புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
4 Posts - 3%
bala_t
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
1 Post - 1%
Kavithas
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
297 Posts - 42%
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
5 Posts - 1%
manikavi
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 12:51 am

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:26 am

மறுதினத்திலிருந்து உன் தகப்பனாரும் அந்த உருட்டுக் கண்ணனும் மிகச் சுறுசுறுப்பாக ஏதேதோ வேலை செய்தனர். எனக்கு ஒன்றும் தெரியாது என்பது அவர்கள் எண்ணம். மந்திரவாதி, உன் அப்பாவைத் தனக்குப் பரிபூரணமான அடிமையாக்கிக் கொண்டான். பூஜைகள் நடக்க ஆரம்பித்தன. கொஞ்சம் வாடைக்காற்று அடித்தாலும், உடனே குளிக்க வெந்நீர் போடச் சொல்கிற உன் அப்பா, அந்தப் பூஜையின் போதெல்லாம் ஈரத் துணியுடன், ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்கூட உட்காருவார்; தனி அறையிலே பூஜை நடக்கும்; நாங்கள் யாரும் பார்க்கக் கூடாது. நெடுநேரம் மெள்ள ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பான். பிறகு ஆவேசம் வந்தவன் போலச் சில விநாடி கூவுவான். அவன் ஆட்டி வைத்தபடி எல்லாம் அவர் ஆடினார்.

நான் குறிப்பிட்டேனே முன்பு, "நான் பூவோடும் மஞ்சளோடும் போய்விட்ட 'வெள்ளிக்கிழமை' அதற்கு நாலு நாட்களுக்கு முன்பு, ஒரு இரவு நடுநிசி இருக்கும். விழித்துக் கொண்டேன்; வயிற்று வலியாக இருந்தது. புறக்கடைக்குப் போக வேண்டுமென்று தோன்றிற்று. கிழவியை எழுப்பித் துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று கிழவி படுத்திருந்த பக்கம் திரும்பினேன். தம்பி! கிழவி இல்லை. என் மனம் 'கபீல்' என்றாகி விட்டது; உரக்கச் சத்தமிட்டேன். பதில் இல்லை. கைவிளக்கை எடுத்துக் கொண்டு தேடலானேன். புறக்கடைக் கதவு திறந்திருந்தது. விளக்கைக் கூடத்திலே வைத்துவிட்டு, அடிமேல் அடியெடுத்து வைத்து, சந்தடி செய்யாமல் சென்றேன். நான் கண்ட காட்சியை, மறக்கவே முடியாது. இப்போது அதை எண்ணிக் கொண்டாலும் பயமாக இருக்கிறது. கிழவி பிணமாகக் கிடந்தாள்! அவளருகே ஒரு பெரிய நாகம், அதுவும் சாகடிக்கப்பட்டுக் கிடந்தது. உன் தகப்பனார், பிணத்தருகே உட்கார்ந்திருந்தார்.

அவருடைய கண்கள் ஏதோ ஒரு கறுப்புத் துணியால் கட்டி விடப்பட்டிருந்தது. மந்திரம் செய்ய வந்தவன் இல்லை; என் மனம் மருண்டது. சுற்று முற்றும் பார்த்தேன். இரு உருவங்கள் புறக்கடையின் கோடியிலே உலவிக் கொண்டிருக்கக் கண்டேன். என் கணவரின் கண்களைக் கட்டிவிட்டு, மந்திரவாதி வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம் பேசுகிறான் என்று யூகித்துக் கொண்டேன். பணத்தாசையால் புத்தியை இழந்துவிட்ட உன் தகப்பனார் அவன் சொல்லிக் கொடுத்த ஏதோ சொற்களைச் சில நிமிஷங்களுக்கொருமுறை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நரபலி! நரபலி! என்ற வார்த்தைகள் மட்டுமே, கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தன. விஷயமும் எனக்குப் புரியலாயிற்று. பெரிய புதையல் தேடுபவர்கள் தேவதைகளை வசியம் செய்வார்களென்றும், அப்போது, தேவதைக்கு நரபலி தருவது வாடிக்கை என்றும் பலர் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். சிந்தாமணியைப் பெறுவதற்காக, நரபலி கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்து விட்டது. ஆத்திரமும் அழுகையும் பொங்கிற்று. அடக்கிக் கொண்டேன்.

முழு விவரமும் தெரியவேண்டுமே, அதனால். கிழவிதான் பலியாக்கப்பட்டாள் - பாம்பு செத்துக் கிடப்பானேன்? இந்தப் பாதகத்துக்குக் காரணமாக இருப்பவன் வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம், அந்த இடத்தில் அந்த நேரத்தில், பேசுவானேன்? இந்த மர்மத்தைக் கண்டறிந்தாக வேண்டும் என்று துடித்தேன். எப்படியாவது, இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அருகே செல்லவேண்டும், அவர்கள் அறியாமல். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு யுக்தி தோன்றிற்று. தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து, புறக்கடைப் பக்கம் துரத்திவிட்டு, நான் அங்கிருந்த புதரிலே பதுங்கினேன். கன்று ஓடிற்று! உன் அப்பா அந்தச் சத்தத்தைக் கேட்டு மந்திரத்தை வேக வேகமாகச் சொன்னார் - பாவம் - தேவதை வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டார் போலிருக்கிறது. சந்தடி கேட்டதும், மந்திரவாதி பயந்துவிட்டான் போலிருக்கிறது. பேசுவதை நிறுத்தி விட்டு, அவனும் அவனுடன் இருந்தவனும் கவனிக்கலாயினர். கன்று என்று தெரிந்ததும் சும்மா இருந்து விட்டனர். கன்று அங்குமிங்கும் நடமாடிற்று. நான் அந்தச் சந்தடியைச் சாக்காக வைத்துக் கொண்டு, மெள்ள மெள்ள, புதர், செடி, கொடி, இவைகளின் மறைவிலேயே நடந்து, நடந்து, அவர்கள் உலவிக் கொண்டிருந்த இடத்தருகே போய்ச் சேர்ந்தேன். எப்படித்தான் எனக்கு அந்தத் தைரியமும் தந்திரமும் பிறந்ததோ தெரியவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் தெளிவாகவே என் காதிலே விழுந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:27 am

"போலீஸ் உடையைப் போட்டுக் கொள்வதுதானே. காரியத்தைச் சுருக்கமாக முடித்துவிட வேண்டுமே" என்றான் மந்திரவாதி.

