புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
3 Posts - 2%
jairam
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
2 Posts - 2%
சிவா
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
1 Post - 1%
Manimegala
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
1 Post - 1%
Poomagi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
15 Posts - 4%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
7 Posts - 2%
jairam
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Rutu
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:31 pm

பகவதி வேண்டாம் என்று தலையாட்டினாள்.

கிளம்பலாமா ?

சிநேகாம்பாள் கீச்சுக் குரலை அடக்கிக் கொண்டு கேட்டது என்னமோ மாதிரி பிசிறிட்டுச் சிதறியது.

சிநேகா அக்கா, நீங்க எப்பவும் போல கீச்சிடுங்கோ. அதுதான் சுபாவமா இருக்கு. இப்படிக் குரலை மாத்திண்டு பேசினாக் குழந்தை பேடிச்சுப் போய் அரையை நனைச்சுண்டுடுவா. அப்புறம் பொடவை வேறே மாத்தியாகணும்.

பகவதி எச்சுமியின் முதுகில் பலமாக ஒன்று வைத்தாள்.

உக்காந்து சாப்பிட்டுச் சாப்பிட்டுக் குந்தமா ஆகிட்டேடி நீ. வலி பிராணன் போறது கடன்காரி.

எச்சுமி சந்தோஷமாகச் சிரித்து அவளைத் தோளைப் பிடித்து எழுப்பி விட்டாள்.

மெல்ல அடி வச்சு வாடி குழந்தே. பொடவை தடுக்கறதுன்னா கொஞ்சமா உசத்திப் பிடிச்சுக்கோ.

அதுக்காகத் தொடை தெரிய ஒரேயடியா வழிச்சுக்காதேடி பகவதி. அதெல்லாம் ஆம்படையான் பாத்தாப் போதும்.

கூட்டுக்காரியைச் செல்லமாக அடிக்கப் பகவதி கை ஓங்க, அவள் சிரித்துக் கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள்.

ஒழிக்கறவா எல்லாம் எனக்குப் பின்னாலே வாங்கோ.

கலகலப்பாக ஒரு கூட்டம் கூடத்தை நோக்கி நகர்ந்தது. மத்தியில் பகவதிக் குட்டி.

சங்கரன் நிமிர்ந்து பார்க்க, பகவதிக் குட்டியின் மை தீட்டின கண்கள் சுவாதீனமாக மனதுக்குள் நுழைந்து அங்கே இருந்த புகையிலைச் சிப்பங்களையும், கணக்குப் பேரேட்டையும் ஒதுக்கித் தள்ளின. கொட்டகுடித் தாசி இன்னும் உள்ளறைக்குள் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே போனாள்.

மாமாவை நமஸ்காரம் பண்ணிக்கோ அம்மா.

வரிசையாகக் கால்கள். நகம் பிளந்தும், பித்த வெடிப்போடும், மஞ்சள் ஏறியும், ஆணிக்குத்து புறப்பட்டுப் புரையோடியும்.

ஒரு ஜதை வயிரம் பாய்ந்த கருத்த கால்களும் அங்கே உண்டு. அந்த ஆகிருதிக்குச் சரியான தோளும், கடுக்கனும், கட்டுக் குடுமியுமாக இருக்கப்பட்ட மனுஷ்யன்.

பகவதிக் குட்டிக்கென்று விதிக்கப்பட்டவன். பட்டவர்.

எல்லோருக்கும் பொதுவாக நமஸ்காரம் செய்தாள் பகவதி.

தனாரோ தன்னாரோ தன தனாரோ தன்னாரோ

சுப்பம்மாள் கன குஷியாக ஆரம்பிக்க, ஜோசியர் அகத்துக்காரியும் கல்யாணி அம்மாளும் அவள் வாயை அவசரமாக வெள்ளைத் துணி கொண்டு பொத்தினார்கள்.

பெண்ணகத்துப் பெண்டுகள் கொஞ்சம் மிரண்டு கொஞ்சம் சிரித்து கொஞ்சம் விலகி உட்கார, ஜோசியர் கை காட்டி அமர்த்தினார்.

மாமி நித்ய சுமங்கலி. இவா பரம்பரையிலே ஏழு தலைமுறை சுமங்கலிகள் அவளோட சதா இருக்கா. எல்லோரையும் அனுக்ரஹிக்கறது தான் அவாளோட ஜோலி. அப்பப்ப அவாளுக்கும் சந்தோஷம் எல்லையில்லாமக் கரை புரண்டு போயிடும். தீர்க்க சுமங்கலிகள் சந்தோஷப் படறதை விட கிரஹத்துக்கு சகல செளபாக்கியமும் கொடுக்கற விஷயம் வேறே உண்டா என்ன ?

சுப்பம்மாள் இப்போது வாய்க்கட்டை நெகிழ்த்தி விட்டுக் கொண்டு வாரணமாயிரம் பாட ஆரம்பித்தாள். ஸ்மார்த்தர்கள் வீட்டில் பாடும் வழக்கம் இல்லை இந்தப் பாசுரம் எல்லாம். ஆனாலும் மூத்த குடிப்பெண்டுகளுக்குப் பிடித்த பாட்டு. எல்லோருக்கும் அது பிடித்துத் தலையாட்ட வைக்க அதிக நேரம் செல்லவில்லை.

கனாக் கண்டேன் தோழி நான்.

சுப்பம்மாள் குரல் இழைந்தபோது விசாலாட்சி மனதில் தேக்கி வைத்த எல்லாச் சுமையும் கரையக் கண்ணீர் விட்டுக் கொண்டு நின்றாள். பகவதிக்கு வேறு ஏதோ உலகத்தில் அடியெடுத்து வைத்தது போல் இருந்தது. அவளுக்குப் புரிந்த பாஷையில் அவளுக்குப் புரிந்த வார்த்தைகளை நயமாகக் கோர்த்த அந்தப் பாட்டு நாள்ப்பட்ட சிநேகிதி போல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டது.

பொண்ணு ஒரு பாட்டுப் பாடினா கேக்கலாம்.

சுந்தர கனபாடிகள் ஒற்றைத் தும்மலைச் சிரமத்தோடு ரெட்டையாக்கியபடி சொன்னார்.

மாடியிலிருந்து வயசன் மிதந்து கொண்டு தெருத் தாண்டிப் போனபோது பகவதிக் குட்டி நன்னு பாலிம்ப பாட ஆரம்பித்திருந்தாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:33 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்து நான்கு


சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான்.

வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப் பாட்டி.

புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் சின்னக் குழந்தைக்கு நிலாக்காட்டி ஊட்டுவது போல் சாதுவான ரசமும், நெய்யுமாக அன்னம். புடலங்காய் பருப்பு உசிலி. அதில் இழைபடும் வெளுத்த தலைமுடி.

இந்தச் சாப்பாட்டை அவன் போன ஜன்மத்தில் சாப்பிட்டிருக்கிறான்.

ஓ அக்னியே. எங்கள் பிரார்த்தனையைக் கேள். மித்ரனோடும் ஆர்யமனோடும் உன் சிம்மாசனத்தில் வீற்றிரு. நீ இந்திரன் போல் வலிமையானவன். திவோதச மன்னன் உன்னைத் தொழுதான். இந்த மண்ணில் முதலில் அவதரிக்க நீ கருணை கூர்ந்தாய். பிறகு விண்ணேறினாய்.

சாம வேதத்தின் வரிகள் ஒலிகளாக அவன் காதுகளில் இரைந்து ஒலித்தன. அவன் தான் சொல்கிறான். சிரவுதிகள் அடியெடுத்துக் கொடுக்கிறார். அரணிக் கட்டையில் நெருப்பாகப் பிடித்துப் படர்ந்து பரவும் முழக்கம். கம்பீரமாக ஒளிர்கிற உடம்பு அவனுக்கு. அவனுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. அவன் வானத்தில் ஏறிக் கொண்டிருக்கிறான். இரண்டு பக்கமும் சிவப்புக் கொடி பிடித்து யாராரோ அணிவகுத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவனோடு பேச வந்தவர்கள். அவன் காலத்துக்கு ஏகமாகப் பின்னால் பிறந்தவர்கள். அவர்கள் காலத்துக்கு அப்புறம் இங்கே எல்லாம் மாறும். மனுஷ்யன் மகத்தானவனாவான். பிசாசுகள் வலுவிழந்து போவார்கள். தெய்வங்களும் தாம்.

அவர்கள் திடமாக நம்பினார்கள். அந்தக் காலம் வந்ததோ என்னமோ தெரியவில்லை சாமிநாதனுக்கு. ஆனாலும் அவர்களைப் பிரியத்துடன் பார்க்கிறான்.

அக்னியே, நீ என் கிரஹத்தின் அதிபதி. என் ஆகுதிக்குக் குருவாக இருந்து வழி காட்டு. எங்கள் குற்றம் குறையனைத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கு. எங்கள் பாவங்களைச் சுட்டெறி. தவறு செய்யாதபடி எங்களைத் தடுத்தாட்கொண்டு வழி காட்டு.

எதுக்கு அதெல்லாம் சாமா ? இப்படியே இருந்துடலாம்.

குருக்கள் பெண் பின்னால் இருந்து சாமிநாதனைத் தழுவிக் கொள்கிறாள்.

வேண்டாம் வசு. சாமவேதம் சொல்றேன் கேளு. இல்லே, அவாள்லாம் ஏன் சிவப்புக் கொடி பிடிச்சுண்டு போறா தெரியுமா ?

எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்டா சாமா. உன்னோட உடம்பு மட்டும் போறும்.

வசு. வேணாம். சொன்னாக் கேளு. அக்னியே. நாசமாப் போச்சு. ஊஞ்சல்லே படுக்கணுமா ?

சாமிநாதன் வாயில் முடி புரள்கிறது.

வசு. வசுமதி. வசு. பசு. சிசு.

அவள் சிரிக்கிறாள். அவன் மேலெ ஏறிப் படர்கிறாள். ஒரு காலால் தரையில் உந்தி உந்தி ஊஞ்சலை அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்குமாக ஆட்டுகிறாள். சாமாவுக்கு மூச்சு முட்டுகிறது. இந்த சந்தோஷத்திலேயே உயிர் போனால் நன்றாக இருக்கும்.

அதுக்கு இன்னும் நேரம் இருக்குடா கட்டேலே போறவனே. ரமிக்கலாம் வா. ஊஞ்சல் நிக்கக் கூடாது. ஆமா, சொல்லிட்டேன்.

குருக்கள் பெண் அதட்டுகிறதும் அவனுக்குப் போதையேற்றுகிறது.

அவள் இரண்டு நாளாகக் கூடவே வளைய வருகிறாள். ராமலச்சுமிப் பாட்டி சாப்பாடு கொண்டு வரும்போது மடிசாரில் கச்சத்தை உருவி விட்டுச் சிரித்தாள். கிழவி தன்னிச்சையாக நடந்ததாக நினைத்துக் கொண்டு, புடவையை வாரிச் சுருட்டியபடி நாணிக் கோணி வெளியே போனாள்.

ஐயணை பகலில் ஒரு தடவையும், ராத்திரி விளக்கு வைத்ததும் இன்னொரு தடவையும் உள்ளே வந்து சாமிநாதனை செளகரியம் விசாரிக்கும்போது அவன் முதுகில் காலால் உதைத்தாள். ஆனாலும் ஐயணை அசரவில்லை.

அய்யர் வீட்டுப் பொண்ணாச்சேன்னு பாக்கறேன். இல்லே எங்க முனியாண்டிக் கருப்பனை விட்டு உன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்.

அவன் புஜத்தில் தட்டிக் கொண்டு சொல்லும்போது குருக்கள் வீட்டுப் பெண் பயந்து போய் சாமாவின் தோளைக் கட்டிக் கொண்டாள்.

சாமி, இந்தப் பீடையைச் சீக்கிரம் தொலைச்சுத் தலைமுழுகுங்க. நல்லபடியா தம்பி மாதிரிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சுபிட்சமா இருங்க.

அவன் வெளியே போனதற்குப் பிற்பாடு அவள் சாமிநாதன் மடியில் உட்கார்ந்து சிரிக்கச் சிரிக்க என்னென்னமோ காட்சி எல்லாம் தெரியப் படுத்தினாள்.

சுப்பம்மாளின் வாயை வெள்ளைத் துணியால் கட்டி மாட்டு வண்டியில் கூட்டிக் கொண்டு போகிறார்கள். சுந்தர கனபாடிகள் வைகையில் குளித்துவிட்டுக் கெளபீனத்தோடு, வேட்டியை உலர வைத்துக் கொண்டு நிற்கிறார். ஒரு பிராமணன் கூவிக் கூவி அழைத்துச் சித்திரான்னம் விற்கிறான். கொலு பொம்மை வர்ணத்தில் முண்டாசு அணிந்த மாட்டுக்காரன் களிமண் பசுவை ஓட்டிப் போகிறான். அப்புறம் ஒரு கிழவன் அரைக் கண்ணை மூடிக் கொண்டே மிதந்து வந்து நின்றபடியே அற்ப சங்கை தீர்த்துக் கொள்கிறான். பாதம் நனைய நனையச் சிரித்துக் கொண்டு வெய்யில் தாழ்ந்த தெருவில் மரத்திலும், மச்சிலும் இடித்துப் புடைத்துக் கொண்டு மிதந்தபடி போகிறான். சங்கரனுக்கு முன்னால் கால் மடக்கி உட்கார்ந்து ஒரு சின்னப் பெண் கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:33 pm

குருக்கள் பெண் தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

சுப்பம்மா அத்தை வாயை என்னத்துக்குக் கட்டி வச்சிருக்கு ?

சாமிநாதன் குருக்கள் பெண்ணின் காலை இழுத்து மாலையாகத் தோளில் போட்டுக் கொண்டு கேட்டான்.

குருக்கள் பெண் சொன்னாள். சாமிநாதன் சிரித்தான். அவன் முழுக்கச் சிரிப்பதற்குள், படுத்துக்கலாம் வா என்றாள் அவள் மறுபடியும்.

அந்தக் கிழவன். அந்தரத்தில் மிதந்து கொண்டு.

சாமிநாதன் விசாரித்தபோது குருக்கள் பெண் தெரியாதென்றாள். எல்லாத்துக்கும் காரணம் சொல்ல முடியுமா என்ன ? நீ கூப்பிட்டு நான் ஏன் வந்தேன் ? நாம ஏன் இப்படி பட்சி மாதிரி, பசு மாதிரி இதுமட்டும் தான் எல்லாம்னு சதா கிடக்கோம் ?

சாமிநாதனுக்கும் புரியவில்லை. புரிந்து என்ன ஆக வேண்டும் ?

குருக்கள் பெண் சமையல்கட்டுக்குள் நுழைந்தாள்.

சாமிநாதன் கூடவே போனான்.

இங்கேயுமா ?

ஏன் ? இந்த இடத்துக்கு என்ன ? மொறிச்சுன்னு பசுஞ்சாணி தெளிச்சு சுத்தம் பண்ணி இருக்கு. ஜில்லுன்னு தரை வா வாங்கிறது பாரு. வா.

அவன் மனசே இல்லாமல் உட்கார்ந்தான். உடம்பு எல்லாம் வலித்தது. அக்னி எப்போதோ கூப்பிட்டதை நினைவு வைத்துக் கொண்டு வந்து அவன் இமைகளில் சட்டமாக உட்கார்ந்து தகித்தது.

ராட்சசி கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டு கண்ணயரலாம். அயர்ந்த அப்புறம் ? வாடா எங்கே ஓடறே படுவா ? இங்கே பாரு, சமையல் கட்டுக்குப் பக்கமா அரிசி மூட்டை மேலே ஆத்துக்காரியைக் கிடத்தி.

எனக்கு ஒண்ணும் பார்க்க வேண்டாம்.

எல்லாம் உன் தம்பி கல்யாணம் செஞ்சுண்டு வர சம்பந்தக்காரா தான். இந்தக் கிழவனைப் பார்த்தியோ ? தம்பதி ஜோடி சேரும்போது இப்படியா உள்ளே வந்து புட்டத்திலே இடிச்சிண்டு போவான் ? சிரிக்கறியாடா ? சிரி. உன் மேலே இடிச்சுண்டு போனா சிரிக்க மாட்டே நீ ?

அவன் எதுக்கு எனக்கு ? நீ ஒரு பிசாசே போறும்டா.

அவள் ஆலிங்கனத்தில் சாமிநாதன் காலுக்குக் கீழே தரை நழுவ இருட்டில் அமிழ்ந்து கொண்டிருக்கிறான்.

சாமி, இந்தப் பொம்பளை சகவாசம் வேணாம். சொன்னாக் கேளுங்க.

ஐயணை வீட்டுக்குள் காவல் தெய்வம் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு சொல்கிறான். அவன்

பீஜத்தில் ஓங்கிப் பட, குருக்கள் பெண் ஊஞ்சலை ஆட்டி விடுகிறாள். ஐயணையின் வசவுக்கு சாமிநாதனுக்கு அர்த்தம் புரிபடவில்லை.

மாடிக்குப் போலாம் வாடா.

அவள் கூப்பிடுகிறாள்.

ஏன், உள்வீடு எல்லாம் அலுத்துப் போச்சா அதுக்குள்ளேயும் ?

இப்பவே போனாத் தான் தயாரா இருக்கலாம்.

எதுக்கு ?

எது நடக்குமோ அதுக்கு. யார் யார் காலையோ பிடிச்சுக் கெஞ்சிப் பார்த்தேன். எந்தத் தேவிடியாளும் கை கொடுக்க மாட்டேங்கிறாடா பிரம்மஹத்தி.

நீ என்ன கேட்டே ? அவா என்ன சொன்னா ?

மாடி ஏறிக் கொண்டிருந்த குருக்கள் பெண்ணை இடுப்பைப் பிடித்து இழுத்துத் தலையைத் திருப்பி முத்தினான் சாமிநாதன். அவள் வாயில் மாமிச வாடை வந்தது.

இதெல்லாம் சாப்பிடுவியாடா நீ ?

விட்டா நான்.

அவள் சுட்டிக்காட்ட அவன் அரையைப் பொத்திக் கொண்டு உரக்கச் சிரித்தான்.

வேஷ்டி எங்கேடா கடன்காரா ?

அவள் கேட்டாள். அது ஊஞ்சலில் பப்பரவென்று கிடந்தது.

நீ மட்டும் ரொம்பப் பதவிசா உடுத்திண்டதா நினைப்போ ?

நான் உனக்கு நூறு இருநூரு வருஷம் முந்தினவடா கழுதே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:34 pm

அப்ப ஏண்டி கூட வந்து படுத்தே ? உனக்கு கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் இல்லியாடி நான் ?

நீ தாண்டா கூப்பிட்டே என்னை. நான் பாட்டுக்கு எங்கேயாவது தெவசச் சோறு கிடைக்குமான்னு இங்கே நொழஞ்சேன். நம்மாத்துப் பொண்டுன்னு அந்தப் பரதேவதை எல்லாம் சும்மாக் கிடக்க, பொழுது போகாம நான் மாடிக்கு ஏறினா, நீ என்னடா பண்ணினே அயோக்கியா ?

இதுதான்.இதேதான்.

சாமிநாதன் அவளுக்குள் ஒடுங்கிக் கொண்டான். இப்படியே இந்த இருட்டில், பழுக்காத் தட்டுக்களைச் சுழல வைத்துக் கொண்டு எல்லாச் சோகத்தையும் கேட்டு அனுபவித்துக் கொண்டு, வெளவால் வாடையும், புகையிலை வாடையும் காற்றில் கவியக் காலமும் நேரமும் தெரியாமல் கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விட வேண்டும்.

அக்னியே. நீ வரவேண்டாம். நானே தூசியாக எங்கேயும் ஒட்டாமல் உதிர்ந்து விடுகிறேன். உனக்கு என் நமஸ்காரங்கள். அக்னியே உன் வாய்க்கும் ஒரு பெயர் உண்டு. ஜூஹூ. எங்கள் பிரார்த்தனைகளைத் தேவதைகளுக்குக் கொண்டு போ. என்ன பிரார்த்தனை ? வசுவோடு ராத்திரி முழுக்க இணங்கிக் கிடக்கணும். அவ்வளவுதான்.

இருட்டு கனமாக அப்பியபோது சாமிநாதன் தட்டுத்தடுமாறி எழுந்து போய் மரமேஜை மேல் வைத்த யந்திரத்தில் பழுக்காத் தட்டைச் சுழல விட்டான்.

பசிக்கறதாடா ?

குருக்கள் பெண் கேட்டாள்.

பசி இல்லே. தாகம் இல்லே. மனசு நிறைஞ்சு கிடக்கு. இது என்ன தெரியுமா வசு ?

நான் என்னடா உன்னை மாதிரி சகல சாஸ்திரமும் படிச்சவளாடா ? என்னை மாதிரி அலையற ஆத்மா யாரோ இதுக்குள்ளே உக்காந்துண்டு சதா புலம்பிண்டு இருக்கு. அது மட்டும் தெரியறது.

சாமிநாதன் இல்லை என்றான். கையால் சுற்றி இயக்கும் அந்தப் பெட்டி பற்றி, படம் எடுக்கும் கறுப்புப் பெட்டி பற்றி, சீக்கிரமே வர இருக்கும் வெளிச்சக் செம்பு பற்றி, காகிதத்தில் விசைகள் விரையத் துரைத்தனத்தார் பாஷையில் எழுத்து அடிக்கும் யந்திரம் பற்றி, காளான் போல் புகை விரித்து ஒரு தீக்குடுக்கை வானத்திலிருந்து மண்ணில் விழுந்து லட்சக் கணக்கில் ஜனங்களை நிர்மூலமாக்கும் யுத்தம் பற்றி எல்லாம் விவரமாகச் சொன்னான்.

எனக்கு எதுக்குடா அதெல்லாம் சாமா ? நாலு மணி அரிசி நித்தியப்படிக்குக் கிடச்சிருந்தா நான் பாட்டுக்கு சுவாசிச்சு, நின்னு, நடந்து, தூரமாகி ஒதுங்கி, மலஜல விசர்ஜனம் செஞ்சு, குளிச்சு, மார் தொங்கிப் போய் வயசாகி, கண்ணுலே தெரை வந்து மறைச்சு, தவழ்ந்து முடங்கி சுருங்கி உசிரை விட்டுருப்பேன்.

சாமிநாதன் அவள் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தான்.

வா. இங்கே கஷ்டப்பட்டது போறும். அந்தப் பழுக்காத்தட்டுப் போக்கிரிகளை வண்டி கொண்டு வரச் சொல்றேன். ஏறிண்டு ரொம்ப முன்னாடி போயிடலாம். என் சிநேகிதா எல்லாம் நல்லபடியாக் கவனிச்சுப்பா. தாடி வச்சுண்டு, துரைத்தனப் பாஷை பேசிண்டு, துரை மாதிரி உடுத்திண்டு சில பேர். கொடியெல்லாம் பிடிச்சுண்டு இன்னும் கொஞ்சம் பேர். இங்கே அப்பப்ப வருவாளே. பார்த்திருக்கியோ ?

நாம அங்கெல்லாம் போக முடியாதுடா சாமா. இதோட இப்படியே ஒண்ணுமில்லாமப் போக வேண்டியதுதான்.

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தீப்பந்தம் ஒன்று வந்து மாடிக்குள் விழுந்தது. அடுத்து ஒன்று பற்றி எரிந்து கொண்டே சாமிநாதனின் மேசையில் விழுந்து எங்கும் வெளிச்சத்தைப் பரப்பியது.

மேனகை மாதிரி இருக்கேடி வசு.

சாமிநாதன் அவளை அணுஅணுவாக ரசித்துக்கொண்டே சொன்னான்.

தொடர்ந்து வீடு முழுக்க தீப்பந்தங்கள் விழுந்த வண்ணம் இருந்தன.

இன்னிக்கு என்ன தீபாவளியா ? இல்லே திருக்கார்த்திகையா ? இத்தனை ஜகஜ்ஜோதியா இருக்கு ?

சாமிநாதன் களிப்போடு சுற்றும் முற்றும் பார்த்து ஆனந்தமாக உச்சத்தில் கூவினான். அவனுக்கு ஆடிப் பாடவேண்டும் போல் இருந்தது. எழுந்து குதித்துக் கூத்தாட வேண்டும்.

எழுந்திருடி, குருக்கள் பொண்ணே.

படுடா. இப்படிப் போறதுதான் எனக்குப் பிடிச்சுருக்கு.

அவன் கடைசியாகத் தலையை உயர்த்தியபோது ஜ்வாலை பற்றி எரிந்து கொண்டு பழுக்காத்தட்டு சுழன்று கனமான சோகத்தை நீக்கமற எங்கும் அப்பி, சடாரென்று நின்றது.

நான் அக்னி. புனிதமானவன். என்ன எல்லாம் அறிய வேண்டுமோ அதனைத்தும் அறிந்தவன். என் கண்கள் ஒளிரும். வாய் நிலைத்த தன்மைக்கு வழி நடத்தும். நானே வாழ்க்கையின் சுவாசம். நானே வாயு. நானே சூரியன். எல்லா ஆஹூதிகளும் எனக்கே.

சிரவுதிகள் சொன்ன சாமவேத சம்ஹிதையின் மந்திரங்கள் சாமிநாதனைச் சூழ்ந்தன.

எல்லா ஆஹூதியும் உனக்கே. நானும்.

அவன் குருக்கள் பெண்ணை இறுக அணைத்துக் கொண்டான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:36 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்தைந்து


ராஜா புகை வாடை மூக்கில் ஆழமாக ஏறி, இருமலில் நித்திரை கலைந்து எழுந்தார்.

எங்கோ எதுவோ பற்றி எரிகிறது. இல்லை யாரையோ யாரோ இலுப்பெண்ெணைய் ஊற்றிச் சாவகாசமாக எரித்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொய்யா மரம், கொல்லைச் செங்கல், மச்சில் சார்பு வைத்துச் சரித்து அடுக்கிய ஓடு, துளசிச் செடி, அசுவினி உதிரும் கொடி, இடுப்பிலிருந்து விழுத்துப் போட்ட துணி, மீந்து போன சாப்பாடு, கழித்த மலம், சால் கட்டித் தேங்கிய மூத்திரம் என்று சகலமானதும் எரிகிறது.

புஸ்தி மீசைக் கிழவனை எரித்துக் கொண்டிருக்கிறார்களா ? அவன் அந்தப் பாப்பாத்தி மேல் கை வைத்து ஏடாகூடமாகி, இவன் உடம்பு மண்ணுக்கடியில் இருக்கும் வரைக்கும் இவனுக்குக் குறி விறைத்துக் கொண்டுதான் கிடக்கும். கொளுத்திப் போடு என்று முன்னோர்கள் தாக்கீது பிறப்பிக்க, அய்யர் சரியென்று சம்மதித்து நடவடிக்கை எடுக்க, மைத்துனன் மொட்டையனும் கிழவனின் வைப்பாட்டியும் பங்காளி வாந்திபேதிக் கிழவனும் ஆளுக்கொரு பக்கம் அவனைத் தோண்டி எடுத்துக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்களா ?

ராஜாவுக்கு ஒரு வினாடி வந்த யோசனையை சீபோ என்று புறந்தள்ளினார். இது அரண்மனை. அவர் சகல கெம்பீரத்தோடும் ராஜாங்கம் நடத்தும் இடம். புஸ்தி மீசைக் கிழவனைப் புதைத்தது அரண்மனைச் சிறுவயல் பக்கம், அதிகாலை நேரத்தில் குத்த வைக்கிற இடத்துக்குப் பக்கத்து இடுகாடு. அங்கே அய்யர் என்னத்துக்குப் போக வேண்டும் ? அவனை எடுத்து வந்து இங்கே அரண்மனைப் பக்கம் போட்டு வைத்து ஏன் நடு ராத்திரியில் கொளுத்த வேண்டும் ?

ராஜா மெல்லச் சாளரப் பக்கம் நடந்தார். அந்தப் பக்கம் இருந்து தான் புகையும் நெருப்பும் தெரிகிறது. யார் யாரோ பேய்கள் போல அங்கேயும் இங்கேயும் ஓடித் தீயைத் தணிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது நிழலும் வெளிச்சமுமாக மாறி மாறிக் கண்ணில் படுகிறது.

புகையிலைக்கடை அய்யர் வீடுதான் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வேறு விஷயம் இல்லை. என்னமோ விபத்து. அசம்பாவிதம் போல.

நாளை முதல் பழுக்காத் தட்டு சங்கீதம் கேட்காது என்பது கொஞ்சம் வருத்தமானது தான். ராஜா என்ன செய்ய முடியும் அதுக்காக ?

ராஜா சமாதானமாகி, படுக்கைக்கு ஓரம் வைத்த செப்புப் பாத்திரத்தில் ஒரு முறை சிறுநீர் கழித்தார். ராத்திரியில் எழுந்து கொல்லைப் பக்கம் நடக்க முடியாததால் இந்த ஏற்பாடு. ராப்பகலாகக் காவல் நிற்கச் சிப்பாய்கள் இருந்த போது கொல்லைக்கு நடக்கச் சாத்தியமாக இருந்தது. ராத்திரி எத்தனை பொழுதுக்கு எழுந்து சயன அறைக்கு வெளியே வந்தாலும் தூங்காமல் நிற்கிறவர்கள். ராஜா தலை தெரிந்ததும் பெரிய தீப்பந்தத்தைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு முன்னால் நடப்பார்கள்.

துரைத்தனம் கொடுக்கும் மானியத்தில் படை பட்டாளமாகச் சிப்பாய்களை வைத்துக் கொள்ள நிதி நிலைமை இடம் கொடுக்காத காரணத்தால் ராஜா அவர்களை வேண்டாம் என்று சொல்லி நிறுத்திப் போட்டார். கடைத் தெருவில் பலாச்சுளையும், ராத்திரி முழுக்க நிற்க வைக்கும் அதி வீரிய மயில் எண்ணெயும் விற்கிற அவர்களைத் தெருவில் எப்போது பார்த்தாலும் ராஜாவுக்கு மனம் இளகி விடும். மூத்திரம் முட்டிக் கொண்டு வரும். ஒரு காசு, இரண்டு காசு கொடுப்பது வழக்கம்.

அதிலும் மயிலெண்ணெய் விற்கிறவன் தெருவில் செத்த மயில்களைப் பாடம் பண்ணிப் பரப்பி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். இவரைப் பார்த்ததும் வேட்டியைத் திரைத்துக் கெளபீனம் தெரிய ஒரு முறை விரித்துக் கட்டிக் கொண்டு வேண்டா வெறுப்பாகவோ என்னமோ எழுந்து நின்று கும்பிடவும் தவறுவது இல்லை. கொட்டகுடித் தாசிக்கு அவன் சிநேகிதத்துக்கு ஆள் பிடிப்பதாக காரியஸ்தன் ஒரு தடவை சொன்னான்.

அவனும் அவன் கோவணமும் நாசமாகி இந்த நெருப்பில் எரிந்து போகட்டும்.

மூத்திரச் சட்டியை ஓலைத் தடுக்கால் மூடி விட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டார் ராஜா. பக்கத்தில் ராணி வாயைத் திறந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். ராத்திரிப் பூரா எரியும் திரி நனைத்த விளக்கு வெளிச்சத்தில் அவள் மீசை இல்லாத மொட்டையனுக்குப் பெண் வேஷம் கட்டினது போல் தெரிந்தாள். எதற்காக இப்படி அலறுகிறதுக்கு ஏற்பாடு செய்வது போல் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறாள் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:37 pm

வீட்டோட கொளுத்திப் போடணும்னு மட்டும் நினைக்காதே. அழிஞ்சிடுவே. வம்சத்தோட.

ராஜா ஒரு சிலிர்ப்போடு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்.

ராணி அலறினாளே, கொலைச் சிந்து பாடிக் கொண்டிருந்தபோது. அந்தப் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தி குரல் வீறிடுகையில் ஒரு நிமிஷம் சூழ்ந்த அமானுஷ்யம் கூடம் முழுக்கச் சாவை அப்பிப் போனது அப்போது.

கொலைச் சிந்துக்காரர்கள் சட்டென்று கோடாங்கி அடித்து அம்மன் மகிமையை உச்சக் குரலில் பாட ஆரம்பிக்க, காது வளர்த்த வைப்பாட்டியும் மற்றவர்களும் என்ன எது என்று புரியாமல் கற்பூரம் கொளுத்தி ராணிக்கு முன்னால் தீபாராதனையாகச் சுற்ற, அவள் மூர்ச்சையாகிச் சாய்ந்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜா எச்சில் கையோடு ஓடி வருவதற்குள் மைத்துனன் வீட்டுக்காரியான புலியடிதம்மம் பெண்பிள்ளையும் சேடிப்பெண்ணும் அவளை அப்படியே தலையிலும் காலிலும் பிடித்துத் தூக்கி வீட்டுக் கூடத்துக்குக் கொண்டு வந்து புஸ்தி மீசைக் கிழவன் கிடந்த இடத்துக்குப் பக்கமாகப் படுக்க வைத்தார்கள்.

ராஜா இடது கையால் தென்னோலை விசிறியை வாங்கிக் குனிந்து தரையில் உட்கார முயற்சி செய்து முடியாமல் போக அந்த விசிறியால் தனக்குத் தானே விசிறிக் கொண்டு நின்றிருந்தார்.

சாவு வீடு இல்லியா ? ஏதோ காத்து கருப்போ, தெய்வமோ கடந்து போயிருக்கு போலே இருக்கு. மருதையன் கருமாதி வரைக்கும் இப்படி நடமாட்டம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கும். சுத்த பத்தமா இருக்கணும்ப்பூ.

பங்காளிக் கிழவன் சொல்ல, ராஜாவின் மைத்துனர்கள் அதேதான் என்று உடனே ஆமோதித்தார்கள். வயசு காரணமாக அந்தப் பங்காளிக் கிழவன் இந்த இடத்தில் நிர்வாகப் பதவியைத் தன்னிடமிருந்து தட்டிப் பறித்ததை ராஜாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மாப்புளத் தொரே. கை காய நிக்கறீகளே.

புஸ்தி மீசையான் வைப்பாட்டி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள்.

இன்னும் கொஞ்சம் சோறும் கறியும் தயிரும் கிடாரங்காய் ஊறுகாயுமாக ஆகாரம் பண்ண வேண்டும் என்று ராஜாவுக்கு வயிறு சொன்னது.

என்னத்த. இனிமேலே சோத்துலே கையை நனைக்க முடியாது. மரியாதை இல்ல. இவ வேறே எக்குத்தப்பா சத்தம் போட்டு விழுந்து கிடக்கா.

ராணி அன்றைக்கு அரண்மனைச் சிறுவயல் வீட்டுக் கூடத்தில் அப்படியே தொடர்ந்து நித்திரை போய்விட்டாள். கொலைச் சிந்து பாடகர்களை வீட்டுக்கு வெளியே இட்டுப்போய்க் குமருகள் ரிஷிபத்தினி கள்ளப் புருசனைக் கூந்தலில் ஒளித்து வைத்துப் பேனாக எடுத்து வந்த கதையை சத்தம் தாழ்த்திச் சொல்ல வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ராஜாவுக்கு அதில் கலந்து கொள்ள இஷ்டம் என்றாலும் கால்மாடு தலைமாடு முழுக்க முன்னோர் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

பாப்பாத்தியம்மா நல்லவளோ கெட்டவளோ. நம்ம வீட்டுக் கொழந்தைக்கு புத்தி நிதானம் வேணும்.

எந்தக் குழந்தைக்கு என்று புரியாமல் கேட்டார் ராஜா.

அதான் 'பா உன்னோட வீட்டுக்காரி.

அவ என்ன செய்யணும் ?

ஒண்ணும் செய்யாம இருந்தாலே போதும். அதது தன் பாட்டுக்கு நடக்கும்.

குளிக்க வேணாமா ?

வீட்டுக்குள்ளாற குளிக்கச் சொல்லேன்.

சரி சொல்லறேன். கொத்தன் சொல்லுறான் ஸ்நான அறை கட்டி நிறுத்தப் பத்து துரைத்தன ரூபா ஆகுமுன்னு. நான் பணத்துக்கு எங்கே போவேன் ?

ராஜா பஞ்சப் பாட்டு பாட, அவர்கள் ஏதோ பேசுவதற்குள் புஸ்தி மீசைக் கிழவன் சாராயம், சுருட்டு எல்லாம் வேணும் என்று ராஜா கையைப் பிடித்து எழுப்பிப் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான்.

இங்கே தொரைங்க எல்லாம் நாசிகா சூரணத்தோட அலையறானுங்க. அதுவும் ஏற்பாடு செய் கருமாதிக்கு.

துரை மாதிரி உத்தரவு போட்டான்.

அப்ப எனக்கு வாய் உபச்சாரம் செய்யுடா வக்காளி என்றார் கோபத்தோடு ராஜா.

கிழவன் நிறுத்தாமல் வைதான். இவனோட இளவு கொண்டாடறதுக்கே எங்க நேரம் எல்லாம் போயிடுது. நீ வேறே எதுக்கு அவனை உசுப்பி விடறே ?

முன்னோர்கள் ராஜாவைத் தான் கோபித்துக் கொண்டார்கள். எது நடக்கணுமோ அது நடக்கட்டும். நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும். அம்புட்டுத்தான். மருதையா, என்ன நான் சொல்றது ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:39 pm

குதிரை மாதிரி முகத்தோடு ஒரு முன்னோன் தலையாட்டிக் கொண்டு சொல்லிவிட்டு, புஸ்தி மீசைக் கிழவனைத் தரதர என்று கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போக மற்றவர்களும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு புகையாகக் கலைந்து போனார்கள்.

ராஜாவுக்கு அதெல்லாம் இந்த ராத்திரியில் நினைவு வர, அயர்ந்து தூங்கும் ராணியைப் பார்த்தார்.

இவள் வைத்த தீயா இது ?

தூங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பித் தீ வைத்தாயோடி என்று விசாரிப்பது ராஜ லட்சணம் இல்லை. குறைந்த பட்சம் புருஷ லட்சணம் கூட இல்லை என்று பட்டது.

மெல்ல எழுந்து நித்திரை பிடிக்காமல் வெளியே வந்தார்.

அவள் வைத்ததாகத் தான் இருக்கட்டுமே. குளிக்கும்போது குல ஸ்திரி மேல் கண் போடுவது நீசமான விசயம் இல்லையோ. அதனால் தான் வீட்ைடைப் பொசுக்கிப் போட்டது. தர்மம் என்று ஒன்று இருக்குதே. இன்றைக்கு இப்படி எரியாவிட்டால் நாளைக்கு வேறே மாதிரி யாராவது சபித்து எல்லாம் பஸ்பமாகிப் போயிருக்கும்.

ஊரில், அக்கம் பக்கத்தில் எத்தனை ஊருணி, ஏரி, குளம் இருக்கிறது ? அங்கெல்லாம் எத்தனை புஷ்பிணியான பெண்கள், கர்ப்ப ஸ்திரிகள், வீட்டு விலக்காகி மூன்றாவது நாளானவர்கள், இளம் வயதுக் கைம்பெண்டுகள் எல்லோரும் குளிக்கிறார்கள். தண்ணீர் மொண்டு வருகிறார்கள். இந்த அடுத்த வீட்டுப் பழுக்காத் தட்டு சங்கீதப் பயல்கள் ராணியை எட்டிப் பார்க்காத போது, சங்கீதம் கேட்காத போது காலாற நடந்து போய் அதையெல்லாம் பார்த்திருப்பார்கள்.

ஊருணி எல்லாம் வெக்கையின் சூட்டில் வரண்டு கிடப்பதால் அங்கே யாரும் இப்போது குளிப்பதில்லை என்று நினைவு வந்தது.

அரண்மனைக்கு வெளியே நடந்து அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த குடிபடைகளை என்ன சமாச்சாரம் என்று விசாரிக்கலாம் என்றும் ராஜாவுக்கு அடுத்து ஒரு யோசனை வந்தது.

உம்ம சோலி மயித்தைப் பாத்துட்டுப் போம் என்று யாராவது இருட்டைச் சாக்காக வைத்து வார்த்தை விட்டுவிடக் கூடும். அவருக்கு என்னமோ அந்தப் பழைய ராக்காவல் சிப்பாய் நினைவில் முளைத்தான். கொட்டகுடித் தேவடியாளுக்கு சிநேகிதம் பிடிக்க ஆள் கிடைக்காமல், முழங்கையில் மயில் எண்ணெயைப் பூசிக் கொண்டு இங்கே எங்கேயாவது புகையிலையைக் குதப்பிக் கொண்டு நிற்பான். அவன் நிச்சயம் சொல்வான்.

அய்யர் வீடு வடமேற்கு திசையில் நீண்டு போகிற கல் பாவிய வீதியில் தானே இருக்கிறது ?

அங்கே போய் இந்த ராத்திரியில் கதவைத் தட்டுவது உசிதமானதில்லை. ராஜா என்ற மரியாதையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படிப் போனாலும் என்ன விசாரிப்பது ?

அவர் தான் அடுத்த பெளர்ணமியன்றைக்கு யந்திரம் நிர்மாணித்துப் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தியம்மாளை அவர்கள் வீட்டோடு அடங்கி இருக்க வழி செய்து தருவதாகச் சொன்னாரே.

உங்க சாதிக்காரங்க மேலே செய்வினை செய்யணும்னு இல்லே சாமி.

ராஜா வராகனைக் கொடுத்தபடி சொன்னபோது, அய்யர் அப்படியொன்றும் இல்லையென்றார்.

அவாள்ளாம் ஸ்மார்த்தா. நாங்க வைஷ்ணவா. அது இல்லாட்டாலும் இது தொழில். அதோட ஜாதியைப் போட்டுக் குழப்பிக்கக் கூடாதுன்னு இருக்கா பெரியவா எல்லாம்.

அய்யர் சொன்னபோது அவர் தொழிலிலும் நாணயத்திலும் அவர் வீட்டு முன்னோர் மேலும் மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது ராஜாவுக்கு. அய்யருடைய முன்னோர்கள் யாரும் சாராயமோ, நாசிகா சூரணமோ எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தோன்ற அவர் மேல் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

அய்யர் வடமொழியில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக, தேவதைகளுக்குப் ப்ரீதியான செய்யுளை எழுதி அதை யந்திரத்தில் தேவதைகள் நிற்க இடம் விட்டது போக மிச்ச இடத்தில் பக்கத்துக்கு ஒன்றாகப் பதித்து, அந்த யந்திரத்தை மேற்குப் பார்த்து, அதாவது புகையிலைக் கடைப் பார்ப்பான் கிரஹம் இருக்கிற திசை நோக்கி நிறுத்தினால், ராணிக்கு பிரேத அவஸ்தை எல்லாம் ஒழிந்து சொஸ்தமாகி விடும் என்று சொல்லிப் போனார்.

வடமொழி ஸ்லோகத்தைக் காரைக்குடியில் ஒரு வித்துவானிடம் எழுதி வாங்கிக் கொள்வதாகச் சொன்ன அவர், தமிழில் அது கடைசி அடியில் பிறப்பு என்றபடி முடியும் இயற்சீர் வெண்பாவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். தளை தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், பிழையான வெண்பாவை யந்திரத்தில் ஏற்றினால் தேவதைகள் சபித்துப் போடுவார்கள் என்றும் அது பின்னும் கஷ்டத்தில் கொண்டு விடும் என்றும் கூடச் சொல்லியிருந்தார் அவர்.

வெண்பா இயற்றுவதில் கொட்டகுடித் தாசியை மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது என்ற அவர் தானே ஆளனனுப்பித் தன் அகத்துக்கு அவளை வரவழைத்து இயற்றி வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்.

அவள் வேண்டுமானால் அரண்மனையில் சவுகரியமாக ஒரு பொழுது இருந்து அதைச் செய்யட்டுமே ?

ராஜாவுக்கும் அவளை ஏதாவது ஒரு சாக்கு வைத்து அரண்மனைக்கு அழைத்துப் பார்க்க வேண்டும் போல் இருந்தது உண்மைதான். ஆனால் ராணி பக்கத்தில் இருக்கும் வரை அதெல்லாம் நடக்காது. அவள் பகலில் தூங்கும் போது கிடைக்கும் சொற்பப் பொழுதில் கொட்டகுடியாளைக் கூப்பிடலாம். ஆனால் ஜாக்கிரதையாக எழுத்தெண்ணிப் பரிசோதித்துப் பிறப்பு என்று முடியும்படிக்கு அவள் எழுதித் தருவதற்குள் ராணி நித்திரை கலைந்து எழுந்து விடுவாள். இடைப்பட்ட பொழுதில் சேடிப் பெண்ணுக்கு வேண்டுமானால் காசு கொடுத்துக் கால் பிடித்து விடலாம். அவள் பாட்டு எல்லாம் இயற்ற மாட்டாள்.

அய்யருடைய யந்திரத்துக்குத் தேவையே இனிமேல் இருக்காது என்பது போல் புகையிலைக்கடை அய்யர் வீடு பற்றி எரிந்து அடங்கிக் கொண்டிருந்தது. ஒரு பெருஞ் சத்தத்தோடு மர உத்தரங்கள் தீயோடு கீழே விழ, சுற்றி நின்றவர்கள் கூப்பாடு இட்டபடி ஓடினார்கள்.

அவர்கள் அரண்மனைப் பக்கம் வருவதற்குள் ராஜா வேகமாக உள்ளே நடந்தார்.

ஜோசியக்கார அய்யருக்கு ஒரு வராகன் வீணாகத் தத்தம் கொடுத்திருக்க வேண்டாம் என்று அவருக்குப் பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:46 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்தாறு


அந்த வயசனைச் சாடிப் பறக்க விட்டு, நீங்களெல்லாரும் வீட்டில் சுகமாயிட்டு அவல் கேசரியும் இலையடையும் கழித்துக் கொண்டிருந்தீர்களா?

கருநாகப்பள்ளி சங்குண்ணி நாயர் குப்புசாமி அய்யனிடம் சிரித்தபடி கேட்டான்.

பகவதியைப் பெண்ணு பார்த்து சம்பிரதாயமாகத் தாம்பூலம் மாற்றிக் கொண்டு அரசூர் புகையிலைக்கடை ஐயர் குடும்பமும், கூட வந்தவர்களும் கிளம்பிப் போனதற்கு நாலு நாள் கழித்து அது.

அதை ஏன் கேக்கறே போ. என் சேட்டன் கிட்டனுக்குத் தான் செலவு ஜாஸ்தி இந்த வகையிலே.

குப்புசாமி அய்யன் பாக்குவெட்டியில் அடைக்காயைத் துண்டித்துக் கொண்டு சொன்னான்.

கோழிக்கு முலை வந்தது போல வயசன் என்னத்துக்காக்கும் பறக்கணும். நமக்கு அது மாதிரி வாய்ச்சாலும், ஓடிச் சாடி இன்னும் நாலு சக்கரம் சஞ்சியில் பணம் சேர்க்கலாம்.

குப்புசாமி அய்யன் வெற்றிலைச் சாறு தலைச்சோறில் ஏற்றிய லகரியோடு தலையாட்டினான். ஏதாவது வர்த்தமானம் சொல்லியும் கேட்டும் கொண்டிருந்தால் போதும் இந்த நேரத்தில். நம்பூத்திரிகள் பற்றிய சிரிப்பு வரவழைக்கிற விநோதக் கதைகள் சொல்வதில் சங்குண்ணி வெகு சமர்த்தன். கிட்டாவய்யன் மாமனார் ஊரோடு தாழப் பறந்து போனதை விடப் பேச ரசமான விஷயமாக அதெல்லாம் இருக்கும்.

சங்குண்ணி, நம்பூத்ரி பலிதம் ஒண்ணு சொல்லடா.

குப்புசாமி அய்யன் வெற்றிலைச் சாறை உமிழ்ந்துகொண்டே சொன்னபோது, எடுபிடிக்கார கேசவன் வந்து கூப்பிட்டான். வந்துடறேன் என்று எழுந்து போனான் சங்குண்ணி.

வெற்றிலை லகரி போகத்தின் லகரி போல் உச்சத்துக்குப் போகக் குப்புசாமி அய்யன் சற்றே கண்ணை மூடிக் கொண்டான்.

பகவதிக்கு வாய்த்த மாப்பிள்ளை நல்ல லட்சணமா இருக்கான். கறுப்புத்தான். ஆனாலும் நல்ல களையில்லியோ ?

விசாலாட்சி கேட்டது அவன் நினைவுக்கு வந்தது. அவளுக்கு சுபாவமாகவே எல்லோர் மேலும் வாத்சல்யம் பொங்கி விடும். அது நெஞ்சுக்குள்ளே நிறைந்து நிறைந்து வர, வார்த்தையிலும் பார்வையிலும் மொண்டு எடுத்து வெளியே வாரி வீசி வீசித் தெளித்துக் கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷமே அவளை இன்னும் பிரியம் காட்ட வைத்தது.

அது நேரம் வெளுத்தபோது பதுங்கிப் பதுங்கி அடுக்களையில் நுழையும் பூனைக் குட்டியாக இருந்தாலும், நடு மத்தியானம் கரண்டிச் சோறை எதிர்பார்த்தபடி தோட்டத்து வாழைக்குலையில் ஏறி விளையாடி இருக்கும் அணில்பிள்ளையாக இருந்தாலும், ராத்திரி சேகண்டியும் தோளில் அழுக்கு வஸ்திர சஞ்சியுமாகப் பாடிக் கொண்டு தெருவில் பிச்சையெடுத்துப் போகிறவனாக இருந்தாலும்.

அவன் பாட்டு மனசுக்கு எவ்வளவு இதமா இருக்கு கேட்டேளா ? விசப்பும் ஷீணமும் அவன் தேகத்துக்குத் தான் போல் இருக்கு. மனசுக்கு அதெல்லாம் கிடையாதோ என்னமோ.

சேகண்டிக் காரனின் மண்சட்டி நிறையச் சோற்றையும், கூட்டானையும் வர்ஷித்துவிட்டு வீட்டுக்குள்ளே வந்து குப்புசாமி அய்யனிடம் சொன்னாள் விசாலாட்சி.

அந்த யாசகன் இப்போ வயறு நிறையச் சாப்பிட்டுட்டு வாசல்லே உக்காந்து பாடப்போறான். பாட்டு வாத்தியான் தெலுங்கு பிராமணன் ஜாகையைக் காலி செஞ்சுண்டு அவன் தேசத்துக்கே ஓடப் போறான் பாத்துக்கோ. அதாக்கும் நடக்கப் போறது.

குப்புசாமி அய்யன் அவளைச் சீண்டினான். பகவதியின் ஜன்ம நட்சத்திரம் வந்த திருவோண நாள் ஆனதால் அரசூர் குடும்பம் புறப்பட்டுப் போனதும் வீட்டில் எல்லோரும் அம்பலத்துக்குப் போயிருந்தார்கள். விசாலாட்சி தூரம் குளித்த நாள் என்பதால் வீட்டில் இருக்க வேண்டிப் போனது. அது நல்லதுதான் என்று பட்டது குப்புசாமி அய்யனுக்கு.

நீங்க ஒரு இஞ்சி. உங்க கிட்டப் போய்ச் சொன்னேன் பாருங்கோ.

விசாலாட்சி செல்லமாக அவனை அரையில் தடவினாள்.

அவளோடு அந்தக் கணமே கலக்க வேண்டும் என்று குப்புசாமி அய்யனுக்கு வெறியெழ, வெற்றிலையும், பாக்குத் துகள்களும், பூவும், மஞ்சள் அட்சதையும், காலடி மண்ணுமாகச் சிதறிய ஜமக்காளம் விரித்திருந்த கூடத்தில் அவளை வலுக்கட்டாயமாகக் கிடத்தியபோது யாரோ வாசல் கதவைப் பலமாகத் தட்டுகிற சத்தம்.

நேரம் கெட்ட நேரத்துலே தான் உங்களுக்கு இதெல்லாம் வரும்.

விசாலாட்சியின் கோபம் குப்புசாமி அய்யன் மேல் இல்லை என்று தெரிந்தாலும் அவன் வாசல் கதவைத் திறக்கப் போகாமல் அசதியோடு கூடத்து ஜமக்காளத்திலேயே மல்லாந்து படுத்தான். மதியம் பழுத்த சுமங்கலியான ஒரு கிழவி வாயைச் சுற்றித் துணி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இடத்துச் சுவரில் அவள் எண்ணெய்த் தலை பதிந்து ஒரு சித்திரத்தை வரைந்திருந்தது கண்ணில் பட்டது. நெருங்கி வரும் கருத்த வெளவால் போல் இருந்தது அது.

விசாலாட்சி வாசல் கதவைத் திறந்தாள். கொளுத்திப் பிடித்த தீப்பந்தமும் கையுமாக யாராரோ நின்று கொண்டிருந்தார்கள். பின்னால் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து உடம்பு முழுக்கப் போத்தி யாரையோ இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் அம்பல மேல்சாந்திக்காரன் மகன் நாராயணன் எம்ப்ராந்திரி.

இறக்கி வைத்த கட்டிலில் சிநேகாம்பாளின் தகப்பனார். விசாலாட்சிக்குக் கொழுந்தன் கிட்டாவய்யனின் மாமனார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:47 pm

விசாலாட்சி போட்ட சத்தத்தில் விழுந்தடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்தான் குப்புசாமி அய்யன்.

வயசனுக்கு உடம்பில் உயிர் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட நார்க்கட்டில் பக்கம் குனிந்து அவர் நாடியைப் பிடித்துப் பார்த்தான் அவன்.

அவருக்கு ஒண்ணும் ஆகலே. வெடி வழிபாட்டுக்காரனுக்குத் தான் காலிலே பருக்கு. விரலைக் காணோம்.

தூக்கி வந்த ஒருத்தன் சொன்னான்.

இவர் வீட்டு மச்சில் தானே அடைந்து கிடக்கப்பட்டவர் ? கொஞ்சம் மிதந்து கொண்டு போய்த் தோட்டத்தில் மாமரச் சுவட்டிலோ வேப்ப மரத்தை ஒட்டியோ மூத்திரம் ஒழித்துவிட்டு மேலே போவார். போன சனியாழ்ச்சைக்கே இவரை ஆலப்பாட்டில் விட்டு வரவேணும் என்று தம்பி கிட்டாவய்யனிடம் சொல்லி வைத்திருந்தான் குப்புசாமி அய்யன்.

இல்லே அண்ணா. பிஷாரடி வைத்தியர் வந்து பார்த்து, பலகீனம் காரணமாகத்தான் இவர் இப்படிக் கோழியிறக்கை போல மிதக்கிறார் என்று சொல்லி கால் வீசை குளிகை கொடுத்துப் போனார். காலிலும் உச்சந்தலையிலும் புரட்டிக் கொள்ளப் பிண்டத் தைலம், குங்கிலிய நெய் எல்லாம் கூட உண்டு. துரைத்தனப் பணமாக ரெண்டு ரூபாய் வாங்கிப் போய்விட்டார். ஒரு பத்து நாளில் பூரண சுவஸ்தமாகி விடுமாம்.

கிட்டாவய்யன் கையில் பிண்டதைலமோ, சிநேகாம்பாளுக்கு எண்ணெய் புரட்டிக் குளிப்பாட்டியதோ வாசனை யடிக்கச் சொன்னான் அப்போது.

பகவதியைப் பெண்ணு பார்க்க பாண்டிச் சீமையிலேருந்து பெரிய மனுஷா எல்லாம் வரப் போறா. இவர் இப்படி ஏடாகூடமாப் பறந்து சங்கடப் படுத்திடப் போறார். அப்புறம், தோட்டப் பக்கமே போகமுடியலேடா கிட்டா. மாமரச் சுவடோ, தென்னைமரச் சுவடோ இல்லே வேம்போ எல்லா இடத்திலேயும் மூத்திர வாடை. உன் அகத்துக்காரியும், காமாட்சியும் விசாலியும் பொழுது முழுக்கக் கிணத்துலே வெள்ளம் கோரி வாரி அடிச்சும் போகாத வாடை.

பிஷாரடி வைத்தியர் கிட்டே கேட்டு அதுக்கும் குளிகை வாங்கிடலாம் அண்ணா. அப்புறம் குடம் குடமாக் கொட்டினாலும் வாடையே வராது.

கிட்டாவய்யனை சிநேகாம்பாள் சொக்குப்பொடி போட்டதில் ஆலப்பாட்டு வயசன் மாமனாரின் மூத்திர வாடை அவனுக்கு நாசியில் ஏறவில்லை என்பது புரிந்தது குப்புசாமி அய்யனுக்கு. விசாலாட்சிக்குத் தகப்பனார் காலமாகாமல் இருந்து பறக்க ஆரம்பித்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும்.

ஆனாலும், கிட்டாவய்யனுக்கு வாய்த்த மைத்துனர்கள் குப்புசாமி அய்யனின் மைத்துனர்கள் போல் இல்லை. நாலு தடவை ஆளனுப்பிச் சொல்லிவிட்டும், வயசனை வந்து கூட்டிப் போக அவர்களுக்கு சமயம் வாய்க்காமல் ஊர் முழுக்கப் பில்லி சூனியம் ஏவலை எடுத்துக் காசு பண்ணுவதிலேயே மும்முரமாக இருந்தார்கள் அவர்கள்.

வயசர் பாவம். இருந்துட்டுப் போகட்டும். சாப்பாடு கொடுத்து, குளிகையும் கொடுத்து மச்சுக் கதவைச் சார்த்தி வைத்தால் அவர் பாட்டுக்குத் தூங்கி விடுவார். பக்கத்தில் வேண்டுமானால் ஒரு மூத்திரச் சட்டியைக் கட்டிலுக்கு அடியே வைத்து விடலாம்.

விசாலாட்சி சொன்னபோது சிநேகாம்பாள் அவள் தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

மன்னி, நீங்க க்ஷேத்ரத்திலே தேவி மாதிரி. பகவதியைப் பொண்ணு பார்க்க வரும்போது என் தோப்பனாராலே எந்தத் தடசமும் இருக்காது. நானும் இவரும் அதுக்குப் பொறுப்பு.

சிநேகாம்பாள் சொன்னது போலவே மணிக்கூறுக்கு ஒரு தடவை கிட்டாவய்யன் மச்சுக் கதவைத் திறந்துபோய் வயசனைக் கையைப் பிடித்து நிறுத்தி முன்னால் மண்சட்டியை வைத்து, படுக்கை நனைக்கும் குழந்தையை நல்ல தூக்கத்தில் அமிழ்கிறதுக்கு முன் எழுப்பிச் சுமந்து வாசலுக்கு வந்து நீர் கழிக்க வைக்கிற தகப்பன் போல் சிரத்தையாகச் செயல்பட்டான்.

கிழவர் கீழேயோ தோட்டத்துக்கோ இறங்கவில்லைதான். ஆனாலும் பிஷாரடி வைத்தியர் சொன்ன விகிதத்துக்கு மேலே அதிகமாகவே குளிகைகளைக் கிட்டாவய்யனும் சிநேகாம்பாளும் அவருக்குக் கழிக்கக் கொடுத்ததாலோ என்னமோ அவர் வழக்கத்துக்கு விரோதமாக வெளிப்புறமாகச் சாடி இறங்கிப் போய்விட்டிருந்தார். அது எப்போது நடந்தது என்று குப்புசாமி அய்யனுக்குப் புரிபடவில்லை.

வயசனைக் கட்டிலை விட்டு இறக்கிக் கூடத்தில் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவர் அப்போதும் கண் திறக்கவில்லை. மேலே மூடி இருந்த அழுக்கு வஸ்திரத்தை எடுக்கப் போனான் குப்புசாமி அய்யன்.

அய்யோ அதொண்ணும் வேணாம். வயசன் முழு நக்னனாக்கும்.

அம்பல மேல்சாந்திக்காரன் மகன் நாராயணன் சொன்னான்.

குப்புசாமி அய்யன் வேகமாக உள்ளே போய் ஒரு உத்தரியத்தை எடுத்து வந்து, அழுக்குத் துணியை விலக்கி விட்டு வயசன் அரையில் மூட, விசாலாட்சி சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். வாரணமாயிரம் பாடிய பழுத்த சுமங்கலிக் கிழவி தலை சாய்த்து உட்கார்ந்திருந்த இடம் அது.

அவளுக்கும் அங்கே ஒரு வெளவால் தெரிந்தது. நீ அகத்துக்காரனை அரையில் தடவறபோது இங்கே என்ன பெகளம் ? நான் மிச்சமும் பார்க்கணும்னு எம்புட்டு ஆசையா இருந்தேன் தெரியுமா என்று கேட்டது அது.

சுமங்கலிக் கிழவியோடு வந்தியேன்னு சும்மா விடறேன். ஒழிஞ்சு போ நாறச் சனியனே.

விசாலாட்சி தலையைத் திருப்பிக் கொண்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:48 pm

வெடி வழிபாட்டுக்காரனுக்கு என்ன ஆச்சு ?

குப்புசாமி அய்யன் நாராயணன் எம்பிராந்தரியைக் கேட்டான்.

அதை ஏன் கேக்கறீர் ? இவர் தரையிலே கால் பாவாம மிதந்த படிக்குத் தெருவோட போனாரா. வீட்டு வாசல்லே உக்காந்திருந்த பெண்டுகள் எல்லாம் பிரேத உபாதை பிடிச்ச யாரையோ ஷேத்திரத்துக்கு வேறே யாரோ மந்திர உச்சாடனத்துலே செலுத்திண்டு இருக்கா. குறுக்கே போக வேண்டாம்னு விலகிண்டு வீட்டுக்குள்ளே ஓடிப் போனா. தெருவில் சப்பரம் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வித்தைக்காரன்னு நினைச்சு கூடவே கூச்சலும் கும்மாளமுமா ஓடறபோது பெரியவா பிடிச்சு இழுத்து விளையாடப் போகச் சொன்னா. இவர் க்ஷேத்ரத்துக்குப் பக்கமாப் போனபோது பலமா ஒரு காற்று.

அப்புறம் ?

விசாலாட்சி கேட்டாள்.

எல்லோரும் சொல்ல ஆரம்பித்ததால் சப்தம் குழம்பிப் போன சூழ்நிலையில் குப்புசாமி அய்யனுக்குப் புலப்பட்டது இதுதான்.

காற்றில் வயசன் எவ்வி உயரே உயரே பறந்தான். அப்போது அவன் இடுப்பு முண்டும், உள்ளே தரித்த கெளபீனமும் விடை வாங்கிப் போய் அம்பலத்துக்கு அடுத்து எங்கேயோ போய் விழுந்து விட்டது.

நக்னமான வயசன் கோவில் கொடிமரப் பக்கம் இறங்கி அற்ப சங்கையைப் பறந்தபடி தீர்த்துக் கொண்டபோது, மேல்சாந்தி அலறிக் கொண்டே ஓடி வந்து கோவிலை அடைத்துப் பூட்டிவிட்டு, தீட்டு நேர்ந்ததற்குப் பரிகாரம் என்ன என்று பிரச்னம் வைக்கக் கிளம்பிப் போனார். வயசனை அவர் எதுவும் திட்டவோ அடிக்கவோ செய்யவில்லை.

அவனுக்குள் புகுந்த பிசாசு ஏதோ இந்த மாதிரி விஷமம் செய்ய வைப்பதாகப் பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னபோது கோவில் தரிசனத்துக்கு வந்த பிஷாரடி வைத்தியர் இது பலகீனத்தால் ஏற்பட்டதே தவிர வேறு ஒரு சுக்கும் இல்லை என்றார். தருக்கமும் விஞ்ஞானமுமே உலகை இனி உய்விக்கும் என்று அவர் மூக்கில் புகுந்த கொதுகை எடுத்து விட்டுக் கொண்டு அறிவித்தபோது, மேல்சாந்தி பேய், பிசாசு, பூதம், துர் ஆவிகள் பற்றி ஆதியோடந்தமாக எடுத்துத்தோதத் தொடங்கினார். ஏகப்பட்ட கிரந்தங்களையும் அவற்றில் இடம்பெற்ற சூத்ரங்களையும், ஸ்லோகங்களையும் இதற்கு ஆதாரமாகக் காட்டினார் அவர்.

கூடியிருந்த எல்லோரும் இந்த வாதப் பிரதிவாதங்களில் மூழ்கி இருந்தபோது, வயசன் திரும்பப் பறந்து போய், அம்பலத்தில் வெடி வழிபாடு செய்யும் இடத்தில் மிதந்தான். அங்கே வழிபாடுக்காகக் கொளுத்திய வெடி வெடித்த பெருஞ்சத்தத்தில் நித்திரை கலைந்து நேராக அவன் தரையில் விழுந்தது வெடி வைப்புக்காரன் மேல்.

கையில் எடுத்த வெடியைக் கொளுத்திக் கொண்டிருக்கும் போதே, ஆகாயத்திலிருந்து மூத்திர வாடையோடு ஒரு நக்னமான வயசன் தன் மேல் விழுந்தது கண்டு திடுக்கிட்ட வெடிக்காரன் வேறு பக்கமாக உருள, கையில் எடுத்திருந்த வெடி வெடித்து அவனுக்குக் காயம். காலில் ஒரு சுண்டுவிரல் போன இடம் தெரியவில்லை. எல்லோரும் இருட்டில் அதைத் தேடிக் கொண்டிருந்த போது, பிஷாரடி வைத்தியர் சொன்னபடி வயசனைக் கட்டிலில் கிடத்தினார்கள். இங்கே தூக்கிக் கொண்டு வரும்போதே அவன் திரும்பத் தூங்கி விட்டான்.

வெடிக்காரன் கால் சுவஸ்தமாக ஏற்படும் செலவு முழுக்கவும் கிட்டாவய்யன் தலையில் விழும் என்று குப்புசாமி அய்யனுக்குப் பட்டது.

வைத்தியர் சொல்வது போல் இது பலகீனம் காரணமாக ஏற்பட்டது தான். என் தகப்பனார் நினைப்பது போல் பிரேத உபாதை இல்லை. இந்த பரசுராம பூமியில் எப்போது தான் எல்லோருக்கும் உண்மையான ஞானம் வாய்க்குமோ தெரியலியே.

சலித்துக் கொண்டே நாராயணன் எம்பிராந்திரியும் அவனுடைய கூட்டுக்காரர்களும் இறங்கிப் போனபிறகு கிழவன் வேட்டியை இடுப்பில் சுற்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

'வீட்டோட வச்சுக் கொளுத்தியாச்சு, குப்புசாமி '

அவன் குரல் தெளிவாக இருந்தது அப்போது.

எடோ குப்புசாமி. உக்கார்ந்தே தூங்கறியா என்ன ? நீயும் வயசன் மாதிரி பறந்து என் பரம்பில் மூத்ரம் ஒழிக்கப் போறே.

சங்குண்ணி விலாவில் குத்தியபோது குப்புசாமி கண்ணைத் திறந்து பார்த்தான்.

யார் வீட்டை யார் கொளுத்தியிருப்பார்கள் ? அவனுக்கு இன்னும் புரியவில்லை.

வயசனிடம் கேட்கலாம் என்றால் அவனுடைய பிள்ளைகள் முந்தாநாள் வந்து அவனை ஆலப்பாட்டுக்குக் காளைவண்டியில் கூட்டிப் போய்விட்டார்கள். அவன் அப்போது பூரண சுகம் அடைந்து இருந்தான். கால் தரையில் பட வீட்டுக்குள் நடந்து திரிந்தான்.

ஆனாலும் மாமரச் சுவட்டில் குத்த வைப்பதை ஏனோ அவன் நிறுத்தவே இல்லை.

Sponsored content

PostSponsored content



Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக