புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
13 Posts - 25%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
2 Posts - 4%
Rutu
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
1 Post - 2%
சிவா
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
1 Post - 2%
viyasan
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
10 Posts - 83%
Rutu
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 7 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:19 pm

புஸ்தி மீசைக் கிழவனின் கேதம் கழிந்து வந்த ராஜா முதல் வேலையாக அய்யரைக் கூட்டிக் கொண்டு வா என்று சகலருக்கும் உத்தரவு பிறப்பிக்க, நாலைந்து கிங்கரர்கள் அவர் பயணம் கிளம்பிக் கொண்டிருந்தபோது வாசலில் வந்து நின்று விட்டார்கள்.

நாணாவய்யங்காரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அரண்மனைக்குக் கூட்டிப் போகும்போது இது அந்த மனுஷ்யன் முந்தின வாரம் கொடுத்த வராகனைப் பிடுங்க உபாயமோ என்று ஐயங்கார் நடுங்கித்தான் போனார்.

ஜமீந்தான் போகாதே போகாதேன்னு முந்தியைப் பிடிச்சு இழுத்தான். அரண்மனையிலே பரிகாரம் பண்ணனுமாம்.

நாணாவய்யங்கார் இடுப்பைத் தடவிக்கொண்டே சொன்னார். அங்கே இன்னொரு வராகன் பத்திரமாக ஏறியிருந்தது.

சுப்பம்மாள் வண்டியில் ஏற நாணாவய்யங்கார் பெண்டாட்டி கையை நீட்டினாள். சுந்தர கனபாடிகள் அவள் மடிசஞ்சியையும் நார்ப் பெட்டியையும் வாங்கி ஓரமாக வைத்தார்.

அவள் வண்டியில் ஏறும்போது மூத்த குடிப் பெண்டுகள் சாமா நடுமத்தியானத்தில் பிரேத ரூபமாக வந்தவளைக் கட்டிலில் கிடத்தியதை ஞாபகப்படுத்தினார்கள்.

அதுக்கென்ன இப்போ என்றாள் சுப்பம்மாள்.

அந்தப் பொண்ணு பக்கத்து வீட்டுக்கும் நடக்கிறாள். அவர்கள் கூடவே சாவுக்கெல்லாம் போய்விட்டு வந்திருக்கிறாள். பாப்பாத்தியாச்சே என்று அவளுக்கு மரியாதை கொடுத்த அந்தப் பெரிசுகள் இப்போது அவளை எப்படிக் கழற்றி விடுவது என்று புரியாமல் முழிக்கிறார்கள். இந்த பேடிப் பயல் ஜமீந்தார் இதெல்லாம் காலும் அரைக்காலும் காதில் கேட்டுத் தப்பும் தவறுமாக அதைப் புரிந்து கொண்டு சோழியனைக் கூப்பிட்டு அனுப்பியிருக்கிறான். அவனும் சாமாவோடு தங்கியவளை சுப்பிரமணிய ஐயர் வீட்டுக்குள்ளேயே இருந்த வேண்டிய கிரியைகளை எல்லாம் மலையாள பூமி போய்த் திரும்பி வந்து செய்து தரேன் என்று வாக்குத் தத்தம் கொடுத்து விட்டு வராகனோடு வந்திருக்கிறார்.

தேவதைகளும் மூத்த குடிப் பெண்டுகளோடு சிரித்தது சுப்பம்மாளுக்குக் கேட்டது.

நன்னா, வசதியா உக்காருங்கோ. எதேஷ்டமா இடம் இருக்கு. கையிலே கழுத்துலே ஸ்வர்ணம் போட்டுண்டு இருந்தா எடுத்துப் பத்திரமா நார்மடிப் பொட்டிக்குள்ளே வச்சுக்குங்கோ.

நாணாவய்யங்கார் சொன்னபோது சுப்பம்மாள் அவரைப் பார்த்துக் கபடமாகச் சிரித்தாள்.

மடியிலே கனம் இருந்தா இல்லே வழியிலே பயம். என் கழுத்திலே காதிலே என்ன இருக்கு ? எண்ணெய் ஏறின தோடு அரைக்கால் வராகன் காசு கூடப் பெறாது.

உள்ளே புழுக்கமா இருக்கு. வெளியே எடுத்து வையேன்.

யந்திரத்தில் நின்றிருந்த தேவதைகள் சத்தம் போட்டன நார்ப் பெட்டிக்குள் இருந்து.

சோழியன் உங்களை கீகடமா இப்படி ஒரே இடத்துலே நிறுத்தியிருக்க வேண்டாம். பாவம் தவிச்சுப் போறேளே.

சுப்பம்மா சொன்னபோது அது வாயில் தெலுங்குக் கீர்த்தனமாக வந்தது. மூத்த குடிப் பெண்டுகள் ஒரு நிமிஷம் கூட அவளை விட்டுப் போகவில்லை.

எல்லோரும் மதுரை போய்ச் சேரும்போது சாயந்திரமாகி விட்டிருந்தது.

சாமி தரிசனத்துக்குப் போய்த் திரும்ப வரும்போது வடம்போக்கித் தெருவில் வெகு விநோதமாகக் கொட்டகை எல்லாம் கட்டி ஒரு பிராமணன் சோறு விற்றுக் கொண்டிருந்தான்.

துரைத்தனத்தார் பணம் நாலு செம்புக் காசுக்கு சித்ரான்னம் வடை எல்லாம் சேர்த்து வாழை இலையில் வைத்துச் சாப்பிடக் கொடுக்கிறானாம். தேசாந்திரம் வந்த நாலைந்து தெலுங்குக் குடும்பங்கள் காசைக் கொடுத்து விட்டு அங்கே குந்தி இருந்து வாயில் சோற்றை அடைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:20 pm

கலிகாலம். சத்திரத்துலே தானமாப் போடறதை விக்கறான் இந்தப் பிராமணன். மழை எப்படிப் பெய்யும் ?

சுந்தர கனபாடிகள் சொன்னாலும் அந்தச் சித்திரான்னங்களை அவர் ஆசையோடு பார்த்தபடியே நகர்ந்தார். சுப்பம்மாள் வாயில் ஏறிய மூத்த குடிப் பெண்டுகள் இங்கே நின்று சாப்பிட்டுப் போகலாம் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

அவள் அழிச்சாட்டியமாகத் தெருவில் உட்கார்ந்து அடம் பிடிக்கவே, கனபாடிகள் சஞ்சியிலிருந்து அவளுக்குச் சேர வேண்டிய வகையில் சுப்பிரமணிய ஐயர் கொடுத்ததில் சில துட்டுக்களை எடுத்துக் கொடுத்து விட்டு, என்ன வேணுமோ சாப்பிட்டுட்டு தெருக்கோடியிலே சத்திரத்துக்கு வந்துடுங்கோ என்றார்.

சோறு விற்கும் பிராமணன் வாயடைத்துப் போக, அங்கே மிச்சம் மீதி ஏதும் இல்லாமல் புளியோதரை, தயிர்சாதம், நார்த்தங்காய்ச் சாதம், போளி, வடை என்று வாரி வாரி அடைத்துக் கொண்டு தின்று போட்டாள் சுப்பம்மாள்.

இந்தக் கிழவிக்கு ஏதோ பிசாசு பிடிச்சிருக்கு என்று நினைத்தபடி காசை வாங்கிக் கொண்டு சோற்றுக்காரன் ஓலைக் கூடைகள் சகிதம் ஓடியே போனான்.

மங்கம்மா சத்திரத்தில் ராத்திரி முழுக்கப் பக்கத்தில் தெலுங்குக் கூட்டம் ஒன்று உரத்த குரலில் பேசிக் கொண்டே இருந்தது. சுப்பம்மாளின் கூட இருந்த மூத்த குடிப் பெண்டுகளும் பிரயாண அசதியில்தூங்கிப் போனார்கள்.

வயிறு ஏகமாகத் தின்ற அசெளகரியம் தூக்கத்தைக் கெடுக்க, சுப்பம்மாள் ஜன்னல் வழியே வெட்டவெளியில் பூரணச் சந்திரனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

சாமாவும் கூடவே ஒரு அழகான பெண்ணும் அவளைச் சுற்றிச் சுற்றி நடந்தும் ஓடியும் விதம் விதமாக சிருங்கார சேஷ்டைகளில் ஈடுபட்டபடி இருந்தார்கள்.