"செய்வோம். நான் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எப்படி நம்புவான் அந்த ஆள். ஒரு சமயம், உண்மையான இன்ஸ்பெக்டர் அவனுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்வது..." என்றான் மற்றவன்.

"பைத்தியண்டா உனக்கு, உடையைப் பார்த்ததுமே உளற ஆரம்பித்துவிடுவான், நீ ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லு" என்று தைரியமும் யோசனையும் தந்தான் புரட்டன்.

"எனக்கென்னமோ தைரியம் வரவில்லையே" என்றான் மற்றவன். மந்திரக்காரன் தலையில் அடித்துக் கொண்டு, "சரி, உடையை என்னிடமே கொடுத்துத் தொலை; நானே காரியத்தை முடித்துவிடுகிறேன்; நீ போய்ச் சாவடியில் இரு அங்கு கூட வேண்டாம்; ஊருக்கு வெளியே சென்று நமது மடத்திலே இரு; நான் வந்து சேருகிறேன். ஒட்டு மீசையும் கொடு" என்றான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவன் போய்விட்டான். இந்த ஜெகஜாலப் புரட்டன், போலீஸ் உடையுடன், என் கணவர் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். நானும் மெள்ள வந்து விட்டேன் அந்த இடத்தருகே. என் கணவர் கண் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்தாரல்லவா? அவரருகே சென்று, கைப்பிரம்பால் ஒரு அடி கொடுத்துக் கட்டை அவிழ்த்தான். நரபலி! நரபலி! என்று முணுமுணுத்துக் கொண்டே உன் அப்பா, அடி கொடுத்தது யார் என்று பார்த்தார் - பார்த்ததும் "ஐயோ! போலீஸா" என்று அலறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு மங்கலானது. புரட்டனின் வேஷமும் பொருத்தமாக இருந்தது. பீதி அடைந்து விட்டார். அவன் வழக்கமான குரலையும் மாற்றிக் கொண்டு பேசலானான்.

"படுபாவி! கொலை! படுகொலை! எங்கே உன் கூட்டாளி."

"ஐயோ! ஐயோ!"

இவ்வளவுதான். அதுவும் ஈனக்குரலில் வெளிவந்தது உன் தகப்பனாரின் வாயிலிருந்து. "தூக்குக் கிடைக்கும் துஷ்டா! பிணம்! பாம்பு! இதோ விசில் கொடுத்து ஜவான்களை வரவழைத்து..." என்று மிரட்டினான் புரட்டன். அப்படியே விழுந்து அவன் கால்களைப் பிடித்துக் கொண்டார் உன் தகப்பனார்.

"காலில் விழுந்தாலும் இல்லை, கோடி கோடியாக என் காலடியில் கொட்டினாலும் விடமுடியாது. நான் ஏதோ பரிதாபப்பட்டு விட்டுவிட்டாலும், மேலதிகாரிகள் காதில் விழுந்தால் என்ன ஆகும்? நானும் மண் தின்ன வேண்டியதுதான்" என்றான்.

இந்தக் காட்சி நடந்துகொண்டே இருந்தபோது புறக்கடையின் கோடியில் வெகு தொலைவில், மினுக் மினுக்கென்று விளக்கொளி தெரிந்தது. விளக்கொளி வரவரப் பெரிதாகிக் கொண்டே வரலாயிற்று, நெருங்கலாயிற்று. நான் தான் முதலில் அதைக் கவனித்தேன்.

"நடடா! வாடா! ராஸ்கல்!" இப்படித் தொலைவிலே பேசும் குரல் கேட்டது - கேட்டதும், இருவரும் திடுக்கிட்டனர்.

"அட இழவே! யாரோ வந்திருக்கிறார்களே! ரோந்துக் காரரோ?" என்று பதைபதைப்புடன் கூறிக்கொண்டே பாம்பைக் காலாலே புரட்டன் வீசித் தள்ளினான் ஒரு புறமாக. பிணத்தின் தலைப்பக்கம் போய் நின்றான். அவன் சொல்லாமலேயே கால் பக்கம் இவர் பிடித்தார். அவசர அவசரமாகப் பிணத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். நான் உள்ளே நுழையச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்குள் நாலைந்துபேர் ரோந்துக்காரர்கள், தோட்டத்துக்குள் நுழைந்தனர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:28 am

"யாரது? ஐயோ! திருடர்!" என்று பலமாகக் கூவினேன்.

"அம்மா! அம்மா! பயப்படாதீர்கள்! திருடரல்ல; போலீஸ்! போலீஸ் நாங்கள்" என்று அவர்கள் கூறினர். நான், மங்கலாக இருந்த விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி, "யார் போலீஸா?" என்று பயந்தவள் போலக் கேட்டேன். "ஆமாம்மா; ரோந்து வேலையாக இப்படிப் போனோம். இவன் யாரோ, திருட்டுப் பயல், இந்தப் பக்கமாக வந்தான். நமது வீட்டுத் தோட்டப்பக்கமாக வந்தது போல் தெரிந்தது. கேட்டதற்குச் சரியான பதில் தரவில்லை. சரி! இங்கேயே வந்து பார்ப்பது என்று வந்தோம்" என்றனர்.

"நான் அதைக் கண்டேனா? எனக்கு வயிற்றுவலி, தோட்டத்துக்கு வந்தேன்; திடீரென்று கும்பலாக வரவே, பயந்து விட்டேன்; இவன் இந்தத் தோட்டத்திலிருந்து வந்திருக்க முடியாது. நான் இங்கு கொஞ்ச நேரமாகவே இருக்கிறேன்" என்று சொன்னேன். அவர்கள் நடுநிசியில் அங்கு வந்து நான் பயப்படும்படி நடந்துகொண்டதற்காக வருந்தி, அவனை விரட்டி விட்டுப் போய்விட்டார்கள்.

"முதலியார்...?" என்று கேள்வி போட்டான், அதிலே ஒரு புத்தியுள்ளவன்.

"அவருக்குத் தலைவலி" என்றேன் நான்.

அனைவரும் நெடுந்தூரம் போயான பிறகு, நான் விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உன் தகப்பனார் அடியற்ற மரம்போல என் காலில் விழுந்தார். "ரங்கம்! ரங்கம்! என் பிராணனைக் காப்பாற்றினாயே! நீ எங்கே இருந்தாய்? எப்படி இங்கு திடீரென்று, இந்த நேரத்தில் வந்தாய்? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே! இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே" என்று பிரலாபித்தார். "கதவைத் தாளிடுங்கள் முதலில்; கைத்தடியைக் கொடுங்கள் இப்படி. குறுக்கே ஒன்றும் பேசாமல் என்னோடு வாருங்கள். போலீஸ் நாடகமாடினவன் எங்கே காட்டுங்கள்" என்று கூறிக்கொண்டே நடந்தேன் - கூறினேனா! கட்டளையிட்டேன். நான் சொன்னபடியே நடந்துகொண்டார். போலீஸாக நடித்த புரட்டனை ஒரு அறையில் தள்ளி வைத்திருந்தார். அந்த அறையைத் திறந்தார்; அவன் வெளியே வந்தான்.

"டே! ஒட்டு மீசையை எடு" என்று கூறிக்கொண்டே ஓங்கி அவன் மண்டை மீது அடித்தேன். தம்பி! அவன் ஒரே ஒரு முறைதான், "ஐயோ" என்று அலறினான். அலறிக்கொண்டே கீழே வீழ்ந்தான். இரத்தம் ஆறாகப் பெருகிற்று. மூச்சில்லை. பேச்சில்லை; நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே, ஒரு விநாடி நின்றோம்.

"ஒரே நாளில், ஒரே வீட்டில் இரண்டு கொலை" என்று நான் மெதுவாகக் கூறினேன்.

"இவன்...?" என்று பயந்து கேட்டார் உன் அப்பா.

"உமக்கு சிந்தாமணி வாங்கித் தர வந்தவன் - கிழவியைக் கொன்றவன் - உம்மை மிரட்டிப் பணம் பறிக்கப் போலீஸாகவும் நடித்தவன்" என்று நான் ஆத்திரத்துடன் கூறினேன். தலையில் கைவைத்துக் கொண்டு, அவர் உட்கார்ந்துவிட்டார். புரட்டன், செத்துவிட்டானா, மூர்ச்சையடைந்துவிட்டானா என்று கூடத் தெரியவில்லை. "கிழவி எங்கே?" என்று கேட்டேன். அறைக்குள்ளே கை காட்டினார்.

தம்பி! அங்கே பிணம் கிடத்தப்பட்டிருந்தது.

அறைக்குள்ளே, அவருடைய பேராசைக்குப் பலியான கிழவி; வெளியே, என் கோபத்தால் தாக்கப்பட்டுக் குற்றுயிரானவன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:29 am

கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம். யோசித்தேன், கொஞ்சம் தெளிவு வந்ததும், யோசித்தேன், யோசித்தேன், நெடுநேரம்; ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று விளங்கவே இல்லை. உள்ளே பிணம்! வெளியே பிணத்துக்குச் சமமான நிலையில் புரட்டன்! இரண்டு கொலைக் குற்றங்கள்! கணவனும் மனைவியும் குற்றவாளிகள்! தம்பி! எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார், நீ. கண்ணே! அந்த நடுநிசியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாய்.

"கிழவி பிணமான பிறகு, என்ன செய்வதாக யோசனை செய்திருந்தீர்கள்" என்று நான் கேட்டேன் அவரை, நெடு நேரத்திற்குப் பிறகு.

"என்ன? என்ன கேட்கிறாய் ரங்கம்?" என்று குழப்பத்துடன் பேசினார் என் கணவர்.

"பாவிகளே அனாதையாக வந்த கிழவியை நரபலி கொடுத்தீர்களே; அவளைப் பிணமான பிறகு என்ன செய்வதாக இருந்தீர்கள்?" என்று கேட்டேன்.

"நான் என்ன காரியம் செய்துவிட்டேன், ரங்கம்! கொலைக்கும் உடன்பட்டேன். இந்தப் பாவியின் சொல்லால் கெட்டேன்" என்று கூறிக்கொண்டே அழலானார். அவருடைய அழுகுரல் என் மனதிலே துளியும் பச்சாத்தாபத்தைக் கிளப்பவில்லை. "முதலியாரே! பிறகு அழலாம்! ஆயுட்காலம் பூராவும் அழுதுகொண்டே இரும். இப்போது உங்கள் அக்ரம ஏற்பாட்டின்படி முழு விவரத்தையும் சொல்லும்" என்று நான் அவருடைய மனத்தைக் குத்துகிற விதமாகக் கேட்டேன்.

"அந்தப் பாவி, என்னென்னவோ சொன்னானே! நான் எதை என்று சொல்வேன். எதை நம்புவது. என்னைக் கொலைகாரனாக்கினான் - பிறகு, அவனே போலீஸாக வந்தான் - என்னென்ன செய்தான்..." என்று திணறித் திணறிப் பேசினார்.

"ஐயா, தரும சொரூபீ! உம்முடைய நல்ல குணத்தைத் திடீரென்று இந்தப் பாவி கெடுத்துவிட்ட கதையைப் பிறகு பேசலாம். கிழவியைக் கொலை செய்த பிறகு என்ன செய்ய எண்ணியிருந்தீர்கள்? பிணத்தைத் தின்றுவிட இருந்தீர்களா? பேசுமய்யா, பெரிய மனிதரே! பேசு!" என்று நான் கேட்டேன். ஆமாம் தம்பி! எனக்கு அவ்வளவு ஆத்திரம். மறுபடியும் என் காலிலே விழுந்தார்.

"நாலு பேர்! ஓடக்காரர்கள்! உப்பு மூட்டை!" என்று ஏதேதோ உளறினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:30 am

"என்ன சொல்லித் தொலைக்கிறீர்கள். சீக்கிரம் தெளிவாகச் சொல்லித் தொலையுமய்யா" என்று நான் நிர்பந்தப்படுத்தினேன்.

கிழவியைப் பலி கொடுத்த பிறகு, நாலு பேர் ஓடக்காரர்கள் வருவார்களென்றும், அவர்களிடம் பிணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்றும், அவர்கள் என்னென்னவோ செய்து அந்தப் பிணத்தைத் துண்டுகளாக்கி, உப்பு மூட்டையிலே போட்டு, தொலை தூரத்தில் எதுவோ ஒரு காட்டு ஆறாம், அதிலே போட்டுவிடுவார்கள் என்றும் சொன்னான்" என்றார்.

"எப்போது வருவார்கள் என்றான், இந்தப் புரட்டன்" என்று கேட்டேன்.

"மூன்று மணிக்குள்" என்றார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி. ஒரு முடிவுக்கு வந்தேன். கிழவியின் முகத்தைப் பார்த்தேன் - கண்ணீர் எனக்கு பெருகிற்று - அவள் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன். கைத்தடியை மீண்டும் எடுத்தேன் - குற்றுயிராகக் கிடந்த அந்தக் கொடியவன் மண்டையிலே மற்றுமோர் அடி கொடுத்தேன். மீண்டும் பேய் பிடித்துக் கொண்டதோ என்று பயந்திருப்பார் உன் அப்பா!

"தீர்ந்துவிட்டிருக்கும்! சரி! கோணிப் பையில் போட்டு இந்தக் கொடியவனை, ஓடக்காரர்கள் வந்ததும், கொடுத்துவிடு" என்று உத்தரவிட்டேன்.

"வராவிட்டால்...?" என்று குழந்தைபோலக் கேட்டார்.

"மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய், மார்க்கட்டிலே விற்கவேண்டும்" என்று கேலியும் செய்தேன்.

"ரங்கம்! அந்தத் தடியாலே என்னையும் அடித்துக் கொன்றுவிடு. அது மேல், இந்த நிலைமையை விட" என்றார் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. ஆனால், பரிதாபம் நீடிக்கவில்லை. வாயில் வந்தபடி, என் வயிற்றெரிச்சல் அடங்குமட்டும் திட்டித் தீர்த்தேன். புறக்கடைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

"சரி! ஓடக்காரர்கள்! கட்டு, மூட்டை! தைரியமாகக் கொண்டு போய்க் கொடு" என்றேன். ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்போல, நான் சொன்னபடி செய்துவிட்டு வந்தார்.

"சிந்தாமணி பூஜைக்காக வாங்கி வைத்த வாசனைச் சாமான்கள், சாம்பிராணி சகலமும் இருக்கிறதல்லவா? நாளைய தின முதல், நாலு நாளைக்கு, அது அவ்வளவும் நமது வீட்டிலே உபயோகமாக வேண்டும். வேறு ஒரு வழியும் இல்லை, உமது தலை தப்ப. கிழவியின் பிணத்துக்கு, நாலு நாளைக்குப் பூஜை செய்துதான் நீர் பிழைக்க வேண்டும்" என்று நான் கூறிக் கொண்டே இருக்கையில் மிரள மிரள விழித்தார் என் கணவர். "பயந்து என்ன பயன் இப்போது? தூக்குத் தண்டனை உமக்குக் கிடைத்தால், என் குழந்தை நிர்க்கதியாகும். நான் இறந்தாலும் பரவாயில்லை. நான் சாகத் துணிந்துவிட்டேன். இன்றைய நாலாம் நாள் நான் செத்துவிடுவேன். சுடலையில் கொளுத்தலாம். பைத்தியம் என்று எண்ணுகிறீரா! பைத்தியமல்ல! தியாகம், தியாகம் என்று யாராவது பெரியவர்கள், எப்போதாவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களல்லவா! அதுதான் இது. நான் சாகப் போகிறேன், உம்மைக் காப்பாற்ற. உத்தமராகிய உமக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாதே என்பதற்கு அல்ல; என் ஆசைக் கண்மணியின் நன்மையை எண்ணி இக்காரியம் செய்ய நினைக்கிறேன். மேலும் நான் உண்மையில் சாகப் போகிறதுமில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:30 am

என் பிணம் தீப்பிடித்து எரிவதைக் கூட நான் என் கண்களால் காண முடியும். முதலியாரே! விஷயத்தை விளக்கமாகச் சொல்கிறேன் கேளும். எனக்குக் கடுமையான அம்மை கண்டுவிட்டது என்று ஊரிலே கூறிவிடும் காலையிலே. அம்மை என்றால் யாரும் அருகே நெருங்கமாட்டார்கள். அம்மையை நீக்குவதற்காக, அற்புதம் தெரிந்த சாமியார் ஒருவர் வந்திருப்பதாகவும், அவருடைய கண்டிப்பான உத்தரவின்படி யாரும் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்றும் சொல்லிவிடவேண்டும். நாலாம் நாள் நான் இறந்துவிட்டதாகக் கூறி, கிழவியைக் கொண்டுபோய்க் கொளுத்திவிட வேண்டும்.

பிணமான பிறகும், யாரும் நெருங்கக் கூடாது. முகத்தைக்கூடப் பார்க்கக்கூடாது. தகப்பனாரும், தங்கையும், குழந்தையுங்கூடக் காணக்கூடாது. அது ஊருக்கே பேராபத்தாகும் என்று சாமியார் சொல்வதாகச் சொல்லிவிடும். அம்மையால் இறந்தவர்களைக் கொளுத்தக்கூடாதே என்பார்கள். இது ஒரு தனிவிதமான அம்மை, கொளுத்திவிடத்தான் வேண்டும் என்று சாமியார் சொன்னதாகச் சொல்லிவிட வேண்டும். எதையும் சாமியார் சொன்னார், சாமியார் சொன்னார் என்று கூறிவிட்டால், நமது ஜனங்கள் வாய்திறந்து ஏன் என்று கேட்கமாட்டார்கள். நான், இங்கு நாலு நாள் சாமியார் கோலத்தில் தங்கி இருப்பேன். பிறகு, நான் சாமியார் கோலத்திலேயே ஊரைவிட்டுச் சென்றுவிடுவேன் - எனக்கு இனி இந்த வாழ்க்கை வேண்டாம் - இவ்வளவும் செய்கிறேன் என் குழந்தைக்காக! நீ, எவ்வளவு கொடுமை செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஒரே ஒரு நல்ல காரியம் செய்; கடைசிக் காலத்திலே என் மகனைக் கைவிடாதே! அவன் ஓராண்டுக் குழந்தை! அவனை விட்டுப் பிரிந்து போகிறேன் - காவி அணிந்து கொண்டு. எனக்குக் கேடு செய்தாய் - துரோகம் செய்தாய், கொலைகாரனானாய், உன்னால் பிணமாக்கப் பட்டாள் ஒரு ஏழை. இந்த அளவு போதும். எவ்வளவு கேவலமான கெட்ட குணம் கொண்டவனும் இதைவிடக் கொடுமை செய்ய முடியாது. ஆகவே தான், நான் உன்னை நம்புகிறேன். இப்போது இந்தக் காட்சி உன் மனதிலே இருக்கும் கெட்ட எண்ணத்தையே சுட்டுச் சாம்பலாக்கிவிடும் என்று நம்புகிறேன்."

"ஆகவேதான் என் குழந்தைக்கு ஆபத்து நேரிடாது என்று துணிந்து இந்த ஏற்பாட்டைக் கூறுகிறேன். எனக்கு ஏதோ ஒரு வகை நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னும் கொஞ்சம் பாதுகாப்பும் முன்னேற்பாடும் அவசியம். அதற்காக இரண்டு காரியம் செய்தாக வேண்டும். ஒன்று, நடந்தது அவ்வளவையும் எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் தர வேண்டும். என் குழந்தைக்குத் துரோகம் செய்ய நினைத்தால் உன்னை என்ன கதியாக்க முடியும் என்னால், அந்தக் கடிதத்தைக் கொண்டு, என்பதை எண்ணியாவது நல்வழிப்படு. இரண்டாம் காரியம், என் குழந்தையைத் தங்கம் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாக வேண்டும். அவள் காலில் விழுவாயோ, மிரட்டுவாயோ, என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால், ஸ்வீகாரப் பத்திரம் வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:30 am

இந்த இரண்டு பாதுகாப்புடன் வேறொன்றும் இருக்கிறது. எந்தச் சமயத்திலே நீ, என் குழந்தைக்குத் துரோகம் செய்தாலும், புரட்டன் அடைந்த கதிதான் உனக்கும். உன்னால் மட்டுந்தான் கொலை செய்ய முடியும் என்றுதானே நினைத்தாய். நீயே பார்த்தாயல்லவா, புரட்டனைக் கொலை செய்தேன், ஜாக்கிரதை. சம்மதமா? சம்மதத்தைக் கேட்பானேன். செய்துதான் ஆகவேண்டும். நீ, இனி அழுது பயன் இல்லை; கெஞ்சிப் பயனில்லை; காலில் வீழ்ந்தும் பயனில்லை. நான், இனி உன்னோடு வாழமுடியாது. நான் சாமியாராகிவிடப் போகிறேன். இது மாற்றமுடியாத தீரமானம். எனக்கு இனி இங்கு இருந்தால், அடுத்தபடி உன்னைக் கொலை செய்யத் தோன்றும் - தங்கம் இரண்டாவதாகக் கொலை செய்யப்படுவாள். புலி ஒரு முறை இரத்தம் குடித்தானதும் மறுபடியும் மறுபடியும் தேடுமாமே? அப்படி ஆகிவிடுவேன். என் மகனின் நலனை எண்ணியேதான் நான் இதுவரையில் கூட இங்கு இருந்தேன். இனி இருக்க முடியாது. எனக்கு இந்தக் குடும்ப வாழ்க்கையே வேண்டாம். பிச்சைக்காரியாக உலவுவேன். பிறந்ததற்கு நான் படவேண்டியது அவ்வளவும் பட்டாயிற்று. இனி நான், ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு, அல்லும் பகலும் பாடுபடுவேன். பந்தம், பாசம், பற்று எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிந்துவிட்டேன்.

மகனிடம் கொண்டுள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஆகவே தான் சில நிபந்தனை விதித்தேன். நான் இனி ரங்கமல்ல! உன் மனைவி அல்ல! நான் இனி ஒரு நாடோ டி பிச்சைக்காரி, சாது, சன்யாசி. ஆமாம்! முதலியாரே, முதலியாரே! என்று அழைக்கிறேனே, அதிலிருந்து தெரிந்து கொள்ளும், நமக்கு இருந்து வந்த சம்பந்தத்தை அறுத்துவிட்டேன் என்பதை. இதோ தாலி" என்று கூறினேன். என் கண்களிலும் நீர், அவர் கண்களும் குளம். என் கால்களைப் பிடித்துக் கொண்டார். பிடியை உதறிவிட்டு என் படுக்கை அறை சென்றேன் - கத்தரிக் கோலெடுத்து, என் தலை முடியை ஒட்ட வெட்டிவிட்டேன், நகைகளைக் கழற்றிப் பெட்டியிலே வீசினேன். அலங்கோல ரூபத்துடன் மீண்டும் அவர் முன் வந்து நின்றேன்; அவர் கோவெனக் கதறலானார். வாயை மூடச் சொல்லி ஜாடை காட்டினேன். மூடிக்கொண்டார். "இது போதாது! நாளைக்குத் தலையை மழுங்கச் சிரைத்தாக வேண்டும். நீரேதான் செய்யவேண்டும்" என்று கூறினேன். தம்பி! பிறகு நடந்ததைச் சுருக்கமாக்கிவிடுகிறேன். நாலு நாள் வீடு முழுதும் ஒரே சாம்பிராணி மயம் - பிண நாற்றம் தெரியாதிருக்க! ஊரெங்கும் ஒரே பேச்சு, எனக்கு கடுமையான அம்மை என்று. சாமியார் கோலத்திலே நான் வீட்டிலே இருந்தேன். தெருவில் இருந்தபடி விசாரித்துவிட்டுப் போவார், என் தந்தை, பாபம்! "மகளைக் காணாமல் இந்த ஜன்மம் எதற்கு? பிராணன் போனாலும் போகிறது - நான் பார்த்தாக வேண்டும் ரங்கத்தை" என்று பல முறை கேட்டார். "உமக்கு மட்டுமல்லவே. ஊருக்கே சர்வ நாசம் வருமென்று சாமியார் சொல்கிறாரே" என்றார் உன் அப்பா. ஊர் முழுதும் ஏமாந்தது.

என் ஏற்பாட்டின் படியே காரியம் நிறைவேறிற்று. நாலாம் நாள், புரண்டு புரண்டு அழச்சொன்னேன், அவரை. தெருக் கதவைத் தாளிட்டுவிட்டு, கிழவியின் பிணத்துக்கு என் உடைகளைப் பூட்டி, முக்காடிட்டு, முகத்தையும் மறைத்துவிட்டேன். பிறகே, ஒரு சிலரை மட்டும், ஊழியக்காரர்களை மட்டும் வரவழைத்து பிணத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். சுடலையிலும் சர்வ ஜாக்கிரதையாக இருந்து, யாருக்கும் துளிச் சந்தேகமும் வராதபடி கிழவியைக் கொளுத்த ஏற்பாடு செய்தேன். சுடலைக்குப் பிணத்தை எடுத்துச் செல்லும்போது, நானும் உடன் சென்றேன். தம்பி, உலகிலேயே வேறு யாருக்கும் நேரிட்டிருக்க முடியாத சம்பவம், சொன்னால் கூட நம்பமாட்டார்கள். ஆனால் கடுமையான அம்மை, காளியின் கோபம், சாமியாரின் கடுமையான உத்தரவு, ஊருக்கு நாசம் வந்துவிடும் - காளி சகலரையும் பலி கேட்பாள் என்ற இப்படிப்பட்ட மிரட்டல்கள் அந்த ஊரை அடக்கிவிட்டது. நான் சாமியாரானேன்! "ரங்கத்தின் வாழ்வு முடிந்துவிட்டது! மகராஜி! பூவோடும் மஞ்சளோடும், வெள்ளிக்கிழமை போகிறாள்" என்று ஊரார் பேசினர். அதே இரவு, நான் மொட்டைத் தலை, கையில் தடி, உடலில் காவி, நெஞ்சிலே எப்போதும் ஏற்பட்டிராத அளவு தைரியம், இந்த நிலையில் ஊரைவிட்டே சென்றேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:31 am

மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் பூனையைத் துரத்திக் கொண்டு சென்று, ஒரு அறையில் அது புகுந்த பிறகு, கதவைத் தாளிட்டுக் கொண்டால், தப்பி ஓட மார்க்கமே இல்லாததால், பூனைக்குப் பிரமாதமான திகில் ஏற்பட்டு, திகிலின் விளைவாகத் தைரியம் உண்டாகிப் பாய்ந்து, நமது கண்களை நாசம் செய்துவிடுமாம்! பூனை அல்ல அந்த நேரம், புலியாகிவிடுகிறது என்று ராதா கூறுவாள். நான் பட்ட வேதனை என்னை அவ்விதமாக்கிவிட்டது. என்னவோ ஓர் வகையான வெறி, சே! எக்கேடு கெட்டாலும் கெடுவோம், இந்தக் கெடுமதியாளனுடன் மட்டும் இனி இருக்கக்கூடாது என்று ஒரு எண்ணம், அசைக்க முடியாதபடி ஏற்பட்டுவிட்டது. பிணம் சுடலையில் வேகிறது. நான் ஆண் உடையில் ஊரைவிட்டு வெளியே செல்கிறேன்.

அப்பா! நான் காவி அணிந்து உலவிய காலம் இருக்கிறதே, அது வெந்த புண்ணுக்கு வேல் ஆக முடிந்தது. கயவர்களின் கூட்டுறவே கிடைத்தது. அவர்கள் ஊரை ஏய்க்க உரத்த குரலில் பாடும் பஜனைப் பாட்டுக்களை, நானும் முதலில் நம்பினேன். நானும் அவர்களில் ஒருத்தியாக இருக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, அவர்களைப் போல் மூடர்கள் வேறு கிடையாது என்பது. பலர் என்னைப் போலவே வாழ்க்கையில் ஏற்பட்ட திகைப்பினாலேயே திருவோடு தூக்கினவர்கள் - பிறகோ, அவர்கள் பாடுபட்டுப் பிழைக்க விரும்புபவருக்குக் கைகொடுக்க மறுக்கும் உலகை ஏய்த்து வாழ இதுவே எளிய வழி என்று கண்டறிந்து, அதற்கேற்றபடியே நடக்கலாயினர். இத்தகையவர்களுடன், நான் சில மாதங்கள் உலாவினேன். திருவிழா எங்கெங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் செல்வது. சாவடிகள் எங்களுக்குச் சொந்தம்.

குளத்தங்கரைகளில் கொண்டாட்டம் - போலீஸின் கண்களில் சிக்கிவிட்டால் ஆபத்துதான். இந்நிலையில், நான் பெற்ற அனுபவம் இருக்கிறதே, அதனை ஆயுட்காலம் பூராவும் கூறலாம். ராதாவிடம் சொல்லித்தான், பண்டாரங்களைப் பற்றியே ஒரு பெரிய புத்தகம் எழுதச் செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு விதவிதமான பண்டாரங்களைபற்றி எனக்குத் தெரியும். அவர்களின் 'கதைகள்' உலகுக்கு, எச்சரிக்கையாகக்கூட இருக்கும். நான் அந்த உலகிலே கண்ட பல அதிசயங்களைக் கூறி உனக்குச் சலிப்பு உண்டாக்கப் பிரியப்படவில்லை. சுருக்கமாகச் சிலது மட்டும் கூறுகிறேன் - பல இரவுகள் பட்டினி கிடந்திருக்கிறேன். திருட்டுச் சொத்திலே பங்கு பெற்றிருக்கிறேன் - போலீஸில் கூடச் சிக்கிக் கொள்ள இருந்தேன் ஒரு முறை! இவ்வளவும், எனக்கு அல்லலைத் தந்ததே தவிர, ஆபத்தைத் தரவில்லை - ஆண் உடை எனக்குக் கவசமாக அமைந்திருந்தது. ஆனால் மகனே! நான் எப்படியடா கூறுவேன், அந்தக் கவசம் என்னைக் கடைசி வரை காப்பாற்ற முடியாது போயிற்று. நான் படுகுழியில் தள்ளப்பட்டேன்... உன் அன்னை என்ற அந்தஸ்திலிருந்து வீழ்ந்தேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:32 am

அன்று எனக்குக் கடுமையான ஜுரம். நான் கூட்டாளியாகக் கொண்டிருந்த கிழப் பண்டாரம், எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்தான். மருந்தோடு விபசாரம் என்ற விஷமும் கலந்தான். தற்செயலாகத்தான் கண்டுகொண்டான் - தகாத காரியம் என்று கெஞ்சினேன், எதிர்க்கச் சக்தி இல்லை. நான் வீழ்ந்தேன்! விழியில் வழிந்தோடிய நீர் கொஞ்சமல்ல. மேலும் நடந்தவைகளைக் கூறி உன்னைச் சித்திரவதை செய்யத் துணியவில்லையடா கண்ணே! நான் துரோகியானேன் - விபசாரியானேன் - பிறகு எனக்கும் பண்டாரக் கூட்டமோ, காவி உடையோ தேவைப்படவில்லை. கிழப் பண்டாரம் சில நாட்களுக்குப் பிறகு, என்னைத் தன் தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெருமையுடன் கூறினான். "ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லி என்னை இந்தத் தள்ளாத வயதிலே துரத்தினாயே, பார்த்தாயா, புதையல்!" என்றான். அவள் என்னைப் பார்த்த பார்வையை இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது. சிறிய பலகாரக் கடை அது. பலகாரம் மட்டுமல்ல, திருட்டுச் சாராயக் கடையும் அதுதான்.

அது என்னைப் போல அபலைகள் சிக்கிக் கொள்ளும் சமயத்திலே விபசார விடுதியாகவும் மாறும். அவள் இரண்டு முறை தண்டனை பெற்றவள் - திருட்டுக் குற்றத்துக்காக. அதனால் அவளுக்கும் போலீஸிடம் பயம் இருப்பதில்லை. கேலியாகக் கூடப் பேசுவாள். அவர்களும், அவளைத் தமாஷ் செய்வார்கள். எப்படித்தான் ஏற்பட்டதோ அந்த வேகம். எனக்கே புரியவில்லை; நான் அந்த இடத்திற்கு வந்த சில வாரங்களுக்குள் முழுவதும் அழுகிய மனதைப் பெற்றுவிட்டேன். சேற்றிலே கால் வைத்தாகி விட்டது. ஆழப் புதைந்து கொண்டது. காலைச் சேற்றிலே இருந்து எடுத்துக் கொள்ளச் சக்தியுமற்றுப் போயிற்று. பிறகு அந்தச் சேறு, சந்தனம் ஆகிவிடத்தானே வேண்டும். விடுதியிலே, சந்தித்த நாயுடுதான், விடுதலைக்கு வழி சொன்னான் - ரங்கோன் போய் விடுவோம் என்று. கிளம்பினேன். ரங்கோனிலும் என் வாழ்க்கை, புயலில் சிக்கிய கலம் போலத்தான். நாயுடு சம்பாதிப்பார் - குடிக்க மட்டுமே தான் அந்தப் பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் போலச் சில சமயம் நடந்து கொள்வார். சில சமயம், வேதாந்தம் பேசுவார். சில வேளைகளில் ஏதோ போன ஜென்மத்திலே நமக்குள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேதான் இந்த ஜென்மத்திலே இது ஏற்பட்டது என்பார்.

ராதா பிறந்தாள் - எனக்கு அந்த வேதனையான வாழ்விலேயும் ஒருவகை ஆனந்தம் தர, அவள் பிறந்தாள்.

மகனே! அவளும் நானும் இங்கு வர நேரிட்டது ஜப்பானின் குண்டு வீச்சால். அந்தக் குண்டு வீச்சின் கொடுமையைவிட, அதிகக் கொடுமைக்கு நான் உன்னை ஆளாக்கிவிட்டேன். ஆனால், நான் இவ்வளவும் கூறாவிட்டால் என் மனம் வெடித்து விடும் என்று பயந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு! உன் மாதா நான். ஆனால், மாபாவியானேன் - என் மன வேதனை அளவு கடந்தது. அதன் விளைவுகள் பல - நான் இவைகளைக் கூறி என் நடத்தைக்குச் சமாதானம் தேடுகிறேன் என்று எண்ணாதே. என் கடைசி நாட்களில் நிம்மதி வேண்டும் - மனத்தின் பாரம் குறைய வேண்டும். உன்னைக் கண்டேன், என் துர்நடத்தையையும் கூறினேன் - என்னை மன்னித்துவிடு - ஆனால் நான் உன் மாதா என்பதையும் மறந்துவிடு. குற்றம் செய்வதற்கு முன்பு கொடுமைக்கு ஆளானாள் என்பதை மட்டும், மனமார நம்பு. அப்பா! பொன் நிற மேனியிலே படரும் புண், கருநிறத்தை உண்டாக்கிவிடுகிறதல்லவா, அதுபோல என் நற்குணத்தை உன் அப்பாவின் கொடுமை கெடுத்து, என்னை இக்கதிக்குக் கொண்டு வந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:32 am

நான் குற்றமற்றவள் என்று வாதாடவில்லை. ஆனால் குற்றவாளி நான் மட்டுமல்ல. உன் அப்பா, பெரிய குற்றவாளி! பணப் பேய் பிடித்தவர் - மாசற்ற மனைவி மீது அபாண்டம் சுமத்தியவர் - கொலைகாரர் - கொடுமை புரிந்தவர் - ஆனால் அவர் இன்னும் ஊரிலே மதிக்கப்படுபவர். நான் வந்திருக்கிறேன், உன்னைக் கண்டேன், பேசினேன், முழு விவரத்தையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் போதும்; பயத்தால் மாரடைப்பு உண்டாகிப் பிராணன் போய்விடும். அவர் எதற்கும் உலகிலே அஞ்சாமல் இருக்க முடியும். ஆனால் உன் அன்னையை, நேருக்கு நேர் நின்று பார்க்க முடியாது! தைரியம் வராது! நான் விபசாரி என்று உலகம் என் எதிரிலே கூறும், உன் அப்பாவால் மட்டும் கூற முடியாது. எந்த அக்ரமத்தையாவது அவர் செய்ய எண்ணும்போது கூட, அவருடைய மனக்கண் முன் என் உருவம் தோன்றும். தம்பி! விபசாரியான நான் வேதாந்தம் பேசுகிறேன், வழுக்கி விழுந்து விட்ட நான் பிறர்மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன் என்று எண்ணிவிடாதே. இவ்வளவும் நான் உன்னிடம் கூறாமலே இருந்து விட்டிருக்கலாம். நான் யாரோ ரங்கோனிலிருந்து வந்தவள் என்று நினைத்துக் கொண்டு இருப்பாய். என்னால் முடியவில்லை, மூடிபோட்டு வைக்க. பல வருஷங்களாக மனதிலே இருந்து வந்த பெரிய பாரத்தைக் கீழே தள்ளிவிட்டேன்.

நான் சூதுக்காரியல்ல - நான் சூதுக்காரர் கிளப்பிய சூறாவளியிலே சிக்கியவள். என்னிடம் பரிதாபம் காட்டி, பலரறிய, "என் அன்னை, ரங்கம்!" என்று கூறுவாயா என்று நான் கேட்பதற்காகவும் இவ்வளவு பேசவில்லை. பழி தேடிக் கொடுத்தவள்! பாதகி! விபசாரி என்று என்னைப் பற்றி என் கதையை அறியா முன்பு, நீ கூறியிருக்கவோ, எண்ணியிருக்கவோ முடியாது. நான் தான் இறந்துவிட்டேனே, தாயை இழந்தவன் என்றுதானே நீ கருதிக் கொண்டிருந்தாய் - ஊரும் நம்பிற்று. இனியும் அதேபோலத்தான் எண்ணும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக