப்பை மேட்டில் வீசி விட்டேன். அதில் வீட்டுச்சாவி, பணம், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, இன்னும் சில முக்கிய பொருட்கள் உள்ளன. வண்டியை நிறுத்துங்கள்'' என்று அழாத குறையாக கெஞ்சினார்.
ஆனால் டிரைவர் கண்டு கொள்ளவே இல்லை. நிலைமையை புரிந்து கொண்ட மற்றவர்கள் அனைவரும் பஸ்ஸை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் பஸ்ஸை திரும்பவும் ராஜேஷ் ஏறிய இடத்திற்கே கொண்டு வந்தார்.
எங்கள் பஸ் வருவதற்கும் குப்பைலாரி வருவதற்கும் சரியாக இருந்தது. கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் எல்லாம் அம்போ தான், நல்ல வேளையாக பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்குபவரும் அந்த நேரத்தில் வரவில்லை. ராஜேஷ் பை கிடைத்துவிட்டது. லேட்டாக ஆபீஸ் போனாலும் நிம்மதியாக போய்ச் சேர்ந்தோம்.
வாழ்க்கையே அவசர கதியாகி விட்டது. அதனால் நாம் என்ன செய்கிறோம் என்று அறியாமலே பல தவறுகள் நேர்ந்து அல்லல்படுகிறோம். கொஞ்ச நேரம் முன்னதாக கிளம்பினால் இத்தகைய அல்லல்களை தவிர்க்கலாமே!
என்.வி.சுப்பிரமணியன், ஜாகீர் அம்மா பாளையம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆலோசனை கூறி அழ வைக்காதீர்கள்!
என் சகோதரிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக அவள் வீட்டைவிட்டு வெளியே வருவதேயில்லை.
உறவினர்கள் வீட்டில் நடைபெறும் எந்த விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டாள். அதனால் என் சகோதரியை நான் கோபமாக திட்டி விட்டேன். `நாம நாலு பேரோட விசேஷத்துக்கு போனாதானே, நம்ம விசேஷத்துக்கு நாலு சொந்தக்காரங்க வருவாங்க' என்று காரணம் சொன்னேன்.
நான் திட்டியதும் அழுதுவிட்ட என் சகோதரி, தான் மற்றவர் வீட்டு விசேஷங்களுக்கு வராததற்கு காரணம் சொன்னபோது எனக்கே கஷ்டமாகி விட்டது.
`எந்த விசேஷத்திற்கு போனாலும் குழந்தை இல்லையா, குழந்தை இல்லையா? என்று கேட்டு மனதை நோகடிக்கிறார்களாம். அதோடு நிறுத்தாமல் ஏகப்பட்ட வைத்தியங்கள் வேறு சொல்கிறார்களாம். சில வைத்திய முறைகள் படுமோசமானதாக உள்ளதாம். அவள் தாம்பத்ய வாழ்க்கை பற்றியும் துருவித் துருவி பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்கிறார்களாம். அதனால்தான் எங்கும் வருவதில்லை'' என்றாள்.
அவள் சொல்வதும் சரிதானே, நம் ஜனங்களுக்கு எதை கேட்க வேண்டும், எதை கேட்கக்கூடாது என்பது தெரிவதில்லை. அதோடு நிற்காமல் ஆலோசனை என்ற பெயரில் ஆள்ஆளுக்கு டாக்டர் ஆகி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ?
நா.கோகிலன், ஜோலார்பேட்டை.
என் சகோதரிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக அவள் வீட்டைவிட்டு வெளியே வருவதேயில்லை.
உறவினர்கள் வீட்டில் நடைபெறும் எந்த விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டாள். அதனால் என் சகோதரியை நான் கோபமாக திட்டி விட்டேன். `நாம நாலு பேரோட விசேஷத்துக்கு போனாதானே, நம்ம விசேஷத்துக்கு நாலு சொந்தக்காரங்க வருவாங்க' என்று காரணம் சொன்னேன்.
நான் திட்டியதும் அழுதுவிட்ட என் சகோதரி, தான் மற்றவர் வீட்டு விசேஷங்களுக்கு வராததற்கு காரணம் சொன்னபோது எனக்கே கஷ்டமாகி விட்டது.
`எந்த விசேஷத்திற்கு போனாலும் குழந்தை இல்லையா, குழந்தை இல்லையா? என்று கேட்டு மனதை நோகடிக்கிறார்களாம். அதோடு நிறுத்தாமல் ஏகப்பட்ட வைத்தியங்கள் வேறு சொல்கிறார்களாம். சில வைத்திய முறைகள் படுமோசமானதாக உள்ளதாம். அவள் தாம்பத்ய வாழ்க்கை பற்றியும் துருவித் துருவி பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்கிறார்களாம். அதனால்தான் எங்கும் வருவதில்லை'' என்றாள்.
அவள் சொல்வதும் சரிதானே, நம் ஜனங்களுக்கு எதை கேட்க வேண்டும், எதை கேட்கக்கூடாது என்பது தெரிவதில்லை. அதோடு நிற்காமல் ஆலோசனை என்ற பெயரில் ஆள்ஆளுக்கு டாக்டர் ஆகி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ?
நா.கோகிலன், ஜோலார்பேட்டை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தம்பி வெங்கிபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
அருமையான நிகழ்வு .
தங்கள் பகிர்வுக்கு நன்றி
தங்கள் பகிர்வுக்கு நன்றி
சிவா wrote:நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
[flash(150,200)][/flash][wow][/wow][b]
புனித யாத்திரையை இப்படியும் புனிதப்படுத்தலாம்!
என் உறவினர் ஒருவர் திருக்கயிலாய யாத்திரை செல்ல இருந்தார். நான் அவரை வழியனுப்ப சென்றிருந்தேன்.
அவர் தனது பயணத்திற்கு வேண்டிய துணிகள், கம்பளி ஆடைகள், மருந்துகளை எடுத்து வைத்ததோடு சில பெட்டிகளில் பென் சில்கள், ரப்பர், ஷார்ப்பனர்கள் மற்றும் பலப்பம் ஆகியவற்றையும் எடுத்து வைத்தார்.
அவரிடம் இதுபற்றி கேட்டேன். "மலைப் பகுதி களில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு இவற் றைக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் கள் என்று எனக்கு முன் யாத்திரை சென்றவர் கள் கூறியிருக்கிறார்கள். அது எனக்கும் நல்ல தென்றுபட்டது. இவை எனக்கு அதிக பாரமும் இல்லை, குழந்தைகளும் சந்தோஷப் படுவார்கள். அதனால் கொண்டு போகிறேன்'' என்று அவர் சொன்னார்.
இறைவனைத் தரிசிக்க செல்லும் புனித பயணத்தில் ஏழைகளுக்கு உதவும் உள்ளத்துடன் சென்ற அவரது நல்லெண்ணத்தை எண்ணி வியந்து போனேன்.
-இரா.கணேசன், பட்டைக்கோவில்.
என் உறவினர் ஒருவர் திருக்கயிலாய யாத்திரை செல்ல இருந்தார். நான் அவரை வழியனுப்ப சென்றிருந்தேன்.
அவர் தனது பயணத்திற்கு வேண்டிய துணிகள், கம்பளி ஆடைகள், மருந்துகளை எடுத்து வைத்ததோடு சில பெட்டிகளில் பென் சில்கள், ரப்பர், ஷார்ப்பனர்கள் மற்றும் பலப்பம் ஆகியவற்றையும் எடுத்து வைத்தார்.
அவரிடம் இதுபற்றி கேட்டேன். "மலைப் பகுதி களில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு இவற் றைக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் கள் என்று எனக்கு முன் யாத்திரை சென்றவர் கள் கூறியிருக்கிறார்கள். அது எனக்கும் நல்ல தென்றுபட்டது. இவை எனக்கு அதிக பாரமும் இல்லை, குழந்தைகளும் சந்தோஷப் படுவார்கள். அதனால் கொண்டு போகிறேன்'' என்று அவர் சொன்னார்.
இறைவனைத் தரிசிக்க செல்லும் புனித பயணத்தில் ஏழைகளுக்கு உதவும் உள்ளத்துடன் சென்ற அவரது நல்லெண்ணத்தை எண்ணி வியந்து போனேன்.
-இரா.கணேசன், பட்டைக்கோவில்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சின்னப்பெண்... பெரிய மனசு..!
நான் என் தோழியுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் மற்ற நாட்களை விட அன்று அதிகமாக இருந்தது. கால் வைப்பதற்கு கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம்.
அந்த சமயத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண், நாங்கள் வந்த பேருந்தில் ஏறினார். அந்தக் கூட்டத்தில் யாரும் சீட் கொடுத்து உதவ முன் வரவில்லை. நாங்களும் நின்று கொண்டு பயணம் செய்ததால் உதவ முடியவில்லை.
அப்போது, அருகில் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்ததும் எழுந்து, தனது இருக்கையில் கர்ப்பிணிப் பெண்ணை அமரச் சொன்னாள்.
மேலும் அந்தப் பெண்ணிடம், "உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று குழந்தை மனதுடன் கேட்டாள். "இதுவரை எந்தக்குழந்தை பிறந்தாலும் சரிஎன்று எண்ணியிருந்தோம். ஆனால் இப்போதோ தேடிவந்து உதவும் குணம் கொண்ட உன்மாதிரி ஒரு பெண் குழந்தையே வேண்டும் என்று நினைக்கிறோம்'' என்றாள், கர்ப்பிணிப் பெண். உதவும் குணத்துக்கு கிடைத்த மரியாதை எங்களை ஒருகணம் நெகிழ வைத்து விட்டது.
-மு.ரேணுகா, புதுப்பீர்கடவு.
நான் என் தோழியுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் மற்ற நாட்களை விட அன்று அதிகமாக இருந்தது. கால் வைப்பதற்கு கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம்.
அந்த சமயத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண், நாங்கள் வந்த பேருந்தில் ஏறினார். அந்தக் கூட்டத்தில் யாரும் சீட் கொடுத்து உதவ முன் வரவில்லை. நாங்களும் நின்று கொண்டு பயணம் செய்ததால் உதவ முடியவில்லை.
அப்போது, அருகில் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்ததும் எழுந்து, தனது இருக்கையில் கர்ப்பிணிப் பெண்ணை அமரச் சொன்னாள்.
மேலும் அந்தப் பெண்ணிடம், "உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று குழந்தை மனதுடன் கேட்டாள். "இதுவரை எந்தக்குழந்தை பிறந்தாலும் சரிஎன்று எண்ணியிருந்தோம். ஆனால் இப்போதோ தேடிவந்து உதவும் குணம் கொண்ட உன்மாதிரி ஒரு பெண் குழந்தையே வேண்டும் என்று நினைக்கிறோம்'' என்றாள், கர்ப்பிணிப் பெண். உதவும் குணத்துக்கு கிடைத்த மரியாதை எங்களை ஒருகணம் நெகிழ வைத்து விட்டது.
-மு.ரேணுகா, புதுப்பீர்கடவு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புத்தகப் பையில் பாம்பு... பதறிய பள்ளிக்கூடம்!
எனது பேரன் படிக்கும் பள்ளிக்கு சொந்தமான ஹாஸ்டல் (மாணவர் விடுதி) ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. விடுதியைச் சுற்றி வயல் வரப்புகள் உண்டு. ஒருநாள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் ஒருவன் வகுப்பாசிரியையிடம், `எனது பேக்கில் என்னமோ நெளிவது மாதிரி இருக்குது டீச்சர்' என்று கூறி இருக்கிறான்.
அவனது பையை வாங்கி ஜிப்பை லேசாக திறந்து பார்த்த ஆசிரியை, புத்தகப்பையில் பாம்பு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். உடனே உஷாரான அவர், பையின் ஜிப்பை மூடிவிட்டு, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.
பிறகு அந்த ஆசிரியையும் மற்றும் சிலரும் மைதானம் வந்து மெதுவாக ஜிப்பை திறந்து, பாம்பை பையில் இருந்து வெளியே வரச் செய்தனர். தயாராக இருந்த மற்றவர்கள் தடி யால் பாம்பை அடித்துக் கொன்றனர்.
பள்ளிவிடுதி வயல் ஓரமாக இருப்பதால் எப்ப டியோ பாம்பு புத்தகப் பையில் நுழைந்துள்ளது. மாணவனும் விடுதியில் இருந்து பள்ளி வரை, பாம்புடன் பேக்கை சுமந்து வந்துள்ளான். நல்ல வேளையாக பாம்பு மாணவனை தீண்டவில்லை.
குறைந்த வயதுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் காப்பாளர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.
-ம.சாந்தாமணி, அம்மாப்பேட்டை.
எனது பேரன் படிக்கும் பள்ளிக்கு சொந்தமான ஹாஸ்டல் (மாணவர் விடுதி) ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. விடுதியைச் சுற்றி வயல் வரப்புகள் உண்டு. ஒருநாள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் ஒருவன் வகுப்பாசிரியையிடம், `எனது பேக்கில் என்னமோ நெளிவது மாதிரி இருக்குது டீச்சர்' என்று கூறி இருக்கிறான்.
அவனது பையை வாங்கி ஜிப்பை லேசாக திறந்து பார்த்த ஆசிரியை, புத்தகப்பையில் பாம்பு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். உடனே உஷாரான அவர், பையின் ஜிப்பை மூடிவிட்டு, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.
பிறகு அந்த ஆசிரியையும் மற்றும் சிலரும் மைதானம் வந்து மெதுவாக ஜிப்பை திறந்து, பாம்பை பையில் இருந்து வெளியே வரச் செய்தனர். தயாராக இருந்த மற்றவர்கள் தடி யால் பாம்பை அடித்துக் கொன்றனர்.
பள்ளிவிடுதி வயல் ஓரமாக இருப்பதால் எப்ப டியோ பாம்பு புத்தகப் பையில் நுழைந்துள்ளது. மாணவனும் விடுதியில் இருந்து பள்ளி வரை, பாம்புடன் பேக்கை சுமந்து வந்துள்ளான். நல்ல வேளையாக பாம்பு மாணவனை தீண்டவில்லை.
குறைந்த வயதுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் காப்பாளர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.
-ம.சாந்தாமணி, அம்மாப்பேட்டை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிள்ளையை ஏலம் விட்டு... பின்னாலே அவதிப்பட்டு...!
எங்கள் ஊர் கோவிலுக்கு சமீபத்தில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்தனர். மெலிந்த தன் குழந்தையின் நலனுக்காக ஜோதிடர் கூறியபடி `குழந்தையை விற்று வாங்கும்' நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக வந்துள்ளனர்.
இந்த நேர்த்திக் கடனின்போது முதலில் வேண்டிக் கொண்டவர், தன் குழந்தையை கோவி லில் வைத்து ஏலமிடுவார். கோவிலுக்கு வரும் பக்தர்களும், இதுபோல் நேர்த்திக்கடன் செய்ய வந்தவர்களும் அந்தக் குழந்தையை ஏலத்தில் கேட்பார்கள். அதிக தொகைக்கு எடுப்பவர் அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வார். அதன் பிறகு சம்பிரதாயப்படி அந்த குழந்தையை ஏலம் வாங்கியவர்கள் திரும்பவும் ஏலம் விடுவார்கள். அப்போது முதலில் ஏலம் விட்ட குழந்தையின் பெற்றோரே தங்கள் குழந் தையையே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். ஏலத்தை மற்றவர்கள் ஏற்றிக்கேட்டாலும் அது பெரிய தொகை என்றாலும் பெற்றவர்களே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். இது மரபு.
இதில்தான் பிரச்சினை. அன்று கோவிலுக்கு வந்த அந்த ஏழைத்தம்பதிகள் தங்கள் குழந்தையை முதலில் ஏலம் விட்டனர். ஏலம் நூறு ரூபாயில் ஆரம்பித்து ஒரு தொகையில் முடிந்தது. பிறகு குழந்தையை திரும்ப ஏலம் எடுக்கும்போது இவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் ஏலத்தை ஏற்றிக்கேட்டதால், அவர்களின் கையில் இருந்த மொத்த தொகைக்கும் ஏலம் எடுக்கும் சூழல் உருவானது. கடைசியில் கையில் இருந்த தொகையைக் கொடுத்து குழந்தையை திரும்ப பெற்று விட்டனர். ஆனால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பஸ்சுக்கு காசில்லை.
`இனி ஊருக்கு நடந்துதான் போக வேண்டும்' என்று பேசிக் கொண்டனர். ஆனால் குழந்தையும் இருப்பதால் நீண்ட தூரம் நடந்துபோக முடியாது என்பதும் அவர்களுக்கு விளங்கியது. சிறிது நேரம் யோசனையில் மூழ்கிய அவர்கள் பிறகு உறவினர் ஒருவரை பணத்துடன் வரவழைத்து ஊர் போய்ச் சேர்ந்தனர்.
அவர்களின் நிலைமை என்னை நெகிழ வைத்து விட்டது. கோவிலில் இம்மாதிரி ஏல முறையில் விற்று வாங்க, பெற்றவர்களின் பட்ஜெட் இடிக்காத ஒரு குறைந்த தொகையை நிர்ணயிக்கலாமே.
-எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.
எங்கள் ஊர் கோவிலுக்கு சமீபத்தில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்தனர். மெலிந்த தன் குழந்தையின் நலனுக்காக ஜோதிடர் கூறியபடி `குழந்தையை விற்று வாங்கும்' நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக வந்துள்ளனர்.
இந்த நேர்த்திக் கடனின்போது முதலில் வேண்டிக் கொண்டவர், தன் குழந்தையை கோவி லில் வைத்து ஏலமிடுவார். கோவிலுக்கு வரும் பக்தர்களும், இதுபோல் நேர்த்திக்கடன் செய்ய வந்தவர்களும் அந்தக் குழந்தையை ஏலத்தில் கேட்பார்கள். அதிக தொகைக்கு எடுப்பவர் அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வார். அதன் பிறகு சம்பிரதாயப்படி அந்த குழந்தையை ஏலம் வாங்கியவர்கள் திரும்பவும் ஏலம் விடுவார்கள். அப்போது முதலில் ஏலம் விட்ட குழந்தையின் பெற்றோரே தங்கள் குழந் தையையே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். ஏலத்தை மற்றவர்கள் ஏற்றிக்கேட்டாலும் அது பெரிய தொகை என்றாலும் பெற்றவர்களே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். இது மரபு.
இதில்தான் பிரச்சினை. அன்று கோவிலுக்கு வந்த அந்த ஏழைத்தம்பதிகள் தங்கள் குழந்தையை முதலில் ஏலம் விட்டனர். ஏலம் நூறு ரூபாயில் ஆரம்பித்து ஒரு தொகையில் முடிந்தது. பிறகு குழந்தையை திரும்ப ஏலம் எடுக்கும்போது இவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் ஏலத்தை ஏற்றிக்கேட்டதால், அவர்களின் கையில் இருந்த மொத்த தொகைக்கும் ஏலம் எடுக்கும் சூழல் உருவானது. கடைசியில் கையில் இருந்த தொகையைக் கொடுத்து குழந்தையை திரும்ப பெற்று விட்டனர். ஆனால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பஸ்சுக்கு காசில்லை.
`இனி ஊருக்கு நடந்துதான் போக வேண்டும்' என்று பேசிக் கொண்டனர். ஆனால் குழந்தையும் இருப்பதால் நீண்ட தூரம் நடந்துபோக முடியாது என்பதும் அவர்களுக்கு விளங்கியது. சிறிது நேரம் யோசனையில் மூழ்கிய அவர்கள் பிறகு உறவினர் ஒருவரை பணத்துடன் வரவழைத்து ஊர் போய்ச் சேர்ந்தனர்.
அவர்களின் நிலைமை என்னை நெகிழ வைத்து விட்டது. கோவிலில் இம்மாதிரி ஏல முறையில் விற்று வாங்க, பெற்றவர்களின் பட்ஜெட் இடிக்காத ஒரு குறைந்த தொகையை நிர்ணயிக்கலாமே.
-எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிள்ளையை ஏலம் விட்டுவிட்டுப் பின்னர் இவர்கள் தாளம் போடுவது எதற்கு?...
என்ன ஜோசியமோ?...இப்படியெல்லாமா கொடுமை நடக்கும்?...போங்கப்பா நீங்களும் உங்க ஜோதிடமும்...
என்ன ஜோசியமோ?...இப்படியெல்லாமா கொடுமை நடக்கும்?...போங்கப்பா நீங்களும் உங்க ஜோதிடமும்...
உட்கார இடமில்லை... ஆனால் படுத்துக் கொண்டு பயணம்!
நான் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறேன். மாலையில் பணி முடிந்ததும் வழக்கமாக மின்சார ரெயிலில் வீடு திரும்புவேன்.
ஒருநாள் ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பலரும் பணி முடிந்து திரும்பும் நேரம் என்பதால் நிறைய பேர் ரெயிலுக்காக காத்திருந்தனர். அதேபோல ரெயிலிலும் நெருக்கியடிக்கும் அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.
ஆனால் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் அரை பெட்டி அளவுக்கு காலியாக இருந்தது. நிலையத்தில் நிறுத்துவதற்காக ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தபோதே இந்த காலியிடத்தை காத்திருப்பவர்கள் கவனித்து விட்டனர். உடனே அந்த இடத்தைப் பிடித்துவிடும் நோக்கில் பக்கத்து பெட்டிக்காக காத்துக் கொண்டிருந்தவர்களும் அந்தப் பெட்டியை நோக்கி ஓடி வந்தனர்.
ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியில் முண்டியடித்து ஏறினார்கள். உள்ளே சென்று பார்த்தால் அங்கே ஒரு இளைஞர் குடிபோதையில் படுத்துக் கிடந்தார். அவரது முகத்திலும், பக்கத்து சீட்டிலும் அவர் வாந்தியெடுத்த அடையாளங்கள் இருந்தது. யாரும் அமர முடியாத அளவுக்கு வாந்தி சிதறிக் கிடந்தது. குடலைப்பிடுங்கும் அளவுக்கு துர்நாற்றமும் அடித்தது. அதனால்தான் அந்தப் பெட்டி காலியாக இருந்திருக்கிறது.
ரெயில் கிளம்பிய இடத்தில் இருந்து கடைசி நிறுத்தமான தாம்பரம் வரை அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்த காலி இருக்கைகளுக் காக பயணிகள் முண்டியடித்து ஏறுவதும், பிறகு மூக்கைப் பொத்திக் கொண்டு இறங்கி பக்கத்துப் பெட்டிக்கு ஓடுவதுமாக இருந்தனர்.
நிதானமாக இருந்தவர்கள்தான் புலம்பிக் கொண்டிருந்தனர், ஆனால் குடிகார இளைஞனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டு பயணித்தான்.
எம்.ராமர், குரோம்பேட்டை.
நான் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறேன். மாலையில் பணி முடிந்ததும் வழக்கமாக மின்சார ரெயிலில் வீடு திரும்புவேன்.
ஒருநாள் ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பலரும் பணி முடிந்து திரும்பும் நேரம் என்பதால் நிறைய பேர் ரெயிலுக்காக காத்திருந்தனர். அதேபோல ரெயிலிலும் நெருக்கியடிக்கும் அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.
ஆனால் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் அரை பெட்டி அளவுக்கு காலியாக இருந்தது. நிலையத்தில் நிறுத்துவதற்காக ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தபோதே இந்த காலியிடத்தை காத்திருப்பவர்கள் கவனித்து விட்டனர். உடனே அந்த இடத்தைப் பிடித்துவிடும் நோக்கில் பக்கத்து பெட்டிக்காக காத்துக் கொண்டிருந்தவர்களும் அந்தப் பெட்டியை நோக்கி ஓடி வந்தனர்.
ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியில் முண்டியடித்து ஏறினார்கள். உள்ளே சென்று பார்த்தால் அங்கே ஒரு இளைஞர் குடிபோதையில் படுத்துக் கிடந்தார். அவரது முகத்திலும், பக்கத்து சீட்டிலும் அவர் வாந்தியெடுத்த அடையாளங்கள் இருந்தது. யாரும் அமர முடியாத அளவுக்கு வாந்தி சிதறிக் கிடந்தது. குடலைப்பிடுங்கும் அளவுக்கு துர்நாற்றமும் அடித்தது. அதனால்தான் அந்தப் பெட்டி காலியாக இருந்திருக்கிறது.
ரெயில் கிளம்பிய இடத்தில் இருந்து கடைசி நிறுத்தமான தாம்பரம் வரை அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்த காலி இருக்கைகளுக் காக பயணிகள் முண்டியடித்து ஏறுவதும், பிறகு மூக்கைப் பொத்திக் கொண்டு இறங்கி பக்கத்துப் பெட்டிக்கு ஓடுவதுமாக இருந்தனர்.
நிதானமாக இருந்தவர்கள்தான் புலம்பிக் கொண்டிருந்தனர், ஆனால் குடிகார இளைஞனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டு பயணித்தான்.
எம்.ராமர், குரோம்பேட்டை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 16 of 32 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 32
|
|