சுப்பம்மா, நான் பக்கத்திலே வரட்டுமா ?

தலைக்கு மேலே பறந்து போன வெளவால் விசாரித்தது.

கையில் நேராக ஒன்றும் குறுக்கே மற்றதுமாக நிறுத்திய மூங்கில் பிளாச்சுகளையும், குருத்தோலைகளையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு சுப்பிரமணிய அய்யர் சாயலிலும் சங்கரன் சாயலிலுமாகக் குழந்தைகள் நடந்து போனார்கள்.

ஒரு வினாடி சுப்பிரமணிய ஐயரின் இரட்டை மாடிக் கட்டிடம் தீப்பற்றி எரிந்தது.

விநோதமான பழுக்காத்தட்டுகள் சுழலச் சாவோலமாக எழுந்த சங்கீதம் எல்லாத் திக்கிலும் பரவி மூச்சு முட்ட வைத்தது.

பகவானே.

சுப்பம்மாள் நார்ப் பெட்டியை இறுக்கிக் கொண்டாள்.

தேவதைகள் மெளனமாக இருந்தன. அவைகளுக்கும் அந்த சங்கீதம் பிடித்திருக்குமோ ? அல்லது தூங்கப் போய்விட்டார்களோ என்று அவளுக்குத் தெரியவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:21 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்தொன்று


சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார்.

சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில் அழிந்தும் அழியாமலும் தடம் விரிக்க, வற்றி இளைத்துப் போன நதி சின்னச் சாரைப் பாம்பாக சலித்துக் கொண்டே அசைந்து போனது.

கரையோரம் வெகுதூரம் போய், புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக் கொள்ள வந்தபோதே நதியடி மணலை நாட வேண்டிப் போனது.

நதியெல்லாம் தெய்வம். இப்படி பிருஷ்டம் சுத்தப்படுத்தவா பகவான் அதுகளைப் படைத்து விட்டிருக்கிறான் ? ஜீவாத்மா பரமாத்மாவில் கலக்க விரசாகப் போவது போல் அதெல்லாம் சமுத்திரத்தைப் பார்க்க ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்த வைகை மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக, கிராமதேவதைக்கு நேர்ந்து கொண்ட மாதிரி எங்கேயோ கண்மாயிலோ ஏரியிலோ போய்க் கலக்கிறதாம்.

சுந்தர கனபாடிகளுக்கு பூகோளம் தெரியாது. நாணாவய்யங்கார் சொல்லி நேற்றைக்குக் கேள்விப்பட்டதுதான். வேதபாடசாலையில் அதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறதில்லை. ருத்ரமும் சமகமும் ரிக்கும் யஜூரும் தான் அங்கே நாள் முழுக்க. கனபாடிகள் சாம வேதியான காரணத்தால் அவருக்கு உபரியாக அந்த அத்தியாயனமும் உண்டு.

ஓலைச் சுவடியில் கிரந்த எழுத்தில் எல்லாம் இருக்கும் என்றாலும் யாரும் சுவடியைத் திறந்து வைத்துக் கொண்டு கற்பிப்பதுமில்லை. கற்றுக் கொள்வதுமில்லை. காதால் கேட்க வேணும். மனதில் கிரகித்து வாங்கிக் கொள்ள வேணும். அப்புறம் பல தடவை உரக்கச் சொல்லிப் பழக வேணும்.

பிரம்மஹத்தி. உஷஸ்னு உன் நாக்கெழவுலே வராதா ? தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க. உசஸ்ஸாமே. சவண்டிக்கு ஒத்தனாப் போறதுக்குக் கூட ஒனக்கு யோக்கியதை இல்லை.

சுந்தர கனபாடிகள் சிரித்துக் கொண்டார். அடித்தும், தலைமயிரும் தலைக்குள்ளே இருக்கப்பட்ட மூளையும் எல்லாம் வெளியே தெறித்து விழுவது போல் அப்பளக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரையில் மோதியும் பாடசாலையில் அவருக்கு சாமவேதம் கரைத்துப் புகட்டிய ஈஸ்வர ஸ்ரெளதிகளின் சவண்டிக்கு ஒத்தனைப் பிடிக்க மழைநாளில் அவர் தான் பல வருஷம் முன்னால் காடு மேடெல்லாம் திரிந்து நடக்க வேண்டிப் போனது.

முழங்காலையும் மறைத்து இடுப்பு வரை ஆழத்துக்கு நீர் உயர்ந்த இடத்தில் கொஞ்சம் நின்றார் சுந்தர கனபாடிகள்.

இதுக்கும் மேல் இங்கே தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. நாலு முழுக்குப் போட்டு விட்டுக் கரையேற வேண்டியதுதான்.

நர்மதே சிந்து காவேரி.

குளித்து வந்து வீபுதிச் சம்படத்தைத் திறந்து குழைத்து நெற்றியிலும் மாரிலும் தோளிலும் பூசிக் கொண்டார். இப்படியே ஈர வஸ்திரத்தை உலர்த்தியபடிக்கு மணல் வெளியில் ஏகாங்கியாக நிற்க மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அடிக்கிற காற்றில் பூவாக அது உலர்ந்ததும் பஞ்ச கச்சமாக உடுத்திக் கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரர்களைப் பார்க்க நடையை எட்டிப் போட வேண்டியதுதான்.

நடந்து நடந்து நடந்தே தான் ஜீவிதம் முழுக்கப் போய்க் கொண்டிருக்கிறது. தர்ப்பைக் கட்டைத் தூக்கிக் கொண்டு அக்கம் பக்கம் ஏழு கிராமம் புஞ்சைக் காட்டு வரப்பில் நடக்க வேணும். சீத்தாராமய்யன் பிதாவுக்கு புரட்டாசி திரிதியையில் திதி. குத்திருமல் நோக்காட்டோடு திண்ணையே கதியாகக் கிடந்து உயிரை விட்ட சிவராமனைப் பெற்றவளுக்கு மார்கழி பிரதமையன்று வருஷாந்திரம். சோமசுந்தரமய்யன் பெண்டாட்டி சிவலோகம் புறப்பட்டுப் போய்க் கல் ஊன்றிக் காரியம் செய்ய மூணாவது நாள்.

யாருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ சுந்தர கனபாடிகள் சகலமான சாவுகளையும் அது கழிந்து போய்ப் பல வருஷம் ஓடின பிறகும் நினைவு வைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சாவோடு சம்பந்தப்பட்ட கிரியைகளைச் செய்விக்கக் கால் தேயச் சகல திசையிலும் ஓடி நடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நடை நிற்கும்போது அவருக்காகச் சாப்பிட ஒத்தனைத் தேடி யார் நடப்பார்களோ தெரியவில்லை. அதுவரை தர்ப்பைக் கட்டும் மடிசஞ்சியில் ஒற்றை வாழைக்காயும் அரிசியும் உளுந்தும் பயறும் தலையில் எள்ளுமாகக் கால்நடைதான்.

சதாசிவ பிரம்மேந்திரர் போல் நடந்து கொண்டே, பாடிக் கொண்டே சன்னியாசியாகப் போய்விட்டால் என்ன ? எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப் படாமல், வருத்தப்படாமல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:22 pm

வைகைக் கரையில் தானே அவர் கையை வெட்டி எறிந்தார்கள் ? ராஜாவின் அந்தப்புரத்துக்குள் சுய நினைவு தப்பிப்போய், இடுப்பில் துணி இல்லாமல் ஈசுவர தியானத்தில் திளைத்துப் பாடிக் கொண்டே நுழைந்த குற்றத்துக்கான தண்டனை இல்லையோ அது ?

அது என்ன பாட்டு ? மானச சஞ்சரரே. சம்ஸ்கிருதம் தான். சுந்தர கனபாடிகளுக்குக் கரைத்துப் புகட்டியிருக்கிறார்கள். மானச சஞ்சரரேக்கு அப்புறம் அடுத்த அடி என்ன ?

அமாவாசைத் தர்ப்பணம் செய்ய எள்ளோடும் தண்ணீரோடும் இரைத்து விடும் மந்திரம் தான் நாக்கில் சட்டென்று வருகிறது.

திவசப் பிராமணனாகவே ஜீவிதம் முடியப் போகிறது.

தீபாவளிக்குக் கோடி வஸ்திரம் உடுத்தியானதும் அதை அவிழ்த்து வைத்து விட்டுத் ஊரோடு தர்ப்பணம் செய்யப் பவித்திரம் மாட்ட ஓட வேண்டி இருக்கிறது.

நவராத்திரிக் கொலுவுக்கு மூச்சு வாங்க சேந்தியிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கும்போது யாராவது போய்ச் சேர்ந்து தகனத்துக்கு வரச் சொல்லி வாசலில் வந்து நிற்கிறார்கள்.

விஷ்ணு இலையில் அப்பமும் எள்ளுருண்டையும் சரியாக வேகாத சாதமுமாக ஹோமப் புகை சுற்றி வரும் வீடுகளுக்குள் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தட்சிணையோடு திரும்பி வந்ததும் ராத்திரி சாப்பிடாமல் படுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மோர்க்களி சாப்பாட்டில் சேர்த்தி இல்லை, சத்து மாவு உருண்டை ராத்திரி பட்சணம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மற்ற வைதீகர்கள் சமாதானம் சொன்னபடி ராத்திரி ஏதேதோ சாப்பிடுகிறது போல் சுந்தர கனபாடிகளால் முடியாது. திவசத்துக்கு இறங்கி வந்தவர்கள் யாருடைய பித்ருக்களாக இருந்தாலும் இங்கே எல்லாம் முடித்து விட்டுப் போனவர்கள். இல்லை, அவசர அவசரமாக போதும் போயிடு என்று அனுப்பப் பட்டவர்கள். அவர்களின் பிரதிநிதியாக எள்ளைத் தலையில் போட்டுக் கொண்டு பூணூலை வலம் இடமாகத் திருப்பி மாட்டிக் கொண்டவன் கொடுக்கும் மரியாதைகளை ஏற்றுக் கொள்கிற வைதீகன் சுந்தர கனபாடிகள்.

அவர்கள் சார்பாகத் தான் அப்பமும் வடையும் மிளகுக் கறியும் மற்றதும். அது கழித்தால், ராத்திரி போஜனம் செய்யக் கூடாது என்று எழுதாத விதி. மீறிப் பண்ணினால், அந்த ஆத்மாக்கள் பசியோடு அலையும் என்றார்கள் பாடசாலையில் அவருக்குக் கற்பித்தவர்கள்.

ஒரு சத்து மாவு உருண்டை இன்னொருத்தனை, அவன் உயிரோடு இருக்காவிட்டாலும், பட்டினி போடும் என்றால் சுந்தர கனபாடிகளுக்கு அது வேண்டாம்.

எல்லோரையும் போலக் கல்யாணத்துக்கும் காதுகுத்துக்கும் நவக்கிரஹ ஹோமத்துக்கும் போய் நாலு காசு பார்க்காமல் இப்படி சதா சர்வ காலமும் தகனம், கல் ஊன்றுதல், பிண்டப் பிரதானம், மாசியம், சோதகும்பம், தர்ப்பணம், வருஷாப்திகம், ஹிரண்ய திவசம் என்று அலைவானேன் ?

அதுக்கு சுந்தர கனபாடிகள் காரணமில்லை.

டேய் கொழந்தே மாட்டுக் கண்ணு சுந்தரம். மத்ததுக்கெல்லாம் அரைகுறை வைதீகன் போறும். பெரியவா ஆசீர்வாதத்தோட மனசொருமிச்சுத் தாலி கட்டினாலோ, தட்டான் வந்து சிசுவுக்குக் காது குத்தி ஆயுட்ஷேமம் பண்ணினாலோ, ஆவணி அவிட்டத்துக்குப் பூணல் மாத்தித் தரச் சொல்லிக் கேட்டாலோ மத்தவா போகட்டும். உனக்கு அது வேண்டாம். உடம்பை விட்டுட்டு உசிரைத் தூக்கிண்டு போனவாளைக் கரையேத்தறது மாதிரி சிக்கலான காரியம் ஏதும் உண்டா சொல்லு. பாத்துப் பாத்துச் செய்யணும். மூணு தலைமுறைக்காரா இறங்கி வரா. இங்கே இருக்கும்போது வசப்படாத ஞானம் எல்லாம் அங்கே போனதும் அவா எல்லாருக்கும் வாச்சுடறது. உன் மந்திரத்துலே, வைதீகக் கிரமத்துலே ஒரு பிசகு வந்தாலும் போறும், அவா வந்தபடிக்கே போயிடுவா. போய்ப் பசியும் பட்டினியுமா அலைவா. இங்கே இருக்கப்பட்டவாளையும் அந்தப் பசியும் அலைச்சலும் பிடிச்சு ஆட்டும். சம்ஸ்காரத்தை மட்டும் நீ கவனிச்சுக்கோ. அது போதும். அவாள்ளாம் உன்னை ஆசிர்வாதம் பண்ணுவா.

சுந்தர கனபாடிளின் குருநாதர் ஈஸ்வர சாஸ்திரிகள் பாடசாலையில் கடைசி வருஷம் சாம வேத அத்தியாயனம் பண்ணுவித்த போது ஆக்ஞை பிறப்பித்தது இந்த மாதிரியில். அப்புறம் ஒற்றை வாழைக்காயும், ஈரமான எள்ளுமே உலகமாகிப் போனது கனபாடிகளுக்கு.

சம்ஸ்காரம்.

சுந்தர கனபாடிகள் உரக்கச் சொன்னார். பால் மாட்டோடு முன்னால் நடந்தவன் திரும்பிப் பார்த்தான்.

ஊரில் திவசப் பிராமணன் என்று பெயர். இங்கே கிறுக்குப் பிராமணன் என்று நினைத்து விடப் போகிறார்கள்.

சுற்றுப்புறம் மறந்து போய் பிரம்ம தியானத்தில் மூழ்கினது போல் கண்ணை மேல்பார்வையாகச் செருகிக் கொண்டு, சட்டென்று நினைவில் வந்த ஸ்லோகத்தை உரக்கச் சொல்லியபடி முன்னால் நடந்தார் சுந்தர கனபாடிகள்.

மாட்டுக்காரன், மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்து மாட்டை நிறுத்தினான்.

அவன் எதிர்பார்த்தபடியே கனபாடிகள் பசுவின் பின்னால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு நமஸ்கரித்தார். மாட்டுக்காரன் சணல் மூட்டையாக முடிந்து தோளில் தொங்க விட்டிருந்த சஞ்சியில் இருந்து ஒரு பிடி புல்லை எடுத்து கனபாடிகளிடம் மரியாதையோடு நீட்டினான்.

அவன் கொடுத்த பசும்புல்லை அவனுடைய பசுவுக்கே தானம் செய்யும்போது சுந்தர கனபாடிகளுக்குச் சிரிப்பு வந்தது.

நாலு நாலாக் கறவை சரியில்லே சாமி. பெரியவங்க ஆசிர்வாதத்துலே எல்லாம் சரியாகணும்.

அவன் கவலை அவனுக்கு.

தானே சரியாயிடும்ப்பா. கடலைப் புண்ணாக்கு போடறியோ ?

பசு சாணம் இட ஆரம்பிக்க காலை விலக்கி நடந்தபடி சொன்னார் கனபாடிகள்.

எங்க சாமி ? ஆனை விலை குதிரை விலை எல்லாம்.

சுந்தர கனபாடிகளுக்கு ஆனை விலையும் குதிரை விலையும் எல்லாம் தெரியாது. எந்த கிரகஸ்தன் அமாவாசைத் தர்ப்பணத்துக்கு எவ்வளவு கொடுப்பான், திவசத்துக்கு எத்தனை படி அரிசி வரும் என்று தெரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:23 pm

அரசூரோடு வந்து இருந்து வேத பாடசாலையைப் பார்த்துக் கொள்ளேன் என்று அம்மான் சேய் சுப்பிரமணிய ஐயர் சதா கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். போய் ஒரே இடமாக நிலைத்து விடலாமா என்று பல தடவை சுந்தர கனபாடிகளுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் குருநாதருக்கு வாக்குத் தத்தம் செய்து கொடுத்தது நினைவில் வந்து தொலைத்துக் காலைப் பின்னால் இழுக்க வைக்கிறது. அப்புறம், கனபாடிகளுக்கு மற்ற மந்திரம் எல்லாம் கிட்டத்தட்ட மறந்து போய்விட்டது.

சாமி, இப்படி வடக்கே இந்தப் பொட்டல்லே குறுக்காலே விழுந்து போனாக் கோவில் வந்திடும். பையப் பதறாமப் போங்க. விடிகாலப் பூசைக்கு நெறைய நேரம் கிடக்கு.

மாட்டுக்காரன் சொன்னபடிக்கு முன்னால் போனான்.

இவன் சாயலில் யாரையோ பார்த்த ஞாபகம். எங்கே ?

வருடாவருடம் நவராத்திரிக்கு பொம்மைக் கொலு வைக்க சேந்தியில் இருந்து இறக்கி வைக்கும் கொலுப்பெட்டியில் பாம்புப் பிடாரன் முகம் தான் இவனுக்கும்.

நேற்றைக்கு வடம்போக்கித் தெருவில் பலகாரமும் சித்திரான்னமும் விற்றுக் கொண்டிருந்த பிராமணனும் கொலுபொம்மைப் பெட்டியில் கல்யாணப் புரோகிதன் போல்தான் இருந்தான்.

எல்லாம் நூறு வருடம் முந்திய பொம்மை. சுந்தர கனபாடிகளின் மாதாமகர் காலத்து அழுத்தமான வர்ணம். அவர்கள் காலத்தில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறார்கள். தர்ப்பைக் கட்டோடு அலைய வேண்டி இருந்திருக்காது. விநாயக சதுர்த்திக்கு களிமண் பிரதமை செய்து தும்பை மாலை சார்த்திக் கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டு. நவராத்திரிக்குக் கொலு வைத்து, தினசரி பூஜை செய்து சுண்டல் விநியோகித்துக் கொண்டு. மாரில் சந்தனமும், நானாவித புஷ்ப பரிமள திரவிய வாசனையுமாக எல்லாக் கல்யாணப் பந்தலிலும் உட்கார்ந்து பந்திக்குக் காத்திருந்தபடி வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டு. சீமந்தத்துக்கு பூரண கர்ப்பிணி மூக்கில் இலைச்சாறு பிழிந்து மந்திரத்தோடு விடுவதை ஆசிர்வதித்துக் கொண்டு.

சீமந்த மந்திரம் என்ன எல்லாம் ?

தொடையிலே தட்டிண்டு அக்னியை அப்பிரதட்சணமாச் சுத்தி வாங்கோ.

அப்பம் வடை பிராமணன் கொலுப்படியில் கல்யாண புரோகிதனாக இருந்து சிரித்தான்.

நீ சிரிப்பேடா. ஏன் சிரிக்க மாட்டே. பொழைக்கத் தெரிஞ்சுண்டுட்டே. புளியஞ்சாதமோ, தயிர்சாதமோ, ஊசிப் போனதோ, உசந்த ருஜியோ, உன் குடுமியையும் பூணூலையும் பாத்துட்டுன்னா வாங்கறான். நாளைக்கே நீ ஒரு கல்லுக் கட்டடத்துலே உக்காந்துண்டு ஓய் கனபாடிகளே இன்னும் மூணு பேரைக் கூட்டிண்டு வந்துடும். அடுத்த வாரம் அத்தைப்பாட்டிக்கு சுப ஸ்வீகாரம். உமக்கு சேலம் குண்டஞ்சு வாங்கி வைக்கறேன்னு சொல்லுவே.

சுந்தர கனபாடிகள் கோயிலுக்குள் நுழைந்தபோது வெளிப்பிரகாரத்தில் கோஷ்டியாகப் பாடிக் கொண்டு வந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்ப் பாட்டு. திருப்புகழா தேவாரமா என்று தெரியவில்லை. கேட்க வெகு சுகமாக இருந்தது அந்தக் காலை நேரக் காற்றுக்கும், குளித்துச் சுத்தமான உடம்புக்கும்.

கோயிலுக்குள்ளே கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே நின்று கொண்டு ஓதுவார மூர்த்திகள் யாராவது பாடுகிறது தான் இது. ஆனால் இப்படிக் கூட்டமாகப் பாடும்போது ஏற்படும் அழகு அதில் இல்லை.

வைஷ்ணவர்கள் இது போல பாடி வைத்துக் கொண்டு அதையும் வேதத்தில் சேர்க்கிறார்கள். ஜோசியர் நாணாவய்யங்காருக்கு அதெல்லாம் அத்துப்படி.

வைஷ்ணவனோ, ஸ்மார்த்தனோ, இவர்கள் கூடவே சேர்ந்து பாடிக் கொண்டு இப்படியே நிம்மதியாகப் போனபடி இருக்கலாம்.

அவர்கள் பாடி விட்டு, சந்நிதி தொழுது விட்டுத் திரும்ப வீட்டுக்குப் போவார்கள். பட்டுத் தறி முன் நெய்ய உட்கார்வார்கள். கனபாடிகள் ஷேத்ராடனம் முடிந்து திரும்பியதும் எரவாணத்தில் செருகி வைத்த தர்ப்பைக் கட்டைத் திரும்ப எடுக்க வேண்டியதுதான்.

சாமி இந்தாங்க.

பொம்மை போல் சிரித்துக் கொண்டே மாட்டுக் காரன் அவருடைய இடது கையை ஆற்று மண்ணோடு எடுத்துக் கொடுத்தான்.

கோயில் நகரா டமடம என்று உச்சத்தில் முழங்க, தொடர்ந்து காண்டா மணிச் சத்தம் உயர்ந்து எழுந்து காற்றில் பரவியது.

கனபாடிகள் ஒரு வினாடி விதிர்த்துப் போனார்.

தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.

இரண்டு கையும் இருக்கிறது.

கூப்பினார்.

தாயே. பரமேச்வரி. ஜகதாம்பா. எல்லாரையும் காப்பாத்தும்மா ஈஸ்வரி. எனக்கு விதிச்சதை நான் செஞ்சு தான் தீரணும்.

கண்களை மூடி ஒரு மனதோடு கும்பிட்டார்.

அவர் சந்நிதிக்குள் நுழைந்தபோது திரை போட்டு அலங்காரம் ஆரம்பித்திருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:25 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்திரெண்டு


பற்றி எரியும் வீடு. குருத்தோலையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி போகும் குழந்தைகள். முகத்தில் மோதிய வெளவால் சிறகின் பொசுங்கிப் போன தோல் வாடை.

சுப்பம்மாளைச் சுற்றி இதெல்லாம் சுழல ஆரம்பித்து இன்றோடு பத்து நாளாகப் போகிறது.

இது உனக்கான இம்சை. நீயே அனுபவித்துக் கொள். நாங்கள் வேணுமானால் எங்கள் பங்குக்குத் தொந்தரவு தராமல் சமர்த்தாகக் கூட வருகிறோம். வாய் வலிக்கப் பாடச் சொல்லிக் கூட வற்புறுத்த மாட்டோம். சோத்துக் கடையில் குந்தி உட்கார்ந்து இலையில் சாதத்தைக் குவித்துத் தரையெல்லாம் சிந்த அள்ளிப் போட்டுக் கொள்ள மாட்டோம். மார்த்தடத்தை நிமிர்த்தி நடக்கச் சொல்ல மாட்டோம். எங்களால் முடிந்த உபகாரம் இது. ஆனாலும் கூடவே வருவோம். நீ எதற்காகவும் சஞ்சலப் படவேணாம்.

அவள் கூட வந்த மூத்த குடிப் பெண்டுகள் பிரியத்தோடு சொன்னார்கள். அவ்வளவு மட்டும்தான்.

என்னமோ நடக்கப் போகிறது. எப்போது என்று சுப்பம்மாளுக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்டுகளுக்குத் தெரியும். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அவர்கள் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.

நாணாவய்யங்கார் ஸ்தாபித்துக் கொடுத்த யந்திரத்தின் எல்லா மூலைகளிலும் மத்தியிலும் இருக்கப்பட்ட தேவதைகளும் சுப்பம்மாளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

ஐயங்காரிடம் இதைப் பட்டும் படாமல் பிரஸ்தாபித்து, என்ன செய்யலாம் என்று விசாரித்தபோது அவர் தேவதைகள் துர்சொப்பனாவஸ்தைகளைத் தீர்க்க எல்லாம் வந்து நிற்க மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்.

முன்னாலேயே சொல்லி இருந்தா, அதுக்கும் சேர்த்து சில பரிவார தேவதைகளை ஆவாஹனம் பண்ணியிருப்பேனே. இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. ஊருக்குப் போனதும் உபயந்திரம் வேணாப் பண்ணித் தரேன்.

சுப்பம்மாளின் கொஞ்ச நஞ்ச ஆஸ்தியும் இப்படி யந்திரப் பிரதிஷ்டையிலேயே கரைந்து போக அவளுக்கு மனம் இல்லை. அப்புறம் சோத்துக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி வரும். மூத்தகுடிப் பெண்டுகள் வாயில் இருந்து வார்த்தை சொல்வார்களே தவிர வயிற்றுப் பசியை எல்லாம் தீர்க்க மாட்டார்கள். அவர்களையும் பசியோடு அலைய விட்டதாகப் பிராது கொடுப்பார்கள்.

நாங்க அப்படிப்பட்டவா இல்லே சுப்பம்மா என்றாள் ஒருத்தி அதில். நீ ஆயுசோட இருக்கற வரைக்கும் உன் வயிறு வாடாது. அதுக்கு நாங்க உத்திரவாதம்.

சுப்பம்மா சுய புத்தியோடு அவர்களை நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தது வடம்போக்கித் தெருவில் பிராமணன் சித்திரான்னக் கடைக்கு நேர் எதிரே.

அவன் சோற்று வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். அவளுக்குப் பின்னால் இடுப்பில் காசு முடிந்த சஞ்சியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்த சுந்தர கனபாடிகளை விரோதமாகப் பார்த்தான்.

நாம வேளை தவறாம ஆகாரம் பண்றது போல, தேவதைகளுக்கும் தினசரி ஒரு வேளையாவது போஜனம் தரணும் மாமி.

நாணாவய்யங்கார் சொல்லியிருந்தபடி தினசரி ஸ்நானம் செய்தான பிறகு அந்த இயந்திரத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி, ஆழாக்கு பாலால் அபிஷேகம் செய்ய சுப்பம்மாள் மறக்கவில்லை. அதைச் செய்யும்போது கூட ஒன்று இரண்டு பெண்டுகள் இருந்தால் சிலாக்கியம் என்றும் ஆண்பிள்ளை வாடையே வரக்கூடாது என்றும் ஐயங்கார் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

தேவதைகள் குளித்துவிட்டு வஸ்திரம் மாற்றிக் கொள்ளும்போது ஆம்பிளைக் கண்கள் பார்த்தால் லஜ்ஜை அடைவார்கள் என்று மூத்த குடிப் பெண்டுகள் அதை வியாக்கியானம் செய்து விளக்கினார்கள் சுப்பம்மாவுக்கு.

ஆனாலும், தினசரி பூஜைக்கு ஒத்தாசை செய்ய ஆண்கள் வேண்டியிருந்தது.

மதுரையில் இருந்த நான்கு நாளும், சுந்தர கனபாடிகளே மாட்டுக் காரனோடும் பாலோடும் வந்து விட்டார். அவர் வீட்டு கொலு பொம்மையில் பாம்புப் பிடாரன் போல் இருப்பதால் தனி அபிமானம் ஏற்பட்டதாக அவர் காட்டிய மாட்டுக்காரன் ஒவ்வொரு தடவை அவர் அப்படிச் சொல்லும்போதும் நெக்குருகி நின்றான். மரத்தால் ஆன அந்தக் கொலுப் பெட்டியின் நீள அகலங்கள் பற்றியும் உள்ளே இருக்கும் மற்ற பொம்மைகளின் வர்ணங்கள் பற்றியும் விசாரித்தபடியே ஆழாக்கு பால் சுப்பம்மாளுக்குக் கொடுத்தான். அதுக்கு துரைத்தனத் துட்டு ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டு மாட்டோடு நடந்து போன போது பாம்புப் பிடாரன் தலையில் பச்சை நிறத்தில் முண்டாசு கட்டியிருந்ததாக அறிவித்தார். அடுத்த நாள் மாட்டுக்காரன் பாலோடும் பச்சை முண்டாசோடும் வந்து சேர்ந்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:26 pm

வெதுவெதுப்பான நீரையும் அப்புறம் பாலையும் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தில் சுப்பம்மாள் ஊற்றியபோது அங்கங்கே தீப்பொறியும் புகையுமாக தேவதைகள் ஆகாரம் உட்கொண்டன. பக்கத்தில் இருந்து பார்த்த சுந்தர கனபாடிகளின் பெண்டாட்டி நாகலட்சுமியம்மாள் இந்தப் பூஜை தானே ஏற்படுத்திக் கொள்ளும் தீபமும் தூபமுமாக பார்க்க சுவாரசியமாக இருப்பதாகவும், ரத்தினச் சுருக்கமாகமானது என்றும் சுப்பம்மாளிடம் சொன்னாள்.

மாட்டை மேச்சோமோ கோலைப் போட்டோமோன்னு வென்னீரை ஊத்தி அலம்பினோமா, பசும்பாலைப் படைச்சோமா, டப்பு டுப்புன்னு ரெண்டு பொறி கொஞ்சம் புகை. கன்னத்துலே போட்டுண்டு பட்டுத் துணியாலே தொடச்சு நார்ப் பெட்டியிலே வச்சுட்டு நாம சாப்பிட உக்காந்துடலாம்.

அவளுக்கு இந்தப் பூஜையைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.

என்ன ஏது என்று அவளிடம் கேட்காவிட்டாலும் மதியம் சாப்பாடான பிறகு புதுமண்டபத்தில் குமுட்டி அடுப்பும், தோசை திருப்பியும் மற்றவர்கள் வாங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் மரத்தடியில் உட்கார்ந்தபடி சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளைக் கேட்டாள். பேச யாராவது துணை கிடைத்தால் சிலாக்கியமாக இருக்கும் என்று தோன்றும்போதெல்லாம் இதோ வந்துட்டோம் என்று ஷணத்தில் இறங்கி வருகிறது அவர்கள் தான்.

திவசச் சாப்பாட்டுக்காகப் பிராமணார்த்தம் போகாத தினங்களில் சுந்தர கனபாடிகள் விடிகாலை தொடங்கி, ஒவ்வொரு ஓலையாகப் பொறுமையாகப் படித்து வீட்டில் மஞ்சளில் பிடித்து வைத்த விக்ரகங்களுக்கு வெகு விரிவாக ஆராதனை நடத்துவது வழக்கம் என்று மூத்த குடிப் பெண்கள் சொன்னார்கள்.

இந்த மனுஷன் முந்தின நாள் முழுங்கி ஏப்பம் விட்ட விஷ்ணு இலைச் சோத்தை ஒட்டகம் மாதிரிக் கொஞ்சம் கொஞ்சமா ஜீரணம் பண்ணிண்டு அடுத்த நாள் மத்தியானம் வரைக்கும் கொட்டக் கொட்டக் கிடந்தாறது. ஆத்துக்காரி இவன் பூஜை புனஸ்காரத்தை முடிச்சுண்டு நேவித்தியத்துக்கு அன்னம் கொண்டாடின்னு இரைச்சல் போடற வரைக்கும் நிலைவாசல் படியிலே பசியோடு கொட்டக் கொட்ட உக்காந்துண்டிருக்கணும். நாள் முழுக்க அப்படி என்னதான் பூஜையோன்னு கேக்காதே சுப்பம்மா. இவனுக்குத் தான் மத்த மந்திரம் எல்லாம் மறந்து போச்சே. படிக்கறான். படிக்கறான். வாசிக்க வாசிக்க ஒண்ணொண்ணும் புதுசாத் தெரியறது. மூத்தரம் முட்டிண்டு வந்தாக்கூட அடக்கிண்டு மணிக்கணக்கா பூஜை பண்ணும்போது மஞ்சள் விக்ரகம் எல்லாம் ஓன்னு அழறது பாவம். கடன்காரா, வேஷ்டியை நனைச்சுக்கப் போறே. கொல்லைக்குப் போய்ட்டு கால் சுத்தி பண்ணிண்டு, எங்களுக்கு அன்னம் படை. அந்தப் பொம்மனாட்டியையும் சாப்பிடச் சொல்லு. அப்புறம் சாவகாசமா மந்திரம் நெட்டுருப் போடு. நாங்க விச்சிராந்தியாத் தூங்கறோம்னு அதுவெல்லாம் உலர்ந்து உதிர்ற வரைக்கும் இந்த கனபாடி நிறுத்த மாட்டான்.

சுப்பம்மாள் போக சந்தர்ப்பமே ஏற்படாத சுடுகாடுகள் பற்றி, இடுகாடு பற்றி, ஈமக் கிரியைக்கான விதிமுறைகள் பற்றி எல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் சொன்னபோது அவள் நூதனமான இந்த விஷயத்தை எல்லாம் வெகு சுவாரசியமாகக் கிரஹித்துக் கொண்டாள்.

கன்னியாகுமரியில் சமுத்திர ஸ்நானத்தின் போது கடல் அலை இழுத்துப் போக இருந்த சுப்பம்மாவை அவர்கள் தான் பிடித்து நிறுத்திக் காப்பாற்றினார்கள்.

சதா கூடவே அவர்களும், யந்திரத்தில் தேவதைகளும் சுப்பம்மாளோடு வந்தாலும், சாமிநாதன் போகம் செய்தவள் அவளுக்குப் பிரத்தியட்சமானது அதற்கு அடுத்த நாளில்.

சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் கைமுக்கு உருளியைக் காட்டி வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார் நாணாவய்யங்கார். அவர் கால தேச வர்த்தமானம், பூகோள சாஸ்திரம், சரித்திரம், புராணம் எல்லாம் தெரிந்தவராக இருந்தார். கனபாடிகள் கூடத் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருக்க அவர் அங்கங்கே ஸ்தல விசேஷங்களை சாங்கோபாங்கமாக எடுத்துச் சொல்லுவார்.

அந்நிய ஸ்திரியை போகம் பண்ணின நம்பூத்திரி பிராமணனுக்கு இங்கே தான் ஸ்மார்த்த விசாரணை நடக்கும். இரிஞ்சாலக்குடை தாந்த்ரியாக்கும் அதை நடத்தறது. குத்தம் ஸ்தாபிதமாச்சுன்னு தாந்திரி சொன்னா, நம்பூத்திரி அதை ஒத்துண்டு ஜாதிப் பிரஷ்டத்தோட ஊரை விட்டு அன்னிய தேசம் போயிடணும். இல்லையா, கைமுக்க நான் தயார்ம்பான். மகாராஜாவுக்கு ஓலை போய் அவர் உத்தரவு வந்ததும், இங்கே இந்த உருளியிலே நெய்யைக் கொதிக்க வச்சுடுவா. கோவில் மூத்தவர் அதுலே ஒரு தங்க விக்ரகம் சின்னதாப் பசு மாதிரி ஒண்ணு அதைப் போடுவார். எடுப்பா அதைம்பார். இவன் கை விட்டு எடுத்து கை கருகாம இருந்தா நிரபராதி. இல்லாட்ட.

அந்தக் கருத்த உருளியை சுப்பம்மா சிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த போது பின்னங்கழுத்தில் மூச்சுக் காற்று பட்டது. மனுஷ மூச்சுக்கு எப்படி வெளவால் வாடை என்று யோசித்தபடியே அவள் பின்னால் பார்க்க அதி சுந்தரியான குருக்கள் பெண்ணைப் பார்த்தாள்.

நான் தான் சுப்பம்மா. சாமா ஆத்துக்காரி. நீ தான் காப்பாத்தணும்.

மூத்த குடிப் பெண்டுகள் பயந்து அலறியபடி காகங்களாகக் கரைந்து கொண்டு வெகு மேலே பறந்து போய் சுப்பம்மாள் தலையில் நிழலிடச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆகாரம் ஆன தேவதைகள் நார்ப்பெட்டியில் சத்திரத்தில் சவுகரியமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

ஆனால் சுப்பம்மாளுக்கு என்னமோ பயமாகவே இல்லை.

என்னை என்ன பண்ணச் சொல்றே. நீ என்னை விட நூறு எறநூறு வயசு மூத்தவ. சாமா என் குழந்தை மாதிரி. இடுப்புலே தூக்கி வச்சு வளர்த்தவன். பாச்சியிலே பால் சுரந்திருந்தா கொடுத்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லே. நீ அவன் கூப்பிட்டான்னு இறங்கி வந்து அவனோட ரமிச்சுடறதா ? உன் கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் வயசில்லையா அவனுக்கு ? ஒரு நியாயம், நியதி பார்க்க வேணாம் ? என்னையும் எத்தனை படுத்தி வச்சிருக்கே சொல்லு. சோழியனுக்கு தட்சணை கொடுத்து இப்படி யந்திரத்தைக் கட்டித் தூக்கிண்டு வரணும்னு எனக்கு என்ன தலைவிதியா ? உன்னாலே தானே எல்லா இம்சையும்.

சுப்பம்மாள் ஓரமாக ஒதுங்கி நின்று குருக்கள் பெண்ணோடு மொணமொணவென்று சச்சரவு செய்தாள்.

தப்புத்தான் சுப்பம்மா. உன்னைப் படுத்தியிருக்கக் கூடாது நான்.

குருக்கள் பெண் ஈன ஸ்வரத்தில் சொன்னாள். நம்பாதே இவளை என்றார்கள் மூத்த குடிப் பெண்டுகள்.

அநசூயா மும்மூர்த்திகளைக் குழந்தையா மாத்தி தன் உடம்புலே பொட்டுத் துணி கூட இல்லாம நக்னமா சிச்ருஷை செய்த க்ஷேத்ரம் இது.

நாணாவய்யங்கார் சொல்லியபடியே சந்நிதிக்குள் மற்றவர்களோடு நுழைய, சுப்பம்மாள் கைமுக்கு மண்டப நிழலில் உட்கார்ந்தபடி வந்தவளோடு வழக்காடிக் கொண்டிருந்தாள்.

நக்னமா இருக்கறது, அதுவும் மனசுக்குப் பிடிச்சவனோடு ரமிச்சுக் கிடக்கறது எத்தனை சுகம் தெரியுமா சுப்பம்மா ? உன்னோட வீட்டுக்காரன் உன்னை முதல்லே ஆலிங்கனம் செஞ்சபோது எப்படி இருந்தது நினைவிருக்கா ?

சுப்பம்மா, அதை எல்லாம் நினைக்காதே. கோவிலுக்குள்ளே வந்து இந்த துராத்மா உன் மனசை அசுத்தம் பண்ணப் பாக்கறா. யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்குமா ?

மூத்த குடிப் பெண்டுகள் பிரலாபிக்க, வந்தவள் மேலே பார்த்து பய பக்தியாக நமஸ்கரித்தாள்.

நீங்களும் சரீர சுகத்தை பூர்ணமா இடுப்பை விரிச்சு அனுபவிச்சுப் போனவா தானே பரதேவதைகளே. நான் பண்ணினது மட்டும் தப்பாயிடுமா ?

அவள் அழுதாள். சுப்பம்மாளுக்குப் பாவமாக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:27 pm

வீட்டைக் கொளுத்தப் போறா சுப்பம்மா. சாமாவையும் என்னையும் வச்சு வீட்டைப் பொசுக்கிப் போடப் போறா. நீதான் காப்பாத்தணும். உன்னோட வர இந்த மூத்த குடிப் பெண்டுகளும் எனக்காக இல்லாட்டாலும் உனக்காக உன் சாமாவைக் காப்பாத்தணும்.

உச்சிக்கால பூஜை முடித்த தந்த்ரியும் மேல்சாந்தியும் பிரகாரப் பக்கம் வர அவள் காற்றில் கரைந்து போனாள்.

என்ன சுப்பம்மா அத்தை சிரமம் ஜாஸ்தியா இருக்கா ? மண்டபத்துலேயே படுத்துண்டு கண் அசந்துட்டேளே ?

ஜோசியர் நாணாவய்யங்கார் பெண்டாட்டி அவளை உலுக்கி எழுப்பியபோது சுப்பம்மா சாமாவைக் காப்பாத்துங்கோ என்றாள்.

லோக க்ஷேமத்துக்கே அர்ச்சனை செய்தாச்சு. கவலையை விடுங்கோ மாமி. எல்லோரையும் அந்த நாராயணன் பார்த்துப்பான்.

சுந்தர கனபாடிகள் ஆறுதலாகச் சொன்னபடி நைவேத்திய வாழைப் பழத்தை உரித்து வாயில் போட்டுக் கொண்டார்.

சுசீந்திரத்தில் இருந்து கிளம்பி அனந்தைக்கு வந்தபோது ராத்திரி வெகுநேரம் ஆகி இருந்தது. கோவில் ஊட்டுப்புரையில் புருஷர்கள் சாப்பிட்டு தொப்பையைத் தடவிக் கொண்டு இங்கே எதுலே எடுத்தாலும் தேங்காயைப் போட்டாறது என்று குற்றம் சொல்லியபடி வந்தார்கள். பெண்டுகள் கொண்டு வந்த சத்து மாவை உருட்டிச் சாப்பிட்டு விட்டுச் சத்திரத்தில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

காலம்பற சீக்கிரம் தரிசனத்துக்குப் போனா மகாராஜாவையும் சேர்த்துத் தரிசிக்கலாம். மகாராஜாவைப் பாக்கறது மகாவிஷ்ணுவை சேவிக்கறது போல இல்லியோ. அதுவும் இந்தப் பட்டண மகராஜா பெரிய ஞானஸ்தர். சங்கீத விநிகையில் கரை கண்டவர். தஞ்சாவூர்லேருந்து வித்வான்களும் தாசியாட்டக் காரிகளும் இந்த அரண்மனையே கதியாக் கிடக்கா.

ஜோசியர் நாணாவய்யங்கார் சொன்னபோது மூத்தகுடிப் பெண்டுகள் மகாராஜா முன்னால் நாம் பாடலாமே என்றார்கள். சுப்பம்மாள் வாரணாசியில் அனுமன் கட்டத்தில் பிணம் எரிவதைப் பார்த்தபடி இந்துஸ்தானி சங்கீதம் பாடினதை நினைத்துக் கொண்டாள். என்ன பாடினோம் எப்படிப் பாடினோம் என்று நினைவு வராவிட்டாலும், அது போல் இங்கே அதுவும் ஒரு சமஸ்தான மகாராஜாவுக்கு முன்னால் போய் நிற்க வேண்டும் என்று நினைத்தாலே அவளுக்கு தேகமெங்கும் நடுக்கம் ஏற்பட்டது.

எனக்கு நாள் இப்போ. ராஜ கொட்டாரத்துக்கு எல்லாம் பிரஷ்டையாப் போகப்படாது.

ஒரு மூத்தகுடிப் பெண் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் கொஞ்சம் யோசித்து சரி வேணாம் என்றார்கள்.

ஆனாலும், திருச்சூரில் வடக்கநாத க்ஷேத்திரத்தில் தரிசித்துக் கொண்டு அம்பலப்புழைக்குக் காளை வண்டிகளில் போகும்போது அவர்கள் ஏக சந்தோஷத்தில் சுப்பம்மாள் வாயில் வந்து பாட ஆரம்பித்தார்கள்.

தனாரோ தன்னாரோ தன தனாரோ தன்னாரோ

பட்டாம்பி பக்கமோர் பட்டத்திப் பெண்ணினெப்

பட்டன் இல்லாத்தப்பம் பட்டி

வண்டி ஓட்டி வந்தவர்களும், கையில் தீப்பந்தத்தோடு கூடவே நடந்து வந்தவர்களும் ஓவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.

என்னமோ விபரீதம் என்று புரிந்து கொண்ட சுந்தர கனபாடிகள் பெண்டாட்டி, அவருடைய அங்கவஸ்திரத்தை உருவி எடுத்து சுப்பம்மாளின் வாயை இறுகக் கட்டினாள்.

பட்டாம்பி பக்கமோர் பட்டத்திப் பெண்ணினெ

சுப்பம்மாள் வார்த்தை வெளியே வராமல், வாய்க்கட்டை எடுக்க உக்ரமாக முயற்சி செய்தபடி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். குலுங்கிச் சிரித்தபடி அவள் வண்டிக்குள் கவிழ்ந்து படுத்துக் கொண்டபோது தனாரோ தன்னாரோ என்று வார்த்தை இல்லாமல் வண்டிக்காரர்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரித்தபடி பாட ஆரம்பித்துச் சூழ்நிலை உறைக்க உடனடியாக நிறுத்தினார்கள்.

அம்பலப்புழை வந்தாச்சு.

முதல் வண்டிக்காரன் உரக்கச் சொன்னான்.

துரைச்சாமி அய்யன் கிரஹம் எங்கேன்னு யாரையாவது கேட்கலாம்.

சுந்தர கனபாடிகள் வண்டியில் இருந்து இறங்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:29 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்து மூன்று


சாஸ்தா ப்ரீதி கழிந்து இலையும், பூவும் பழமும் மஞ்சள் அட்சதையுமாக இரைபட்ட கூடத்தில் சங்கரன் காத்திருந்தான். ஓரமாக அதிரசத் துணுக்கை இழுத்துப் போன கட்டெறும்பும், தூரத்தில் கொல்லையில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கும், நேரம் தப்பிக் கள்ளுக் குடித்த யாரோ உரக்கப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் நடந்து போனதுமாக மதியப் பொழுது ஊர்ந்து கொண்டிருந்தது.

நேற்றைக்கே இங்கே வந்தாகி விட்டது. தெலுங்கர் வீட்டு மச்சில் சங்கரனுக்கு எல்லாச் செளகரியங்களோடும் இருப்பிடம் ஒழித்துக் கொடுத்தார்கள். சுப்பிரமணிய அய்யர் சகலரோடும் மலையாளத்தில் பேசப் பிரயத்தனப் பட்டுக் கொண்டு அந்த வாசல் திண்ணையில் குற்றாலத் துண்டைக் காற்றாடப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கல்யாணி அம்மாள், தெலுங்கு மாமியின் கீர்த்தனங்களைக் கேட்கவும், கூடவே மெல்லிய குரலில் பாடவும் ஆரம்பித்தது இன்னும் ஓயவில்லை.

சுந்தர கனபாடிகள், சுப்பம்மாள், ஜோசியர் அய்யங்கார் என்று ஒரு பெரிய பட்டாளமே அங்கங்கே தூரத்து, நெருக்கத்துச் சொந்தக் காரர்கள் வீட்டில் இவர்கள் வருவதற்கு இரண்டு நாள் முன்னாலேயே வந்து தங்கியிருந்தார்கள்.

எல்லோரும் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக இந்தப் பெண் பார்த்தல் என்று சங்கரனுக்குப் புரியவில்லை. முந்தாநாள் சாயந்திரம் தெலுங்குக் கார வீட்டு மாடியில் வைத்துப் பரசுராமனிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பகவதிக் குட்டியைப் பார்த்தாகி விட்டது.

பாட்டு சொல்லிக் கொள்ள மூக்கும் முழியுமாக வந்த அவளை யார் என்று யாரும் சொல்லாமலேயே சங்கரனுக்குப் புரிந்து போனது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து பக்கவாட்டுத் தோற்றத்தில் பகவதிக் குட்டி தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து தம்பூரா மீட்டிக் கொண்டிருந்தது தெரிந்த போது இருட்டு கவிய ஆரம்பித்து விட்டது.

அவள் குரலையாவது கொஞ்சம் கேட்கலாம் என்றால், பாட்டு வாத்தியார் தான் விடாமல் பாடிக் கொண்டே இருந்தார். அந்த அழகான பெண்ணுக்கு யுத்தத்துக்குப் போக சகல முஸ்தீபும் செய்து கொடுப்பது போல் என்னத்துக்கு அவர் அடாணா ராகத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சங்கரனுக்குப் புரியவில்லை. சாயந்திரத்துக்குப் பொருத்தமாக ஒரு வசந்தா, தாபத்தோடு கெஞ்சி அழைக்கும் ஒரு கமாஸ், கம்பீரமான குதிரை பாய்வது போல ஒரு கல்யாணி. எல்லாமே சங்கரனுக்குப் பிடித்த ராகம் தான்.

அடாணா பிடிக்காது என்றில்லை. பால கனகமய பாடினால் சீராம நவமியும் பானக நைவேத்தியமும் தான் நினைவு வருகிறது. கன்னத்தில் போட்டுக் கொண்டு தரையில் நெற்றிபடக் கும்பிட்டு எழ மட்டுமா சங்கீதம் ?

கொட்டகுடித் தாசி கூளப்ப நாயக்கன் காதல் கிரந்தத்துக்கு எல்லாம் நூதனமாக மெட்டமைத்து அபிநயம் பிடிக்கிறாளாம். சங்கரனுக்கு அதெல்லாம் காணக் கொடுத்து வைக்கவில்லை. நாலு தெருவும், செம்மண் பொட்டலும் கடந்து, உடையான் அம்பலம் ஊருணிக்கரை மேட்டில் ஏறி அந்தப் பக்கம் இறங்கினால் கொட்டகுடி. எல்லோரும் போகலாம். சங்கரனும் தான். ஆனாலும் புகையிலைக்கடை அய்யன் என்னத்துக்குத் தாசி குடில் பக்கம் வருகிறான் என்று பேச்சு எழும்.

நாலு காசு கொடுத்துப் புகையிலை வாங்குகிறவன் தூர்த்தனாக இருக்கலாம். துன்மார்க்கனாக இருக்கலாம். கொட்டகுடித் தாசி ஸ்தனம் தோளில் இடிக்கும்படி நெருங்கி உட்கார்ந்து அவள் கொக்கோகத்தை இலை மறை காயாகவோ இல்லாமலோ அபிநயம் பிடிக்கும்போது அவள் ரவிக்கையின் வியர்வை வட்டங்களையும், வெற்றிலையால் சிவந்த உதடுகளையும் முலைக் குவட்டையும் உன்னிப்பாகப் பார்த்து ரசிக்கலாம். அப்புறம் சங்கரன் கடைக்கு வந்து ஒன்றுக்குப் பத்தாக தான் ரசித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.

சங்கரன் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அனுபவிக்கிறதாகவும் தெரியாமல், வேண்டாம் என்று ஒதுக்கியதும் தெரியாமல் தன் பாட்டுக்கு வேலையைப் பார்க்க வேண்டும். அப்போது தான் அந்தஸ்து.

அவன் வந்தவனோடு தோளில் கை போட்டுக் கொண்டு கொட்டகுடித் தாசி வீட்டுக்குள் நுழைந்தால், நாளைக்குப் புகையிலை வாங்க வரும்போது மரியாதையில்லாமல் நிற்பான். எல்லா உரிமையோடும் கடன் சொல்லிப் போவான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:30 pm

ஜாகை எல்லாம் வசதியா இருக்கா ?

துரைசாமி அய்யன் யாரையோ கேட்கிறான். சங்கரன் கொட்டகுடித் தாசி பற்றிக் கடன்காரன் வாய் வார்த்தை சொல்வதைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

உங்களுக்குத்தான் ரொம்ப அலைச்சல். க்ஷீணம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லே. இங்கே சவுகரியத்துக்கு என்ன குறைச்சல் ? ராஜ உபசாரம் கெட்டது போங்கோ.

சுப்பிரமணிய அய்யர் சங்கரனின் மடியில் மெல்லத் தட்டி அவனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தபடி, பெண்வீட்டாரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சங்கரன் ஒரு வினாடி திகைத்து அப்புறம் எல்லோரையும் பார்த்துப் பொதுவாகச் சிரித்து வைத்தான். கொட்டகுடித் தாசியை இத்தனை தூரம் கட்டியிழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாம்.

ஒவ்வொருவராக வந்து சேரக் கூடம் நிறைந்து களைகட்டிக் கொண்டிருந்தது. தெலுங்கு மாமி ரா ரா ராஜகோபாலா என்று தேனாகப் பாட ஆரம்பித்திருந்தாள்.

இப்பவே கல்யாணக் களை வந்துட்ட மாதிரி இருக்கு.

பரசுராமனிடம் ஜோசியர் ஐயங்கார் சொன்னபடி பஞ்சாங்கச் சுவடிகளை மடியில் எடுத்து வைத்துக் கொண்டார்.

எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். சபையில் ஜாதகப் பரிவர்த்தனையாகி, எல்லாம் பொருந்தியிருக்கிறது என்று அவர் அறிவித்தபிறகு தான் மற்ற சுபகாரியம் எல்லாம் தொடங்கும்.

பொண்ணை அழச்சுண்டு வரலாமே.

சுப்பம்மாள் சொன்னாள். சுந்தர கனபாடிகளின் அகத்துக்காரி ராகுகாலம் கழிஞ்சாச்சோ என்று கேட்டாள்.

அது போய் ஒரு நாழிகை ஆச்சே.

ஜோசியர் சொன்னபோது, சிநேகாம்பாளும், விசாலாட்சியும் கூடத்திலிருந்து மெல்ல எழுந்து உள்ளறைக்குப் போனார்கள். பகவதிக்குத் தலையில் தாழம்பூ வைத்துப் பின்னி, உச்சந்தலையில் சூடாமணி வைத்து நேர்த்தியாகச் சிங்காரம் செய்து கொண்டிருந்த அண்டை அயல் பெண்டுகள் முகம் பார்க்கும் கண்ணாடியை எல்லாத் திசையிலும் திருப்பி அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தர்கள்.

ஆச்சாம்மாடி எச்சுமி ? ஏண்டி கோமதி, பொண்ணை சபைக்கு அழைச்சுண்டு போகலாமா ?

கொஞ்சம் பொறுங்கோ சாலாச்சி மன்னி. சின்னதா ஒரு சாந்துப்பொட்டு கன்னத்திலே வச்சுட்டாப் போதும். காவிலே யட்சிதான். எங்க கண்ணே பட்டு திருஷ்டி விழுந்துடும் போல இருக்கு.

ஐயோ, ஒண்ணும் வேணாம்டா. ஏற்கனவே நான் கோரம். இதுலே கன்னத்துலேயும் மூக்கிலேயும் எல்லா வர்ணத்தையும் ஈஷிண்டு போய் நின்னா வந்தவா எல்லாம் ஒரே சாட்டமா ஊரைப் பாக்கப் போயிடுவா.

பகவதி சிரிக்கும்போது விசாலாட்சிக்குக் குழந்தை போல் தெரிந்தாள். அவள் கல்யாணம் கழிந்து வந்தபோது செப்பு வைத்து விளையாடுவதை நிறுத்திச் சிற்றாடைக்கு வந்த குழந்தை. அப்புறம் விசாலாட்சிக்கு வயதானாலும், பகவதி இன்னும் அப்படியே தான் குழந்தையாகவே இருக்கிறாள்.

பாவாடை தாவணி இல்லாமல், முதல் தடவையாக ஜரிகைப் புடவையைக் கட்டியிருந்த பகவதி நிமிஷத்துக்கு ஒரு தடவை கொசுவத்தை இழுத்துச் சரிபார்த்துக் கொண்டாள். இது இடுப்பில் சரியாக இருக்க, கூடத்துக்குப் போய் எல்லோரையும் நமஸ்கரிக்க வேண்டும். அப்புறம் ஓரமாக உட்கார்ந்து, அவர்கள் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது தரையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏதாவது பாடும்மா என்று சொன்னதும் நன்னு பாலிம்ப பாட வேணும்.

பகவதிக்கு ஓமனத் திங்கள் கிடாவோ பாட வலிய இஷ்டம். இறையும்மன் தம்பி என்கிற கொட்டாரக்காரன் பாடின கிருஷ்ணனாட்டப் பாடல் அது. நிறுத்தி நிதானமாகப் பாடும்போது நேரம் உறைந்து போகும். வாழ்க்கை முழுக்க அதைப் பாடிக் கொண்டு, கேட்டுக் கொண்டு, சாயந்திரம் அக்ஷர ஸ்லோகம் சொல்லிக் கூட்டுக்காரிகளோடு விளையாடிக் கொண்டு, க்ஷேத்ரத்தில் ஆட்டக்களி பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.

அதெல்லாம் முடியாது. பாண்டிச் சீமையில் எங்கோ ஒரு அடுப்படியில் ஒதுங்க சீக்கிரம் வேளை வாய்க்கப் போகிறது.

மூத்ரம் ஒழிக்கணும்னா ஒழிச்சுட்டு வந்துடுடா கொழந்தே. அப்புறம் மணிக்கூறுக்கு ஏந்திருக்க முடியாது.

விசாலாட்சி அவள் கன்னத்தை வருடியபடியே சொன்னாள்.

Sponsored content

PostSponsored content



Page 7 of 17 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக