புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
prajai
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தர்ஷன் கவிதைகள் Poll_c10தர்ஷன் கவிதைகள் Poll_m10தர்ஷன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:57 pm

காதல் சின்னம்

கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்

இதயத்திற்கு இதயம்
கட்டியதல்ல தாஜ்மஹால்
நான்கு மனையாளிடம்
பாகம்கொண்ட இதயம்
ஒருத்திக்காக கட்டிய
பளிங்குச் சின்னமே தாஜ்மஹால்
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின்
முற்றுகைச் சின்னம்

காதல் கருத்தொருமித்தால்
கையளவு இதயத்திற்குள்
கடலே அடக்கம்

காதலரே
காலத்தால் அழியாத
காதல் சின்னம்
கலங்கரை ஒளியே

இதற்கு சின்னங்களோ
சிலுவைகளோ
வகுப்பறை பாடங்களோ
ஒளி கொடுப்பதில்லை.

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:58 pm

தாயின் கருவில்….!
எதையும் நினைக்க
தெரியாது…!
எதையும் சுவைக்க
தெரியாது…!
எதையும் பார்க்க
தெரியாது….!

உணர மட்டும் தெரியும்
என் தாயின் வருடலை…!
அப்போது நான் என் தாயின்
கருவில்…!

மனிதனாக பிறந்தால்
இப்படியும் வாழ வேண்டும்
என தெரிந்திருந்தால்
வந்திருக்க மாட்டேன்
இவ்வுலகை காண…!

இன்று என் தாயின் கருவறையே
சிறந்தது என்று தெரிந்து
கொண்ட பின்…!
இறைவனடி சேர
ஆசைப்படுகிறேன்…!

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:59 pm

அன்னையே உன்னை . . . . .


அன்னையே உன்னை ஒப்பிட உலகில் ஏதும் இல்லை
ஒரு துளி எடுத்து கருவாக்கி அதை நினைத்து நினைத்து
உருவாக்கிய பெருமை உன்னையே சேரும் தாயே
உன்னைப் போல் ஒரு தெய்வம் உலகில் நான் பார்த்ததில்லை

உன் உயிரில் என் உயிர் வளர்த்தாய் உணவு ஜீரணிக்கும் பையில்
எனக்கோர் இடம் ஒதுக்கி கருப்பை என என் சரீரம் வளர்த்தாய்
உனக்கில்லாத போதும் உணவு உன்
உதிரம் உருக்கி எனக்கு உணவாக்கித்தாய்

உன் புறப்புலன் விலக்கி அகப்புலன் துலக்கி
நான் உன்னுள் புரள்வதும்
உருள்வதும் உன்னிப்பாய் எண்ணி அவதானித்தாய்
கண்ணிமை காப்பதுபோல் நீ இருப்பதும் எழுவதும் எனக்கென வளைந்துகொடுத்தாய்

எத்தனை எத்தனை பெருமைகள் எண்ணிலடங்கா உன்னை வர்ணிக்க
ஒருமுறை போதுமா உன் கடன் தீர்க்க இன்னொருமுறை என்ன
இன்னோராயிரம் முறை உன் மடியினில் மறுபடி பிறந்து
உன் தீரா கடன் தீர்த்திட வேண்டும்!

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:00 pm

இழந்து விடவில்லை


களத்தில் புலிவீரர்கள் உயிர்த்தியாகம் புரிந்து நிற்க
தளத்தில் மக்களோ துயரித்து நிற்க
புலத்தில் நாங்களோ புன்னகைத்து நின்றோம்
இதனால் இழந்தோம் ஈழநிலத்தை

இழந்தது நிலமே தவிர இலட்சியத்தை அல்ல
பார்த்தமிழனே பார்வையாளனாய் இனியுமிராதே
பங்காளனாய் மாறிடு
எங்கு நின்றாலும் உணர்ந்து நில்
எவ்வகையிலும் போராடத்துணிந்து நில்

புலத்தமிழனே புறப்படு பகைவிரட்ட
களைந்திடு திரோகம் என்னும் களைதனை
பலப்படித்திடு தலைவன் கரம் தனை
மீட்டிடு ஈழநிலம்தனை
விரட்டிடு மந்திக்கூட்டமாம் மகிந்தகூட்டம்தனை

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:00 pm

முடியும் முயல்வோம்..!


வீதியெங்கும் தேரிழுப்பும்
விளையாட்டுப் போட்டிகளும்
ஆதி தமிழ் நுண்கலையும்
அரங்கேறி ஆடுதிங்கே - தமிழ்

சாதி இரத்தம் காயவில்லை
சரணடைந்தோர் மீளவில்லை
நாதியற்ற எம்முறவு
நா நனைக்க நீருமில்லை

போதி மரப் புத்தனுக்கும்
புகழ் மாலை ஓயவில்லை
பீதி கொண்டு புலம் பெயர்ந்தும்
புன்னகையில் திளைக்கின்றோம் - ஈழவனை

காதிலொரு பூச் சொருகி
கற்பனையில் வாழவிட்டு
தேதி ஒன்று குறித்து வைத்து
தீர்த்துவிட்டு மகிழ்கின்றோம்

பேதி கண்டு இனம் துடிக்க
பேயாட்டம் இங்கு ஆடி
சோதி வடி வானவனை - உம்
சோக்குக்காய் தெருவிழுத்து

ஊதிக் கொழுப்பதற்காய் - தமிழர்
உணர்வுகளை மழுங்கடித்து
பாதியுயிர் போனவரை
பரிகாசம் செய்வதுவோ

காதிருந்தால் கேளுங்கள் - ஈழக்
கனவுக்காய் எழுந்திருங்கள்
ஓதியொரு தாரகமாய்
ஒளி யேற்ற வாருங்கள்

மோதி வரும் படைநெரித்து
மோட்ச நிலை சேர்ந்தடைந்து
ஏதிலிகள் நிலை துறந்து - மீண்டும்
எடுப்போம் விழாக்களை

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:01 pm

இலங்கை மண்ணிற்கொரு கடிதம்







என் இனிய இலங்கை மண்ணிற்கு
கவிஞன் எழுதும் மடல்
காதல் மடல்
கண்ணீரும் சோகமும்
நிறைந்த கடல்

கொங்கமலை கீழ்ப்பாயும் அருவி யூற்று
கொடுங்கோலன், நல்லரசன் ஆய்ந்தா நனைக்கும்
கார்முகிலும் வளியோடு கூடிமழை
களையெதுவோ? பயிரெதுவோ? பார்த்தா பெய்யும்

நீதியோடு நல்லாட்சி நீயே செய்ய – எம்
நிறைபாரம் என்காமல் தாங்கிக் கொள்ள – சரி
நிகருரிமை தருவதற்குத் தயங்கும் சூழ்ச்சி
தலைமைக்கு நிச்சயமாய்த் தருமே வீழ்ச்சி

பெற்றெடுத்தாய் சில மக்கள் கோடி
பேணி வளர்த்தாய் தினம் ஆடிப் பாடி
காணி நிலச் சண்டைலுன் செல்லப்பிள்ளைகள்
வாட்டி வதைக்க நாமா கிள்ளுக்கீரைகள்

உணர்வுகளை, உறவுகளைப் புலத்தில் நீக்கி
ஓடித்தான் போய்விட்டோம் சுயத்தை நோக்கி
கந்தானைச் சந்தி வரை தமிழ் இரத்தம் ஓடுகையில் – உன்
முந்தானை மடிப்புகளால் நீயதனைத் துடைத்தாயோ?

பெருந்தன்மை கொண்டதம்மா தமிழன் நெஞ்சம்
தேடிச்சென்று தீர்த்ததில்லை என்றும் வஞ்சம்
உரிமைகளைக் கேட்கின்றோம் தரத்தான் பஞ்சம்
உடைவாளை சாணையிட்டால் எவர்க்குமில்லை மஞ்சம்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:02 pm

அபலையின் குரல்







மலைகளின் நடுவே
மங்கிய மனங்களுடன் வாழும்
மலையக மக்கள்
அறியாமையால் என்பத
இல்லை இது தான் விதி என்பதா

இப்படித்தான் வாழ வேண்டும்
என்று யார் மனதிலும் எண்ணமில்லை….!
இப்படித்தான் வாழ வேண்டும்
என்ற கட்டயத்திற்கு தள்ளப்பட்ட
பரிதப நிலை மாறுமா….?

மலைகளுக்கு நடுவில் இருப்பதாலோ
என்னவோ அபல மக்களின்
கவலை, கண்ணீர் மலைகளில்
பட்டு மீண்டும்,மீண்டும்
அவர்களிடமே வருகிறது…!

மலையகம் எனும் அழகிய மண்ணில்
இன்னும் வாழும் அபலைகளின்
வேண்டுகோள் என்று நிறைவேற்றப்படும்…?
கண்ணீர் என்று துடைக்கப்படும்…?

இனி வரும் உதயம் இளைஞர்கள் கையில்
என்று உரக்க ஒலிப்போம்……..
மாற்றிடுவோம் மலையகத்தை…….

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:03 pm

பிரசவம்







முன்னூறு நாட்கள்
சுமந்த வலி முற்றிலும்
முப்பதே நொடியில்
பறந்து போகும் - அற்புதத்
திருநாள் பிரசவம்
பிற எல்லாம் இனி சுபம்

சுழன்று வரும் உலகிலே
தொடர்ந்து வரும் ஓர்
நிலையான உன்னத உறவு
தாய்மை உறவு
தொப்புள் கொடி உறவு மட்டும்
விட்டுப் போவதில்லை எப்போதும்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:04 pm

காதலில் தோல்வி
கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்
என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக